அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
இறைமையும் உரிமையும் இடைக்கால அறிக்கையிலேயே இத்தகைய நேர் முரண் நிலை என்றால், புதிய அரசியலமைப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. எது எப்படியாயினும், இடைக்கால அறிக்கை தமிழ் மக்களை மட்டுமல்லாமல் சிங்கள மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தத் தக்க வகையிலேயே வெளியிடப் பட்டிருக்கின்றது புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு இறைமை பகிரப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார். கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையிலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே மக்கள் ஆணையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெற்றிருக்க…
-
- 0 replies
- 577 views
-
-
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வருமா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் அக்கறை செலுத்தி வருகிறார். ‘சர்வகட்சி அரசாங்கம்’ என்பதன் மூலம், பொருளாதாரத்தில் வீழ்ந்துபோய், வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டை, மீளக்கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளை எடுப்பதே அவரது திட்டம். அனைத்துக் கட்சிகளும் ஒரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது, அதை நடைமுறைப்படுத்துவது மிக இலகுவாயிருக்கும். அத்துடன், மக்களை திருப்திப்படுத்துவதும், அல்லது குறைந்தபட்சம் சாந்தப்படுத்துவதும் பெருமளவுக்குச் சாத்தியமாகும் என்பதுதான், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதன் பின்னணியிலுள்ள சிந்தனையாக இருக்கும். வழமைபோல…
-
- 0 replies
- 398 views
-
-
B639/15 எனும் மிக்-27 விசாரணைகள் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலப்பகுதியில், அந்த தேர்தல்கள் விடயங்களுக்கு சமாந்தரமாக பேசப்பட்ட ஒரு விடயமே, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க டுபாயில் கைது செய்யப்பட்ட விவகாரம். எனினும் அந்த விடயம் ஒரு வாரத்துக்குள்ளேயே புஷ்வாணமாகிப் போனது. காரணம் கைதான அவரை ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் விடுதலை செய்தமையும், அவரை இலங்கைக்கு அழைத்துவர எம் நாட்டு அதிகாரிகளால் முடியாமல் போனமையுமாகும். இந்த இயலாமை இலங்கையைப் பொறுத்தவரை மிகப் பெரிய பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், அந்த பின்னடைவினை மிகப் பலமாக எதிர்கொண்டு இலங்கையின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் அத…
-
- 0 replies
- 225 views
-
-
தேசியக் கட்சிகளுக்கான விசுவாசம்: எந்தக் கருமத்தையும் ஈடேற விடாது -க. அகரன் அரசியல் சக்கரம் பல படிப்பினைகளை உணர்த்தியதாகவே சூழன்று கொண்டிருக்கின்றது, என்பதற்கு அண்மைய இலங்கை அரசியல் போக்கு சான்றாகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக எண்ணப்பட்ட பலரும், தமது பலம்பொருந்திய மக்கள் தளத்தை வெளிப்படுத்தியதாகவே, நடந்து முடிந்த தேர்தல் காணப்படுகின்றது. ஸ்திரமில்லாத சபைகளை உருவாக்கும் விதமாக, உள்ளூராட்சி மன்றங்கள் அமைந்திருந்தாலும் கூட, தேர்தல் முறைமையானது, நீண்ட காலப் பகையாளிகளை, அன்னியோன்னியம் ஆக்கியுள்ள நிலையில், இனம் சார்ந்த கருத்தியல் கொண்டவர்களை, நிரந்தரப் பகையாளிகளாகவும் உருவாக…
-
- 0 replies
- 360 views
-
-
மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!! மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!! மாற்றுத் தலைமை தொடர்பாக அவ்வப்போது சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சிலர் கூறுவதைக் கேட்கின்றோம். இவர்கள் யாரை மனதில் வைத்துக்கொண்டு கூறுகிறார்கள் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும். ஓர் இனத்தின் தலைமையை சிலர் ஒன்று சேர்ந்து ஒரே இரவில் உருவாக்கிவிட முடியாது. அவ்வாறு உருவாக்கப்படுவது உண்மையான தலைமையும் அல்லை. அவரிடத்தில் சிறந்த தல…
-
- 0 replies
- 411 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
தலைவிரித்தாடும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளியிடுவது யார்? -க.அகரன் இனமுறுகளின் பின்னணியின் பல வரலாறுகள், பாடம் புகட்டும் தன்மையைக் கொண்டிருக்கும் என்பதற்கு, மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்ற பல உள்நாட்டுப் போர்கள் சான்றாகியுள்ளன. அந்தப் பாடங்களில் இருந்து, நம் நாட்டவர்களும் பாடம் கற்றுக்கொண்டனரா என்பதை ஆராய்ந்துப் பார்க்க வேண்டிய தேவை, காலத்தின் கட்டாயமாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் என்ற தொனிப்பொருளை, ஏட்டளவில் வைத்து அரசியல் நகர்வை மேற்கொள்ளும் இலங்கை அரசியலாளர்கள், அதற்கு யதார்த்த வடிவத்தைக் கொடுத்துள்ளனரா என்ற சந்தேகம் நிறைந்தேயுள்ளது. யுத்தம் நடைப…
-
- 0 replies
- 335 views
-
-
கலங்கிய குட்டையின் நிலையில் தென்பகுதி அரசியல்!! கூட்டு அரசின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடையவுள்ள நிலையில், அரசுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. அடுத்த தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்புக்கு முன்பதாக மகிந்த ராஜபக்சவை, மைத்திரிபால சிறிசேனவே தலைமை அமைச்சராக நியமிப்பாரெனவும், சிறீலங்கா சுதந்திரக்கட்சி தனியாக ஆட்சியை அமைக்குமெனவும் பொது எதிரணியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். பொது எதிரணியினர் இவ்வாறு கூறிவருவது புதியதொரு விடயமெனக் கூறமுடியாது. வழக்கமானதொரு கருத்து வெளிப்பா…
-
- 0 replies
- 581 views
-
-
சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சீனாவின் இத்திட்டம் தொடர்பாக வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் பிரகாரம், சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது சிறிய மற்றும் வறிய நாடுகள் மீது பரந்தளவில் கடன் சுமையை உண்டுபண்ணுவதால், இந்த நாடுகளி…
-
- 0 replies
- 399 views
-
-
அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன நிலாந்தன் ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்டம் எனப்படுவது பிரதானமாக சிறைக்கு வெளியிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இது தொடர்பில் சிறைக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய தரப்புக்களோடு கைதிகள் தமது போராட்டத்தைக் குறித்து திட்டமிட்டவர்களா? இப்போராட்டம் ஏன் கடந்த ஆண்டு தோல்வியுற்றது என்பதைக் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதா? உணவை ஓர் ஆயுதமாக எத்தனை தடவைகள் பயன்படுத்தலாம்? கடந்த ஆண்டு கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கி போராட்டம் முடித்து வைக்கப்பட்ட போது அதிலிருந்து மாணவப்பிரதிநிதிகள் அவ்வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற முடியாமல் போயிற்று என்பதைக் குறித்து ஆழமாக ஆராய்…
-
- 0 replies
- 535 views
-
-
சர்வாதிகாரிகளைத் தெரிவுசெய்யும் ஜனநாயகம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 நவம்பர் 01 வியாழக்கிழமை, மு.ப. 01:10Comments - 0 ஜனநாயகம் பற்றி, இப்போது அதிகம் பேசப்படுகிறது. ஜனநாயகத்தின் அவசியம் பற்றியும் அதன் நடைமுறைகள் ஒழுங்காகச் செயற்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் பற்றியும் நிறையவே பேசப்படுகிறது. இலங்கையின் அண்மைய நிகழ்வுகள், ஜனநாயகம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. ஜனநாயக வழிமுறைகளின் மூலம், ஜனநாயக மறுப்பாளர்களை, மக்கள் தெரிவுசெய்வது உலகெங்கும் நடைபெறுகிறது. இதை இன்னொரு வகையில், சர்வாதிகாரிகளை ஜனநாயகம் தெரிவு செய்கிறது; ஆதரிக்கிறது; ஊட்டி வளர்க்கிறது. எல்லாம், ஜனநாயகத்தின் பெயரிலேயே நடந்தேறுகின்றன. நீண்டகாலமாக சர்வாதிகாரத்தின் கொடுமைகளை …
-
- 0 replies
- 692 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) இலங்கையில் 2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் நாட்டில் மிகப் பெரிய ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவந்தது. நாட்டின் பிற பகுதிகளுக்கு எப்படியோ, வடக்குக்கும் கிழக்கிற்கும் இது இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் போல…
-
- 0 replies
- 453 views
-
-
சிங்களம் சர்வதேசத்தோடு போராட தொடங்கிவிட்டது.... அப்போ தமிழர்கள்? [ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 08:06.02 PM GMT ] ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. இது நமது நாட்டின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் சரியாக பொருந்திப்போனதொன்று. இப்போது அதே பழமொழி இலங்கை அரசியலுக்கு நன்றாக பொருந்துகின்றது. ஆம் இலங்கை அரசியல் தற்பொழுது எப்படி நகர்ந்து கொண்டிருக்கின்றது? யார் அரசாங்கம்? யார் எதிர்க்கட்சி? என்று சாதாரண பாமர குடிமகனிடம் கேட்டால் விழிபிதுங்கி நிற்பான். இதுவே இன்றைய நிலை. ஆனால் இதுவொன்றும் இலங்கை அரசியலில் புதிதானதல்ல. இலங்கை பூகோள ரீதியில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்ற நாடு ஆகையால் …
-
- 0 replies
- 452 views
-
-
ஜெனீவாவில் அழுத்தங்கள் சாத்தியமா? கே. சஞ்சயன் / 2019 மார்ச் 01 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:18 Comments - 0 ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி, நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக, பிரித்தானியா அறிவித்திருக்கிறது. பிரித்தானியா, சில வாரங்களுக்கு முன்னரே இதை உறுதி செய்திருந்தது. கடந்த திங்கட்கிழமை, பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அஹமட் பிரபு, இதை மீண்டும் உறுதி செய்திருந்தார். அவர், ஜெனீவாவில் உரையாற்றுவதற்குச் சில மணி நேரம் முன்னதாக, வடக்கில் பாரிய போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. காணாமல்…
-
- 0 replies
- 621 views
-
-
2019 இந்திய தேர்தலில் காவியா ?- தமிழா? இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியிலிருந்து மே மாதம் 19ஆம் திகதி வரை தேர்தல் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவதும் மிக மும்முரமாக பிரசார வேலைகள் நடை பெற்று வருகின்றது. தென் இந்திய தேர்தல் அரசியலில் குறிப்பாக தமிழ் நாட்டு கட்சிகளும் தமது கூட்டுகளை அமைத்து வருகின்றன. கடந்த காலங்களைப் போல் அல்லாது இம்முறை ஒரு புறத்தில் மதவாத, சாதீயவாத கட்சிகளும் மறு புறத்தில் சமய சார்பற்ற, திராவிடவாத கட்சிகளும் தமது கூட்டுகளை அணி திரட்டும் அதேவேளை, மேலும் அதிகமாக தமிழ் தேசிய வாதம் என்னும் ஒரு அலகு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கி இருப்பதால் மும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
"விலைபோகும் நீதி" "விலைபோகும் நீதி முல்லைத்தீவில் புரியுது தலையாட்ட மறுத்தவனுக்கு பயமுறுத்தல் வேறு! கொலைக்குப் பயந்து நாட்டையே துறந்தான் அலையாத மனமும் திரையில் மறைந்தது!" "அடங்காத வெறியர்களின் ஆட்டத்தை நிறுத்த அறிவாகத் தர்மத்தை எடுத்து உரைத்தானே! அளவாகச் சட்டத்தை நேர்மையாகப் பாவித்தவனுக்கு அசிங்கமான பேச்சே பரிசாகக் கிடைத்ததே!" "புத்தநாடு இதுவென பெருமையாகக் கூறுபவனே புத்தன் போதித்த கொள்கை தெரியுமா? புகழ்மிக்க எங்கள் இலங்கை நாட்டை புற்று நோயாய் மகாவம்சம் கெடுக்குதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாண…
-
- 0 replies
- 330 views
-
-
இந்தியா, யார் பக்கம் ? ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதில் இலங்கையும் உறுதியாக உள்ளது. இந்த இருவேறு முரண்பட்ட சூழலுக்குள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் கூட இரு அணிகளாகி நிற்கின்றன. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளன. இன்னும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் கூறினாலும்இ வாக்கெடுப்பு ஒன்று வரும் போது தான் எந்தப் பக்கம் வெற்றிபெறப் போகிறது என்பது தெரியவரும். யார் யார் எந்த அணியில் நிற்கிறார்கள் என்பதும் உறுதியாகும். இந்தத் தீர்மானம் விடயத்தில் அயல் நாடும் இந்து சம…
-
- 0 replies
- 585 views
-
-
பத்திரிகையாளராக மாறிய போராளி ' தராக்கி ' சிவராம் : கொடூரமான கடத்தலும் கொலையும் - மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் ஜனாதிபதி அநுரா குமாரவின் அரசாங்கம் டி.பி.எஸ் ஜெயராஜ் கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களினால் தடுக்கப்பட்ட அல்லது சீர்குலைக்கப்பட்டு நீதிகிடைக்காமல் போன பாரிய ஊழல் மோசடிகள், படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தனது தேர்தல் பிரசாரங்களின்போது அடிக்கடி வலியுறுத்திக் கூறினார். அண்மைய நிகழ்வுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஜனாதிபதி திசாநாயக்கவும் அவரது அரசாங்கமும் கரிசனையாக இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. இது தொடர்பில் அவர்கள் அடுத…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழுமா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள நிலையில், ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சி பெரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி…
-
- 0 replies
- 604 views
- 1 follower
-
-
இந்தியாவும் தமிழ் மக்கள் பேரவையும் by A.Nixon படம் | OMLANKA இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்தச் சந்திப்பு தொடர்பாக அதீத நம்பிக்கையுடன் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வது வழமை. ஆனால், கடந்த ஒரு வருடமாக இந்தியா பற்றிய பேச்சுக்களை விட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பேசுகின்ற பண்பை காணமுடிகின்றது. அதுவும் இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன்தான் என்று சில விமர்சகர்கள் கூறுகின…
-
- 0 replies
- 547 views
-
-
11 JUN, 2025 | 08:59 AM கலாநிதி ஜெகான் பெரேரா பாராளுமன்ற தேர்தலில் ஏழு மாதங்களுக்கு முன்னர் மக்கள் வழங்கிய ஆணை முறைமை மாற்றத்துக்கானது. பொருளாதார நிலைவரத்தில் மேம்பாடு வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்தவர்களின் பிரதான எதிர்பார்ப்பு. நீண்ட உள்நாட்டுப்போர் இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களும் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள சகோதரத்துவ குடிமக்களுடன் சேர்ந்து தங்களது பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் பல தசாப்தங்களாக தாங்கள் அனுபவித்த பாகுபாடுகளில் இருந்து விடுபடுவதற்காகவும் வாக்களித்தார்கள். ஒரு வழியில் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியில் இருந்து வளங்களை அபகரித்த ஊழலைக் குறைப்பதன் மூலமாக பொருளாதார மேம்பாட்டை…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
Published By: Vishnu 08 Sep, 2025 | 01:02 AM (நா.தனுஜா) இலங்கையில் மனிதகுலத்துக்கு எதிராக சக மனிதன் நிகழ்த்திய அட்டூழியங்கள் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் எனக் காத்திருந்த காலமும், அந்த அட்டூழியங்களின் சாட்சியாக அமைதிகாத்து நின்ற நிலமும், நீளும் காத்திருப்பின் வலி தாழாமல் இன்று தம் அமைதி கலைத்துப் பேச ஆரம்பித்திருக்கின்றன. இப்போது செம்மணி நிலம் உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் மனிதப்பேரவலக்கதை உலகின் மனசாட்சியை உலுக்க ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் இனவழிப்போ, போர்க்குற்றங்களோ இடம்பெறவில்லை எனக் காலம் காலமாக மறுத்து வந்தவர்களை வாயடைக்கச்செய்திருக்கிறது. கிருஷாந்தி குமாரசுவாமி கொல்லப்பட்டு 29 ஆண்டுகள் நாமறிந்த செம்மணி நிலத்தின் கதை கிருஷாந்தி…
-
- 0 replies
- 173 views
- 2 followers
-
-
கொரோனா – தொட்டுவிடும் தூரத்தில் மரணம் - யதீந்திரா கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மனிதரின் வாழ்வு நிர்மூலமாகவிடலாம் என்னும் ஒரு துயரநிலை தோன்றியிருக்கின்றது. மனிதர்களின் வாழ்வு இவ்வளவுதனா என்னும் கேள்விதான் ஒவ்வொருரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு வளம்நிறைந்த நாடு – இத்தாலி – செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றது. எல்லா இடங்களிலும் மரண ஓலம். கடவுள் மீதான மனித நம்பிக்கை அவர்களின் கண் முன்னாலேயே சிதைந்து கொண்டிருக்கின்றது. கடவுளின் இடங்களுக்கே செல்வது பாதுகாப்பில்லை என்னும் போது, இதுவரை அந்த இடங்கள் தொடர்பில் மனிதர்களுக்கு இருந்த நம்பிக்கையின் அர்த்தம் என்ன என்னும் கேள்வி எழலாம். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 24000தை தாண்டிவிட்டது.…
-
- 0 replies
- 466 views
-
-
தமிழ்_தேசிய_கூட்டமைப்பு திகாமடுல்ல_மாவட்ட_வேட்பாளர் கலாநிதி_எஸ்_கணேஷ்_அவர்கள்_பங்குபெறும் பாராளுமன்ற_திருப்பு_முனை - 2020
-
- 0 replies
- 398 views
-
-
எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! முருகவேல் சண்முகன் தமிழரின் தாகம் தணிவதில்லை, அடி மனத்தின் கோடியில் அது குடிகொண்டிருக்கிறது. தேவையேற்படும் சந்தர்ப்பங்களில், அது தீயாக எழும் என்பதற்குச் சான்றாக, சனிக்கிழமை (24) இடம்பெற்ற எழுக தமிழ்ப் பேரணி அமைந்திருந்தது. சுயபாதுகாப்பு முறையில் உறங்குநிலையில் இருந்த தமிழர்களின் சாத்வீக போராட்டக் குணத்தைத் தூண்டி விட்டிருக்கிறது. அதுவும், இப்போதைய காலவோட்டத்தை உள்வாங்கி, அதற்கேற்ற வகையில் தமிழர்களைத் தயார்படுத்துவதற்கான ஆரம்பக் கட்டமைப்பையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டபோது, களத்திலிருக்கும் மக்களை பிரதிபலிக்காது, வாக்கு வங்கி அரசியலையும் தமது பதவிகளைத் …
-
- 0 replies
- 745 views
-