விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
மொனாகோவை 7-1 என துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது பிஎஸ்ஜி லீக்-1 கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் மொனாகோவை 7-1 என துவம்சம் செய்து பிஎஸ்ஜி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. #PSG இங்கிலாந்தில் பிரீமியர் லீக், ஸ்பெயினில் லா லிகா தொடர் நடைபெறுவதுபோல் பிரான்சில் லீக்-1 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. 2017-18 சீசனில் நடப்பு சாம்பியனான மோனாகோவிற்கும், தலைசிறந்த அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. நேற்றிரவு இந்த இரண்டு அணிகளும் பலப்ரீட்சை …
-
- 0 replies
- 333 views
-
-
உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – மலிங்க 2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “2019 உலககிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் நான் விளையாடுவேன். அதுவே எனது இறுதி உலக கிண்ணமாகயிருக்கும். எனின…
-
- 0 replies
- 315 views
-
-
4 ஆவது போட்டியிலும் வெற்றி : இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்தியது இங்கிலாந்து! இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூவிஸ் முறைப்படி18 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இன்று (சனிக்கிழமை) அரம்பமானது. கண்டி, பல்லேகல மைதானத்தில் அரம்பமான இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும் தலைமை தங்கியிருந்தனர். போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன் படி இலங்கை அணி முதலில் களமிறங…
-
- 0 replies
- 292 views
-
-
மத்தியூஸ், மென்டிஸின் சதங்களோடு போராடுகிறது இலங்கை Editorial / 2018 டிசெம்பர் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:49 Comments - 0 நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய நான்காவது நாள் முடிவில், முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், குசல் மென்டிஸின் சதங்களோடு இலங்கை போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இலங்கை: 282/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 83, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 80, திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 6/68, நீல் வக்னர் 2/75, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/35, ட்ரெண்ட் போல்ட் 1/83…
-
- 0 replies
- 767 views
-
-
யூரோ 2016க்கு தகுதி பெற்றது இத்தாலி அஸார்பைஜானுக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி அணி, குழு எச் இலிருந்து யூரோ 2016க்கு நேரடியாக தானாக தகுதிபெறும் ஒரு அணியாக மாறியுள்ளது. 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற யூரோ கிண்ணத் தொடரில் இரண்டாமிடம் பெற்ற இத்தாலி அணி, குழுநிலைப்போட்டிகளில் ஒரு தோல்வியையும் தளுவாது, தனது ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றியும், மூன்று போட்டிகளில் சமநிலையாகவும் முடித்துக் கொண்டது. இந்நிலையில் இத்தாலி அணி 21 புள்ளிகளையும், நோர்வே 19 புள்ளிகளையும், குரோஷியா 14 புள்ளியகளையும் பெற்றிருந்தன. - See more at: http://www.tamilmirror.lk/156250#sthash.GpgsYaql.dpuf
-
- 0 replies
- 381 views
-
-
மூன்று போட்டிகளையும் முழுமையாக கைப்பற்றிய இலங்கை ; வெறுங் கையுடன் வீடு திரும்பும் பங்களாதேஷ் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 122 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியிலும் வெற்றியை தவறவிட்டது பங்களாதேஷ். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஓருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.இந்த தொடரின் மூன்றாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, வீரர்களின் சிறப்…
-
- 0 replies
- 481 views
-
-
சிட்டகாங் டெஸ்ட்: ஸ்மித் இரட்டை சதம் சிட்டகாங் நகரில் நடந்து வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில், தென்ஆப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 405 ரன் குவித்துள்ளது. கிரேம் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மித், நீல் மெக்கன்ஸி களமிறங்கினர். துவக்க முதலே இருவரும் சிறப்பாக விளையாடியதால், பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். குறிப்பாக ஸ்மித்தின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. 127 பந்துகளை மட்டுமே சந்தித்து தனது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ம…
-
- 0 replies
- 951 views
-
-
இலங்கை கால்பந்து சம்மேளன துணைத் தலைவர் மரணம் By Mohamed Azarudeen - இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) துணைத் தலைவர்களில் ஒருவராக செயற்பட்டு வந்த NT. பாரூக் அவர்கள் தீடிரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக திங்கட்கிழமை (18) காலை தனது 60ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். தனது ஆரம்ப கட்ட கால்பந்தை அக்கரைப்பற்று இளைஞர் விளையாட்டுக் கழகத்துடன் ஆரம்பித்த பாரூக், ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி, தேசிய மட்டத்திலும் முன்னணி கோல் காப்பாளராக திகழ்ந்தார். இன்னும் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் கால்பந்து போட்டிகளுக்கான தேசிய நடுவராகவும் இவர் கட…
-
- 0 replies
- 510 views
-
-
வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர் 02 Dec, 2025 | 03:11 PM (நெவில் அன்தனி) சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் உலக சம்பியன்களான மொண்டோ டுப்லான்டிஸ் மற்றும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் ஆகிய இருவரும் இந்த வருடம் நிலைநாட்டிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் இருவரையும் வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) தெரிவுசெய்து உயர் விருதுகளை வழங்கியது. மொனோக்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விhழவின்போது இந்த உயர் விருதுகளுடன் இன்னும் சில விருதுகள் வழங்கப்பட்டன. சுவடு, மைதானம், மற்றும் வெளிக்களம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலா…
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் அணி உதவிப் பயிற்றுநர்களாக முஷ்தாக் அஹ்மத், அஸ்ஹர் மஹ்மூத் 2016-06-16 12:02:38 பாகிஸ்தானின் பந்துவீச்சைப் பலப்படுத்தும் வகையில் அணியின் உதவிப் பயிற்றுநராக முஷ்தாக் அஹ்மதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளரான முஷ்தாக் அஹ்மத் தற்போது தேசிய கிரிக்கெட் கல்வியத்தின் (அக்கடமி) தலைமைப் பயிற்றுநராக பதவி வகிக்கின்றார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கவனத்தில் கொண்டே இவர் உதவிப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 375 views
-
-
தடிப்பான துடுப்புகளுக்கு வருகிறது ஆப்பு கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் துடுப்புகளின் அளவை மட்டுப்படுத்துவதற்கான விதிகளை, கிரிக்கெட்டின் விதிகளில் ஏற்படுத்த வேண்டுமென, கிரிக்கெட் விதிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) உலக கிரிக்கெட் செயற்குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. கிரிக்கெட்டில் துடுப்பாட்டம், பந்துவீச்சை அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது எனத் தெரிவித்துள்ள அக்குழு, துடுப்புகளின் தடிப்பம் குறித்தும் அவற்றின் எடை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது. அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், எம்.சி.சி-இன் விதிகள் தொடர்பான இறுதி முடிவில் அதிகளவில் மதிக்கப்படும் சுயாதீனமான இந்தக் குழுவில், சர்வ…
-
- 0 replies
- 449 views
-
-
சோதனைக்கு மத்தியிலும் உலக சாதனை படைத்த M.S.டோனி சோதனைக்கு மத்தியிலும் உலக சாதனை படைத்த M.S.டோனி அமெரிக்காவின் கிரிக்கெடடை வளர்ப்பதன் நோக்கமாக கொண்டு புளோரிடாவில் இடம்பெற்றுவரும் இந்திய,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் டோனி ஓர் உலக சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் இளம் வீரர் லோகேஷ் ராஹுலின் அசத்தல் சதம் வீணாகிப்போக பரபரப்பான நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவை 1 ஓட்டத்தால் வெற்றிகொண்டது உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகள். நேற்றைய போட்டியில் இறுதி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவையான நிலையில்,இறுதி ஓவரை மிக துல்லியமாக வீசிய பிராவோ,இறுதி பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார், …
-
- 0 replies
- 824 views
-
-
ஸ்மித், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? யார் சிறந்த கேப்டன்? நம்பர்கள் சொல்லும் ரகசியம் #DepthReport #3MinRead இரு ஜாம்பவான்கள். இரண்டு கோபக்கார இளைஞர்கள், இரண்டு நம்பர்1 பேட்ஸ்மேன்கள், இரண்டு கேப்டன்கள் - இனி கிரிக்கெட் உலகை ஆளப்போகும் அந்த இருவர் விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இதுவரையிலான எந்தவொரு ஜாம்பவான்களின் சாயலும் இல்லாமல் தனித்துத் தெரியும் ஜென் Z கிரிக்கெட் ஜாம்பவான்கள் இவர்கள். சச்சின் மாதிரி பேட்டிங் செய்யவும் தெரியும், கங்குலி போல கேப்டன்சியும் தெரியும். பிராட்மேன் போல வெளுக்கவும் முடியும், ஸ்டீவ்வாக் பாணியில் அணியை வழிநடத்தவும் முடியும். இப்படி காக்டெயிலாக வளர்ந்து நிற்கும் …
-
- 0 replies
- 464 views
-
-
விக்கெட்டில் பட்ட பந்து ; 4 ஓட்டங்கள் அணிக்கு கிடைத்தது ; என்ன நடந்தது தெரியுமா..? (வீடியோ இணைப்பு) கரிபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது நடந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டிரின்பெகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஏழாவது ஓவரில் சென்.லூசியா ஸ்டார்ஸ் அணி துடுப்பெடுத்தாடி கொண்டிருக்கும் வேளையில் டிரின்பெகோ அணியின் பந்து வீச்சாளர் வீசிய பந்து விக்கெட்டில் பட்டு பெய்ல்ஸ் விழாமல் 4 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது. குறித்த பந்து துடுப்பாட்ட வீரரின் மட்டையில் படாமல் நேராக விக்கெட்டில் பட்டும் பெய்ல்ஸ் விழாதமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. htt…
-
- 0 replies
- 425 views
-
-
டோனியின் அனுபவம் குறித்து ரவி சாஸ்திரி அசத்தல் டுவிட் அனுபவத்தை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது என டோனி தனது அனுபவத்தை நிரூபித்துள்ளார் என ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. 36 வயதாகும் டோனி தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக மற்றும் பணியாற்றி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டோனியின் பேட்டிங் குறித்து விமர்சனம் எழும்பி வருகிறது. டோனியின் பினிஷிங் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற விமர்சனம் இருந்து வருகிறது. பல்வேறு விமர்சனங்க…
-
- 0 replies
- 347 views
-
-
13ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த யாழ் பல்கலைக்கழகம் University of Jaffna - Champions Inter University Football Championship 2017 (Photo Courtesy – MoraSpirit) பதுளை, வின்சன்ட் டயஸ் அரங்கில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தை வீழ்த்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழகம், 19 தடவைகள் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 13 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். யாழ் பல…
-
- 0 replies
- 421 views
-
-
மன்செஸ்டர் சிட்டிக்கு வெற்றிக் கிண்ணம் திங்கட்கிழமை, 12 மே 2014 14:57 இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டதொடரில் மன்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் ஆகியுள்ளது. நேற்று வெஸ்ட் ஹாம் ஜுனைட்டட் அணியுடனான போட்டியில் 2 இற்கு 0 என்ற ரீதியில் வெற்றி பெற்று இந்த வருடத்திற்க்கான முதலிடத்தை உறுதி செய்தது. மன்செஸ்டர் சிட்டி அணி விளையாடிய 38 போட்டிகளில் 27இல் வெற்றி பெற்று 6 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்த அதேவேளை, 5 போட்டிகளில் தோல்வியை சந்த்திதுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்குள் மன்செஸ்டர் சிட்டி அணி இரண்டாவது தடவையாக சம்பியன் ஆகியுள்ளது. இங்கிலாந்து பிரீமியர் லீக் வரலாற்றில் நான்காவது தடவையாக மன்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இரண்டாமிடத்தைப் லிவர்ப்…
-
- 0 replies
- 510 views
-
-
இந்திய பேட்ஸ்மென்கள் எனது பந்தை சுலபமாக அடிக்கலாம் என்று மனக்கோட்டை கட்டினர்: மொயீன் அலி இந்தியாவுக்கு எதிராக நடப்பு டெஸ்ட் தொடரில் கலக்கி வரும் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி, இந்திய பேட்ஸ்மென்கள் தனது பந்தை எளிதில் அடித்து விடலாம் என்று நினைத்ததாகக் கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக மொயீன் அலி இதுவரை 19 விக்கெட்டுகளை 22.94 என்ற சராசரி விகிதத்தில் கைப்பற்றியுள்ளார். "இந்திய பேட்ஸ்மென்கள் என்னை எளிதான இலக்காக எண்ணினர். எனது பந்து வீச்சில் சுலப ரன்களை எடுத்து விடலாம் என்று நினைத்தனர். அவர்களது இந்த எண்ணம் எனக்கு உதவிகரமாக அமைந்தது. இப்போது அவர்கள் என்னை அடித்து ஆடினால் எனக்கு இன்னும் விக்கெட்டுகளை எடுக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்திய வ…
-
- 0 replies
- 465 views
-
-
தோனியை விமர்சித்த பிரிட்டன் ஊடகங்கள்: இந்திய ரசிகர்கள் கூச்சல் எதிரொலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்ட இந்திய ரசிகர்களை கண்டிக்க மறுத்த தோனியை பிரிட்டன் ஊடகங்கள் விமர்சித்துள்ளன. 20 ஓவர் போட்டியின்போது இங்கிலாந்து அணியைவிட இந்திய அணி ரசிகர்கள்தான் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அதிகம் வந்திருந்தனர். இந்திய வீரர்கள் விக்கெட் எடுத்தபோதும், பவுண்டரிக்கு பந்தை விரட்டியபோதும் பெரும் கரவொலி எழுந்தது. இந்திய வீரர்களுக்கு ஆதரவாக குறிப்பாக தோனியைப் புகழும் வாசக அட்டைகள் பலவற்றையும் இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கொண்டு வந்திருந்தனர். போட்டியில் இங்கிலாந்தில் நடைபெறுகிறதா அல்லது இந்தியாவில் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு இங்கில…
-
- 0 replies
- 613 views
-
-
மெஸ்சி 250: பார்சிலோனா வெற்றி அக்டோபர் 19, 2014. பார்சிலோனா: எல்பார் அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 5–0 என வெற்றி பெற்றது. பார்சிலோனா வீரர் மெஸ்சி லா லிகா தொடரில் 250வது கோல் அடித்து அசத்தினார். ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. பார்சிலோனாவில் நடந்த இதன் லீக் போட்டியில் எல்பார், பார்சிலோனா அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் எதுடும் அடிக்கப்படவில்லை. விறுவிறுப்பான இரண்டாவது பாதியில் சேவி(60வது நிமிடம்), நெய்மர் (72), மெஸ்சி (74) தலா ஒரு கோல் அடிக்க, பார்சிலோனா அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சாதனையை நோக்கி: இந்தப்போட்டியில் ஒரு கோல் அடித்ததன் மூலம், லா லிகா வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர்கள…
-
- 0 replies
- 387 views
-
-
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது பாகிஸ்தான் – தென்னாபிரிக்காவிற்கு 41 ஓட்டங்கள் வெற்றி இலக்கு! பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவிற்கு 41 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நிர்ணயித்துள்ளது. தென்னாபிரிக்கா – பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் 3 ஆம் திகதி ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தென்னாபிரிக்கா அணி முடிவு செய்தது. அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி 177 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அவ்வணி சார்பில் அணித்தலைவர் சர்ஃப்ராஸ் அகமட் 56, ஷான் மசூத் 44 ஓட்டங்களை பெற பந்துவீச்சில் டுவானோ ஒலிவியே 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங…
-
- 0 replies
- 483 views
-
-
ஜோஸ் பட்லரை, தோனி, டிவில்லியர்ஸ், கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடும் இங்கிலாந்து ஊடகம் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று சமீபத்தில் அசத்தி வரும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மென் ஜோஸ் பட்லரை மற்ற அதிரடி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மென்களான டிவில்லியர்ஸ், கில்கிறிஸ்ட், தோனி ஆகியோருடன் ஒப்பிட்டுள்ளது இங்கிலாந்து ஊடகம். நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் முடிந்த டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் 3 மணி நேரங்களில் 73 ரன்கள் எடுத்தார் ஜோஸ் பட்லர். டி20 போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 35 பந்துகளில் 71 ரன்கள் விளாசித் தள்ளினார். பிறகு அன்று நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 77 பந்துகளில் 129 ரன்களை விளாசி அந்தத் தருணத்தில் சரிவிலிருந்த இங்கிலாந்தை மீட்டு நிய…
-
- 0 replies
- 742 views
-
-
2016 ரியோ ஒலிம்பிக்: ஓராண்டு கவுன்டவுன் தொடங்கியது 2016 ஒலிம்பிக் ஓராண்டு கவுன்டவுன் நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) பிரேசில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹென்ரிக் எட்வர்டோ அல்வெஸ், விளையாட்டுத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஹில்டன், பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் கார்லஸ் நுஸ்மேன், பிரேசில் அதிபர் அதிபர் தில்மா ரூசெஃப், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பச் உள்ளிட்டோர். படம்: ஏஎஃப்பி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இதற்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அதற்கான கவுன்டவுன் அதிகாரப்பூர்வமாக ஒலிம்பிக் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்டது. உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில்…
-
- 0 replies
- 192 views
-
-
தொடரை இழந்தது பாகிஸ்தான் January 22, 2016 வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கியது நியூஸிலாந்து. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து 2-1 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 16.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. மார்டின் கப்தில் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுக்க, வில்லியம்சன் 33 ரன்களை எடுத்தார். ஆனால் கோரி ஆண்டர்சன் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசி கடைசி வரை நாட் அவ…
-
- 0 replies
- 414 views
-
-
பதவியிழக்கிறார் மலிங்க? இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைமைப் பதவியை, அதன் தற்போதைய தலைவர் லசித் மலிங்க இழக்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக, தற்போதைய டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் தலைவரான அஞ்சலோ மத்தியூஸ், புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதியிலிருந்து இவ்வாண்டு ஜனவரி 10ஆம் திகதி வரை, 16 மாதங்களுக்கும் மேலாக, உலக இருபதுக்கு-20 தரப்படுத்தலில் முதலிடத்தை வகித்த இலங்கை அணி, பெப்ரவரி 9ஆம் திகதி, மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், இந்தியாவுக்கெதிரான தொடரில் தோல்வி, ஆசியக் கிண்ணப் போட்டிகளில் மோசமான பெறுபேறுகள் போன்ற காரணத்தால்…
-
- 0 replies
- 551 views
-