அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
தமிழ்க் கட்சிகளின் கூட்டு நிலைக்குமா? நிலாந்தன். October 3, 2020 கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டார்கள். ஒரு கட்டத்தில் 5 கட்சிகள் கூட்டாக ஒரு பொது ஆவணத்தில் கையெழுத்திட்டன. ஐந்து கட்சிகளும் கூட்டாக கையொப்பமிட்ட பின் அதில் பங்குபற்றிய ரெலோ அமைப்பின் பிரதானி சிறீகாந்தா பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி பின்வரும் தொனிப்படக் கூறினார் முன்பு விடுதலைப் புலிகள் இயக்கம் துப்பாக்கிகள்; பீரங்கிகள் படைபலத்தை வைத்துக் கொண்டு தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்தது. ஆனால் இன்றைக்கு நீங்களோ துப்பாக்கிகளோ பீரங்கிகளோ படைபலமோ எவையும் இன்றி எங்களை ஒருங்கிணைத்திருக்கிறீர்கள்.…
-
- 0 replies
- 449 views
-
-
குறும் தேசியவாதிகளின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வெற்றிபெற்ற மக்கள் போராட்டம் February 9, 2021 — வி. சிவலிங்கம் — ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை‘ யாத்திரை பரந்த தமிழ்பேசும் மக்கள் தேசிய முன்னணிக்கான அறைகூவல் !! – தமிழ்க் குறும்தேசியவாதம் பின்தள்ளப்படுகிறது. – இருதேசம் ஒருநாடு காணாமல் போயுள்ளது. – சிவில் சமூக அணித் திரட்சி கருக்கட்டுகிறது. – புதிய தலைமுறையின் புதிய தேசியவாதம் முகிழ்கிறது. – தமிழ், முஸ்லீம், மலையக அணிச் சேர்க்கை யதார்த்தமாகிறது. – சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளின் மீதான புதிய அழுத்தங்கள். நடந்து முடிந்த ‘பொத்துவில் முதல் பொலிகண்டி…
-
- 0 replies
- 525 views
-
-
தமிழ்த்தேசியமும் தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்தும் காரணிகளும்! -சு. பிரஜீவன்ராம்- February 21, 2021 இன்று தமிழர்கள் மத்தியில் பெரும்பான்மையாக முனுமுனுக்கப்படும் ஒரு சொற்பிரயோகம் தமிழ்த்தேசியம். பெரும்பான்மையான மக்கள் இச்சொல்லின் பொருள் என்ன என்ற புரிதலற்று, தமது உரையாடல்களில் பயன்படுத்துகின்றனர் . சிலர் இதனை ஒரு குறித்த குழு என்ற ஓர் வரையறைக்குள் உட்படுத்த முயல்கின்றனர். வேறுசிலர் இது பிரிவினைவாத சிந்தனையின் வெளிப்பாடு எனக்கூறி தமிழ்த்தேசிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் தமிழ்த்தேசிய சிந்தனையின் அர்த்தம் பொருள் என்ன என்பது பற்றி ஆராய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்த்தேசியம் பற்றிய பரிபூரண விளக்கத்தை பெற்றுக்கொள்ள தேசியம் பற்…
-
- 0 replies
- 860 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-02-05#page-9
-
- 0 replies
- 570 views
-
-
கருணாவின் மீள்பிரவேசம் எற்படுத்தி இருக்கும் சலசலப்பு - கே.சஞ்சயன் மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு இடம்பெற்ற மறுநாளான கடந்த 11 ஆம் திகதி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதியாக பெரும் செல்வாக்குடன் இருந்த கருணா, புலிகள் இயக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியேறி, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவருக்கு ராஜ உபசாரம் வழங்கப்பட்டிருந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியும் பிரதி அமைச்சர் பதவியும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன. 2015 ஆம் ஆ…
-
- 0 replies
- 515 views
-
-
இலங்கையில் சீனாவின் மீள்வருகை தொடர்பான சமிக்ஞைகளுக்கு மத்தியில் இந்தியாவின் செல்வாக்கினை மீள உறுதிப்படுத்தும் நோக்குடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். 2015 ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றபோது, சீனாவுடனான உறவுகள் தளர்த்தப்படுமென உறுதிமொழி வழங்கியிருந்தார். அதற்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்தவர், சீனாவிடமிருந்து பாரியளவான நிதி உதவிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்றைய காலப்பகுதியில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை இந்திய உறவில் பொன்னான தருணங்களை வரைவதற்கான உறுதிமொழியினை வழங்கியிருந்தார். அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழிந்திருக்கும் நிலைய…
-
- 0 replies
- 395 views
-
-
உக்ரேனில் "ஜனநாயகம்" - நேட்டோ எதற்காக ஒரு போர் அபாயத்தை பணயம் வைக்கிறது? 24 January 2022 மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் போர் குற்றவாளிகள், பாரிய கொலைகாரர்கள், சைமன் பெட்லியுரா, ஸ்டீபன் பண்டேரா மற்றும் ரோமன் ஷுகேவிச் போன்ற யூத எதிர்ப்பு மற்றும் நாஜி ஒத்துழைப்பாளர்களுக்கு பொது நினைவுச் சின்னங்களை வைப்பதுடன் மற்றும் நினைவுதினங்களையும் அரசு கொண்டாடுகின்றது. உக்ரேனில் அரசின் பாதுகாப்புக் கரத்தின் கீழ் உலகம் முழுவதிலுமிருந்து நவ-நாஜிக்களை ஒருங்கிணைத்தல், இராணுவப் பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ ஆயுதப் படைகளில் பாசிஸ்டுகளை ஒருங்கிணைத்தல் நிகழ்கின்றது. ஒரு சில தன்னலக்குழுக்கள் மற்றும் ஊழல் நிறைந்த நீதித்துறை மற்றும் அதிகாரிகளுக…
-
- 0 replies
- 321 views
-
-
மேலும் ஒரு ஜெனிவாக் கூட்டத் தொடரை நோக்கி! நிலாந்தன். கடந்த மாதம் 27ஆம் தேதி, ஐரோப்பிய நாடாளுமன்ற இணைக்குழு முன்னிலையில், இலங்கையின் மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை குறித்து கருத்துக்கள் பரிமாற்றப்பட்ட ஒரு மெய்நிகர் சந்திப்பில், அம்பிகா சற்குணநாதன், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். அக்கருத்துக்களுக்கு இலங்கைத்தீவின் வெளிவிவகார அமைச்சு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அம்பிகா சர்குணநாதன் ஒரு சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஆவார்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டமைப்புடன் காணப்பட்டார்.அவர் மேற்படி மெய்நிகர் சந்திப்பின் போது தெரிவித்த கருத்துக்கள் அரசாங்கத்துக்கு சீர்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இலங்கைத்தீவின…
-
- 0 replies
- 280 views
-
-
சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்த வேண்டும் புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நீண்டகால காத்திருப்புக்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில், ஆட்சியில் இருக்கும் எந்த அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக, கூட்டமைப்பு தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்திருக்கின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், சஜித் பிரேமதாஸவுக்கு கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த தருணத்திலும், பின்னர் பொதுத் தேர்தல் காலத்திலும் கூட, “புதிய ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் பேசுவோம்” என்று கூட்டமைப்பு கூறியது. அதன்போக…
-
- 0 replies
- 379 views
-
-
திசைகளின் திருமணம் எந்தப் புள்ளியில் முரண்பாடுகளின் தொடக்கம் ஆரம்பிக்கும் என்று நாம் அனுமானித்திருந்தோமோ, கிட்டத்தட்ட அந்தப் புள்ளியை அடைந்து விட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுகளின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தத் தேசம் திணறப் போகிறது என்பதை, அவ்வப்போது இந்தப் பத்தியில் எழுதி வந்திருக்கின்றோம். இப்போது அந்த அனுமானங்கள் நிகழ ஆரம்பித்திருக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வாக, புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கை ஒன்றை, அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் முக்கிய செயற்பாடாக புதிய அரசமைப்புக்கான இடைக்…
-
- 0 replies
- 426 views
-
-
ரணிலா ? அரகலயவா ? -நிலாந்தன்.- ரணில் ஜனாதிபதியாக வந்தபின் நடந்த ஒரு பெரிய மாற்றம் என்று சொன்னால் அரகலயவை அடக்கத் தொடங்கியதுதான். எந்த அரகலயவின் விளைவாக அவர் ஆட்சிக்கு வந்தாரோ, அதே அரகலயவை அவர் இப்பொழுது அடக்கப் பார்க்கிறார். எந்த ஒரு முறைமை மாற்றத்தைக் கேட்டு அரகலய போராடியதோ, அந்த முறைமை மாற்றம் நடக்கவில்லை.மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதே பழைய முறைமையினூடாக நிறைவேற்று அதிகாரம் பெற்ற ஜனாதிபதியாக எழுச்சி பெற்றிருக்கிறார். காலிமுகத்திடல் சோர்ந்துபோய் விட்டதாக அவதானிக்கப்படுகிறது. அங்கு முன்னணியில் நின்ற அரசியல் பின்னணியை கொண்ட பலரும் தலைமறைவாகிவிட்டதாகவும் கருதப்படுகிறது. தொடர்ச்சியான கைதுகள் காரணமாக முன்னணி ஏற்பாட்டாளர்கள் பலர் பின் மறைவிற்கு செல்வதாக நம்ப…
-
- 0 replies
- 296 views
-
-
தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஆற்றல் – உண்மைதானா? - யதீந்திரா ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்கள் மீதான தடையை நீக்கியிருக்கின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இது தொடர்பில் நான் முன்னரே குறிப்பிட்டிருக்கின்றேன். இதனை வெறுமனே பொருளாதார நெருக்கடியின் விளைவாக மட்டும் நோக்கினால், அது முழுமையான பார்வையாக இருக்காது. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் சிலர் மீதான தடைநீக்கப்பட்டது. கோட்;டபாய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து மீளவும் தடைவிதிக்கப்பட்டது. இப்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதை தொடர்ந்து மீளவும் தடைநீக்கப்பட்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் சம…
-
- 0 replies
- 367 views
-
-
The Economist: எதிர்காலம் குறித்த கேள்விகள் உலகம் அமைதியை விரும்புகிறதா? அப்படியென்றால் எப்படியான அமைதியை விரும்புகிறது? போரற்ற சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் அமைதியை விரும்புகிறதா? அல்லது சிலர் கட்டுப்படுத்துவதும் சிலரது நலன்களை முன்னிலைப்படுத்துவதுமான அமைதியை விரும்புகிறதா? உலகத்தின் விருப்பு என்பது யார் சார்ந்தது? வாழும் மக்கள் சார்ந்ததா, ஆட்சியாளர்கள் சார்ந்ததா? இக்கேள்விகளுக்கான பதில்கள் எமக்கு எளிதில் கிடைக்கமாட்டாதவை. ஆனால், எல்லோரும் உலக அமைதி பற்றியும் அதன் தேவை பற்றியும் பேசுவர். ஆப்கானிஸ்தானின் மீது போர் தொடுத்தபோது, அமைதியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.…
-
- 0 replies
- 615 views
-
-
அரசியல் களம் _ மறவன் புலவு க.சச்சிதானந்தன் - சிவசேனை அமைப்பு-தலைவர்_2017-11-05
-
- 0 replies
- 677 views
-
-
தவறிழைத்தது யார்? பி.மாணிக்கவாசகம்…. June 20, 2018 தழிழ் அரசியல் பரப்பில் அடுத்தடுத்து இடம்பெற்ற அண்மைய நிகழ்வுகளில் இராணுவ அதிகாரி ஒருவருக்கு வடக்கில் அதுவும் கிளிநொச்சியில் கண்ணீர் மல்க அளிக்கப்பட்ட உணர்வுபூர்வமான பிரியாவிடை சம்பவம் பல்வேறு பரிமாணங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியான இராணுவ கட்டளைத் தளபதி கேணல் ரத்னபிரியவுக்கே இந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற பிரியாவிடை அளிக்கப்பட்டிருக்கின்றது. இவர் கடந்த நான்கரை வருடங்களாக அந்தப் பதவியில் பணியாற்றி வந்துள்ளார். புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப…
-
- 0 replies
- 449 views
-
-
பாவனைப் போரும் செயற்பாட்டு அரசியலும் March 18, 2023 — கருணாகரன் — பலரும் கருதியதைப் போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து விட்டது. இந்த உடைவினால் தனித்து விடப்பட்டிருப்பது தமிழரசுக் கட்சியே. ஆனாலும் அது தன்னைப் பலமானதாகக் கருதிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், அதனுடைய வீட்டுச் சின்னமாகும். எத்தகைய நிலையிலும் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிப்பார்கள் என்ற பலமான எண்ணம் தமிழரசுக் கட்சியினருக்குண்டு. இதுவே அவர்களுடைய தைரியமாகும். இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வீட்டுச் சின்னமாகவே மக்களிற் பலரும் அறிந்துள்ளனர். தமிழரசுக்கட்சிக்கு விடுதலைப் புலிகள் உருவாக்கிக் கொடுத்த அருமையான வாய்ப்பிது. இதனால் இளையதலைமுறையினரின் மனதில் கூட்டமைப்ப…
-
- 0 replies
- 880 views
-
-
முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்களிடம் பாதிக்கப்பட்டோர் என்ற கூட்டு உளவியலை (Psychology of collective victimization) உருவாக்கியிருந்தது. அந்த உளவியல், அதிர்ச்சிக்குள்ளும் தமது பொது எதிராளி யார் என்ற விழிப்பு நிலையுடன், எமது அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி அல்லது ஏக்கம் பல்வேறு தரப்பிடமும் ஆழப் பதிய காரணமாகியது. அந்த நிலை படிப்படியாக போராடும் மனப்பாங்கை உண்டுபண்ணியது. தமிழர் தாயகத்தில் தொடர்ந்த திறந்தவெளிச் சிறைச்சாலை நிலைமை அங்கு வாழ்ந்த மக்களின் புறச்செ…
-
- 0 replies
- 463 views
-
-
முதல்வர் விக்னேஸ்வரனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முனையும் அரசியல் என்ன? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், அதிலும் குறிப்பாக சுமந்திரனின் விசுவாசிகள் அண்மைக் காலமாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் புலம்பெயர் நாடுகளில் சுமந்திரன் நடாத்திய கூட்டங்களிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இக் கருத்துக்கள் இரண்டு விடயங்களில் மையங் கொண்டிருந்தன. முதலாவது விடயம் வடக்கு மாகாணசபை நிறைவேற்றியிருந்த இனவழிப்பத் தீர்மானம் தொடர்பானது. இரண்டாவது விடயம் முதலமைச்சர் கடந்த ஓகஸ்ட் மாதம்…
-
- 0 replies
- 777 views
-
-
மக்கள்பேரவை மாற்றம் தருமா? விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கான போராட்டத்தை முன்னகர்த்த வேண்டிய கூட்டமைப்பானது தனது தேசியப்பணியை கைவிட்டு நீண்டதூரம் சென்றுவிட்டது. தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற அமைப்பு என்ற பலத்தை பயன்படுத்தி தமிழ்மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்காமல் வெளிநாட்டு அரசுகள் என்ன சொல்லுகின்றதோ அதற்கு ஆமாம் போடும் சாமியாக வந்து அதிக நாட்கள் கடந்துவிட்டன. இப்போது கூட்டமைப்பானது இன்னும் கீழிறங்கி தற்போதைய மைத்திரி அரசு என்ன சாக்குப்போக்குகளை சொல்லுகின்றதோ அதனையே தானும் ஒப்புவிக்க தயாராகிவிட்டது. போர்க்குற்றங்கள் பற்றிய விடயத்திலும் சரி சர்வதேச விசாரணை என்ற விடயத்திலும் சரி க…
-
- 0 replies
- 712 views
-
-
[size=4]வீர புருஷர்கள் இரு ஓரங்களும் கூரான வாளொன்றை ஒத்தவர்கள், புத்திசாலித்தனம் வாய்த்த இனத்தவர்கள். இத்தகைய வீரபுருஷர்கள் விடயத்தில் அவதானத்துடனேயே செயற்படுவர்.[/size] [size=4]தமிழில் : வியெஸ்ரி[/size] [size=4]மூலம்: ராவய[/size] [size=4] இத்தகைய வீர புருஷர்களூடாகத் தமது தேவையை நிறைவு செய்து கொண்ட பின்னர் அவர்களுக்கு கௌரவமாக ஓய்வு வழங்கிவிடுவர். வீர புருஷரொருவருக்கு காலக்கட்டுப்பாடின்றித் தொடர்ந்து செயற்பட இடமளிக்கும் இனங்கள் தமது நிகழ் காலத்தைப் போன்றே, எதிர்காலத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்கிக் கொள்கின்றன. [/size] [size=4]கறுப்பு ஜூலை கலவரத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான இந்த நாட்டின் தமிழ் மக்கள், தலை நிமிர்ந்து மீண்டும் தமது வாழ்க்கையைத் தொடர வாய்ப்பு …
-
- 0 replies
- 760 views
-
-
‘மிஸ்டர் கிளீன்’ இமேஜை சிதைக்கும் சதி முருகானந்தன் தவம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது இலங்கை அரசியலில் கொதி நிலையை உருவாக்கியுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தி விட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்தின் ஆளுமைத்திறனையும் அரசியல் அனுபவத்தையும் மக்கள் நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் ஒரு சாதாரண அரசாங்கமாகவே அருவருப்புடன் பார்க்க வைத்துள்ளது. “சட்டம் அனைவருக்கும் சமம்.முன்னாள் ஜனாதிபதியாகவிருந்தாலும் தவறு செய்திருந்தால் சட்டம் பாயும்’’என ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் பீற்றிக்கொண்டாலும் அவ்வாறு பீற…
-
- 0 replies
- 167 views
-
-
புத்தாண்டுத் தீர்மானம் - நிலாந்தன் ஒரு புதிய ஆண்டு எப்படி அமையக்கூடும் என்பது கடந்த ஆண்டில் கிடைத்தவை, கிடைக்காதவை என்பவற்றின் விளைவுதான். இருப்பவற்றில் இருந்துதான் அரசியல் செய்யலாம். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்றால் இருப்பவைதான். இல்லாதவை அல்ல. எனவே கடந்த ஆண்டில் என்னென்ன இருந்தனவோ அவற்றின் விளைவுதான் புதிய ஆண்டு. இந்த இயற்கையை மீறி ஏதாவது நடப்பதாக இருந்தால் அதனை அதிசயம் அல்லது அற்புதம் என்று அழைக்கவேண்டும். யூதர்களின் புலப்பெயர்ச்சி வரலாற்றைக் கூறும் “தாயகம் நோக்கிய பயணம்” என்ற நூலில் ஓரிடத்தில் கூறப்படுவதுபோல “அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது”. இது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்துமா? அப்படி அதிசயங்கள் அற்புதங்கள் ந…
-
- 0 replies
- 194 views
-
-
இலங்கை உள்நாட்டுப் போரின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு ரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையிலிருந்து பிபிசி தமிழுக்காக Getty Images இலங்கையில் மூன்று தசாப்தங்கள் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி, இன்று போன்றதொரு நாளிலேயே இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சுதந்திரத்தின் பின்னர் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களே உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாக காரணமாக அமைந்திருந்தது. இலங்கையில் சுமார் 1970ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே யுத்தம் ஆரம்பமாவதற்கான அடித்தளமாக அமைந்திருந்தது. யாழ்ப்பாணம் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா 1975ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 405 views
-
-
தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சியின் தலைமை மாற்றமடையுமா? - யதீந்திரா வடக்கில் ஆகக் கூடிய ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் – என்று கூட்டமைப்பின் பேச்சாரும், அதன் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். அதே வேளை பிறிதொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரனை துரத்த வேண்டுமென்றும் சுமந்திரன் குறிப்பிட்டிருக்கின்றார். விக்னேஸ்வரனை அரசியலிலிருந்து துரத்த வேண்டுமென்று முன்னரும் ஒருமுறை சுமந்திரன் கூறியிருந்தார். கூட்டமைப்பு வடக்கில், இம்முறையும் அதிக ஆசனங்களை வெற்றிகொள்ளுமென்று சுமந்திரன் உண்மையிலேயே நம்பினால், பிறகெதற்காக விக்னேஸ…
-
- 0 replies
- 541 views
-
-
சிங்கள மகா சபையின் தோற்றமும் மத-மொழித்-தேசியவாதத்தின் எழுச்சியும் (1956: 😎 என்.சரவணன் July 25, 2020 சிங்கள மகாசபை 19.05.1934 ஆம் ஆண்டு கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ‘பௌத்த மந்திரய’வில் வைத்து அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. மகா கவி ஆனந்த ராஜகருணா, குமாரதுங்க முனிதாச, டீ.எம்.ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தகப்பனார்) பியதாச சிறிசேன போன்றோர் சிங்கள மகா சபையின் ஸ்தாபகர்களாக காணப்பட்டனர். ஆரம்பத்தில் சிங்கள மகா சபை என்கிற பெயர் பண்டாரநாயக்கவால் வைக்கப்பட்டதல்ல. வேறு இனத்தவர்களையும் இத்துடன் இணைத்துக்கொள்ளும் நோக்குடன் அவர் “சுவதேஷிய மகா சபா” (Swadesiya Maha Sabha – சுதேசிய மகா சபை) என்கிற பெயரையே வைக்க விரும்பினார். ஆனால் பிரபல சிங்கள இலக்கியப் பிரம…
-
- 0 replies
- 488 views
-