அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
ஆவா குழுவின் பின்னணி யாழ். குடாநாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் ஆவா குழு தொடர்பாக அரசாங்கமானது தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தியிருக்கிறது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன வடக்கில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஒரு சில மேஜர் தர அதிகாரிகளினால் உருவாக்கப்பட்டது. இந்த ஆவா குழுவானது தற்போது வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக…
-
- 0 replies
- 461 views
-
-
தனித்து விடப்பட்ட புத்தர் -முகம்மது தம்பி மரைக்கார் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையோடு அவர்கள் வந்தபோது, அச்சம் சூழ்ந்து கொண்டது. வணங்குவதற்கு யாருமற்ற ஓர் இடத்தில் கடவுளின் சிலையை வைத்துவிட்டுச் செல்வதற்குப் பின்னால் வேறு காரணங்கள் இருந்தன. 'பகைமையை பகைமையால் தணிக்க முடியாது, அன்பினால் மட்டுமே பகைமையைத் தணிக்க முடியும்' என்று சொன்ன புத்தபெருமானின் சிலையை, பகையை ஏற்படுத்தும்படியாக பயன்படுத்துவது என்பது மிகப்பெரும் முரண்நகையாகும். அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மாணிக்கமடு கிராமமானது, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளது. அங்கு தமிழ் மக்கள் வாழ்கின்றனர…
-
- 0 replies
- 416 views
-
-
பிணைமுறி விவகாரம்: தண்டிக்கப்படுவாரா மகேந்திரன்? நல்லாட்சி அரசாங்கத்திலேயே நல்லாட்சி இல்லை என்றும் ஊழலை ஒழிப்பதைத் தமது பிரதான பணிகளில் ஒன்றெனக் கூறிப் பதவிக்கு வந்த அரசாங்கம், பதவிக்கு வந்து ஒரு மாதத்திலேயே வரலாற்றில் மிகப் பெரும் ஊழல்களில் ஒன்று நாட்டில் இடம் பெற்றிருக்கிறது என்று எதிர்க்கட்சி குற்றம்சாட்டும் அளவுக்கு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது நல்லாட்சியின் பெயரால் பதவிக்கு வந்தவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமையாகும். கடந்த வெள்ளிக்கிழமை ‘கோப்’ என்றழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துந்நெத்தி நாடாளுமன்றத்தில் சமர…
-
- 0 replies
- 335 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எந்தவொரு தேசிய விவகாரம் தொடர்பாகவும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முழு உரிமையும் உள்ளது. தமிழ் மக்கள் தொடர்பான எந்த விவகாரத்திலும் நிலைப்பாட்டை எடுப்பதற்கு அவர்களிற்கு விசேட கடப்பாடும் உரிமையுமுள்ளது. மாறுகின்ற நிலைவரங்களுக்கும் பின்புலங்களுக்கும் ஏற்ற முறையில் தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதற்கோ அல்லது திருத்தம் செய்வதற்கோ அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், பொறுப்பு வாய்ந்த தலைமைத்துவம் என்ற வகையில் ஒவ்வொரு விவகாரம் தொடர்பிலும் தாங்கள் என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என மக்களுக்கு தெரிவிப்பதற்கான கடப்பாடு அவர்களுக்கு உள்ளது. இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சர்வதேச பிரகடனத்த…
-
- 0 replies
- 477 views
-
-
முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்தரப்பின் மௌனம் ஏனோ? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்து, முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு 26 ஆண்டுகள், சில நாட்களுக்கு முன்னர் பூர்த்தியடைந்தன. வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் பூர்த்தியாகும் போது இருப்பதைப் போன்று, அந்த வாரத்தில் அதுபற்றிய பேச்சுகளும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கின்றன. இம்முறையும், கலந்துரையாடலொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வழக்கமாகவும் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்ற போதிலும், இம்முறை இடம்பெற்ற கலந்துரையாடலில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பிரதம பேச்சாளராக இருந்தார். அக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.சு…
-
- 0 replies
- 327 views
-
-
தமிழ் முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு -செல்வரட்னம் சிறிதரன் வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசமாகும். இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். ஆயினும் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை பேரினவாத சிந்தனையில் தோய்ந்துள்ள சிங்களவர்கள் விரும்பவில்லை. அதனை அவர்கள் முழுமையாக எதிர்க்கின்றார்கள். சிறுபான்மையினராகிய தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேச கோட்பாட்டையும் அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. இந்தக் கோட்பாட்டை ஏற்று வடக்கையும் கிழக்கையும் இணைத்தால், அந்த இணைப்பின் ஊடாக ஒரு…
-
- 0 replies
- 339 views
-
-
போர் வெற்றியைக் கற்றலும் இனவாதத் தீயில் கருகுதலும் இறுதிப் போரையும் அதில் அரசாங்கப் படைகள் பெற்றுக் கொண்ட வெற்றியையும் பாடசாலைப் பாடங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கின்றார். வரலாறு எப்போதுமே வெற்றியாளர்களின் பக்கத்திலிருந்து எழுதப்பட்டு வந்திருக்கின்றது. அது, ‘வெற்றியாளர்களின் நீதி’ என்கிற ஏக மனநிலையைக் காலம் காலமாக மக்களிடம் கடந்தி வந்திருக்கின்றது. தோற்கடிக்கப்பட்டவர்கள் கோரிய நீதி என்ன? அல்லது தோல்வியடைவோம் என்று தெரிந்தும் ஏன் அவர்கள் போரிட்டார்கள்? மாண்டுபோனார்கள்? என்பது பற்றியெல்லாம் பெரிதாக யாருமே கரிசனை கொள்வதில்லை. அதுவே, ‘இராமாயணம், மகாபார…
-
- 0 replies
- 291 views
-
-
வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் சமமான உரிமைபெற்று வாழவேண்டும் "கிழக்கு மாகாண சபையில் ஒரு முஸ்லிம் மகன் முதல் அமைச்சராக பதவி வகித்துக் கொண்டிருப்பதை தமிழர்களாகிய நாம் சந்தோஷமாக வரவேற்கிறோமென்றால் அதற்கு காரணம் தமிழ், முஸ்லிம் உறவு நீடிக்க வேண்டுமென்ற எங்கள் எதிர்கால கனவாகும்.” எங்கள் இரு சமூகமும் இணைந்து ஒரு அரசியல் தீர்மானத்தை எடுப்பதன் மூலமே வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் நாம் சகல உரிமைகளுடனும் பலமாக, பயமின்றி வாழ முடியும். புதிய அரசியல் அமைப்பில் வட கிழக்குக்கு வழங்கப்படும் உரிமையின் மூலம் முஸ்லிம் தமிழ் மக்கள் சமமான உரிமை பெற்று வாழ வேண்டுமென்பதில் நாம் தீர்க்கமான முடிவு …
-
- 3 replies
- 550 views
-
-
மீண்டும் பழையபடி மீண்டும் துப்பாக்கிச் சூடும் கொலையும் ஹர்த்தாலுமா? கடந்த செவ்வாய்க்கிழமை வடமாகாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலினால் இயல்பு வாழ்க்கை முற்றாகவே பாதிக்கப்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் பரவலாக இக் கேள்வியைத்தான் பெருமூச்சு விட்டபடி தங்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்ததைக் கண்டனம் செய்வதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் அந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. மாணவர்கள் பலியான கொடூரச் சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருந்ததால் ஹர்த்தாலுக்கு அவர்களிடமிருந்து முழுமையான…
-
- 0 replies
- 520 views
-
-
சட்டமும் அரசும் சிங்களவர்களுக்கே! - பரராசா முதல் கஜன் - சுலக்சன் வரை - தயாளன் எதைச் செய்தாலும் எங்களைக் காப்பாற்ற அரசு இருக்கிறது. சிங்கள மக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை சிறிலங்கா பொலிஸ் மற்றும் முப்படையினருக்கும் இருக்கிறது. இதனை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சனின் படுகொலைச் சம்பவம். சட்டமும் அரசும் சிங்களவர்களுக்கே தவிர ஏனையோருக்கல்ல என்பது 1970 களில் நிகழ்ந்த பரராசாவின் படுகொலை முதற்கொண்டு தெளிவாகிறது. நாவற்குழியைச் சேர்ந்த பரராசா என்ற இளைஞன் கடமை முடிந்து யாழ்.செம்மணி வீதி வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். செம்மணிச் சுடலையருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவரை சும்மா ஜாலியாகச் சுட்டு…
-
- 0 replies
- 973 views
-
-
பல்கலைக்கழக மாணவர் கொலையும் தமிழர் தலைமையின் பொறுப்பும் - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலையே இன்றைய நிலையில் இலங்கை அரசியலின் பேசுபொருளாக இருக்கிறது. அப்படுகொலை இடம்பெறும் வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' நிகழ்வே அரசியல் அரங்கின் பேசுபொருளாக இருந்தது. இப்போது சடுதியாக ஒரு பதட்டநிலை தோன்றியிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் தெற்கிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இது ஒரு நல்ல விடயம் என்பதில் சந்தேகமில்லை இந்த கொலைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது போன்றே தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட படுகொலைகள், யுத்தக் குற்றங்கள் தொடர…
-
- 0 replies
- 436 views
-
-
வடக்கைக் குழப்பும் நிகழ்ச்சி நிரல் வடக்கில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள், சாண் ஏறினால் முழம் சறுக்குகின்ற கதையாகவே நீண்டு செல்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தையடுத்து, பெரிதும் நம்பிக்கையோடு இருந்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் தான் மிஞ்சி நிற்கின்றன. அரசியல்த் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, படைக்குறைப்பு, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு, போர்க்குற்ற விசாரணை என்று தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் எதிர்பார்த்த விடயங்கள் ஏராளம். ஆனால், ஆட்சிமாற்றத்துக்குப் பிந்திய காலகட்டம் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை ஒவ்வொன்றாகச…
-
- 0 replies
- 440 views
-
-
மீண்டும் வந்த ஆவா குழு பின்னணியில் யார்? மாணவர்களின் மரணத்துக்கு தமிழ்ப் பொலிஸாரே காரணம் என்பதை வலியுறுத்தும் வகையிலும், அவர்களை இனவிரோதிகளாகவும், சமூக விரோதிகமாணவர்களின் மரணத்துக்கு தமிழ்ப் பொலிஸாரே காரணம் என்பதை வலியுறுத்தும் வகையிலும், அவர்களை இனவிரோதிகளாகவும், சமூக விரோதிகளாகவும் காண்பிக்க முனைந்திருந்தது அந்தத் துண்டுப் பிரசுரம். ளாகவும் காண்பிக்க முனைந்திருந்தது அந்தத் துண்டுப் பிரசுரம். யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆவா குழு பற்றிய பீதி கிளப்பி விடப்பட்டிருக்கிறது. கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியருகே, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால், கொல…
-
- 0 replies
- 647 views
-
-
குளப்பிட்டிச் சம்பவம் -மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள் – நிலாந்தன் குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்;டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை மீறி தப்பிச்சென்ற இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது என்று எடுக்கப்பட்ட முடிவு வெற்றிடத்திலிருந்து வந்த ஒன்றல்ல. வானத்துக்கும் தரையில் மோட்டார்சைக்கிளில் சென்றவர்களுக்கிடையில் வித்தியாசம் தெரியாத மனோநிலையும் வெற்றிடத்திலிருந்து வந்ததல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கைத் தீவில் சுமார் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக நிலவி வந்த மிகக் குரூரமான ஒரு பாரம்பரியத்திலிருந்து உற்பத்தியாகிய ஒரு மனோநிலை அது. கடைசிக் கட்டப் போரில் நீரிலிருந்து…
-
- 0 replies
- 356 views
-
-
'சிவசேனை' – மற்றொரு கண்ணியா? -குணா கவியழகன் தமிழர்களின் ஆயுதப்போரைத் தோற்கடித்த தரப்புகள் போரின் மூல அம்சமான அரசியல் போராட்டத்தை விட்டு வைக்குமா? பொருளுள்ள இந்தக் கேள்விக்கு விடையறிய இலங்கைத் தீவின் அனைத்து அரசியல் அசைவுகளையும் ஆய்வுக் கண்ணோடு பின்தொடர வேண்டியவர்களாக இன்று தமிழர்கள் உள்ளனர். இப்போதைய மிகப் புதிய அசைவு 'சிவசேனை' சிவசேனை என்றொரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி, தமிழர்களின் உரிமையை வெல்வதற்கான கதவைத் திறந்துவிடலாம் என்ற கருத்தை முன்கொண்டு அரசியல் அரங்கில் புதிய காட்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. இலங்கையில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியுற்றதற்கான அரசியல் காரணமாகி, தமிழர்களுக்கான உலக ஆதரவுக்கரம் ஒன்றேனும் இல்லாமையை பொத…
-
- 1 reply
- 591 views
-
-
மனிதாபிமானத்தின் எழுச்சியும்திசை திருப்பும் முயற்சியும் -செல்வரட்னம் சிறிதரன் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அநீதியான முறையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷனும், கஜனும் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாகத்தான் இந்தப் படுகொலையைப் பலரும் கண்டித்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல், இன, மத, அந்தஸ்து, பிரதேச பேதமின்றி நாடெங்கிலும் மாணவர் சமூகம் கிளர்ந்தெழுந்து நீதி கோரி குரல் எழுப்பியிருக்கின்றது. அநீதிக்கு எதிரான இந்த ஆவேசம் வரவேற்கத்தக்கது. ஊக்குவிக்கப்பட வேண்டியதாகும். இப்போதுதான் முதன் முறையாக இத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்…
-
- 0 replies
- 257 views
-
-
-
யாழ்ப்பாணத்தில் தொடரும் அச்சமூட்டும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில் அங்கு மக்கள் மத்தியில் அச்சத்தை ஊட்டும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 20 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலியானதையடுத்து யாழ். குடாநாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் நகரின…
-
- 0 replies
- 440 views
-
-
இலங்கையில் இந்துத்துவா எனும் ஒரு புதுஅபாயம் : வி.இ.குகநாதன் 10/24/2016 இனியொரு... இலங்கையில் தமிழர்களிடையே இந்த மாதத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய நிகழ்வாக சிவசேனா என்ற அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டதன் மூலம் இந்துத்துவா எனும் கருத்தியலிற்கான கதவு திறக்கப்பட்டிருப்பதனைக் கூறலாம். இந்த இந்துத்துவா கருத்தியல் வெற்றி பெறுமாயின், அதுதமிழர்களின் நீண்டகால உரிமைப் போராட்டடத்தில் ஏற்படுத்தப்படப்போகும் இன்னொரு பிளவாகவும் பின்னடைவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே தமிழரின் ஒற்றுமையினைக் குலைக்கும் சில நிகழ்வுகளை நாம் ஏற்கனவே சந்தித்துள்ளோம்.அவையாவன விடுதலை இயக்கங்களிடையே தலமைத்துவப்போட்டியாலும், இந்திய உளவு அமைப்பின் சதிவேலைகளாலும் ஏற்பட்டபிளவு. எ…
-
- 1 reply
- 753 views
-
-
பெயருக்கு சமஷ்டிமுறையையும் செயலில் ஒற்றையாட்சி முறையையும் கொண்ட ஆஸ்திரிய அரசியல் அமைப்பு ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாகுமா? – தத்தர் இனப்பகைமை அற்ற ஆஸ்திரியாவில் உருவான அதிகாரமற்ற சமஷ்டி முறையை… இனப்பகைமை கொண்ட இலங்கையின் அரசியலுக்கு தீர்வாக்க முடியாது. ஆஸ்திரியாவில் காணப்படும் சமஷ்டிமுறை ஆட்சித் தீர்வை இலங்கையின் இனப்பிரச்சனைகக்கு தீர்வாக பரிசீலிக்கலாம் என்று தமிழ்த் தரப்பில் உள்ள சில அரசியல்வாதிகளால் பேசப்படுகிறது. இத்தகைய ஆஸ்திரிய சமஷ்டிமுறையின் மீது தற்போது பதவியில் இருக்கும் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அவ்வாறான ஒரு தீர்வைக்காண அது தமிழ்த் தலைவர்களுடன் உள்ளுர உரையாடி வருவதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரிய அரசியல யாப்பைப்…
-
- 0 replies
- 234 views
-
-
காஷ்மீரிகளின் கறுப்புத்தினம் -மாலிக் அப்துல் ஒக்டோபர் 27 ஆம் திகதியானது, மகிழ்ச்சியற்ற காஷ்மீர் மக்களுக்கு மேலும் துக்கம், கவலை, மனச்சோர்வு, துயர்நிலை மற்றும் தாங்க முடியாத இன்னல்களை அளிக்கின்றமை உலகம் அறிந்த உண்மையாகும். இவ்வாறானதொரு துரதிஷ்டமான நாளிலேதான், இப்பூமியிலே காணப்படுகின்ற சொர்க்கமான காஷ்மீரின் ஒரு பகுதியினை வலுக்கட்டாயமாக இந்திய இராணுவம் கைப்பற்றியதுடன் அதனை நரகமாக மாற்றியுள்ளது. காஷ்மீரியர்கள்;, அவர்களது தாய் நாட்டின் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், பிராந்தியத்தின் கொடுங்கோல் ஆட்சியாளர் மனித உரிமை மீறல்கள், இரத்த நீரோடைகளை உருவாக்குதல், உடைமைகளை அழித்தல், ஜனநாயக…
-
- 0 replies
- 259 views
-
-
பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ப்ரியத் லியனகேவால் எழுதப்பட்டு ‘லங்கா நிவ்ஸ் வெப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது, (தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). ### நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளன. படுகொலையாளிக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. எனினும் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் காரணமாக உலகம் முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இன்றியமையாத சேவையொன்றை அவரால் செய்ய முடிந்திருக்கின்றது. மேலும், அவரின் பெயர் தொடர்ச்சியாக பிபிசி நிறுவனத்துக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பிபிசி சேவையின் ஊழியர் ஒழுங்குவிதியிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் விடுபட்டிருக்கும் …
-
- 0 replies
- 440 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள்; அரசாங்கம் என்பதையும் தாண்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது அதீத நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருப்பதை வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு எடுத்துக் காட்டியது. வாக்களித்த மக்கள் தங்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்கும்போது அதற்குப் பொறுப்பான முறையில் பதில் வழங்க வேண்டியது கடமை. ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பில் கேள்விகளுக்கு வழங்கப்பட்ட பதில் நாங்கள் செய்வதை நீங்கள் பார்த்துக் கொண்டிருங்கள் என்ற தொனியில் அமைந்திருந்தது. ரணில் கிளித்தெறிந்த தீர்வு மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி…
-
- 0 replies
- 353 views
-
-
அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்துக்கள் மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதுடன், தமிழ்த் தேசியவாத தரப்பினர் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் அரசியல் பரப்பில் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய ஒருவராக இருந்துவரும் சுமந்திரன் வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது தெரிவித்திருந்த கருத்துக்களே மீளவும் சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறது. சுமந்திரன் பேசிய விடயம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடப்பட்டுவருகிறது. 30 வருடம் போராடி என்னத்தை கண்டிங்க என்று சுமந்திரன் கேட்கிறார். அமிர்தலிங்கத்தைப் பற்றி நீலன் திருச்செல்வத்தை பற்றி கூறினீர்கள் – அவர்கள் இப்போது …
-
- 0 replies
- 419 views
-
-
ஜனநாயகம் தொடர்பான விவாதங்கள் முடிவின்றி தொடர்கின்றன. ஜனநாயகம் தொடர்பில் பலவாறான பார்வைகள் உண்டு. இதில் எது சரி? எது தவறு? என்பதெல்லாம் அவரவரது அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான உலக ஒழுங்கில் அமெரிக்காவே பிரதான சக்தியாக நிலைபெற்றது. அதன் பின்னர் உலகெங்கும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்காவே அனைவருக்கும் வகுப்பெடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அனைத்து நாடுகள் தொடர்பான மனித உரிமைகள் நிலவர அறிக்கையொன்றை வெளியிட்டு வருகின்றது. ஒரு உலக வல்லரசு என்னும் தகுதி நிலையில் இருந்தே அமெரிக்கா இதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இத்தகைய அமெரிக்க ஜனநாயகத்தையே குழந்தைத்தனமான ஒன்று என்கிறார் அ…
-
- 0 replies
- 372 views
-