Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சிங்கள இனம்: உலகின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளுமா? இந்தியாவுக்கு பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட வேளையில், காந்தியைப் பார்த்து, கேள்வி ஒன்றைக் கேட்டார் பிரித்தானியர் ஒருவர். “எம்மவர்களால் (பிரித்தானியரால்) உங்கள் நாட்டின் அனைத்துச் சொத்துகளும் சூறையாடப்பட்டு விட்டன. இனி எப்படி, ஒன்றுமே இல்லாத உங்கள் நாட்டைக் கட்டி எழுப்பப் போகின்றீர்கள்” என்பதே அந்த வினா ஆகும். “எமது நாட்டின், பௌதீக வளங்களை நீங்கள் சூறையாடி இருக்கலாம். ஆனால், எமது நாட்டு மக்கள், எங்கு தடுக்கி விழுந்தாலும், எம்மைத் தாங்கிப் பிடிக்க, ஏராளமான மனித நேயமுள்ள மனிதர்கள், வாழும் தேசம் நம் பாரத தேசம்” எனப் பதிலடி வழங்கினார் காந…

  2. அரசியல் கைதிகளின் விடுதலையின் அவசியம் அர­சியல் கைதி ஆனந்தசுதா­க­ரனை விடு­தலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பூதா­க­ர­மாக எழுந்­தி­ருக்­கின்­றது. நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு தரப்­பி­னரும் அவ­ரு­டைய விடு­த­லைக்­காகக் குரல் கொடுத்து வரு­கின்­றனர். அர­சியல் தலை­வர்கள் மட்­டு­மல்­லாமல் சமூ­கத்தின் பல மட்­டங்­களைச் சேர்ந்­த­வர்­களும் அவரை மனி­தா­பி­மான முறையில் விடு­தலை செய்­யு­மாறு கோரிக்கை விடுத்­துள்­ளனர். ஆயுட்­காலச் சிறைத் தண்­டனை வழங்­கப்­பட்­டுள்ள ஆனந்தசுதா­க­ரனின் குடும்ப நிலை­மையைக் கவ­னத்திற் கொண்டு அவரை விடு­தலை செய்ய வேண்டும் என் ­பது இந்தக் கோரிக்­கையின் அடிப்­படை நிலைப்­பா­டாகும். ஆனந்த சுதா­க­ர­னுக்கு ஆணும் பெண்­ணு­மாக இரண்டு குழந்­தை க…

  3. மாலியில் பயங்கரவாத அச்சுறுத்தல் - ஜனகன் முத்துக்குமார் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியிலும் நடப்பாண்டின் நடுப்பகுதிவரையிலும், பயங்கரவாதம் தொடர்பாக சர்வதேச அரங்கில் பேசப்பட்ட நாடுகளின் வரிசையில், மாலி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பிரதானமாக நாட்டின் பயங்கரவாதக் குழுக்களையும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளையும் களைதல், சர்வதேச பாதுகாப்புக்கான உதவிகளைப் பெறுதல் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மாலி முன்வைக்கும் அதேவேளை, உள்நாட்டு பயங்கரவாதச் செயற்பாடுகள், தொடர்ச்சியாக பிராந்தியத்துக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியவண்ணமே உள்ளன. 2012ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் இருந்து, பயங்கரவாதத்து…

  4. யுத்தமும் – நுண்கடனும் – கடன்காரியும் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… எங்களுக்கு அயல் கிராமத்தில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள். கணவர் யுத்தத்தில் இறந்துபோய்விட்டார். அவர் ஒரு பெட்டிக் கடைதான் நடாத்திக் கொண்டிருந்தார். என் சிறு வயது முதலே அவர் ஒரு பெட்டிக்கடையை துணையாக்கிக் கொண்டதை பார்த்திருக்கிறேன். இடம்பெயர்ந்தால் அந்தப் பெட்டிக்கடையும் அவருடன் இடம்பெயறும். அவர் எங்கு போய் அடைக்கலம் புகுந்துகொள்ளுகிறாரோ அங்கே அந்தப் பெட்டிக்கடையும் குடியேறும். அப்படியே இடம்பெயர்ந்து 2009 யுத்தம் முடிந்த பின்னர் அவர்கள் தங்கள் பெட்டிக்கடையை திறந்து கொண்டார்கள். முள்வேலி முகாமிலேயே அப்படி ஒரு கடையை…

  5. ------------------------------------ விமர்சனத்துக்கும் குறைபிடிக்கிறதுக்கும் இடையில ஒரு நூல் இடைவெளிதான் இருக்கு. இதை தமிழர்களாகிய நாங்கள் சரியா விளங்கிக்கொள்ளாத வில்லங்கமான கால கட்டத்தில் வாழ்கிறோம். புலிகளின் காலகட்டத்தில் மற்ற இயக்கங்கள் முன்வைத்த விமர்சனங்களை ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் பார்க்க தவறியது போலவே இப்போது பிற அரசியல், ஆயுத இயக்கங்கள் முன்வைக்கும் சில கருத்தியல் பார்வைகளை சரியான கண்ணோட்டத்தில் பார்க்கமறுக்கும் பிழையான காரியங்களை நாம் செய்வதாக உணர்கிறோம். ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஒரு கொள்கை உள்ளது.அது தமிழர்நலன் சார்ந்ததா? இல்லை அவர்களின் சுயலாப அரசியல் பார்வையா? என்பதற்கு அப்பால் "நாம் எல்லோரும் தமிழர்கள்" என்பதை மறந்துவிடுகிறோம். ஆளும் அரசோடு சேர்ந்த…

  6. ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்‌ச, மூன்றாவது முறையாக இலங்கையின் ஜனாதிபதியாகத் துடிக்கிறார். அதற்காக சட்டத்தையே வளைத்துவிட்டார். 'செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன?’ என தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார். மக்களும் மக்களாட்சித் தத்துவமும் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டுவிட்ட இலங்கையில், ஜனவரி 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதை நினைக்கும் போது இதுதான் நினைவுக்கு வருகிறது. ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்‌ச, மூன்றாவது முறையாக இலங்கையின் ஜனாதிபதியாகத் துடிக்கிறார். அதற்காக சட்டத்தையே வளைத்துவிட்டார். இலங்கையின் அரசியல் அமைப்புச…

  7. வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல் காரை துர்க்கா / மனித வாழ்வு மகத்தானது, உன்னதமானது, பெறுமதியானது. இத்தகைய வாழ்க்கையை, பிடிப்போடு வாழ்ந்தாலே, வாழ்வு சிறக்கும்; தனக்கும் பிறருக்கும் பயன் உள்ளதாகவும் அமையும். எனவே மகத்துவமான, உன்னதமான, பெறுமதியான இந்த வாழ்க்கையை, வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வருகின்றதா, பிறரின் தயவிலும் பிறரை அனுசரித்தும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதா? இந்தக் கேள்விகளை எண்ணிப் பார்த்தால், அங்கு வாழும் மக்களின் நெருக்கடிகள், பிரச்சினைகளின் தாற்பரியங்கள் விளங்கும். வவுனியா மாவட்டத்தில், கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான முதல் எட்டு மாதங்களில், 36 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். அண்ணளவாக, ஒரு மாதத்துக்கு…

  8. 40 வருடங்களாக உரிமை மறுக்கப்படும் பிரதேச செயலகம் லக்ஸ்மன் கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று மார்ச் 25ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முன்னரும் பல தடவைகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதனால் இதுவொன்றும் புதிதல்ல. அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படாத காரணத்தினால், அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச …

  9. தூண்டிவிடப்படும் தேசியவாதம் Bharati May 21, 2020 தூண்டிவிடப்படும் தேசியவாதம்2020-05-21T07:52:21+00:00Breaking news, அரசியல் களம் கலாநிதி ஜெகான் பெரோ பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியல் பிரசாரங்கள் மீண்டும் தங்கள் இலக்குகளை அடைய முடியும் என்று நம்புபவர்களால் தோற்றுவிக்கப்படுகின்றன . தேர்தல் ஆணைக்குழு தற்போது நிர்ணயித்துள்ள ஜூன் 20 ஆம் திகதி விரைவில் தேர்தல்கள் நடத்தப்படலாம். இருப்பினும், கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது தேர்தலுடன் முன்னோக்கி செல்வதற்கான ஒரு தீர்மானம் எடுப்பதற்கு தடையாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் அதிகரிப்பு மெதுவாக இருந்தாலும்,…

  10. எழுக தமிழ் - வடக்கில் மட்டுமல்ல. நாடளாவிய ரீதியில், எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகின்றது. எழுக தமிழ் - வடக்கில் மட்டுமல்ல. நாடளாவிய ரீதியில், எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகின்றது. வடக்கில் தமிழ் மக்கள் தமது நீண்ட நாளைய தேவைகள், கோரிக்கைகளுக்காக எழுக தமிழ் மூலம் எழுச்சி பெற்றிருந்தார்கள். ஆனால் எழுக தமிழ் என்ற மகுடத்தைக் கண்டு இனவாத விஷத்தைக் கக்குவதற்காக நாட்டின் தென்பகுதி இனவாத, மதவாத சக்திகளும் அரசியல்வாதிகளும் எழுச்சி கொண்டிருக்கின்றார்கள். வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் உண்மையான அரசியல் நிலைமை என்ன, அங்கு உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, நிதானமாகச் சிந்திப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. அதும…

  11.  போர் வெற்றியைக் கற்றலும் இனவாதத் தீயில் கருகுதலும் இறுதிப் போரையும் அதில் அரசாங்கப் படைகள் பெற்றுக் கொண்ட வெற்றியையும் பாடசாலைப் பாடங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கின்றார். வரலாறு எப்போதுமே வெற்றியாளர்களின் பக்கத்திலிருந்து எழுதப்பட்டு வந்திருக்கின்றது. அது, ‘வெற்றியாளர்களின் நீதி’ என்கிற ஏக மனநிலையைக் காலம் காலமாக மக்களிடம் கடந்தி வந்திருக்கின்றது. தோற்கடிக்கப்பட்டவர்கள் கோரிய நீதி என்ன? அல்லது தோல்வியடைவோம் என்று தெரிந்தும் ஏன் அவர்கள் போரிட்டார்கள்? மாண்டுபோனார்கள்? என்பது பற்றியெல்லாம் பெரிதாக யாருமே கரிசனை கொள்வதில்லை. அதுவே, ‘இராமாயணம், மகாபார…

  12. தேசியப்பட்டியல்: ஓர் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு - முகம்மது தம்பி மரைக்கார் அரசியலின் அகராதி விசித்திரமானது; பொது வெளியில் நாம் கண்டு, கேட்டு, கற்றறிந்த சொற்களுக்கு, அங்கு அர்த்தம் வேறாகும். கழுத்தறுப்பு, துரோகம் போன்றவற்றுக்கு அரசியல் அகராதியில் ‘ராஜ தந்திரம்’ என்று பெயராகும். வாக்கு மாறுதல், பொய் என்று அங்கு எதுவுமில்லை. அவற்றினை ‘சாமர்த்தியம்’ என்றுதான் அரசியல் அகராதி விவரிக்கிறது. சாதாரண குடிமகனின் வலிகளுக்கும்,கண்ணீருக்கும் அரசியல் அகராதியில் அர்த்தங்கள் எவையுமில்லை. பொதுத் தேர்தல் நடந்து 16 மாதங்கள் கடந்து விட்டன. முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, யாரை நியமிப்பது என்கிற விவகாரத்துக…

  13. அரசியல் சுயநலத்தைப் புடம்போட்டுக் காட்டும் ஆளும் கட்சியின் உட்பூசல் -எம்.எஸ்.எம். ஐயூப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆளும் கட்சிக்குள் பலம் இழந்து வருகிறாரா? ஆளும் கட்சிக்குள், அவரை ஒதுக்கித் தள்ளும் நிலை உருவாகி வருகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், அண்மையில் சில சம்பவங்கள் இடம்பெற்றன; இடம்பெற்றும் வருகின்றன. தரை ஓடு போன்ற செரமிக் பொருட்களை இறக்குமதி செய்வதை, அரசாங்கம் ‘கொவிட் 19’ நோயால் ஏற்பட்ட பயணக் கஷ்டங்களின் காரணமாக, கடந்த வருடம் ஜூலை மாதம் தடை செய்திருந்தது. அப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரதமர் அண்மையில் அத்தடையை நீக்கும் வகையில், ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு இருந்தார். ஆனால், ஏற்றுமதி - இறக்குமதி கட்ட…

  14. திருப்புமுனை யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது ஊழல் குற்றச்சாட்டுக்களையும் ஏனைய மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி அவரை அரசியல் ரீதியாக முடமாக்குவதற்கு முனையவில்லை. தேர்தலில் தோல்வியடைந் தாலும்கூட, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். அதற்கான அடித்தள அரசியல் செயற்பாடுகளை அவர் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றார். நல்லாட்சிக்க…

  15. ஆட்டம் காணும் தேசிய அரசாங்கம் மக்­களின் பல்­வேறு வகை­யான அர்ப்­ப­ணிப்­புக்கள், தியா­கங்­க­ளுக்கு மத்­தியில் உரு­வாக்­கப்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான தேசிய நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது இன்று பல்­வேறு சவால்­க­ளுக்கும் நெருக்­க­டி­க­ளுக்கும், சிக்­கல்­க­ளுக்கும் முகம் கொடுத்­துள்­ளது. அதா­வது எந்த நேரத்தில் நல்­லாட்சி அர­சாங்கம் உடையும் அல்­லது எந்த நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து பிரிந்து செல்லும் என்ற கேள்­விகள் தொடர்ச்­சி­யாக அனைவர் மத்­தி­யிலும் எழுந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. அந்­த­ள­விற்கு ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் ஐக்­கிய தேசி­யக்­க…

  16. வடக்குப் பெண்களும் சமூக மாற்றமும் Ahilan Kadirgamar / சிவப்புக் குறிப்புகள் போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் தினசரி வாழ்க்கை, பிரச்சினைகளிலிருந்து பிரச்சினைகளுக்கு, கடனிலிருந்து துஷ்பிரயோகத்திலிருந்து வன்முறைக்கு என, நகர்ந்து செல்கிறது. இந்த நெருக்கடிகளின் பாதிப்புகளை, பெண்களே எதிர்கொள்கின்றனர்: அவர்களது உழைப்பும் நேரமும் சுரண்டப்படுகிறது; அவர்களுடைய சொற்ப உழைப்பும், கடன் சுறாக்களால் உறிஞ்சப்படுகின்றன; அவர்களுடைய குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியவர்களாக அவர்கள் இருக்கின்றனர்; அவர்களுடைய உடல்கள், கட்டுப்பாட்டுக்குள்ளேயே காணப்படுகின்றன. இருந்த போதிலும், தமிழ்த் தலைமைத்துவமும் அ…

  17. வடக்கில் தேர்தல்களும் தமிழ் அரசியலும் சிகப்பு குறிப்புகள் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், இலங்கை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தல்கள் காரணமாக, ஆளும் தேசிய அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டு, அரசாங்கம் பிளவடைவது, கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ராஜபக்‌ஷவின் பரப்பியல்வாதத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய எழுச்சியைத் தொடர்ந்து, தேசியவாத அரசியல், மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஆளும் அரசாங்கத்தின் பொருளாதாரத் தோல்விகள் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்க, அரசமைப்பு ரீதியான அரசியல் தீர்வுக்காக 2015இல் கிடைக்கப்பெற்ற பொன்னான வாய்ப்பு, கிட்டத்தட்ட முழுவதுமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. …

  18. ஊர­றிந்த வழக்கும் உலகப் பஞ்­சா­யத்தும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்­லிம்கள் பற்­றிய தாருஸ்மான் அறிக்கை ஒரு ஒடுக்­கப்­பட்ட இனக்­கு­ழுமம். அதன் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட அட்­டூ­ழி­யங்கள், அவை பற்­றிய அறிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கி­றது. மியன்­மாரைச் சேர்ந்த ரோஹிங்கிய முஸ்­லிம்கள். ரக்கைன் மாநி­லத்தில் அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மைகள். இவை பற்றி ஐக்­கிய நாடுகள் சபையின் குழு­வொன்று விசா­ரித்­தது. இந்­தோ­னே­ஷி­யாவின் முன்னாள் சட்­டமா அதிபர் இலங்கை மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மா­னவர். மர்­சுக்கி தாருஸ்மான் தலை­மை­யி­லான குழு­வினர் வரைந்த அறிக்கை. சுருக்­க­மாக சொன்னால், இன்­னொரு தாருஸ்மான் அறிக்கை. கடந்த ஆகஸ்ட் ம…

  19. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றிய எனது நெடுங்கவிதையின் கரு இதுதான். PLOT OF MY LONG POEM UNDER WRITING -TAMILS OF THE WORLD NEVER FORGET THE BACKGROUND OF THE GENOCIDE 2019 . . Home Minister P Chidambaram said the Sri Lankan government's statement meant that it is end and cessation of hostilities which Indian interlocutors had been urging. - India Today 2009-04-27 , பொய்யெனத் தெரிந்தும் யுத்தநிறுத்தம் என உள்நோக்கத்துடன் அமைச்சர் கிண்டலடித்ததை நம்பி மறைவிடங்களால் வெளிவந்த பல்லாயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொளிக்கபட்ட நிகழ்வை நந்திக் கலம்பகம்போன்ற ஒரு குறுங்காவியமாக எழுதி வருகிறேன். (https://www.indiatoday.in/…/karunanidhi-ends-fast-after-sl-…) …

    • 0 replies
    • 506 views
  20. உத்தேச அரசியல் யாப்பும் வடகிழக்கு இணைப்பும்" வளவாளராக-சட்ட முதுமானி YLS. ஹமீட்

    • 0 replies
    • 709 views
  21. சீனாவின் பட்டுப்பாதை ஆராய்ச்சியும் இலங்கையும் உலக பொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர். ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா. பொருளாதாரம் ,அரசியல்,தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை அது மீள்பரிசீலனை செய்யப்போகின்றதோ தெரியவில்லை. எனினும் பண்டைய காலத்தில் வணிகத்தேவைகளுக்காக கடல் மற்றும் தரைப்போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதை தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்திருக்கிறது சீனா. இது தொடர்பான தனது ஆ…

    • 0 replies
    • 1.6k views
  22. THEORETICAL BOTTLENECK FACED BY THE MUSLIMS. - - V,I,S,Jayapalan Poet முஸ்லிம்கள் எதிர்நோக்கும் முக்கிய கோட்பாட்டு சிக்கல். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் . இது முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலம். முஸ்லிம்களின் நெருக்கடிகளில் கால் பகுதி தற்காலிகமான சலசலப்புகள். இன்னொரு கால் பகுதி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்தது. மிகுதி முஸ்லிம்களின் ஒருமித்த தேசிய நிலைபாட்டை அசாத்தியமாக்குவதில் ஊர்வாதத்த்தின் தொடர் வெற்றிகள் எனலாம். . . சலசப்புகளை புறக்கணிப்பதும் சலசலப்பின் பின்னே பாதகமாக நகர்த்தபடுகிற அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி செயல்படுவதும் முக்கியமானதாகும். ஆனால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் வரலாற்று சிக்கல் முஸ்லிம்களின் தேசிய நலன்களையும் தமிழ் முஸ்லிம்…

    • 0 replies
    • 474 views
  23. [size=6]முஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை[/size] [size=3][size=4]Innocence of Muslims என்ற தலைப்பில் ஒரு படத்தின் டிரெய்லர் காட்சி யூட்யூபில் வந்தது. அதனால் உலகத்தில் எங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்துள்ளனர். லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின்மீது மக்கள் தாக்குதல் தொடுத்து அமெரிக்கத் தூதரைக் கொன்றுவிட்டனர். நேற்று இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் பெரும் மக்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. நிலைமைக் கட்டுக்குள் வைக்க, ராணுவம் அழைக்கப்படவேண்டியிருந்தது. [/size] [size=4]சென்னை அண்ணா சாலையில் அமெரிக்கத் தூதரகம் உள்ள பகுதியில் தினமும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையின் காவல்துறை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். தென் மாவட்டங்களில் அடக்குமுறையை வெற்றிகரமா…

  24. தமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்? நிலாந்தன் கடந்த வாரம் யாழ் மறைக் கல்வி நிலையத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மதகுருமார்களும் பங்கு பற்றியிருந்தார்கள். நிலைமாறு கால கட்ட நீதியை தமிழ் நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்வதும் இது விடயத்தில் சிவில் இயக்கங்களை எப்படிப் பங்காளியாக்கலாம் என்பது பற்றிச் சிந்திப்பதற்குமான இச்சந்திப்பில் ஒரு கிறிஸ்தவ மதகுரு பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்தார்.... 'நீங்கள் பெரிய பெரிய சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள், பெரிய பெரிய அரசியல் கோட்பாடுகளைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆன…

  25. இலங்கை இனப்பிரச்சினை முதலும் கடைசியுமாக ஒரு பிராந்தியப் பிரச்சினைதான். இரண்டாவதாகத் தான் அது ஓர் அனைத்துலகப் பிரச்சினை. சுமாராக கால் நூற்றாண்டுக்கு முன்பு இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாகியபோது அது ஒரு பிராந்தியப் பிரச்சினையாகவே காணப்பட்டது. அதன் பின் நிகழ்ந்த திருப்பகரமான மாற்றங்களால் அது அதன் தர்க்க பூர்வ விளைவாக ஓர் அனைத்துலகப் பிரச்சினையாக மாறியது. அதில் முதலாவது திருப்பம், ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை. அதன் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதோடு அதன் உயர் தலைவர்கள் இருவரும் இந்தியாவில் சட்டப்படி தேடப்படும் குற்றவாளிகளாகினர். எனவே, ரஜீவ் வழக்கிலிருந்து தொடங்கி புலிகள் இயக்கத்திற்கும் புதுடில்லிக்கும் இடையில் ஒரு சட்டப்பூட்டு உரு…

    • 0 replies
    • 583 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.