Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இந்திய – இலங்கை ஒப்பந்தம், 13, தமிழர் அரசியல்! யதீந்திரா அனைவருமாக இணைந்து இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைப்பது தொடர்பில், 11 தமிழ் கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு வரலாற்று சம்பவம். இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இதனை குழப்புவதற்கும் பல முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. தேசியத்தை கைவிட்டுவிட்டனர், 13இற்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முடக்க முற்படுகின்றனர், 1987இற்கு பின்னர் இத்தனை உயிர்கள் போனதெல்லாம் எதற்காக – இப்படியான பலவாறான அலங்கார நச்சு வரிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. எனினும் இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் உறுதியாக இருந்தமையால், இந்த முயற்சி இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றது. ஆரம்பத…

  2. உலகின் தலையீடு நடக்கக்கூடியதா? தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது கடைசி ஆயு­தத்­தைக் கையில் எடுத்­துள்­ளது. சிங்­கள அர­சு­கள் தாமா­கத் தீர்­வைத் தரப்­போ­வ­தில்லை என்­ப­தால் உலக நாடு­கள் மற்­றும் ஐக்­கிய நாடு­கள் போன்ற உலக அமைப்­பு­கள் தலை­யிட்டு தமி­ழர்­க­ளுக்­கும் சிங்­க­ள­வர்­க­ளுக்­கும் இடை­யில் நடு­நிலை வகிக்­க­வேண்­டும் என்­பதே அந்த ஆயு­தம். 2015ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் ஒரு கூட்டு இணக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­னார். அரச தலைவருக்கான தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­பது என்­பத…

  3. புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு? புதிய அமைப்­பா­னது ஒரு குழு­வாக – ஓர் அமைப்­பாக மட்­டுமே செயற்­படும் என்ற தீர்­மா­னத்தில் ஆலோ­ச­னை­களும் கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெற்று வரு­வ­தாகத் தெரி­கின்­றது. தலைவர் என்று ஒருவர் இருக்­க­மாட்டார் என்றும், குழு­வா­கவே அந்த அமைப்பு செயற்­படும் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்டு, அதற்­கான யாப்பு வரைபு உள்­ளிட்ட ஆரம்­ப­க்கட்ட வேலைகள் நடை­பெற்று வரு­வ­தாகத் தக­வல்கள் கசிந்­தி­ருக்­கின்­றன. தன்மை காணப்­பட்­டது. சம அந்­தஸ்­து­ட­னேயே, விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச தரப்­பி­ன­ருக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. துர­திர்ஷ்ட­வ­ச­மாக விடு­த­லைப்­பு­லிகள் இரா­ணுவ ரீதி­யாகத் …

  4. 2018 : தமிழ் மக்களுக்குப் புத்தாண்டுப் பலன் எப்படி? ஆண்டுகளைக் கணக்கிடும் பொழுதும், மதிப்பிடும் பொழுதும் கல்வியாண்டு, புலமையாண்டு, நிதியாண்டு என்றெல்லாம் பிரிப்பதுண்டு. ஆனால் அரசியலாண்டு என்று பிரிப்பதில்லை. அரசியலில் ஆட்சி மாற்றங்களின் போதும் அமைச்சரவை மாற்றங்களின் போதும், தலைமைத்துவ மாற்றங்களின் போதும், படைத்துறை வெற்றிகளின் போதும் நிலமைகள் மாறுவதுண்டு. எனினும் ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருக்கக் கூடிய திருப்பகரமான மாற்றங்களின் அடிப்படையில் ஓர் அரசியலாண்டைக் குறித்து மதிப்பீடு செய்யலாம். இப்பொழுது புத்தாண்டை மதிப்பீடு செய்வதென்று சொன்னால் அதை கடந்த ஆண்டிலிருந்தே செய்யத் தொடங்க வேண்டும். ஏனெனில் கடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை எவை? இழந்தவை எவை? என்பவற்றைத் த…

  5. ராஜபக்சாக்களுக்கு அதிகாரம் தேவை ; மக்களுக்கு ராஜபக்சாக்கள் தேவையா ? 13 OCT, 2022 | 07:20 AM ராஜபக்ச குடும்பத்துக்கு இலங்கை மக்களின் குறிப்பாக சிங்கள மக்களின் வேறு எந்த குணாதிசயத்தை விடவும் அவர்களது மறதியில் மிகவும் கூடுதல் நம்பிக்கை இருக்கிறது போலும். சுதந்திர இலங்கையின் வரலாறு காணாத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான தவறான ஆட்சிமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் தங்களை ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டியடித்தார்கள் என்பதையெல்லாம் பற்றி கொஞ்சமேனும் சிந்திக்காமல் ராஜபக்சாக்கள் மீண்டும் அரசியலில் செல்வாக்கான நிலைக்கு வரமுடியும் என்ற நம்பிக்கைகொண்டவர்களாக தங்களை மீள அணிதிரட்டிக்கொண்டு மக்கள் முன்னிலையில் வர ஆரம்பித்…

  6. சுதந்திர இலங்கையில் சாத்தானிடம் வரம் கேட்கும் நிலை… February 6, 2023 —- கருணாகரன் —- இலங்கை பொருளாதார ரீதியாக மீண்டெழுவது எப்பொழுது என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. ஆனால், ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகளுக்குள் நாட்டில் யாருக்கும் அடிபணியாத பொருளாதார வலுவை உருவாக்குவேன் என்றிருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எதனை ஆதரமாகக் கொண்டு, எப்படி அந்தப் பொருளாதார வலுவை உருவாக்கப் போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. அவர் மட்டுமல்ல, வேறு எந்தப் பொருளாதார நிபுணர்களும் கூட இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வழிகள் எப்படி அமைய வேண்டும்? எவ்வாறு அமையமுடியும் என்று சொல்லவில்லை. ஆக மொத்தத்தில் இலங்கையின் பொருளாதார மீட்சியைக் குறித்து எவருக்கும் எதுவுமே தெரியா…

  7. போருக்குப் பின்னான தமிழர் அரசியல் வரலாற்றில் இது மிகவும் முக்கியமான காலக் கட்டமாகும். எங்கள் நாடாளுமன்ற அரசியல் அரங்கின் மிக முக்கியமான புதிய அரசியல் அமைப்பு போட்டி ஆரம்பிக்கவுள்ளது. இதுவே இலங்கைத் தீவின் சுதந்திரத்துக்கும் ஒற்றுமைக்கான கடைசிச் சந்தர்பமாகும். நாம் விரும்பினால் என்ன விரும்பா விட்டால் என்ன தமிழ் தேசியக் கூட்டமைபினர் மட்டுமே எங்களுக்காக கழம் இறங்க மக்கள் ஆணையை பெற்றிருக்கிறார்கள். இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் நாம் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன இந்த புதிய அரசமைப்பு சுற்றில் நாம் கூட்டமைப்பை அதரித்தே ஆகவேண்டும். ஆதலால் தயவு செய்து என்னுடன் சேர்ந்து சுமந்திரன் உட்பட அனைத்துக் கூட்டமைப்பினர் மீதுமான விமர்சங்களை சில மாதங்களுக்கு இடை நிறுத்தி …

    • 0 replies
    • 1.4k views
  8. கவனிக்க வேண்டிய கணக்கெடுப்புகள் காரை துர்க்கா / 2019 ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை, மு.ப. 07:01 Comments - 0 தமிழர் பிரதேசங்களில் இறுதிப் போர் நடைபெற்று ஒரு தசாப்த காலத்தின் பின்னர், போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக் குழு ஆகிய இரண்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இப்பணியை மேற்கொள்ள உள்ளன. இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கையில் உள்ளவர்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் தங்களிடமுள்ள விவரங்களை வழங்க வேண்டும் எனவும் இவ்விரு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. “ஆகக் குறைந்தது, இறந்தவர்களின் பெயர்களைச் சேகரிப்பதன…

  9. 11 FEB, 2024 | 07:22 PM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி ஐக்கிய நூற்றாண்டு முன்னணி அடுத்து வருகின்ற சகல தேர்தல்களிலும் போட்டியிடும். நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம். எமது கட்சியில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை பிரகடனம் செய்யவேண்டும். அதன்பின்னரே நாங்கள் வேட்புமனு கொடுப்போம் என்று ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசான் டி விஸ்ஸர் தெரிவித்தார். பதிமூன்றாவது திருத்த சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகளை பலப்படுத்த வேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது அவசியம். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கு மக்களின் பிரச்சினைகளுடன் பார்க்கையில் வேறுபட்டவை. அதுபோன்ற மத்திய மாக…

  10. யாருக்கு வெற்றி? பி.மாணிக்கவாசகம் March 27, 2019 நியாயத்தையும் நீதியையும் நிலைக்கச் செய்வதில் ஐநாவையும் சர்வதேசத்தையும் எதிர்கொள்வது அல்லது கையாள்வதில் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களின் அணுகுமுறை மிக மிக முக்கியமானது. ஐநாவையும் சர்வதேசத்தையும் உரிய முறையில் கையாள்வதன் ஊடாக மட்டுமே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அநியாயங்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல், நான்கு பொறிமுறைகளைக் கொண்ட நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கும் இந்த அணுகுமுறை மிக மிக அவசியமாகும். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்று ஐநா மன்றமே வலிந்து முன்வந…

  11. முடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும் காரை துர்க்கா / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 12:46 Comments - 0 கடந்த சனிக்கிழமை (மே 18), வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு, தமிழர் தாயகத்தில் இதயம் கனத்த கவலையுடனும் எழுச்சி பொங்கிய உணர்வுடனும் நடைபெற்றது. ‘தமிழர்கள் மத்தியில் பயத்தைத் தக்க வைத்து, உளவியல் போர் செய்கின்றது ஸ்ரீ லங்கா அரசாங்கம்’ என, அங்கு வெளியிடப்பட்ட நினைவேந்தல் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ஆயுதப் போர் அற்றுப் போன நிலையில், உளவியல் போர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை, அனைத்துத் தமிழ் மக்களும், அன்றாடம் அனுபவித்தும் உணர்ந்தும் வருகின்றனர். அதன் நீட்சி…

  12. Well done Ranil. ரெலோ புளட் ஜனநாயக போராளிகளை பொதுக்கட்டமைப்பிலிருந்து வெளியேற்று.

  13. இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையின் வரலாறு பட மூலம், Getty Images கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து சில மாதங்களுக்கு முன்னர் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையை பேரழிவிற்கு உட்படுத்தியது. 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்து ஒரு சில நாட்களின் பின்னர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் தீவிர இஸ்லாமிய குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது வெளியானது. எவ்வாறாயினும், குற்றவாளிகளை இஸ்லாமிய நம்பிக்கையினைப் பின்பற்றுபவர்கள் என மேம்போக்காக அடையாளம் காண்பது இலங்கையில் வாழும் பரந்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறையின் வாயில்களைத் திறக்கக் காரணமாக அமைந்தது. …

  14. மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் என்ன நடக்கிறது? நிலாந்தன். மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியவை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குத் தூலமான ஓர் உதாரணம் தையிட்டி விகாரை. உலகம் முழுவதையும் பெருந் தொற்று நோய் கவ்விப் பிடித்த ஒரு காலகட்டத்தில் தையிட்டி விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதாவது கொரோனா வைரஸ் மனிதர்களைத் தாக்கிய அந்தக் காலத்திலும் இலங்கைத் தீவின் இனவாத வைரஸ் உயிர்ப்புடன் பரவியது என்று பொருள். அப்பொழுது நடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அப்பொழுது இருந்த பிரதேச சபையின் நிர்வாகம் - அதாவது கூட்டமைப்பின் அதிகாரத்துக்குள் இருந்த பிரதேச சபை நிர்வாகம்-சிங்கள பௌத்த மயமாக்கலுக்குத் துணை போனது. விளைவாக இ…

  15. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அதன் உருவாக்கத்திற்குப் பின்னால் இருந்தவர்களில் ஒருவரான சிவராம், வீரசேகரி வாரப் பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார். அதில் ''தமிழ் மக்களாகிய நாம் கட்சிகளுக்கு அல்ல கொள்கைகளுக்கே வாக்களிக்க வேண்டும்' என்று எழுதியிருந்தார். கட்டுரை வெளிவந்த சில நாட்களின் பின் அவரை ஏ-9 சாலையில் கண்டபோது நான் கேட்டேன், ''வழமையாக நீங்கள் எழுதும்போது ஒரு மூன்றாம் ஆளாக சாட்சி நிலையில் இருந்து எதையும் சொல்வதுண்டு. ஆனால், இம்முறை தன்னிலைப்பட்டு 'நாங்கள் கொள்கைக்கு வாக்களிக்க வேண்டும்' என்று கேட்டிருந்தீர்கள். சாட்சி நிலையிலிருந்து நீங்கி தன்னிலையிலிருந்து எழுதக் காரணம் என்ன' என்று சிவராம் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டு நி…

  16. மேலும், மேலும் பலவீனமடையும் தமிழர் அரசியல் - யதீந்திரா தமிழர் அரசியல் அதிகம் அதிகம் பலவீனமாகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு வெளியிலிருப்பவர்கள் எவரும் காரணமல்ல. மாறாக, தமிழர் அரசியல் தமிழர்களாலேயே பலவீனப்படுத்தப்படுகின்றது. அண்மையில் போராட்டம் என்னும் பெயரில் மேற்கொள்ளப்பட்ட சில நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் விவாதங்களும், இதற்கு சிறந்த உதாரணமாகும். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை – என்னும் சுலோகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக பேரணியில் மக்கள் தன்னியல்பாகவே பெருமளவில் திரண்டிருந்தனர். 2009இற்கு பின்னர் இடம்பெற்ற மிக முக்கியமானதொரு தன்னியல்பான எழுச்சியாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டியை குறிப்பிடலாம். ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற சம்ப…

  17. ஆஸ்டெக் பேரரசின் நரபலி வரலாறு: மத்திய அமெரிக்காவில் ஓங்கி வளர்ந்த நாகரிகத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 1 ஆகஸ்ட் 2021, 01:41 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS (உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், ஏழாம் கட்டுரை இது.) உலகின் பல நாகரிகங்கள், சமூகங்கள் தோன்றி மறைந்திருந்தாலும், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்டெக் சமூகத்தின் வரலாறு திகில் நிறைந்த காலகட்டமாக அறியப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில் மத்திய மெக்சிகோ …

  18. தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்- அமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி கிளிநொச்சி அலுவலகத்தை நல்லிணக்கச் செயற்பாடு என்று பாராட்டிய ஆணையாளருக்கு மற்றுமொரு நம்பிக்கையா? வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவ…

  19. கடப்பாட்டுக்கா, நிலைப்பாட்டுக்கா இந்தியாவின் முன்னுரிமை? பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அண்மையில் இலங்கை வந்திருந்தார். தனிப்பட்ட பயணமாக வந்திருந்தாலும் அவர் வெளிவிவகார அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரையும் அவர் சந்தித்திருந்தார். ஆனாலும், அவர்களையெல்லாம் தானாகத் திட்டமிட்டுச் சந்திக்கவில்லை என்றும், தம்மைச் சந்திக்க விரும்பியவர்களையே சந்தித்தேன் என்ற பாணியில் அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார். யாழ். சென்றிருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், அங்கு வடக்கு மாகாண முதலமைச்…

  20. அதிர்ச்சி வைத்தியம் அளித்த எமர்சன் இலங்கை வந்த ஐ.நா. விசேட நிபுணர் பென் எமர்சனின் அறிக்கை நாட்டில் பாரியதொரு சலசலப்பை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கல் செயற்பாட்டில் அலட்சியப் போக்கையும் இழுத்தடிக்கும் விதமான அணுகுமுறையையும் முன்னெடுத்து வந்த அரசாங்கம் சற்று ஆடிப்போய்விட்டது என்றே கூறலாம். சர்வதேசம் விழிப்புடன் தான் இருக்கின்றது என்பதை எமர்சனின் அறிக்கை ஊடாக புரிந்துகொண்ட அரசாங்கம் சற்று விழித்துக்கொண்டது என்றே கூறலாம் அதிர்ச்சி மற்றும் ஆச்­ச­ரியம் கலந்த ஒரு அறி­விப்பை கடந்­த­வாரம் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் பென் எமர்சன் வெளி­யிட்­டி­ருந்தார். இதனால…

  21. புலம்பெயர்ந்த தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் - அரசறிவியல் பேராசிரியர் [ வெள்ளிக்கிழமை, 09 மே 2014, 07:55 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவைப் போலல்லாது, அபிவிருத்தியடைந்த நாடுகளில் புகலிடக் கோரிக்கை என்பது குடியுரிமை பெறுவதற்கான முதலாவது படிமுறையாகக் காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் குடிப்பரம்பலில் சிறிலங்காத் தமிழர்கள் நிரந்தரமானவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறு The New Indian Express ஆங்கில ஊடகத்தில் முன்னாள் அரசறிவியல் பேராசிரியர் V Suryanarayanan* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வ…

  22. ஜப்பானைத் தனிமைப்படுத்தும் சிங்கப்பூர் சந்திப்பு - ஜனகன் முத்துக்குமார் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான அண்மைக்காலத்து சமாதான இணக்கப்பாடுகளைத் தொடர்ந்து, வடகொரியத் தலைவருக்கும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறவிருக்கும் நிலையில், குறித்த இரண்டு விடயங்களிலும் தனது பங்கு இல்லாமல் போனமை குறித்து, ஜப்பான் கவலை தெரிவித்துள்ளமை, சர்வதேச விவகாரங்களில் மிகவும் உன்னிப்பாகப் பார்க்கப்பட வேண்டியதாகவும். தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கருத்துத் தெரிவித்த ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, ஐ.அமெரிக்க - வடகொரிய பேச்சுவார…

  23. விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தும் அரசியல்வாதிகள்! (தயாளன்) புரிந்துணர்வு என்பது அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை எந்தக் காலத்திலும் உணர முடியாத விடயம். இதனை எம்.கே.சிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூன்று அரசியல் வாதிகளும் நிரூபித்துள்ளனர். விடுதலை உணர்வு என்றால் என்ன வென்று இவர்களுக்கு சில விடயங்களைச் சுட்டிக் காட்டவேண்டியுள்ளது. ஏனெனில் அரசியல்வாதி என்ற சட்டை இவர்கள் உடம்போடு ஒட்டிவிட்டது . அதனை பிய்த்து எடுப்பது என்பது முடியாத காரியம். முதலில் பரமதேவா விடயம் - கிழக்கில் அவருக்கென்று தனி வரலாறு உண்டு. அவரும் அரசியல் கைதியாக இருந்தார். அவர் விடுதலையாவதற்கு மிகக் குறுகிய காலமே இருந்தது. அப்படி இருந்தும் 23.09.1983 அன்று ம…

  24. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தல் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan தனது தாயார் சிறிமாவோவின் கொள்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால் நாடு வங்குரோத்து அடைந்திருக்காது என்று அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டிருந்தமை நகைப்பை வரவழைப்பதாக இருந்தது. இந்த நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில், 26 ஆண்டுகள் இந்நாட்டின் ஆட்சித் தலைமை பண்டாரநாயக்க குடும்பத்திடம் இருந்திருக்கிறது. முதலில் எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்க, அதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க, அதன் பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க என சுதந்திர இலங்கையின் வாழ்நாளில் மூன்றிலொன்றைவிட அதிககாலம் நாட்டை ஆண்டவர்கள் இவர்கள். பொருளாதாரக் கொள்கை என்பதை தனி…

  25. நடக்கப்போவது என்ன தேர்தல்? எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா பொதுத்தேர்தலா என கயிறுழுப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறத்தால் மீண்டும் நாட்டிலும் ஆட்சியிலும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கான திரை மறைவு வேலைகள் தீவிரம் பெற்று வருகின்றன. மொட்டை மீண்டும் மலர வைத்து ராஜபக்‌ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சி பீடமேற்ற தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார் 7 மூளைக்காரரான பசில் ராஜபக்‌ஷ. தேர்தல் மேகங்கள் கருக்கட்டியுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்‌ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளதால், தங்களின் ஆட்சியை மீள உருவாக்க முடியும், அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்று பொதுஜன பெரமுனவில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.