அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
இரட்டை நிலைப்பாட்டில் தடுமாறும் அரசாங்கம் இலங்கை தேயிலைக்குப் பெயர் பெற்ற நாடாகும். உலகில் எந்தவொரு நாட்டிலும் தேயிலையைப் பற்றி குறிப்பிட்டால், உடனடியாக நினைவில் இலங்கை என்ற சின்னஞ்சிறிய நாடே மனதில் நிழலாடும். சிலோன் என்று ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு சிறிலங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இலங்கை தேயிலையின் மறுபெயராகவே உலக நாடுகள் பலவற்றினாலும் கருதப்பட்டு வந்தது. ஆனால் அந்த நிலைமைகள் இப்போது இல்லை. ஆங்கிலேயரின் நாடாகிய பிரித்தானியாவில் இன்னும் இலங்கைத் தேயிலைக்கு இருந்த மரியாதையும் கௌவரமும் இருப்பதாகக் கருதப்படுகின்ற போதிலும், உலக அரங்கில் மனித உரிமைகளை மீறிய ஒரு நாடாகவே இப்போது இலங்கை உ…
-
- 0 replies
- 346 views
-
-
யாரந்த நபர்? வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் நிலவும் புதிர் - யதீந்திரா எங்கும் வடக்கு மாகாணசபை தொடர்பான ஆரவாரங்களையே காண முடிகிறது. இன்றைய அர்த்தத்தில், இலங்கையின் அரசியல் அரங்கானது வடக்கு தொடர்பான வாதப் பிரதிவாதங்களாலேயே நிரம்பிக் கிடக்கின்றது. வடக்கு தேர்தல் தொடர்பான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தெற்கில் அது தொடர்பில் பல்வேறு வகையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வகையான வாதங்களை மூன்று வகையில் காணலாம். ஒன்று, மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். இவ்வகையான அபிப்பிராயங்கள் அதிகமாக தெற்கின் கடும்போக்குவாதிகள் மத்தியிலேயே காணப்படுகிறது. இரண்டு, வடக்கு தேர்தலுக்கு முன்னர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிக…
-
- 0 replies
- 546 views
-
-
-
- 0 replies
- 820 views
-
-
பொசன் நாடகம்? நிலாந்தன்! June 27, 2021 கடந்த 12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வினைத்திறன் மிக்க விதத்தில் போராடவில்லை என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ் அரசியல் தலைமைகள் பொருத்தமான வெற்றிகள் எதனையும் பெறத் தவறி விட்டார்கள் என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. தமிழ்க் கட்சிகளில் துருத்திக்கொண்டு தெரியும் பலரும் சட்டத்துறை ஒழுக்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் அரசியல் கைதிகளுக்காக போராடுவதற்கென்று சட்ட உதவிக் கட்டமைப்பு எதையும் இன்று வரையிலும் எந்த ஒரு அரசியல் கட்சியும் உருவாக்கியிருக்கவில்லை. மனித உரி…
-
- 0 replies
- 492 views
-
-
யுத்தத்தை அழித்த மஹிந்தவுக்கு அரசியலால் தமிழர்களை வெற்றி கொள்ள முடியவில்லை - -அ.நிக்ஸன்- 23 செப்டம்பர் 2013 "மதுவுக்கும் பணத்திற்கும் வாக்குகளை விற்பணை செய்வது மற்றும் நிவாரண அரசிலுக்கும் பழக்கப்பட்டவர்கள் அல்ல தமிழர்கள்" தமிழ் மக்கள் தமிழ் ஈழம் கேட்கிறார்களா கேட்கவில்லையா என்பதற்கு அப்பால் சுயமரியாதைய இழக்க அவர்கள் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் தமிழ் ஈழம் கேட்டு போராடினார்கள். பெரும்பான்மைத் தமிழ் மக்கள் அதற்கு ஆதரவு வழங்கினர். பேரிணவாதத்துக்கு அடிப்பதற்கு புலிகள்தான் சரி என்ற முடிவு தமிழர்களிடம் இருந்தது. ஆனால் சர்வதேசம் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி அவர்களை அழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு உதவியளித்தனர். இந்தியா அதற்கான நகர்வு…
-
- 0 replies
- 931 views
-
-
அமெரிக்க போர்க்கப்பல்களின் படையெடுப்பு இலங்கையும் அணுஆயுத தாக்குதலுக்கு இலக்காகும் ஆபத்து இருப்பதாக, கடந்தவாரம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண, எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அணுவாயுத நாடான வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், எந்த நேரத்திலும் போர் வெடிக்கக் கூடிய பதற்றமான சூழல் நிலவுகின்ற நிலையில் தான், அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். இலங்கையை அமெரிக்கப் படைகள் ஒரு தற்காலிக தளமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாலேயே இவ்வாறான எச்சரிக்கையை திஸ்ஸ விதாரண விடுக்க நேரிட்டது. அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்கு…
-
- 0 replies
- 624 views
-
-
மாயாஜாலம் ஒரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த சபையில் ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளது. அதிக வட்டாரங்களை வெற்றிகொண்ட கட்சிக்காரர்கள், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். நடைபெற்று முடிந்த தேர்தலானது, தேசிய ரீதியாக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அரசாங்…
-
- 0 replies
- 290 views
-
-
அணிசேரா இயக்கம் புதிய திசையை நோக்கி பயணிக்குமா? உலக வல்லரசுகளான ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் அரசியல், இராணுவ, பொருளாதார, விஞ்ஞான துறைகளில் ஜாம்பவான்களாக விளங்கிய காலகட்டத்தில் அபிவிருத்தியடைந்துவரும் மூன்றாம் உலக நாடுகள் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் வல்லரசுகளின் ஆதிக்கத்தினால் ஏற்பட்ட பாதக நிலைமைகளைக் கருத்திற்கொண்டன. நேரடியாக இரு வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுடன் இணையாமல் மூன்றாவது அணியாக சர்வதேச மேடைகளில் பல நாடுகளினைக் கொண்ட ஒரு அணி உருவாக வேண்டுமென்ற வேட்கையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ, எகிப்திய ஜன…
-
- 0 replies
- 4.5k views
-
-
ஐ.தே.க மறுசீரமைப்பு தேர்தல் வெற்றிக்கு உதவாது அரசாங்கமும் ஆளும் கட்சியிலுள்ள இரண்டு பங்காளிக் கட்சிகளும், கடந்த சில வாரங்களாகக் குறிப்பாக, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற்ற பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல், நாட்டு மக்களை முற்றாக மறந்து விட்டன போலும். அவற்றுக்குள்ளே தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவே, அவற்றுக்கு நேரம் போதாது போல்தான் தெரிகிறது. அவ்வாறு இருக்க, அரசாங்கத்தினதும் அவ்விரண்டு கட்சிகளினதும் தலைவர்கள், எவ்வாறு மக்களைப் பற்றிச் சிந்திக்கப் போகிறார்கள்? நீண்ட காலமாக, அரசாங்கத்துக்குள் நிலவி வந்த முரண்பாடுகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, மோதலாக மாறி, பிளவாகவும் மாறி வருகிறது. அரசாங்கத்திலிருந்த ஜ…
-
- 0 replies
- 287 views
-
-
நிலைமாறுகால நீதி கிடைக்குமா? பி.மாணிக்கவாசகம்… நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து, சர்வதேச விசாரணையே தேவை என கோரி, அதற்கு எதிராக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள். இந்த மாவட்டங்களில் காணாமல் போனோருடைய உறவினர்களுடன் நடத்திய அமர்வின்போதே, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. . யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், கிளிநொச்சி பல…
-
- 0 replies
- 594 views
-
-
இந்திய அமைதிப்படையை நியாயப்படுத்தும் ஜெயமோகனிற்கு இலக்கிய தேட்ட விருது!!! ஒரு படைப்பு என்பது எப்பொழுதும் மக்களிற்கானது. மக்கள் பக்கம் இருந்து எழுதும் படைப்பாளியின் எழுத்துகள் மக்கள் விரோத கருத்துக்களை அம்பலப்படுத்தும். பொய்களை தோலுரிக்கும். நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கத்தோலிக்க திருச்சபை என்பவற்றை எதிர்த்துப் போரிட்டன மாக்சிம் கோர்க்கியின் எழுத்துக்கள். அதனால் தான் அவரின் "தாய்" இன்றைக்கும் இலட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறது. "தாயை" படிப்பவர்களின் மனதில் புரட்சித்தீயை அவரின் கருத்துகள் ஏற்றி விடுகின்றன. "வால்காவில் இருந்து கங்கை வரை" என்று இராகுல சங்கிருத்தியன் எழுதியவைகள் புராணப்பொய்களை சின்னாபின்னமாக உடைத்து மக்கள் வரலாற்றை உண்மையின் வெளிச்…
-
- 0 replies
- 936 views
-
-
இந்திய இலங்கை வர்த்தக உறவைச் சீர்ப்படுத்தும் முயற்சி -வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்கும்போது, தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரம் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற ஏற்பாடுகளுடன், ரணில் தனது உத்தியை வகுக்கிறார். இந்த உத்தி ஏனைய சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். இந்தியக் கொள்கை வாகுப்பாளர்களுக்கும் ஏற்புடையது- அ.நிக்ஸன்- பொருளாதார நெருக்கடிச் சூழலில் சர்வதேச நாயணய நிதியம் வழங்கிய நிதி போதாது. அத்துடன் அடுத்த கட்ட நிதி தற்போதைக்குக் க…
-
- 0 replies
- 276 views
-
-
சிதறிப்போன ஒரு மக்கள் கூட்டம் ? – நிலாந்தன். adminJuly 9, 2023 காற்றுவழிக் கிராமங்களைப் பற்றிய எனது கடந்தவாரக் கட்டுரையானது பெருமளவுக்கு தீவக மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு பகுதியினர் அதற்கு வேறுவிதமாக வியாக்கியானம் தருகிறார்கள். கோவில்களில் காசைக் கொட்டுவது என்பது ஒரு விதத்தில் ஊரில் தனது முதன்மையை நிலைநாட்டும் நோக்கத்தையும் கொண்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு காலம் நீருக்கு கஷ்டப்பட்ட கிராமத்தில் இருந்து பொருளாதார மற்றும் போர்க் காரணங்களுக்காக ஊரை விட்டுப்போன மக்கள் இப்பொழுது அதே ஊரில் கற்பனை செய்ய முடியாத ஒரு தொகையைச் செலவழித்து ஒரு கோவிலைப் புனரமைப்பது என்பது, தங்களால் முடியும் என்பதனைச் சாதித்துக்காட்டும் ஒரு நிகழ்வாக ஏன் எடுக்கக் க…
-
- 0 replies
- 563 views
-
-
அபிவிருத்தி அரசியலும் உரிமை அரசியலும் ஸ்ரீலங்கா அரசியலில் 52 நாட்களாக இடம்பெற்ற குழப்பம் முடிவுக்கு வந்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.மு. அரசாங்கம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. மூன்றரை வருடமாகத் தொடர்ந்த மைத்திரி – ரணில் தலைமையிலான “நல்லாட்சி” அக்டோபர் 26 இல் முடிவுக்கு வந்தது. மகிந்த ராஜபக்ஷவின் பதவியேற்பு அந்த நல்லாட்சிக்கு முடிவு கட்டியது. இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்குத்தான் உரியது என சம்பந்தன் என்னதான் முரண்டு பிடித்தாலும் கூட ரணில் அரசாங்கத்தில் அவர் ஒரு “பகிரங்கப்படுத்தாத பங்காளி”யாக தான் இருக்கிறார். கூட்டமைப்பின் தலைமை சொல்லக்கூடிய விஷயங்களை செவிமடுத்து செயல்படுத்தும்…
-
- 0 replies
- 668 views
-
-
நிலைமாற்று நீதிக்கான ஐ.நா. நிபுணரின் அறிக்கையும் தமிழரின் நீதிப் பயணமும் நிறான் அங்கிற்றல் படம் | INFOLIBRE மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார். இலங்கையிலே இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களையிட்ட நீதி மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் அந்த அவதானிப்புக்களை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். பப்லோ டீ கிறீப் என்பவர் நிலைமாற்றுக்காலநீதியிலே பிரசித்திபெற்ற நிபுணர் என்பதால் மாத்திரமன்றி இலங்கையின் பொறுப்புக்கூறலைக் கண்காணிக்கவும், வேண்டப்படும்போது அரசுக்கும் சிவில் சமூகத்துக்…
-
- 0 replies
- 237 views
-
-
மாலி: இஸ்லாமிய பயங்கரவாதத்தின் புதிய களம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஏப்ரல் 04 வியாழக்கிழமை, பி.ப. 06:32Comments - 0 போரின் களங்கள், போராட்டக் களங்கள் மட்டுமல்ல, பயங்கரவாதத்தின் களங்களும் மாறுகின்றன. பயங்கரவாதமும் தனது எல்லைகளை விரிக்கிறது. இதற்கு இஸ்லாமியப் பயங்கரவாதமும் விலக்கல்ல. இன்று உலகெங்கும், இஸ்லாமியப் பயங்கரவாதம் பேசுபொருளாகி இருக்கிறது. அது இஸ்லாமிய வெறுப்புணர்வைக் கட்டியெழுப்புவதில் பங்காற்றுகிறது. அதன்மூலம், தமக்கான ஆதரவுத்தளத்தை, இஸ்லாமியப் பயங்கரவாதம் உருவாக்குகிறது; ஓன்றில் ஒன்று தங்கி வளர்கின்றன. இது உலகெங்கும் பாரிய சவால்களை உருவாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் மய்யங்கொண்டு, மேற்குலகில் தனது கைவரிசையைக் காட்டி வந்த இஸ்லாமி…
-
- 0 replies
- 929 views
-
-
மாற்றுத் தலைமை ஒன்றிற்கான சந்தர்ப்பம் தவறவிடப்படுமா? யதீந்திரா மாற்றுத் தலைமை தொடர்பில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை இப்போது காணமுடியவில்லை. அது தொடர்பான உரையாடல்களும் பெருமளவிற்கு கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக சுருங்கிக்கொண்டு செல்கிறது. இது தொடர்பில் அதிகம் எழுதப்பட்டுவிட்டது. அதிகம் விவாதிக்கப்பட்;டுவிட்டது. ஆயினும் விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் வடக்கு மாகாணத்தின் முன்னைநாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான விக்கினேஸ்வரன், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியதான செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கைப் பொதுமக்கள் முன்னணி சார்பில் அடுத்த தேர்தலில் களமிறங்கப்போகும் அரச தலைவர் வேட்பாளர் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலரும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சதான் என்பது நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாயிற்று. மகிந்த குடும்பத்தில் இருந்து அதிகார நாற்காலிக்காக வந்திருக்கக்கூடிய மற்றொரு நபராக மீண்டும் குடும்ப ஆதிக்கத்தின் வெளிப்பாடாக வந்திறங்கியிருக்கிறார் கோத்தபாய. மகிந்த அணியிலிருந்து அடுத்த வேட்பாளராக அவர் களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்பும் எதிர்வுகூறல்களும் நீண்ட நாள்களாகவே இருந்து வந்திருக்கின்றன. …
-
- 0 replies
- 453 views
-
-
‘எமக்குத் தேவை புதிய ஜனாதிபதி அல்ல’ காரை துர்க்கா / 2019 செப்டெம்பர் 24 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:55 யாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. மூன்று நாள்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்த கண்காட்சி, பார்வையாளர்களின் அதிகரித்த வருகையால், கால நீடிப்பும் செய்யப்பட்டது. கண்காட்சி பார்த்த களைப்பில், ‘அம்மாச்சி’யில் ஏதேனும் குடிப்போம் எனச்சென்றோம். அங்கு சென்றால், அங்கும் அரசியல் அலசல்களே நடைபெற்றுக் கொண்டிருந்தன. கண்காட்சியைப் பார்…
-
- 0 replies
- 636 views
-
-
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் இலங்கைத் தீவை நோக்கி விரைந்தன. இறுதியாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைத் தீவுக்கான மூன்று நாள் (நவம்பர் 22-24) பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஆறு தசாப்த காலங்களுக்கு மேற்பட்ட இலங்கையின் இராஜதந்திர உறவுகள் வரலாற்றில், குறுகிய காலப் பகுதிக்குள் (சுமார் பத்து மாதங்கள்) அமெரிக்காவின் அதிஉயர் மட்ட அதிகாரிகள் அதிகமான பயணங்களை இலங்கைத் தீவுக்கு மேற்கொண்டமை இதுவே முதற்தடவை. இது, பூகோள அரசியல் – பொருளாதாரத்தில்…
-
- 0 replies
- 455 views
-
-
அப்போது ஆயுதங்களுடன் போராடியவர்கள் இப்போது பசி வேதனையுடன் போராடுகின்றனர் போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை. இவ்வாறு சண்டே லீடர் வாரஇதழில், Tharidu Jayawardana, Idunil Ussgoddarachchi, Udaya Karthikan, R Indumathi ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த போது செல்வியும் தனது ரி-56 ரக துப்பாக்கியைத் தூக்கியெறிந்தார். இதன் பின்னர் மீண…
-
- 0 replies
- 685 views
-
-
சஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 06 , மு.ப. 03:57 எதிர்பார்க்கப்பட்டது போலவே, சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவை, கடந்த ஞாயிறுக்கிழமை (03) தமிழரசுக் கட்சி வெளியிட்டிருக்கிறது. புலிகளின் காலத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை, பெரும்பாலும் தமிழரசுக் கட்சியே எடுத்து வந்திருக்கின்றது. அப்படியான நிலையில், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளான டெலோவும் புளொட்டும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராகவோ, இரா. சம்பந்தனின் முடிவைத் தாண்டியோ சிந்திக்கப்போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை உச்சம்பெற்றிருந்த நிலையில், மன்னாரில் நடைபெற்ற அரச நிகழ்வொன்றில், …
-
- 0 replies
- 973 views
-
-
[size=3][size=5]அருண்மொழிவர்மன்[/size][/size] [size=3][size=4][/size] [size=4]2009ல் கொடூரமான முறையில் ஈழப் போராட்டம் ராணுவ ரீதியில் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான அக்கறை தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற தமிழ்த் தேசியம் குறித்தான அக்கறையும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்த் தேசியம் தொடர்பான முன்னெடுப்புகளும், அது தொடர்பான அறிவுசார் வட்டங்களில் இருந்து (எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கூட) ஆரோக்கியமான முன்னெடுப்புகளையும் காணக்கூடியதாக இருப்பது என்னைப் போன்ற புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது.[/size] [size=4…
-
- 0 replies
- 720 views
-
-
‘கஜபா’க்களின் காலம்! இந்தியா புதிதாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி (கூட்டுப்படைகளின் தளபதி) என்ற பதவியை கடந்த ஜனவரி 1ஆம் திகதி உருவாக்கியிருக்கிறது. இந்திய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முதலாவது பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் பாரிய போர்களை நடத்தியிருந்த போதிலும், கிட்டத்தட்ட 72 ஆண்டுகளுக்குப் பின்னரே, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவியை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச அளவில், பாதுகாப்பு அதிகா…
-
- 0 replies
- 808 views
-
-
தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதம்! ------- --- ---------- *சமகால அரசியல் புத்துணர்ச்சி *செம்மணியை உள்ளடக்கிய இன அழிப்பு விசாரணைக்கு முக்கியத்துவம்... *சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி... *"on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டதா? --- --- --- ----- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சி நான்கு விடயங்களை பிரதானப்படுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இக் கடிதத்தின் ஆங்கில பிரதி ஒன்றை கிழக்கு மாகாணத்தில் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். ஆச்சரியம் என்னவென்றால்... ”இன அழிப்பு” என்ற விடயத்தை மற்றும் சில அரசியல் காரணிகளின் அடிப்படையிலும், கட்சிக்குள்ளேயே முரண்பட…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-