அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
மேற்குலகையும் இந்தியாவையும் கையாளும் தந்திரம் ச.பா. நிர்மானுசன் படம் | US Department of State, Fllickr Photo ஐம்பது நாளை கடந்துள்ள சிறீலங்காவின் புதிய அரசு தமிழர்கள் தொடர்பாக கட்டுக்குள் வைத்திருக்கும் உபாயத்தையும், சர்வதேச சமூகத்தை நோக்கி வளைத்துப் போடும் உபாயத்தையும் கைக்கொள்கிறது. தம்வசம் வைத்திருக்கும் உபாயத்தின் அங்கமாக தற்போது இரு நகர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகள் முடுக்கி விட்டுள்ளது. இலங்கைத் தீவுக்கு வரும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை வளைத்துப் போடும் முகமாக, சீனாவின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் போர்ட் சிற்ரி திட்டத்தை இடைநிறுத்துவதற்கு சிறீலங்காவின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்தியா பயன்படுத்துகின்ற தம…
-
- 0 replies
- 339 views
-
-
"எதற்காக பாலஸ்தீனத்திற்காக அழுகிறீர்கள்?""தமிழர்கள் அழ வேண்டியது முள்ளிவாய்காலுக்காக மட்டுமே!" தமிழர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சிலர் சமூக வலைத் தளங்களில் சட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளில் முதன்மையானது, ஒடுக்கப் பட்ட மக்களை பிரித்து வைப்பது. அதை இப்படியான வழிகளிலும் சாதிக்கலாம். வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கண்களை மூடிக் கொண்டிருந்த, ஓய்வு பெற்ற நீதியரசர் விக்கினேஸ்வரன், வட மாகாண முதலமைச்சராக பதவி வகிக்கிறார். வன்னியில் முற்றுகைக்குள் அகப்பட்ட மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவில் சில தமிழ் தனவந்தர்கள், ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வழங்கினார்…
-
- 0 replies
- 609 views
-
-
மிருதுளா தம்பையா - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- கடந்த இரு மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 10 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புபிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், புதிய அரசாங்கம் அவர்களை நாடு திரும்புமாறு விடுத்த அழைப்பை ஏற்று நாடு திரும்பியவர்கள் அவர்கள் நம்பிக்கையுடன் நாடு திரும்பியபோதிலும், விமான நிலையத்தில் அவர்கள் நடத்தப்பட்டவிதம், அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் அவர்கiளை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. அவர்கள் பல மணிநேரங்களுக்கு மேல் விசாரிக்கப்பட்டு உள்ளனர்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் மீதான கண்காணிப்பு தொடர்கின்…
-
- 6 replies
- 686 views
-
-
ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு கூட்டமைப்பே காரணம்! முத்துக்குமார் மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்ததனால் அதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காகவே ஒத்திவைக்கப்படுவதாக மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தாலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தாம் உருவாக்கிய அரசாங்கத்தை பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளது. வருகின்ற யூன் மாதம் பாராளுமன்றத் தேர்தல் எதிர்பார்க்கப்படுவதால், அறிக்கை அதனை பாதிப்பதாக இருக்கக்…
-
- 0 replies
- 299 views
-
-
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது. ராஜபக்ச சகோதரர்கள் தமது ஆட்சிக் காலம் முழுவதும் ஈழ மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகளை இழைத்தமை குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. ராஜபக்ச சகோதரர்கள் தங்கள் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் செயத மாபெரும் குற்றம் ஈழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றமே. ஈழ மக்கள் ஒன்றரை லட்சம் பேரை படுகொலை செய்து மிகக்கொடிய போர்க்குற்றங்களை அரங்கேற்றிய ராஜபக்சக்களை விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கு மாத்திரம் இலங்கையின் புதிய ஆட்சியாளர் தயங்குவது ஏன்? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக…
-
- 0 replies
- 333 views
-
-
ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகள்? கூட்டமைப்பின் பதில் என்ன? -யதீந்திரா (கட்டுரை) தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தமிழ் மக்களுக்குள்ளும் நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்தவாறு இருக்கின்றன. ஒரு புறம் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்கின்றனர். மறுபுறும் மக்கள் மத்தியில் அதிருப்திகளும், எதிர்ப்புக்களும் அதிகரித்து வருகின்றது. இந்த அதிருப்தி காணாமல்போனோரின் ஆர்ப்பாட்டங்களாகவும், மாணவர் போராட்டமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இவ்வாறான மக்களின் தன்னியல்பான நடவடிக்கைளில் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் வலிந்து ஒட்டிக்கொள்கின்றனரே ஒழிய, கூட்டமைப்பின் தலைமையின் கீழ் மக்கள் ஒன்றுதிரளவி…
-
- 0 replies
- 411 views
-
-
அண்மைக் காலமாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பல பாராளுமன்றஉறுப்பினர்களுக்குஎதிரானவிமர்சனங்கள் புலம் பெயர்நாடுகளில்; இயங்கும் தமிழர் அமைப்புக்களிடமிருந்து எழுந்தவண்ணம் உள்ளன. குறிப்பாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்குஎதிரானவிமர்சனங்கள் உச்சநிலையை எட்டியிருக்கின்றன. இங்கிலாந்திலும் வேறுசிலநாடுகளிலும் மேற்படி இருவரினதும் உருவப்படங்களும் சிலபோராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன.புலம் பெயர் தமிழர்கள் சிலமேற்படிதலைவர்களின் படங்களில் ஏறிநின்றுகால்களால் ம்pதித்தசம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை கவலைக்குரியதாகவேஅனைவருக்கும் தோன்றியிருக்கவேண்டும். ஆனாலும் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் …
-
- 0 replies
- 447 views
-
-
ஐ.நாவின் அறிக்கை பிற்போடப்பட்டமை தமிழருக்கு பின்னடைவா? ச.பா. நிர்மானுசன் படம் | Jera, Colombomirror சிறீலங்காவில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவு அலை மீண்டும் சிறீலங்காவை நோக்கி திரும்பியுள்ளது. தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான கோரிக்கைகள் இதனால் மீண்டும் பின்தள்ளப்படுகின்றன. இதன் ஒரு உச்சக்கட்டமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இருபத்தெட்டாவது கூட்டத் தொடரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியகத்தின் “21 பெப்ரவரி 2002 தொடக்கம் 15 நவம்பர் 2011 வரை இலங்கைத் தீவில் நிகழ்ந்த மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய குற்றங்கள்” தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்ப…
-
- 0 replies
- 408 views
-
-
கிழக்கு விவகாரம்: நேர்மையான ஐக்கியத்திற்கு தமிழ்த் தரப்பு தயார் - முஸ்லிம் தரப்பு தயாரா? முத்துக்குமார் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கு வழிகளினால் பெற்றிருக்கின்றது. புதிய முதலமைச்சராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹாவிஸ் நஸீர் அகமட் பதவி ஏற்றுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதனால் அம்மாவட்டத்திற்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. அம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெமீல் அதற்காக முயற்சி செய்தார். அது பலனளிக்கவில்லை. அவர் சாய்ந்தமருதில் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார். கட்சி நீக்க அறிவிப்பை தலைமை செய்தவுடன் அவர் அடங்கிவிட்டார். முஸ்லிம்களின் அரசியல் மையம் கிழக்கு ம…
-
- 0 replies
- 375 views
-
-
சம்பந்தனின் நகர்வுகள் தோல்வியுறுமா? - யதீந்திரா படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது? இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது. சில நேரங்களில் குளறுபடியாகத் தெரிகிறது. இன்னும் சில வேளைகளிலோ உண்மையில் கூட்டமைப்பிற்குள் என்னதான் நடைபெறுகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு ஒரே புதிராக இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் கூட்டமைப்பு ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் இயங்கவில்லை என்பதை காணலாம். அண்மைக்காலமாக கூட்டமைப்பின் சார்பில் வெளிவரும் அறிக்கைகள் மேற்படி நிலைமையை தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றன. …
-
- 0 replies
- 352 views
-
-
-
இனச்சுத்திகரிப்பு’: தீர்மானம் கோரும் வடக்கு முஸ்லிம் அமைப்பு இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என்று சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்ற பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களின் வெளியேற்றம் ஓர் இனச்சுத்திகரிப்பு என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும…
-
- 2 replies
- 412 views
-
-
ஹிட்லரிடமிருந்து யூத மக்களின் விடுதலையை நினைவுபடுத்தும் நாள் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இன்று,(27.01.15) யூதமக்கள் வாழும் பல நாடுகளிலும்,ஜேர்மன் நாட்டதிபதி ஹிட்லரின் கொடுமையிலிருந்து,யூதமக்கள் விடுதலையான முதலாம் நாள் நினைவுபடுத்தப் படுகிறது., எழுபது வருடங்களுக்குமுன், போலாந்து நாட்டிலிருந்த,கொடுமையான ஜேர்மன் சித்திரைவதைமுகாமான ஆஷ்விட்ச் என்ற இடத்திலிருந்து,கிட்டத்தட்ட 50.000-100.000 யூத மதக்கைதிகள்,இரஷ்யப்படைகளால் விடுவிக்கப்பட்டதை இன்று யூத மக்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஆஷ்விட்ஷ் முகாமின் முன்னால் இன்று இரவு,உலகத்தலைவர்களாலும்,முகாமில் கைதிகளாயிருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட முதியோர்களாலும் அந்த முகாமில் நடந்த பல கொடுமையான சரித்திரத்தை நினைவுகூரும் நிகழ்ச்சிகள் …
-
- 0 replies
- 747 views
-
-
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வாரங்களின் பின்னர், கடந்த 16ம் திகதி, இலங்கையின் இராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவினால், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத் தலைமையகம் கூறியிருந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இராணுவக் கட்டமைப்பு பெரும் மாற்றங்களைச் சந்திக்கும் என்று முன்னரே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணம், முன்னைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், இராணுவம் பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது. கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்களும், அவரது விசுவாசிகளும், உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு, தாராளமாகக் கவனிக்கப்பட்டனர். அதைவிட, ஜனாதிபதித் தேர்தலுக்கு மறுந…
-
- 0 replies
- 411 views
-
-
கனடா தேர்தலில் சிதறிக்கப்படும் இலங்கைத் தமிழர் வாக்குக்கள் கனடாவில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற பகுதி ஸ்காபுறோ ஆகும். டொராண்டோ மாநகரத்தின் கிழக்குப் பகுதியான ஸ்காபுறோவில் அதிகளவு இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள். ஸ்காபுறோ, மார்க்கம் ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டுமே கனடாவில் வாழ்கின்ற முக்கால்வாசி இலங்கைத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற நாடு கனடா. அதிலும் டொராண்டோ பெரும்பாகத்தில் தான் அதிகம் பேர் வாழ்கின்றார்கள். சுமார் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் பேர் டொராண்டோ பெரும்பாகத்தில் இருக்கின்றார்கள். அதிலும் மிக அதிகமானோர் வாழ்வது ஸ்காபுறோ ரூஜ் றிவர் பகுதியில் தான். கடந்த முறை பா…
-
- 1 reply
- 632 views
-
-
இந்தியாவுக்கு வருகை தரும்போது எல்லாம் சிங்கள அரசுத் தலைவர்கள் தங்களை இந்து சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்வதும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்திய மண்ணையும் அரசையும் வளைக்க நாடகமாடுவதும் இயல்பாகிவிட்டது. குறிப்பாக பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் இந்த நாடகத்தை ஆடி, ஆட்சியாளர்களை அவர்கள் குளிர்விக்கிறார்கள். திருப்பதி கோயிலுக்குப் போவதும் ஏழுமலையானைக் கும்பிடுவதும் இந்த நாடகத்தில் வழமையான ஒரு காட்சியாய் அமைகிறது. முன்பு மகிந்த ராஜபக்ச திருப்பதி வந்தார். இப்போது மைத்திரிபால சிறீசேன வருகிறார். இலங்கையில் சிங்கள இனம் தோன்றுவதற்கு முன்பே 'பஞ்சேஸ்வரங்கள்’ எனப்படும் ஐந்து பழம்பெரும் சிவன் கோயில்கள் இருந்தன. ஆனால் இன்று இந்தச் சிவாலயங்களின் நிலை என்ன? சிங்க…
-
- 1 reply
- 763 views
-
-
'கொரில்லா’வில் தொடங்கி 'கண்டி வீரன்’ வரையிலும் தமிழ் இலக்கியப் பரப்பின் தனித்துவக் குரல். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இயங்கி, பின்னர் அதில் இருந்து விலகி, புலிகளை இப்போதுவரை கடுமையாக விமர்சித்து வருபவர். சமகாலத்தின் சிறந்தகதைசொல்லிகளில் ஒருவரான ஷோபா சக்தி, இப்போது கதாநாயகன். 'தீபன்’ என்ற பிரெஞ்சு திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். பாரீஸில் இருந்து ராமேஸ்வரத்தில் கடைசிக்கட்டப் படப்பிடிப்புக்காக வந்திருந்தவரிடம் பேசினோம்... ''பிரான்ஸில் புகழ்பெற்ற இயக்குநர் ஜாக் ஓடியார் இப்போது இயக்கும் படம் 'தீபன்’. ஈழத்தின் யுத்தச் சூழலில் இருந்து தப்பித்து புலம்பெயர்ந்து பிரான்ஸுக்கு வரக்கூடிய மூன்று பேரைப் பற்றியது. அகதியாக வந்து புது நாட்டில் புதுச் சூழலில் எப்படி வாழ்கிறார்கள், அத…
-
- 21 replies
- 3.6k views
-
-
(விசேட ஆய்வு ஜெரா) இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. வடக்கு மாகாண சபை கொண்டு வந்த தீர்மானமும், ஐ.நா நிலவரங்களும் அதனைக் கிளறிவிட்டிருக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. இதனால் உண்மைகள் மறைக்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டோரிற்கான நீதி, நியாயங்கள் முற்றாக மறுக்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் பல்வேறு வடிவிலான ஆவணப்படுத்தல்களை இந்த விடயம் தொடர்பில் தயாரித்து வைத்திருக்கின்றன. ஆனால் அவை தமிழ் இன அழிப்பின் இறுதிக் கட்டத்தில் சேமிக்கப்பட்டவை. இந்த இன அழிப்புக்கு திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருப்ப…
-
- 1 reply
- 805 views
-
-
உள்ளூர் விசாரணையை ஏற்றுக் கொள்வது தமிழினத்திற்கு செய்யும் துரோகம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மார்ச்சில் கொண்டுவரப்பட இருந்த சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தற்போது ஏமாற்றம் தான் ஆனாலும், செப்ரெம்பர் மாதம் வருமாக இருந்தால் புதிய மாற்றம் ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். யாழ் நல்லூர் செட்டித்தெரு வீதியிலுள்ள விடுதியொன்றில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய அரசு அறிக்கையை பிற்போடுமாறு கோரியிருந்தது. ஆனால் நாம் கொண்டு வரப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்து செயற்பட்டோம். இதற்கமைய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உட்…
-
- 0 replies
- 356 views
-
-
ஆட்சி மாற்றம் என்ற ஒன்றை சாதகமாகக் கொண்டு ஜெனிவா மனித உரிமைச் சபையின் விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் முயற்சி பயனளித்தாலும் அந்த விவகாரத்தை புதிய அரசாங்கம் எவ்வாறு கையாளவுள்ளது என்பது தொடர்பாக பௌத்த தேசியவாதம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. -அ.நிக்ஸன்- தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரதானமாக மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஓன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது. இரண்டாவது ஜெனீவா மனித உரிமைச்சபையின் அமர்வு ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள். மூன்றாவது வடமாகாண சபையின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணை. புதிய அரசாங்கத்தின் நிலை இந்த மூன்று விடயங்களும் புதிய அரசாங்கத்துக்கு சங்கடத்…
-
- 0 replies
- 352 views
-
-
இனப்படுகொலை: சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தும் இலங்கையின் நிராகரிப்பு 12 பெப்ரவரி 2015 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்றும் இலங்கையில் அறுபது வருடமாக தொடர்வது இன அழிப்பு என்றும் உலகமெல்லாம் போராட்டங்களும் தீர்மானங்களும் நிறைவேற்றியபோது ஈழத் தமிழ் தலைவர்கள் தேர்தலிலும் அரசியல் நோக்கங்களுக்காக சில ஊடகங்களிலும் பேசிய இனப்படுகொலை குறித்த கதைகளைக்கூட முறையான விதத்தில் வெளிக்கொணரவில்லை. சபைகளில் பேசவில்லை. உலகளவில் எடுத்துச் செல்ல அஞ்சினர். தமது பதவிகள் பறிக்கப்படும் என்ற அச்சத்தால் அதை தந்திரோபாயம் என்று கூறினர். இது ஒடுக்கப்படும் ஓர் இனத்தின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது மக்களுக்குச் செய…
-
- 0 replies
- 366 views
-
-
வட கிழக்கில் இராணுவ மய நீக்கத்திற்கான அவசியம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் 11 பெப்ரவரி 2015 இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுகிறது. புதிய அரசாங்கம்கூட இந்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து முடித்த பின்னரும் வட கிழக்கில் இராணுவத்தை நிலை நிறுத்த தீர்மானிப்பது ஏன்? புலிகளை அழிக்க வட கிழக்கில் இராணுவம் செறிவாக்கப்பட்டது எனில் தொடர்ந்தும் வடகிழக்கில் இராணுவ மயத்தை பேணுவதன் மூலம் தமிழ்மக்களை ஒடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறதா? தமிழ் மக்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசியல் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் தொடர்ந்தும் இராணுவ மயத்தை …
-
- 0 replies
- 415 views
-
-
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா வருகிறார். கடந்த காலங்களில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் போராட்டங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது. இப்போது மைத்திரி பாலவின் வருகையை தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் பிரதிநிதியாகக் கருதி எதிர்ப்பதா, அல்லது ராஜபக்சேதான் இனப்படுகொலைக்குக் காரணம் என்பதால் அவர் வருகையை மட்டுமே எதிர்க்கவேண்டும் என்று பொருள் கொள்ளலாமா என்று கேட்டால் தெளிவான பதில்களை நாம் கண்டடைய முடியாது. எப்படியிருந்தபோதிலும் ராஜபக்சேவின் தோல்விக்குப் பிறகு ஈழ ஆதரவுப் போராட்டத்தின் வீரியம் சற்று குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இறுதிப்போரில் இலங்கை அரசின் இனப்படுகொலை …
-
- 0 replies
- 342 views
-
-
சோவியத் ஒன்றியத்திலிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள், இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்ததன் 25-வது ஆண்டு இது. இஸ்ரேலிய சமூகத்தில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். சோவியத் ஒன்றியத்தின் இரும்புத் திரை விலகிய பின்னர், இஸ்ரேலை நோக்கி யூதர்கள் திரண்டு வரத் தொடங்கினர். இஸ்ரேலில் இன்று இருக்கும் யூதர்களில் 5-ல் ஒருவர், சோவியத் ஒன்றியத்திலிருந்து வந்தவர்தான். ரஷ்யாவிலிருந்து குடிபுகுந்த அலியாக்களின் (வெவ்வேறு நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்குள் குடிபுகுந்த யூதர்களைக் குறிக்கும் சொல்) வாழ்க்கைச் சரித்திரம், வெற்றிக் கதைகளுக்கு உதாரணம். “ஒருசில ஆண்டுகளிலேயே இஸ்ரேலின் மக்கள்தொகையில் 20% அதிகரித்துவிட்டது” என்று நினைவுகூர்கிறார் சோவியத் ஒன்றியத்தை எதிர்த்த…
-
- 0 replies
- 572 views
-
-
'பழைய குருடி கதவைத் திறடி' என்ற நிலைக்கு வந்துள்ளோம்: விக்னேஸ்வரன் ஆதங்கம்! யாழ்ப்பாணம்: வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள், வருங்காலம் யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன என்றும், “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் சிறப்பு கூட்டத்தில், தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் இன அழிப்பு என சுட்டிக் காட்டும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்கர் விக்னேஸ்வரன், "பலத்த சிரமங்களுக்கிடையே அந்த உறுதிமொழியை நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். வடகிழக்கு தமிழ் மக்களின் உரித்துக்…
-
- 0 replies
- 553 views
-