அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கோட்டா பேணும் இராணுவ ஒழுங்கு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 08:58 ஒன்பதாவது நாடாளுமன்றத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய அக்கிராசன உரை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பல தரப்பினருக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் சிலவற்றை வழங்கியிருக்கின்றது. அதில், முதலாவது, இந்த ஆட்சியில் எந்த ராஜபக்ஷ தீர்மானங்களின் நாயகனாக இருப்பார் என்பது; இரண்டாவது, எதிர்க்கட்சிகளோ, சிறுபான்மைத் தரப்புகளோ எந்தவொரு தருணத்திலும், அரசாங்கத்தினதும் நிர்வாகத்தினதும் தீர்மா…
-
- 0 replies
- 736 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-08#page-14
-
- 0 replies
- 448 views
-
-
கூட்டமைப்பின் ‘கையறு’ நிலை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீது நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஜே.வி.பி ஏற்கெனவே அறிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுக் கூட்டு எதிரணியைச் சேர்ந்த 52 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தே வாக்களிப்பர் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை. அதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக…
-
- 0 replies
- 413 views
-
-
இராணுவத்தை காப்பாற்றுவதில் அக்கறை காட்டும் அரசாங்கம் குற்றச்சாட்டுகள் மற்றும் போர் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகள் விடயங்களில், சர்வதேச சமூகத்தின் ஆதரவில்லாமல், இலங்கைப் படைகள் தமது பெயரைக் காப்பாற்றிக் கொள்வது மிகவும் கடினமானது.” இந்தக் கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் கடந்த வாரம் கூறியிருந்தார். சபுகஸ்கந்தையில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். இப்போதெல்லாம், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறைசார்ந்த உயர்நிலைப் பிரமுகர்கள் படை அதிகாரிகளைய…
-
- 0 replies
- 377 views
-
-
-
வைரஸ் தொற்றுக்குள்ளும் ஓயாத வாட்கள் ? நிலாந்தன்! July 11, 2021 அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு இசையமைத்த பாடல்களின் தரத்துக்கு அது இல்லை. ஏன் இப்பொழுது உன்னதமான பாடல்களை எங்களால் உருவாக்க முடியவில்லை” என்று கேட்டேன். 1980களில் 90களில் நாடகங்களுக்கும் அரசியல் தேவைகளுக்கும் பாடல்களை உருவாக்கிய பலரும் இசையமைப்பாளர்களை உறங்க விடுவதில்லை. அவர்கள் உருவாக்கித்தரும் மெட்டுக்களை எடுத்த எடுப்பில் ஏற்றுக் கொள்வதுமில்லை. இது போதாது இது போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்டு தொடர்ச்சியாக நச்சரித்து ஒரு பாடல் அதன் உன்னதமான உ…
-
- 0 replies
- 744 views
-
-
அலாரம் அடிக்கிறது - மொஹமட் பாதுஷா மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும் அளவுகடந்த கனவுகளோடும் நிறுவப்பட்ட நல்லாட்சியின் ஆட்சிப் பரப்பெங்கும் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற களநிலை மாற்றங்கள், கருத்தியல் அதிர்வொன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. கூட்டு அரசாங்கத்துக்குள் கட்சிசார் ‘முன்னிலைப்படுத்தல்கள்’ ஏற்கெனவே இருக்கத்தக்கதாக, இனவெறுப்பு நடவடிக்கைகளும் கூட்டு எதிரணியின் செயற்பாடுகளும் தீவிரமடைந்திருக்கின்றன. ஓர் அரசாங்கம் ஆட்சியமைத்து பல வருடங்களுக்குப் பிறகு ஏற்படுகின்ற ஸ்திரமற்ற நிலைமைகள் அல்லது அதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் இப்போது உருவாகி வருகின்றது. தனிக் குடித்தனங்களில் ஏற்படும் பிரச்சினைகள் வெளியில் தெரிவ…
-
- 0 replies
- 607 views
-
-
8884 சதுரகிலோமீற்றர் பரப்பளவான வடக்கு மாகாணத்தில் உள்ள 300 கிலோமீற்றர் நீளமுள்ள கிளிநொச்சி – முல்லைதீவு கரையோரத்தின் இரண்டு பக்கத்திலும் அரைவாசி எரிந்த நிலையிலுள்ள பனைமரங்கள், கூரைகளற்ற வீடுகள், குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், சேதமாக்கப்பட்ட வாகனங்கள் போன்ற பல்வேறு காட்சிகளைக் காணமுடியும். இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளியாகும் The Week சஞ்சிகைக்காக Lakshmi Subramanian எழுதிய கட்டுரையில் தெரிவித்தள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாதி. நளாயினி பெரும்பாலான நாட்களில் வீறிட்டுக் கத்தியவாறே கண்விழிக்கிறார். இவரைப் பாதிக்கின்ற அந்தச் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, நளாயினி பயங்கரக் கனவுகளால் பாதிக்கபட்டுள்ளார். இவரது …
-
- 0 replies
- 621 views
-
-
ஆட்சி மாற்றங்களும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வும்? - யதீந்திரா ஆட்சி மாற்றமொன்று தேவை – அதன் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். சம்பந்தன் எந்தப் பிரச்சினைகளை பற்றிப் பேசுகின்றார்? ஒரு வேளை அவர், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் பேசினால், ஆட்சி மாற்றம் தேவையென்னும் வாதம், சரியானதுதான் – ஏனெனில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், ஒரு ஸ்திரமான அரசாங்கம் இருக்க வேண்டியது கட்டாயமானது. தற்போதுள்ள அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஒரு புறம் ராஜபக்சக்கள் வீழ்சியுற்றாலும் கூட, மறுபுறமாக, அவர்கள் பொதுஜன…
-
- 0 replies
- 319 views
-
-
பங்காளிக் கட்சிகள் இனியும் சம்பந்தனை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியுமா ? யதீந்திரா ஆசனப்பங்கீடு தொடர்பான இழுபறிகள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல ஆனால் அந்த ஆதிக்கம் எந்தளவிற்கு நீளக்கூடியது என்பது தற்போதுதான் தெட்டத் தெளிவாகியிருக்கிறது. உள்ளுராட்சித் தேர்தலில் தமது கட்சிக்கான ஒதுக்கீடுகள் இவ்வாறுதான் அமைந்திருக்க வேண்டுமென்று பங்காளிக் கட்சிகளான டெலோவும், புளொட்டும் வலியுறுத்தியிருந்தன. அது பற்றி பேசலாம் என்று தமிழரசு கட்சியும் உறுதியளித்திருந்தது. இது தொடர்பில் கொழும்பில் கூடிய கூட்டமைப்பு கட்சிகளின் தலைவர்கள் …
-
- 0 replies
- 579 views
-
-
ரணில்:- பலமடைகிறாரா? பலவீனமடைகிறாரா? -நிலாந்தன்.- நாட்டுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒரு தேசிய அரசாங்கம்தான். பொருளாதார நெருக்கடி போன்ற நிலைமைகளின்போது உலகின் உயர்ந்த ஜனநாயகங்கள் அவ்வாறான தேசிய அரசாங்கங்களைத்தான் உருவாக்கின.ஆனால் இலங்கைத்தீவின் ஜனநாயகம் அத்துணை செழிப்பானது அல்ல. இலங்கைத்தீவில் தேசிய அரசாங்கம் அல்லது அதைவிட குறைவாக சர்வ கட்சி அரசாங்கம் போன்ற உரையாடல்கள் எப்பொழுது தொடங்குகின்றன என்றால், அரசாங்கம் தன் தோல்வியை ஏனைய கட்சிகளின் தலையில் சுமத்திவிட எத்தனிக்கும் பொழுதுதான்.அதாவது தோல்விக்கு எதிர்க்கட்சிகளை பங்காளிகளாக்கும் ஒரு தந்திரமாகத்தான் சர்வ கட்சி அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக தேசிய அரசாங்கம் என்பது தமிழ் நோக்கு நிலையில் சிங்கள பௌத்த த…
-
- 0 replies
- 560 views
-
-
-
- 0 replies
- 968 views
-
-
வடகொரிய - ஐ.அமெரிக்கப் பேச்சுவார்த்தை: நிழல் யுத்தமொன்று - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறக்கூடும் என வடகொரியா அச்சுறுத்தும் போதிலும், ஐ.அமெரிக்க - வடகொரிய பேச்சுவார்த்தை, வரலாறு காணாத முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடப்பட வேண்டியதாகும். ஜனாதிபதி ட்ரம்பின் ‘கடுமையான கொள்கைக்கு’ கிடைத்த வெற்றி என தென்கொரியா இதைக் கருதும் போதிலும், இந்நிலையானது பலமட்ட சர்வதேச அரசியல் நிலைகளினாலேயே சாத்தியமானது எனலாம். ஐ.அமெரிக்க - வடகொரியா மோதலானது, 25 வருட வரலாற்றைக் கொண்டிருந்ததுடன், இது ஐ.அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதிகளான ஜிம்மி காட்டர், பில் கிளின்டன் ஆகியோரின்…
-
- 0 replies
- 627 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்? நிலாந்தன்:- 02 நவம்பர் 2014 2005 இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்த போது இக்கட்டூரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டூரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனாமுறை பற்றியது அக்கட்டூரை. யார் ஜனாதிபதியாக வருவதை புலிகள் இயக்கம் விரும்பும் என்பதை அந்த இயக்கத்தின் வழக்கமான சிந்தனா முறைக்கூடாக அக்கட்டூரை கணித்திருந்தது. அதன்படி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதை விடவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருதையே அந்த இயக்கம் விரும்பும் என்றும் அந்த கட்டூரை கூறியிருந்தது. மேற்கின் விசுவாசியாகிய ரணில் முன்னெடுக்கும் சமாதானத்தை புலிகள் இயக்கம் ஒரு தர்மர் பொறியாகவே பார்த்தது. எனவே மேற்கிற்கு…
-
- 0 replies
- 471 views
-
-
புதிய அரசியல் அணிசேருகைகள் August 28, 2023 —- வீரகத்தி தனபாலசிங்கம் —- கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடியும் மக்கள் கிளர்ச்சியும் நவீன இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராதவை. அதே போன்றே அவற்றுக்கு பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளும் கட்சிகளின் புதிய அணிசேருகைகளும் கூட முன்னர் எவரும் நினைத்துப் பார்த்திராதவை. அண்மையாநாட்களாக அரசியல் கட்சிகள் புதிய கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும் அண்மைய எதிர்காலத்தில் எதிர்பார்க்கமுடியாது என்பதே யதார்த்த நிலையாக இருக்கும்போது சில முக்கிய எதிரணி கட்சிகளின் கூட்டணி அமைக்கு…
-
- 0 replies
- 407 views
-
-
கூட்டமைப்பின்ஆதரவு -பி.மாணிக்கவாசகம் December 1, 2018 வரலாற்று காலம்தொட்டே இன ரீதியாகப் பிளவுபட்டுக் கிடந்த இலங்கையை ஆங்கிலேயர் தமது ஆட்சி முடிவின்போது ஒன்றிணைத்துவிட்டுச் சென்றிருந்தனர். ஆயினும், ஒரு தேசம் என்ற அடிப்படையில் நிலவழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் நிரந்தரமாக நிலைத்திருக்கச் செய்வதற்கான அரசியல் வழிமுறையொன்றை அவர்கள் வகுத்திருக்கவில்லை. இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்த அவர்கள் விட்டுச் சென்ற அரசியலமைப்பு இன ரீதியான பிளவுகளை ஆழமாக்குவதற்கு வழி வகுத்திருந்தது. ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுச் சென்ற பின்னர், இலங்கையில் பௌத்தமத மயமாக்குவதற்கான அத்திவாரம் மிக ஆழமாகவும், உறுதியாகவும்…
-
- 0 replies
- 622 views
-
-
இந்தியா அமெரிக்காவின் கூட்டு கடற்படை போர் ஒத்திகை மதியம் செவ்வாய், செப்டம்பர் 04, 2007 ... இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினத்திற்கும், அந்தமான் தீவுகளுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய இராணுவ போர் ஒத்திகைகளை "மலபார் 07 (Malabar 07)" என்ற பெயரில் இன்று நடத்த தொடங்கியிருக்கின்றன. இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன. சுமார் 26 போர் கப்பல்கள், அணுசக்தி மூலம் இயங்கும் விமனம் தாங்கி கப்பல், 160 போர் விமானங்கள் போன்றவை கொண்டு நடத்தப்படும் இந்த போர் ஒத்திகை இது வரையில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய இந்திய-அமெரிக்க கூட்டு போர் ஒத்திகை ஆகும். ஒரு காலத்தில் இராணுவ …
-
- 0 replies
- 2.2k views
-
-
எழுக தமிழ்; சீரழிந்த அரசியலின் கதை Editorial / 2019 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை, மு.ப. 09:09 Comments - 0 எதிர்வரும் 16ஆம் திகதி நடக்கவுள்ள ‘எழுக தமிழ்’ நிகழ்வு பற்றி, மக்கள் மத்தியில் இல்லாத எதிர்பார்ப்பைத் தமிழ் ஊடகங்களும் எல்லாமறிந்த அரசியல் ஞானிகளும் ஏற்படுத்தி வருகிறார்கள். ‘எழுக தமிழ்’ என்பது தொடக்கமல்ல; சீரழிந்த மக்களை ஏமாற்றும், அரசியல் தலைமைகளின் கூத்துகளின் தொடர்ச்சி ஆகும். ‘எழுக தமிழ்’ என்ன சாதித்தது என்ற வினாவுக்கு, நியாயமான பதிலை எந்தத் தமிழ்த் தேசியவாதியாலும் வழங்கவியலாது. வேலைத்திட்டங்கள் அற்ற மக்கள் தேவைகளை முன்னிலைப்படுத்தாத உணர்ச்சிகர கோச அரசியலின் தொடர்ச்சியே ‘எழுக தமிழ்’. இன்று பிரதேச சபைகளாலும், மாநகராட்சி…
-
- 0 replies
- 582 views
-
-
இலங்கையில் தேர்தல் திரிசங்கு நிலை Published by Priyatharshan on 2019-10-28 12:51:34 -மீரா ஸ்ரீனிவாசன் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இன்னும் 3 வாரங்களில் வாக்களிக்கவிருக்கிறார்கள். மொத்தம் 35 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கும் இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலேயே பிரதான போட்டி நிலவுகின்றது. ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) அநுரகுமார திஸாநாயக்கவும் சிவில் சமூக அமைப்புக்களின் ஆதரவிற்கு இணங்க முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் அடுத்த இரு முக்கிய வேட்பாளர்களாவர். பிரதான கட்சிகளுக்கு ஒரு …
-
- 0 replies
- 532 views
-
-
ஒரு கொலை; ஒரு கதை: ஒரு முடிவின் தொடக்கம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜனவரி 09 சில செயல்கள் செய்யத்தகாதவை; அவ்வாறு செய்யத்தகாத செயல்களுக்குக் கொடுக்கும் விலை, இறுதியில் மிக அதிகமாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அச்செயலை ஏன் செய்தோம் என்று, என்றென்றைக்கும் வருந்தும் வகையில், செய்த செயல்களுக்கான எதிர்விளைவுகள் அமைந்து விடுவதுண்டு. இது, தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, அரசுகளுக்கும் அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு செய்யத்தகாத செயல்களைச் செய்தவர்களை, வரலாறு மிக மோசமாகத் தண்டித்துள்ளது; சில சமயங்களில் வஞ்சித்தும் உள்ளது. கடந்த வாரம், அமெரிக்கா ‘ட்ரோன்’ தாக்குதல்களின் மூலம், ஈரானின் இராணுவத் தளபதி குவாசிம் சொலெய்ம…
-
- 0 replies
- 983 views
-
-
வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன் May 19, 2025 ஈழத் தமிழர்களின் இனவிடுதலை வரலாற்றில் மே மாதம் கண்ணீரால், தோய்ந்த, வலிகளும், காயங்களும் தாரளமாகவே நிறைந்ததொன்றாகும். 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் கட்டமைக் கப்பட்ட இனவழிப்பொன்று நிகழ்ந்தேறியது. ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற போர்வையில் மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் தாராளமாகவே மீறப்பட்டு முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு கடந்த 16வருடங்களாக பேரவலத்துக்கான நீதி கோரிய போராட்டமும் இனவிடுதலைக்கான பயணத்தில் பின்னிப்பிணை ந்து தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கின்றது. தமிழின விடுதலைப்போராட்டம் ஆரம்பித்தகாலம் முதல், தாயகக் கோட்பாட்டிற்கும், அதிகாரப் பகிர்வுக்கும் ஆட்சியிலிருந்த சிங்கள, பௌத்த ம…
-
- 0 replies
- 323 views
-
-
புதிய கூட்டுக்கள் புனிதமானவையா ? - நிலாந்தன் கட்சி மைய அரசியலில் உலகம் முழுவதுமே புனிதமான கூட்டு என்று எதுவும் கிடையாது. இருப்பதில் பரவாயில்லை என்று கூறத்தக்க பொருத்தமான கூட்டுக்கள்தான் உண்டு.இப்பொழுது கஜேந்திரக்குமார் உருவாக்கி வைத்திருக்கும் கூட்டும் அப்படித்தான். அதுவும் ஒரு சமயோசிதக் கூட்டுத்தான். தந்திரோபாயக் கூட்டுத்தான்.எனினும், தமிழ்த் தேசிய நோக்கு நிலையில், பொது எதிரிக்கு எதிராக ஆகக்கூடிய பட்ஷம் ஒரு தேசமாகத் திரள்வது என்ற அடிப்படையில் அந்த கூட்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள்.அதேசமயம் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள். எனவே நீதிக்கான போராட்டத்தில் யாரைப் பிரதான கு…
-
- 0 replies
- 187 views
-
-
சொத்துக்குவிப்பு விவகாரமும் திராவிடக் கட்சி அரசியலும் தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய கையோடு, இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையொன்று ஏகப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 'பொது ஊழியர்கள் சொத்துக்குவிப்பது குற்றம் அல்ல. சட்டவிரோதமான வருமானம் மூலம் சொத்துக் குவிக்கப்பட்டிருந்தால் மட்டுமே குற்றம்' என்று இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்த கருத்து, தமிழகத்தின் பல தொலைக்காட்சிகளின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையின் போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் அமித்தவ் ராய் அடங்கிய அமர்வு கூறிய இந்தக் கருத்து, 'ஊழல் எதிர்ப்பாளர்கள்' ம…
-
- 0 replies
- 574 views
-
-
இது சற்று நீண்ட கட்டுரை தான். சில தவறுகளும் இருக்கலாம். ஆனால் மன்னிப்பு கேட்கமாட்டேன். புரிந்து கொள்வது உங்கள் திறமை! பிழை விடாமல் எதையும் சரி செய்ய முடியாது தோழர்களே! நான் அறிந்த விடயங்களை விட அறியாத விடயங்களும் விடைகளுமே அதிகம்... ஆனால் நடுநிலைப் போக்கில் நிகழும் விடயங்களைக் கொண்டு பல யதார்த்தங்களை எம்மால் உணர முடியும் என்பது உள்ளார்ந்தமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதே... "மனிதன் ஓர் அரசில் பிராணி" என்ற அரிஸ்ட்டோட்டிலின் கருத்தை நான் பிள்ளைப் பருவத்தில் கேட்டதும் "என்னையும் சேர்த்து அல்லவா அவர் மிருகம் என்றிருக்கிறார்!" என்று அவர் மீது எனக்குளேயே கோபப்பட்டுருக்கிறேன்... பிராணி என்ற சொல்லின் விம்பங்கள் கொடுக்கும் அர்த்தங்களை அறிந்த பிறகு…
-
- 0 replies
- 404 views
-
-
யார் பக்கம் வீசும் அனுதாபக் காற்று ? -கபில் கொரோனாவினால் கொஞ்சம் பரபரப்பு அடங்கியிருந்த வடக்கு அரசியல் களம், இப்போது சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இந்தமுறை பொதுத் தேர்தலில் கட்சிகளுக்குக் கிடைக்கக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய முடியாதளவுக்கு, போட்டிச் சூழல் தென்படுவதால், எல்லாக் கட்சிகளுமே, தமக்கும் ஆசனம் கிடைக்கும் என்ற கனவில் இருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடுகின்ற சூழல், ஆரோக்கியமற்றதாக கருதப்படுகின்ற போதும், இனி அது தவிர்க்க முடியாத ஒரு போராகவே மாறி விட்டது. இந்தநிலையில் ஒருவரை ஒருவர் எந்தளவுக்கு சேறடிக்க முடியுமோ அந்தளவுக்கு நாறடிக்கத் தயாராகி விட்டனர். வழக்கம் போலவே, ம…
-
- 0 replies
- 820 views
-