Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியா - பாகிஸ்தான் அணிகளி டையே மீண்டும் கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: இந்தியா பாகிஸ்தான் அணிகளி டையே கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது பற்றி இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கிரிக்கெட் போட்டி இரு நாட்டு ரசிகர்களையும் ஒருங்கிணைக்கும் என்று நான் நம்புகிறேன். நான் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரராக இந்த கருத்தை கூறுகிறேன். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆட முடியாததாலும், தங்கள் ஊரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாத தாலும் பாகிஸ்தானில் உள்ள இளம் வ…

  2. அவுஸ்திரேலியாவின் முதலிடத்திற்கு ஆபத்து தென்னாபிரிக்க அணி நெருங்கிவிட்டது [04 - February - 2008] ஒருநாள் போட்டித் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இடத்தை இழக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. டெஸ்ட் போட்டியில் மற்ற அணிகளை விட அவுஸ்திரேலியா கூடுதல் புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், ஓரு நாள் போட்டித் தரவரிசையைப் பொறுத்தவரை தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலிய அணியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது அவுஸ்திரேலியா 130 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளது. ஆனால், தென்னாபிரிக்க அணி தற்போது நடைபெற்று வரும…

  3. தீவிரவாதிகள் தாக்குதல்: 80 ஆயிரம் கால்பந்து ரசிகர்கள் தப்பியது எப்படி? பாரிஸில் கால்பந்து போட்டி நடந்த ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நெரிசல் ஏற்பட்டிருந்தால், ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நேற்று 7 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில், 153 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே மற்றோரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸின் அடையாளங்களுள் ஒன்றாக கருதப்படும் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நேற்று உலகச் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் பிரான்ஸ் அணி நட்பு முறையிலான கால்பந்து போட்டியில் விளையாடிக…

  4. எம்.சி.எல்.காக சங்கக்கார மற்றும் மஹேல ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர் எம்.சி.எல். எனப்படும் மாஸ்டர்ஸ் செம்பியன்ஸ் லீக் தொடருக்காக, ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் 5 லட்சத்து 50 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் அடுத்த வருடம் டுபாயில் நடைபெறவுள்ளது. இதற்கு பிரையன் லாரா, சௌரவ் கங்குலி, ஜெக்ஸ் கலிஸ், போன்றோரும் ஆறு அணிகளுக்காக ஏலத்தில் பெறப்பட்டுள்ளனர். இன்டர்நஷனல் பிஸினஸ் ரைம்ஸின் தகவல் படி முத்தையா முரளிதரன் ஒரு லட்சம் டொலர்களுக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும். அவர் ஜெமினி அரேபியன்ஸ் என்ற அணிக்காக விளை…

  5. சென்னையிலுள்ள கோவளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தலைமையிலான இந்திய சர்ஃபிங் (கடலலைச் சறுக்கல்) அணியினர், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் பங்கேற்றனர். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தலைமையில் இந்திய அணி இதில் பங்கேற்றது. World Surf League Qualifying Series (QSL3000) என அழைக்கப்படும் சர்ஃபிங் போட்டி, இலங்கையின் அறுகம்பே எனும் இடத்தில் நடந்து வருகிறது. கடந்த 25ஆம் தேதி ஆரம்பித்த இந்தப் போட்டித் தொடர், 29ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.25 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றார்கள். தெற்காசியாவில் இருந்து இலங்கை, இந்தியா மற்றும் மாலத்த…

    • 0 replies
    • 671 views
  6. இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு அண்டர்-19 தொடரை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட். இடது புறம் சர்பராஸ் கான், வலது புறம் ரிஷப் பண்ட். | படம்: பிடிஐ. பங்களாதேஷில் வரும் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளர். நேற்று வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தி இந்திய இளையோர் அணி சாம்பியன் ஆனது. இஷான் கிஷண் அணித்தலைவராக நியமிக்கப்பட ரிஷப் பண்ட் துணக் கேப்டனாக செயல்படுவார். இந்த அணியில் சர்பராஸ் கான், அர்மான் ஜாப…

  7. அனுஷ்காவுடன் கோஹ்லியா??? காதலி அனுஷ்காவுடன் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா சென்ற கோஹ்லியினால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் மனக்கவலையில் உள்ளனர். அவுஸ்திரேலிய தொடருக்கு தயாராகாமல் தன்னுடைய காதலியுடன் நேரத்தை செலவிட சென்ற விராட் கோஹ்லியினால் இந்திய ரசிகர்கள் கவலைக்கடலில் ஆழ்ந்துள்ளனர். இந்திய அணி அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 இருபதுக்கு20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவிருக்கிறது. இந்நிலையில் தற்போது டெஸ்ட் அணித்தலைவராக உள்ள கோஹ்லி, ஒருநாள் போட்டிக்கும் விரைவில் தலைவராகும் நிலையில் அவரின் துடுப்பாட்டத்தில் ஓட்ட மழை பொழிய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் விராட் கோஹ்…

  8. இணைப்பாட்டத்தில் கப்டில் - வில்லியம்சன் உலக சாதனை; பாகிஸ்தானை 10 விக்கெட்களால் வென்றது நியூஸிலாந்து 2016-01-17 19:45:21 பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் இணைப்­பாட்ட உலக சாதனை நிலை­நாட்­டிய மார்ட்டின் கப்­டிலும் கேன் வில்­லி­யம்­சனும் நியூ­ஸி­லாந்­துக்கு 10 விக்கெட் வெற்­றியை ஈட்­டிக்­கொ­டுத்­தனர். இவர்கள் இரு­வரும் பிரிக்­கப்­ப­டாத ஆரம்ப விக்­கெட்டில் பகிர்ந்த 171 ஓட்­டங்கள் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் எந்த ஒரு விக்­கெட்­டுக்­கு­மான அதி­கூ­டிய இணைப்­பாட்­ட­மாகும். இதற்கு முன்னர் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக ப்றிஜ்­டவுன் வ…

  9. லீக் கிண்ண இறுதியில் லிவர்பூல் - சிற்றி லீக் கிண்ண (கப்பிற்றல் வண் கிண்ணம்) இறுதிப் போட்டிக்கு, மன்செஸ்டர் சிற்றி அணி தகுதிபெற்றுள்ளது. எவேர்ட்டன் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், சர்ச்சைக்குரிய விதத்தில் வெற்றிபெற்றே, அவ்வணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. இப்போட்டியின் 18ஆவது நிமிடத்தில், எவேர்ட்டனின் றொஸ் பார்க்லேயும், சிற்றியின் 24ஆவது நிமிடத்தில் பெர்ணான்டின்ஹோவும் கோல்களைப் பெற்றனர். அதன் பின்னர், 70ஆவது நிமிடத்தில், சிற்றியின் றஹீம் ஸ்டேர்லிங், பந்தைக் களத்துக்கு வெளியே கொண்டுசென்றதை, போட்டி மத்தியஸ்தர் கவனிக்க மறக்க, அந்தப் பரிமாற்றம் மூலமாக, கெவின் டி புரையுன், கோலைப் பெற்றார். பின்னர், 77ஆவது நிமிடத்தில் …

  10. 300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர் தோனி : ஆசியக் கோப்பை இந்தியாவின் சாதனைகள்! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணி பல சாதனைகளை புரிந்துள்ளது. அவற்றை பார்ப்போம்... டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் டக்அவுட் ஆன இரண்டாவது கேப்டன் மொர்டஷா. இதற்கு முன் டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று இறுதிப் போட்டியில் போர்ட்டர்ஃபீல்ட் இதே போல் டக் அவுட் ஆகியுள்ளார். இருவருமே முதல் பந்திலேயே டக் அவுட் ஆனதும் இதில் விஷேசம். ஆசியக் கோப்பையை இரு முறை வென்ற 3வது கேப்டன் என்ற பெயரை தோனி பெறுகிறார். இதற்கு முன் முகமது அசாருதீன், மகிலா ஜெயவர்த்ததேன ஆகியோர் இரு முற…

  11. ‘‘துணிச்சலான அணுகுமுறையுடன் இங்கிலாந்தை எதிர்கொள்வோம்’’– ஏஞ்சலோ மெத்யூஸ் (நெவில் அன்­தனி) இங்­கி­லாந்­துக்கு எதி­ரான தொடர்கள் அனைத்­திலும் துணிச்சல் மிக்க அணு­கு­மு­றை­க­ளுடன் விளை­யாட சகல வீரர்­களும் தயா­ராக இருப்­ப­தா­கவும் அவர்கள் அனை­வரும் நம்­பிக்­கை­யுடன் தொடரை எதிர்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் கூறினார். இங்­கி­லாந்­துக்கு கிரிக்கெட் விஜயம் செய்­ய­வுள்ள அணி எந்­த­ளவு நம்­பிக்­கை­யுடன் இருக்­கின்­றது என அவ­ரிடம் கேட்­ட­போதே அவர் இந்தப் பதிலை வெளி­யிட்டார். இங்­கி­லாந்­துக்­கான கிரிக்கெட் பய­ணத்தை ஆ…

  12. வெளியாகியது இங்கிலாந்து பிறிமீயர் லீக் போட்டி அட்டவணை 2016-17 பருவகாலத்துக்கான இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 13ஆம் திகதி, இப்பருவகாலத்துக்கான முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது. முதல் வாரத்தில், நடப்புச் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி அணி, ஹள் சிற்றி அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஆர்சனல் - லிவர்பூல், போர்ண்மெத் - மன்செஸ்டர் யுனைட்டட், பேர்ண்லி - சுவன்சி சிற்றி, செல்சி - வெஸ்ட் ஹாம் யுனைட்டட், கிறிஸ்டல் பலஸ் - வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன், எவேர்ட்டன் - டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர், மன்செஸ்டர் சிற்றி - சண்டர்லான்ட், மிடில்ஸ்புரோ - ஸ்டோக் சிற்றி, சௌதாம்டன் - வட்போர்ட் ஆகிய போட்டிகள், முதல் வாரத்தின் ஏனைய…

  13. DRS-இல் LBW விதிகளில் மாற்றம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தின் (DRS) மூலம் வழங்கப்படும் LBW தீர்ப்புகள் தொடர்பாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, அதிக தடவைகள் LBW முறையில் ஆட்டமிழப்பதற்கான நிலை, துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் காணப்பட்ட விதிகளின்படி, LBW தொடர்பாக நடுவர் வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டுமாயின், இரு புறங்களிலும் காணப்படும் விக்கெட்டொன்றின் நடுப் பகுதியில், பந்தின் அரைவாசிக்கும் அதிகமானது, தாக்க வேண்டும். ஆட்டமிழப்பு இல்லை என நடுவர் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை பந்துவீசும் அணி மறுபரிசீலனைக்குக் கோரினால், இரு புறத்தில…

  14. தம்மை நிரூபித்துக் காட்டியது பாகிஸ்தான் இங்கிலாந்து மண்ணிலிருந்து பாகிஸ்தான் அணி, இறுதியாகப் புறப்பட்டபோது, அவமானங்களைச் சுமந்துகொண்டு, தமது மரியாதையையும் நற்பெயரையும் இழந்த அணியாகவே, பாகிஸ்தானுக்குச் சென்றடைந்தது. ஆனால், திரும்ப அந்நாட்டுக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி, தமது அவமானத்திலிருந்து உச்சநிலைப் புகழைப் பெற்றுக் கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றதைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் அணிக்குப் இப்புகழ் ஏற்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற இரு அணிகளுக்குமிடையிலான தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி, இதே லோர்ட்ஸ் மைதானத்திலேயே இடம்பெற்றது. அப்போட்டியில் மொஹம…

  15. ஹேரத் தலைமையில் தொடரை வெல்லுமா இலங்கை ? ; இலங்கை - சிம்­பாப்வே இரண்­டா­வது டெஸ்ட் போட்டி இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் சிம்­பாப்வே கிரிக்கெட் அணி பங்கு­கொள்ளும் இரண்­டா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது. அந்­நாட்டின் தலை நக­ரான ஹரா­ரேவின் ஹராரே விளை­யாட்டுக் கழக மைதா­னத்தில் இலங்கை நேரப்­படி பிற்­பகல் 1.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. முத­லா­வது டெஸ்ட் போட்­டியை ரங்­கன ஹேரத் தலை­மை­யி­லான இலங்கை கிரிக்கெட் அணி 5 ஆவது நாளின் 7.3 ஓவர்கள் மாத்­தி­ரமே எஞ்­சிய நிலையில் அவ்­வ­ணியின் சகல விக்­கெட்­டு­க­ளையும் கைப்­பற்றி 225 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி ஈட்­டி­யது. இப்­போட்டி ரங்­கன ஹேரத் தலைமை வகித்த முத­லா­வது போட்­…

  16. உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் தரக்குறைவாக திட்டியதற்கு பிரான்ஸ் வீரர் ஸிடேனின் சகோதரியிடம் இத்தாலி வீரர் மாட்டராஸி மன்னிப்பு கேட்டுள்ளார். ஜேர்மனியில் நடந்த 18 ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இத்தாலி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இதன் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கப்டன் ஸிடேன், இத்தாலி வீரர் மார்கோ மாட்டராஸியின் மார்பில் தலையால் ஆக்ரோஷமாக முட்டினார். சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்துக்குக் காரணம் ஸிடேனின் அம்மா மற்றும் சகோதரியை மாட்டராஸி தரக்குறைவாக திட்டியதாகவும், தீவிரவாதி என்று கூறியதாகவும் அப்போது தகவல்கள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து ஸிடேனுக்கு 3 போட்டிகளில் ஆட தடையும் சுமார் ஐந்து இலட்சம்…

  17. கேலி செய்த ரசிகர்களை ‘பைசைக்கிள் கிக்’ கோல் மூலம் திகைக்க வைத்த ரொனால்டோ ரொனால்டோ அடித்த பைசைக்கிள் கிக் ஷாட் கோல். - படம். | ஆல்பர்ட்டோ லிங்ரியா. டியூரினில் நடைபெற்ற யுஏஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியால் மேட்ரிட் 3-0 என்ற கோல் கணக்கில் யுவண்டஸ் அணியை காலிறுதி முதல் லெக் ஆட்டத்தில் வீழ்த்தியது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பைசைக்கிள் கிக் கோல் ரொனால்டோ ரசிகர்களை எழுச்சியுறச் செய்துள்ளது. ரியால் மேட்ரிட் வீரர் டேனி கார்வஜல் பந்தை லேசாக தூக்கி விட கோல் அருகில் இருந்த ரொனால்டோ கோலுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்த நிலையில் அப்படியே காற்றில் கால்க…

  18. தென் ஆபிரிக்காவுக்காக விளையாடாதமை மிகப் பெரிய தவறு: இங்கிலாந்து முன்னாள் வீர் கெவின் பீட்டர்சன் தென் ஆபி­ரிக்க அணி சார்பில் விளை­யா­டா­தமை தான் செய்த மிகப் பெரிய தவறு என இங்­கி­லாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்­டர்சன் தெரி­வித்­துள்ளார். தென் ஆபி­ரிக்­காவில் பிறந்த கெவின் பீட்­டர்சன் இங்­கி­லாந்து அணியின் சார்பில் கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்றி அனைத்து வகை போட்­டி­க­ளிலும் இங்­கி­லாந்தின் சார்பில் அதிக ஓட்­டங்­களைக் குவித்த வீர­ராக விளங்­கு­கிறார். ஆனால், 2013/14 ஆஷஸ் தொடரில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் படு­தோல்­வியைத் தழு­வி­ய­தை­ய­டுத்து அவர் அணி­ய­ிலி­ருந்து சர்ச்­சைக்­கு­ரி­ய­வி­த­மாக நீக்­கப்­பட்டார். அவர் எழு­திய சுய­ச­ரிதை நூல் இன்று வ…

  19. பிரேசிலில் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடும் வித்தியாசமான மாரத்தான் ஓட்டம் போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தது. அமேசான் காட்டுக்குள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா, ஸ்பெயின், ஸ்வீடன் உள்ளிட்ட 17 நாடுகளை சோர்ந்த 65 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அடர்ந்த காட்டுக்குள் ஓடும் ஆறுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், செங்குத்தான பாதைகள் ஆகியவற்றை கடந்து ஓட வேண்டி இருந்ததால் போட்டியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானர்கள். சகதி மற்றும் சேறு நிறைந்த சிலர் சிக்கி கொண்டு பெரும் அவதி பட்டனர். இரவு நேரத்தில் சற்று இழைப்பாறி காயங்களுக்கு சற்று மருந்து எடுத்து கொண்ட அவர்கள் விளக்கின் வெளிச்சத்தில் போட்டியை தொடர்ந்தனர். கடும் சவால்களுக்கு மத…

  20. ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட் காலி மைதானத்தை இலங்கை அணிக்கு சாதகமானதாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணம் பாதிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. அல்ஜசீரா தொலைக்காட்சி நாளை வெளியிடவுள்ள விவரணச்சித்திரத்தில் இந்த விடயங்கள் இடம்பெற்றுள்ளன. புலனாய்வு செய்தியாளர் ஒருவர் ஆட்டநிர்ணய சதியில் ஆர்வமுள்ள வர்த்தகர் போன்று நடித்து காலி சர்வசே மைதானத்தின் அதிகாரிகளுடன் உரையாடியுள்ளார். முன்னாள் வீரர் ஒருவரும் தற்போது விளையாடும் வீரர் ஒருவரும் அந்த பத்திரிகையாளருடன் இது குறித்து பேசியுள்ளனர். …

  21. ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்த மகேந்திர சிங் தோனி - முதல் இடத்தில் சச்சின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார் முன்னாள் கேப்டன் தோனி. #MSDhoni #RahulDravid துபாய் : 14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் …

  22. புரூஸ் லீயின் செவ்வி http://www.youtube.com/watch?v=L4y3y03vTq0&feature=mfu_in_order&list=UL http://www.youtube.com/watch?v=hN8PfMdBIjw&feature=related http://www.youtube.com/watch?v=yKiiaHBY_KI&feature=related

    • 0 replies
    • 1.2k views
  23. உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் ஜெமெய்க்காவிடம் இலங்கை பெருந்தோல்வி 29 JUL, 2023 | 01:56 PM (நெவில் அன்தனி) கேப் டவுன் கொன்வென்ஷன் சென்டர் உள்ளக அரங்கு 2இல் வெள்ளிக்கிழமை (28) இரவு நடைபெற்ற ஜெமெய்க்காவுடனான தனது ஆரம்பப் போட்டியில் 25 - 105 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை பெருந் தோல்வி அடைந்தது. அத்துடன் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற போட்டிகளில் 100 கோல்களுக்கு மேல் புகுத்திய முதலாவது அணி என்ற பெருமையை ஜெமெய்க்கா பெற்றுக்கொண்டது. உலகக் கிண்ண வலைபந்தாட்ட வரலாற்றில் ஒரு போட்டியில் ஜெமெய்க்கா 100 கோல்களைப் போட்டது இது இரண்டாவது சந்தர்ப்பம் ஆகும். அத்துடன் முழு உலகக் கிண்ண வரலாற்றிலும் ஓர் அணி 100 கோல்களுக…

  24. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவிகள் பளு தூக்கல் பிரிவில் 8 பதக்கங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர். இவ்வருடமே முதன் முதலாக பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கம் என 08 பதக்கங்களை யாழ் பல்கலைக்கழக மாணவிகள் கைப்பற்றியுள்ளனர். அதேவேளை ஆணொருவரும் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/273303

  25. * மனைவி கூறுகிறார் பொப் வூல்மரின் மரணம் இயற்கையானதல்ல, அவர் கொலை தான் செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது மனைவி உறுதி கூறியுள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் அணியுடன் மேற்கிந்தியா சென்றிருந்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மர் கடந்த மாதம் 18-ஆம் திகதி ஜமேக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக, ஜமேக்கா பொலிஸார் கூறினர். ஆனால் இது குறித்து விசாரணை நடத்திய ஸ்கொட்லாந்து யார்ட் துப்பறியும் நிபுணர்கள் தங்களது அறிக்கையில், வூல்மர் இயற்கையான முறையில் இறந்துள்ளார். அவர் மாரடைப்பால் மரணமடைந்து இருக்கலாம் என்று தெரிவித்திருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இ…

    • 1 reply
    • 929 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.