அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-16#page-5 முஸ்லிம் கூட்டமைப்புக்கான சாத்தியத் தன்மை
-
- 0 replies
- 264 views
-
-
-
காலம் கடத்தும் யுக்தி! நிலையான அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகளை வேகமாகச் செய்ய முடியாது, இந்த முயற்சிகள் மெதுவாக- அதேவேளை உறுதியாக முன்னெடுக்கப்படும் என்று ஐ.நா. பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றிய போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். கிட்டத்தட்ட இதே கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சில வாரங்களுக்கு முன்னர், ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதும் கூறியிருந்தார். “இலங்கைக்கே உரிய பாணியில் பொறுப்புக்கூறல் கடப்பாடுகள் நிறைவேற்றப்படும், மெதுவாகவே அது நடக்கும், விரைவாக இடம்பெறாது” என்று அவர் அப்போது …
-
- 0 replies
- 473 views
-
-
கூட்டமைப்பின் சிதைவு கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் - க. அகரன் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். இந்நிலையே இன்று தமிழர் அரசியல் அரங்கில் சூடுபிடித்து நடந்தேறி வருகின்றது. தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்ற தேர்தல் கால வார்த்தைகள் எல்லாம் கப்பலேறி, கட்சி நலன்சார்ந்த விடயங்களை முன்னிறுத்திப் பேரம் பேசும் தன்மை மேலோங்கி வருகின்றமை, வேதனைக்குரிய விடயமாகவே, தமிழ் மக்கள் பார்க்கின்றனர். சிங்கள மேலதிக்க அரசியலாளர்களின் கைங்கரியங்களைச் செவ்வனே செய்வதற்கு, தமிழர் தரப்பில் உள்ள சில அரசியல் தலைமைகள் ஈடுகொடுத்துப் போவதால் ஏற்பட்டுள்ள இந்நிலைமையானது, நிம்மதியான வாழ்வு மற்ற…
-
- 0 replies
- 507 views
-
-
Courtesy: தி.திபாகரன் இன்று இலங்கை தீவில் ஏற்பட்டிருக்கின்ற பாரதூரமான பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் பட்டினிசாவை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய பெரும் நெருக்கடிக்கு மத்தியிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகளை கட்டுவதிலும், தமிழர் நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிப்பதில் முனைப்பு காட்டுகிறது. இவ்வாறு இனவழிப்பு செய்வதில் தொடர்ந்தும் ஈடுபட்டு தன் பொருளாதாரத்தை செலவழித்து வருகிறது. இதிலிருந்து இலங்கை சிங்கள பேரினவாத அரசியலில் எத்தகைய அரசியல் தலைவர்கள் வந்தாலும் அவர்கள் தேரவாத பௌத்தத்தின் 'நம்ம தீப' கொள்கையை கைவிட மாட்டார்கள் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. வட-கிழக்கு தமிழர்களின் பலம் என்ப…
-
- 0 replies
- 434 views
-
-
அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறைப்பு; யார் விட்ட பிழை? புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை (30) முன்வைத்த இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60ஆக நிர்ணயிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரச மற்றும் அரச சார் நிறுவனங்கள் பலவற்றில், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை 65ஆகக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், 60 வயதைக் கடந்துவிட்ட அனைத்து அரச ஊழியர்களும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியோடு, ஓய்வுபெற்றுச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவ…
-
- 0 replies
- 326 views
-
-
தமிழ் தரப்புக்களுக்கு மக்கள் வழங்கிய ஆணை இந்த நாட்டில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த மக்களின் உரிமை கோரிக்கையை தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியாக முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் விழுந்திருந்தது. மாறிவந்த சர்வதேச சூழலை அதாவது இறுதிப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள்,போர்க்குற்றங்கள் என்பவற்றை மூலதனமாகக் கொண்டு தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகள் தொடக்கம் நிரந்தர …
-
- 0 replies
- 340 views
-
-
ஊர் நாய்களை பார்த்து அல்சேசன்கள் குரைப்பது போல... ஊர் நாய்களைப் பார்த்து அல்சேசன் நாய்கள், தூரத்தில் நின்று குரைக்கின்ற கதையாகிப்போனது, நமது நாட்டின் இன்றைய அரசியல் சூழல். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மார்தட்டிக் கொண்டவர்களெல்லாம், பேசாமல் பெட்டிப்பாம்புகளாக அடங்கிப்போனார்கள். 2014ஆம் ஆண்டின் இறுதிவாக்கில், அப்பத்தை உண்டுவிட்டு அடுத்த நிமிடம், “நான் அவர்களுடன் ஒன்றுமில்லை” என்று, தொடங்கி வைக்கப்பட்ட நல்லாட்சிக்கான முயற்சி, 2015 ஜனவரியில் மஹிந்தவைத் தூக்கி எறிந்தது. ஆனால், அதை முறியடிப்பதற்கான முயற்சியிலிருந்து, தான் விலகப் போவதில்லை என்ற பிடிவாதத்துடன், ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்…
-
- 0 replies
- 472 views
-
-
வாக்குகளை பெறுவதற்காக பிரபாகரனைப் பற்றி பேசுவது அமைச்சர்களை அல்லது ஜனாதிபதியை சந்திக்கும்போது அரசியல் அமைப்புக்கு அமைவாக பேசி சமாளிப்பது போன்ற இரட்டைவேட அரசியல், 60 ஆண்டுகால போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் செயல்- உணர்ச்சிவசப்பட்டு வாய்கிழிய பேசாமல், அறிவுபூர்வமாக செய்ய வேண்டிய மூன்று வேலைத் திட்டங்கள்- -அ.நிக்ஸன்- தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசாங்கமும் சிங்கள கட்சிகளும் சிங்கள பௌத்த தேசியவாதம் பேசுகின்றனர் என்பது வெளிப்படை அவ்வாறே தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ்த்தேசிய இனவாதம் பேசி வாக்குகளை பெறுகின்றது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதே நிலையில் தான் உள்ளன. ஆனால் சிங்கள கட்சிகளை பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் பேசி வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்ததும் குறைந்தபட்சம…
-
- 0 replies
- 389 views
-
-
நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும் July 6, 2018 102 . Views . நுஜிதன் இலங்கையிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையே உள்ளது. இவ்விதமாகத் தமக்கென தனியார் காணிகளை அபகரிப்பதும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துக்கு உலைவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிரக்கதிக்கு உள்ளாக்குவதும் இலங்கை அரசின் நடைமுடையாக இருந்து வருகிறது. அரசின் நல்ல…
-
- 0 replies
- 319 views
-
-
தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு மேல் என்று தேர்தலுக்கு முன் பிசாசோடு தன்னை ஒப்பிட்டு தமிழர்களிடம் ஓட்டுக்காக கையேந்தினார் ராஜபக்ஷே. அந்தச் சாத்தானை விரட்டியடித்து ஒட்டுமொத்த குடும்ப அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இலங்கை வாக்காளப் பெருமக்கள். ராஜபக்ஷேவுக்கு தமிழர்கள் தந்த தண்டனை என்றே அனைவரும் சொல்கிறார்கள். மைத்ரிபால சிறீசேனவின் தேர்தல் வெற்றி குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். மகிந்த ராஜபக்ஷே 10 ஆண்டுகளாக சர்வாதிகாரமான ஆட்சியை நடத்தி வந்திருக்கிறார். தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை சகல விதத்திலும் தலைவர்களாகவோ, பொறுப்பாளர்களாகவோ ந…
-
- 0 replies
- 824 views
-
-
சமூகநல அரசாங்கங்களின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருகிறது. மக்களின் நலன்களைக் காக்கும் அரசாங்கம், ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், போராட்டங்களும் புரட்சிகளும் அரசாங்கத்தை, மக்கள் நலன் பேணும் ஒன்றாக மாற்றின. இப்போது நிலைமை மாறுகிறது. அரசாங்கங்கள் சமூக நலன்களைத் தவிர்ப்பனவாக உருமாறியுள்ளன. இம்மாற்றம், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. பல ஐரோப்பிய நாடுகள், மக்கள் நலன்களை இல்லாமல் செய்கின்ற நிலையிலும் சுவீடன், நோர்வே ஆகிய ஸ்கன்டினேவிய நாடுகள், சமூக…
-
- 0 replies
- 581 views
-
-
Published By: VISHNU 16 JUL, 2023 | 01:26 PM லத்தீப் பாரூக் மேற்குலகில் நாடோடிகளாகத் திரிந்த யூதர்களை கொண்டு வந்து குடியேற்றுவதற்காக பலஸ்தீன பூமியில் கொலைகள், தொடர் படுகொலைகள், இனஒழிப்பு ஆகிய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை நாடான இஸ்ரேல் மீண்டும் ஒரு தடவை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பிரதேசத்தின் ஜெனின் நகரில் பலஸ்தீன அகதி முகாம்கள் மீது ஜுலை மாதம் மூன்றாம் திகதி திங்கள் கிழமை மூர்க்கத்தனமான யுத்தக் குற்றங்களைப் புரிந்துள்ளது. இந்த மூர்க்கத்தனத்துக்கு அமெரிக்கா ஐரோப்பா என்பன பூரண ஆதரவை வழங்கி உள்ளதோடு அரபுலக சர்வாதிகாரிகள் வழமைபோல் மௌ…
-
- 0 replies
- 485 views
- 1 follower
-
-
'இயற்கையின் சீற்றமும், செயற்கையின் சீற்றமும்' -சபேசன் (அவுஸ்திரேலியா)- இலங்கைத்தீவைப் பொறுத்தவரையில், அண்மைக்காலத்தில், மேற்குலகம் சில அதிரடிச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதை நாம் அவதானிக்க முடிகின்றது. சிறிலங்கா அரசு மீது சில அழுத்தங்களை மேற்கொள்ளுகின்ற மேற்குலகம், அதேவேளை, விடுதலையைக் கோரி நிற்கின்ற தமிழர் தரப்புமீதும் சில அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. உள்நாட்டுப் பிரச்சனை என்று முன்னர் வர்ணிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று உலக மயமாக்கப்பட்டு விட்ட இவ்வேளையில், சில கருத்துக்களை முன்வைத்துத் தர்க்கிப்பது அவசியமானது என்று நாம் கருதுகின்றோம். பிரித்தானிய நாடாளுமன்றத்தில், தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்குச் சார்பாக விவாதங்கள் நடைபெறுவது…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் இன விடுதலைப் போராட்டம்” என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் குறித்த தமிழ் இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாத ஒன்று ஒட்டு மொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்துக்காகத் தமது பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும் போது தான், விடுதலைக்கான மக்கள் புரட்சியும், அதன் மூலமான இன விடுதலையும் சாத்தியமாகும். தமிழர் நாம் ஆண்ட பூமி தமிழுக்கும், தமிழ் மக்களுக்குமான தனித்துவ வரலாற்றைக் கொண்டு வாழ்ந்த இனம். தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட “தனிநாடு தமிழீழம்” வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தைத் தமிழர் தேசத்தின் பால் திரும்பிப் பார்க்க வைத்த இன விடுதலைப் போராட்டம்.…
-
- 0 replies
- 473 views
-
-
குழப்பங்களைத் தீர்ப்பாரா ஜனாதிபதி? கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 02 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:13 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சி, பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும் கூட, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிடிவாதம், அவர் நாட்டின் தலைவராகச் செய்யப்படுகிறாரா அல்லது, தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட ஒருவராகச் செயற்படுகின்றாரா என்ற ஐயத்தை எழுப்பி இருக்கிறது. இதன்மூலம், தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் எல்லா வழிகளையும் அடைக்கின்ற ஒருவராகவே அவர் மாறியிருக்கிறார் . நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை பலமில்லாத ஒருவரைப் பிரதமராக நியமித்து, குழப்பத்தை ஆரம்பித்த ஜனாதிபதி, பெரும்பான்மை …
-
- 0 replies
- 436 views
-
-
கட்சிகளை ஐக்கியப்படுத்தும் ஆகப் பிந்திய ஒரு முயற்சி – நிலாந்தன். நேற்று சனிக்கிழமை (17.11.23) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. டாண் டிவி குழுமத்தின் அனுசரணையோடு ஒரு சிவில் அமைப்பு அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. எல்லாக் கட்சிப் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கட்சிகளுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதே அந்த கருத்தரங்கின் நோக்கம். கட்சிகளோடு சமயப் பெரியார்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஐந்து மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் மொத்தம் எழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தார்கள்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் வரவில்லை. தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்தவர்களும் வரவில்லை. ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர…
-
- 0 replies
- 374 views
-
-
கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மார்ச் 26 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:49Comments - 0 நமது கைகளை அகல விரிக்கும் போது, நமக்கான சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கை, நமது கைகள் தொடாத வரையில்தான் என்பார்கள். நமது சுந்திரம் என்பது, அடுத்தவருக்கு அத்துமீறலாக இருக்கும் போதுதான் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஆனால், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண மனிதர்களின் தலைகளில், அநேக தருணங்களில் கூடுகளைக் கூட, கட்டத் தொடங்குகின்றனர். அப்போது, தலைகளுக்கு உரியவர்கள் தட்டிக் கேட்டால், அதிகாரங்களுக்கு உரியவர்களின் கைகள், அடக்குமுறைகளைப் பிரயோகிக்கத் தொடங்குகின்றன. இதுவே, இறுதியில் போராட்டக் களங்களை உருவாக்கி விடுகின்றது…
-
- 0 replies
- 712 views
-
-
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நினைவேந்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறிய அந்தக் குரூரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைந்துருகினர். 'அந்தப் படுகொலைகளுக்கு நீதி நிலைநாட்டப் படவில்லை. நீதிக்கான பயணத்தை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் - இதயசுத்தியுடன் முன்னெடுக்கவில்லை ' என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. கத்தோலிக்க மதத் தலைவரான கர்தினால் மல்கம் ரஞ்சித் பிரதான நினைவேந்தல் நிகழ்வில் ஆற்றிய உரையில் பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார். கடந்த 5 ஆண்டுகளாக அவரால் தனது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்கமுடியவில்லை என்ற ஆதங்கம் அந்த உரையில் எதிரொலித்தது. இப்போதும் கூட அவர் தனது சமூகத்துக்காக மாத்திரம் குறுகிய வெளிக்…
-
- 0 replies
- 420 views
-
-
தெற்கின் அரசியற்களமும் வடக்கின் அரசியல் முகமும் September 15, 2024 — கருணாகரன் — சிங்களத் தரப்பிலிருந்து இந்தத் தடவை இனவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதித் தேர்தற்பரப்புரைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதற்காக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களெல்லாம் இனவாதத்தைத் துறந்து விட்டார்கள், கடந்து விட்டார்கள் என்றில்லை. அதற்கான சூழல் இல்லை என்பதே முக்கியமான காரணமாகும். அரசியல் வரலாறு என்பதே அப்படித்தான். எப்போதும் ஒரே மாதிரி இருப்பதுமில்லை. எல்லாம் கனிந்துதான் நிகழ்வது என்றுமில்லை. சூழ்நிலைகளே பல சந்தர்ப்பங்களிலும் மாற்றங்களை நிகழ்த்துவன. அப்படியானதொரு நிர்ப்பந்தச் சூழல் சிங்களத்தரப்புக்கு இப்பொழுது உருவாகியுள்ளது. ஏனென்றால் வழமையை விட இந்தத் தேர…
-
- 0 replies
- 322 views
-
-
கலைந்த வேசமும் களைத்த தேசமும் Editorial / 2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை, பி.ப. 01:20 Comments - 0 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின்போது, “ஒளிவு மறைவு இல்லாது மக்களுக்கு அறிவியுங்கள்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்து உள்ளார். ஐ.தே.க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில், வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதை, நாட்டு மக்கள் மத்தியில், ஐ.தே.க வௌிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதே, சம்பந்தனின் மேற்குறிப்பிட்ட கோரிக்கையே யாகும்.இதையே, இன்று தமிழ் மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், யதார்த்த நிலையில்…
-
- 0 replies
- 665 views
-
-
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் - நிலாந்தன். adminJanuary 12, 2025 சிறீலங்காவை கிளீன் பண்ணத்தான் வேண்டும். ஆனால் அதை எங்கிருந்து தொடங்குவது? சிறீலங்காவின் கறை எது? அல்லது அசுத்தம் எது? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்துதான் சுத்தப்படுத்தலைத் தொடங்கலாம். சிறீலங்காவின் அசுத்தம் எது? இனப்பிரச்சினைதான். இன மோதல்கள்தான் சிறீலங்காவை உலக அரங்கில் அவமானப்படுத்தின. இனப்பிரச்சினைதான் சிறீலங்காவை ஜெனிவாவில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இனப்பிரச்சினைதான் தமிழ் மக்களை கூடு கலைந்த பறவைகள் ஆக்கியது. இனப்பிரச்சினைதான் சிறீலங்காவுக்குள் வெளிச் சக்திகள் தலையிடும் வாய்ப்பை வழங்கியது. இனப்பிரச்சினைதான் நாட்டைப் பொருளாதார ரீதியாக நாசமாக்கியது.…
-
- 0 replies
- 320 views
-
-
கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான அரிய வாய்ப்பு – சம்பந்தன் பயன்படுத்திக் கொள்வாரா? - யதீந்திரா 'தமிழ் மக்கள் பேரவை - இன்றைய அர்த்தத்தில், தமிழ் அரசியல் சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஒரு பெயர். தற்போதைக்கு இது ஒரு பெயர் மட்டுமே. இதன் அடுத்தகட்ட நகர்வுகளை பொறுத்துத்தான் இதன் அரசியல் இருப்பை மதிப்பீடு செய்யமுடியும். பொதுவாக தமிழ்ச் சூழலில் ஒரு நோய் உண்டு. அதாவது, புதிதாக ஏதாவது முன்னெடுப்புக்கள் தெரிந்தால் உடனடியாக அது பற்றி எவ்வித ஆதாரங்களுமற்று அவதூறுகளைப் பரப்புவது. தமிழ்த் தேசிய அரசியல் பரம்பரையில் இது ஒரு வாழையடி வாழை வியாதி. இத்தனை அழிவுகளுக்குப் பின்னரும் கூட இதிலிருந்து மீண்டெழும் மார்க்கங்கள் காண எவரும் முயற்சிக்கவில்லை. இந்த வியாதி …
-
- 0 replies
- 447 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலுக்குச் சோதனை -இலட்சுமணன் விஞ்ஞானத்தில் மாத்திரமல்ல, உலகின் அனைத்து விடயங்களிலும் சோதனை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதேபோன்றுதான், அரசியலிலும் சோதனைகள், சாதனைகள், வெற்றிகள், தோல்விகள் சாதாரணமானவை; இவை தொடர்ந்தும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை அரசியலில் வெறுமனே, தேர்தல்களுக்கு மட்டுமானவை இல்லை; ஆனால், இப்போதைய காலச்சூழலில் இந்தச் சோதனை முயற்சிகள் தேர்தல்கானவையாகவே மாறியிருக்கின்றன. இதில் நகைச்சுவை என்னவென்றால், இலங்கையில் தமிழர் அரசியல் என்பது, தமிழ்த் தேசியத்துக்கு மாத்திரமே சொந்தமானது என, எல்லோரும் நினைக்கிறார்கள். இலங்கையின் அரசியல் கள நிலைவரம் மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொருவருக்க…
-
- 0 replies
- 425 views
-
-
மீண்டும் கிளம்பும் புகைச்சல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து மீண்டும் புகைச்சல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. வழக்கம்போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக, அதாவது இரா.சம்பந்தனுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராகவும், குரலை எழுப்பியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மே தினப் பேரணி, இணுவிலில் ஆரம்பித்து, மருதனார்மடத்தில் முடிவடைந்ததையடுத்து, மே தினக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி மாத்திரமே பங்கேற்றிருந்தது. ஏனைய கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்தநிலையில் தான், இலங்கைத…
-
- 0 replies
- 494 views
-