Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மஹிந்த - இந்தியா உறவு: காதலா, வியாபாரமா? எம்.எஸ்.எம். ஐயூப் / இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கத்துக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால், தரகராகப் பாவிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியே ஆவார். எனவே, இப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக, இந்திய அரசாங்கத்துக்கு, மஹிந்த ராஜபக்‌ஷவின் நட்புத் தேவையாக இருந்தால், மீண்டும் உறவை ஏற்படுத்திக் கொள்ள, சுப்ரமணியன்சுவாமியையே தரகராகப் பாவிப்பதற்கு, பிரதமர் மோடி ஆர்வமாயிருப்பார். ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் இருந்து, மஹிந்தவுடன் நெர…

  2. விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் புருஜோத்தமன் தங்கமயில் / தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்கால நம்பிக்கைகளாக, ஆக்கபூர்வமான சக்திகளாகத் தம்மைக் கருதும் தரப்புகளும் கூட, இருவரில் ஒருவரின் துணைக்குழுவாக மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றன. சுய அடையாளத்தோடு எழுந்து வருவது சார்ந்தோ, நம்பிக்கைகளை ஏற்படுத்துவது சார்ந்தோ, எந்தவொரு தரப்பும் கடந்த பத்து வருடங்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை…

  3. ஜனாதிபதியின் ஐ.நா.உரை நல்லிணக்க சவால்களை நன்கு புலப்படுத்தும் ஆட்சிமுறைப் பிரச்சினைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலத்தில் செய்திருக்கும் தலையீடுகள் அவரின் தலைமையிலான அரசாங்கத்திற்குள் நிலவுகின்ற கடுமையான அபிப்பிராய வேறுபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருகின்றன. அவற்றில் முக்கியமானது போர்க்காலத்தில் இடமபெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்லான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளில் இருந்து விடுபடுவதற்கு அவர் மேற்கொள்கின்ற முயற்சியாகும்.முன்னைய அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்தின் சில பிரிவுகளுக்கும் தீவிரமடைந்திருந்த பதற்றநிலையை புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்…

  4. சீன கடன்­பொ­றியும், நவ கால­னித்­து­வமும் ஒரு ஊர். அதி­லொரு செல்­வந்தர். தமது சுய முயற்­சியில் சமீ­பத்தில் பணக்­கா­ர­ரான செல்­வந்தர். இந்த செல்­வந்தர் ஊரின் ஒரு கோடியில் வசிக்­கிறார். ஆற்றைத் தாண்டி மறு­கோ­டியில் சில வறிய குடும்­பங்கள். வறிய குடும்­பங்­க­ளுக்கு செல்­வந்தர் வாரி வழங்­கு­கிறார். அந்தக் குடும்­பங்­களின் தேவை­களை நிறை­வேற்­று­கிறார்.நான் வளர்ந்து விட்டேன். உங்­க­ளிடம் குறைகள் இருக்­கின்­றன. நான் உதவி செய்து உங்கள் குறைகள் தீர்ந்தால், நாம் வள­ரலாம். ஊரும் பயன் பெறலாம் என்­கிறார், செல்­வந்தர். செல்­வந்­தரின் வார்த்­தை­களை வறிய குடும்­பங்கள் நம்­பு­கின்­றன. அவ­ரிடம் இருந்து வாங்­கு­கின்­றன. தமக்குத் தரப்­ப­டு­வதை த…

  5. இன்­றைய கூட்­டாட்­சி­யின் விரி­வாக்­கம்!! வழக்கு இன்­றைய பேரு­ரைக்­கான தலை­யங்­கம் சமஷ்டி பற்­றி­யது. இந்­தச் சொல் பெட­ரல் என்­கின்ற ஆங்­கி­லச் சொல்­லைக் குறிக்­கி­ற­தா­கத் தமி­ழிலே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருந்­தா­லும் அது வட­மொழி சார்ந்த ஒரு சொல்­லா­கும். பொருத்­த­மான தமிழ்ச் சொல் இல்­லை­யென்­றா­லும் கூட்­டாட்சி அல்­லது இணைப்­பாட்சி என்ற சொற்­கள் தற்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. சமஷ்­டி­யைத் தனது அடிப்­ப­டை­யா­கக் கொண்­டி­ருக்­கின்ற இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யும் சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் எமது யாப்­பிலே காணப்­ப­டும் வட சொற்­க­ளைத் தமிழ்ச் சொற்­க­ளாக மாற்­றி­ய­போத…

  6. நாட்டின் அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது பின்வரும் இரு கருப்பொருள்கள் மீதே அதிக கவனத்தை குவித்திருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபர் யார்? அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது? இவை முக்கியமான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதனை விட மிக சீரியசான அரசியல் கேள்வி, எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஜனநாயகமயப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு நடக்கப்போவது என்ன? என்பதாகும். 2015 ஆட்சி மாற்றத்தில் நேரடி பங்காளிகளாக இருந்த அரசியல், சமூக ஆர்வலர்கள் இக்கேள்வியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருக்கின்றனர். ஜனநாயகம் மீதான நேரடி தாக்குதல்கள் நடைபெறும் கட்டம் நோக்கி இலங்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கான அறிகுறிகள் அவர்களை இன்னும் கவலையில…

  7. இனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார் காரை துர்க்கா / “தமிழ் மக்கள், கடந்த 70 ஆண்டு காலமாக ஈழம், சமஷ்டி கேட்டுப் போராடி வருகின்றார்கள். 26 ஆண்டுகளாகத் துப்பாக்கி ஏந்திப் போராடினார்கள். ஆனால் ஈழத்தைப் பெற முடிய முடிவில்லை. தமிழ் மக்களுக்கு வேறு மொழி, கலாசாரம் உள்ளது. அதேபோல, முஸ்லிம் மக்களுக்கும் உள்ளது. ஆனால், அவர்கள் யார் அரசு அமைத்தாலும், அவர்களுடன் சேர்ந்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்று விடுகின்றனர். உங்கள் தலைவர்களோ, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, சமஷ்டி வேண்டுமெனக் கோரிவருகிறார்கள்” என ஒன்றிணைந்த எதிரணியின், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்முனை தமிழ்…

  8. நிலை மாறும் உலகில் சிறிலங்காவின் நகர்வு புதியதோர் ஒழுங்கை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த ஒழுங்கில் அமெரிக்க ஏகபோக ஆதிக்கம் வலுவிழந்து போகிறது. அரசுகள் எல்லாவற்றிற்கும் தலைமை அரசாக தன்னை நிறுத்தும் முயற்சி சிறிது சிறிதாக அமெரிக்காவின் கையிலிருந்து கை நழுவிப்போகிறது. புதிதாக கைத்தொழில் மயமாகிய பலதரப்பு வர்த்தக தொடர்புகளை கொண்ட அரசுகள் மிகவும் வலிமை பெற்று வருகின்றன. ரஷ்யா, சீனா, இந்தியா ,பிரேசில், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் மிக விரைவாக சர்வதேச வல்லரசுகள் என்ற நிலையை எட்டி வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதேவேளை இதர மேலைத்தேய பொருளாதாரங்களான பிரித்தானியா ஜேர்மனி , கனடா போன்ற நாடுகள் வளர்ந்து வரும் வ…

  9. தெஹ்ரான் உடன்படிக்கை - ஜனகன் முத்துக்குமார் துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள், முத்தரப்பு உச்சிமாநாடொன்றை, இம்மாதம் 7ஆம் திகதியன்று, தெஹ்ரானில் நடத்தினர். பல பார்வையாளர்களின் கருத்துப்படி, உச்சிமாநாட்டின் முடிவுகள், சிரியாவின் வடமேற்கில் உள்ள இட்லிப் நகரின் விதியை, குறிப்பாக போராளிக் குழுக்களைத் தகர்த்தல் தொடர்பாகத் தீர்மானிக்க ஏதுவாய் இருந்தது எனக் கருதப்படுகின்றது. இது டமாஸ்கஸ் தொடர்பில் இந்நாடுகள் மேற்கொண்ட கலந்துரையாடல்கள், அதனைத் தொடர்ந்து டமாஸ்கஸிலிருந்து ஆயுததாரிகள் வெளியேற்றப்பட்டமையைத் தொடர்ந்தே, இட்லிப் நகர் தொடர்பான மாநாடு நடைபெற்றுள்ளது. 2017இல் இருந்து, ரஷ்யாவுக்கும் ஈர…

  10. பொய்க்கு மேல் பொய் சொல்லும்- விக்னேஸ்வரன்!! தவ­றி­ழைத்­து­விட்டு அதை மறைக்க மற்­றொரு தவறு என்று அதை­யும் மறைக்க இன்­னொரு தவறு நீளும் தவ­று­க­ளைப் போன்று, வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும், முன்­னாள் நீதி­ய­ர­ச­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ர­னும் பொய்­யைச் சொல்லி அதி­லி­ருந்து தப்­பிக்க இன்­னொரு பொய் என்று பொய்­களை அள்ளி வீசிக் கொண்­டி­ருக்­கின்­றார். தாம­த­மா­க­வே­னும் உண்மை வெளி­யில் தெரி­யும்போது சொன்ன பொய்­கள் அத்­த­னை­யும் நிர்­மூ­ல­மா­கி­வி­டும். விக்­னேஸ்­வ­ரன் விட­யத்­தி­லும் அது­தான் நடந்­தி­ருக்­கின்­றது. பளைக் காற்­றாலை பளை­யில் காற்­றைப் பயன்­ப­டுத்தி மின்­சக்தி உற்­பத்தி செய்­வ­…

  11. சீன மொழியால் தமி­ழுக்கு ஆபத்தா? என்.கண்ணன் இலங்­கையில் சீனாவின் பொரு­ளா­தார, முத­லீட்டு ஆதிக்கம் பற்றி வெளி­நா­டு­களில் அதி­க­மாகப் பேசப்­பட்டு வரும் நிலையில், அதனைத் தவிர்ந்த வேறு விட­யங்­க­ளிலும் சீனாவின் தலை­யீ­டுகள் குறித்த கரி­ச­னைகள் உள்­நாட்டில் ஏற்­படத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. ஒரு காலத்தில் சீனா தனது விலை­ம­திப்புக் குறைந்த உற்­பத்திப் பொருட்­களால், உலகின் பெரும்­பா­லான நாடு­களின் சந்­தை­களை நிரப்­பி­யது. இப்­போது, முத­லீ­டுகள் மற்றும் தனது தொழிற்­ப­டையின் மூலம், வெளி­நா­டு­களை நிரப்பத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. அவ்­வா­றா­ன­தொரு நிலையைச் சந்­தித்­தி­ருக்கும் நாடு தான் இலங்­கையும். இலங்­கையில் அதி­க­ரித்து வரும் …

  12. மேற்குலகுக்கு எச்சரிக்ைகயாக அமைந்த ரஷ்யாவின் இராணுவ ஒத்திகை கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம் யாழ்.பல்கலைக்கழகம் நடந்து முடிந்த வாரத்தில் உலக அரசியல் போக்கில் ரஷ்யா தலைமையிலான போர்ப் பயிற்சி முதன்மையான செய்தியாக உள்ளது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர் மிகப் பிரமாண்டமான போர் ஒத்திகை என்ற பிரகடனம் உச்சரிக்கப்படுகின்றது. அவ்வாறே அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும் குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் இக்கட்டுரையானது ரஷ்யாவின் மிகப்பிரமாண்டமான போர் ஒத்திகை ஏற்படுத்தக்கூடிய …

  13. விக்கி வீட்டுக்கு வெளியே? இன்று நடக்கக் கூடும் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட சம்பந்தர்-விக்கி சந்திப்பு நடக்கவில்லை. ஒரு முன்னாள் நீதியரசரான விக்கி நீதிமன்றதின் முன் குற்றம் சாடப்பட்டவராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அதுவும் அவருடைய பதவிக்கு காலத்தின் இறுதிக்கு கட்டத்தில். கூட்டமைப்புக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடு அசிங்கமான திருப்பங்களை அடைந்து விட்டது. தமிழரசுக் கட்சியைப் பகைத்துக் கொண்டு விக்கியைத் தொடர்ந்தும் கட்சிக்குள் வைத்திருக்க சம்பந்தரால் இனி முடியுமா? அரசுத்தலைவரின் வடகிழக்கு அபிவிருத்திக்கான செயலணி தொடர்பான சர்ச்சையோடு சம்பந்தருக்கும் விக்கிக்கும் இடையிலான முரண்பாடுகள் உச்சம் பெற்றுவிட்டன. கடைசியாக நடந்த பேரவைக்கூட்டத்தில் விக்கி…

  14. அடுத்த முதலமைச்சராகவும் விக்னேஸ்வரன் வரவேண்டுமா? ‘வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சருக்கான விண்ணப்பம் மக்களினால் கோரப்பட்டுள்ளது. அடிப்படைத் தகுதி: அரச உயர் பதவி ஒன்றில் இருந்து ஓய்வு பெற்றவர் விரும்பத்தக்கது. தமது பதவிக்காலத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காதவர்கள், அரச இயந்திரத்திற்கு ஒத்து ஊதியவர்கள் விரும்பத்தக்கது. இவர்கள் பிறந்தது, கல்வி கற்றது மற்றும் நிரந்தர வசிப்பிடம் வடக்கு மாகாணத்தின் எப்பகுதியிலாயினும் இருத்தல் ஆகாது. இவரிற்கு கடந்த காலங்களில் பங்கர் வெட்டுதல், ஊர்வலங்கள், இடப் பெயர்வுகள், பாண், அரிசி என்பவற்றிற்கு வரிசையில் நின்றிருத்தல், சைக்கிளில் பயணம் செய்திருத்தல், மண்ணெண்ணெய் மற்றும் செக்கில் ஊற்றிய தேங்காய் எண்ணெயில் கல்வி …

  15. மஹிந்­தவின் பக்கம் திரும்­புமா இந்­தியா? -ஹரி­கரன் ஒட்­டு­மொத்­த­மாகச் சொல்­வ­தானால், மஹிந்த ராஜபக் ஷ இன்­னமும் மாற­வில்லை என்று குறிப்­பி­டலாம். தான் மாறாமல் இருப்­ப­தா­கவும் இந்­தி­யாவின் மனோ­நி­லையை மாற்ற முனை­வ­தா­கவும் தான் அவ­ரது கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன தர­கர்கள் பொது­வாக, வியா­பா­ரங்­களில் தான் அதிகம், ஆனால், அர­சி­ய­லிலும் தர­கர்கள் இருப்­ப­துண்டு. இலங்கை அர­சி­யலைப் பொறுத்­த­வ­ரையில், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிரான் அலஸ், போன்­ற­வர்­களை அவ்­வா­றா­ன­வர்கள் எனக் குறிப்­பி­டலாம். ஒரு பக்கம் வணிகப் பெரும்­புள்­ளி­யாக இருந்து கொண்டே, ஆளும்­கட்சி, எதிர்க்­கட்சி இரண்­டுக்­கு­ம…

  16. விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்… யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார். ‘முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான். ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் அதிகப்படியான வாக்கை பெற்றவர். அவரை அவமதிப்பது என்பது அவரைத்…

  17. “ஒப்பரேசன் தமிழ் தேசியத்தின் முடிவு”: சுமந்திரனை புரிந்துகொள்ளுதல் - சமகளம் லோ. விஜயநாதன் தமிழர்கள் எப்போது தமக்கென்று அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார மூலோபாய கொள்கைகளை வகுக்கக்கூடிய நிறுவனமயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை உருவாக்கி அவற்றுக்கூடாக தமது தேசவிடுதலை போராட்டத்தை நகர்த்த முற்படுகின்றார்களோ அன்றுதான் அழிவு நிலையில் இருக்கும் தமிழ் தேசியம் பாதுகாக்கப்படும். இல்லாதுவிட்டால் ஏகாதிபத்திய நாடுகளின் எடுபிடிகளாக மாறி இப்போதுவரை இலக்கற்ற பாதையில் பயணிப்பதுபோன்றே தொடர்ந்தும் பயணிக்கவேண்டி வரும். இதற்கு சிறந்த உதாரணம் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் எனும் நபரின் பிடிக்குள் சிக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளாகும். தமிழ் …

  18. விக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் யதீந்திரா வடக்கு மாகாண சபை இன்னும் ஒரு மாதத்தில் கலையவுள்ளது. அதன் பின்னர் விக்கினேஸ்வரன் எத்தகைய முடிவை எடுப்பார் என்பது தொடர்பில் பல ஊகங்கள் உண்டு. அவற்றை ஊகங்களாகவே விட்டுவிடுவோம். ஆனால் 2013இல் அரசியலுக்குள் வரும்போது இருந்த விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சபை கலைகின்ற போது இல்லை என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. இந்தக் காலம் விக்கினேஸ்வரனுக்கு பல பாடங்களை புகட்டியிருக்கிறது. உண்மையில் இந்தக் காலம் விக்கினேஸ்வரனை அரசியல் வாதியாக செதுக்குவதற்கே பயன்பட்டிருக்கிறது. விக்கினேஸ்வரன், அரசியலுக்குள் அழைத்துவரப்பட்ட போது அவர் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில், தான…

  19. தீர்மானம் 30/1 மற்றும் தீர்மானம் 34/1 தீர்மானங்களை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்! நக்கீரன் காக்கையை கங்கையில் குளிப்பாட்டினாலும் நிறம் மாறாது. கருப்பு கருப்புத்தான். சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் அப்படித்தான். மனிதர் மாறவில்லை. சனாதிபதியாக சிறிசேனா பதவியேற்ற காலம் தொட்டு அவர் எல்லா இடங்களிலும் க சொல்லிவரும் வாசகம் ஒன்று இருக்கிறது. “போரில் வெற்றிவாகை சூடிய எமது இராணுவ வீரர்களை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றமோ அல்லது உள்நாட்டில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளையும் உள்ளடக்கிய நீதிமன்றமோ விசாரணை செய்ய நான் அனுமதிக்கப் போவதில்லை” என தொடர்ந்து சூளுரைத்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இராணுவ பாதுகாப்பு தலைமை அதிகாரி இரவிந்தி…

  20. சிங்கள மொழியில் உள்ள சட்டப் பிரிவுதான் மேன்மை பெறும்.... விக்கினராஜா (முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதவான்)

  21. எதிர்பார்க்கப்படும் புதிய தமிழ் தலைமை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமா? லோ. விஜயநாதன் தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தவிர வேறு எந்த இடத்திலாவது எமது போராட்டம் நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாக நகர்த்தப்பட்டிருக்கிறதா ? அப்படி முன்னெடுக்கப்பட்டிருந்தால் நாம் எமது இலக்கை நோக்கிய பயணத்தில் பாதியளவு தூரமாவது கடந்திருந்திருப்போம். ஆனால் நாம் அப்படி செய்யத்தவறியதன் விளைவே இருந்ததையும் இழந்து நிற்கவேண்டிய நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. தந்தை செல்வா சமஷ்டி கோரிக்கையை முன்வைத்திருந்தாலும் அதனை நோக்கி கட்சி அரசியலைத் தாண்டிய ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை அவர்முன்னெ…

  22. தொடர்கதையாகும் பாதிப்பு ஒரு கட்­ட­மைப்பின் கீழ் ஒன்­றி­ணைந்த நிலையில் தமிழ் அர­சியல் தலை­வர்கள் செயற்­ப­டாமல் இருப்­பது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது. நீண்ட கால­மாக அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்ட ஒரு தேசிய இன­மாகத் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில், தமிழ் அர­சியல் தலை­வர்கள் இவ்­வாறு ஒன்­றி­ணைந்து செயற்­ப­டாமல் அல்­லது செயற்­பட முடி­யாமல் இருப்­பது அந்த மக்­களை மேலும் மேலும் பாதிப்­ப­டை­யவே செய்­தி­ருக்கின்றது. மேலோட்டப் பார்­வையில் இந் நாட்டில் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­வ­தில்லை. அவர்­களும் ஏனைய பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களைப் போன்று சுதந்­தி­ர­மா­கத்­தானே வாழ்­கின்­றார்கள். இ…

  23. விக்­னேஸ்­வ­ர­னின் போக்­கில் மாற்­றம் ஏற்­ப­டுமா? சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் சமீ­ப­கால நட­வ­டிக்­கை­கள் அவர் மனம் குழம்­பிய நிலை­யில் காணப்­ப­டு­வ­தைத் தௌிவாக எடுத்­துக் காட்­டு­கின்­றன. இறு­தி­யாக அவர் தெரி­வித்த கருத்­தொன்று பல­ரை­யும் குழப்­பத்­தில் ஆழ்த்­தி­விட்­டுள்­ளது. சம்­பந்­த­னும், சுமந்­தி­ர­னும் கூட்­ட­மைப்­பில் நீடித்­தால் தமி­ழர்­க­ளால் விடுக்­கப்­ப­டு­கின்ற கோரிக்­கை­கள் சறுக்­கி­வி­டு­மென அவர் எதற்­கா­கக் கூறி­னா­ரென்­பது ஒரு­வ­ருக்­குமே புரிந்­த­தா­கத் தெரி­ய­வில்லை. தமி­ழர்­க­ளின் கோரிக்­கை­கள் நிறை­வே­று­வ­தற்கு எந்த வகை­யில் சம்­பந்­த­னும், சுமந்­தி­ர­னும் முட்­டுக்­கட…

  24. கஜூவும் அவாவும் மொஹமட் பாதுஷா / இலங்கையின் தேசிய விமான சேவையான, ஸ்ரீ லங்கன் விமான சேவை விமானத்தில், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட தரம் குறைந்த மரமுந்திரிகைப் பருப்பு (கஜூ) பற்றி, ஜனாதிபதி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதையடுத்து, அது தொடர்பில், தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் போல, முதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படுவதையும் காண முடிகின்றது. ‘கஜூ’ விடயத்திலேயே, நாட்டின் ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இவ்வளவு அக்கறை செலுத்துவது பாராட்டத்தக்கதும் மகிழ்ச்சிகரமானதும் என்பதில் மறுகருத்தில்லை. ஆனால், இதே அக்கறையை, நாட்டில் இடம்பெறுகின்ற முக்கியத்துவம் வாய்ந்…

  25. விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும் கே. சஞ்சயன் / முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும் இடையிலான பனிப்போர், தீவிரம் பெற்ற பின்னர், அவர், விரிவாகப் பல விடயங்களைப் பேசிய ஒரு செவ்வியாக இது இருந்தது. அந்தச் செவ்வி வெளியானதுமே, அதைத் தமிழ் மொழியாக்கம் செய்து, முதலமைச்சரின் செயலகம், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது.தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டிருந்தன. அதுதான் பல்வேறு ஊடகங்களைச் சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியான செவ்வியின் மூலத்திலிருந்து, தமிழ் மொழியாக்கத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.