அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9210 topics in this forum
-
Published By: Rajeeban 04 Mar, 2025 | 12:01 PM விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ள வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர்ஜெனரல் பொனிபஸ் பெரேரா விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதள உலக குழுக்களின் கரங்களை சென்றடைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார் டெய்லிமிரருக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் கேள்வி- யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையை நாங்கள் கருத்தில் கொள்வோம்இயுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என நினைத்தோம் எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. தற்போது சிறிய ரக ஆயுதங்களை பலர் பயன்படுத்துவது போல உள…
-
-
- 2 replies
- 310 views
- 1 follower
-
-
கட்டப் பஞ்சாயத்து நடத்திய சர்வதேச ரவுடி டிரம்ப்! சாவித்திரி கண்ணன் வரலாற்றில் இப்படி ஒரு முன் உதாரணமே கிடையாது – ஒரு நாட்டு அதிபர் அவமானப்பட்டதற்கு! அராஜகம், அடாவடித்தனம், திமிர்த்தனம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக டிரம்ப் இந்த உரையாடலில் வெளிப்பட்டார். ‘நம்பியவர்களை நட்டாற்றில் விடுவது, தன்னலம் மட்டுமே பிரதானம்’ என்பதே டிரம்பின் தாரக மந்திரமோ..! அழைக்கப்பட்ட நாடு, ‘வெறும் மூன்றரை கோடி மக்களை கொண்ட சுண்டைக்கா நாடு தானே’ என்ற எண்ணமா? ‘நம்ம உதவியைக் கொண்டு தானே இத்தனை நாள் தாக்கு பிடித்தார்கள்.. எனவே, ஏன் நமக்கு கூழைக் கும்பிடு போட வேண்டியது தானே’ என்ற மனோபாவமா? ஆனால், யாரும் எதிர்பாரா வண்ணம் உலகறிய அனைத்து நாடுகளும் பார்க்கும் வண்ணம் நேரலை செய்யும் தொலைகாட்சி சேனல்களை …
-
- 0 replies
- 266 views
-
-
எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைகளால் 35 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் பிழைத்தவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து சர்வதேச மனித உரிமை சட்டத்தரணி தலைமையிலான அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய அறிக்கை வடக்கில் வெளியிடப்பட்டுள்ளது. படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளைக் கண்டறிந்து, அவர்களை பொறுப்புக்கூறச் செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு இழப்பீடு வழங்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்வதாக தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் (ITJP) இன்றைய தினம் (மார்ச் 2) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. “இறந்த சடலங…
-
-
- 2 replies
- 409 views
-
-
டிரம்ப்பால் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்கள்… தவிப்பில் உலக நாடுகள்! 7 Mar 2025, 7:05 AM பாஸ்கர் செல்வராஜ் கடந்த வாரம் உலகம் கற்பனை செய்து பார்த்திராத இரு சம்பவங்களைக் கண்டது. ஒன்று ரஷ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐநா தீர்மானத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து எதிர்த்தது. இரண்டாவது உலக ஊடகங்களின் முன்னால் உக்ரைன் அதிபரும் அமெரிக்க அதிபரும் போரையும் அமைதியையும் மையப்படுத்தி கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டது. உக்ரைன் போரை தலைமையேற்று நடத்திய அமெரிக்கா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்ததும் அதன் பின்னால் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் ஐநாவில் ரஷ்ய எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதும் யாரும் எண்ணிப் பார்த்திராத ஒன்று. அதுமட்டுமல்ல வார்த்தைப் போரில் ஈட…
-
- 0 replies
- 356 views
-
-
பட்ஜெட் விவாதமும் பாதாள உலக கொலைகளும் March 5, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது அதன் குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரையான விவாதங்களில் பெரும்பாலான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டின் பொருளாதாரத்தை விடுத்து பட்ஜெட்டின் அரசியலையே பேசினார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் பொருளாதாரத்தை கையாளும் ஜனாதிபதி திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுனவ…
-
- 0 replies
- 247 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் ஊடகங்கள் முன்னிலையில் சூடான விவாதம் நடத்தினார் அமெரிக்க அதிபர் டிரம்ப். கட்டுரை தகவல் எழுதியவர், ரஜ்னீஷ் குமார் பதவி, பிபிசி நிருபர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்கி மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகுந்த கோபத்தில் இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஸெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் சரியாக நடத்தினார் என்று ரூபியோ சிபிஎஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார். அதிபர் டிரம்ப் மட்டுமல்ல, பைடனும் ஸெலன்ஸ்கி மீது வருத்தமடைந்ததாகவும், மக்கள் அதை மறந்துவிடக் கூடாது என்றும் ரூபியோ கூறினார். அக்டோபர் 2022 இல், அமெரிக்க செய்தி நிறுவனமான என்பி…
-
-
- 7 replies
- 469 views
- 1 follower
-
-
சமாதான தேவதையும் பிசாசுகளும்! sudumanal கடந்த வெள்ளியன்று (28.02.2025) அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களுக்கும் ட்றம் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவர்களுக்கும் இடையில் யாரும் எதிர்பாராத விதத்தில் விவாதம் முற்றியது. இது பேசப்படும் பொருளாக ஊடகங்களிலும் அரசியலாளர்களிடமும் புத்திஜீவிகளிடமும் மாறியிருந்தது. இது ஏதோ அந்த இடத்தில் தோன்றிய முரண்பாடாகத் தெரியவில்லை. இதற்கு முன்னராக மூடிய அறைக்குள் தொடங்கிய ஒன்றாகவே கருத இடமுண்டு. இராஜதந்திரங்கள் பலவும் சம்பிரதாயபூர்வமாக மக்கள் கண்களில் சாந்தமான ஜனநாயக அணுகுமுறை போலவும், நான்கு பக்க சுவர்களுக்குள் வல்லான் அழுத்தங்களினாலும் பயமுறுத்தல்களினாலும் நிறைவேற்றப்படுகிற அரங்க நிகழ்வுகளாகும். இது பல நாடுகளி…
-
- 1 reply
- 309 views
-
-
அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா? March 1, 2025 — கருணாகரன் — அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியில் சமூக, அரசியல் மட்டத்திலும் பொருளாதார வட்டாரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. “இது ஒரு மாறுதலான வரவு செலவுதிட்டம். மக்கள் நலன், தேசியப் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை முன்னிலைப்படுத்தியதாக இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறது அரசாங்கம். அரசாங்கத்தை ஆதரிப்போரின் கருத்தும் இதுவே. ஆனால், “இதில் எந்தப் புதுமையும் இல்லை. ஐ.எம். எவ்யையும் ரணில் விக்கிரமசிங்கவையும் கடந்து எந்தப் புதுமையையும் காணமுடியவில்லை. ஐ.எம்.எவ் – ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டு வடிவத்தின் இன்னொரு பிரதிமையே இந்த வரவு செலவுத் திட்டம்” என்கின்ற…
-
- 0 replies
- 248 views
-
-
புதிய கூட்டுக்கள் பழைய பகைமைகள் ? - நிலாந்தன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கித் தமிழ்க்கட்சிகள் புதிய ஒருங்கிணைப்புகளுக்குப் போகத் தொடங்கியுள்ளன. அதை வரவேற்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளில் முன்னெந்தத் தேர்தலையும்விட தென்னிலங்கைமையக் கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் எதிராக அணி திரள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு தேர்தல் இது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது பெருமளவுக்கு உள்ளூர் நிலைமைகளை; உள்ளூர் சாதி,சமய,வட்டார உணர்வுகளைப் பிரதிபலிப்பவை.உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களம். ஆனால் அவை உள்ளூர்த் தலைமைகள் மட்டுமல்ல. ஒரு தேசியவாத அரசியலுக்கான அடிக்கட்டுமாணம் என்ற விளக்கத்தோடு மக்கள்மட்டக் கட்டமைப்புகளை அங்கிருந்துதான் பலப்படுத்த வேண்டும். அதாவ…
-
- 0 replies
- 319 views
-
-
மாற்றமின்மையே மாறாதது ? நிலாந்தன். ஒரு புறம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கி புதிய ஒருங்கிணைப்புக் களுக்காக உழைக்கும் கட்சிகள், சுயேட்சைகள். இன்னொருபுறம் ஐநாவின் 58 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளிலும் ஐநாவின் மீதான கவனக்குவிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஐநாவை நோக்கிச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகளின் தொகையும் குறைந்து கொண்டு வருகிறது. இம்முறை ஐநா கூட்டத் தொடருக்கு இரண்டு முக்கிய புதிய பரிமாணங்கள் உண்டு. முதலாவது பரிமாணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தனக்குத் தமிழ் மக்களின் ஆணையும் இருப்பதாகக் கூறிக்கொள்கிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் மட்டும் இப்பொழுது தமிழ்த் தரப்பு அல்ல என்றும் கூறத் தொடங்கிவிட்டது. அவ்வாறு தமிழ…
-
- 0 replies
- 242 views
-
-
தேசிய மக்கள் சக்தியை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளால் சமாளிக்க முடியுமா? Sivarasa Karunakaran Photo, Anura Kumara Dissanayake fb official page தேசிய மக்கள் சக்தியின் அலையைக் கடந்து, வடக்குக் கிழக்கின் அரசியலைத் தமிழ்த் தரப்புகள் முன்னெடுப்பது எப்படி? இந்தச் சவாலும் நெருக்கடியும் தமிழ்த் தரப்புகளுக்கு மட்டுமல்ல, வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம் தரப்புகளுக்கும் உண்டு. ஏன் மலையகக் கட்சிகளும் இதை எதிர்கொள்ள வேண்டிய சவாலாக – நெருக்கடியாக – இந்தச் சூழல் உருவாகியுள்ளது. நேரடியாகச் சொன்னால், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது இந்தச் சூழல். மறுவளமாகப் பார்த்தால் பிராந்திய அரசியல் கேள்விக்குள்ளாகியுள்ளது. இலங்கையில் சமூகம்சார் பிராந…
-
- 1 reply
- 260 views
-
-
Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 09:56 AM டி.பி.எஸ்.ஜெயராஜ் போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ' கணேமுல்ல சஞ்சீவ ' என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் 5ஆம் இலக்க மாஜிஸ்திரேட் நீதிமாறத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைச் சந்தேகநபர் புத்தளம் பாலவி பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய முஹமட் அஸ்மான் ஷெரீப்தீன் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கொலைச் சந்தேகநபர் மகரகமவைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியூமங்க கந்தனாராச்சி என்று அறிவித்தார். கணேமுல்ல சஞ்சீவவின் வாழ்க்கை மீது ஊடகங்கள் குவித்திருக்கும் தீவிர கவனம் அவரின் கொ…
-
-
- 12 replies
- 743 views
- 1 follower
-
-
வடக்கில் சுற்றுலா விருத்தியில் அரசாங்கம் அக்கறை காட்டுமா? February 26, 2025 — கருணாகரன் — யுத்தத்தினால் அழிந்து சிதிலமடைந்திருக்கின்ற வடக்குப் பிரதேசங்களை அபிவிருத்தியினால் மேம்படுத்துவதும் அங்குள்ள மக்களை உளரீதியில் புதுநிலைப்படுத்துவதும் ஒன்றாக நடக்க வேண்டும். யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பிறகும் இவை சரியாக நடக்கவேயில்லை. 2013 – 2018 வரை ஐந்து ஆண்டுகள் வடக்கு மாகாணசபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் இருந்தது. அப்போதும் வடக்கின் அபிவிருத்தியைப் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் நிலையைப் பற்றியும் பொறுப்பானவர்கள், பொறுப்பாகச் சிந்திக்கவில்லை. இதனால்தான் இன்னும் இங்கே ஏகப்பட்ட பிரச்சினைகள். புதிய (NPP) அரசாங்கம் எல்லாவற்றிலும் மாற்றங்களையும் புதுமைகளையும்…
-
- 0 replies
- 231 views
-
-
யூ.எஸ். எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு ட்ரம்ப் விசிறிகளும் February 25, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் இறங்குவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்ற மறுகணமே அவர் பிறப்பித்த உத்தரவுகள் தொடக்கம் கடந்த ஒரு மாதகாலமாக அவரது நிருவாகத்தின் நடவடிக்கைகள் சர்வதேச கடப்பாடுகளில் இருந்து விலகுவதே அவரது வெளியுறவுக் கொள்கையின் தீர்க்கமான அம்சமாக இருக்கிறது என்பதை மீணடும் தெளிவாக நிரூபித்து நிற்கின்றன. உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றில் இருந…
-
- 0 replies
- 331 views
-
-
முன்னணியின் அழைப்பை நிராகரித்த தமிழரசுக் கட்சி- நிலாந்தன்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்புக்கு தமிழரசுக் கட்சி பதில் கூறியிருக்கிறது. அதன்படி ஒரு புதிய யாப்பை நோக்கித் தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கான அழைப்பை தமிழரசுக் கட்சி நிராகரித்து விட்டது என்று கூடச் சொல்லலாம். “உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம்” என்ற பதில் எதைக் குறிக்கிறது? இது அதற்குரிய நேரம் இல்லை என்றுதானே பொருள்? கட்சித் தலைமையின் நிலைப்பாடு இதுவென்றால் கட்சிக்குள் சிறீதரனின் நிலைப்பாடு என்ன? கஜேந்திரக்குமாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவரோடு தொடர்ச்சியாக சந்திப்புகளை மேற்கொண்டவர் அவர். கட்சித் தலைமையின்…
-
- 2 replies
- 361 views
-
-
சமாதானம் உருவாகுமா? sudumanal மாறிவரும் பூகோள அரசியல் THanks for image: Aljazeera தான் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரசியா போரை சமாதானம் மூலம் முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்றம்ப் தேர்தலுக்கு முன் கூறிவந்தார். அது அவளவு இலகுவில் முடியாமல் போனது. ஏன், இப்போதும் அது சாத்தியமற்றது என்பதிலிருந்து சாத்தியமானது என்ற எல்லைக்கள் வந்தபாடில்லை. அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என பலரும் நினைத்திருந்தார்கள். அது உண்மையில் நேற்றோவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என்ற வியாபகத்தைக் கொண்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாக ரசியா இருக்கிறது என அமெரிக்காவால் ஒருபோதும் பர்க்கப்படவில்லை. மாறாக ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத…
-
- 0 replies
- 254 views
-
-
தேர்தல் ஆண்டில் தையிட்டி விகாரை - நிலாந்தன் அரசியல் சமூகச் செயற்பாட்டாளரான செல்வின் அண்மையில் சொன்னார், பலாலியில் தரையிறங்கும் ஒரு விமானத்தின் பருந்துப் பார்வையில் முதலில் தெரியப் போவது தையிட்டி விகாரைதான். பகலில் சூரிய ஒளியிலும் இரவில் இருளின் பின்னணியில் மின்னொளியில் முழிப்பாகத் தெரியப்போவதும் விகாரையாகத்தான் இருக்கும்.எனவே பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கும் ஒரு விமானப் பயணிக்கு யாழ்ப்பாணத்தின் தரை தோற்றத்தில் முதலில் முழிப்பாகத் தெரியபோவது தையிட்டித் தாதுகோபமா ? தையிட்டியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாதகல் சம்பில் துறை ஏற்கனவே ஜம்புகோளப் பட்டினமாக பெயர் மாற்றப்பட்டு சிங்கள பவுத்த மயப்படுத்தப்பட்டு விட்டது.அங்கே ஒரு பெரிய விருந்தினர் விடுதி உண்டு. …
-
- 0 replies
- 242 views
-
-
Published By: RAJEEBAN 20 FEB, 2025 | 11:51 AM துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் அல்லது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டாலும் மூன்று நான்கு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர் அதன் பின்னர் அவர்கள் மீண்டும்குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் daily mirror இலங்கையில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் 2025ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காரணமாக 6 வயது சிறுமி 9 வயது சிறுவன் உட்பட 11 உயிர்கள் பலிகொல்லப்பட்டுள்ள நிலையில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அழுத்தத்தின் கீழ் அதிகாரிகள் உள்ளனர். ஆறுவயது சிறுமி, 9 வயது சிறுவன், பாதாள உலகத்தை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீ…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் நாட்டைப் பொறுப்பேற்றது முதல், தற்போது வரை முன்னெடுத்து வரும் அரசியல், வெளிவிடும் கருத்துக்கள், நடந்து கொள்ளும் முறைகள் எல்லாம் வேடிக்கையானதாகவும் விநோதமானதாகவும் வில்லங்கமானதாகவுமே காணப்படுவதனால் மக்கள் மத்தியில் அவர்களின் ‘திசைக்காட்டி’ வலுவிழக்கத் தொடங்கியுள்ளதுடன், மக்களின் விசனத்திற்கும் கிண்டலுக்கும் ‘அனுரகுமார சகோதரர்கள்’ ஆளாகி வருகின்றார்கள். ‘மாற்றம்’ என்ற கோஷத்தினால் மக்களைச் சூடாக்கி, மூளைச்சலவை செய்து, நாட்டையும் ஆட்சியையும் கைப்பற்றிய திசைக்காட்டியினர், இன்று செய்து வரும் அரசியல் உண்மையில் ‘மாற்றம்’ நிறைந்ததுதான். ஆனால், அது என்ன மாற்றம்?,எதில் மாற்றம்? எப்படிப்பட்ட …
-
-
- 1 reply
- 378 views
-
-
வடக்கிற்கு ஹீரோவான அநுர Sivarasa Karunakaran on February 21, 2025 Photo, @anuradisanayake உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி. குறிப்பாக வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களிலும் தன்னுடைய கொடியை ஏற்ற விரும்புகிறது. இந்த நோக்கத்தையும் சேர்த்தே கடந்த சில நாட்களுக்கு முன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கான தன்னுடைய பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வந்த அநுர, மிருசுவில், நெல்லியடி, வல்வெட்டித்துறை என்று பல இடங்களுக்கும் சென்றார். இதன்போது ஜனாதிபதி என்ற பெரிய பந்தா ஒன்றும் இல்லாமல் எளிமையாக (Simply யாக) பழகுவதைப்போலொரு தோற்றத்தைக் காட்டினார் அநுர. இதனால் அநுர செல்லுமிடமெங்கும் சனங்களும் திரண்ட…
-
- 0 replies
- 396 views
-
-
Columnsசிவதாசன் இலான் மஸ்கின் பழிவாங்கும் அரசியல்? சிவதாசன் இலான் மஸ்க் என்ற ஒட்டகம் இப்போது வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பிறக்காததால் ஜனாதிபதியாக வர முடியாதென்பதை உணர்ந்து பின் கதவால் உள்ளே வந்து தனது கனவுகளை நனவாக்க முயல்கிறார். இதில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களும் தெரிகிறது. ஏன் அவருக்கு இந்த பதவி வெறி? இலான் மஸ்கிற்கும் டொணால்ட் ட்றம்பிற்கும் ஒரு பொதுமையுண்டு. அது ஈவிரக்கமற்ற பழி வாங்கும் தன்மை. இவர்கள் இருவருமே இனத்துவேஷிகள். ஆனால் ட்றம்பின் இனத் துவேஷம் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் மீதான மோகமும், மரியாதையும் அவரை இயக்குகின்றன. வெள்ளை இனத்தவரைத் தவிர அவர் ஏனையோரை மதிப்பதில்லை. அவருடைய தந்தையா…
-
- 0 replies
- 500 views
-
-
தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும் February 16, 2025 — கருணாகரன் — தையிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் திஸ்ஸ ராஜமகா விகாரையை அகற்றக் கோரி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். தொடக்கத்தில் – இரண்டு ஆண்டுகளுக்கு முன் – கஜேந்திரகுமாருக்கு நெருக்கமான பத்து இருபது பேருடன், சிறிய வட்டத்திலிருந்த போராட்டம் இப்பொழுது ஈ.பி.டி.பியினர் உட்படப் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கின்ற அளவுக்குச் சற்றுப் பெரிய வட்டமொன்றாக விரிந்துள்ளது. ஆனாலும் இந்தப் போராட்டம் வெற்றியளிக்குமா? இது புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்குமா? இந்தப் போராட்டத்தைத் தேசிய மக்கள் சக்தி எப்படிக் கையாளப்போகிறது? வடக்கில் தே…
-
- 0 replies
- 467 views
-
-
விகாரை அரசியல் – நிலாந்தன்.“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம் என்பது சுத்தம் செய்வதை மட்டும் குறிக்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டமன்று. அதற்குப் பின்னால் ஒரு பெரிய நோக்கம் உள்ளது. நமது சூழல் மட்டுமல்ல. நமது உள்ளத்தில் உள்ள அழுக்குகள் முதல் ஒரு பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை அகற்றுவதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.” இவ்வாறு கூறியிருப்பவர் பிரதமர் ஹரினி. கடந்த ஒன்பதாம் திகதி,காலை, மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் இடம்பெற்ற “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “உள்ளத்தில் உள்ள அழுக்குகளையும் ஒரு பண்பாடான வாழ்…
-
- 0 replies
- 332 views
-
-
கிளீன் தையிட்டி - நிலாந்தன்கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான ஐநா அலுவலகம் ஓர் விருந்துபசாரத்தை ஒழுங்குபடுத்தியிருந்தது.இலங்கையில் ஐநாவின் பிரசன்னம் 70 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கின்றது. இந்த 70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக அந்த விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஐநாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உட்பட ஐநாவின் கட்டமைப்புகளுக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளும் அந்த அலுவலகங்களில் வேலை செய்யும் உள்ளூர் அலுவலர்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். மேலும் கட்சித் தலைவர்கள் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,குடிமக்கள்சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அரச அதிகாரிகள் என்று பலவகைப்பட்டவர்…
-
- 0 replies
- 322 views
-
-
இன அழிப்பின் குறியீடே தையிட்டி விகாரை- அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம்யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை இன அழிப்பின் குறியீடு என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்றையதினம்(15) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தையிட்டி விகாரை தொடர்பாக தமிழ் மக்களின் ஒன்றிணைந்த போராட்டம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று நடந்து முடிந்திருக்கின்றது. ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்குமிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சிங்கள மக்களை விகாரை வளவுக்குள் அனுமதித்த பொலிஸார் …
-
- 0 replies
- 275 views
-