Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அண்ணனின் குசினியும் தம்பியின் குப்பையும் வெற்றுக் கடதாசியும் அண்ணனின் குசினியும் தம்பியின் குப்பையும் வெற்றுக் கடதாசியும் நாடோடி புத்தாண்டுக்குப் பின்னர், ஜனவரி 18ஆம் திகதியன்று இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள், கொழும்பு அரசியலில் பேசும் பொருளாகியது. ஒன்று, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆற்றிய அக்கிராசன உரை. மற்றொன்று, தமிழ்பேசும் கட்சிகளால் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்ட கடிதமாகும். இலங்கை அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்த…

  2. அண்ணா பல்கலைக்கழகத்தில் நால்வருணசாதியை வலியுறுத்தும் பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா? பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடமும், சமஸ்கிருதமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்குத் தமிழக தலைவர்களும், சமூக வலைத்தளங்களில் மக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "சம்ஸ்கிருதம் மற்றும் பகவத்கீதையை கட்டாயப் பாடமாக இல்லாமல், விருப்பப் பாடமாக மாற்ற…

  3. அண்ணா ஹசாரே ஒரு தேசத் துரோகி என்றால்..? ஈழதேசம் பார்வையில்..! [size=3] ஆளும் கட்சியின் ஊழல் குறித்து யார் பேசினாலும் அவர்கள் தேசத் துரோகிகள் தான் என்கிறது காங்கிரஸ் பெருச்சாளிகள் கும்பல். காங்கிரஸ் கட்சியின் புதிய கொளகைப்படி, ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுக்கிறார்களோ, யார் பேசுகிறார்களோ, ஊழலுக்கு எதிராக யார் போராடுகிறார்களோ..? அவர்கள் எல்லாம் தேசத் துரோகிகள் என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடிய உதயகுமார் தலைமையில் ஆன போராட்டக் குழுவை மட்டுமின்றி கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் மீது இது போன்றே தேசத் துரோக வழக்குகளை போட்டார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள். அரசுக்கு எதிராக முற்றுகை, அரசின் கொள்கையை எதிர்த்தல் என்றெல்லாம் நேரடியாகவே…

    • 0 replies
    • 550 views
  4. [size=4]"கருணாநிதி, ஜெயலலிதா அல்ல... வைகோ தான் என் சாய்ஸ்!" - குல்தீப் நய்யார்[/size] [size=4]ஆக்கம்: இரா.வினோத்[/size] [size=4]மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங்... பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாத தலைவர்களே இல்லை. இந்தியாவின் மிக மூத்த பத்திரிகையாளர். நேருவின் காதல் கடிதங்கள், லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ரகசியங்கள்... இந்தியாவைப் பரபரக்கவைத்த குல்தீப் நய்யாரின் சாம்பிள் 'ஸ்கூப்’கள் இவை. சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தவரிடம் பேட்டிக்கு நேரம் கேட்டபோது இரவு 9 மணிக்கு வரச் சொன்னார். ஓபராய் ஹோட்டலின் அறையில் 'பிரிட்டிஷ் இந்தியா’வில் துவங்கி 'ராகுல் இந்தியா’ வரை பேசி…

  5. அதாவுல்லாஹ்வுக்கு விழுந்த அடிமேல் அடி முகம்மது தம்பி மரைக்கார் வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது உலகம். அனைத்து ஒழுங்குகளையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலொன்று, ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் புதியதோர் அனுபவத்தை, நாடு எதிர்கொண்டிருக்கிறது. உயிர் பற்றிய அச்சம், மக்களிடம் தொற்றிக் கொண்டுள்ளதால், அரசியல் பற்றிய பேச்சுகள் அமுங்கிப் போய் கிடக்கின்றன. ஆனாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற நம்பிக்கை, மக்களுக்கு இருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தை விடவும், பெரிய அழிவுகளையெல்…

    • 0 replies
    • 1k views
  6. அதிக அவதானம் எங்கள் போராட்டத்தை மேம்படுத்தும். காந்தி மண் தனது சொந்த நிலையெடுப்புக்கும் பிராந்திய போட்டிக்குமாக தமிழர் நலன்களை தமிழர் உரிமைகளை போட்டு மிதிக்கின்றது என்ற விடயத்தை நாங்கள் உணர சரியாக புரிந்து கொள்ள பிறர் அது பற்றி சொன்ன விடயங்களை ஆமோதிக்க எவ்வளவு நாள் எடுத்தது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். எப்போது நாங்கள் அதை புரிந்து கொள்ள ஆரமிபித்தோம்.ஏன் இந்தியா தமிழ் நாட்டு தமிழர் கூட புரிந்து கொள்ள எவ்வளவு காலம் எடுத்துள்ளது என்பது எல்லோரும் தெரிந்து வைத்துள்ள விடையம்.எனவே இதையொட்டிப்பார்தால் எங்களின் தவறுகள் புரியும் எங்கள் பக்கம் உள்ள பலவீனங்கள் புரியும் இப் பல வீனங்கள் எதிரிக்கும் வஞ்சகம் செய்பவர்களுக்கு மிகப்பெரியதொரு வரப்பிரசாதம்.அதாவது நாங்கள் நினைக்…

    • 1 reply
    • 998 views
  7. அதிகரிக்கும் அமெரிக்க ஈடுபாடு By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 03:48 PM (ஹரிகரன்) “ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவின் வருகையினால் அமெரிக்கா முழுத் திருப்தியடைந்திருக்கிறதா என்ற கேள்வி உள்ளது. எனினும் அவர் போன்ற ஆட்சியாளர் ஒருவர் இருப்பது அமெரிக்காவுக்குப் பாதுகாப்பானது தான்” தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும், அந்த நாட்டின் இராஜதந்திரிகளும் கொழும்பில் இரவுபகலாக பணியாற்றிக் கொண்டிருந்தது போலவே, பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பல நாடுகளின் தூதரக மற்றும் இராஜதந்திரச் செயற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. முக்கியமாக அமெர…

  8. அதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இல்லாதொழித்துள்ளதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆயினும் இல்லாமல் செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, பயங்கரவாதம் தலையெடுக்கின்றது. நாட்டில் பிரிவினைவாதம் உயிர்த்தெழுகின்றது என அச்சமூட்டி அரசியல் செய்கின்ற மோசமான அரசியல் பிற்போக்கு இப்போது தீவிரமடைந்திருக்கின்றது. குறிப்பாக ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஊழல்களை ஒழித்து, தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், குடும்ப அரசியல…

  9. 05 AUG, 2025 | 10:09 AM ஆர்.ராம் 2022இல் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக தானே அறிவித்ததன் பின்னரான சூழலில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள மக்கள் கூட்டத்தினர் ஏதோவொரு வகையில் நெருக்கடிக்குள் வாழுகின்ற நிலைமைகள் தோற்றம் பெற்றிருந்தன. குறித்த அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளாகின்றபோதும் சாதாரண மக்கள் மத்தியில் மீளெழுச்சி அடைந்த நிலைமைகள் இன்னமும் தோற்றம் பெற்றிருக்கவில்லை என்பதே கள யதார்த்தமாக உள்ளது. கள ஆய்வுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்கள் ஏதோவொரு வகையில் தமது செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காக போராடிக்கொண்டிருக்கும் நிலைமைகள் தொடர்கின்றன. குறிப்பாக, வாழ்வாதாரத்துக்கான போராட்டம் நீண்டதாக இருப்பது முக்கியமான விடயமாகின்றது. நாட்டின் தற்போதைய பொர…

  10. அதிகரிக்கும் நம்பிக்கையீனம் இலங்கை அரசின் மீது வாள்­போல தொங்கிக் கொண்­டி­ருப்­ப­தாகக் கூறப்­பட்ட ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 2015 ஆம் ஆண்டு தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில் அர­சுக்கு மேலும் இரண்டு வருட கால அவ­காசம் வழங்கி 2017 இல் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்தத் தீர்­மா­னத்தின் மூலம் இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டுள்ள இரண்டு வருட காலம் என்­பது, அர­சுக்கு வழங்­கப்­பட்ட கால அவ­காசம் என்று குறிப்­பி­டு­வது சரி­யான சொற்­பி­ர­யோ­க­மல்ல என்­பது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரா­கிய பாராளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனின் வாத­மாகும். இலங்­கைக்கு எதி­ராக 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட மனித உரிமைப் பேர­வையின் …

  11. அதிகரிக்கும் நெருக்கடி பொது­மக்­க­ளு­டைய காணி­களை உள்­ள­டக்­கிய கேப்­பாப்­புலவு கிரா­மத்­தையும், அதனைச் சூழ்ந்த பிர­தே­சத்­தையும் அடாத்­தாகக் கைப்­பற்றி நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு கால அவ­காசம், பெருந்­தொகை நிதி என்­பன தேவை என நிபந்­த­னைகள் விதிப்­பது வேடிக்­கை­யாக இருக்­கின்­றது. நாட்டில் யுத்த மோதல்கள் கிடை­யாது. தேசிய பாது­காப்­புக்கு நெருக்­க­டி­யான நிலை­மைகள் இருக்­கின்­றன. நெருக்­க­டி­யான சூழல் நில­வு­கின்­றது என்றும் சொல்­வ­தற்­கில்லை. இந்த நிலையில் யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் வரு­டந்­தோறும் தேசிய பாது­காப்­புக்­காக அதிக அள­வி­லான நிதி வரவு செலவுத் திட்­டத்தின் ஊடாக ஒதுக்­கப்­ப­டு­கின்­றது.…

  12. அதிகரிக்கும் வன்முறைகள் – பி.மாணிக்கவாசகம் நாட்டில் வன்முறைகளும், காடைத்தனங்களும், அடாவடியான செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதாகப் பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சாதாரண மக்களுடைய நாளாந்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதே, இதற்குக் காரணம். சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாமல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றதே என்ற ஒரு குரலும் எழுந்திருக்கின்றது. நல்லாட்சி புரிகின்ற அரசாங்கத்தின் கீழ் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கின்றதா என்ற ஏக்கம் கலந்த கேள்வி வியப்போடு வினவப்படுகின்றது. சட்டம் ஒழுங்கு சீராக நடைமுறைப்படுத்தப்ப…

  13. அதிகரிக்கும் வரிகள் - நியாயமா, கொள்ளையா? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ‘வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு ’என்றார் வள்ளுவர். தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம் என்ற வள்ளுவனின் கருத்து, 1776இல் அடம் ஸ்மித் குறிப்பிட்ட நவீன வரியின் கோட்பாடுகளான நியாயத்தன்மை, நிச்சயத்தன்மை, வசதி, செயற்றிறன் என்பதோடு ஒத்தியைகிறது. வரி என்பது ஒரு அரசிற்கு இன்றியமையாததொன்று. ஆனால் அந்த வரியானது மக்களைத் தண்டிப்பதாக அமைந்துவிடக்கூடாது என்பது வரியின் அடிப்படை இயல்பாக அமையவேண்டும். இல்லையென்றால் வழிப்பறிக்கொள்ளைக்காரனுக்கும்,…

  14. அதிகரித்து வரும் நம்பிக்கையீனம் – செல்வரட்னம் சிறிதரன்:- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி வவுனியாவில் நடத்தப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் அரச தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களின் போராட்டத்தில் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருப்பதையே காண முடிகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அமைச்சர்களிடம் நேரடியாகவே கூறிய…

  15. அதிகரித்து வரும் பெளத்த மதவாதம் இலங்கை அர­சி­ய­லா­னது ஒரு இரட்டைப் பிளவு கொண்­ட­தா­கவே எப்­பொ­ழுதும் இருந்து வந்­துள்­ளது என்­பதை சுதந்­தி­ரத்­திற்­குப் பின்­னுள்ள வர­லாற்றுப் புள்­ளிகள் எல்­லா­வற்­றிலும் காணக்­கூ­டிய ஒரு பொதுத்தன்­மை­யாகும். பௌத்த மத ஆதிக்கம், சிங்­களப் பேரி­ன­வாதம் என்ற இரு தண்­ட­வா­ளங்­களில் ஓடும் அர­சியல் தொடரூந்­தாக அல்­லது இரட்டைப் பிற­வி­க­ளாக இலங்கை இருந்­து­ வந்­துள்­ளது என்­ப­தனை சுதந்­தி­ரத்­திற்குப் பின்­னுள்ள அர­சியல் போக்­குகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் இலங்கை அர­சி­யலில் ஊடு­ருவிக் காணப்­படும் பௌத்த மத வாதமும் விகா­ரா­தி­ப­தி­களின் கடும் இன்று நேற்று உரு­வா­கிய ஒரு விட­ய­மல்ல. வர­லாற்றுக் க…

  16. அதிகரித்துச் செல்லும் சம்பந்தன் - விக்கி மோதல்: சம்பந்தன் சிங்கள இராஜதந்திரப் பொறிக்குள் சிக்கிவிட்டார் என்பதன் அறிகுறியா? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்ற இரா.சம்பந்தன் பங்குகொண்ட கூட்டங்கள் எவற்றிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்குகொண்டிருக்கவில்லை. அதேவேளை வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களும் கூட சம்பந்தனின் நிகழ்வுகளில் பங்குகொண்டிருக்கவில்லை. இது பற்றி இப்பத்தியாளர் வடக்கு மாகாண சபை அமைச்சர் ஒருவரிடம் வினவியபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார். ‘நாங்கள் வேண்டுமென்று எதனையும் …

  17. அதிகரித்துவரும் அமெரிக்க அழுத்தங்களும் அரசின் எதிர்தந்திரோபாயமும் அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீபன் ரப் கொழும்பு வந்திருப்பதானது, அரசின் மீதான அழுத்தங்களில் மேலும் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். முன்னர் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேசத்தின் கரிசனைகளை முற்றாக நிராகரித்த அரசு, அத்தகைய விசாரணைகளை அனுமதிக்க முடியாதென்றும் கூறிவந்திருக்கிறது. நமக்கு நினைவிருக்கலாம் - ஜ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்த மகிந்த அரசு, நிபுணர் குழு இலங்கையில் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை கோரியபோது அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தது. ஆனால் இன்று, அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஸ்டீபன் ரப்பின் விஜயத்தை…

    • 0 replies
    • 523 views
  18. ''அரசு என்பது துப்பாக்கிகளினால் நிலைநிறுத்தப்படவில்லை, வார்த்தைகளினால் ஆன பிரதிகளினால்.'' உலகில் காலகாலமாக அதிகாரமும் அடக்குமுறையும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது அடக்குமுறையை நிகழ்த்தும் சமூகம் எண்ணிக்கையளவில் மிகக்குறைவானதாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்படும் சமூகம் பெரியதாக இருப்பதும். எப்படி இது சாத்தியமாயிற்று. அதன் விடைதான் முதல்வரிகளில். நமக்குள் மூன்றுவிதமான சமூக அமைப்புகளை நாம் காணலாம். முதலாவது அடக்குமுறைக்கு உட்படும் அடிமை சமூகம், இரண்டாவது அடக்கும் அதிகார சமூகம், மூன்றாவது தரகு சமூகம். வரலாறு என்பது ஒரு சமூகத்தை பற்றிய செய்தியாக, ஆவணமாக, செல்வமாக உணரப்படுகிறது. இதன் மீதான நம்பிக்கைகளே அடுத்தடுத்த தலைமுறைகளை வழிநடத்திச் செல்கிறது. …

    • 0 replies
    • 1.3k views
  19. அதிகார பலத்தால் அடக்க முயலும் பெரும்பான்மை சமூகம்.

  20. அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி - புருஜோத்தமன் தங்கமயில் 2018 ஒக்டோபர் 31 புதன்கிழமை, மு.ப. 12:17Comments - 0 நாட்டு மக்களின் இறைமை மீண்டும் ஒருதடவை கேலிப்பொருளாகியுள்ளது. மக்கள் ஆணையைப் பெற்று, ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, அதே மக்களின் ஆணையைப்பெற்று, ஜனநாயக மரபுகளுக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டு, ஆட்சியமைத்த அரசாங்கமொன்றைப் பலவந்தமாகப் பதவி நீக்கியிருக்கின்றார். இது, அரசமைப்பு மீதான அச்சுறுத்தல் மாத்திரமல்ல, மக்களின் இறைமையைப் பாதுகாக்கின்ற, பொறிமுறைகள் மீதான தாக்குதலும் ஆகும். மக்களின் இறைமையைப் பாதுகாக்கும் பொறிமுறைகளில், நாடாளுமன்றமும் நீதித்துறையும் சட்டத்தின் ஆட்சியும் பிரதானமானவை. ஜனாதிபதிப் பதவியும் அதன் ஒரு வடிவமே. …

  21. அதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும் - வீ.தனபாலசிங்கம் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்களினால் எளிதாக அதிகாரத்தை துறந்துவிட முடிவதில்லை. தங்களது வாழ்நாள் பூராவும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு அத்தகைய தலைவர்கள் அக்கறை காட்டிய ஏராளமான உதாரணங்கள் வரலாற்றில் உண்டு. அதிகாரத்தை தொடருவதற்கு வழிவகுக்கக்கூடிய சூழ்ச்சித்தனமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அவர்கள் அவற்றுக்கு " அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் " என்று நாகரிகமாக நாமம் சூட்டியும் விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தாங்கள் பதவியில் இல்லாதபட்சத்தில் எளிதில் குழப்பநிலைக்கு உள்ளாகிவிடக்கூடிய ஒரு ஆட்சி நிருவாகக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதையும…

    • 3 replies
    • 529 views
  22. அதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்? -இதயச்சந்திரன் இலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எவ்வளவு போராட்டங்கள். இதுவே ‘இலங்கை அரசியலின் அதியுன்னத அறம்சார்ந்த போராட்டம்’ என வரலாற்றில் எழுதிவிடுவார்கள் போல் தோன்றுகிறது. இவர்கள், அதிகார மோதல் பற்றி விலாவாரியாகப் பேசுகிறார்கள். அரசியல் யாப்பிலுள்ள சரத்துக்களின் உப பிரிவுகள் உட்பிரிவுகள் குறித்தெல்லாம் ஆழமாகவும் அகலமாகவும் பேசுகிறார்கள். நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையைக் கொண்டு வந்த கட்சி இப்போது படும்பாடு சொல்லி மாளாது. இந்த அதிபர் முறைமையானது, நாடாளுமன்றின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் ஏக போக உரிமையைக் கொண்டது என்பதனை ஜெயவர்தனாவும் அறிவார் ரணிலும் புரிந்து கொள்வார். தாங்கள் உ…

  23. அதிகாரத்தின் உரையாடல்: ஆண்டகைக்கும் அழைப்பு வந்ததா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த வார அரசியற்களம் ‘தொலைபேசி அழைப்பு’களால் நிரம்பியிருந்தது. இங்கு இரண்டு நிகழ்வுகள் முக்கியமானவை. ஒன்று, கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில், விஜயதாஸ ராஜபக்‌ஷ எம்.பி தெரிவித்த கருத்துகளை அடுத்து, ஜனாதிபதி, அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கடுந்தொனியில் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, தான் பேசிய கருத்துக்கு முற்றிலும் மாறாக, மறுநாள் கருத்து வெளியிட்டிருந்தார். அதிகாரத்தின் குரலின் வலிமையை, நாம் ஐயப்பட வேண்டியதில்லை. ஆனால், அதை விளங்குவதே இன்று நம்முன்னுள்ள சவால். ஈஸ்டர் தாக்குதல்கள் விசாரணைகள் தொடர்பில், அண்மைக…

  24. அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் குறியீடு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூன் 11 அதிகாரம், என்றென்றைக்கும் ஆனதல்லளூ மாற்றங்கள் வந்தே தீரும். உலக வரலாற்றில், நிலைத்திருந்த சாம்ராஜ்யங்கள் என்று எதுவும் இல்லை. கிரேக்கர் தொடங்கி, அமெரிக்கர் வரை யாரும் விதிவிலக்கல்ல. மாற்றங்கள் வருவதற்குக் காலமெடுக்கும். ஆனால், அந்த மாற்றங்களை, ஒரு சிறுபொறி தொடக்கி வைக்கும்; அது, காட்டுத் தீயாகப் பரவும்; ஆதிகார அடுக்குகளை அசைக்கும்; மக்களைச் சிந்திக்க வைக்கும். நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகத் தெளிவாக இருக்கும். இது, மக்களின் தெரிவை மிக இலகுவாக்கும். அவ்வாறான ஒரு சிறுபொறியே, இப்போது பற்றியுள்ளது. ஆனால், இது காட்டுத் தீயாகுமா, காணாம…

  25. அதிகாரத்தை பகிர மறுப்பது தமிழீழத்திற்கு வழிவகுக்குமா? வட மாகாண சபை - இன்றுடன் ஒருவருடம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் ஆட்சி அமைத்து இன்றுடன் ஒரு வருடமாகின்றது. வட மாகாண சபையுடன் இனப்பிரச்சினையை முடக்கி விடலாம் என எதிர்ப்பார்த்த இலங்கை அரசின் எண்ணம் ஈடேறவில்லை. இலங்கை இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்கும் முகமாக இலங்கை அந்திய ஒப்பந்தத்தின்படி 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்று அமைக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் 25 வருடங்களின் பின்னர் பிரிக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.