Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இணைவு – எழுச்சி – சர்ச்சை – முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் – பி.மாணிக்கவாசகம் 9 Views தமிழ் மக்களின் போராட்டம் என்பது சாதாரண அரசியல் விளையாட்டல்ல. அது நீதிக்கும் நியாயத்துக்குமானது. அரசியல் உரிமைகள் சார்ந்தது. அடிப்படை உரிமைகளுக்கானது. அது அவர்களுடைய வாழ்வுக்கும் இருப்புக்குமானது. தமிழ் மக்கள் சாதாரண மக்களல்ல. அவர்கள் வந்தேறு குடிகளுமல்ல. வாழ்வியல் வழியில், கலை, கலாசார, மத, பண்பாடு, அரசியல் ரீதியான வரலாற்று பாரம்பரியத்துடனான தாயகப் பிரதேசத்தைக் கொண்டவர்கள். ஆனால் பெருந்தேசியப் போக்கில் தனி இனத்துவ அரசியல் மமதையில் சிங்கள பௌத்த தேசியக் கொள்கையின் அடிப்படையில் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள். அவர்களுடைய நில…

  2. வல்லரசுகளின் நலன்களுக்காக பலிக்கடாவாக்கப்படும் தமிழ் மக்கள் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு பலஸ்தீனம் ஆயுதப் பயிற்சி வழங்கிய ஓர் அரசியல் அன்று இருந்தது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் அதே பலஸ்தீனம் மஹிந்த ராஜபக்சவுக்கு உயரிய விருதினை வழங்கியது. இத்தகைய அரசியல் மாற்றத்துக்கு என்ன காரணம்? எனும் கேள்விக்கு பதிலளித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.இன்று இருக்கிற தமிழ் அரசியல் தரப்பில் எத்தனை பேர் அமெரிக்கா விரும்பாத பலஸ்தீனத்தோடு அடையாளப்படுத்த தயாராக இருக்கினம். மேற்கு நாடுகள் விரும்பாத எதையுமே வாய்திறந்து கதைக்க எம் ஏனைய அரசியல் தரப்புகள் தயாராக இல்லை. இந்த யதார்த்தத்தைய…

  3. கவர்ச்சியான வங்குரோத்து அரசியல் -என்.கே. அஷோக்பரன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான், தன்னுடைய காலத்தைய ஒத்த, வடக்கு-கிழக்குத் தமிழ்த் தலைமைகள் பற்றிக் கருத்துரைக்கும்போது, குறிப்பாக, அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களைப் பற்றிக் கூறும்போது, “அவர்கள், தமது வழக்கை, மிகச் சிறப்பான வகையில் வாதிடவல்ல சட்டத்தரணிகள்; ஆனால், அவர்களுக்கு அர்த்தமுள்ள சலுகைகளை ஈர்த்து எடுத்துக்கொள்ளத் தெரியாது” என்று கூறியதாகச் சில பதிவுகள் கிடைக்கின்றன. இதற்குத் தீவிர தமிழ்த் தேசிய தலைமைகள், உடனடியான பதிலைக் கொண்டிருப்பார்கள். அது, “எமது அரசியல் என்பது, சலுகைகளுக்கு அடிபணியும் அரசியல் அல்ல; மாறாக, கொள்கை வழி பயண…

  4. யாழில் கால் பதிக்கும் சீனாவின் முயற்சியை தடுக்குமா இந்தியா? – அகிலன் 7 Views முதலீடுகள் என்ற போர்வையில் இலங்கையின் வடக்கில் கால் பதிக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இராஜதந்திர மட்டத்தில் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ள புதுடில்லி, வடக்கில் இவ்வாறு சீனா கால்பதிப்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தமக்குக் கிடைக்கும் என இறுதிக் கணம் வரையில் எதிர்பார்த்திருந்து ஏமாற்றமடைந்த இந்தியாவுக்கு, கடந்த வாரத்தில் மற்றொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது கோட்டாபய அரசு. யாழ்ப்பாணத்திற்கு அருகில…

  5. இறுதிப்போரின் போது சரணடைந்தவர்களை கொன்றுவிட்டதாக கோட்டாபய சொன்னார் – அம்பலப்படுத்துகின்றார் ஸ்டீபன் ரப் 7 Views “கடந்த காலங்களில் பொறுப்புக்கூறலிற்கு என்ன நடந்தது என ஆராய்வதற்காக ஆணைக் குழுவொன்றை சிறீலங்கா அரசாங்கம் நியமித்துள்ளதாக அறிகின்றோம். இது கதவை மூடுவதற்கான இன்னொரு முயற்சி. நீதியை தடுப்பதற்கான இன்னொரு முயற்சி” என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார் உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம், இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை, கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் …

  6. ஈழத்தமிழர் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினை அனைத்துலக நீதியே பிரச்சினைக்கான தீர்வாகும் 38 Views ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 46ஆவது அமர்வு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் ஈழத்தமிழர் அனைத்துலகப் பிரச்சினைக்கு அனைத்துலக நீதி வழங்கு முறைமை எந்த அளவுக்குச் செயற்படுத்தப்படப் போகிறது என்பது உலகெங்கும் உள்ள மனித உரிமைகள் மற்றும் அமைதிக்கான மக்களதும், அமைப்புக்களதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது சிறீலங்காவில் அரசாங்கம் அனைத்துலக சட்டங்களுக்கு, – மனித உரிமைகள் மரபுசாசனம் உட்பட – தனது ஆட்சிப்பரப்பு எல்லைக்குள் தான் கட்டுப்படப் போவதில்லை என்கிற உறுதியான முடிவில் இறுக்கமாக உள்ளது. அப்படியான…

  7. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை பின்னணி தொடர்பான சர்ச்சைகள்…? - யதீந்திரா பொத்துவில் தொடங்கி பொலிகண்டிரை பேரணி, சற்றும் எதிர்பாராத வகையில் பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரள்வதற்கு காரணமானது. பொத்துவிலில் விரல்விட்டு எண்ணக் கூடிய நிலையிலிருந்த பேரணி, பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கானவர்களோடு நிறைவுற்றது. 2009இற்கு பின்னர் இடம்பெற்ற ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளோடு ஒப்பிட்டால் இது உச்சமானது. ஆனால் பேரணி மெதுவாக நகரத் தொடங்கிய போது கூடவே, இதன் உரிமையாளர்கள் தொடர்பான கேள்விகளும் சர்ச்சைகளும் இணைந்துகொண்டது. இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும் போது இது ஓரளவு எதிர்பார்க்கக் கூடிய ஒன்றும்தான். இந்த ஏற்பாட்டிற்கு பின்னால் சிவில் சமூக அமைப்புக்க…

    • 1 reply
    • 491 views
  8. மரபுரிமை ஆக்கிரமிப்பும் தமிழ் அறிஞர்களின் பொறுப்பும் - நிலாந்தன் உருத்திரபுரம் சிவன் ஆலயத்துக்கும் ஆபத்தா? தொல்லியல் திணைக்களம் அவ்வாலயச் சூழலில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் தையிட்டியில் ஒரு பிரமாண்டமான விகாரைக்கு ராணுவத் தளபதி அடிக்கல் நாட்டியிருக்கிறார். எனது கடந்தவாரக் கட்டுரை ஒன்றில் எழுதியது போல கிழமைக்கு ஒரு பிரச்சினையைக் கிளப்பி தமிழ் அரசியல்வாதிகள்; செயற்பாட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் சமூகங்களின் கவனத்தை அரசாங்கம் திசைதிருப்பி வருகிறது.இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில்கூட எங்காவது ஒரு மரபுரிமை சின்னம் அல்லது சைவ ஆலயம் தொல்லியல் திணைக்களத்தின் பார்வைக்குள…

  9. பொலிகண்டிப் பிரகடனம் : அடுத்தது என்ன? - நிலாந்தன் பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு நினைவுக் கற்களை வடமராட்சியில் நடுகை செய்தாயிற்று. அடுத்தது என்ன? ஒரு மக்கள் எழுச்சி இயக்கத்தை தொடங்கியிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது அந்தப் பேரணியை அவர்கள் ஒரு தொடக்கமாக கருதுவதைக் காட்டுகிறதா? அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்திய சிவில் சமூகப் பிரதிநிதிகளில் ஒருவராகிய சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் ஐபிசிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் ஒரு குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு போராட்டம் இதுவென்று கூறினார். எனவே அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பின்றி இதனை இவ்வளவு ப…

  10. சிவில் சமூக அமைப்புகளை மக்கள் நம்பலாமா? February 13, 2021 — இரா.வி.ராஜ் — ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள்/அரசியல் தொடர் போராட்டம் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” #P2P சிறுபான்மையினர் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான பரிணாமம் எனலாம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பில் ஒரு விதமான செய்தியை மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு புகட்டினர். ஆனாலும் அச்சுறுத்தல், கொரோனா அச்சத்துக்கும் மத்தியிலும் இப்போராட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்டதன் மூலம் சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் கூறியிருக்கும் செய்தி நாம் எச்சந்தர்ப்பத்திலும் போராட தயாரானவர்கள், எமது ஒற்றுமையே எமது பலம் என்பதாகவே இருக்கமுடியும். இப்போராட்…

  11. P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்? -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது. இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக ஈழத்தமிழர் அரசியல் நகர்கிறது. இந்தப் போராட்டத்தில் உணர்வெழுச்சியோடு பங்குபற்றிய எல்லோருடைய கேள்வியும், அடுத்து என்ன என்பதே? இக்கேள்வி மிகவும் முக்கியமானது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, இந்தப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும், நடைபெற்ற நிகழ்வுகளை ஆழமாக நோக்க வேண்டியுள்ளத…

  12. இந்துசமுத்திரப் பிராந்திய ஆதிக்கப் போட்டி – கைமாறியது மியான்மார் – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 4 Views கடந்த வாரம் மீண்டும் நான்காவது தடவை இராணுவ ஆட்சியினுள் சென்றுள்ளது மியான்மார். முன்னர் மூன்று தடவைகள் அங்கு கொண்டுவரப்பட்ட இராணுவ ஆட்சி என்பது 51 ஆண்டுகள் நீடித்திருந்தது. கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக லீக் கட்சியை சேர்ந்த ஆங் சாங் சூகி மற்றும் அரச தலைவர் யூ வின் மியின்ற் ஆகியோர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறைப்பிடித்த இராணுவம், கடந்த முதலாம் நாள் அன்று அதிகாரத்தை கைப்பற்றியிருந்தது. மியான்மாரில் இராணுவம் மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், …

  13. மியான்மார் , இலங்கை, ஜெனீவாவில் பெரும் வல்லரசுகளும் புவிசார் அரசியலும் -கலாநிதி தயான் ஜயதிலக Digital News Team 2021-02-12T20:22:56 ஆங் சான் சூகியையும் ஏனைய சிரேஷ்ட அரசாங்கத் தலைவர்களையும் தடுத்து வைத்ததை தொடர்ந்து மியான்மரின் இராணுவம் சதிபுரட்சியின் மூலம் நாட்டின் ஆட்சிக் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதுடன், அவசரகால நிலையையும் பிரகடனப்படுத்தியது. 0000000000000000000 சீனாவின் போஷிப்பைஅனுபவிப்பதும் இஸ்லாமியவெறுப்பு வாதத்தை கொண்டபோர்க்குணமிக்கதொரு பௌத்த பிக்குகளின் இயக்கத்தை கொண்டதுமான தேரவாத பௌத்த நாடொன்றை இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் . கொண்டுவந்துள்ளது. அது இலங்கை அல்ல. இன்னும் இது மியான்மாராகவே …

  14. இலங்கை: கண்ணுக்கு தெரியாத மற்றுமொரு போருக்குள் February 12, 2021 — கருணாகரன் — சுதந்திர தினத்தன்று (04.02.2021) வட்டுக்கோட்டையில் ஒரு முதியவர் ஒரேயொரு கத்தரிக்காயை 90 ரூபாய்க்கும், ஐம்பது கிராம் புளியை 200 ரூபாய்க்கும், 50 கிராம் பச்சை மிளகாயை 50 ரூபாய்கும் வாங்கிக் கொண்டு செல்வதைக் கண்டேன். அதற்கு மேல் வாங்குவதற்கு அவருக்குக் கட்டுப்படியாகாது. அந்தளவுக்கு ஒவ்வொரு பொருளும் உச்சவிலையிலிருந்தன. ஆனால், அவர் வாங்க வந்தது இதையும் விட அதிகமாக. அதற்கு அவரிடம் கொள்வனவுச் சக்தி –வருமானம் – இல்லை. திரும்பி வரும் வழியில் இயக்கச்சியில், தன்னுடைய வீடிருந்த காணியைத் தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார், காமாட்சி அக்கா. அந்தக் காணியில் பதின்மூன்று ஆண்டு…

  15. உரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம் - கவிஞர் தீபசெல்வன் இந்தப் பந்தியை எழுதத் துவங்கும் பொழுது, ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற நாள். கிளிநொச்சி நகரத்தில் பெரும் குரலுடன் நிரை நிரையாக சனங்கள் செல்லுகின்றனர். கறுப்புக் கொடி ஏந்தியபடி, எமது உறவுகள் எங்கே, கோத்தபாய அரசே பதில் சொல்லு என்ற பெருங்கேள்வி துளைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரச காவல்துறையினரால் மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுபுறத்தில் கிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களுமாக களத்தில நின்று குரல்களை எழுப்புகின்றனர். கிளிநொச்சியில் போராடும் மக்களின் குரல் உக்கிரமாய் இருக்கையில், கிழக்கில் மக்கள் சிங்கள அரசின் கல் எறிகளையும் முட்பொறிகளையும் மிதித்தெறிந…

  16. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஒரு புதிய நம்பிக்கை -புருஜோத்தமன் தங்கமயில் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான கவனயீர்ப்புப் பேரணி, பல்லாயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்திருக்கின்றது. நீதிமன்றத் தடை உத்தரவுகள் என்று பல்வேறுபட்ட தடைகளைப் பேரணி முன்னெடுக்கப்பட்ட ஐந்து நாள்களும் தாண்ட வேண்டியிருந்தது. ஆனாலும், பேரணி வடக்கு-கிழக்கின் எட்டு மாவட்டங்களின் ஊடாகப் பயணித்து, எதிர்கால ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கு நம்பிக்கையுடன் பலம் சேர்த்திருக்கின்றது. நீண்ட நாள்களுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய தரப்புகள் எல்லாமும் ஒரு போராட்டத்தை நோக்கித் திரண்டன; அல்லது திரளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்றால், அது ‘பொத்துவில் மு…

  17. அரசாங்கம் இந்தியாவோடு விளையாடுகிறதா? -எம்.எஸ்.எம். ஐயூப் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம், தேர்தல் வெற்றிக்காகக் கண்ணை மூடிக் கொண்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது தடுமாறுகிறது. விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதியளித்தது. இப்போது, விலைகள் வானளாவ உயர்ந்துள்ளன. கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்குதாக வாக்குறுதி அளித்தது. இப்போது, அந்தக் கம்பனிகள் அதை வழங்க முடியாது என்கின்றன. இது போன்றதொரு நிலைமை தான், இப்போது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக உருவாகி இருக்கிறது. கடந்த அரசாங்கம், கிழக்கு முனையத்தின் நிர்வாகத்தை, இந்திய, ஜப்பானிய நிறுவனங்களிடம் கையளிக்க ஒப்ப…

  18. போட்டிக் களமாகிய கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் – வேல்தர்மா February 11, 2021 Share 2 Views ராஜபக்ச சகோதரர்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய மாட்டோம் என தொடர்ந்து முழங்கி வந்தனர். 2019 நவம்பரில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் 2020 ஓகஸ்ட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்த்தலுக்கும் பரப்புரை செய்யும் போதும் அவர்கள் இதை அடிக்கடி தெரிவித்திருந்தனர். ஆனால் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய முடிவு செய்தனர். பின்னர் அழுத்தம் காரணமாக அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர். கொழும்புத் துறைமுகத்த…

  19. குறும் தேசியவாதிகளின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வெற்றிபெற்ற மக்கள் போராட்டம் February 9, 2021 — வி. சிவலிங்கம் — ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை‘ யாத்திரை பரந்த தமிழ்பேசும் மக்கள் தேசிய முன்னணிக்கான அறைகூவல் !! – தமிழ்க் குறும்தேசியவாதம் பின்தள்ளப்படுகிறது. – இருதேசம் ஒருநாடு காணாமல் போயுள்ளது. – சிவில் சமூக அணித் திரட்சி கருக்கட்டுகிறது. – புதிய தலைமுறையின் புதிய தேசியவாதம் முகிழ்கிறது. – தமிழ், முஸ்லீம், மலையக அணிச் சேர்க்கை யதார்த்தமாகிறது. – சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளின் மீதான புதிய அழுத்தங்கள். நடந்து முடிந்த ‘பொத்துவில் முதல் பொலிகண்டி…

  20. வடக்கும் இல்லை – தெற்கும் இல்லை – இந்தியாவின் இராஜதந்திரம் 36 Views ஈழத்தின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு பகுதிகளில், சீனாவின் Sinosar-Etechwin கம்பனியானது இலங்கை மின்சார சபையோடு இணைந்து காற்று-சூரிய ஒளி (Wind-Solar)ஆலைகளை நிறுவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையமும் போச்சு. வடக்கின் தீவுகளும் போச்சு. 1974 இல் இலங்கைக்கு இந்தியா வழங்கிய கச்சதீவும் போகலாம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அபாரம் என நேற்று (7) இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கருக்கு எழுதிய திறந்தமடல் மூத்த அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐக்கிய இலங…

  21. ஈழத்தமிழர்- மியன்மார் விவகாரமும் மேற்குலக நாடுகளின் தோல்வியும் -கொழும்புத்துறைமுக ஊழியர்கள், பௌத்த குருமார் எதிர்ப்பு வெளியிடுகின்றனர் என்பதைக் காண்பித்து தமிழ்த் தேசியத்தை முற்றாக நீக்கம் செய்யக்கூடிய அரசியல் பேரம் பேசுதல்களில் வல்லரசு நாடுகளோடு சிங்கள ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர்- -அ.நிக்ஸன்- சீனாவுக்கு ஆதரவான மியன்மார் இராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தோ- பசுபிக் பாதுகாப்புக்கான அமெரிக்க இந்திய அரசுகளின் நகர்வுகளிலும் தளர்வு அல்லது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நிலமை உருவாகியுள்ளதெனலாம். இந்தவொரு நிலையிலேயே கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியை இந்தியாவுக்…

  22. பொலிகண்டிக்குப் பிறகு என்.கே. அஷோக்பரன் பெப்ரவரி 3, 2021 கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் இருந்து, ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி தொடங்குகிறது. பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினம். ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பதாக, தமிழ் பேசும் மக்கள் கூட்டமொன்று, கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் இருந்து வட மாகாணத்தின் பொலிகண்டி வரை, ஒரு நீண்ட ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்திருந்தது. அரச இயந்திரம், வழமைபோலவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கருவிலேயே சிதைக்கும் கைங்கரியங்களை, பொலிஸ் கட்டமைப்பினூடாக முன்னெடுக்கத் தொடங்கியது. நீதிமன்றுகளில் பொலிஸார் ஆர்ப்பாட்டத்துக்கான தடை உத்தரவுகளைக் கோரினார்கள். ‘கோவிட்-19’ நோய் பரவுகை அச்சம், ஆர்ப்பாட்டத் தடைக்கான காரணமாகப் பொலிஸாரால் முன்வைக்கப்…

  23. -க. அகரன் சிய இனமொன்று மற்றுமொரு தேசிய இனத்தால் அடக்கப்படுகின்றபோது, அது, இன முறுகலாக வெளிப்பட்டு, பாரதூரமான விளைவுகளை அந்தத் தேசத்தில் விளைவிக்கும். அந்தவகையில், உலகில் பல்வேறு நாடுகளில் இனக்குழுமங்களுக்கு இடையிலான முறுகல் நிலை, யுத்தமாக மாறிய வரலாறுகள் பலவுண்டு. http://static2.tamilmirror.lk/assets/uploads/image_9bbb284860.jpg இதற்கு இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. சுதந்திரத்தின் பின்னரான காலத்தில் இருந்து, தமிழ், சிங்களம் ஆகிய இரு தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் சிங்களப் பெரும்பான்மையினரின் விட்டுக்கொடுப்பற்ற ஏகாதிபத்திய மன நிலையும், ஆயுதப்போராட்டத்தில் நிறைவுற்றிருந்தது. ஆயுதப்போராட்டம் மௌனித்ததன் பின்னரான காலச் சூழலில், அகிம்சை வழியிலான …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.