Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 20 ஓவர் கிரிக்கெட்டில் டக்வொர்த் விதி பொருத்தமற்றது: ஸ்டீபன் பிளமிங் கருத்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதி முறையை பின்பற்றுவது பொருத்தமற்றது என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார். ஐதராபாத்: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியின் வெளியேற்றம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதிய எலிமினேட்டர் ஆட்டம் நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்தது. முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128…

  2. உலக மெய்வல்லுனர் தொடரில் தொடரும் அமெரிக்காவின் ஆதிக்கம் லண்டனில் நடைபெற்றுவருகின்ற 16ஆவது உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 5 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதில் 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெள்ளிப் பதக்கங்களை அவ்வணி பெற்றுக்கொண்டுள்ளது. இப்பட்டியலில் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று கென்யா 2ஆவது இடத்தையும், ஒரு தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற எத்தியோப்பியா 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. மெய்வல்லுனர் உலகின் முதல்நிலை அணியாக விளங்கிய ஜமைக்கா பதக்கப்பட்டியலில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 400 மீற்ற…

  3. ஒரு காலத்துல எப்படி இருந்த பார்சிலோனா... ஒரு ரசிகனின் குமுறல்! பார்சிலோனா, இந்தப் பெயரை தெரிந்தோ தெரியாமலோ சமீபத்தில் அதிகமாக கடந்து வந்த்திருப்பீர்கள். ஸ்பெயின் நாட்டின் டாப் இரண்டு கிளப்புகளில் ஒன்றுதான் பார்சிலோனா. புரியும்படி சொன்னால் கால்பந்து உலகின் மேஸ்ட்ரோவும், அர்ஜெண்டினா தேசிய அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்சி விளையாடிவரும் கிளப் அணிதான் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இந்த பார்சிலோனா அணி. ஒரு காலத்தில் வெற்றிமேல் வெற்றி பெற்ற இந்த அணி சமீபமாக பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. பிரேசில் நட்சத்திரம் நெய்மாரின் விலகல், ரியல் மாட்ரிட் அணியிடம் பேக் டூ பேக் தோல்வி, அணி நிர்வாக குழப்பம், வீரர்கள் தேர்வு என சமீபகாலமாக தொடர்ந்து சறுக்கிக் கொண…

  4. சென்னை சுப்பர் கிங்ஸின் 3 வீரர்கள் விவரம் ‘ரிலீஸ்’ ஐ.பி.எல். தொடரில் முக்கிய அணி­க­ளில் ஒன்­றான சென்னை சுப்­பர் கிங்ஸ், அடுத்த வரு­டம் தக்­க­வைக்­க­வுள்ள மூன்று வீரர்­க­ளின் விவ­ரம் வெளி­யா­னது. இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்­டுச் சபை­யால் நடத்­தப்­ப­டும் ஐ.பி.எல். தொடர் மிக­வும் பிர­ப­ல­மா­னது. கடந்த 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற தொட­ரின் போது முறை­ கே­டு­க­ளில் ஈடு­பட்­ட­தா­கத் தெரி­வித்து சென்னை மற்­றும் ராஜஸ்­தான் அணி­க­ளுக்கு இரண்டு வரு­டங்­கள் தடை விதிக்­கப்­பட்­டது. இந்­தத் தடை இந்த வரு­டத்­து­டன் முடி­வ­டைந்­துள்­ளது. அடுத்த வரு­டம் இந்த இரண்டு அணி­க­ளும் மீண்­டும் கள­மி­றங்­கு­கின்­றன. இதை­ய­டுத்து ஒவ்­வொரு அ…

  5. சம்பியனானது அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் அவுஸ்திரேலிய உள்ளூர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடராக பிக் பாஷ் லீக்கில், 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான சம்பியனாக அடிலெய்ட் ஸ்ரைக்கஸ் தெரிவானது. அடிலெய்ட்டில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், ஹோபார்ட் ஹரிகேன்ஸை 25 ஓட்டங்களால் வென்றமையையடுத்தே அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸின் அணித்தலைவர் ட்ரெவிஸ் ஹெட், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ், 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜக் வெதர்லான்ட் 115 (70), ட…

  6. சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 569 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளர் செய்துள்ளது. அதிகபட்சமாக பெல் 167 ஓட்டங்களும் மற்றும் பேலன்ஸ் 156 ஓட்டங்களும் குவித்துள்ளனர். இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராகனே 54 ஓட்டங்களும் தோனி 50 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்நிலையில் 261 ஓட்…

  7. தோனியின் இடத்துக்குக் குறிவைக்கும் கே.எல்.ராகுல்...?! விஜய் ஹசாரே டிராபி ஃபைனல்... டாஸ் போட வந்திருந்த கருண் நாயர் ``கே.எல் ராகுல் இன் ஃபார் சி.எம்.கௌதம்" என்று சொன்னபோது பெரிதாக யாருக்கும் ஆச்சர்யம் ஏற்படவில்லை. இலங்கையில் நடக்கும் முத்தரப்புத் தொடருக்கு முன்பாக ஒரு பயிற்சிப் போட்டி என்று சிலர் நினைத்தனர். `இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு' என்று சிலர் கருதினர். ஆனால், இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், தோனியின் இடத்துக்கு ராகுல் வைத்த குறியாகவும் இது தெரிகிறது. தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியா திரும்பிய ராகுல், விஜய் ஹசாரே கோப்பையின் லீக் சுற்றில் பங்கேற்றார். முதல் போட்டியில் ஓ…

  8. 40 வயது... 18,000 ரன்கள்... 25 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கும் வாசிம் ஜாபர்! சேவக், கம்பீர் காலத்துக்கு முன்னாள் இந்தியா சோதித்துப் பார்த்த பல தொடக்க ஆட்டக்காரர்களில் கொஞ்சம் அதிக காலம் தாக்குப்பிடித்தவர் இவர்தான். சர்வதேசப் போட்டிகளில் அவ்வளவு சிறப்பாகச் செயல்படாவிட்டாலும், உள்ளூர் போட்டிகளில் பாட்ஷாவாகவே வலம் வந்தார். வாசிம் ஜாபர் - முதல்தர கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரர். அவருக்கு அப்போது வயது 15 இருக்கும். அந்தச் சிறு வயதில், பள்ளி கிரிக்கெட் அணிக்காக 400 ரன்களைக் குவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இன்று அவருக்கு வயது 40. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னும், அதே ஆச்சர்யத்தை தன் பேட்டிங் திறமையால்…

  9. உலக கோப்பை பைனலில் இந்தியா–ஆஸ்திரேலியா: ரிக்கி பாண்டிங் கணிப்பு அக்டோபர் 19, 2014. புதுடில்லி: ‘‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரின் பைனலில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும்,’’ என, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு (பிப்., 14 – மார்ச் 29) 11வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடரை(50 ஓவர்) நடத்துகின்றன. இத்தொடரில் சாதிக்கக் கூடிய அணிகள் குறித்து பாண்டிங் கூறியது: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரின் பைனலில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோத அதிக வாய்ப்புகள் உள்ளன. சொந்த மண்ணில் விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான விஷயம். எனவே ஆஸ்திரேலிய அணி கோப்பை வெல்லும் என நம்…

  10. வட மாகாண விளையாட்டு விழாவில் சம்பியனாகிய யாழ் மாவட்டம் வட மாகாண சபையும், வட மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 12 ஆவது வட மாகாண விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த கடந்த 27 ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெற்றது. இம்முறைப் போட்டித் தொடரில் தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற பல வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், 7 புதிய போட்டி சாதனைகளும் இங்கு நிகழ்த்தப்பட்டன. இதில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களான எம். பிரேம்தாஸ் (100 மீற்றர்), ஏ. அபிஷான் (400 மீற்றர் சட்டவேலி ஓட்டம்), பி. ந…

  11. உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கோஹ்லி உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ஒரேயொரு கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இடம்பெற்றுள்ளதாக ‘போர்ப்ஸ்’ (Forbes) பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உலகின் அதிக சம்பளம் பெறும் வீரராக உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரரும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான ப்ளோய்ட் மேவெதர் (Floyd Mayweather) முதலிடத்தையும், கால்பந்து உலகின் நட்சத்திர ஜாம்பவான்களான லியோனல் மெஸ்சி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் உலகில் அதிக…

  12. புதிய சாதனை; 200 ரன்கள் அடித்த பாக். வீரர் பக்கர் ஜமன்: ஜிம்பாப்வேவுக்கு 400 ரன்கள் இலக்கு இரட்டை சதம் அடித்தமகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமன் - படம் உதவி: ட்விட்டர் புலவாயோ நகரில் நடந்து வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமான் 210 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமன், இமான் உல் ஹக் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் செய்யாத சாதனையாகும். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் சேர்த்தத…

  13. ஆசியாவில் ‘எப்படியிருந்த’ தெ.ஆ அணி இன்று ‘இப்படி’யாகிவிட்டதே: வீழ்ச்சியின் சுவாரசியங்கள் தெ.ஆ. கேப்டன் டுப்ளெசிஸ் ஆட்டமிழக்கும் காட்சி. | ஏ.பி. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி துணைக்கண்டங்களில் சிறப்பாக ஆடும் அணியாகும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து போன்ற அவர்கள் நாட்டில் ஜாம்பவான் அணிகளெல்லாம் இங்கு வந்து மண்ணைக் கவ்வியுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா மட்டும் சிறப்பாக இங்கு ஆடியுள்ளதைத்தான் பார்த்திருக்கிறோம், ஆனால் 2015 அக்டோபருக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி இங்கு கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 2-0 என்று தோல்வி தழுவியது. சிறுகுழந்தைகள் ஆரஞ்சுப் பழத்தை …

  14. 14 SEP, 2023 | 10:13 AM (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ரிட்ஸ்பறி 91ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் ஆரம்பநாளான புதன்கிழமை (13) 4 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் சாதனைகள் நிலைநாட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும். சிறுவர்கள் பிரிவில் 3 புதிய சாதனைகளும் சிறுமிகள் பிரிவில் ஒரு சாதனையும் நிலைநாட்டப்பட்டது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ரி. மெண்டிஸ…

  15. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: விண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் விண்டீஸ் அணி, எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ஓட்டங்களை பெற்றுள்ளது. விண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, பிரிட்ஜ்டவுனில் நேற்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று விண்டீஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. போட்டியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய பிராத்வைட் மற்றும் அறிமுக வீரர் கேம்ப்பெல் ஆகியோர் முறையே 40, 44 என்ற ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அதேபோல் ரோஸ்டன் சேஸ் 54 ஓட்டங்களையும், ஹ…

  16. உலக சாம்பியனுக்கு உதை: ஜெர்மனியை வீழ்த்தியது அமெரிக்கா கொலாக்னே: ‘நட்பு’ கால்பந்து போட்டியில் உலக சாம்பியன் ஜெர்மனியை, 2–1 என்ற கணக்கில் வீழ்த்தியது அமெரிக்க அணி. உலக கோப்பை சாம்பியன் ஜெர்மனி, அமெரிக்க அணிகள் மோதிய ‘நட்பு’ கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்தது. கடந்த வாரம் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘நட்பு’ போட்டியில் நெதர்லாந்தை 4–3 என, வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கியது அமெரிக்கா. போட்டியின் 13வது நிமிடத்தில் மரியா கோட்சா, ஜெர்மனி அணிக்கு முதல் கோல் அடித்தார். 41வது நிமிடத்தில் அமெரிக்காவின் மிக்ஸ் டிஸ்கிரட் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 1–1 என சமன் ஆனது. இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் முன்னிலை பெற எடுத்த முயற்சிகள் வீணாகின. போட்டி முடிய 3 நிமிடம் இருந்த …

  17. அவுஸி சார்ப்பாக விம்பில்டனில் விளையாடி வரும் Nick Kyrgios (வயது 20,மலேசிய தமிழ் வழி தாய்க்கும் கிரேக்க தந்தைக்கும் பிறந்தவர்.) அசிங்கமான நிறவெறி தாக்குதலுக்கு இலக்காகி மனவேதனை அடைந்துள்ளார். அவுஸ்திரேலியா சார்ப்பாக சிறுவனாகவே ரெனிஸில் ஆட ஆரம்பித்து இன்று உலக தர டெனிஸில் விளையாடும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் இவர் மீது மோசமான நிறவெறித் தாக்குதலும் புறக்கணிப்பும் நிகழ்ந்து வருகிறது. விம்பில்டனில் 2015 தொடரில் இவர் அடைந்த தோல்வியை அடுத்து இன்னும் அதிகம் நிறவெறி பொழியப்பட்டுள்ளது இவர் மீது. இவர் உலக தர வரிசையில் 29 வது இடத்தில் இருந்தாலும் இள வயதினர் என்ற வகையில் விரைந்து டெனிஸில் முன்னேறி வர வழி இருக்கும் நிலையில் அவரை ஊக்குவிப்பதற்குப் பதில்.. அவர் மீது நிறவெறியைக் காட்டி …

  18. சில வரிச் செய்திகள் கால்பந்து ரேங்க்: 156-வது இடத்தில் இந்தியா ஃபிஃபா கால்பந்து தரப்பட்டியலில் இந்தியா 156-வது இடத்தில் உள்ளது. உலக சாம்பியன் ஜெர்மனி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அர்ஜென்டினா முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2-வது இடத்தில் பெல்ஜியம் உள்ளது. கொலம்பியா, பிரேஸில், போர்ச்சுகல், ருமேனியா, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகியவை முறையே முதல் 10 இடங்களில் உள்ளன. கடந்த மாதம் வெளியான தரவரிசைப் பட்டியலோடு ஒப்பிடுகையில் இந்தியா 15 இடங்கள் பின்னடைந்துள்ளது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுக்கான போட்டியில் ஓமனிடம் தோல்வியுற்றதை அடுத்து இந்தியா தரவரிசைப் பட்டியலில் கீழிறங்கியுள்ளது. 156-வது இடத்தை கிர்கிஸ்தானுடன் பகிர்ந்து கொண்…

  19. 10 மணி நேரம் குடித்தே கொண்டாடிய இங்கிலாந்து வீரர்கள் இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்ற 4-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் மது அருந்துவது இங்கிலாந்து வீரர்களின் வழக்கம். இப்படி இருக்கும்போது ஆஷஸ் தொடரை வென்ற அந்த அணிக்கு சொல்லவா வேண்டும். போட்டி 3-வது நாளின் மதியத்திற்குள் முடிந்துவிட்டது. இதில் இருந்து மதுக்குடிக்க ஆரம்பித்த வீரர்கள் இரவு நீண்ட நேரம் வரை மது அருந்திக்கொண்டே இருந்துள்ளனர். சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் மது குடித்துள்ளனர். அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த…

  20. 7 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இடம்பெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் இந்தியா அணியை இலங்கை அணி எதிர்கொண்டது. முதலில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் திமுத் கருணரத்னே துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் 50 ஓவர்கள் நிறைவில் மேத்யூசின் அதிரடி சதத்தால் இந்திய அணிக்கு 265 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட், புவனேஸ்வர் குமார், பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர். இதனையடுத…

  21. சரித் அசலங்கவின் சதம் வீண்: ஆப்கானிடம் வீழ்ந்தது இலங்கை By Mohammed Rishad ACC பங்களாதேஷில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இன்று (18) நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் சகலதுறையிலும் பிரகாசித்த ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இதன்மூலம், இம்முறை வளர்ந்துவரும் ஆசிய கிண்ண ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளை சந்தித்த நடப்புச் சம்பியனான இலங்கை வளர்ந்துவரும் அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாத…

  22. எனது பங்கு பெரிதளவல்ல: மஹேல தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில், அவ்வணியால் விதிக்கப்பட்ட 230 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, அவ்விலக்கை அடைந்திருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் குறித்து மஹேல ஜெயவர்தன, சிறப்பான பாராட்டை வழங்கியுள்ளார். இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்டுவரும் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்து அணிக்கு அனுபவமின்மை காணப்படுகின்ற போதிலும், அவ்வணியின் திறமைகள் என்பன பரந்தவை என்றார். இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற போதிலும், தனது பங்கு சிறியதே என அவர் குறிப்பிட்டார். 'உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் பெரிதாக எதையும் செய்யவில்லை. திறமையுள்ள வீரர்கள் குழாமுடன் நீங்கள்…

  23. NBA: அதிரடி மீள்வருகையால் சம்பியனானது கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்டச் சங்க (NBA) தொடரின் வரலாற்றில், மிகச்சிறந்த மீள்வருகைகளில் ஒன்றை நிகழ்த்திய கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அணி, சம்பியன் பட்டத்தை வென்றது. நடப்புச் சம்பியன்களான கோல்டன் ஸ்டேட் அணியை 93-89 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தே, தனது முதலாவது பட்டத்தை கிளீவ்லான்ட் கவாலியேர்ஸ் அணி பெற்றுக்கொண்டது. தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கத் தொடரின் மேற்குச் சம்பியன்களுக்கும் கிழக்குச் சம்பியன்களுக்குமிடையில் 7 போட்டிகள் கொண்ட தொடராக இடம்பெறும் இறுதிப் போட்டித் தொடரில், நான்கு வெற்றிகளைப் பெறும் அணி, சம்பியனாகத் தெரிவாகும். இந்த இறுதிப் போட்டித் தொடர…

  24. அயர்லாந்தை வென்றது ஆப்கானிஸ்தான் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் அயர்லாந்தில் இடம்பெற்றுவரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், தொடரில், 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து, முதலில் ஆப்கானிஸ்தானை துடுப்பெடுத்தாட பணித்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, மொஹம்மட் ஷஷாட் 66, நஜிபுல்லா ஸட்றான் 59 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அயர்லாந்து அணி சார்பாக, கெவின் ஓ பிறைன், பரி மக்கிராத்தி ஆகியோர் தலா ந…

  25. டேரன் சமி: ‘என்னை காலு என அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்’ - சிக்கலில் இஷாந்த் சர்மா? இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணைய பக்கங்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம். டைம்ஸ் ஆப் இந்தியா: 'என்னை காலு என அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்' - விஸ்வரூபம் எடுக்கும் நிறவெறி புகார் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோது தன்னையும், இலங்கை வீரர் திசரே பெரேராவையும் சிலர் 'காலு' என்று அழைத்ததாக சமூகவலைத்தளத்தில் கடந்த வார இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணிகளின் முன்னாள் கேப்டனும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்அணியின் வீரருமான டேரன் சமி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது என 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு தெரிவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.