அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
உலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா? Posted on July 25, 2020 by சிறிரவி 14 0 இலங்கைத்தீவிலே புரையோடிப்போயிருக்கும் சிங்கள உயரினவாத நோயினது தீர்வுக்குத் தடையாக இருப்பது பௌத்தமும் பௌத்தத்தைப் பின்பற்றும்(?) சிங்கள பௌத்த பிக்குகளும் என்பதை நீண்ட வரலாறு பதிவுசெய்தே வருகிறது. 1957இலே ஏற்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை 1958இலே கிழித்ததுமுதல் இன்றுவரை தொடரும் சிங்கள பௌத்த பிக்குகளின் தமிழின அழிப்பிற்குத் துணைநிற்பதைக் கண்டிக்கத் தவறியதன் விளைவே தீவின் துயரத்துக்குக் கரணியமாகவுள்ளதென்பது வெள்ளிடைமலை. ஏன் இவர்களது அடாவடிகளை இலங்கையிலுள்ள ஏனைய மதத் தலைவர்கள்கூடக் கண்டிக்காதிருப்பது அச்சமா அல்லது அசமந்தப் போக்கா …
-
- 0 replies
- 437 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பிலான தடுமாற்றங்கள் இலங்கையில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயன்முறைகளின் பிரதான நோக்கங்களில் முதன்மையானது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என்றே கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரையில் அந்த ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்திற்குள் தெளிவான நிலைப்பாடுகள் இல்லை என்பதே உண்மையாகும். தடுமாற்றமான கருத்துக்கள் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்ட வண்ணமேயிருக்கின்றன. அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக பிரதமரினால் நியமிக்…
-
- 0 replies
- 347 views
-
-
சண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம கலாநிதி சரத் அமுனுகம கம்யூனிஸ்ட் தலைவரும் தத்துவவாதியும் தொழிற்சங்கவாதியுமான என்.சண்முகதாசனின் பிறந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு அவரின் வாழ்வு மற்றும் பணிகள் மீது கவனத்தை ஈர்த்தமைக்காக “சண்டே ஐலண்ட்” பத்திரிகையின் வாசகர்கள் கலாநிதி தயான் ஜயதிலகவிற்கும் அதன் பிரதம ஆசிரியர் மெனிக் டி சில்வாவிற்கும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனது அனுபவத்தில் நான்கு தமிழ் மார்க்ஸியவாதிகள், சிறுபான்மைச்சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்றாலும்கூட அவர்கள் அங்கம் வகித்த மார்க்ஸிய கட்சிகளினால் அவற்றின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்திற்கு உரியவர்களானார்கள். ஆனால், அவர்களது இறுதியான அரசியல்கதி 1950 க…
-
- 0 replies
- 428 views
-
-
அமெரிக்கச் சீன உரையாடலும் இந்தியாவும் —சீனாவைக் கடந்து பிராந்தியத்தில் இலங்கைத்தீவைத் தனக்குரிய பாதுகாப்பான பிரதேசமாக இந்தியா மாற்ற வேண்டுமானால், அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய வெளியுறவுச் செயலாளர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எவரும் கொழும்புக்கு வந்து செல்ல வேண்டியதொரு தேவையுமில்லை— -அ.நிக்ஸன்- இந்திய வெளியுறவுச் செயலாளர் கஸ்வர்த்தன ஸ்ரிங்லா (Harsh Vardhan Shringla) கொழும்பில் நிற்கும்போதே அமெரிக்கா சீனாவுடன் புதிய இராஜதந்திர உறவு மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் பேச்சுக்களை நடத்தியிருக்கிறது. சீனாவுக்கு எதிரான பிராந்திய நகர்வுகளில் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியான ஒத்துழைப…
-
- 0 replies
- 419 views
-
-
சர்வதேச அழுத்தத்தை தமிழ் தலைமை பயன்படுத்துமா...? இலங்கை தற்பொழுது இராஜதந்திரிகளின் வருகையால் திக்குமுக்காடிப் போயிருக்கின்றது. ஐ.நா. மனிதவுரிமை ஆணையகத்தின் விசேட அறிக்கையாளர், ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர், அவுஸ்திரேலிய நாட்டின் வெளியுறவு அமைச்சர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் என்ற பட்டியலில் சுவிஸ் நாட்டின் தூதுவரும் இணைந்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தை அல்லது ரணில் –மைத்திரி கூட்டரசாங்கத்தை உருவாக்குவதில் இவர்களுடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்ததென்பதை அனைவரும் அறிவோம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஐ.நா. மனிவுரிமைகள் கூட்டத்தொ…
-
- 0 replies
- 465 views
-
-
ரஸ்ய படையெடுப்பு, உலக கட்டமைப்புக்களின் பலவீனம், தமிழ் அரசியல் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டியது? - யதீந்திரா இந்தக் கட்டுரையை எழுத்திக் கொண்டிருக்கும் போது, ஜரோப்பிய உலகம் பரபரப்படைந்திருக்கின்றது. ரஸ்ய ஜனாதிபதி, விளாடிமிர் புட்டின், உக்ரெயினின் கிழக்கு பகுதியின் மீதான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். உக்ரெயின் இராணுவத்தை ஆயுதங்களை கைவிடுமாறு ரஸ்யா அறிவித்திருக்கின்றது. தனது நாடு – எதற்காகவும் எவருக்காகவும் அச்சம் கொள்ளவில்லையென்று, உக்ரெயின் ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார். 2014இல், ரஸ்ய சார்பான உக்ரெயின் ஜனாதிபதி பதவிலிருந்து அகற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ரஸ்யா தாக்குதலை தொடுத்தது. உக்ரெயினின் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற யுத…
-
- 0 replies
- 358 views
-
-
அரசியல் துரும்பாகிப் போனது வடகிழக்கு இணைப்பு விவகாரம்! பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிலைபேறான அமைதி, சமாதானத்தையும், சகவாழ்வு நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதைப் பிரதான இலக்காகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறான வேலைத்திட்டங்களில் அரசியலமைப்புக்கான மறுசீரமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் அன்றைய காலசூழலுக்கு ஏற்ப தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். அதில் இற்றைவரையும் 20 திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 350 views
-
-
இராஜிவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள்...? 1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும் ; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது . ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 2. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்? 3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்கா…
-
- 0 replies
- 908 views
-
-
உயர்நீதிமன்றின் கையில் மைத்திரியின் வாள் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைப் போலவே, தமது பதவிக்காலம் குறித்த சட்டவிளக்கத்தை உயர்நீதிமன்றத்திடம் கோரியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தமது பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறதா அல்லது 2021 வரை, இந்தப் பதவியில் நீடிக்க முடியுமா என்பதற்கு, 14ஆம் திகதிக்குள் வியாக்கியானம் அளிக்குமாறு, அவர் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்புக்கு எழுத்துமூலமான ஒரு கோரிக்கையை விடுத்திருக்கிறார். சந்திரிகா குமாரதுங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள். ஆனால், அவர்கள் அப்போதிருந்த அரசமைப்பு நடைமுறைக்கு அமைய, 12 ஆண்டுகள் பதவியில் இர…
-
- 0 replies
- 234 views
-
-
புன்னகை இராஜதந்திரத்தால் வடகொரிய, தென்கொரிய பிணக்கை தீர்த்துவைக்க முடியுமா? இவ்வாரம் தென்கொரிய தலைநகரம் சியோலில் ஆரம்பமான குளிர்கால ஒலிம்பிக் போட்டி கொரிய தீபகற்ப மக்களுக்கு அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. எப்போ யுத்தம் மூளும் என்ற அச்சவுணர்வுடன் வாழ்கின்ற மக்கள் யுத்த முஸ்தீபுகளினால் அழிய வேண்டுமா என்ற ஏக்கத்துடன் வாழ்கின்றனர். ஒருபுறம் வடகொரிய தலைவரின் அணு ஆயுத நிகழ்ச்சித்திட்டம் மறுபுறம் விடமாட்டேன் பார் என்கின்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்மின் கர்ச்சனைகள் கொரிய மக்களுக்கு இதமான செய்திகளாக அமையவில்லை. மாசி முதல் 9–25 திகதிகளில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நிகழ்வுக்…
-
- 0 replies
- 260 views
-
-
வெளிப்பட்ட பேரினவாத முகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பாக, சிங்களப் பேரினவாத சக்திகளின் மனோநிலையையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முடிவில் தான் தங்கியிருக்கிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார். ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதன் மூலம், அதனை வெற்றிபெற வைக்கலாம் என்பது மஹிந்த ராஜபக் ஷவின் கருத்தாக இருந்தது. ஆனா…
-
- 0 replies
- 632 views
-
-
மாநில சுயாட்சியை முன்வைத்து மோடிக்கு எதிர்ப்பு அணி? தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சென்னையில் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டுப் பின்னர், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினுடன், மதிய உணவுடன் கூடிய ஆலோசனையை நடத்தியிருக்கிறார். மத்தியில் ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம், மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, பெரும்பாலான மாநிலங்களில் சர்ச்சைக்குள்ளாகும். குறிப்பாக, மாநிலங்களின் அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்தால் கைப்பற்றப்படும் நிகழ்வுகள் அரங்கேறும். அதிலும் குறிப்பா…
-
- 0 replies
- 946 views
-
-
போர் வெற்றி எதைச் சாதித்தது? மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்து இன்றுடன், ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழ் மக்களின் உரிமைக்கான, ஆயுதப் போராட்டம் பேரெழுச்சி பெறுவதற்குக் காரணமாக அமைந்த இடம் திருநெல்வேலி. 1983ஆம் ஆண்டு, திருநெல்வேலியில் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பின்னர்தான், ஆயுதப் போராட்டம் அதிகாரபூர்வமாக முனைப்புப்பெற்றது. திருநெல்வேலியைப் போலவே, முள்ளிவாய்க்காலுக்கும் ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஒரு தனி இடம் உள்ளது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட இடம் அது. …
-
- 0 replies
- 534 views
-
-
ஓயாத அலைகள் காலத்தில் புதுக்குடியிருப்பில் இருந்தபோது போராளியாக இருந்த ஒரு நண்பர் கூறிய தகவல் இது: ஓயாத அலைகள் - 3 படை நடவடிக்கையின்போது, ஆணையிறவு கைப்பற்றப்பட்ட பின்னர், தென்மராட்சியைக் கைப்பற்றுவதற்கு புலிகள் நடவடிக்கை எடுத்த காலம். இரவுடன் இரவாக இரகசியமாக முன்னேறிச் சென்ற புலிகளின் படையணிகள், தென்மராட்சியை யாழ்ப்பாணத்தில் இருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றன. கைதடிச் சந்தியில் இருந்து கோப்பாய் சந்தியை நோக்கிச் செல்லும் பாதையில் புலிகளின் அணியொன்று நிலைகளை அமைக்கிறது. இந்தத் தகவல் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குத் தெரியவந்ததும், மக்கள் திரண்டு செல்கிறார்கள். மோதல்கள் ஆரம்பமாவதற்கு முன்பு தம்மை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதிக்குமாற…
-
- 0 replies
- 670 views
-
-
கல்வி ஒரு தீவிரமான அரசியல் ஆயுதம் திரு. கா. ஆறுமுகம் மலேசியக் கல்விச் சூழலில் மிக முக்கியமாக அவதானிக்கப்படுபவர். குறிப்பாக கல்வி கொள்கைகள்வழிதான் தாய்மொழிக்கல்வி என்பதை ஓர் அரசியல் அடையாளமாக உருவாக்க இயலும் என்பதிலும் அதன்வழிதான் பண்பாட்டை காக்க இயலும் என்றும் வாதிடுபவர். தொடர்ந்து நமது நாட்டிலும் அனைத்துலக அளவிலும் கல்வி சார் கருத்தரங்குகள், மாநாடுகள், சந்திப்புகளில் முக்கிய பேச்சாளராகப் பங்குகொண்டு விவாதித்து வருபவர். சுவராம் எனப்படும் மலேசியாவின் மனித உரிமை இயக்கத்தின் தலைவரான இவர், பல முக்கிய நிறுவனங்களில் பொறியியலாளராக பணிபுரிந்தவர். வணிக நிர்வாக துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். செம்பருத்தி இணைய இதழின் ஆசிரியரான அவரோடு இடம்பெற்ற ஓர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாவீரர் நாள் 2023 உணர்த்துவது – நிலாந்தன். மட்டக்களப்பு, மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில், மாவீரர் நாளன்று போலீசார் பெருமளவுக்குத் தடைகளை ஏற்படுத்தினார்கள்.அத் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களை அடிக்கடி கூப்பிட்டு விசாரித்தார்கள்.அக் குழுவிற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அந்த துயிலுமில்லத்தின் ஒரு பகுதியில் மலைக் கல்லில் பொறிக்கப்பட்டிருந்த கார்த்திகை 27 என்ற எழுத்தை அகற்றுமாறு கேட்டார்கள். கொடிகளை அகற்றச் சொல்லியும், பாடல்களை நிறுத்தச் சொல்லியும், ஒலிபெருக்கியை நிறுத்த சொல்வியும்,தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.சுடர் வணக்க நேரத்தின் போது ஒலிபெருக்கி…
-
- 0 replies
- 568 views
-
-
மன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 13 புதன்கிழமை, பி.ப. 01:00 மன்னார், சதொச கட்டட வளாகத்தில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கி.பி 1477 - 1642 காலப்பகுதிக்குரியவை என்று, கார்பன் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை முன்வைத்து, வாதப்பிரதி வாதங்கள் கடந்த சில நாள்களாக, அனைத்து மட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றன. அதுவும், திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு முரண்பாடுகள் ஏற்படுத்திவிட்ட, மத அடிப்படைவாத விவாதங்களில் நின்றும், மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தைக் கையாளச் சில தரப்புகள் முயல்கின்றன. மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து, …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஓடாத குதிரையின் பந்தயக் கனவு முகம்மது தம்பி மரைக்கார் / 2019 செப்டெம்பர் 24 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:45 அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சியைப் பிரதமர் ரணில் மேற்கொண்ட போதே, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டு விட்டது என்பதை ஊகிக்க முடிந்தது. சூழ்நிலைக் கைதி ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தே…
-
- 0 replies
- 996 views
-
-
நாளொன்றுக்கு ஐந்து பேர்: இலங்கை தாங்குமா?. இலங்கையில் நாள் ஒன்றுக்கு ஐந்து பேர் கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக மூன்று மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் நாளொன்றுக்கு குறைந்தது இருவர் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். மக்கள் கண்காணிப்புக் குழு, சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஜனவரி 1 முதல் ஒகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில், 662 படுகொலைச் சம்பவங்களும், 540 கடத்தல் சம்பவங்களும் இலங்கையில் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறைக்கம்பிகளின் பின்னால் துருப்பிடிக்கும் நல்லாட்சி ப.தெய்வீகன் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்னொரு தடவை ஆரம்பிக்கப்பட்டு, 'சம்பிரதாயபூர்வ உறுதிமொழிகளுடன்'முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. கைதிகளை வழக்கமாக சென்று உருக்கமாக பார்க்கும் அரசியல்வாதிகளும் இம்முறை அதிகம் அக்கறைப்படவில்லை. சிறைச்சாலை ஆணையாளர்தான், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து உத்தரவாதத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறார். அவரது உறுதிமொழியை அடுத்து நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்ட உண்ணாவிரதிகள் இடைக்கால திருப்தியுடன் மீண்டும் தடுப்புக்காவலுக்கு திரும்பியுள்ளனர். கடந்த தடவை கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்பாக திமிறிய பல ஊடகங்களும்கூட இம்முறை இடம்பெற்ற கைதிக…
-
- 0 replies
- 492 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பாக யூன் 29 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரின் போது ஆராயப்பட்டது. குறிப்பாக, பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்களை ஆற்றுவதற்கேற்ற வகையில் கடந்த ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்திற்கு சிறிலங்கா இணைஅனுசரணை வழங்கியிருந்தது. நீண்டகாலமாக சிறிலங்காவில் அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி 2015ல் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவினார். இதன் பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது விரிசலடைந்திருந்த மேற்குலக நாடு…
-
- 0 replies
- 596 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்காலம்
-
- 0 replies
- 397 views
-
-
மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற ரீதியில், ஒவ்வொரு உயிரையும் தக்க வைப்பதற்கான தமிழ் மக்களின் போராட்டம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட நிலையில்தான், பொலிஸாரின் அதிகார அத்துமீறலின் நிமித்தம் இரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உணர்ச்சிகரமான நாட்கள் இவை! மிக உச்சமானதும் உன்னதமானதும் சந்தர்ப்பங்களில்கூட, எந்தவொரு காரணத்துக்காகவும் எதிர்க…
-
- 0 replies
- 210 views
-
-
-
- 0 replies
- 678 views
-
-
‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா? - தெய்வீகன் புதிய ஆண்டுக்குள் நுழைந்திருக்கும் தமிழரது அரசியல் இயல்பான சோர்வுடனும் ஒருவித அயர்ச்சியுடனும் காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தரப்போவதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கடந்த 31 ஆம் திகதிவரை எண்ணிக்கொண்டிருந்த பல புத்திஜீவிகளுக்குப் பலத்த ஏமாற்றம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இழந்துவிட்டுச் சரணாகதி அரசியல் நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பி, இனி ஏதாவது நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளதா என்று இன்னும் பலருக்கு விரக்தி. அரசாங்கத்தைக் கூட்…
-
- 0 replies
- 588 views
-