விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
15 மாத தடைக்குப் பிறகு நாளைமறுநாள் மீண்டும் களம் இறங்குகிறார் மரியா ஷரபோவா ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான தண்டனை காலம் முடிந்து 15 மாதங்களுக்குப்பின் மீண்டும் டென்னிஸ் அரங்கில் புதன்கிழமை களமிறங்குகிறார் மரியா ஷரபோவா. ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடைவிதிக்கப்பட்ட மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்திய தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவருக்கு 15 மாதம் தடைவிதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது நீங்கியுள்ளது. இதனால் அவர் மீண்டு…
-
- 6 replies
- 630 views
-
-
'உயர்ந்து நிற்கிறார் சான்ட்னெர்' இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஓரளவு முன்னேற்றமான திறமை வெளிப்பாட்டை வெளிப்படுத்திய போதிலும், அத்தொடரையும் 2-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், "இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடினமான டெஸ்ட் தொடருக்குப் பின்னர், மிகவும் சிறப்பான இந்திய அணிக்கெதிராக 2-2 என்ற நிலையில் காணப்பட்ட நிலைக்கு, சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தினோம். அது மிகவும் அற்புதமான செயற்பாடு. ஆனால், இறுதித் திறமை வெளிப்பாட்டைத் தாண்டிப் பார்க்க முடியாதுள்ளது" என்றார். 5ஆவது போ…
-
- 0 replies
- 630 views
-
-
வீரகேசரி இணையம் 2/13/2010 2:03:01 PM - இலங்கைத் துடுப்பாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், 19 வயதுப் பிரிவினரின் மட்டுப்படுத்தப்படாத ஓவர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை துடுப்பெடுத்தாடப் பணித்தது. அதன்படி களமிறங்கிய கொக்குவில் இந்துக் கல்லூரி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை எட…
-
- 0 replies
- 630 views
-
-
சம்பியனானது டில்கோ கொன்கியூறோஸ் டில்கோ கொன்கியூறோஸ் அணியின் அல்பேர்ட் தனேஸ் அதிரடியாகவும் சிறப்பாகவும் செயற்பட்டு இரண்டு கோல்களைப் பெற வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின் முதலாவது பருவகாலத்தின் சம்பியன்களாக டில்கோ கொன்கியூறோஸ் அணி முடிசூடிக் கொண்டது. இத்தொடரின் தகுதிச் சுற்றின் முதலாவது போட்டியில், டில்கோ அணி, கிளியூர் கிங்ஸ் அணியை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இரண்டாவது போட்டியில் வல்வை கால்பந்தாட்டக் கழக அணி, மன்னார் கால்பந்தாட்டக் கழக அணியை வென்றது. இரண்டாவது இறுதிப் போட்டி அணியை தீர்மானிக்கும் மற்றுமொரு போட்டியில் கிளியூர் அணியை எதிர்த்து வல்வை அணி மோதியது. இதில் கிளியூர் அணி வெற்றிபெற்றது. டில்கோ, கிளியூர் அணிக…
-
- 0 replies
- 630 views
-
-
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு அண்டர்-19 தொடரை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட். இடது புறம் சர்பராஸ் கான், வலது புறம் ரிஷப் பண்ட். | படம்: பிடிஐ. பங்களாதேஷில் வரும் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளர். நேற்று வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தி இந்திய இளையோர் அணி சாம்பியன் ஆனது. இஷான் கிஷண் அணித்தலைவராக நியமிக்கப்பட ரிஷப் பண்ட் துணக் கேப்டனாக செயல்படுவார். இந்த அணியில் சர்பராஸ் கான், அர்மான் ஜாப…
-
- 0 replies
- 630 views
-
-
இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி நிறுவனம் பிரதான அனுசரணை 03 FEB, 2025 | 03:05 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி (கொழும்பு) இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இளைஞரையும் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிக்கும் நன்னோக்குடன் இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு ஜனசக்தி குழுமம் (JXG) தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக பிரதான அனுசரணை வழங்குகிறது. இந்த வருட அத்தியாயம் கொழும்பில் நடைபெறுவதாக இருந்த போதிலும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்…
-
- 5 replies
- 630 views
- 1 follower
-
-
சிறுவயது தோழியை கரம்பிடித்த நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தனது சிறுவயது தோழி அண்டோனல்லா ரோகுசோவை நேற்று திருமணம் செய்து கொண்டார். பியுனோஸ் ஐரஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி. உலக புகழ்பெற்ற அவர் தனது ஆரம்ப கால தோழியான அண்டோனல்லா ரோகுசோவை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் வசித்து வரும் மெஸ்ஸி தம்பதியினருக்கு தியாகோ…
-
- 2 replies
- 629 views
-
-
சுனில் நரைன் தடையால் லாபமா அக்டோபர் 05, 2014. ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் பைனலில், சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனுக்கு தடை விதிக்கப்பட்டதில், இந்தியாவின் பங்கு இருப்பதாக, வெஸ்ட் இண்டீஸ் சந்தேகிக்கிறது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோல்கட்டா அணிக்காக பங்கேற்றார் வெஸ்ட் இண்டீசின் ‘சுழல் மாயாவி’ சுனில் நரைன். இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்த வீரர்களில் முதலிடம் (15 விக்.,) இவருக்குத் தான். டால்பின்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், சுனில் நரைன் சுழற்பந்துவீச்சு குறித்து அம்பயர்கள் அனில் சுவுத்ரி, சம்சுதீன் மற்றும் மூன்றாவது அம்பயர் தர்மசேனா இணைந்து, புகார் தெரிவித்தனர். தொடர்ந்து ஹோபர்ட் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும், ஐ.சி.சி., நிர்ணயித்த 15 டிகிரிக்கும் கூடு…
-
- 1 reply
- 629 views
-
-
டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை குறைவாக எடை போடவேண்டாம்: மைக் ஹஸ்ஸி எச்சரிக்கை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் குறைவாக எடைபோட வேண்டாம் என்று மற்ற அணிகளை மைக் ஹஸ்ஸி எச்சரித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை போட்டிகளின் போது இந்திய அணி தங்கள் சாம்பியன் தகுதியை தக்க வைக்க கடுமையாக விளையாடும் என்பதை மறந்து விட வேண்டாம் என்று கூறுகிறார் ஹஸ்ஸி. "இந்திய அணிக்கு உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் 2 மாதங்களாக விளையாடி வருகின்றனர். இப்போது அவர்கள் இங்குள்ள பல்வேறு சூழ்நிலைகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருப்பார்கள். அதாவது பிட்ச்களின் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு அந்…
-
- 0 replies
- 629 views
-
-
வறுமையிலும் சாதனை: சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு வடக்கின் 3 வீராங்கனைகள் தெரிவு வறுமையின் பிடியிலும் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் பலர் எம் சமூகத்தில் இருக்கவே செய்கின்றார்கள். அவ்வாறு சாதித்து, சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு மூன்று வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர். 6 நாடுகள் பங்கேற்கும் 15 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச கால்பந்தாட்டத் தொடர் பூட்டானில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இலங்கை அணிக்கு வட மாகாணத்திலிருந்து ஜெகநாதன் ஜெதுன்ஷியா, சிவசுதன் தவப்பிரியா, உருத்திரகுமார் யோகிதா ஆகியோர் தெரிவாகியுள்ளனர். அளவெட்டியைச் சேர்ந்த ஜெகநாதன் ஜெதுன்ஷ…
-
- 3 replies
- 629 views
-
-
முரளியிடமும் சங்காவிடமும் மன்னிப்புக் கோரினார் மக்கலம் நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில், முத்தையா முரளிதரனைச் சர்ச்சைக்குரிய விதத்தில் ரண் அவுட் செய்தமைக்காக, அப்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த குமார் சங்கக்காரவிடமும் ரண் அவுட் முறையில் ஆட்டமிழப்புச் செய்யப்பட்ட முரளிதரனிடமும் மன்னிப்புக் கோருவதாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார். எம்.சி.சி கிரிக்கெட்டின் உணர்வுக்கான கொலின் கௌட்ரி உரையை, லோர்ட்ஸில் வைத்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரியிருந்தார். கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற…
-
- 2 replies
- 629 views
-
-
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கோஹ்லி உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ஒரேயொரு கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இடம்பெற்றுள்ளதாக ‘போர்ப்ஸ்’ (Forbes) பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உலகின் அதிக சம்பளம் பெறும் வீரராக உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரரும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான ப்ளோய்ட் மேவெதர் (Floyd Mayweather) முதலிடத்தையும், கால்பந்து உலகின் நட்சத்திர ஜாம்பவான்களான லியோனல் மெஸ்சி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் உலகில் அதிக…
-
- 0 replies
- 629 views
-
-
பேங்க்ராஃப்ட, ஸ்மித் இருவரும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது ஏன்?! ``நான் தவறு செய்துவிட்டேன். நான் பொய் சொல்லிவிட்டேன். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இழிவைத் தேடித்தந்துவிட்டேன். ஆஸ்திரேலியக் குழந்தைகளும், உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்க்கும் சிறுவர்களுக்கும் நாங்கள் முன் உதாரணமாக இருந்திருக்க வேண்டியவர்கள். ஆனால், நாங்கள் தவறுசெய்துவிட்டோம். குழந்தைகள், சிறுவர்கள் எங்களை மன்னிக்கவேண்டும்'' என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேங்க்ராஃப்ட் இருவருமே மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஏன் இருவருமே குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்? 2006 உலகமே ஒன்றுதிரண்டு பார்த்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதிப்ப…
-
- 0 replies
- 629 views
-
-
11 கோடி நிதி திரட்டிய விராட் கோலி! இந்தியாவின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 11.39 கோடி நிதி திரட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.62 லட்சமாக உள்ளது. ஒரேநாளில் 4,120 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்கள் பலரும் நன்கொடை அளித்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்திய அணி தலைவர் விராட் கோலியும் அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக கேட்டோ அமைப்பின் வழியாக ரூ. 7 கோடி நிதி திரட்ட முடிவெடுத்தார்கள். இதன் முதற்கட்டமாக இருவரும் இணைந்து ரூ. 2 கோ…
-
- 0 replies
- 629 views
-
-
2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச்சென்றார் லூகா மோட்ரிச் பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #FIFA #LukaModric லண்டன் : 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா சிறந்த வீரர் விருதுக்கு, குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வ…
-
- 1 reply
- 628 views
-
-
'அது ஒரு மெலிசான கோடு' – கோலி குறித்து கோச் கும்ப்ளே இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கும்ப்ளே, லோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறையை தான் விரும்புவதாகவும், அதையே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெளிக்காட்டும் என்றும் கூறினார். கர்நாடகாவைச் சார்ந்த 45 வயதான அணில் கும்ப்ளே, இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 956 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்ட கும்ப்ளே, இந்திய அணியுடன் தனது முதற்கட்ட பயிற்சியைத் தொடங்கிவிட்டார். இம்மாதம் தொடங்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே, பயிற்சியாளராக கும்ப்ளேவிற்கு முதல் டெஸ்ட். இந்நிலையில் நேற…
-
- 0 replies
- 628 views
-
-
வங்கதேசத்தில் இந்திய அணி: ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் ஜூன் 13, 2014. கோல்கட்டா: மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க, ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி நேற்று வங்கதேசம் சென்றது. இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக, இந்திய அணி, வங்கதேசத்தில் மூன்று போட்டிகள் (ஜூன் 15, 17, 19) கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தோனி, கோஹ்லி, அஷ்வின், ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது. முதல் போட்டி மிர்புரில் நாளை நடக்கிறது. இதற்காக ரெய்னா தலைமையிலான இந்திய அணியினர் கோல்கட்டா…
-
- 3 replies
- 628 views
-
-
தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனை நெருங்கும் ஸ்டீவ் ஸ்மித் ஸ்டீவ் ஸ்மித். - படம்.| ஏ.பி. அசாத்தியமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனுக்கு அருகில் இருக்கிறார். பிரிஸ்பனில் 141 அடித்த ஸ்மித், பெர்த்தில் 239 ரன்கள் விளாசி இங்கிலாந்தின் நம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைத்தார். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் ஸ்மித்தின் தரவரிசைப் புள்ளிகள் 938-லிருந்து 945 ஆக அதிகரித்துள்ளது. முன்பு 941 என்ற அதிகபட்ச புள்ளிகளை ஸ்மித் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங…
-
- 2 replies
- 628 views
-
-
யூரோ 2024!...ஜேர்மனியில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான யூரோகிண்ணச்சுற்றுப்போட்டிகளை நடத்தும் நாடாக ஜேர்மனி தெரிவாகியுள்ளது. இந்த சுற்றுப்போட்டியை நடத்தும் வாய்ப்புக்காக துருக்கியும் ஜேர்மனியும்போட்டிபோட்ட நிலையில் இன்று சுவிற்சலாந்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஜேர்மனி வெற்றிபெற்றது. 2006 இல் ஜேர்மனி உலக கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பைப்பெற்றபின்னர்அதற்கு இந்த வாய்ப்புக்கிட்டியுள்ளது. ஆயினும் துருக்கிக்கு இன்னமும் அனைத்துல கால்பந்துசுற்றுப்போட்டிகள் எதனையும் நடத்தும் வாய்ப்புக்கள்கிட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/europe/80/106766
-
- 0 replies
- 628 views
-
-
அரை குறை ஆடை அணிந்து வந்தால் பேட்டியை மறுத்தார் அம்லா February 07, 2016 தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரரான ஹசிம் அம்லா, தொகுப்பாளினி முறையாக ஆடை அணியாத காரணத்தினால் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் ஹசிம் அம்லா, இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் இரு அணிகள் மோதிய 5வது ஒருநாள் போட்டியின் போது, இவரை பேட்டி எடுப்பதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் Low Neck Top-யை அணிந்திருந்த காரணத்தினால், அம்லா பேட்டி கொடுக்க மறுத்து விட்டார். தொடர்ந்து பேட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெள…
-
- 0 replies
- 628 views
-
-
வரலாற்றை மாற்றுமா ஜெர்மனி? 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அர்ஜென்டீனாவும் மோதவிருக்கின்றன. இந்த இரு அணிகளும் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் மோதவிருக்கின்றன. இதற்கு முன்னர் 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 1986-ல் அர்ஜென்டீனாவும், 1990-ல் ஜெர்மனியும் வெற்றி பெற்றுள்ளன. வரலாறு மாறுமா? தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த (உருகுவே இருமுறை, ப…
-
- 0 replies
- 628 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்சர்கள்: மெக்கல்லம் சாதனை பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள். | கோப்புப் படம்: ஏ.எப்.பி. இலங்கைக்கு எதிராக டியுனெடின் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் தனது 100-வது டெஸ்ட் சிக்சரை அடித்தார் நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். நியூஸிலாந்து முதல் இன்னிங்சில் 137 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸில் இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கைக்கு வெற்றி இலக்கு 405 ரன்கள்; ஆனால் இலங்கை 4-ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்து போட்டியைக் காப்பாற்ற போராடி வருகிறது. …
-
- 0 replies
- 628 views
-
-
கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி... ஒருவர் அன்பாகக் கொடுப்பதை நாம் எப்பொழுதுமே அவர் நினைவாகப் பத்திரமாகப் பேணி வைப்பது வழமை. பொருளின் பெறுமதியை விட . அதை அன்போடு கொடுத்தவர்தான் எமக்கு முக்கியமானதாகின்றது. அதுவே எதிரியாகி விட்டால் கதை வேறு. தந்ததைத் திருப்பிக் கொடுப்பதில்தான் எம் கவனம் இருக்கும். நல்ல முறையான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்துஇ தந்ததிற்கு மேலாக முடிந்தால் இரண்டு மடங்காக திருப்பிக் கொடுக்கும்போதுதான் மனம் ஆறுதலடையும். இலங்கை விஜயம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கட் ஆட்டக்காரர்கள் தமது விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்கள். இலங்கை கிரிக்கட் அணியைப் பற்றி பல விமர்சனங்கள் கொ…
-
- 0 replies
- 628 views
-
-
‘என்னைத் தடை செய்து விடாதீர்கள்’: விபரீதம் புரிந்ததும் கெஞ்சிய கோலி: ஆஸி. தொடரில் மன்னிப்பு கேட்ட தப்பித்த சுவாரஸ்யம் கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது விராட் கோலி ரசிகர்களைப்பார்த்துச் செய்த செயலால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் போட்டி நடுவரிடம் மன்னிப்பு கேட்டு தடையிலிருந்து தப்பித்த விஷயம் இப்போது வெளியாகியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டது அப்போது, சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, விராட் கோலி பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, ரசிகர்கள் கிண்டல் செய்ததைத் தாங்க முடியாத கோலி, ரசிகர்களைப் பார்த்து தனது கைய…
-
- 1 reply
- 627 views
-
-
ரொனால்டோ கோல் அடிப்பதை யுவென்டஸ் தடுக்க முடியுமா? #Championsleague #Gameplan தலைப்பைப் படித்ததும் திட்ட வேண்டாம். `இன்று நள்ளிரவுதான் சாம்பியன்ஸ் லீக் அரை இறுதி செகண்ட் லெக்கில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட் மோதுகின்றன. அதற்குள் எப்படி ஃபைனலில் ரொனால்டோ கோல் அடிப்பதைப் பற்றி எழுதலாம்?' எனக் கேட்கலாம். கால்பந்தை, சாம்பியன்ஸ் லீக்கை, இந்த சீஸனை உன்னிப்பாகக் கவனித்துவருபவர்களுக்கு ஃபைனலில் ரியல் மாட்ரிட் - யுவென்டஸ் மோதலைத் தவிர்க்க முடியாது என்பது நன்றாகவே தெரியும். ரியல் மாட்ரிட் ஹோம் கிரவுண்ட் சாண்டியாகோ பெர்னபுவில் நடந்த முதல் அரை இறுதியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடிக்க, 3-0 என ரியல் மாட்ரிட் வெ…
-
- 3 replies
- 627 views
-