விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
இருமுறை சாம்பியன், 2019 உ.கோப்பைக்காக தகுதிச்சுற்றில் ஆடும் மே.இ.தீவுகள்- ரசிகர்கள் வேதனை 1979 உலகக்கோப்பையுடன் கிளைவ் லாய்ட் 1975, 1979 உலகக்கோப்பை சாம்பியன்களான மே.இ.தீவுகள் 2019 உலகக்கோப்பைக்காக தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வரும் ஞாயிறன்று ஹராரேயில் களமிறங்குவது மே.இ.தீவுகளின் தீவிர ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது. தலைசிறந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் தனிப்பட்ட வருமானம் ஆண்டுக்கு 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், ஆனால் மே.இ.தீவுகளின் நிலையோ இன்று அது ஆதிக்கம் செலுத்திய ஒரு வடிவத்தில், தோற்கடிக்க முடியாத அணியாக இருந்த வடிவத்தில் தகுதிச்சுற்றுக்குப் போராடும் நிலை. கெய்ல், பிராவோ,…
-
- 0 replies
- 177 views
-
-
‘ஒரு பக்கம் வக்கார் யூனுஸ், மறுபக்கம் அக்ரம்: இதோடு கிரிக்கெட் வாழ்வு முடிந்தது என நினைத்தேன்’-முதல் டெஸ்ட் பற்றி சச்சின் சுவாரஸ்யம் பிரேக்பாஸ்ட் வித் சச்சசின் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் - படம்: சிறப்பு ஏற்பாடு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்த போது பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டி அனுபவம் குறித்து சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களிடம் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார். கவுரவ் கபூர் தொகுத்து வழக்கும் 'பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்' எனும் நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்று தனது கிரிக்கெட் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இதில் தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டெஸ்…
-
- 2 replies
- 514 views
-
-
தோனி நல்ல கேப்டன்தான் ஆனால் தனக்குப் பிடித்தது கங்குலி என்கிறார் யுவராஜ் சிங் தோனி நன்றாகவே கேப்டன்சி செய்து வந்தாலும் தனக்குப் பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலியே என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: "எனக்குப் பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலியே. அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன், அவரது கேப்டன்சியில் என்னுடைய பேட்டிங் திறமைகள் செழுமை பெற்றது. அயல்நாட்டில் நாம் வெற்றி பெற முடியும் என்ற உணர்வை எங்களிடம் ஏற்படுத்தியவர் கங்குலி. அதே போல் கேரி கர்ஸ்டன் ஒரு அபாரமான பயிற்சியாளர், அவரது பயிற்சியின் கீழும் நான் சிறப்பாக விளையாடினேன்" என்றார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 90களின் இறுதியில் முதல் சர்வ…
-
- 0 replies
- 315 views
-
-
போர்முலா 1 போட்டிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன. வாகன ஓட்டப் போட்டிகளில் மிகவும் உயர்வானதாகக் கணிக்கப்படும் போர்முலா 1 போட்டிகள் இவ் வருடம் 19 நாடுகளில் நடக்கவுள்ளன (முதலாவது போட்டி Bahrain இல் நடைபெறுவதாக இருந்தது. கலவரங்களினால் அது நடைபெறவில்லை.). 12 கார் நிறுவனங்கள் பங்குகொள்ளும் இப் போட்டிகளில் தலா 2 கார் வீதம் 24 கார்கள் போட்டியிடவுள்ளன. இவ்வருடம் போட்டியிடும் 24 ஓட்டுனர்களில் 5 பேர் வெற்றிவீரர்கள் (World champion) ஆவர். புதிய விதிகளுக்கமைய ஒவ்வொரு நிறுவனமும் தமது கார்களைப் புதிதாக வடிவமைத்துள்ளன. முன்பில்லாதவாறு இப்போதெல்லாம் கார் ஓட்டுனர்களைவிட தொழில்நுட்பத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தெரிவுப் போட்டிகளின்போது சுமார் 5 km நீளமுள்ள ஓடுபாதையைச் சுற…
-
- 67 replies
- 6.6k views
-
-
தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் மீது ரசிகர்கள் நிறவெறி கேலி கான்பெராவில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் வரம்பு மீறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட இம்ரான் தாஹிர் புகார் எதுவும் அளிக்கவில்லை. தேர்ட் மேன் பவுண்டரி அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார் இம்ரான் தாஹிர். இவருக்கு அடிக்கடி தனது தாடியைச் சொரியும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனைக் கண்ட கான்பெரா ரசிகர்கள், அவரை கடுமையாக கேலி செய்தனர். நிறவெறித்தனம் அதில் ஊடுருவியிருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது, அவர் தாடியைச் சொறிவது பற்றி ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர், "உன்னுடைய செல்லப் பிராணியான ஒட்டகத்துக்கு சொறிந்து விட …
-
- 0 replies
- 486 views
-
-
அவுஸ்திரேலிய வீரர்களின் ஆட்ட நிர்ணயசதி- புதிய வீடியோ வெளியாகின்றது அவுஸ்திரேலிய வீரர்களிற்கு எதிரான ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மற்றுமொரு புலனாய்வு வீடியோவை அல்ஜசீரா வெளியிடவுள்ளது. இந்தியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் 2017 இல் ராஞ்சியில் இடம்பெற்ற டெஸ்டில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக தனது முன்னையை வீடியோவில் அல்ஜசீரா குற்றம்சாட்டியிருந்தது. ஆடுகளம் இந்திய அணிக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்த அல்ஜசீரா அவுஸ்திரேலிய வீரர்கள் சிலர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே அல்ஜசீரா புதிய வீடியோவொன்றை வெளியிடவுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ள…
-
- 0 replies
- 397 views
-
-
ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை 02 JUN, 2023 | 08:48 PM (நெவில் அன்தனி) ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு வலிமைமிக்க அணியை கட்டியெழுப்பும் நோக்கில் ஆப்கானிஸ்தானுடனான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொண்ட இலங்கை, ஆரம்பப் போட்டியில் 6 விக்கெட்களால் தோல்வியுற்று பெரும் ஏமாற்றம் அடைந்தது. ஹம்பாந்தோட்டை விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியைவிட துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் இந்த வெற்றியுடன் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இலங்கையினால் நிர்ணயிக்…
-
- 5 replies
- 479 views
- 1 follower
-
-
ரொனால்டோ இன், மெஸ்ஸி அவுட் - வெளியானது ஃபிஃபா சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியல்! அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி ஃபிஃபாவின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் இம்முறை தகுதி பெறவில்லை. 2006-ம் ஆண்டிலிருந்து தவறாமல் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி வந்தார் மெஸ்ஸி. 2008-ம் ஆண்டிலிருந்து கால்பந்து உலகின் மிக உயரிய விருதான, இதை ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி மட்டுமே வாங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், 2016-ம் ஆண்டு செய்யப்பட்ட சிறு மாற்றத்தின்படி கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜூலை 15 வரை ஆடிய ஆட்டங்களைக் கணக்கில் கொண்டு இவ்விருது அளிக்கப்படும் என்பதை ஃபிஃபா அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஓராண்டுக் காலமாக ஆடிய சிறப்பான ஆட்…
-
- 2 replies
- 934 views
-
-
டெஸ்டிலிருந்து டுவைன் பிராவோ ஓய்வு ஜனவரி 31, 2015. புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் பிராவோ டெஸ்ட் போட்டியிலிருந்து திடீரென ஒய்வை அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ, 31. ‘ஆல்–ரவுண்டரான’ இவர் 40 டெஸ்ட் (2200 ரன்கள்) , 164 ஒரு நாள் (2968), 53 ‘டுவென்டி–20’ (936) போட்டிகளில் விளையாடி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு.ஐ.சி.பி.,), வீரர்கள் சங்கத்துடன் ஏற்பட்ட புதிய சம்பள ஒப்பந்தத்தை வீரர்கள் ஏற்க மறுத்தனர். இதனால், கடந்த ஆண்டு இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை பாதியில் ரத்து செய்து திரும்பியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த டுவைன் பிராவோ, போலார்டுக்கு உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், டெஸ்ட்…
-
- 1 reply
- 435 views
-
-
ஆடுகளம்: டெஸ்ட் போட்டி வடிவத்தைப் பாதுகாப்பது எப்படி? ஆர். அபிலாஷ் இந்த கேள்வியைக் கேட்டுப் புலம்புவதே முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும், விமர்சகர்களுக்கும் வழக்கமாகிவிட்டது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் இன்றும் குவிகிறார்கள். ஆனால், மற்ற நாடுகளில் ஈயடிக்கிறது. ஆனால் இந்த மூன்று நாடுகளிலும்கூட டெஸ்ட் ஆட்டம் நிலைக்குமா என்பது ஐயமே. டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான வரவேற்பு டெஸ்டுக்கு இருப்பதில்லை. காரணங்கள் இவை: டெஸ்ட் ஆட்டம் நம் காலத்துக்கு ஒவ்வாதது. வேகம், பரபரப்பு குறைவு. “இக்குறையை” சரி செய்ய இயலாது, ஆமையை குதிரை ஆக்க இயலாது என்றாலும் இது எனது தீர்வு: போனஸ் புள்ளிகள் …
-
- 0 replies
- 513 views
-
-
கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் அண்டி மரே இங்கிலாந்து அணியின் முன்னணி டென்னிஸ் வீரர் அண்டி மரே, அடுத்தவாரம் ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னீஸ் தொடருடன் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். மூன்று கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ள ஆன்டி மரே, எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் இத் தொடருடன் தான் ஓய்வுபெற முடிவு செய்து இருப்பததாக கண்ணீருடன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிதான் எனது கடைசி தொடராக இருக்கும் என கருதுகிறேன். இடுப்பு காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். எனது சொந்த நாட்டில் நடக்கும் விம்பிள்டன் போட்டியோடு ஓய்வு பெற விரும்ப…
-
- 0 replies
- 631 views
-
-
துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்! துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என வட.மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, “எதிர்வரும் மாநகரசபை அமர்வின் போது, யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கின் பெயரை பொது விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் பிரேரணை முன்வைக்கவுள்ளளார். துரையப்பா விளையாட்டு அரங்கை உருவாக்கியது துரையப்பா, கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய இந்த விளையாட்டு அரங்கின…
-
- 2 replies
- 892 views
-
-
யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயது பிரிவு ஆண்களுக்கான .கால் பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட சம்பியனானது யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி. ஆட்ட நேர முடிவில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 4:2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. லியோ சிறப்பான கோல் பதிவைச் செய்தார். https://newuthayan.com/story/11/சென்-பற்றிக்ஸ்-கல்லூரி-அ.html
-
- 0 replies
- 637 views
-
-
அறிமுக வீரர் மணீஷ் பாண்டே மைதானத்தில் ஆனந்த கண்ணீர் : சக வீரர்கள் நெகிழ்ச்சி! இந்திய அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டதால் இளம் வீரர் மணீஷ் பாண்டே மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதது சக வீரர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. ஹராரேவில் இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாட இளம் வீரர் மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சக வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். அப்போது சந்தோஷம் மிகுதியால் மணீஷ் பாண்டே ஆனந்த கண்ணீர் வடித்தார். மூத்த வீரர் ஹர்பஜன்…
-
- 0 replies
- 391 views
-
-
ஐ.சி.சி., தரவரிசை:அஷ்வின் ‘நம்பர்–9’ துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 9வது இடத்துக்கு முன்னேறினார். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ஷிகர் தவான் 32வது இடம் பிடித்தார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 12வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறினார். இவர், இலங்கைக்கு எதிரான காலே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றினார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 21வது இடத்தில் உள்ளார். …
-
- 0 replies
- 357 views
-
-
தென்னாபிரிக்காவுக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 87 ஓட்டங்களினால் தோல்வி May 25, 2019 Cricket – ICC Cricket World Cup Warm-Up Match – Sri Lanka v South Africa – Cardiff Wales Stadium, Cardiff, Britain – May 24, 2019 South Africa players celebrate victory Action Images via Reuters/Andrew Boyers தென்னாபிரிக்காவுக்திரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது. நேற்றையதினம் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை எடுத்திருந்தனர். இதனையடுத்து 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய …
-
- 0 replies
- 420 views
-
-
ஆஸ்திரேலியாவில் டாக்சி டிரைவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்! பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அர்ஷாத் கான் தற்போது ஆஸ்திரேலியாவில் டாக்சி டிரைவராக மாறியுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான அர்ஷாத் கான், சுழற்பந்துவீச்சாளர் ஆவார். 2005 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 58 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். கொச்சியில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது அதிகபட்ச சாதனை ஆகும். கடந்த 2001ஆம் ஆண்டு வரை அர்ஷாத் கானுக்கு பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம் கிடைத்து வந்தது. அதற்கு பின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், சிட்னி நகருக்க…
-
- 0 replies
- 315 views
-
-
யாழ். சென். ஜோன்ஸ் - குருநாகல் புனித ஆனாள் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு யாழ். சென் ஜோன்ஸ் அணிக்கும் குருநாகல் புனித ஆனாள் அணிக்கும் இடையில் வார இறுதியில் நடைபெற்ற பாடசாலை கிரிக்கட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் எவரும் குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு பிரகாசிக்காதபோதிலும் செய்ன் ஜோன்ஸ் வீரர்களான யதுசன் வசந்தன்இ கானாமிர்தன் அருளானந்தம் ஆகிய இருவரும் ஓர் இன்னிங்ஸில் தலா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தினர். நத்தார் பண்டிகைக்கு முன்னர் கண்டி திரித்துவ கல்லூரியை அதிர்ச்சி அடை யச் செய்து வெற்றி கொண்டிருந்த செய்ன் ஜோன்ஸ…
-
- 46 replies
- 4.6k views
-
-
அலன் போடர் பதக்கத்தை வென்றார் டேவிட் வோணர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான, ஆண்டின் சிறந்த வீரருக்கான அலன் போடர் பதக்கத்தை, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் வென்றார். தலைவரான ஸ்டீவன் ஸ்மித்தை முந்தியே, இக்கௌரவத்தை அவர் பெற்றுக் கொண்டார். ஆண்டின் டெஸ்ட் வீரருக்கான விருதையும், டேவிட் வோணரே வெற்றிகொண்டார். சிறந்த வீராங்கனைக்கான மெலின்டா கிளார்க் விருதை, எலைஸ் பெரி வெற்றிகொண்டார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை, கிளென் மக்ஸ்வெல், சிறந்த உள்ளூர் பெறுபேறுகளுக்கான விருதை அடம் வோஜஸ், சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதை, அலெக்ஸ் றொஸ்-உம் வென்றனர். - See more at: http://www.tamilmirror.lk/164832/%E0%AE%85%E0%AE%B2…
-
- 1 reply
- 461 views
-
-
யங் ஹீரோஸ் வீரர்களை வீழ்த்திய சிவனாந்த அணி By Mohamed Azarudeen - இலங்கை கிரிக்கெட் சபை (SLC) கிழக்கு மாகாண உள்ளூர் கழகங்கள் இடையே ஏற்பாடு செய்து நடாத்தும் டிவிஷன் – II ஒருநாள் தொடரின் போட்டியொன்றில், ஏறாவூர் யங் ஹீரோஸ் அணியினை மட்டக்களப்பு சிவானந்தா அணியினர் 5 விக்கெட்டுக்களால் தோற்கடித்திருக்கின்றனர். ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஏறாவூர் யங் ஹீரோஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து கொண்டது. அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய யங் ஹீரோஸ் அணியினர் 38 ஓவர்களுக்கு அ…
-
- 0 replies
- 478 views
-
-
டெல்லி: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள இருந்த மோனிகா தேவி ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறி வெளியேற்றப்பட்டார். இதனால் பெண்கள் பளு தூக்கும் போட்டியில் இந்தியா இடம் பெறுமா என்பது தெரியவில்லை. ஒலிம்பிக் போட்டி வரும் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கிறது. இதில் 57 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. தடகளம், துப்பாக்கி சுடுதல், நீச்சல், வில் வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், குத்துச்சண்டை, மல்யுத்தம், பளு தூக்குதல், ஜூடோ, துடுப்பு படகு, பாய் மர படகு ஆகிய விளையாட்டுகளில் இந்திய அணி கலந்து கொள்கிறது. பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் இடம் பெற்ற ஒரே பெண் வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
தடைகாலம் 4 ஆண்டுகளாக குறைப்பு: பதவியை ராஜினாமா செய்தார் பிளாட்டினி மைக்கேல் பிளாட்டினி சர்வதேச கால்பந்து அமைப்பின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் மற்றும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மைக்கல் பிளாட்டினி ஆகியோருக்கு இடை யில் எந்தவிதமான எழுத்து ஆவ ணங்கள் இல்லாமல் 2 மில்லி யன் சுவிஸ் பிராங்குகள் கைமாற்றப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் பிளாட்டினிக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையானது கடந்த பிப்ரவரி மாதம் 6 வருடங்களாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில் இந்த தடையை நீக்கக்கோரி விளையாட்டு தொடர்பான குற் றங்களை விசாரிக்கும் தீர்ப் பாயத்தில் பிளாட்டினி மேல்முறை யீடு செய்தார். இதனை நேற்று விசாரித்த தீர்ப்பாயம் …
-
- 0 replies
- 224 views
-
-
இங்கிலாந்து மகளிர் எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டத்தில் ஆர்சனல் கழகம் 14ஆவது தடவையாக சம்பியனானது 2016-05-16 12:01:29 இங்கிலாந்தின் மகளிர் எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஆர்சனல் மகளிர் அணி 14ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்கத்தினால் 46ஆவது வருடமாக நடத்தப்பட்ட மகளிர் எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்ட இறுதி ஆட்டத்தில் செல்சி மகளிர் அணியை லண்டன் வெம்ப்ளி விளையாட்டரங்கில் எதிர்கொண்ட ஆர்சனல் மகளிர் அணி 1 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டு கிண்ணத்தை சுவீகரித்தது. போட்டியின் 18ஆவது நிமிடத்தி…
-
- 0 replies
- 344 views
-
-
யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள் . யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள் . தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியின் விளையாட்டு தரத்தை மேம்படுத்தவும் பாடசாலையை விட்டு வெளியேற்றிய மகாஜனன்கள் நல்ல பண்புடையவர்களாகவும் ஆரோக்கியமானவர்களையும் சமூகத்தில் சிறந்து விளங்கவும் என்ற உன்னத நோக்கத்துடன் 1960 இல் ஆரம்பிக்கப்பட்டதுதான் கிறாஸ்கொப்பர்ஸ் வி.கழகம். கிறாஸ்கொப்பரஸ் பழைய, புதிய வீரர்களையும் மகாஜனன்களையும் ஒன்றிணைத்து சினேக பூர்வ துடுப்பாட்ட போட்டி யொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் பதிவு செய்த 19 விளையாட்டு கழகங்களிலிடமிருந்து 2 சகல துறை வீரர்களை தெரிவு செய்து அத்துடன் எமது கிறாஸ்கொப்பர்ஸ் கழகத்தில் இருந்து போகும் 4 பேரை உள்ளடக்கி 42…
-
- 7 replies
- 921 views
-
-
பீலே மூன்றாவது திருமணம் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு தற்போது 75 வயதாகிறது. ஏற்கெனவே பீலே செய்த இரண்டு திருமணமும் முறிந்து போனது. ரோஸ்மேரி ஜோல்பி என்ற முதல் மனைவிக்கு 3 குழந்தைகள் உண்டு. இரண்டாவதாக அஸ்ரியா என்பவரை திருமணம் செய்தார். அந்த வகையில் இரு குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளுக்கு பீலே தந்தை. இந்த நிலையில் 42 வயது மார்சியா சிப்லே அயோகி என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார். கடந்த 1980ம் ஆண்டு பீலேவும் மார்சியாவும் நியூயார்க்கில் சந்தித்துள்ளனர். அந்த பழக்கம் நட்பாக மாறி தற்போது திருமணத்தில் வந்து முடிந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதலே இருவரும் சாபோலோ நகரில் தனியாக சந்திக்கத் தொடங்கியுள்ளனர். செவ்வாய்க் கிழமையன்று…
-
- 1 reply
- 2.3k views
-