விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
தோனி மீதான அதிருப்தியை என் தந்தை பகிரங்கப்படுத்தியது ஏன்?- யுவராஜ் சிங் விளக்கம் உலகக்கோப்பை அணியில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படாததற்கு தோனியே காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியதற்கு யுவராஜ் சிங் பதிலளித்துள்ளார். இது குறித்து யுவராஜின் தந்தையும் முன்னாள் இந்திய வீரருமான யோக்ராஜ் சிங் கூறும்போது, “என் மகனுடன் தோனிக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? கடவுள் நீதியளிப்பார். உங்கள் கேப்டன் பொறுப்பில் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரார்த்திக்கிறேன். ஆனால் இது போன்று நீங்கள் (தோனி) நடந்து கொண்டதை விடவும் வேறு வருத்தங்கள் இருக்க முடியாது.” என்றார். ஆனால், தன் ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங், தனது தந்தை…
-
- 0 replies
- 879 views
-
-
மொராக்கோ ஓப்பன் டெனிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஆர்ஜென்டீனா வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். மொராக்கோவில் சர்வதேச பெண்கள் ஓப்பன் டெனிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 51 ஆவது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 213 ஆவது இடத்தில் உள்ள ஆர்ஜென்டீனா வீராங்கனை எமிலியா மா சாலெர்னியை எதிர்கொண்டார். காயம் காரணமாக 2 மாதத்துக்கு மேலாக ஓய்விலிருந்து களம் திரும்பிய சானியாவால் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முன்னேறிய ஆர்ஜென்டீனா வீராங்கனைக்கு முதல் செட்டில் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. ஆனால், 2 ஆவது மற்றும் கடைசி செட்டில் சானிய…
-
- 5 replies
- 1.3k views
-
-
178 ஓட்டத்துக்குள் சுருண்டது நியூஸிலாந்து hare1 இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது. நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்சில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்ப…
-
- 1 reply
- 527 views
-
-
Published By: DIGITAL DESK 3 25 NOV, 2023 | 12:04 PM ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அணிந்த ஜேர்சிகள் 10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (இலங்கை நாணய மதிப்பில் 330 கோடி ரூபா) ஏலம் விடப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது அணிந்திருந்த ஆறு ஜேர்சிகள் ஏலம் விடப்படவுள்ளது. அதில், பிரான்சுக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது அவர் அணிந்திருந்த ஜேர்சியும் அடங்கும். குறித்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கும் அதிகமாக ஏலம் போகலாம் என சோத்பிஸ் ஏல நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 36 வயதான லயனல் மெஸ்ஸி ஏலம் தொடர்ப…
-
- 0 replies
- 468 views
- 1 follower
-
-
பிரிமியர் கிரிக்கெட்: முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் அவசர கூட்டத்தில் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் தடை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. ஆறாவது (2013) பிரிமியர் தொடர் சூதாட்டம் காரணமாக சென்னை அணியை வைத்திருந்த பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவி பறிபோனது. இதன் பின், உச்சநீதிமன்றம் அமைத்த லோதா குழு தீர்ப்பு காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உரிமையாளர்கள் குருநாத் (சென்னை), ராஜ் குந்த்ராவுக்கு (ராஜஸ்தான்) வாழ்நாள் தடை விதிக்கப்பட்டன. இதனிடையே பிரிமியர் தொடரின் நிர்வாக கவுன்சிலின் அவசர கூட்டம் ராஜிவ் சுக்லா தலைமையில் மும்பையில் நடக்கிறது. இதில் இரு அணிகளின் தடை குறித்து ம…
-
- 2 replies
- 249 views
-
-
நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி 604/7 இந்தியா 112/5 தென்னாஸ்திரேலிய நகரான அடிலெயிட்டில் நடைபெற்றுவரும் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 604 ஓட்டங்களைப் பெற்று தனது அட்டத்தினை நிறுத்திக்கொண்டது. இதில் அவ்வணியில் தலைவர் கிளாக் 210 ஓட்டங்களையும் அவ்வணியின் முன்னால்த் தலைவர் பொண்டிங் 220 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத் தக்கது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்களை மட்டுமே இதுவரை பெற்றிருக்கிறது.இதில் இந்தியாவின் நட்சத்திரத் துடுப்பாட்டக்காரரும், தனது நூறாவது சத்தத்தைப் பெற்றுக்கொள்வார் என்று இத்தொடர் ஆரம்பமாகிய நா…
-
- 1 reply
- 812 views
-
-
செல்சி, ஆர்சனல் தோல்வி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், இன்றைய போட்டிகளில் ஆர்சனல், செல்சி அணிகள் தோல்வியடைந்தன. பார்சிலோனா அணி வெற்றிபெற்றது. ஒலிம்பியாகொஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் ஆர்சனல் அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 33ஆவது நிமிடத்தில் ஒலிம்பியாகொஸின் பெலிப் பார்டோ பெற்ற கோலுக்கு, உடனடியாகப் பதிலடி வழங்கிய ஆர்சனலின் தியோ வொல்கொட், 1-1 என்ற கணக்கில் கோல் நிலையை மாற்றிய போதிலும், 40ஆவது நிமிடத்தில் டேவிட் ஒஸ்பினாவின் 'ஒவ்ண் கோல்" காரணமாக, ஒலிம்பியாகொஸ் அணி, 2-1 என முன்னிலை வகித்தது. 65ஆவத நிமிடத்தில் அலெக்ஸிஸ் சன்செஸ் கோலொன்றைப் பெற்று, ஆர்சனலுக்கு 2-2 என் சமநிலையை வழங்கிய போதிலும், அடுத்த நிமிடத்தில் அர்பிரட் பின்பொகாசொன் பெற்ற …
-
- 0 replies
- 462 views
-
-
அனுபவித்து விளையாட விரும்புகிறேன் ஓய்வுபெறுவது பற்றி சிந்திக்கவில்லை [25 - January - 2008] [Font Size - A - A - A] * டெண்டுல்கர் தெரிவிப்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் சிந்திக்கவில்லை என்று டெண்டுல்கர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான டெண்டுல்கர் 1989 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடந்த 18 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் அவர் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கி வருகிறார். 34 வயதான டெண்டுல்கருக்கு அடிலெய்டில் நேற்று தொடங்கிய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 146 ஆவது போட்டியாகும். டெண்டுல்கர் இன்னும் சில ஆண்டுகளில…
-
- 3 replies
- 1.5k views
-
-
மேற்கிந்தியத்தீவுகளை 'வைட் வோஷ்' செய்த இந்தியா! இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி நேற்றைய தினம் கயானவில் இடம்பெற்றது. தொடரில் ஏற்கனேவ கைப்பற்றிய நிலையில் இப் போட்டியில் இந்திய அணியில் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதுடன், கலீல் அகமதுவும் நீக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், சகோதரர்கள் தீபக் சாஹர், ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டனர். இதில் சுழற்பந்து வீச்சாளரான 20 வயதான ராஜஸ்தானைச் சேர்ந்த ராகுல் சாஹருக்கு இதுவே முதல் சர்வதேச போட்டியாகும். மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் 1 மணி 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இதன் பின்னர் போட்டியில் நா…
-
- 0 replies
- 716 views
-
-
ரஞ்சி கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்து வாசிம் ஜாபர் சாதனை! ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் பெற்றுள்ளார். கொல்கத்தாவில் மேற்கு வங்க - விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் மேற்கு வங்க அணி 334 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து விதர்பா அணி பேட் செய்யத் தொடங்கியது. இந்த போட்டியில் விதர்பா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வாசிம் ஜாபர் 7 ரன்கள் எடுத்த போது, ரஞ்சி டிராபியில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ரஞ்சி டிராபியை பொறுத்த வரை 126 போட்டிகளில் 196 இன்னிங்ஸ்களில் விளையாடி …
-
- 0 replies
- 207 views
-
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஃபார்மில் இல்லாதபோதும் கோலியை கொண்டாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக விராட் கோலி இந்த ஆண்டில் டெஸ்டில் மொத்தமாக 250 ரன்கள் சேர்த்து 22 சராசரி மட்டுமே வைத்துள்ளார். இந்நிலையில், மோசமான ஃபார்மில் இருந்தும், அவர் பார்டர் கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா வந்தவுடன் அவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டாடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், செளரவ் கங்குலி, தோனி போன்ற பல முக்கியமான வீரர்களை இந்திய கிரிக்கெட் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் விராட் கோலியும் கவனிக்கப்படுக…
-
-
- 106 replies
- 6.8k views
- 1 follower
-
-
கைகுலுக்கல் விவகாரம் கௌதம் கம்பீர் காட்டம் December 30, 2015 இந்தியாவின் உள்ளூர் ஆட்டத்தில் (விஜய் ஹசாரே கிண்ணம்) டெல்லி அணியின் தலைவர் கம்பீர், ஜார்கன்ட் அணியின் வீரரான டோனிக்கு கைகுலுக்க மறுத்ததாக வீடியோ ஒன்று பரவியது. இந்த வீடியோவில் டோனி அனைவருக்கும் கைகுலுக்கும் போது கம்பீர் மட்டும் கைகுலுக்காமல் போவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இதற்கு கம்பீர், டோனியுடன் கைலுக்குவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு முகப்புத்தகத்தில் விளக்கம் அளித்துள்ளார். ‘விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நானும், டோனியும் கைகுலுக்கி கொண்ட புகைப்படம் இது தான். இந்த கைகுலுக்கல் விவகாரம் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நாவஸ் செரிப் பேச்சுவார்த்தையை விட பெ…
-
- 0 replies
- 688 views
-
-
லாராவின் சாதனையை எட்ட 86 ரன்களே தேவை : சங்கடத்துடன் விடைபெற்றார் சந்தர்பால் ! மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஷிவ்நாராயண் சந்தர்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். சுமார் 22 வருடங்கள் கிரிக்கெட்டுடன் பயணித்த அவருக்கும் பெரும்பாலான கிரிக்கெட்டர்களை போல, ஓய்வு பெறும் தருணம் இனிப்பாக இல்லை. கடந்த 1994-ம் ஆண்டு சந்தர்பால், கினியாவில் நடந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக களம் இறங்கினார். இந்த போட்டியில் சந்தர்பால் அரை சதம் அடித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில், 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவரது இறுதி டெஸ்ட் போட்டியும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே அ…
-
- 1 reply
- 469 views
-
-
மைதானத்தில் ஆடுவதை விட கிரிக்கெட் ஆட்டம் டிவி-யில் பார்க்க சுலபமானது: தோனி ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி. | படம்: ஏ.எஃப்.பி. மற்றெந்த விவகாரங்களை விடவும் கிரிக்கெட்டை பற்றி கருத்து தெரிவிப்பதில் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் மிகவும் தாராளமாக செயல்படுகிறது என்று ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்தியாவில் ஒவ்வொருவரும் கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவிக்க விரும்புகின்றனர் என்றே நான் கருதுகிறேன். கருத்துச் சுதந்திரம் உள்ளது, அதனால் ஒவ்வொருவருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது. அதாவது இப்படிச் செய், அப்படிச் செய், இப்படி விளையாடு, அப்படி விளையாடு என்று கூறப்படுக…
-
- 0 replies
- 425 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தினேஷ் அகிரா பதவி, கிரிக்கெட் நிபுணர் 25 மே 2025, 12:03 GMT தோனி ஓய்வுபெற வலியுறுத்தும் ரசிகர்களின் கருத்துக்கள் உண்மையில் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகின்றன. தோனியை நன்றாக அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல, வழக்கமான தோனி நகர்வுதான் என்பது எளிதாக புரிந்துவிடும். தோனியின் ஓய்வறிவிப்புகளுக்கு என்று ஒரு தனித்த பாணி உண்டு. திடீர் முடிவுகள் போல தோற்றம் அளித்தாலும், ஒரு ஃபார்முலாவின் படிதான் அவை எப்போதும் அமைந்துள்ளன. அது என்ன ஃபார்முலா? தனது தலைமைத்துவமோ ஆட்டத்திறனோ கேள்விக்குள்ளாக்கப்படும் போது தோனி முதலில் அமைதிகாப்பார், விமர்சனங்களை சிரித்த முகத்துடன் எதிர்கொள்வார்; சமயங்களில் சற்று ஆக்ரோஷத்துடன். அடுத்ததாக தனது செயல்பாடுகள…
-
- 1 reply
- 230 views
- 1 follower
-
-
ஒவ்வொரு அணியின் ப்ளஸ், மைனஸ் என்ன..? - டி20 உலகக் கோப்பை உணர்த்திய உண்மைகள்! முன்னணி அணிகளை துவம்சம் செய்து யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இங்கிலாந்து - வெஸ்ட் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதிபெற, பைனலில் கடைசி ஓவரில் நம்பமுடியாத ஷாக் தந்து, கோப்பையை கைப்பற்றி 'சாம்பியன்' டான்ஸ் போட்டார்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். கோப்பையை வெல்லும் அணிகள் என கருதப்பட்ட இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா சறுக்கியது எப்படி? அரையிறுதியில் நியூசிலாந்துக்கு ஏன் அதிர்ச்சி தோல்வி? இங்கிலாந்து எப்படி ஃபைனலுக்கு வந்தது? ஆப்கானிஸ்தான் விஸ்வரூபம் எடுத்தது எப்படி? ஒவ்வொரு அணியின் பிளஸ் -மைனஸ் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.... 1. வங்கதேசம் பிளஸ் : இந்த உலகக்கோப்பையில…
-
- 0 replies
- 580 views
-
-
<p>Your browser does not support iframes.</p> 500-வது கோல் அடித்து சாதனை படைத்த வீரர் ஸ்பெயின் கிளப் போட்டியான லாலிகா தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. முடிவு ஏமாற்றம் அளித்தாலும், தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டம் மெஸ்சிக்கு தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் மெஸ்சி 63-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளில் 500 கோல்களை அவர் எட்டியிருக்கிறார். 28 வயதான மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 450 கோல்களும், அர்ஜென்டினாவுக்காக 50 கோல்களும் அடித்திருக்கிறார். மெஸ்சி இடது காலால் 406 கோல்களும்,…
-
- 5 replies
- 668 views
- 1 follower
-
-
ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவில்லியர்ஸ் தடுப்பாட்ட சாதனையை முறியடித்த ஆஸி. ஜோடி மாரத்தான் தடுப்பாட்டம் ஆடிய பீட்டர் நெவில். | படம்: ஏ.பி. பல்லக்கிலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றாலும், ஆஸ்திரேலிய பேட்டிங் ஜோடி புதிய டெஸ்ட் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். 5-ம் நாளான இன்று 268 ரன்கள் வெற்றி இலக்கை எட்டும் கனவுடன் 83/3 என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 157/8 என்று தவிர்க்க முடியாத தோல்வி நிலைக்குச் சென்றது, ஆனால் மழையை எதிர்நோக்கிய ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் மற்றும் ஓ’கீஃப் ஜோடி எப்பாடுப்பட்டாவது போட்டியை டிரா செய்யலாம் என்ற பெரு முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் செய்த இந்த மாரத்தான் முயற்சி ‘ப்ளாக்க…
-
- 0 replies
- 319 views
-
-
ஜெங் தாவோ: நீச்சல் போட்டியில் 6 தங்கப் பதக்கம் - யார் இந்த ஜெங் தாவோ? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஆண்கள் நீச்சல் போட்டியில் பங்கேற்ற பிறகு ஜெங் தாவோ. சீனாவை சேர்ந்த ஜெங் தாவோவுக்கு 30 வயது. ஒரு மின்சார ஷாக்கில் தமது இரண்டு கைகளையும் இழந்த இவர், டோக்யோ பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளினார். "என்னைப் பார் மகளே, கைகள் இல்லாவிட்டாலும் என்னால் வேகமாக நீந்த முடிகிறது!" என்று ஒரு போட்டிக்குப் பிறகு தமது மகளுக்கு அனுப்பிய ஒரு வீடியோ மெசேஜில் கூறினார் ஜெங். குழந்தையாக இருக்கும்போதே தமத…
-
- 0 replies
- 409 views
- 1 follower
-
-
இங்கிலாந்து - தென்னாபிரிக்கா: டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம் இங்கிலாந்து, தென்னாபிரிக்காவுக்கு இடையிலான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், லோர்ட்ஸில், இலங்கை நேரப்படி, இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகின்றது. இத்தொடரில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில், இரண்டாமிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா, தரவரிசையில், நான்காமிடத்தில் இருக்கும் இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் சந்திக்கின்றது. இத்தொடரை, இங்கிலாந்து வெள்ளையடித்தால், தரவரிசையில், இரண்டாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. தவிர, இத்தொடரை வென்றால் அல்லது தொடரைச் சமப…
-
- 8 replies
- 998 views
-
-
தொடங்குமுன் சாதனை படைக்கப்போகும் உலக சம்பியன்ஷிப் தொடர் லண்டனில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள உலக சம்பியன்ஷிப் தொடர், அதிக டிக்கெட்டுக்களை விற்பனை செய்ததில் சாதனை படைக்கவுள்ளது. லண்டன் நகரில் உலக சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் உலகளவில் உள்ள முன்னணி தடகள வீர,- வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 4X100 தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார். இதுதான் அவருடைய கடைசி ஓட்டமாகும். இந்த தொடருடன் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்.…
-
- 0 replies
- 236 views
-
-
யாழில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அந்தோனிஸ் மோதியது. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, யாழ் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அந்தோனிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் பாசையூர் சென் அந்தோனிஸ் விளையாட்டுக்கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது - http://vvtfrance.com/?p=19442
-
- 1 reply
- 546 views
-
-
பொன் அணிகளின் போர்: புனித பத்திரிசியார் கல்லூரி 10 விக்கெட்களால் வெற்றி 105 ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட பொன் அணிகளின் போரில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 10 விக்கெட்களால் வெற்றி பெற்றது. நேற்றைய தினம் ஆரம்பமான இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் இனிங்ஸில் பதிலளித்தாடிய பத்திரிசியார் கல்லூரி அணி 08 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதல் நாளாட்டம் நிறைவிற்கு வந்தது. துடுப்பாட்டத்தில் எஸ். கீர்த்தனன் 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இன்று முதல் இனிங்ஸைத் தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி 156 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும…
-
- 0 replies
- 353 views
-
-
ஓய்வு பெறுகிறார் 'கம்-பேக்' மன்னன் நெஹ்ரா! தனது 18 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை வரும் நவம்பர் 1-ம் தேதியுடன் முடித்துக் கொள்கிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா. வரும் நவம்பர் 1-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பை-பை சொல்கிறார் நெஹ்ரா. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1999-ம் ஆண்டு அறிமுகமான நெஹ்ரா, தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பல காயங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். அதனால், அவருக்கு இந்த காலகட்டத்தில் 12 சர்ஜரிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி இருந்தும் அவர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியில் ஒருவராக இருந்தார். 2003-ம் ஆண்டு இங்கிலா…
-
- 0 replies
- 387 views
-
-
தென்ஆப்ரிக்கா எதிர் பங்களாதேஷ் ஒருநாள் & T20 போட்டி தொடர் செய்திகள் தென்னாப்ரிக்காவிற்கு எதிராக சதம் அடித்த முதல் வங்கதேச வீரர்... ரஹீம் சாதனை... வங்கதேச அணி சமீப காலமாக ஒருநாள் கிரிக்கெட் உலகில் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், வங்கதேச அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி தற்பொழுது நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. இதில் அனைத்து வீரர்களும் கணிசமான ரன் குவிக்க வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மு…
-
- 8 replies
- 861 views
-