அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
கிழக்கு மாகாண சபை விவகாரம்: முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை நியாயமானதா? யதீந்திரா கிழக்கு மகாண சபை விவகாரம், ஆட்சிமாற்றம் தமிழ் மக்களின் வாழ்வில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இலங்கையின் இன முரண்பாடு என்பது, பொதுவாக சிங்கள - தமிழ் முரண்பாடாகவே விவாதிக்கப்பட்டும், பேசப்பட்டும் வருவது அனைவரும் அறிந்த ஒன்றே! ஆனால், கிழக்கு மாகாணசபை விவகாரத்தில் அது வேறுவிதமானதொரு சித்திரத்தை காண்பிக்கிறது. ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் சூழலில், கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதான எதிரி முஸ்லிம்களா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது. கிழக்கு மாகாணத்திலுள்ள மாவட்டங்களான மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள்…
-
- 0 replies
- 492 views
-
-
கிழக்கு மாகாண சபையில் ஆதரவு தேடும் படலம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-10#page-10
-
- 0 replies
- 418 views
-
-
கிழக்கு மாகாண மக்கள் விழித்தெழும் நேரம் இது’-மட்டு.நகரான் October 25, 2020 Share 53 Views தமிழ் தேசிய போராட்டத்தில் இழப்புகள் என்பது எண்ணிலடங்காது. கடந்த 35வருட காலத்தில் நாங்கள் பெற்றுக்கொண்டதைவிட இழந்தது அதிகம். வடகிழக்கு இந்த இழப்புகளில் மீள்வதற்கான வழிவகைகள் இன்றி இன்றும் தடுமாறி வருவதை நாங்கள் உணர முடிகின்றது. இந்த இழப்புகளில் அதிகமான இழப்புகளை கிழக்கு மாகாணம் எதிர்கொண்டிருந்தது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், முஸ்லிம்கள், சிங்களவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இன ஒடுக்குமுறையிலும் தமிழர்கள் பல இழப்புகளை எதிர்கொண்டனர். …
-
- 0 replies
- 649 views
-
-
கிழக்கு மாகாணத் தேர்தலை நோக்கிய சம்பந்தனின் நகர்வு இணைந்த வடக்கு, கிழக்கில் படித்த, பக்குவமான முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக, இரா.சம்பந்தன் மீண்டும் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மன்னாரில் இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவது தொடர்பில் மூத்த அரசியல் தலைவராக சம்பந்தன், கடந்த காலங்களிலும் அதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். குறிப்பாக, கடந்த (2012) கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர், எந்த…
-
- 0 replies
- 454 views
-
-
கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும் – மட்டு.நகரான் 92 Views தமிழர்களின் ஜனநாயக ரீதியான போராட்டம் இன்று சர்வதேச ரீதியான அங்கீகாரத்தினைப் பெற்றுவருகின்றது. ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது தமிழ் மக்களுக்கு சாதகம், பாதகம் என்பதைவிட சர்வதேச ரீதியில் தமிழர்களின் ஜனநாயக ரீதியான கோரிக்கைகளுக்கு வலுவான ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வடகிழக்கு இணைந்த தாயகத்தின் கோட்பாட்டை தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து பலமான முறையில் வெளிப்படுத்தி வந்ததன் விளைவே, இன்று சர்வதேசம் தமிழ் மக்களுக்கான சமிக்ஞையை காட்டியுள்ளது. ஆனால் வடகிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றும…
-
- 5 replies
- 830 views
-
-
கிழக்கு மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போதல் அல்ல – நிலாந்தன் August 23, 2020 “மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை நடக்கப் போவது தேர்தல் அல்ல யாழ் மேலாதிக்கத்திற்கும் கிழக்கின் எழுச்சிக்குமான பலப்பரீட்சை” இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியவர் எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம். கிழக்கில் பிள்ளையானின் ஆலோசகர் அல்லது பிள்ளையானுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் ஒருவர். பிரான்சுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தாய் நிலத்தின் அரசியலில் அதிகமாக ஈடுபடும் ஒருவர். தேர்தலுக்கு முதல் நாள் மேற்படி குறிப்பை முகநூலில் எழுதினார். இங்கு அவர் யாழ் மேலாதிக்கம் என்று கருதுவது எதனை?கூட்டமைப்பையா? அல்லது மாற்று அணியையா? அல்லது ஒட்டுமொத்த தமிழ் தேசியவாதத்தையா?…
-
- 14 replies
- 2k views
-
-
கிழக்கு மைய அரசியல் வாதமும் அதன் பின்னணிகளும்? - யதீந்திரா அண்மையில் கிழக்கு-மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போவதல்ல என்னும் தலைப்பின் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆலோசகராக அடையாளம் காணப்படும் ஒருவர் அதற்கு எதிர்வினையாற்றிருந்தார். மீண்டும் அதற்கொரு பதில் எதிர்வினையாற்றும் கட்டுரையும் வெளியாகியிருந்தது. உண்மையில் இப்படியொரு கட்டுரை எழுதுவதற்கான தூண்டுதலை மேற்படி உரையாடல்கள்தான் ஏற்படுத்தியிருந்தன. அண்மையில் என்னுடன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருந்த ஒரு மட்டக்களப்பு நண்பர் – இவ்வாறு தெரிவித்தார். அதாவது, மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் சில முகநூல் பதிவுகளை பார்க்கும் போது, மிகவும் அர…
-
- 0 replies
- 458 views
-
-
கிழக்கு விவகாரம்: நேர்மையான ஐக்கியத்திற்கு தமிழ்த் தரப்பு தயார் - முஸ்லிம் தரப்பு தயாரா? முத்துக்குமார் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கு வழிகளினால் பெற்றிருக்கின்றது. புதிய முதலமைச்சராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹாவிஸ் நஸீர் அகமட் பதவி ஏற்றுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதனால் அம்மாவட்டத்திற்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. அம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெமீல் அதற்காக முயற்சி செய்தார். அது பலனளிக்கவில்லை. அவர் சாய்ந்தமருதில் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார். கட்சி நீக்க அறிவிப்பை தலைமை செய்தவுடன் அவர் அடங்கிவிட்டார். முஸ்லிம்களின் அரசியல் மையம் கிழக்கு ம…
-
- 0 replies
- 373 views
-
-
கிழக்கு வெளுக்குமா..? July 20, 2020 இலங்கையில் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்ற ஒரு கருத்து தமிழர்களிடையே இருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் கலைஞருமான மு.கருணாநிதி யும் இதனையே சொல்லி தனது பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள காரணம் தேடிக்கொண்டார். ஏன் உலகெங்கும் வாழும் தமிழிரிடையே கூட இந்த ஒற்றுமை இல்லை என்ற ஒரு கருத்து உண்டு. உலகில் எந்தவொரு இனமும் எல்லோரும் எதிர்பார்க்கும் இந்த ஒற்றுமையை அடையவில்லை என்பது ஒருபுறமிருக்க, இலங்கையில் தமிழர்களிடையே ஒற்றுமையை அரசியலில் மாத்திரம் எதிர்பார்ப்போர், மொழியைப் போல ஏனைய கலை, கலாசார, பண்பாட்டு இலக்கிய தளங்களில் ஒற்றுமையாக இணைந்து செயல்படுகின்றனரா அல்லது அதற்கான முயற்சிகளை எடுக்கின்றார்களா எனும் கேள்வியை முன்வை…
-
- 0 replies
- 369 views
-
-
கிழக்கு: அரசியலை தூக்கி எறிந்துவிட்டு... சீனாவால் அமைக்கப்பட்டுவரும் கொழும்புத் துறைமுக நகரத்தையும் சேர்த்த கொழும்பின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது. நில அளவையாளர் நாயகம் பி.எம்.பி. உதயகாந்த இதை வெளியிட்டு வைத்ததுடன், இலங்கையின் புதிய வரைபடத்திலும் பல மாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், கிழக்கின் அரசியல் வரைபடத்தில் மாற்றங்களை யார் கொண்டு வருவது என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும். அரசியலை வெறுக்காதவர்கள், அடி மட்டம் முதல் உயர்நிலை வரையில் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் அரசியலைத் தூக்கி எறிந்து விட்டு, எதைத்தான் செய்துவிட முடியும். ‘அரசியலும் மண்ணாங்கட்டியும்’ என்று இப்போது இருந்…
-
- 0 replies
- 714 views
-
-
கிழக்கு: மேய்ச்சல் தரை அத்துமீறல் -இல. அதிரன் அரசியல் என்பது, நடுநிலைமையும் பொதுப்படையும் கொண்டதாக அமையப்பெற்றிருக்க வேண்டும். அது ஒருதலைப்பட்சமாக, பக்கச்சார்பாக முடிவுகள் எடுக்கப்படுகின்றபோது, திட்டங்கள் கொண்டு வரப்படும் பொழுது, முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இதற்கு நல்லதோர் உதாரணமே கிழக்கின் மேய்ச்சல்தரை அத்துமீறல்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் தொடரும் பண்ணையாளர்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுப்புக்குரிய முயற்சிகளும், கவனயீர்ப்பு போராட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்க அத்துமீறல்களும் தொடர்…
-
- 0 replies
- 327 views
-
-
கிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல .. கிழக்குக்கான தனித்துவமான அரசியல் தேவைப்பாட்டை முன்னிறுத்துகின்றபோது அது தமிழ்த் தேசியத் துரோகமாகவும், பிரதேசவாதமாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமாகவும் திரிவுபடுத்தப்பட்டு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கிழக்குக்கான அரசியலை தமிழ்த் தேசியவாதத்தின் ஆரோக்கியமான அம்சமாகப் பார்த்து தமிழ்த் தேசியத்தினை சுய விமர்சனம் செய்துகொண்டு முன்கொண்டுசெல்ல முடியாதவர்களாக தமிழ்த் தேசியவாதிகள் இருப்பதோடு கிழக்குக்கான அரசியலை முன்வைப்பவர்கள் தொடர்பாக மிகமோசமான விமர்சனங்களை சமூகப் பொறுப்பற்ற விதத்தில் முன்வைப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான ஒரு விமர்சனத்துக்கான எதிர்வினையாகவே இப்பத்தி அமைகின்றது. …
-
- 0 replies
- 569 views
-
-
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எதிர்த்தரப்பா, கைகோர்ப்பா? Editorial / 2018 ஒக்டோபர் 25 வியாழக்கிழமை, மு.ப. 01:22 -அதிரன் புதிய தேர்தல் முறையில், பெரும்பான்மை பெறும் கட்சிகூட, ஆட்சியமைப்பதற்குக் கையேந்தும் சந்தர்ப்பங்கள் தான் அதிகம். கிழக்கில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில், எத்தனை கட்சிகள் போட்டியிடும், யார் யாரிடம் கையேந்துவார்கள் என்பது சுவாரசியமான விடயப்பரப்பு. கிழக்கைப் பொறுத்தவரையில், புதிதாக உருவான கட்சிகளாகட்டும், இடைக்காலத்தில், ஆரம்ப காலத்தில் இருந்து செயற்படும் கட்சிகளாகட்டும், ஒரு சிலவற்றைத் தவிர, எதற்குமே முழுமையான ஆதரவு (வாக்குத்தளம்) இருப்பதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈ.பி.டி.பி,…
-
- 0 replies
- 771 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்மீது அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா? பல்கலைக்கழகம் என்பது அதன் பெயருக்குப் பொருத்தமானதாகவே இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. கற்கைநெறிகளைச் சுதந்திரமாக அனுபவித்துக் கற்கின்ற ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனம் என்பதும் இதன் ஒரு கருத்தாகும். ஆனால், பகடிவதை என்பது முக்கியமானதொன்றாகப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் மனப்பிறழ்வுகள், அனர்த்தங்கள், பின்னடைவுகள் மிகவும் மோசமானது. அதனால்தான், தற்போது பல்கலைக்கழகங்களில் பகடிவதை தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதில் ஈடுபடுபவர்களைப் பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கிவிடுவதுடன், அவர்கள் எந்தவொரு ப…
-
- 0 replies
- 426 views
-
-
கிழக்குமாகாண மக்கள் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டார்கள் - சீவகன் பூபாலரட்ணம்
-
- 0 replies
- 586 views
-
-
கிழக்குமைய அரசியல் – சில அவதானங்கள் (1) September 29, 2020 சுவிசிலிருந்து சண் தவராஜா கிழக்கிற்கான தனித்துவ அரசியல் தொடர்பாக அண்மைக் காலமாகப் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னான சூழ்நிலைகள் இத்தகைய பேச்சுக்களைத் தீவிரப் படுத்தியிருக்கின்றன. அரசியல்வாதிகளையும் தாண்டி, சமூகத்தில் அபிப்பிராயங்களை உருவாக்கக் கூடிய நிலையில் உள்ள அறிவுஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் இத்தகைய கருத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றமையைக் காண முடிகின்றது. அரசியலிலும் பொதுத் தளத்திலும் கருத்துக்களை வெளிப்படுத்தவும், தாம் சரியென நினைக்கும் கருத்தை ஆதரிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேபோன்று, பொதுத் தளத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்க…
-
- 4 replies
- 668 views
-
-
கிழக்கே ஓர் அஸ்தமனம்.. 1961இல் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை மாவட்டமானது உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அங்கே தமது பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்குத் தமிழர் ஒவ்வொருமுறையுமே படாதபாடுபட வேண்டியிருக்கிறது. அறுபது வருடங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டமானது உருவாக்கப்பட்டபோது அங்கு ஏறக்குறைய ஒரு இலட்சம் முஸ்லிம் மக்களும் அறுபதினாயிரம் சிங்கள மக்களும் ஐம்பதினாயிரம் தமிழ் மக்களும் இருந்தனரெனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதியாக 2012இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை புள்ளிவிவரப்படி இங்கே முஸ்லிம்களின் தொகை மூன்றுமடங்கு ஆகியுள்ளதுடன் சிங்களவர்களின் தொகை நான்கு மடங்குக்கும் மேலாக அதிகரித்திருக்கும் அதேவேளை, தமிழர்களின் தொகையானத…
-
- 1 reply
- 525 views
-
-
கிழக்கை மையப்படுத்தி நிலத்தை அபகரிப்பது ஏன்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஆவணப்படம்:- 18 பெப்ரவரி 2014 இலங்கைத் தமிழர்களுக்கு புலிகளின் காலத்தில் கிடைக்காத வாழ்வு பரிசளிக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில்தான் நாளும் பொழுதும் தமிழர் தாயகம் அபகரிக்கப்படுகிறது. ஈழத்து மக்கள் இழந்த உரிமைகளுக்காக போராடினார்கள். இப்பொழுது போராட்டம் நடத்தியமைக்காக எஞ்சிய உரிமைகளும் அபகரிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறோம். நில அபகரிப்பே இன்றைய ஈழத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக எழுந்துள்ளது. இலங்கை சுகந்திரம் அடைவதற்கு முன்பாகவே திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் தொடங்கிவிட்டன. தமிழ்…
-
- 1 reply
- 826 views
-
-
கிழக்கைக் கையாள்வதில் தமிழ் அரசியல் தலைமை தோல்வியடைந்துள்ளதா? - முத்துக்குமார் அரசியல் தீர்வு தொடர்பான கருத்தறியும் குழுவின் சந்திப்புக்களைத் தொடர்ந்து, தமிழ்-முஸ்லிம் உறவு நிலையும், அரசியல் செயற்பாடுகளும் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற வாதங்கள் மீண்டும் களத்திற்கு வந்துள்ளன. 'தமிழ் பேசும் மக்கள்' என்ற தமிழ் அரசியலின் மரபு ரீதியிலான எண்ணக்கருவை வளர்க்க வேண்டுமா? அல்லது முஸ்லிம் மக்கள் அரசியல் ரீதியாக கையாள்கின்ற 'தமிழர்களும், முஸ்லிம்களும்' என்ற எண்ணக்கருவை வளர்க்க வேண்டுமா? என்பதே அந்த விவாதத்தின் கருப்பொருள். இப்பத்தியாளர் கடந்தமாதம் அனுபவ ரீதியாக கண்டு கொண்ட விடயங்களை முன்வைத்து தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கிறார். இக்கருத்துக்கள் முடிந்த முடிவு…
-
- 0 replies
- 547 views
-
-
கிழட்டுச் சிங்கத்தின் ஈனமான கர்ஜனை! சிங்கக் கூட்டத்திலிருந்து விரட்டப்பட்ட கிழட்டு ஆண் சிங்கமொன்றை முன்னிறுத்திக் கொண்டு, சிறுநரிகளும் ஓநாய்களும், புதிய பயணமொன்றை மேற்கொள்ள முயல்கின்றன. அந்தக் கிழட்டுச் சிங்கத்தின் தொடைகளும் தாடைகளும், பெரும் வேட்டையை நடத்தும் வலுவை இழந்துவிட்டன. இப்போது, அதனால் மான்களின் வேகத்துக்கு ஓட முடியாது. ஏதாவது, மீந்துபோன இரைகள் கிடைக்குமா என்று காத்திருக்க வேண்டும். நிலைமை அப்படியிருக்க, கிழட்டுச் சிங்கம் பெரும் வேட்டையை நடத்தும், அதனூடு தாங்களும் வயிற்றை நிறைத்துக் கொள்ளலாம் என்று சிறுநரிகளும் ஓநாய்களும் கனவு காண்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, கண்டியிலிருந்து கொழும்பு வ…
-
- 0 replies
- 561 views
-
-
கிழமைக்கு ஒரு பிரச்சினை: உள்நோக்கம் என்ன? -நிலாந்தன் January 31, 2021 இம்மாதம் 8ஆம் திகதி யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டது. அதற்கடுத்த கிழமை குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் எதிர்த்தார்கள். அதற்கடுத்த கிழமை அதாவது கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நிலாவரை கிணறுள்ள பகுதியில் தொல்லியல் திணைக்களம் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இடையில் தீவுப்பகுதியில் நில அளவைத் திணைக்களம் படைத்தரப்புக்கு நிலங்களை அளக்க முற்பட்டபோது அதுவும் பிரச்சினையாகியது. இவையாவும் அண்மைக்கால பிரச்சினைகள் குறிப்பாக ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் நடந்திருக்கும் பிரச்சினைகளை தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது…
-
- 0 replies
- 615 views
-
-
கிழிந்த கொடிகள் மட்டும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன. வாய்ப்புகள் எந்தச் சூழலிலும் ஏற்படும். அவற்றைக் கையாள்வதன் மூலமாகவே வெற்றியும் தோல்வியும் அமைகின்றன. வாய்ப்புகளைக் கையாள்வதன் மூலமே ஒரு தலைமைத்துவத்தின் சிறப்பும் ஆளுமையும் புலப்படும். மேலும் ஒரு சிறப்பான தலைமை தனக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுமுண்டு. அல்லது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தன்னுடைய வெற்றியை அது உறுதி செய்து கொள்ளும். அதுவே வரலாற்றில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருக்கு அந்தத் தலைமை வழங்குகின்ற நன்றிக்கடனும் பங்களிப்புமாகும். அந்தத் தரப்பு மக்களுக்கு அந்தத் தலைமை அளிக்கின்ற கௌரவமுமாகும். மக்கள் எதற்காகத் தங்களுக்கான தலைமைகளை உருவாக்குகிறார்கள்? தங்களுடைய நெர…
-
- 0 replies
- 637 views
-
-
கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள் உண்மை வலியது; அதலபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும், உண்மை ஒருநாள் வௌிவந்தே தீரும். உண்மைகள் வெளியாகிற போது, பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை, வெளிக்கொணரப்பட்ட உண்மை உருவாக்கிவிடும். இது, உண்மையின் வலிமையையும் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் எமக்குப் புரிய வைக்கின்றன. பெரும்பாலும், நீண்ட முயற்சியின் பின்னர் வெளிவரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள, ‘பொதுப்புத்தி’ மனநிலை தயாராக இருப்பதில்லை. “இப்படி நடந்திருக்காது” என்ற ஆறுதலுடன், அப்பால் கடந்து போகிறோம். உண்மைகள் கொடியன; அவை, எமது நம்பிக்கைகளில் தீ வைப்பன; எதிர்பார்ப்புகளில் கல்லெறிவன. ‘கீனி மீனி’ என்ற தலைப்ப…
-
- 6 replies
- 1.5k views
-
-
புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஒரு செயற்பாட்டாளர் உரையாடினார். 'வடமாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் அடிப்படையில் யோசித்தால் தமிழ் பகுதிகளில் படைமய நீக்கம் செய்வதே இப் பிரச்சினைகளுக்கெல்லாம் இறுதித்தீர்வாக அமைய முடியும் என்று தெரிகின்றது. அதே சமயம் நீங்கள் உங்களுடைய கட்டுரையில் தமிழ் மக்கள் தங்கள் மத்தியில் கீழிருந்து மேல் நோக்கிக் கட்டி எழுப்பப்படும் உள்ளூர் தலைமைத்துவங்களைப் ப…
-
- 0 replies
- 205 views
-
-
கீழைத்தேய நவீன புரட்சியின் அடையாளமாக இலங்கை சிவலிங்கம் சிவகுமாரன் ஜுலை மாதமானது இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மறக்க முடியாத பல வரலாற்று வடுக்களை விட்டுச்சென்ற மாதமாகும். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆடிக் கலவரங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட அதே வேளை, கோடிக்கணக்கான அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. பல வீடுகள் வர்த்தக ஸ்தாபனங்கள் எரியூட்டப்பட்டு சாம்பராகின. பல தமிழர்கள் தமது மண்ணை விட்டு தமிழகத்துக்கு நிரந்தரமாக சென்று விட்டனர். ஆனால் இதற்குக் காரணமாக இருந்த பேரினவாத சிந்தனைகள் கொண்ட அரசியல் தலைவர்களுக்கும் சிங்கள வன்முறையாளர்களுக்கும் இந்த ஜுலை மாதம் பதிலடிகளை கொடுத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. …
-
- 0 replies
- 607 views
-