அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கூட்டமைப்புக்குள் தீவிரமடையும் உள் மோதல்கள்? - யதீந்திரா தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் எவ்வாறான பார்வை காணப்படுகின்றது என்பதை தற்போதைக்கு ஊகிப்பது கடினம். ஆனால் தேர்தல் போட்டியானது, குறிப்பாக வடக்கு மாகாணத்தில், இம்முறை ஒப்பீட்டடிப்படையில் மக்களுக்கு முன்னால் தெரிவுகள் அதிகரித்திருக்கின்றன. அதே வேளை கூட்டமைப்புக்குள்ளும் இலங்கை தமிழசு கட்சிக்;குள்ளும் உள் முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக கூட்டமைப்புக்குள்ளும் தமிழரசு கட்சிக்குள்ளும் அணிகள் உருவாகியிருக்கின்றன. தமிழரசு கட்சிக்குள் மாவை அணி – சுமந்திரன் அணியென்று இரு அணிகளாக பிரிந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சுமந்திரன் அணியென்பது, உண்மையில் சம்பந்தன் அணியாகும…
-
- 0 replies
- 533 views
-
-
அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படவுள்ள அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக பல்வேறு ஆய்வுகளையும் கலந்துரையாடல்களையும் முக்கிய சந்திப்புக்களையும் இவ்வாரம் தொடர்ந்து அடுத்த வாரமும் மேற்கொள்ளவுள்ளோம் என்ற தகவலைத் தெரிவித்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தன். ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களும் இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் பருவகாலமாக இருக்கப் போகிறது என்பதை அவர் கூறிய தகவல்களிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆ…
-
- 0 replies
- 371 views
-
-
தெளிவான வரையறையின் அவசியம் – செல்வரட்னம் சிறிதரன் மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாகப் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பவற்றின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், புதிய அரசியலமைப்பின் முதலாவதும் முக்கிய விடயமுமாகிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை வெகுவாகக் குறைப்பது என்ற விடயத்தில் ஆழமாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசி…
-
- 0 replies
- 385 views
-
-
p2p போராட்டம் சர்வதேசத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டியுள்ளது – மட்டு.நகரான் 54 Views வடகிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள வடுக்களின் வலிகளை வெளிக்காட்டுவதை தடுத்தல் என பல்வேறு வகையான மனித உரிமை நிலைக்கு எதிரான, ஜனநாயக வரம்புகள் மீறப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்கான போராட்டத்தினை இராஜதந்திரப் போராட்டமாக மாற்றியமைத்ததனர். இதனையடுத்து வடகிழக்கில் செயற்பட்ட பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் நாட்டைவிட்டு துரத்தியடிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போதைய காலத்தில…
-
- 0 replies
- 295 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-05-28#page-11
-
- 0 replies
- 263 views
-
-
தமிழ் அரசியலில் திட்டமிடல், தூரநோக்குக்கான தேவை என்.கே. அஷோக்பரன் http://www.twitter.com/nkashokbharan உலகத்தையே, ஏறத்தாழ ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக, ‘கொவிட்-19’ பெருந்தொற்று ஆட்டம் காணச் செய்துகொண்டிருக்கிறது. ‘கொவிட்-19’ இன் கோரமுகத்தை, இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையில், இலங்கை வாழ் மக்கள், ஆரோக்கிய ரீதியான சவாலை மட்டுமல்ல, வாழ்வாதார ரீதியான சவாலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கொவிட்-19’ வெறும் பெருந்தொற்று நோய் மட்டுமல்ல; அதன் விளைவுகள், இந்நாட்டின் உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் தள்ளாட்டம் காணச்செய்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில், இலங்கை நின்று கொண்டிருக்கிறது. உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என…
-
- 0 replies
- 329 views
-
-
பொறுப்பை உணர்வதும் முக்கியம் லக்ஸ்மன் மக்கள் கிளர்ச்சி அடிப்படைவாதத்தின் பாலான ஒன்றாக மாறிவிடும் ஆபத்து இலங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களை அடிப்படைவாதம், அதன் கட்டுக்குள் வைத்திருக்கின்ற நிலையானது மிகவும் பாரதூரமான அழிவையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்று அனைவரும் அச்சப்பட வேண்டியதே இதற்குண்டான பிரதிபலனாக இருக்கப்போகிறது. கடந்த காலங்களின் பிழையான தீர்மானங்கள், விட்டுக் கொடுப்பின்மை, உரிமைகளை கௌரவிக்காமை, மதிப்பளிக்காமை காரணமாக, நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினையானது தீர்வுக்கு உட்படுத்தப்படாமலேயே காலங்கடத்துகின்ற ஒரு பாரதூரமான விடயமாக இருந்துவருகிறது. உரிமைகள் மீறப்படுவதானது, தாம் செய்த பிழைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியா…
-
- 0 replies
- 520 views
-
-
பட்டு வேட்டியும் துண்டுத்துணியும் உட்காயம் போல் இருந்து வந்த, நல்லாட்சியாளர்களுக்கிடையிலான முறுகல்கள், வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதியை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மறுபுறமாக, “அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியினர் ஊழல் மேற்கொண்டால், அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஊழலுக்கு எதிராகச் செயற்படுவதற்குத் எனது பதவி ஒரு தடையாக இருந்தால், அதைத் துறப்பதற்குத் தயார்” என ஜனாதிபதி கூறியிருக்கின்றார். உற்று நோக்கும்போது, இவையெல்லாம் யுத்தமொன்றுக்கு முன்னரான பேரிகைச் சத்தம் போலவே காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நல்லாட்சியாளர…
-
- 0 replies
- 403 views
-
-
முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களே இலட்சுமண ரேகை கடக்கும் தருணமிது! ஸ்ரிவன் புஸ்பராஜா கௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்களே! நீங்களாகவே உங்களைச் சுற்றி வரைந்திருக்கும் இலட்சுமண ரேகையை கடந்து தமிழ் மக்களின் எதிர்கால இருப்பினை உறுதிசெய்வதற்கு தீர்க்கமான முடிவெடுக்கும் தருணமிது. இதனை தவறவிடின் சமபந்தன்-சுமந்திரன் குழுவின் தமிழினத் துரோகத்தை விஞ்சியதான வரலாற்றுப் பழியை நீங்கள் ஏற்கும் நிலை உருவாகும் என்பதனையும் இத்தருணத்தில் ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். உண்மை கசப்பானதாகத்தான் இருக்கும். கசப்பானதாக இருக்கின்றதென்பதற்காக உண்மையை உரைக்காது மௌனித்திருக்க முடியாது. அவ்வாறு நாமும் மௌனித்திருந்தோமேய…
-
- 0 replies
- 374 views
-
-
-
- 0 replies
- 364 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்; தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன? by Jothilingam Sivasubramaniam - on December 16, 2014 படம் | Dinuka Liyanawatte/REUTERS, SRILANKABRIEF ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கலாம் என்பது தொடர்பாக இன்று பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்குத் தொடர்பில்லாத தேர்தல் பற்றி பெரிய அக்கறையினைக் காட்டத்தேவையில்லை என தமிழ் சிவில் சமூக அமையம் கருத்துத் தெரிவித்துள்ளது. தமிழ் டயஸ் போறாவின் ஒரு பகுதியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் கருத்துக்கணிப்பினை வெளிப்படுத்தும் வகையில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தது. ஆனாலும், சம்பந்தன் அதனை நிராகரித்து இருந்தார். ஆரம்பத்தில் …
-
- 0 replies
- 546 views
-
-
இலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன Gopikrishna Kanagalingam / 2018 நவம்பர் 22 வியாழக்கிழமை, மு.ப. 01:57Comments - 0 இவ்வாண்டு ஜூன் முதலாம் திகதி, இப்பத்தியாளரின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில், “மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்துகளைப் பார்க்கும் போது, எனது நண்பர்களுக்கு நான் வழக்கமாகச் சொல்வதைத் தான் என்னால் சொல்ல முடியும்: மைத்திரிபால சிறிசேன என்பவர், [ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி] ட்ரம்ப்பின் இன்னொரு வடிவம். கொள்கைகள் பற்றி இருவருக்கும் எதுவும் தெரியாது; இருவரையும் சுற்றி, திறனில்லாத அலுவலர்கள் இருக்கிறார்கள்; அத்தோடு அவர்களிருவரும் சர்வாதிகாரிகளாக மாற விரும்புகின்றனர்” என்று பதிவுசெய்யப்பட்டது. இக்கருத்து, சிறிது மிகைப்படுத்தப்பட்டது போல அப்போது தெரிந்திரு…
-
- 0 replies
- 1k views
-
-
நாதியற்ற தமிழன்..! ஈழத்தின் பூர்வீகக்குடிகளான தமிழன் செத்துமடிந்து கொண்டிருக்கின்றான். [ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 06:26.57 AM GMT ] உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆம்...! தமிழனின் இன்றைய மற்றும் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து பார்க்கும் போதெல்லாம் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகின்றார். தமிழீழப்போராட்டம் இன்று இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து தமிழினத்தின் விடுதலை…
-
- 0 replies
- 344 views
-
-
ஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன?- யதீந்திரா அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) கட்சி மகாநாடு தொடர்பில் அதிருப்திகள் வெளியாகியிருந்தன. குறித்த மகாநாட்டின் போது வெளியிடப்பட்ட வரலாற்று ஆவணம் ஒன்றே மேற்படி அதிருப்திகளுக்கான காரணம். அந்த ஆவணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் பத்மநாபாவின் கொலை உட்பட, டெலோ இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது வேண்டுமென்றே விடுதலைப் புலிகளை அவமானப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்போ இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு விடயம் என்று கூறுகிறத…
-
- 0 replies
- 611 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
ஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும் கே. சஞ்சயன் / 2019 ஓகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11:30 Comments - 0 மிக முக்கியமான தருணமொன்றில், இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்குப் பின்னாலுள்ள அரசியலும் அரசியலில் எதிர்பார்க்கப்படும் தாக்கங்களும், மிக முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை. ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இந்த நியமனம் இடம்பெற்றிருக்கிறது. அதுவும், பிரதான வேட்பாளராகப் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவரே, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு, சர்வதேச அளவில் கடு…
-
- 0 replies
- 611 views
-
-
காணி நிலம் வேண்டும் - நிலாந்தன் இம்மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான ஐ.நா.நிபுணர் ஒருவர் பங்குபற்றியிருக்கிறார். அவர் இது விடயத்தில் பரந்துபட்ட அனுபவமும் நிபுணத்துவ அறிவும் மிக்கவர் என்று கூறப்படுகிறது. மீள்குடியேற்றத்துக்கான ஒரு பொருத்தமான கொள்கையை வகுப்பதே இக்கூட்டத்தின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது. இக்கூட்டம் நடத்தப்படுவதற்கு முதல் நாள், அதாவது நவம்பர் 30 ஆம் திகதி யாழ். நூலக கேட்போர் கூடத்தில் ஒரு அறிக்கை வெளியீட்டு வைபவம் இடம்பெற்றது. வவுனியாவைத் தளமாகக் கொண்டியங்கும் 'மாற்றம் நிறுவனம்' இவ்வறிக்கையை வெளியி…
-
- 0 replies
- 790 views
-
-
இராணுவப் புரட்சி குறித்த அச்சத்தில் மைத்திரி, ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ FEB 28, 2016 பலவீனமுற்றிருந்த இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான காலஅவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு நோர்வேயின் உதவியைப் பெற்றுக் கொண்டது. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டளை அதிகாரியாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடனான சூடான விவாதத்தைத் தொடர்ந்து கொழும்பு இராணுவத் தலைமையகத்திற்கு கடந்த வாரம் இடம்மாற்றப்ப…
-
- 0 replies
- 664 views
-
-
காற்றாலையும் என்பிபியும்! மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு எதிராகவும் காற்றாலைக்கு எதிராகவும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் சில கிழமைகளுக்கு முன்பு அரசுத் தலைவரை சந்தித்து உரையாடி இருந்தார். அதில் அவர் பேசிய மற்றொரு விடயம் பின்னர் ஊடகங்களில் சர்ச்சைக்குரியதாக மாறியது.மன்னார் மாவட்ட வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்காக அதனை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆயர் கேட்டதாக ஒரு தகவல் ஊடகங்களில் வெளிவந்தது. அந்த ஆஸ்பத்திரி மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் வருகிறது. அதனை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது ஏற்கனவே தரப்பட்ட அற்ப சொற்ப அதிகாரத்தையும் மத்திய அரசாங்கத்திடம் தாரை வார்த்து கொடுக்கும் ஒரு முயற்…
-
- 0 replies
- 168 views
-
-
இலங்கை அரசமைப்பு தேர்தல் ஜனநாயக நாடு என்ற நிலை மாறலாம் – அலன்கீனன் அல்ஜசீரா- அசாட் ஹாசிம் பொதுத்தேர்தல் தாமதமாகியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை மீளகூட்டுவதில்லை என்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட முக்கிய அரசமைப்பு வழக்கு தொடர்பில் இலங்கையின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்கு இலங்கையின் ஜனநாயகத்தின் மீது நீடித்துநிலைக்ககூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வருட ஆரம்பத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீள கூட்டுவது தொடர்பில் உள்ள சட்டபூர்வதன்மை குறித்து ஆறுமனுதாரர்களும் ஜனாதிபதி சட்டத்தரணியும் விவாதிக்கும் விசாரணைகள் திங்கட்கிழமை ஆரம்பமாகின. இந்த விவகாரத்தின் மையமாக …
-
- 0 replies
- 371 views
-
-
அன்பு உறவுகளே பல தடைகள்,எதிர்ப்புக்கள்,துரோகங்கள்,பின்னடைவுகள்,அழிவுகளைத்தாண்டி எமக்கான ஒரு நாட்டை,சுபீட்சமான வாழ்வைக்கட்டியமைக்க வேண்டிய தேவை எம் ஒருவருக்கும் கடமைகளாக உள்ளன. சாதி,மத,கட்சிபேதங்களை மறந்து நாம் பயணிக்க வேண்டிய தேவைகள் உள்ளன. வெறும் தூற்றுதல்களும்,துதிபாடுதலும்,சேறடிப்புகளும் எம்மில் ஏதும் பயனுள்ள மாற்றங்களைச் செய்யப்போவதில்லை, சமூகம் குறித்த சிந்தனைகளே அவற்றை முன்னோக்கி வழி நடத்தும், அந்த வகையில் உறவுகளே உங்கள் சமூகம் குறித்த பார்வை என்ன? நல்லவை,தீயவை எல்லாவற்றையும் எழுதுங்கள். முரண்படும் இடங்கள்,ஒன்றுபடும் வழிகள்,மக்களை இணைக்கும் செயற்பாடுகளைத்தெரிவியுங்கள் உறவுகளே நாம் எங்கு நிற்கிறோம் என்பதை உணரமுடியும் அந்த வகையில் எதிர்காலத்திலேனும் ஒற்றுமையுடன் பயணிக…
-
- 0 replies
- 775 views
-
-
"மாதர் தம்மை இழிவு செய்யும் மூடர்களை அழித்திடுவோம்" என உணர்ச்சி பொங்கப் பாடிய பாரதியாரின் பாரத தேசத்தில் இன்று வீதிகளில் வைத்தே பெண்கள் காட்டுமிராட்டித்தனமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன பாருங்கோ... டில்லியில் ஓடும் பஸ்ஸில் பல்கலைக்கழக மாணவி ஒருத்தி மிக வக்கிரக் குணம் கொண்ட காமுகர்களால் படுபயங்கரமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டமை இந்திய நாட்டில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்குப் பாருங்கோ... ஓடும் பஸ்ஸில் நடத்தப்பட்ட மிருகத்தனமான இக்கொடூர வன்புணர்ச்சி அந்த நாட்டிலுள்ள ஒட்டு மொத்த மக்களையும் கதிகலங்க வைத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டுச் சட்ட திட்டங்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. உள்ளூர் சட்ட திட்டங்களில் அதிகார …
-
- 0 replies
- 663 views
-
-
ஜோன் ஹெரியின் வருகை, இலங்கையின் மீதான அமெரிக்க அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? - யதீந்திரா அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது இரண்டாவது தவணைக்கான வெளிவிவகாரச் செயலராக (Secretary of State) ஜோன் ஹெரியை நியமித்திருக்கின்றார். ஒபாமாவின் முதலாவது தவணைக் காலத்தில் வெளிவிவகாரச் செயலராகவிருந்த கிலாரி கிளின்ரன் அப்பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதை விரும்பாத நிலையிலேயே, அவரது இடத்தை நிரப்பும் பொறுப்பு தற்போது ஜோன் ஹெரிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒபாமாவின் முதலாவது தெரிவு ஹெரி அல்ல. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுர் சூசன் ரைஸே (Ms. Susan Rice) இப்பொறுப்பிற்கு நியமிக்கப்படுவாரென்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த செப்டம்பர் பெங்காசியில் அமெரிக்க தூதுவராலயத…
-
- 0 replies
- 612 views
-
-
தேர்தல் கால முகமூடிகளும் முகக் கவசங்களும் ஒவ்வொரு கட்சியினதும் வேட்பாளரினதும் போலி முகமூடிகளைக் கழற்றி, உண்மை முகங்களைக் கண்டறிவதுடன், சுகாதார நடைமுறைகளுக்காக, முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டிய ஓர் இக்கட்டான காலகட்டத்தில், இலங்கை மக்கள் இருக்கின்றனர். முஸ்லிம்களும் தமிழ் மக்களும் இந்த விடயத்தில், அதீத கரிசனை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், ஓகஸ்ட் ஐந்தாம் திகதிக்குப் பின்னர், கைசேதப்பட வேண்டி வரலாம். இந்தத் தேர்தலும் அதற்குப் பின்னர் அமையப் போகின்ற நாடாளுமன்றமும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கப் போகின்றன. எந்தப் பெருந்தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அரசமைப்பு மறுசீரமைப்பு, எம்.சி.சி உடன்படிக்கை, அதிகாரப் பகிர்வு கோட்பாடு, மாகாண சபை முறைமை மீ…
-
- 0 replies
- 375 views
-
-
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன? August 7, 2020 நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குச் சற்றுக் குறைவான ஆசனங்களையே பொது ஜன பெரமுன பெற்றிருந்தாலும், அவர்களின் இலக்கான மூன்றில் இரண்டைப் பெற்றுக்கொள்வது அவர்களுக்குக் கடினமானதல்ல. ஒருவகையில் ஏற்கனவே அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டது என்றும் சொல்லலாம். பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்டது 145. மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஐப் பெறுவதற்கு அவர்களுக்குத் தேவைப்படுவது ஐந்து ஆசனங்கள் மட்டும்தான். அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா (2), அங்கஜன் இராமநாதன் (1), பிள்ளையான் (1) அதாவுல்லா (1) ஆகியோர் மூன்றில் இரண்டு பெரும்பான…
-
- 0 replies
- 547 views
-