விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0–2 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் உலக சம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகள் வழங்கப்படும். இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் சம்பியன்ஷிப் பயணத்தை தொடங்குகிறது. டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலியா, துடுப்பாட்டம் மற்று…
-
- 1 reply
- 457 views
-
-
[size=4]30 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்றைய தினம் லண்டன் நகரில் ஆரம்பமாகிறன. ஒலிம்பிக் ஆரம்பவிழா இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு வேளையில் ஆரம்பமாகின்றது.[/size] [size=4]இவ்வாண்டு இடம்பெறும் போட்டிகளில் 204 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்து 500 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு போட்டியாளர்கள் பங்குபற்றுகின்றனர்.[/size] [size=4]இதேவேளை இலங்கை வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை முன்வைத்து லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 1 reply
- 384 views
-
-
03 Sep, 2025 | 05:07 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ராஷித் கான் படைத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 165ஆக உயர்த்திக்கொண்டார். இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை ராஷித் கான் நிலைநாட்டினார். ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த சில மாதங்களாக தன்னகத்த…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
பிரேசிலின் அடையாளங்களில் ஒன்றான, அமேசான் நதி ஓடும் அமேசான் மாகாணத்தில் உள்ள மென்னஸ் நகரில், ஒலிம்பிக் டார்ச் ஓட்டம் நடைபெற்றது. அமேசான் காட்டின் முக்கிய வன விலங்கு சிறுத்தை. எனவே இந்த நிகழ்வில் ஜாகுவார் ஒன்று பங்கேற்றால் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கும்விதமாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருதினர். மென்னஸ் நகரில் உள்ள ராணுவ மையத்தில் இந்த நிகழ்வு நடந்தது. எனவே அந்த ராணுவ மையத்துக்கு வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து ஜுமா என்ற சிறுத்தை கொண்டு வரப்பட்டது. அதன் கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டு நிகழ்ச்சி நடந்த இடத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அதன் பராமரிப்பாளர் கையில் இருந்து தப்பிய ஜுமா, ராணுவ மையத்துக…
-
- 0 replies
- 383 views
-
-
உலக சாதனை: பால் போக்பாவை ரூ.740 கோடிக்கு மான்செஸ்டர் வாங்கியது! யுவான்டஸ் அணியின் மிட்பீல்டர் பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ரூ.740 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜோஸ் மோரின்ஹோ பொறுப்பேற்ற பின், ஸ்வீடன் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்லாட்டன் இப்ராஹிம்விச்சை ஒப்பந்தம் செய்தார். தொடர்ந்து இத்தாலியின் யுவான்டஸ் அணி வீரர் பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வந்தது. தற்போது யுவான்டஸ் அணியுடன் பேரம் படிந்துள்ளது. அதன்படி, 89 மில்லியன் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ.740 கோடி) பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், உலகிலேயே…
-
- 0 replies
- 350 views
-
-
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அபார வெற்றி பெற்ற இலங்கை 2-0 என கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்தப் போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்த்தனர். இதனால் இந்தப் போட்டியில் மூலம் 2.9 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் சுமதிபால தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு கிடைத்ததை விட இது அதிகமாகும். …
-
- 0 replies
- 332 views
-
-
ஓய்வுபெற்றார் சர்வான் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் அணித்தலைவர் ராம்நரேஷ் சர்வான், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். 36 வயதான சர்வான், மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக 87 டெஸ்ட் போட்டிகளில் 15 சதங்கள் உள்ளடங்கலாக 40.01 என்ற சராசரியில் 5,842 ஓட்டங்களையும் 181 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5 சதங்கள் உள்ளடங்கலாக 42.67 என்ற சராசரியில் 5,804 ஓட்டங்களையும் பெற்றதோடு, 18 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 2 அரைச்சதங்களையும் பெற்றார். இவற்றுக்கு மேலதிகமாக, 4 டெஸ்ட் போட்டிகள் உட்பட, 11 சர்வதேசப் போட்டிகளுக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை தாங்கியிருந்தார். இறுதியாக, 2013ஆம் ஆண்டிலேயே சர்…
-
- 0 replies
- 439 views
-
-
வடமாகாண தடகளப்போட்டிகளுக்கான ஒத்திகை ஆரம்பம் வடமாகாண தடகள போட்டிக்கான ஒத்திகைப் பயிற்சிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது இந் நிலையில் யாழ் .துரையப்பா விளையாட்டரங்கில் அதற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன . 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராஜா, ஆகியோர் பங்குபற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 279 views
-
-
பந்தை ஷைனிங் செய்வதற்காக குறுக்கு வழியை கையாண்ட டு பிளிசிஸ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் பந்தை ஷைனிங் செய்வதற்காக தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் ஒருவகை இனிப்பை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. 2-வது போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் அபார பந்து வீச்சை …
-
- 4 replies
- 588 views
-
-
வேகப்பந்து வீச்சாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தடை விதிக்கக்கூடாது: அக்தர் ஏராளமான விதிமுறைகளை கொண்டு வந்து வேகப்பந்து வீச்சாளர்களின் உற்சாக உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுக்கக்கூடாது என்று அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், மைதானத்தில் பேட்ஸ்மேன்களை தனது வேகப்பந்தால் அச்சுறுத்துவதில் வல்லவர். 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் அக்தர், நீண்ட தூரத்தில் இருந்து ஓடி வந்து பந்து வீசக்கூடியவர். விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன் இரண்டு கைக…
-
- 0 replies
- 427 views
-
-
முதல் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இம்மாதம் ஆரம்பம் 19 வயதிற்குட்பட்டவர் களுக்கான இளையோர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கிரிக்கெட் சம்மே ளனத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இளையோர்களுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை, இந் தியா, நேபாளம், மலேசியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கனிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மோதுகின்றன. இந்தத் தொடரின் போட்டி கள் கொழும்பு, காலி, மாத் தறை, மொறட்டுவை ஆகிய இடங்களிலுள்ள மைதானங்க ளில் நடைபெறவுள்ளன. இதன் இறுதிப்போட்டி மட்டும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கி…
-
- 1 reply
- 291 views
-
-
'நான் ஒரு ஒயின் மாதிரி!'- இது தோனி பன்ச் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 'நான் ஒரு ஒயின் மாதிரி. காலம் போக போக சுவைகூடிக் கொண்டே போவேன்' என்று சிலாகித்துள்ளார். கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதிலிருந்தே, அவரது ஃபார்ம் பற்றி தொடர்ச்சியான கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் கெத்து கம்-பேக் கொடுத்துள்ளார். இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் ஒரு 20 ஓவர்கள் போட்டியை விளையாடி வருகிறது. நேற்றுடன் இதுவரை மூன்று ஒரு நாள் போட்டிகள் முடிந்துள்ளன. நேற்றைய போட்டியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே தோனி கொஞ்சம் சீக…
-
- 3 replies
- 872 views
-
-
டோனியின் ஓய்வு மிகப்பெரிய நான்கு பேரின் ஓய்வு போன்றது: கில்கிறிஸ்ட் சொல்கிறார் டோனி ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடம் இந்திய அணிக்கு பெரிய வெற்றிடமாகும். அதை நிரப்ப நீண்ட காலமாகும் என்ற விக்கெட் கீப்பர் மற்றும் பேடஸ்மேன் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் கில்கிறிஸ்ட். இந்திய அணியில் இருந்து டோனி ஓய்வு பெறும்போது அந்த இடம் மிகப்பெரிய வெற்றிடமாக திகழும். அந்த இடத்தை நிரப்ப நீண்ட காலம் ஆகும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘டோனி 3-வது இடத்தில் இருந்து 7-வது…
-
- 0 replies
- 452 views
-
-
அஷ்வின் உலகின் தலைசிறந்த ஸ்பின்னரா...? எண்கள் சொல்லும் உண்மை! #Analysis #VikatanExclusive #INDvSL Chennai: வார்னேவால் முடியவில்லை... முரளிதரனால் முடியவில்லை... வாசிம் அக்ரம், மெக்ராத், டேல் ஸ்டெய்ன் எவராலும் முடியவில்லை. அதிவேகமாக 300 விக்கெட் எடுத்த பௌலர் என்ற டெனிஸ் லில்லியின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை. 1981-ல் அரங்கேறிய அந்தச் சாதனையை சுழல் ஜாம்பவான்கள் என்று புகழப்பட்டவர்களாலும், வேகச் சூறாவளிகள் என்று வர்ணிக்கப்பட்டவர்களாலும் அசைக்க முடியவில்லை. கடந்த 24-ம் தேதி நாக்பூரில் அந்த 36 ஆண்டுகாலச் சாதனையை முறியடித்துவிட்டார் ரவிச்சந்திரன் அஷ்வின். 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகள். அந்த மைல்கல்லை எட்டிவிட்டார். டெனிஸ…
-
- 0 replies
- 547 views
-
-
-
கோலியின் மகுடத்தில் மற்றொரு வைரம்! கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த டொன் பிராட்மனின் சாதனையொன்றை விராட் கோலி முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டியொன்றில், அணித் தலைவராகக் களமிறங்கி எட்டு முறை நூற்றைம்பது ஓட்டங்களைக் குவித்தவர் பிராட்மன். தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, கோலி 153 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இது, டெஸ்ட் அணித் தலைவராக அவர் பெற்ற ஒன்பதாவது நூற்றைம்பது ஓட்டங்களாகும். இதன்மூலம், பிராட்மனின் சாதனையைச் சமன் செய்துள்ளார் கோலி. டெஸ்ட் அணித் தலைவராக நூற்றைம்பது ஓட்டங்கள் கடந்தோர் பட்டியலில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் ஏழு 150 ஓ…
-
- 0 replies
- 249 views
-
-
எவரெஸ்ட் மலையில் வைக்கப்படும் பிலிப் ஹியூக்ஸின் துடுப்பாட்ட மட்டை அவுஸ்திரேலிய சர்வதேச கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 63 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை பலரும் அறிந்ததே. பல்வேறு வழிகளில் அவருக்கு அவுஸ்திரேலியா தரப்பிலும் உலக அளவிலும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் பிலிப் ஹியூக்ஸ்க்கு வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்தும் விதமாக அவர் பயன்படுத்திய துடுப்பாட்ட மட்டையொன்றை உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி நேபாள…
-
- 0 replies
- 343 views
-
-
13 வயதில் தேசிய மட்ட கிரிக்கெட்டில் பிரகாசித்த யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி எண்டன் அபிஷேக் இறுதியாக இடம்பெற்ற 13 வயதின் கீழ் பிரிவு இரண்டு பாடசாலைகள் கிரிக்கெட் தொடரில் எந்தவித தோல்வியையும் சந்திக்காத யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தேசிய மட்ட சம்பியன் பட்டம் வென்று பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்டது. குறித்த தொடரில் பந்து வீச்சில் 80 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களையும், 1200 இற்கும் அதிகமான ஓட்டங்களையும் பெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் எண்டன் அபிஷேக் http://www.thepapare.com/
-
- 0 replies
- 519 views
-
-
ஆஸ்திரேலியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய அணியில் தனது இடத்தைத் தக்கவைக்கப் போராடி வரும் ஷேன் வாட்சன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர்ர்களில் அதிகம் பணம் ஈட்டுபவராக உள்ளார், 2014ஆம் ஆண்டுக்கான பி.ஆர்.டபிள்யூ.வின் டாப் 50 பணக்கார ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ஷேன் வாட்சன் 8-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் மிட்செல் ஜான்சன் 10-வது இடத்திலும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 11-வது இடத்திலும், டேவிட் வார்னர் 12-வது இடத்திலும் உள்ளனர். ஷேன் வாட்சன் கடந்த ஆண்டு ஈட்டிய தொகை 4.5 மில்லியன் டாலர்கள். மிட்செல் ஜான்சன் 4.1 மில்லியன் டாலர்களையும், மைக்கேல் கிளார்க் 4 மில்லியன் டாலர்களையும் ஈட்டியுள்ளனர். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய கூ…
-
- 0 replies
- 404 views
-
-
ஜேர்மன் கிண்ண கால்பந்தாட்டத்திலிருந்து நடப்பு சம்பியன் மியூனிச் வெளியேற்றம் பொருசியா டோர்ட்மண்ட் கழகத்திற்கு எதிரான ஜேர்மன் கிண்ண அரை இறுதிப் போட்டியில் சமநிலை முறிப்பு பெனல்டிகள் அனைத்தையும் கோட்டைவிட்ட நடப்பு சம்பியன் பயேர்ன் மியூனிச்கழகம் 2 – 0 என்ற பெனல்டி அடிப்படையில் தோல்வியடைந்து போட்டிகளிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. இரண்டு அணிகளுக்கும் இடையில் வார இறுதியில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் மேலதிக நேர முடிவின்போது 1– 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது. இதனை அடுத்து வழங்கப்பட்ட பெனல்டிகளில் தனது நான்கு பெனல்டிகளையும் பயெர்ன் மியூனிச் கோட்டை விட்டது. ஜேர்மன் வீரரும் பயேர்…
-
- 0 replies
- 331 views
-
-
2019 ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது கட்டார்! அபுதாபியில் நடைபெற்ற ஜப்பான் அணிக்கு எதிரான ஆசிய கிண்ண உதைபந்தாட்ட இறுதி போட்டியில் கட்டார் அணி 3–1 என்ற கோல் அடிப்படையில் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்யத்தை சொந்த நாட்டில் வீழ்த்தி முதன் முறையாக ஆசிய கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு கட்டார் அணி தெரிவாகியது. இந்நிலையில் அபுதாபியில் உள்ள, ஸாய்ட் ஸ்போர்ட் சிட்டி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி போட்டி இடம்பெற்றது. இதில் இறுதிப் போட்டியில் நான்கு முறை கிண்ணத்தை வென்ற ஜப்பான் அணியை எதிர்கொண்ட கட்டார் அணி 3– 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த ப…
-
- 0 replies
- 696 views
-
-
மூன்றாமிடத்தில் ஸ்மித் அவுஸ்திரேலியா அணியின் உப தலைவர் ஸ்டீபன் ஸ்மித் இன்று ஆரம்பிக்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் மூன்றாமிடத்தில் துடுப்பாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணித் தலைவர் இதனை உறுதி செய்துள்ளார். இந்திய அணியுடனான தொடரிலும், உலகக்கிண்ணத் தொடரிலும் ஸ்மித் மூன்றாமிடத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஷோன் மார்ஸ் மூன்றாமிலக்க வீரராக களமிறங்க திட்டம் இருந்த போதும் க்றிஸ் ரொஜர்ஸ் உபாதையடைந்ததை தொடர்ந்து மார்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார். தான் ஏற்கனவே இது தொடர்பாக ஸ்மித் உடன் பேசியுள்ளதாகவும் நீண்ட நாட்களாக அவரை மூன்றாமிலக்கத்தில் களமிறக்கும் திட்டம் இருந்ததாகவும் அணித் தலைவர் ஸ்மித் மே…
-
- 13 replies
- 1.2k views
-
-
தன்னம்பிக்கை பெறுவது பற்றி தோனி எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்: அஜிங்கிய ரஹானே தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்படி என்பதை கேப்டன் தோனி இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தார் என்று அஜிங்கிய ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார். "தோனியின் கீழ் விளையாடும் போது இளம் வீர்ர்களான நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். அவர் எங்களுக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கையை ஊட்டினார். டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் என்று எதுவாக இருந்தாலும் அவர் எங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது பற்றியும் ஒவ்வொரு சூழலிலும் எப்படி வினையாற்ற வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தார்” என்றார் அஜிங்கிய ரஹானே. விராட் கோலி பற்றி.. விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுபவர், எதிரணியினர் ஆஸ்திரேலியாவாக …
-
- 0 replies
- 289 views
-
-
களமிறங்கிய சஞ்சு சாம்சன்... உற்சாகத்தில் மிதந்த கடற்கரை கிராமம்! பொதுவாக கால்பந்து வீரர்களை இந்தியாவுக்கு அள்ளித்தருவதுதான் கேரளத்தின் வழக்கம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் ஐ.எம்.விஜயன், சத்யன் போன்றவர்கள் கேரளத்தில் இருந்து புறப்பட்டு வந்து இந்திய கால்பந்து களத்தை ஆண்டவர்கள், ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்தவர்கள். தற்போது கேரளா, கொஞ்சம் கொஞ்சமாக கால்பந்து போல கிரிக்கெட் வீரர்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. 100 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில், கடந்த 1990களில்தான் முதன் முதலாக கேரளத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் இடம் பிடித்தார். வேகப்பந்துவீச்சாளரான அபே குருவில்லாதான் அவர். பின்னர் டினு யோகனன், சோபிக்கவில்லை. ஸ்ரீசாந்த் அறிமுகமாகி வளர்ந்து வரும் கட்டத்…
-
- 0 replies
- 418 views
-
-
இந்திய அணிக்கு பயிற்சியளிக்க அழைப்பு வந்தபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகின்றார் ஹேஸ்டன் [30 - November - 2007] [Font Size - A - A - A] கோடிகளில் புரளும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஒருவழியாக அணிக்கு புதிய பயிற்சியாளரை இனம் கண்டுள்ளது. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் இடதுகை ஆட்டக்காரரான கேரி ஹேஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் ஹேஸ்டனின் பெயர் இல்லாதது கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விண்ணப்பித்தோர் பலர் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரி…
-
- 0 replies
- 1.1k views
-