Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பி.கே.பாலசந்திரன் - முன்னைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் பலவீனப்பட்டுப் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை மீளவும் பலப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு வசதியாக 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார். மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மீளவும் கொண்டு வருவதற்கு 19 ஆவது திருத்தத்தை முற்றாகக் கைவிடுவதில் அல்லது அதில் பெருமளவுக்கு வெட்டிக் குறைப்பு செய்வதில் கோதாபய மிகுந்த அக்கறையாக இருக்கிறார…

  2. கோரிக்­கையின் நியாயம் குறித்து சிந்­தி­யுங்கள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ளீர்க்­க­வேண்டும் என்ற நல்­லி­ணக்க செய­ல­ணியின் பரிந்­து­ரை­யா­னது தொடர்ச்­சி­யாக சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­துள்­ளது. உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் நல்­லி­ணக்க பொறி­முறை குறித்த செய­ல­ணியின் இந்த பரிந்­துரை தொடர்­பா­கவே பேசப்­பட்­டு­வ­ரு­கின்­றது. சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் சிவில் நிறு­வ­னங்­களும் நல்­லி­ணக்க பொறி­முறை குறித்த செய­ல­ணியின் பரிந்­து­ரை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்பட­வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றன. இந்­நி­லையில் உள்­நாட்­டிலும் இந்த விடயம் சர்…

  3. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வீ.தனபாலசிங்கம் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு நான்கு தசாப்தகாலத்தில் 7 ஜனாதிபதி தேர்தல்களை நாடு சந்தித்திருக்கிறது.இவ்வருட இறுதியில் நடைபெறவிருப்பது 8 வது ஜனாதிபதி தேர்தலாகும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு (போட்டியிடுவதை தவிர்த்த இரு சந்தர்ப்பங்களை தவிர)அதன் வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசிய கட்சி பிரச்சினைகளை எதிர்நோக்கியதில்லை. 1977 ஜூலை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தபோது பிரதமராக பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன இருமாத காலத்…

  4. சிறப்புக் கட்டுரை: மீண்டும் தொடங்கிவிட்டதா பனிப்போர் காலம்? மின்னம்பலம்2022-05-02 ராஜன் குறை ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகு உலக நாடுகளுக்கு இடையிலான சர்வதேச அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்த பரபரப்பான உலக அரசியல் சூழலில் இந்தியக் குடியரசுக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைத்துள்ளது. ரஷ்யாவுடன் நேரடியாகப் போரிட முடியாத நிலையில் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் அதற்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஏனெனில் உக்ரைனுக்கு ஆதரவாக அந்த நாடுகள் போரில் ஈடுபட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என ரஷியா அறிவித்துள்ளது. அதனால் உக்ரைனுக்கு மறைமுகமாக ஆயுத உதவிகள் செய்வது மற்றும் பொருளாதாரத் தடைகளின் மூலம் ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவது ஆகிய முயற்சிகளில் மேற்கத்தி…

  5. அரசியலமைப்பின் 42(4) பிரிவில் மோதும் ரணில் - மைத்திரி இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி அரசியலமைப்பிற்கு அப்பால் சென்று ஆரயப்பட வேண்டியதொன்றாகியுள்ளது. உலகில் எந்தவொரு நாடு ஜனநாயக கோட்பாடுகளை மதித்து அதன் விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்கின்றதோ அந்த நாட்டை நல்லாட்சி என்ற வரையறைக்குள் உட்படுத்தலாம். இதனை ஜனநாயக ஆட்சி முறைமை உடைய நாடுகளுக்கு மாத்திரமல்லாது இலங்கையால் ஒதுக்கப்படுகின்ற சமஷ்டி ஆட்சி முறைமையை கொண்ட நாடுகளையும் கருத்தில் கொள்ள முடியும். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இரண்டு பிரதான கட்சிகளுமே ஒன்றிணைந்து நல்லாட்சி என்ற சித்தாந்தத்திற்குள் தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கு ஒப்பந்த ரீதியில் முன்வந்தது .…

  6. பலமிழந்த ‘பலவான்’ தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் இரு ஜீவன்களில் ஒன்று தேனீ; மற்றையது, விவசாயி. இவ்வாறு தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும், இவை இரண்டும் தம் உழைப்பை ஒருபோதும் நிறுத்திக்கொள்வதில்லை. விவசாயி, தான் உற்பத்தி செய்கின்ற நெல்லுக்கோ, ஏனைய விவசாய விளைபொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்புகள் இன்றி, வருடாந்தம் பெரும் கஸ்டங்களையும் நட்டங்களையும் எதிர்நோக்கி வருவதுடன், தொடர்ந்தும் கடன் சுமைகளைச் சுமக்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. விவசாயிகள் பலர் ஏழைகளாகவே இருக்கின்றார்கள். மழை பெய்யுமானால் தன் குடிசை ஒழுகும் எனத்தெரிந்தும், ‘இறைவா இன்று ஒ…

    • 0 replies
    • 410 views
  7. மூன்று விட­யங்கள் தமிழ் மக்­களை உறுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றன. நிலைத்து நிற்கக் கூடிய நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வு கிடைக்­குமா......, எப்­போது கிடைக்கும்? யுத்த காலத்­திலும், அதற்குப் பின்­னரும் இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கும் மனித உரிமை மீறல்­க­ளுக்கும், கொலை­க­ளுக்கும், ஆட்­களை வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கும், சிறைச்­சா­லை­களில் அநி­யா­ய­மாக வாடு­கின்ற தமிழ் அர­சியல் கைதிகள் அனு­ப­விக்­கின்ற வேத­னை­க­ளுக்கும் உண்­மை­யான நீதி கிடைக்­குமா? காணி அப­க­ரிப்­புக்கும், பௌத்த மேலா­திக்க ஊடு­ரு­வ­லுக்கும் முடி­வேற்­ப­டுமா......, எந்த வகையில் யார் அந்த முடிவை ஏற்­ப­டுத்­து­வது?.....என்று, இந்த விட­யங்கள் இன்று எரியும் பிரச்­சி­னை­யாக தமிழ் மக்கள் மனங்­களில் …

  8. மேலும், மேலும் பலவீனமடையும் தமிழர் அரசியல் - யதீந்திரா தமிழர் அரசியல் அதிகம் அதிகம் பலவீனமாகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு வெளியிலிருப்பவர்கள் எவரும் காரணமல்ல. மாறாக, தமிழர் அரசியல் தமிழர்களாலேயே பலவீனப்படுத்தப்படுகின்றது. அண்மையில் போராட்டம் என்னும் பெயரில் மேற்கொள்ளப்பட்ட சில நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் விவாதங்களும், இதற்கு சிறந்த உதாரணமாகும். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை – என்னும் சுலோகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக பேரணியில் மக்கள் தன்னியல்பாகவே பெருமளவில் திரண்டிருந்தனர். 2009இற்கு பின்னர் இடம்பெற்ற மிக முக்கியமானதொரு தன்னியல்பான எழுச்சியாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டியை குறிப்பிடலாம். ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற சம்ப…

  9. இந்தோ-பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கையும் பங்குபற்றியது ஏன்?மிலேனியம் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்! சீன உறவு என்னாகும்? தோ- பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பது குறித்த ஏற்பாடுகளிலேயே அமெரிக்க ஜனாதிபதியாகப் புதிதாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கவனம் செலுத்துவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடன் அளவுக்கதிகமான குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிவிட்டாரென்ற உணர்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு சமீபகாலமாக வெளிப்பட ஆரம்பித்துள்ளதை ஜோ பைடன் தெரிவிக்கும் கருத்துகள் கட்டியம் கூறுகின்றன. இந்த இடத்திலேதான் இலங்கையுடனான அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாப…

  10. அமெரிக்க, இந்திய நலன்கள்- 13 ஐ கோரும் தமிழ்க் கட்சிகள் - 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கைக்காகவே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி உருவாக்கப்பட்டதோ என்ற சந்தேகம்கூட எழுகின்றன. அத்துடன் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கை விவகாரத்தை முழுமையாக வெளியில் அகற்றும் ஏற்பாடாகவுமே 13 பற்றிய கோரிக்கையும் கட்சிகளின் கலந்துரையாடலும் என்ற கருத்துக்களும் தற்போது வலுவடைந்து வருகின்றன– -அ.நிக்ஸன்- பலருடைய எதிர்ப்புகள், விமர்சனங்களுக்கு மத்தியில், அதுவும் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துமாறு…

  11. நிர்க்கதியான அரசியற்கைதிகளும் தமிழரின் போராட்டத்தின் போக்கும் – பாகம் 1 - 23 ஆகஸ்ட் 2014 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக இனியவன்:- இன்று அரசியற்கைதிகள் என்றால் யார் என்று கேட்குமளவிற்கு போரின் பிந்திய தமிழரின் அரசியற்போக்கு இருக்கும் இந்தக் கேவலமான சூழ்நிலையில் அரசியற்கைதிகள் என்றால் யார் என்ற கேள்வியிலிருந்தே இப்பத்தியினை எழுத வேண்டும். சுருங்கக்கூறின் சிங்களப் பேரினவாத அரசு யாரையெல்லாம் பயங்கரவாதச் சந்தேக நபர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் பட்டியற்படுத்தி சிறைகளிலும் தடுப்பு நிலையங்களிலும் அடைத்து வைத்திருக்கின்றதோ அவர்கள் எல்லோரும் அரசியற்கைதிகளாவார்கள். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஆயிரக்கணக்கான அரசியற் கைதிகள் மகசீன…

  12. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய விஜயம் முடிவுற்று ஒரு மாத காலத்தில், இரண்டாவதாக சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வ விஜயமாக இன்று சீனா சென்றுள்ளார். வரும்17-ஆம் தேதி வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்திருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் கூறுகிறது. 'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' - இலங்கையில் அரிச…

  13. தெற்கில் இருந்து கிளம்பும் சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் September 12, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை இலங்கை விவகாரங்கள் தொடர்பில் விவரணக் காணொளிகளை வெளியிடும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கிளம்பும் சர்ச்சைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்கள் பற்றி ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ( Sri Lanka’s Killing fields ) என்ற தலைப்பில் 12 வருடங்களுக்கு முன்னர் சனல் 4 வெளியிட்ட புலனாய்வு விவரணக் காணொளியை நாம் எல்லோரும் பார்த்தோம். 2011 ஜூன் 14 ஒளிபரப்பான ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ பிரிட்டனின் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் விரிவிளக்கமான விவரணக் காணொளிகளில் ஒன்று என்…

  14. அர­சியல் தீர்வு விட­யத்தில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தலை­வர்­களின் இன்­றைய நிலைப்­பாடு என்ன? எந்­த­வொரு தேசியப் பிரச்­சினை தொடர்­பிலும் நிலைப்­பா­டொன்றை எடுப்­ப­தற்­கான சகல உரி­மை­களும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்­துக்கு இருக்­கி­றது. தமிழ் மக்கள் சம்­பந்­தப்­பட்ட எந்­த­வொரு விவ­கா­ரத்­திலும் தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்­கான விசேட பொறுப்­பையும் உரி­மை­யையும் கூட அவர்கள் கொண்­டி­ருக்­கி­றார்கள். மாறு­கின்ற நிலை­வ­ரங்­க­ளுக்கும் பின்­பு­லங்­க­ளுக்கும் ஏற்­ற மு­றையில் தங்­க­ளது நிலைப்­பாட்டை மாற்­று­வ­தற்கு அல்­லது திருத்தம் செய்­வ­தற்கும் அவர்­க­ளுக்கு உரிமை இருக்­கி­றது. ஆனால், எந்­த­வொரு பிரச்­சி­னை­யிலும் தங்­க­ளது புத…

  15. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் இழக்கக்கூடாத அனைத்தையுமே இழந்துவிட்டனர். தாங்கள் இனியும் என்ன செய்வது என்ற நிலையில் தமிழ் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் காவலர்களும் மீட்பர்களும் எப்போது வரப்போகிறார்கள் என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற அவிப்பொருளை மகிந்த ராஜபக்ச தற்போது தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதாக தெரிவித்திருக்கின்றார். இந்த தேர்தல் நடைபெற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றும் மகிந்த கூறியிருக்கின்றார். யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்பட்டு நிவர்த்திக்கப்படவில்லை. ஒரு பிரச்சினை தோற்றம் ப…

  16. அண்மையில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், இத்திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்னும் பேச்சிற்கே இடமில்லை. இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் எம்மால் தீர்க்கப்பட்டுள்ளன. இது பற்றி இந்தியாவுடன் மேலும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இந்திய பெருங்கடலில் இந்திய – சீன மோதல் ஏற்படாதென்று ஆருடமும் கூறியிருக்கின்றார். சீன அரச நிறுவனமான, தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்தினால் (Communication Construction Company Limited – CCCC) 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறு…

    • 0 replies
    • 410 views
  17. இலங்கையில் ஊடகவியலாளரால் கடைப்பிடிக்கப்படும் சுயதணிக்கை இன்று உலக பத்திரிகைச் சுதந்திர தினம் - நடராஜன் ஹரன் உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட பத்திரிகைச் சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது. பத்திரிகைகளின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். ஏனென்றால், கோடான கோடி மக்களைச் சென்றடையக் கூடியவையாக இருப்பதால் பத்திரிகைகள் உண்மை நிலையை உருமாற்றம் செய்யக்கூடிய சக்தி கொண்டவையாக விளங்குகின்றன. 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் (யூனெஸ்கோ) பொதுமாநாட்டின் 26 ஆவது கூட்டத்தொடரில் செய்யப்பட்ட விதப்புரையைத் தொடர்ந்து, வருடம்தோறும் …

  18. ரணிலின் பதவி பறிபோகுமா? உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் தாக்கம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், அதன் தலைமைத்துவத்துக்கான சவாலாகவும் மாறியிருக்கிறது. ஐ.தே.கவில் எப்போதுமே தலைமைத்துவச் சிக்கல்கள் இருந்து வந்தமை வரலாறு. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தலைவர்களாக மேலெழும் போது, இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. ஐ.தே.கவின் தலைவராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கவுக்கும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கவுக்கும் இடையிலான தலைமைத்துவச் சிக்கலே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கக் காரணமானது. அதற்குப் பின்னர், டட்லி சேனநாயக்க…

  19. ரணிலைக் காப்பாற்றுவதா கூட்டமைப்பின் வேலை? கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் சஜித் பிரேமதாஸவின் படங்களைத் தாங்கிய விளம்பரத் தட்டிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றன. சுமார் 72 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, கால்நூற்றாண்டுக்குப் பிறகு, புதிய தலைமைத்துவமொன்றை நோக்கிச் செல்லும் காட்சிகளின் பிரதிபலிப்பாகவே இதைக் கொள்ள முடியும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், நாடு பூராவுமே பல்வேறு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. அதுவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தேசிய அரசாங்கத்துக்குள்ளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் எதிர்பார்த்த அளவையும…

  20. வட மாகாண சபை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட்டதா? வட மாகாண சபையின் ஆளும் கட்சியின், உட்கட்சிப் பூசல் ஓய்ந்தபாடில்லை. நீண்ட காலப் போரினால் அழிந்த வட பகுதியில், தமிழ் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவற்றைத் தீர்க்கத் தமது போட்டியாளர்கள் எதையும் செய்யவில்லை என்றும் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்ளும் மாகாணத் தலைவர்களும் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இவ்வாறு நடந்து கொள்வது, அவர்களது நேர்மையைப் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கும் என்று அவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இந்தச் சண்டைத் தொடரின் புதிய கட்டமாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் சபை…

  21. விக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார் இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் “சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தன் தலைமை வகிக்கும் கட்சி எந்தக் கட்சி? தமிழரசுக் கட்சியில் அவருக்கு எந்த முக்கிய பதவியும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்தான் அவர் தலைவராக இருக்கிறார். ஆனால் ததேகூ பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. அது ஒரு தேர்தல் கூட்டணி. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு வேட்பாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்ல…

  22. 2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கோட்பாடு' என்பதை 'சிதைப்பது' 'திசை திருப்புவது' என்ற நச்சுத் திட்டங்கள் கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லிச் சந்திப்பு மோடி, ஜெய்சங்கர் ஆகியோருடன் கலந்துரையாட அனுமதிக்கப்படவுமில்லை - வெறுமனே மூன்றாம் தர உரையாடல்! ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூத…

  23. எது பயங்கரவாதம்? – செல்வரட்னம் சிறிதரன் யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிசாருடன் முப்படைகளையும் பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றது. இதனால், யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் முடிந்துள்ள நிலையில், யுத்த காலத்தைப் போன்று மீண்டும் யாழ்ப்பாணத்தில் இராணுவ பாதுகாப்பு நிலைமை உருவாகுவதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றதோ என்று பலதரப்புக்களிலும் இருந்து அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆனால், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைக்கும், அங்கு குற்றச்செயல்கள் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்…

  24. இந்தியா வேண்டும் ஆனால் 13ஐ அனுமதிக்க முடியாது | திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம(ததேமமு)

  25. ஊசலாட்டத்தின் பிடிக்குள்... ரொபட் அன்­டனி தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்­சிக்கு இருக்­கின்ற சக்தி சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இருக்­கின்­றதா? என்றால் அது கேள்­விக்­கு­றிதான். தற்­போ­தைய நிலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மைத்­திரி தரப்பும் மஹிந்த தரப்பும் இணைந்­தால்தான் 95 ஆச­னங்கள் கிடைக்கும். அப்­ப­டி­யி­ருந்தும் 96 ஆச­னங்­களை வைத்­துக்­கொண்டு ஆட்­சி­ய­மைக்க முடி­யாது. கூட்டு எதி­ரணி இணைந்­து­கொள்ளும் பட்­சத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சுதந்­திரக் கட்­சிக்கு ஒரு­போதும் ஆத­ரவு வழங்­காது. ஆனால் 106 ஆச­னங்­க­ளைக்­கொண்­டுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சாத்­தியம் அதி­க­ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.