அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஜெனீவாவில் புதுப்பிக்கப்பட்ட விளைவுகளை அறுவடை செய்யும் காலம் அருகில்.! ராஜபக்ஷக்களின் ஆட்சியை ஒரு தென்னிலங்கை விமர்சகர் மெரிடோகிரசி (Meritocrazy) என்று அழைப்பார். கொழும்பு டெலிகிராப் இணையத் தளத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். மெரிட்டோகிரசி என்பது ‘மெரிட்’ அதாவது தகமை அடிப்படையில் அல்லது தகுதி அடிப்படையில் ஒருவர் ஆட்சியைப் பிடிப்பது. தகுதி என்றால் என்ன? யுத்தத்தை வென்றதால் கிடைத்த தகுதிதான். அதுதான் யுத்த வெற்றி வாதம். அது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் 2009இற்குப் பின்னரான புதுப்பிக்கப்பட்ட வடிவம். யுத்த வெற்றிதான் ராஜபக்ஷக்களின் அரசியல் முதலீடு. அதை வைத்தே கோட்டாபய ஜனாதிபதியாக வந்தார். 2018 ஈஸ்டர் குண்டுவெடிப்பு அவர்க…
-
- 0 replies
- 472 views
-
-
நீதிமன்றம் நிராகரிப்பினும், உயிர்ப்புறும் ஒப்புதல் வாக்குமூலம் – பி.மாணிக்கவாசகம் December 29, 2020 40 Views தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மிகமோசமான நிலைமைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் இது ஓர் எரியும் பிரச்சினை. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர்களுடனான விளையாட்டு. அதுவும் பூனைகளுக்குக் கொண்டாட்டம். எலிகளுக்குத் திண்டாட்டம் என்ற அரசியல் ரீதியான வலிகள் நிறைந்த விளையாட்டாக மாறியிருக்கின்றது. மாற்றப்பட்டிருக்கின்றது. சட்ட ரீதியாக நீதிமன்றத்தின் ஊடாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆனால் நீதிமன்றச் செயற்பாடுகள் நத்தை வேகத்திலும் முக…
-
- 0 replies
- 557 views
-
-
இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்கள் – இரண்டாம் பாகம் ? - யதீந்திரா இலங்கையின் அரசியல் கடிகாரம் மீளவும் பழைய காலத்தை நோக்கித் திரும்பக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மீதான மனித உரிமைகள் விவகாரம் மீளவும் கூட்டான விவாதங்களை ஏற்படுத்தலாம். இதற்கான காரணம் மிகவும் தெளிவானது. அதாவது, மீளவும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் ராஜபக்சக்களின் அரசாங்கமானது, ஜ.நா மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போகும் முடிவை நிராகரித்திருக்கின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் வார்தையில் கூறுவதனால், முன்னைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை இறந்துவிட்டது. அதனை இனி உயிர்ப்பிக்க முடியாது. உண்மையிலேயே அந…
-
- 0 replies
- 526 views
-
-
பயங்கரவாத தடுப்புச்சட்டம்: நெருக்கடியில் இலங்கை சிறை கைதிகள் அம்பிகா சற்குணநாதன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் 28 டிசம்பர் 2020 (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.) பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கைதிகள் நடத்தப்படுகின்ற முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் குறித்து முதன்முதலான தேசிய ஆய்வொன்றை 2018 பெப்ரவரி தொடக்கம் 2020 ஜனவரி வரை எனது தலைமையில் நடத்தியது. அந்த ஆய்வின் அறிக்க…
-
- 1 reply
- 485 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை.. நினைவு கூறுவதற்கு நான் தடையில்லை
-
- 0 replies
- 587 views
-
-
-
- 0 replies
- 663 views
-
-
எம்.சி.சி. ஒப்பந்தம் ரத்தானது ஏன்? வேறொரு வடிவில் அல்லது இலங்கை கேட்கின்ற வேறு விடயதானங்களுக்கு அமெரிக்கா விட்டுக் கொடுக்கக்கூடிய ஏது நிலையும் உண்டு 0 அ.நிக்ஸன் திருகோணமலை நகரை கொழும்பு நகரின் உப நகரமாக மாற்றுவது உட்பட இலங்கைத் தீவின் அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation -MCC) இலங்கையோடு செய்யவிருந்த ஒப்பந்தத்தைக் கடந்தவாரம் ரத்துச் செய்துள்ளது. 480 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது தொடர்பாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையோடு இணக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியா…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ்த் தலைமைகளின் பேசாப்பொருள் ‘பொருளாதாரம்’ -என்.கே. அஷோக்பரன் சர்வதேச அங்கிகாரம்மிக்க கடன் மதீப்பீடுகளான ‘பிட்ச் ரேடிங்ஸ்’, ‘ஸ்டான்டர்ட்ஸ் அன்ட் புவர்ஸ்’, ‘மூடீஸ்’ ஆகியன, மீண்டும் இலங்கையின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. இதன் அர்த்தம், சுதந்திர இலங்கை அரசு, தனது கடனை மீளச் செலுத்த முடியாத, வங்குரோத்து சூழலை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்பதாகும். முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும், இந்நாள், பணம் மற்றும் மூலதனச் சந்தை, மற்றும் அரச முயற்சியாண்மை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சருமான அஜித் நிவாட் கப்ரால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இயக்குநருமான பசில் ராஜபக்ஷ ஆகிய இருவரும், இலங்கை வங்குரோத்தாகும் என்ற கருத்தை முற்றாக மறுத்து வருகிறார்கள். மேற்குறித்த நிறுவனங்களி…
-
- 0 replies
- 420 views
-
-
கொரோனாவுடன் வாழப்பழகச் சொல்லும் தலைமைத்துவமும் குடும்பத்துடன் வாழ விடாத வடக்கு சுகாதாரத் துறையும் தாயகன் இலங்கையில் கொரோனாவின் ஆட்டத்தினால் பலியானோர் எண்ணிக்கை 200 ஐ நெருங்கி வரும் நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40000ஐயும் தாண்டி விட்டது . கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் காலடி எடுத்து வைத்த சீன நாட்டுக் கொரோனாவையும் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் வந்த ஐரோப்பிய கொரோனாவையும் எதிர்த்து நின்று இலங்கை அரசும் சுகாதாரத்துறையும் போராடிக் களைத்து இறுதியில் நாட்டின் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவே ” கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் மக்களே ” என அறிவித்தும் விட்டார். அதனால் தற்போது இலங்கையில் ”தாய் வீட்டுக்கு செல்லும் பிள்ளை” போல் கொரோ…
-
- 0 replies
- 420 views
-
-
சோவியத் யுத்தம் ஜேர்மனியின் ராணுவத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சிதைக்க ஆரம்பித்திருந்தது. இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று ஒருவராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. எப்படிப் பார்த்தாலும் நீ்ண்டதொரு போருக்கு ஏற்ற பொருளாதார பலம் ராணுவத்திடம் இல்லை. 1930களில் இருந்தே ராணுவத்தை ஜேர்மனி செழுமைப்படுத்த ஆரம்பித்து விட்டது என்றாலும் சோவியத் யுத்தம் ஏற்படுத்திய பின்னடைவு ஜேர்மனியை சோர்வாக்கியது. கரி, எண்ணெய், இரும்பு உள்ளிட்ட மூலப்பொருள்கள் கிடைத்தபாடில்லை. ஆயுதங்கள் தயாரிப்பிலும் சுணக்கம். 1941 அரை ஆண்டில் மட்டும் 1823 போர் விமானங்களை ஜேர்மனி இழந்திருந்தது. இழப்பை ஈடுகட்ட 1600 விமானங்களே உருவாக்கப்பட்டன. Wehrmacht வீர்ர்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. …
-
- 6 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 649 views
-
-
ஜெனிவா பட்டிமன்றம்...! (ஆர்-ராம்) முள்ளிவாய்க்கால் பேரவலத்துடனான முடிவு தமிழர்களின் உரிமைகளை பெற்றெடுப்பதற்கானதொரு ‘பெரு’ வாயிலை அகலமாக திறந்து விட்டிருந்தது. இலங்கையில் அன்று ஆட்சியில் அமர்ந்திருந்த ராஜபக்ஷ தரப்பின் சீனா தழுவிய பிரதிபலிப்புக்களால், அயல்நாடான இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கு தமது நலன்கள் சார்ந்த அச்சங்களும் ஐயங்களும் வெகுவாக வலுத்திருந்தன. இந்த தருணத்தில் தான் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தமிழர்களின் நீதிக்கோரிக்கை இந்திய, சர்வதேச தரப்புக்களை முழுமையாக மையப்படுத்திச் சென்றது. தமிழர்கள் விடயத்தினைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தினை தமது ‘பிடிக்குள்’ வைத்திருக்கும் மூலோபய தளமாக ஜெனிவை அத்தரப்புக்கள் மாற்றியமைத்துக்கொண்டன. அதன…
-
- 0 replies
- 527 views
-
-
ஜெனீவாவை நோக்கிய ஒரு கூட்டுப் பொறிமுறை? – நிலாந்தன் நிலாந்தன் அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக பெப்ரவரி மாதமளவிற்தான் நாட்டில் ஜெனிவாவை நோக்கிய ஒரு நொதிப்புண்டாகும். ஆனால் இம்முறை சற்று முன்னதாகவே அது தொடங்கிவிட்டது. அதற்கு காரணங்களில் ஒன்று கடந்த மாதம் அமெரிக்க தமிழ் அமைப்பு ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மெய்நிகர் சந்திப்பில் சுமந்திரன் கூறிய “ரோல் ஓவர் பிரேரணை” என்ற சொற்பிரயோகம்தான். அச்சந்திப்பில் அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டிக் கருத்துக் கூறும்போது அவர் அந்த வார்த்தையைப் பிரயோகித்தார். அதன்படி ஏற்கனவே உள்ள தீர்மானத்தை கூட்டமைப்பு மாற்ற…
-
- 1 reply
- 850 views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
எனது அரசியல் நகர்வுகளை சிறையில் இருந்தே திட்டமிட்டேன் – ‘தினக்குரல்’ பிரத்தியேகப் பேட்டியில் பிள்ளையான் 0 போரட்டத்தில் என்ன நடந்தது? போரட்டத்தின் போக்கு இறுதியில் தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்து நூல் ஒன்றை எழுதுகன்றேன். 0 சிறைச்சாலை வாழ்க்கை ஒரு கடினமான வாழ்க்கை. 61 மாதங்கள் சிறையில் இருந்திருக்கின்றேன். சுமார் மூன்றறை வருடங்கள் தனி அறையில் இருந்துள்ளேன்! 0 தமிழ் தேசிய கூட்டமைப்பு பிள்ளையானை அழிக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியது வேடிக்கையான விடயம். காயத்திரி நளினகாந்தன் “என்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கள் உண்மைக்கு புறம்பான அரசியல் பழிவாங்கல். ஆகையால் இதனை என்னால் முழுப்பிரயத்தனம் வழங்கி…
-
- 0 replies
- 836 views
-
-
-
- 0 replies
- 510 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்க ஜெனீவா 30/1 தீர்மானத்திற்கு மீண்டும் சாயம் பூச முற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள் கோட்டாபய தன்னைச் சிறந்த தலைவராக நிறுவலாம் என்கிறார் ஜெகான் பெரேரா கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மாற்றுக்கொள்கை மையம் (Centre for Policy Alternatives-CPA) மற்றும் தேசிய சமாதானப் பேரவை (National Peace Council-NPC) போன்ற சில தன்னார்வ நிறுவனங்கள் சர்வதேச சக்திகளோடு சேர்ந்து 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சிங்கள அரசியல்வாதிகள் பலர் அவ்வாறு…
-
- 0 replies
- 697 views
-
-
கோவிட் -19 உடன் கடந்து செல்லும் 2020 ஏற்படுத்தப் போகும் புதிய உலக ஒழுங்கு – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 83 Views கோவிட்-19 என்ற உலகளாவிய தொற்றுநோயின் தாக்கதினால் மிகப்பெரும் பொருளாதார, உயிர் மற்றும் சமூக பாதிப்புக்களை உலகம் சந்தித்த ஆண்டாக 2020 கடந்து செல்கின்றது. இரண்டாம் உலகப்பேருக்கு பின்னர் குறுகிய காலத்தில் அதிக பொருளாதார மற்றும் உயிரிழப்புக்களை உலகம் சந்தித்தது இந்த வருடம் தான். இந்த தாக்கத்தின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதே தற்போதுள்ள கேள்வி. எதிர்வரும் வருடங்களில் பூகோள அரசியலில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதுடன் இது உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்றால், அந்த மாற்றத்திற்கு முத…
-
- 0 replies
- 378 views
-
-
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கையளிக்கும் தீர்மானம் - ஜெனீவாவை கையாளும் உத்தியா.? இலங்கையின் இந்திய அரசியல் களம் மீளவும் ஒரு உரையாடலுக்குள் நகருகின்றது. அதனை இந்திய ஆட்சித்துறையின் நலனுக்கான வாய்ப்புக்கள் என்றும் இன்னோர் பக்கம் இலங்கை ஆட்சியாளரின் நலனுக்கான வாய்பான களம் என்றும் வாதிட முடியும். வெளிப்படையாகப் பார்த்தால் இரு தரப்பும் தமது நலன்களை நோக்கி நகர்வதாகவும் அதில் சமபலமுடையவையாகவும் தெரியும். ஆனால் உள்ளார்ந்த அர்த்தத்தில் பார்த்தால் எத்தகைய போக்கு நிலவுகிறது என்ற தெளிவாகும். எப்போதும் இலங்கை இந்தியத் தரப்புக்களுக்கிடையே நிலவும் அரசியல் நகர்வுகள் இரு தரப்புக்கும் ஏற்றமும் இறக்கமும் உடையதாகவே தெரிகிறது. சில சந்தர்ப்பங்களில் ம…
-
- 0 replies
- 529 views
-
-
தமிழ்மக்களுக்கு எதிர்ப்பு அரசியல் ஏன் தேவைப்படுகின்றது?
-
- 0 replies
- 293 views
-
-
ஜெனீவா அரங்கோடு கரைதல் புருஜோத்தமன் தங்கமயில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், எதிர்வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரை முன்வைத்து, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையில் வாதப் பிரதிவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் புதிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அக்கறை கொண்டிருக்கின்றது. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், கூட்டமைப்பின் புதிய தீர்மானத்துக்கான முன்மொழிவு என்பது, மீண்டும் இலங்கைக்குக் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்டது என்று விமர்சித்திருக்கின்றன. இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், போ…
-
- 0 replies
- 979 views
-
-
-
- 0 replies
- 910 views
-
-
உலக நாடுகளுக்கு விரையும் யுத்தக்குற்ற சாட்சியங்கள்
-
- 0 replies
- 615 views
-
-
எதிர்ப்பு அரசியலும் இரட்டை வேடமும் எதிர்ப்பு அரசியலும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் இரட்டை வேடமும் இம்முறை இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நழுவியிருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் எதிர்த்து வாக்களித்திருந்தது. ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ரெலோவும் எதிர்த்து வாக்களித்து இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்களிக்காமல் நழுவிச் சென்றிருந்தனர். இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 522 views
-
-
ஜெனீவாவை நோக்கிய காய் நகர்த்தல்கள் – தமிழ்க் கட்சிகளின் உபாயங்களும் யதார்த்த நிலையும் 0 அகிலன் ஐ.நா. மனித உரிமைகள் பேரையின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜெனீவா குறித்த இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் சூடுபிடித்துள்ளன. 2021 பெப்ரவரி 22 முதல் மார்ச் 19 வரை மனித உரிமைகள் அமைப்பின் 46 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டம் ஈழத் தமிழரைப் பொறுத்தளவில் மிகமிக முக்கியமானது. அடுத்ததாக என்ன நடைபெறப்போகின்றது என்பது இந்தக் கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்படும். இலங்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், “நல்லாட்சி” பதவிக்கு வந்த பின்னர், 2015ம் ஆண்…
-
- 0 replies
- 524 views
-