விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
ஜெர்மனி கால்பந்து கிளப்பில் சென்னை மாணவன் பி.ஜே.ரெக்ஸ். சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பி.ஜே.ரெக்ஸ். 18 வயது கால்பந்து வீரரான இவர் பள்ளியில் பயிலும்போது பல்வேறு கிளப் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் இடம் பெற்ற எஸ்பிஓஏ பள்ளி அணி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில், பெங்களூருவில் நடைபெற்ற தேசிய இளைஞர் கால்பந்து போட்டியில் பட்டம் வென்றது. இந்த தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 40 பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரை கர்நாடகா மாநில கால்பந்து சங்கத்தால் அங்கீ கரிக்கப்பட்ட கோவா கால்பந்து கிளப் நடத்தியது. இதே ஆண்டில் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் 26 நாடுகள் பங்கேற்ற கால்பந்து போட…
-
- 0 replies
- 406 views
-
-
சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது இலங்கை இளையோர் அணித் தலைவர் சரித் அசலங்காவுக்கு. சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது இலங்கை இளையோர் அணித் தலைவர் சரித் அசலங்காவுக்கு. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய ,இந்தாண்டின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை இலங்கை இளையோர் கிரிக்கெட் அணித் தலைவர் சரித் அசலங்கா பெற்றுக் கொண்டார். நேற்று கொழும்பு, காலதாரி விருந்தகத்தில் இடம்பெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியான 2 வது வருடமாகவும் சரித் அசலாங்க தனதாக்கினார். இவருக்கான விருதை ,இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன வழங்கி வைத்தார். காலி ரிச்மன்ட் கல்லூரியின் வீரராகவும், இலங்கை 19 வயத…
-
- 0 replies
- 337 views
-
-
பாக்.எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா திணறல் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. பிரிஸ்பென்: ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னிலும், கேப்டன் சுமித் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கிறிஸ்லீன் (16), ஹேட் (39), மிஷ்சேல் மார்ஷ் (4) ஆகியோர் அ…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழக கிரிக்கெட்டில் சாதி... அஷ்வின் சர்ச்சை ட்வீட்! அஷ்வின் ரவிச்சந்திரன் தமிழகத்தின் பெருமை. டெஸ்ட் உலக அரங்கில் நம்பர் 1 இடம் பிடித்த இந்திய பவுலர். தற்போது ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பல காலம் தொடர்ந்து ஆல்ரவுண்டர் வரிசையிலும் அஷ்வின் தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தவர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடித்தும், புதிய பல சாதனைகளையும் படைத்து வருகிறார் அஷ்வின். ஐசிசி, பிசிசிஐ என பல தரப்பிடம் இருந்தும் இப்போது விருதுகளாக குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் அஷ்வின் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். ஜூன் மாதம் நடக்கும் ச…
-
- 0 replies
- 523 views
-
-
அரவிந்தவை நாடுகிறது இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகளிலிருந்து வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வாவை நாடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகளுக்கான பொறுப்பு, அரவிந்தவுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி, அப்போட்டிகளின் பயிற்றுவிப்புப் பணியில் ஈடுபடும் அனைவரும், அரவிந்தவுக்குக் கீழ் பணியாற்றும்படி செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் பணி, இவருக்கு ஒப்படைக்கப்படவுள்ளது. அரவிந்த டி சில்வா, ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் அணி…
-
- 0 replies
- 287 views
-
-
பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆயுள் கால தடை முதல் பெரும் அபராதம் வரை பல்வேறு தண்டனைகளை வழங்கியுள்ளது. அணியின் முன்னாள் கேப்டன்களான யூசப், யூனிஸ்கான் போன்றவர்களுக்கு விளையாட ஆயுள் கால தடையும், மாலிக் மற்றும் ராணா ஆகியோருக்கு ஓராண்டு தடையுடன் ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அதிரடி வீரர் அப்ரிடி மற்றும் அக்மல் சகோதர்கள் கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்துகளை சேதப்படுத்தியது, அணிக்கு எதிரான செயல்பாடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பா…
-
- 1 reply
- 517 views
-
-
முல்தான் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள சங்கா, பொல்லார்ட், மலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படவுள்ள 3ஆவது பாகிஸ்தான்சுப்பர் லீக் (PSL) போட்டிகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த 5 அணிகளும், தமது அணியில் விளையாடியிருந்த உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களுகளின்விடுவிப்பு தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டிருந்தன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட வீரர்களில், 4 பிரிவுகளிலிருந்து தமது அணிக்கான முக்கிய 9 வீரர்களை நேற்று (10) இடம்பெற்ற விசேட ஏலத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளபோட்டித் தொடரில் 6ஆவது அணியாக களமிறங்கவுள்ள முல…
-
- 0 replies
- 302 views
-
-
புறக்கணிக்கும் தேர்வாளர்கள்: ரஞ்சி தொடரில் இரட்டை சதமடித்து அசத்திய ஜடேஜா! ஜம்மு காஷ்மீர் அணிக்கெதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் சௌராஷ்ட்ரா அணி வீரர் ஜடேஜா இரட்டை சதமடித்து அசத்தினார். முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தொடர், ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடர் மற்றும் விரைவில் தொடங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஜடேஜாவுடன், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினும் சேர்க்கப்படவில்லை. இதனால், அவர்கள் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். அஷ்வின் தமிழக அணிக்காகவும், ஜடேஜா ச…
-
- 1 reply
- 436 views
-
-
டி20 அணியில் சிராஜ், ஷ்ரேயஸ்; டெஸ்ட் அணியில் மீண்டும் முரளி விஜய் முரளி விஜய் - முகமது சிராஜ் | கோப்புப் படங்கள் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் மும்பையைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இந்திய டி20 அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 அணியில் புதிய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 23 வயதான சிராஜ் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். தென் ஆ…
-
- 1 reply
- 480 views
-
-
தேசிய மட்டத்தில் முதல் பதக்கம் வென்ற மண்டூர் சாதனை வீரன் குகேந்திரன் தேசிய அரங்கிற்குள் நுழைந்து பதக்கமொன்று வெல்வது வார்த்தைகளால் சொல்லும் அளவுக்கு இலகுவான விடயமல்ல. இந்த வெற்றிக்காக செய்யவேண்டிய தியாகம்,படவேண்டிய கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. அவ்வாறானதொரு பின்னணியில் தடைகளையெல்லாம் தாண்டி 33 வருடகால அகில இலங்கை பாடசாலைகள்விளையாட்டு விழா வரலாற்றில் மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முதலாவது தேசிய மட்ட வெற்றியைப் பெற்றுக்கொடுத்த குகேந்திரன் உடன்.
-
- 0 replies
- 475 views
-
-
இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி... சென்னையின் மறக்க முடியாத நாள் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பாலி உம்ரிகர் - படஉதவி: கெட்டி இமேஜஸ் சென்னை இந்திய கிரிக்கெட் அணிக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதல் வெற்றியை இன்றுதான் பெற்றது. அதுவும் இந்த வெற்றி சென்னை மைதானத்தில் கிடைத்தது மிகச்சிறப்பாகும். கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்த இந்திய அணி தனது முதல் வெற்றியை ருசிக்க ஏறக்குறைய 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருந்தது. முதல் டெஸ்ட் வெற்றி பெற்று இந்திய அணி இன்றுடன் 66-வது ஆண்டுகள் ஆகின்றது. கடந்த 1952-ம் ஆண்டு பி…
-
- 0 replies
- 214 views
-
-
விரைவில் பிரச்சினைகள் தீரும்; மனைவியுடன் எப்போதும் போல் இருப்பேன்: மொகமது ஷமி மொகமது ஷமி மற்றும் மனைவி ஜஹான். - கோப்புப் படம். | பிடிஐ. பல பெண்களுடன் தொடர்பு உள்ளது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கிரிக்கெட் வீர்ர் மொகமது ஷமி மீது அவரது மனைவி தொடுக்க, இதன் பின்னணியில் ஏதோ சதி நடக்கிறது, விரைவில் பிரச்சினைகள் தீரும் என்று ஷமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். “ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைபடுத்துக்கின்றனர். அவரது தாயார், சகோதரர் என அனைவரும் என்னை தவறாக பேசுகின்றனர். தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்து இந்தியா வந்தபிறகும் ஷமி என்னை தாக்கினார். அவரது கு…
-
- 7 replies
- 1.7k views
-
-
பேங்க்ராஃப்ட, ஸ்மித் இருவரும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது ஏன்?! ``நான் தவறு செய்துவிட்டேன். நான் பொய் சொல்லிவிட்டேன். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இழிவைத் தேடித்தந்துவிட்டேன். ஆஸ்திரேலியக் குழந்தைகளும், உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்க்கும் சிறுவர்களுக்கும் நாங்கள் முன் உதாரணமாக இருந்திருக்க வேண்டியவர்கள். ஆனால், நாங்கள் தவறுசெய்துவிட்டோம். குழந்தைகள், சிறுவர்கள் எங்களை மன்னிக்கவேண்டும்'' என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேங்க்ராஃப்ட் இருவருமே மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஏன் இருவருமே குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்? 2006 உலகமே ஒன்றுதிரண்டு பார்த்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதிப்ப…
-
- 0 replies
- 623 views
-
-
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார் முகமது சாலா இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை லிவர்பூல் முகமது சாலா தட்டிச் சென்றுள்ளார். #EPL எகிப்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான முகமது சாலா 2016-17 சீசனில் ரோமா அணிக்காக விளையாடினார். அதன்பின் 2017-ல் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் லிவர்பூல் அணிக்கு மாறினார். 36.9 மில்லியன் பவுண்டுக்கு லிவர்பூல் அணி வாங்…
-
- 0 replies
- 335 views
-
-
சொந்த மண்ணில் முதல் தடவையாக டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வி By SETHU 20 DEC, 2022 | 12:00 PM கராச்சியில் இன்று நிறைவடைந்த பாகிஸ்தானுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து 3-0 விகிதத்தில் வென்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரொன்றில் 3 போட்டிகளிலும் தோல்வியுற்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். கடந்த 17 வருடங்களின் பாகிஸ்தானில் முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய இங்கிலாந்து அணி 3:0 விகிதத…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
சுனில் நரைன் பந்து வீச்சு மீது நடுவர்கள் புகார் பவுலிங் செய்யாமல் த்ரோ செய்யும் பந்து வீச்சாளர்கள் மீது ஐசிசி-யின் நடவடிக்கைகள் இறுகுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் மீது தற்போது நடுவர்கள் த்ரோ புகார் எழுப்பியுள்ளனர். நேற்று ஐதராபாதில் நடைபெற்ற டால்பின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர் சுனில் நரைன் பந்து வீச்சு மீது கள நடுவர்களான அனில் சவுதாரி மற்றும் சேட்டிஹோடி சம்சுதின் மற்றும் 3வது நடுவர் குமார் தர்மசேனா ஆகியோர் புகார் எழுப்பினர். சுனில் நரைன் வீசும் வேகப்பந்து த்ரோ போல் தெரிகிறது என்று இவர்களது புகார் ஆகும். சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சட்டவிரோத பந்துவீச்சுக் கொள்கையின் படி முதலில் பிசிசிஐ சட்டவிரோத பந்து…
-
- 2 replies
- 633 views
-
-
சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடர் – மன்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி லிவர்பூல் வெற்றி EAST RUTHERFORD, NJ – JULY 25: Mohamed Salah #11 of Liverpool celebrates his goal with teammates during the International Champions Cup match between Liverpool FC and Manchester City FC at MetLife Stadium on July 25, 2018 in East Rutherford, NJ. Liverpool won the match with a score of 2 to 1. (Photo by Ira L. Black/Corbis via Getty Images) சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரின் மன்செஸ்டர் சிட்டி அணியுடனான போட்டியில் லிவர்பூல். அணி 2-1 என்ற கோல் கணக்கில் அணியை வென்றுள்ளது. கால்பந்து லீக் …
-
- 0 replies
- 451 views
-
-
ஒரு பால்.. ஒரு ரன் - சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த நேபாளம் நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. #NEDvNEP #NepalCricket கடந்த மார்ச் மாதம் நேபாளம் அணி சர்வதேச அணிக்கான அந்தஸ்தை பெற்றது. இதன் பின்னர் முதன் முறையாக அந்த அணி நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி நடந்தது. …
-
- 0 replies
- 354 views
-
-
இறுதிச்சுற்று நோக்கி தமிழீழ அணி / CONIFA Asia Cup 2023
-
- 0 replies
- 707 views
-
-
கண்களில் மழை. நடந்ததை நம்பமறுக்கும் இதயம். இருந்த இடத்திலிருந்து நகராமல் தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். "அப்பா, அழுகிறீர்களா?" என்று மகள் வந்து கேட்கவும் "இல்லையே!" என்று சுதாரித்தாலும் அவள் கண்டுவிட்டாள்."பிறகு ஏன் உங்கள் கண்கள் ஈரமாக இருக்கின்றன?" என்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். பதிலளிக்கப் பிடிக்கவில்லை. "போய்ப் படி" என்று அவளை ஒருவாறு அதட்டிவிட்டு கதிரையிலிருந்து எழுந்துகொண்டேன். இனி என்ன செய்வது?? கம்பியூட்டரில் ஏதாச்சும் பார்க்கலாம், யாழுக்குள் யாராச்சும் வந்து ஒப்பாரி தொடங்கிவிட்டார்களா என்று பார்க்கலாம் என்று வந்துவிட்டேன். அதுசரி, "இதெல்லாம் எதற்காக?" என்று நீங்கள் யாராவது கேட்கலாம். சிலருக்கு, "இலங்கைதான் விளையாடவில்லையே?? பிறகு ஏ…
-
- 17 replies
- 882 views
-
-
ரிச்சர்ட்ஸ், சச்சின், லாரா வரிசையில் விராட் கோலியை வைக்கும் மைக்கேல் ஹோல்டிங் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட்டுடன் சிரித்துப் பேசும் மைக்கேல் ஹோல்டிங். | கோப்புப் படம்: பிடிஐ. மேற்கிந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங், சில பேட்ஸ்மென்களுக்கு பந்து வீசுவது குறித்து கூறும் போது ரிச்சர்ட்ஸ், சச்சின், லாரா, வரிசையில் விராட் கோலியை வைத்து பேசினார். ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு ஹோல்டிங் அளித்த பேட்டியில் இது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறினார். அதாவது ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ உலகின் தலை சிறந்த ஒருநாள் வீரராக விவ் ரிச்சர்ட்ஸை கூறியுள்ளது, அவருக்கு பவுலிங் வீசுவது பற்றிய கேள்விக்கு ஹோல்டிங் கூறும் போது, “வெவ்வேறு பவ…
-
- 0 replies
- 319 views
-
-
ராகுல் திராவிடுக்கு அண்டர்-19, இந்தியா-ஏ அணி பயிற்சியாளர் பொறுப்பு? பிசிசிஐ அமைத்த ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் நியமிக்கப்பட்ட பிறகு ராகுல் திராவிடையும் பிசிசிஐ தனது செயல் திட்டத்துக்குள் கொண்டு வர முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது. அனுராக் தாக்கூர் ஏற்கெனவே இது பற்றி கூறும்போது, “ராகுல் திராவிட் போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை பிசிசிஐ சரியான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளூம். காலம் வரும்போது இதற்கான அறிவிப்பு வரும். ஒரே குழுவில் அனைவரையும் கொண்டு வர முடியாது” என்று கூறியதும் ராகுல் திராவிடுக்கு அளிக்கப்படும் புதிய பொறுப்பு பற்றிய செய்தியுடன் இணைத்து நோக்கத்தக்கது. ராகுல் திராவிட் மேற்பார்வையின் கீழ் சஞ்சு சாம்சன், கருண் நாயர், தீபக் ஹூடா போன்றோர் சிறப…
-
- 0 replies
- 260 views
-
-
யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பிரிவு பெண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மட அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மட அணியை எதிர்த்து குருநகர் சென்.ஜேம்ஸ் மகளிர் வித்தியாலய அணி மோதியது https://newuthayan.com/story/14/திருக்குடும்ப-கன்னியர்-ம.html
-
- 0 replies
- 517 views
-
-
பங்களாதேஷ் தொடரிலிருந்து டிவிலியர்ஸ் விலகல் : அணித் தலைவராகிறார் ஹசீம் அம்லா தென்னாபிரிக்க கிரிக்கெட்அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடக்கிறது. இந்த ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க தலைவர் டிவில்லியர்ஸ் விளையாட வில்லை. அவரை அணியில் இருந்து நிர்வாகம் விடுவித்தது. உலக கிண்ண அரை இறுதியில் மெதுவாகப் பந்து வீசியதற்காக அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக முதல் ஆட்டத்தில் அவர் விளையாட இயலாது. இதன் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இதனால் ஹசிம் அம்லா தலைவராக பணியாற்றுகிறார். …
-
- 0 replies
- 306 views
-
-
செய்தித் துளிகள் இஷாந்த் சர்மா. | கோப்புப் படம். மீண்டும் இஷாந்த் தேர்வுக் குழு தலைவரின் தொலைபேசி அழைப்பை ஏற்காததால் டெல்லி ரஞ்சி அணியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, விதர்பாவுடனான 2-வது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மா விவகாரத்தைக் கையாண்ட விதம் காரணமாக டெல்லி அணியின் தேர்வுக் குழுவுக்கு பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ---------------------------------------------- சமிர் படேலுக்கு வாய்ப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து அணியில் சமிர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜாபர் அன்சாரி காயமடைந்ததையடுத்து, படேலுக்கு வாய்ப்பு …
-
- 0 replies
- 227 views
-