அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
அண்மைக் காலமாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பல பாராளுமன்றஉறுப்பினர்களுக்குஎதிரானவிமர்சனங்கள் புலம் பெயர்நாடுகளில்; இயங்கும் தமிழர் அமைப்புக்களிடமிருந்து எழுந்தவண்ணம் உள்ளன. குறிப்பாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்குஎதிரானவிமர்சனங்கள் உச்சநிலையை எட்டியிருக்கின்றன. இங்கிலாந்திலும் வேறுசிலநாடுகளிலும் மேற்படி இருவரினதும் உருவப்படங்களும் சிலபோராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன.புலம் பெயர் தமிழர்கள் சிலமேற்படிதலைவர்களின் படங்களில் ஏறிநின்றுகால்களால் ம்pதித்தசம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை கவலைக்குரியதாகவேஅனைவருக்கும் தோன்றியிருக்கவேண்டும். ஆனாலும் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் …
-
- 0 replies
- 445 views
-
-
ஐ.நாவின் அறிக்கை பிற்போடப்பட்டமை தமிழருக்கு பின்னடைவா? ச.பா. நிர்மானுசன் படம் | Jera, Colombomirror சிறீலங்காவில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவு அலை மீண்டும் சிறீலங்காவை நோக்கி திரும்பியுள்ளது. தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான கோரிக்கைகள் இதனால் மீண்டும் பின்தள்ளப்படுகின்றன. இதன் ஒரு உச்சக்கட்டமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இருபத்தெட்டாவது கூட்டத் தொடரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தின் “21 பெப்ரவரி 2002 தொடக்கம் 15 நவம்பர் 2011 வரை இலங்கைத் தீவில் நிகழ்ந்த மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய குற்றங்கள்” தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்ப…
-
- 0 replies
- 404 views
-
-
கிழக்கு விவகாரம்: நேர்மையான ஐக்கியத்திற்கு தமிழ்த் தரப்பு தயார் - முஸ்லிம் தரப்பு தயாரா? முத்துக்குமார் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கு வழிகளினால் பெற்றிருக்கின்றது. புதிய முதலமைச்சராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹாவிஸ் நஸீர் அகமட் பதவி ஏற்றுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதனால் அம்மாவட்டத்திற்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. அம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெமீல் அதற்காக முயற்சி செய்தார். அது பலனளிக்கவில்லை. அவர் சாய்ந்தமருதில் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார். கட்சி நீக்க அறிவிப்பை தலைமை செய்தவுடன் அவர் அடங்கிவிட்டார். முஸ்லிம்களின் அரசியல் மையம் கிழக்கு ம…
-
- 0 replies
- 373 views
-
-
சம்பந்தனின் நகர்வுகள் தோல்வியுறுமா? - யதீந்திரா படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது? இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது. சில நேரங்களில் குளறுபடியாகத் தெரிகிறது. இன்னும் சில வேளைகளிலோ உண்மையில் கூட்டமைப்பிற்குள் என்னதான் நடைபெறுகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு ஒரே புதிராக இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் கூட்டமைப்பு ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் இயங்கவில்லை என்பதை காணலாம். அண்மைக்காலமாக கூட்டமைப்பின் சார்பில் வெளிவரும் அறிக்கைகள் மேற்படி நிலைமையை தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றன. …
-
- 0 replies
- 350 views
-
-
-
இனச்சுத்திகரிப்பு’: தீர்மானம் கோரும் வடக்கு முஸ்லிம் அமைப்பு இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என்று சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்ற பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களின் வெளியேற்றம் ஓர் இனச்சுத்திகரிப்பு என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும…
-
- 2 replies
- 411 views
-
-
ஹிட்லரிடமிருந்து யூத மக்களின் விடுதலையை நினைவுபடுத்தும் நாள் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இன்று,(27.01.15) யூதமக்கள் வாழும் பல நாடுகளிலும்,ஜேர்மன் நாட்டதிபதி ஹிட்லரின் கொடுமையிலிருந்து,யூதமக்கள் விடுதலையான முதலாம் நாள் நினைவுபடுத்தப் படுகிறது., எழுபது வருடங்களுக்குமுன், போலாந்து நாட்டிலிருந்த,கொடுமையான ஜேர்மன் சித்திரைவதைமுகாமான ஆஷ்விட்ச் என்ற இடத்திலிருந்து,கிட்டத்தட்ட 50.000-100.000 யூத மதக்கைதிகள்,இரஷ்யப்படைகளால் விடுவிக்கப்பட்டதை இன்று யூத மக்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஆஷ்விட்ஷ் முகாமின் முன்னால் இன்று இரவு,உலகத்தலைவர்களாலும்,முகாமில் கைதிகளாயிருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட முதியோர்களாலும் அந்த முகாமில் நடந்த பல கொடுமையான சரித்திரத்தை நினைவுகூரும் நிகழ்ச்சிகள் …
-
- 0 replies
- 742 views
-
-
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வாரங்களின் பின்னர், கடந்த 16ம் திகதி, இலங்கையின் இராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவினால், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத் தலைமையகம் கூறியிருந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இராணுவக் கட்டமைப்பு பெரும் மாற்றங்களைச் சந்திக்கும் என்று முன்னரே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணம், முன்னைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், இராணுவம் பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது. கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்களும், அவரது விசுவாசிகளும், உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு, தாராளமாகக் கவனிக்கப்பட்டனர். அதைவிட, ஜனாதிபதித் தேர்தலுக்கு மறுந…
-
- 0 replies
- 409 views
-
-
கனடா தேர்தலில் சிதறிக்கப்படும் இலங்கைத் தமிழர் வாக்குக்கள் கனடாவில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற பகுதி ஸ்காபுறோ ஆகும். டொராண்டோ மாநகரத்தின் கிழக்குப் பகுதியான ஸ்காபுறோவில் அதிகளவு இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள். ஸ்காபுறோ, மார்க்கம் ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டுமே கனடாவில் வாழ்கின்ற முக்கால்வாசி இலங்கைத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற நாடு கனடா. அதிலும் டொராண்டோ பெரும்பாகத்தில் தான் அதிகம் பேர் வாழ்கின்றார்கள். சுமார் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் பேர் டொராண்டோ பெரும்பாகத்தில் இருக்கின்றார்கள். அதிலும் மிக அதிகமானோர் வாழ்வது ஸ்காபுறோ ரூஜ் றிவர் பகுதியில் தான். கடந்த முறை பா…
-
- 1 reply
- 630 views
-
-
'கொரில்லா’வில் தொடங்கி 'கண்டி வீரன்’ வரையிலும் தமிழ் இலக்கியப் பரப்பின் தனித்துவக் குரல். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இயங்கி, பின்னர் அதில் இருந்து விலகி, புலிகளை இப்போதுவரை கடுமையாக விமர்சித்து வருபவர். சமகாலத்தின் சிறந்தகதைசொல்லிகளில் ஒருவரான ஷோபா சக்தி, இப்போது கதாநாயகன். 'தீபன்’ என்ற பிரெஞ்சு திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். பாரீஸில் இருந்து ராமேஸ்வரத்தில் கடைசிக்கட்டப் படப்பிடிப்புக்காக வந்திருந்தவரிடம் பேசினோம்... ''பிரான்ஸில் புகழ்பெற்ற இயக்குநர் ஜாக் ஓடியார் இப்போது இயக்கும் படம் 'தீபன்’. ஈழத்தின் யுத்தச் சூழலில் இருந்து தப்பித்து புலம்பெயர்ந்து பிரான்ஸுக்கு வரக்கூடிய மூன்று பேரைப் பற்றியது. அகதியாக வந்து புது நாட்டில் புதுச் சூழலில் எப்படி வாழ்கிறார்கள், அத…
-
- 21 replies
- 3.6k views
-
-
இந்தியாவுக்கு வருகை தரும்போது எல்லாம் சிங்கள அரசுத் தலைவர்கள் தங்களை இந்து சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்வதும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்திய மண்ணையும் அரசையும் வளைக்க நாடகமாடுவதும் இயல்பாகிவிட்டது. குறிப்பாக பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் இந்த நாடகத்தை ஆடி, ஆட்சியாளர்களை அவர்கள் குளிர்விக்கிறார்கள். திருப்பதி கோயிலுக்குப் போவதும் ஏழுமலையானைக் கும்பிடுவதும் இந்த நாடகத்தில் வழமையான ஒரு காட்சியாய் அமைகிறது. முன்பு மகிந்த ராஜபக்ச திருப்பதி வந்தார். இப்போது மைத்திரிபால சிறீசேன வருகிறார். இலங்கையில் சிங்கள இனம் தோன்றுவதற்கு முன்பே 'பஞ்சேஸ்வரங்கள்’ எனப்படும் ஐந்து பழம்பெரும் சிவன் கோயில்கள் இருந்தன. ஆனால் இன்று இந்தச் சிவாலயங்களின் நிலை என்ன? சிங்க…
-
- 1 reply
- 760 views
-
-
உள்ளூர் விசாரணையை ஏற்றுக் கொள்வது தமிழினத்திற்கு செய்யும் துரோகம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மார்ச்சில் கொண்டுவரப்பட இருந்த சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தற்போது ஏமாற்றம் தான் ஆனாலும், செப்ரெம்பர் மாதம் வருமாக இருந்தால் புதிய மாற்றம் ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். யாழ் நல்லூர் செட்டித்தெரு வீதியிலுள்ள விடுதியொன்றில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய அரசு அறிக்கையை பிற்போடுமாறு கோரியிருந்தது. ஆனால் நாம் கொண்டு வரப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்து செயற்பட்டோம். இதற்கமைய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உட்…
-
- 0 replies
- 353 views
-
-
ஆட்சி மாற்றம் என்ற ஒன்றை சாதகமாகக் கொண்டு ஜெனிவா மனித உரிமைச் சபையின் விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் முயற்சி பயனளித்தாலும் அந்த விவகாரத்தை புதிய அரசாங்கம் எவ்வாறு கையாளவுள்ளது என்பது தொடர்பாக பௌத்த தேசியவாதம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. -அ.நிக்ஸன்- தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரதானமாக மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஓன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது. இரண்டாவது ஜெனீவா மனித உரிமைச்சபையின் அமர்வு ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள். மூன்றாவது வடமாகாண சபையின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணை. புதிய அரசாங்கத்தின் நிலை இந்த மூன்று விடயங்களும் புதிய அரசாங்கத்துக்கு சங்கடத்…
-
- 0 replies
- 346 views
-
-
இனப்படுகொலை: சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தும் இலங்கையின் நிராகரிப்பு 12 பெப்ரவரி 2015 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்றும் இலங்கையில் அறுபது வருடமாக தொடர்வது இன அழிப்பு என்றும் உலகமெல்லாம் போராட்டங்களும் தீர்மானங்களும் நிறைவேற்றியபோது ஈழத் தமிழ் தலைவர்கள் தேர்தலிலும் அரசியல் நோக்கங்களுக்காக சில ஊடகங்களிலும் பேசிய இனப்படுகொலை குறித்த கதைகளைக்கூட முறையான விதத்தில் வெளிக்கொணரவில்லை. சபைகளில் பேசவில்லை. உலகளவில் எடுத்துச் செல்ல அஞ்சினர். தமது பதவிகள் பறிக்கப்படும் என்ற அச்சத்தால் அதை தந்திரோபாயம் என்று கூறினர். இது ஒடுக்கப்படும் ஓர் இனத்தின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது மக்களுக்குச் செய…
-
- 0 replies
- 364 views
-
-
வட கிழக்கில் இராணுவ மய நீக்கத்திற்கான அவசியம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் 11 பெப்ரவரி 2015 இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுகிறது. புதிய அரசாங்கம்கூட இந்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து முடித்த பின்னரும் வட கிழக்கில் இராணுவத்தை நிலை நிறுத்த தீர்மானிப்பது ஏன்? புலிகளை அழிக்க வட கிழக்கில் இராணுவம் செறிவாக்கப்பட்டது எனில் தொடர்ந்தும் வடகிழக்கில் இராணுவ மயத்தை பேணுவதன் மூலம் தமிழ்மக்களை ஒடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறதா? தமிழ் மக்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசியல் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் தொடர்ந்தும் இராணுவ மயத்தை …
-
- 0 replies
- 413 views
-
-
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா வருகிறார். கடந்த காலங்களில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் போராட்டங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது. இப்போது மைத்திரி பாலவின் வருகையை தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் பிரதிநிதியாகக் கருதி எதிர்ப்பதா, அல்லது ராஜபக்சேதான் இனப்படுகொலைக்குக் காரணம் என்பதால் அவர் வருகையை மட்டுமே எதிர்க்கவேண்டும் என்று பொருள் கொள்ளலாமா என்று கேட்டால் தெளிவான பதில்களை நாம் கண்டடைய முடியாது. எப்படியிருந்தபோதிலும் ராஜபக்சேவின் தோல்விக்குப் பிறகு ஈழ ஆதரவுப் போராட்டத்தின் வீரியம் சற்று குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இறுதிப்போரில் இலங்கை அரசின் இனப்படுகொலை …
-
- 0 replies
- 338 views
-
-
சோவியத் ஒன்றியத்திலிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள், இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்ததன் 25-வது ஆண்டு இது. இஸ்ரேலிய சமூகத்தில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். சோவியத் ஒன்றியத்தின் இரும்புத் திரை விலகிய பின்னர், இஸ்ரேலை நோக்கி யூதர்கள் திரண்டு வரத் தொடங்கினர். இஸ்ரேலில் இன்று இருக்கும் யூதர்களில் 5-ல் ஒருவர், சோவியத் ஒன்றியத்திலிருந்து வந்தவர்தான். ரஷ்யாவிலிருந்து குடிபுகுந்த அலியாக்களின் (வெவ்வேறு நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்குள் குடிபுகுந்த யூதர்களைக் குறிக்கும் சொல்) வாழ்க்கைச் சரித்திரம், வெற்றிக் கதைகளுக்கு உதாரணம். “ஒருசில ஆண்டுகளிலேயே இஸ்ரேலின் மக்கள்தொகையில் 20% அதிகரித்துவிட்டது” என்று நினைவுகூர்கிறார் சோவியத் ஒன்றியத்தை எதிர்த்த…
-
- 0 replies
- 571 views
-
-
'பழைய குருடி கதவைத் திறடி' என்ற நிலைக்கு வந்துள்ளோம்: விக்னேஸ்வரன் ஆதங்கம்! யாழ்ப்பாணம்: வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள், வருங்காலம் யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன என்றும், “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் சிறப்பு கூட்டத்தில், தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் இன அழிப்பு என சுட்டிக் காட்டும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்கர் விக்னேஸ்வரன், "பலத்த சிரமங்களுக்கிடையே அந்த உறுதிமொழியை நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். வடகிழக்கு தமிழ் மக்களின் உரித்துக்…
-
- 0 replies
- 550 views
-
-
சீனாவுக்கு கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றி – என்.கண்ணன் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கேள்விக்குறியாக மாறியிருந்த, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு, புதிய அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்திருக்கிறது. இது பலரது புருவங்களையும் உயர்த்திப் பார்க்க வைத்திருக்கிறது. ஏனென்றால், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக – வர்த்தக சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய இப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுற்றுச் சூழலைக் கருத்தில் கொள்ளாத- இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு அச்சுறுத்தலான கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இரத்துச் செய்வோம் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார். அது அப்போது சீனாவுக்கு அதிர்ச்…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆங்கிலேயரிடம் ஈழம் வாங்காமல் தவற விட்ட "தமிழ்த் தேசிய" தலைவர்கள்! ஆள் பாதி, ஆடை பாதி, அமெரிக்கா மீதி! இலங்கையின் 67 வது சுதந்திர தினத்திற்கு, முன்னாள் காலனிய எஜமான் பிரிட்டனின் எலிசபெத் மகராணி வாழ்த்துக் கூறி இருக்கிறார்! (https://www.gov.uk/government/world-location-news/queens-message-to-mark-independence-day-of-sri-lanka) பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினமானது, "சிங்களவர்களிடம் தமிழர்கள் அடிமைப் பட்ட தினமாகையினால், அதனை தமிழர்கள் கருப்பு நாளாக அனுஷ்டிக்க வேண்டும்" என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். இன்னும் சிலர், "அன்றைக்கே ஈழம் கேட்காமல் விட்ட தமிழ்த் தலைவர்களின் தவறு" பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். வரலாறு தெரிய…
-
- 1 reply
- 467 views
-
-
இலங்கைத்தீவில் ஆட்சிமாற்றத்தின் பின் தமிழர் விடுதலை மட்டுமல்ல தமிழர் எதிர்காலமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது. இலங்கைத்தீவில் மட்டுமல்ல அனைத்துலக மட்டத்திலும் தமிழர்களுக்கு எதிராக அனைத்து வழியிலும் காங்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக வருடாவருடம் திருவிழா போல் ஜெனிவாவில் அரங்கேற்றப்பட்டுவந்த ஐநா மனித உரிமை பேரவையின் அறிக்கை போர்களும் கிடப்பில் போடப்படும் கட்டத்தை நெருங்கிவிட்டதை தொடரும் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்ல எமது இதுவரை கால விடுதலைப் போராட்டத்தை இந்த ஐநா விசாரணை பொறிமுறையினூடாக புலிகளையும் குற்றவாளிகளாக்கி நீதியை மடைமாற்றி எமது இதுவரை கால போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய மேற்குலகம் முற்படுவதையும் அவதானிக்கக்கூடியதாக …
-
- 1 reply
- 346 views
-
-
இந்திய ஊடகமொன்றுக்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ அளித்த செவ்வியின் தமிழக்கம் இலங்கையை கடுமையாக இராணுவமயப்படுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் இலங்கையின் பௌதீக அளவிற்கு பொருத்தமற்ற வகையில் இராணுவத்தை விஸ்தரித்து உள்ளதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி உங்களது கருத்து? இராணுவமயப் படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களில் உண்மையில்லை. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை இராணுவம் விரிவாக்கப்பட்டது. பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக இவ்வாறு இராணுவத்தை விஸ்தரிக்க நேரிட்டது. அமெரிக்காவின் எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவு கூட இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளை உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பு என அடையா…
-
- 0 replies
- 276 views
-
-
முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்களிடம் பாதிக்கப்பட்டோர் என்ற கூட்டு உளவியலை (Psychology of collective victimization) உருவாக்கியிருந்தது. அந்த உளவியல், அதிர்ச்சிக்குள்ளும் தமது பொது எதிராளி யார் என்ற விழிப்பு நிலையுடன், எமது அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி அல்லது ஏக்கம் பல்வேறு தரப்பிடமும் ஆழப் பதிய காரணமாகியது. அந்த நிலை படிப்படியாக போராடும் மனப்பாங்கை உண்டுபண்ணியது. தமிழர் தாயகத்தில் தொடர்ந்த திறந்தவெளிச் சிறைச்சாலை நிலைமை அங்கு வாழ்ந்த மக்களின் புறச்செ…
-
- 0 replies
- 461 views
-
-
கொஞ்சம் பின்னுக்கு சென்று பார்க்கின்றேன்... 1977 வடக்கு கிழக்கு தமிழரின் ஒருமித்த அமோக ஆதரவுடன் கூட்டணியினர் வென்றிருந்த நேரம். அவர்களது மேடைப்பேச்சுக்கள் வீர உரைகள் கவிதைகள் கதைகள் இரத்தப்பொட்டிடுதல்....என இளைஞர்கள் அவர்களின் பின்னால் ஒன்றிணைந்திருந்த நேரம்... மெல்ல மெல்ல............. செயல்களற்றநிலை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முடிவுகள் தமிழருக்கு ஒருமுகம் சிங்களவருக்கு ஒருமுகம் உலகுக்கு ஒருமுகம் என இரட்டை வேசங்கள்.... மெல்ல மெல்ல..... இளைஞர்களின் பிடி இறுக அது அதிதீவிரமாகி ஆயுதமாகி..... பேசத்தொடங்கி............. வரலாறை நாம் அறிவோம் எவரும் சொல்லித்தராத எழுத்தில் புத்தகத்தில் வரவேண்டியதில்லை எம்மோடு சேர்ந்து வளர்ந…
-
- 6 replies
- 625 views
-
-
சிறிலங்காவை எதற்காக அரவணைக்க வேண்டும்? – ஒரு அமெரிக்கப் பார்வை Feb 06, 2015 | 7:47 by நித்தியபாரதி in கட்டுரைகள் அமெரிக்க-சிறிலங்கா உறவுகளை மீளவும் நிறுவுவதற்கான திட்டங்கள் எதனையும் அமெரிக்கா முன்னெடுக்காது விட்டால், 21 மில்லியன் மக்களைக் கொண்ட கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கைத் தீவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான வாய்ப்பை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும். இவ்வாறு The Wall Street Journal இதழில், மூத்த ஆய்வாளர் லிசா கேட்டிஸ் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்க மற்றும் பாதுகாப்புத் திணைக்கள முன்னாள் உயர் அதிகாரிகளான ரிச்சர்ட் ஆர்மிரேஜ் மற்றும் காரா பியூ ஆகியோருடன் இணைந்து லிசா கேட்டிஸ் எழுதியுள்ள இந்தக் கட்டு…
-
- 0 replies
- 336 views
-