விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது. 162 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்களை மாத்…
-
- 0 replies
- 529 views
-
-
ஆசியாவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஹ்மத் கலீல் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத்தின் வருடாந்த விருது விழாவில் ஐக்கிய அரபு இராச்சிய வீரர் அஹ்மத் கலீல், 2015இன் அதிசிறந்த ஆசிய கால்பந்தாட்ட வீரர் விருதை வென்றெடுத்தார். ஆசியாவின் அதி சிறந்த, கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட கால்பந்தாட்ட வீரர் என்ற இரண்டு விருதுகளையும் வென்ற மூன்றாவது வீரர் இவராவார். ஆசியாவின் அதிசிறந்த கனிஷ்ட கால்பந்தாட்ட வீரர் விருதை 2008 இல் கலீல் வென்றிருந்தார். இவ்வருடத்தின் அதி சிறந்த வீரருக்கான குறும்பட்டியலில் இடம்பெற்ற சக நாட்டு வீரர் ஓமர் அப்துல்ரஹ்ம…
-
- 0 replies
- 741 views
-
-
பங்கபந்து பி.பி.எல் T20 தொடரில் ஐந்து இலங்கையர்கள் By Mohamed Azarudeen - Tweet on Twitter இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பங்கபந்து பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) T20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றிருந்தது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) ஏற்பாடு செய்து நடாத்தும் இந்த பங்கபந்து பி.பி.எல் T20 கிரிக்கெட் தொடரில் 7 அணிகள் பங்குபெறுகின்றன. பங்கபந்து பி.பி.எல் T20 தொடர், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஏற்கனவே நடாத்திய பி.பி.எல் T20 கிரிக்கெட் தொடர்களை விட வித்தியாசமான முறையில் நடைபெறவிருக…
-
- 0 replies
- 346 views
-
-
ஆமிருக்கு ஏளனம்: அறிவிப்பாளருக்குக் கண்டனம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிரை ஏளனம் செய்த மைதான அறிவிப்பாளருக்கு, நியூசிலாந்து கிரிக்கெட் சபை, உத்தியோகபூர்வக் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, தனது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர், நியூசிலாந்துத் தொடரிலேயே ஆமிர், முதன்முறையாகப் பங்குபற்றியிருந்தார். இதில், ஆமிர் பந்துவீசும்போது, பெட்டியில் பணம் வீழ்வது போன்றதான ஒலியை எழுப்பியிருந்தார். இதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்திடம் முதலில் மன்னிப்புக் கோரியிருந்த நியூசிலாந்து கிரிக…
-
- 0 replies
- 418 views
-
-
Published By: DIGITAL DESK 3 13 AUG, 2025 | 02:31 PM (நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் 202 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில் 34 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றுள்ளது. அணித் தலைவர் ஷாய் ஹோப் குவித்த ஆட்டம் இழக்காத சதமும் ஜேடன் சீல்ஸின் 6 விக்கெட் குவியலும் மேற்கிந்தியத் தீவுகளின் தொடர் வெற்றியில் பிரதான பங்காற்றின. ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற கடைசி ச…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
கிரிக்கெட் வீரர் பயிற்சியின் போது பலி இளம் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரரொருவர் பயிற்சியின்போது கீழே விழுந்து உயிரிழந்த துன்பியல் சம்பவமொன்று கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லுகன்யா டஸ்கி என்ற 22 வயது நிரம்பிய இளம் வீரரே இதயக்கோளாரறு காரணமாக திடீரென மயங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்தவராவார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் பின்கோ நகம் கேப் டவுனில் கிரிக்கட் அக்கடமியொன்றை நடத்தி வருகிறார். குறித்த கிரிக்கெட் அக்கடமியில் உடற்தகுதி தேர்வுகள் இடம்பெற்று வந்தன. வழமையாக குறித்த தினம் அக்கடமியில் பயிற்சி இடம்பெற்றவேளையில் லுகான்யா ட…
-
- 0 replies
- 418 views
-
-
இலங்கையில் பாக்.–மே.தீ.வுகள் தொடர் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான தொடர் ஒன்றை இலங்கையில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் நிலவுகின்ற பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக சர்வதேச கிரிக்கெட் அணிகள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கு அச்சம் தெரிவித்துவருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான் அணி தொடர்களை நடத்திவருகிறது. எனினும் அங்கு போட்டிகளை நடத்துவதால் ஈட்டப்படுகின்ற வருமானம் போதா நிலை காண…
-
- 0 replies
- 433 views
-
-
உயர் நாற்காலிக்கு செல்வதை தடுக்க குழிபறிக்கும் கூட்டம்.! ஐ.சி.சி தலைவர் பதவிக்கு சங்கக்கார தகுதியற்றவர் என்ற திலங்க சுமதிபாலாவின் அண்மைய கூற்று , சங்கக்கார ஒரு உயர் நாற்காலிக்கு செல்வதை தடுக்க திலங்க சுமத்திபால மற்றும் மஹிந்தானந்த இருவரும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் குழிபறிப்பில் செயல்படுவதாக உணர வைக்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மஹிந்தானந்தாவின் சர்ச்சைக்குரிய அறிக்கை, கோவிட் -19 ஐ விட அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் இலங்கைக்கு பெரும் அவமானம். ICC தலைமை நாற்காலிக்கு இலங்கை கிரிக்கெட் சபை சங்காவை முன்மொழிய இருக்கும் தருணத்தில் 2011 உலகக் கோப்பை காட்டிக்கொடுப்பு என அப்போதைய துணை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த, பேசும் …
-
- 0 replies
- 1k views
-
-
37 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 2-வது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் கிரிம்மேட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அஸ்வினின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் இந்திய அணியில் விளையாடும் தமிழரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு முன்னணி சுழல் பந்து வீச்சாளர் ஆவார். http://stats.espncricinfo.com/ci/content/records/283534.html
-
- 0 replies
- 380 views
-
-
நாட்டுக்காக முழு அர்ப்பணிப்போடு கடைசி வரை விளையாடியவர் இவர் – இந்திய லெஜண்டை பாராட்டிய ஸ்டீவ் வாக் இந்திய அணியின் மறக்க முடியாத பவுலர்களில் அனில் கும்ப்ளேவும் ஒருவர். அனில் கும்ப்ளே இந்திய அணியின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் ஆவார். இவர் 18 வருடங்களாக தனது தாய் நாட்டு கிரிக்கெட் அணிக்காக வாளையாடி உள்ளார். இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய பார்மட்களில் விளையாடி முறியடிக்க முடியாத பல சாதனையை படைத்துள்ளார். இந்திய வீரர்களின் சார்பாக இவர் 619 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இதன் மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்கள் எடுத்த மூன்றாவது வீரராக திகழ்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 29.65 பவுலிங் சராசரியை பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி …
-
- 0 replies
- 627 views
-
-
சென். நிக்கலஸ், பாடும்மீன், கல்முனை பிறில்லியன்ட் அணிகள் அடுத்த சுற்றுக்குள் FA கிண்ண சுற்றுத் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிக்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மூன்று போட்டிகளின் முடிவுகளின்படி யாழ் அணிகளான நாவாந்துறை சென். நிக்கலஸ், குருநகர் பாடும்மீன் மற்றும் கல்முனை பிறில்லியன்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. நாவாந்துறை சென். நிக்கலஸ் எதிர் வென்னப்புவ அல் ஹிரா நாவாந்துறை சென். நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் வென்னப்புவா அல் ஹிரா கால்பந்துக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. ஆட்டத்தில் ஹிரா வீரர்களின்…
-
- 0 replies
- 300 views
-
-
ஐரோப்பியன் கோல்டு ஷூவை 4-வது முறையாக கைப்பற்றினார் மெஸ்சி ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளில் விளையாடிய வீரர்களில் அதிக கோல்கள் அடித்து மெஸ்சி 4-வது முறையாக கோல்டன் ஷூவை பெற்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கிளப்புகளுக்கு இடையே ‘லா லிகா’ தொடர் நடைபெறுகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கிளப்புகளுக்கிடையே ‘லீக் 1’ நடைபெறுகிறது. இதேபோன்று இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரருக்கு ‘ஐரோப்பியன் கோல்டன் ஷூ’ வழங…
-
- 0 replies
- 251 views
-
-
பீலேவை விஞ்சிய ரொனால்டோ! சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் தேசிய அணிக்காக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பவான் பீலேவை முந்தினார் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரஷ்யாவில் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடக்க உள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல், ஃபரோ தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி, போர்ச்சுகல் நாட்டின் போர்டோவில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல்கள் அடித்து உதவ, 5-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல், அந்தக் குட்டித் தீவை வீழ்த்தியது. ரொனால்டோ ஹ…
-
- 0 replies
- 245 views
-
-
ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உறுதிசெய்தது நீதிமன்றம் வாழ்நாள் போட்டித் தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்த மனு மீதான விசாரணையில் தோல்வியைத் தழுவிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது ஆற்றாமையை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். ‘இந்தியன் ப்ரீமியர் லீக்’ இ20 போட்டித் தொடரின்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைத்து வித சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் சபை வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து ஸ்ரீசாந்த் மேன்முறையீடு செய்ததையடுத்து, அது குறித்த வழக்கு கேரள நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீசாந்த் ம…
-
- 0 replies
- 298 views
-
-
வியக்க வைக்கும் விராட் கோலி! 'கேப்டன் கூல்' என்றழைக்கப்பட்ட எம்.எஸ்.தோனிக்கு நேர் எதிரானவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. ஆட்டத்தின்போது பரபரப்பான நிமிடங்களில் பதற்றமான உணர்ச்சியை இவர் வெளிப்படுத்துவார். சில சமயங்களில் கோபமும் கொள்வார். இதனால், ரசிகர்களில் சிலருக்கு இவர் மீது வருத்தம் உண்டு. ஆனாலும், தனது அபார ஆட்டத் திறனால் அணியின் ஸ்கோரை சரசரவென இவர் உயர்த்திவிடுவதாலும், வெற்றிக்காக கடும் உழைப்பை செலுத்தி வருவதாலும் கோலி மீது வருத்தம் கொள்ளும் ரசிகர்களும் அவரைப் பாராட்டி பின்தொடர்ந்து வருபவர்களாக மாறிவிடுகின்றனர். அப்படி, கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையிலும்…
-
- 0 replies
- 592 views
-
-
தோனியுடன் மிஸ்பாவை ஒப்பிடலாமா: சோயப் மாலிக் கோபம் ஆகஸ்ட் 23, 2014. கராச்சி: ‘‘ஐ.சி.சி., யின் பல்வேறு தொடர்களில் கோப்பை வென்று தந்தவர் தோனி. இவரை பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாவுடன் ஒப்பிடுவது தவறு,’’ என, சோயப் மாலிக் தெரிவித்தார். இங்கிலாந்து சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. அதேபோல, இலங்கை சென்ற பாகிஸ்தான் அணி 0–2 என, டெஸ்ட் தொடரை கோட்டை விட்டது. இதனால், இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் தோனி, மிஸ்பா உல் ஹக் பதவி விலக வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணி வீரரும், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் கணவருமான சோயப் மாலிக் கூறியது: ஒவ்வொரு கேப்டன்களுக்கும் மோசமான தொடர்கள் அமைவது உண்டு. இந்த தோல்விகளை ஒப்பிட்டு பார்த்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்து அணியின் புதிய தலைவர் ரூனி 2014-08-29 10:22:49 இங்கிலாந்தின் புதிய அணித் தலைவராக மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் முன்கள வீரர் வெய்ன் ரூனியை பயிற்றுநர் ரோய் ஹொஜ்சன் நியமித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளின் முதலாம் சுற்றுடன் இங்கிலாந்து அணி வெளியேற்றப்பட்ட பின்னர் அணித் தலைவர் ஸ்டீவன் ஜெரார்ட் ஓய்வு பெற்றதை அடுத்து தலைவர் பதவியை 28 வயதான ரூனி பொறுப்பேற்றுள்ளார். 95 சர்வதேச போட்டிகளில் 40 கோல்களைப் போட்டுள்ள வெய்ன் ரூனியை மென்செஸ்டர் யுனைட்டட் அணியின் தலைவராக அதன் புதிய பயிற்றுநர் லூயி வன் கால் இம் மாத முற்பகுதியில் நியமித்திருந்தார். இங்கிலாந்துக்கும் நோர்வேக்கும் இடையில் செப்டெம்பர் 3ஆம் திகதி சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி வெம்ப்ளி விளையாட்டர…
-
- 0 replies
- 396 views
-
-
மொனாகோவை 7-1 என துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது பிஎஸ்ஜி லீக்-1 கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் மொனாகோவை 7-1 என துவம்சம் செய்து பிஎஸ்ஜி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. #PSG இங்கிலாந்தில் பிரீமியர் லீக், ஸ்பெயினில் லா லிகா தொடர் நடைபெறுவதுபோல் பிரான்சில் லீக்-1 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. 2017-18 சீசனில் நடப்பு சாம்பியனான மோனாகோவிற்கும், தலைசிறந்த அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. நேற்றிரவு இந்த இரண்டு அணிகளும் பலப்ரீட்சை …
-
- 0 replies
- 338 views
-
-
உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க 2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “2019 உலககிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் நான் விளையாடுவேன். அதுவே எனது இறுதி உலக கிண்ணமாகயிருக்கும். எனின…
-
- 0 replies
- 319 views
-
-
4 ஆவது போட்டியிலும் வெற்றி : இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்தியது இங்கிலாந்து! இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூவிஸ் முறைப்படி18 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இன்று (சனிக்கிழமை) அரம்பமானது. கண்டி, பல்லேகல மைதானத்தில் அரம்பமான இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும் தலைமை தங்கியிருந்தனர். போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன் படி இலங்கை அணி முதலில் களமிறங…
-
- 0 replies
- 294 views
-
-
மத்தியூஸ், மென்டிஸின் சதங்களோடு போராடுகிறது இலங்கை Editorial / 2018 டிசெம்பர் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:49 Comments - 0 நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய நான்காவது நாள் முடிவில், முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், குசல் மென்டிஸின் சதங்களோடு இலங்கை போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இலங்கை: 282/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 83, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 80, திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 6/68, நீல் வக்னர் 2/75, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/35, ட்ரெண்ட் போல்ட் 1/83…
-
- 0 replies
- 772 views
-
-
யூரோ 2016க்கு தகுதி பெற்றது இத்தாலி அஸார்பைஜானுக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி அணி, குழு எச் இலிருந்து யூரோ 2016க்கு நேரடியாக தானாக தகுதிபெறும் ஒரு அணியாக மாறியுள்ளது. 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற யூரோ கிண்ணத் தொடரில் இரண்டாமிடம் பெற்ற இத்தாலி அணி, குழுநிலைப்போட்டிகளில் ஒரு தோல்வியையும் தளுவாது, தனது ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றியும், மூன்று போட்டிகளில் சமநிலையாகவும் முடித்துக் கொண்டது. இந்நிலையில் இத்தாலி அணி 21 புள்ளிகளையும், நோர்வே 19 புள்ளிகளையும், குரோஷியா 14 புள்ளியகளையும் பெற்றிருந்தன. - See more at: http://www.tamilmirror.lk/156250#sthash.GpgsYaql.dpuf
-
- 0 replies
- 388 views
-
-
மூன்று போட்டிகளையும் முழுமையாக கைப்பற்றிய இலங்கை ; வெறுங் கையுடன் வீடு திரும்பும் பங்களாதேஷ் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 122 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியிலும் வெற்றியை தவறவிட்டது பங்களாதேஷ். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஓருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.இந்த தொடரின் மூன்றாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, வீரர்களின் சிறப்…
-
- 0 replies
- 486 views
-
-
சிட்டகாங் டெஸ்ட்: ஸ்மித் இரட்டை சதம் சிட்டகாங் நகரில் நடந்து வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில், தென்ஆப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 405 ரன் குவித்துள்ளது. கிரேம் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மித், நீல் மெக்கன்ஸி களமிறங்கினர். துவக்க முதலே இருவரும் சிறப்பாக விளையாடியதால், பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். குறிப்பாக ஸ்மித்தின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. 127 பந்துகளை மட்டுமே சந்தித்து தனது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ம…
-
- 0 replies
- 958 views
-
-
இலங்கை கால்பந்து சம்மேளன துணைத் தலைவர் மரணம் By Mohamed Azarudeen - இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) துணைத் தலைவர்களில் ஒருவராக செயற்பட்டு வந்த NT. பாரூக் அவர்கள் தீடிரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக திங்கட்கிழமை (18) காலை தனது 60ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். தனது ஆரம்ப கட்ட கால்பந்தை அக்கரைப்பற்று இளைஞர் விளையாட்டுக் கழகத்துடன் ஆரம்பித்த பாரூக், ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி, தேசிய மட்டத்திலும் முன்னணி கோல் காப்பாளராக திகழ்ந்தார். இன்னும் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் கால்பந்து போட்டிகளுக்கான தேசிய நடுவராகவும் இவர் கட…
-
- 0 replies
- 529 views
-