Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அனுர எதைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்? – நிலாந்தன். ரணில் ஒரு “வலிய சீவன்” என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஒர் அமீபாவைப் போல எல்லா நெருக்கடிகளுக்குள்ளும் தன்னை சுதாகரித்துக் கொண்டு,சுழித்துக் கொண்டு,வளைந்து நெளிந்து விட்டுக்கொடுத்து,தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வல்லமை அவருக்கு உண்டு என்ற பொருளில் அவ்வாறு கூறியிருந்தேன்.ஆனால் அண்மையில் நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர்கள் அவரைப் பிணை எடுப்பதற்காக சுட்டிக்காட்டிய நோய்களின் அடிப்படையில் சிந்தித்தால், அவர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருக்கும் அத்தனை நோய்களும் அவரைப் பாதிக்குமாக இருந்தால் அவர் ஓர் ஆரோக்கியமான ஆளாக இருக்க முடியாத…

  2. ‘பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’ காரை துர்க்கா / 2020 மார்ச் 17 தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனம் கண்டது. அதன் பின்னரான, ஓராண்டு காலம் நிறைவு பெறுவதற்குள் (08 ஏப்ரல் 2010) 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 13 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக ஓர் ஆசனத்தையும் பெற்று, மொத்தமாக 14 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. அதன் பின்னர், 15ஆவது நாடாளுமன்றத் தேர்தல், 2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது. அதில் கூட்டமைப்பு, 14 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக, இரண்டு ஆசனங்களையும் பெற்று, மொத்தமாக 16 ஆசனங்களைக் கைப்பற்றியது. இதற்கிடையே, 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் த…

  3. கொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 மார்ச் 26 இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத, பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணம் உடையவை. எந்த உலக ஒழுங்கு, உலகைக் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆட்சிசெய்தோ அது, இன்று அவலப்பட்டு நிற்கின்றது. அது அமைத்த விதிகள், நெறிமுறைகள் குறித்தெல்லாம் அக்கறை கொள்ள யாருக்கும் நேரமில்லை. இன்று ஏதாவதொரு வழியில், தீர்வுகளை நோக்கியே எல்லா அரசாங்கங்களும் ஓடுகின்றன. உயிரிழப்புகளைத் தவிர்ப்பதும் நோய்த்தொற்றைக் குறைப்பதுமே பிரதான நோக்காக உள்ளன. பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள், நடைமுறையி…

  4. கவனமாக அணுகப்பட வேண்டிய மாணவர்களின் மரண விவகாரம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்டதைப் போன்ற - அல்லது அதைவிட அதிகமான - எழுச்சியொன்று, யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி, வடக்கில் ஏற்பட்டுள்ளது. படையினர் அல்லது பொலிஸார் சார்ந்த குற்றங்கள் அல்லது சம்பவங்களின் போது, வடக்கில் எழுச்சிகள் ஏற்படுவதொன்றும் புதிதன்று. 2005ஆம் ஆண்டில், படையினரின் வாகனங்களில் பொதுமக்கள் சிக்கும் போதும் காயப்படும் போதும், படையினருக்கெதிரான எழுச்சி ஏற்படுவதும் ஹர்த்தால் நடத்தப்படுவதும…

  5. இம்முறை தாயகத்தில் மாவீரர்நாள் ஒரு வெகுசன நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. மே பதினெட்டுக்குப்பின் தாயகம் தமிழகம் டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே நாளில் ஒரு விடயத்துக்காக உணர்வுபூர்வமாக ஒன்று திரண்ட மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. தாயகத்தில் அதை ஒரு வெகுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்திய அரசியல்வாதிகளே அதைத் தங்களுடைய நிகழ்வாகவும் வடிவமைத்திருந்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த ஏழாண்டுகாலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் துணிந்து காலடிகளை முன்வைத்த மற்றொரு நிகழ்வு அது. கடந்த ஏழு ஆண்டுகளில் தாயகத்தில் முதன்முதலாக ஒரு வெகுசன நிகழ்வாக அனுட்டிக்கப்பட்ட மாவீரர் நாள் இது. மாற்றத்தின் விரிவை தமிழ் மக்கள் வ…

  6. தமிழர் தரப்பின் தீர்மானம் ஜெனீவாவில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துமா? – அகிலன் 156 Views ஜெனீவா மனித உரிமைகள் பேரவை விடயத்தில் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் மூன்றும் இணைந்து பொதுவான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளன. இதற்கான உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ள மூன்று கட்சிகளின் தலைவர்களும், மனித உரிமைகள் பேரவையிலுள்ள 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தமது கோரிக்கையை அனுப்பி வைத்திருக்கின்றார்கள். தொடர்ச்சியான இழுபறிகளுக்கு மத்தியில் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இதற்கான உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டிருப்பது முக்கியமான ஒரு திருப்புமுனை தான். பல்வேறு தரப்புகளின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை அமைப…

  7. வல்லரசுகளின் நலன்களுக்காக பலிக்கடாவாக்கப்படும் தமிழ் மக்கள் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு பலஸ்தீனம் ஆயுதப் பயிற்சி வழங்கிய ஓர் அரசியல் அன்று இருந்தது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் அதே பலஸ்தீனம் மஹிந்த ராஜபக்சவுக்கு உயரிய விருதினை வழங்கியது. இத்தகைய அரசியல் மாற்றத்துக்கு என்ன காரணம்? எனும் கேள்விக்கு பதிலளித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.இன்று இருக்கிற தமிழ் அரசியல் தரப்பில் எத்தனை பேர் அமெரிக்கா விரும்பாத பலஸ்தீனத்தோடு அடையாளப்படுத்த தயாராக இருக்கினம். மேற்கு நாடுகள் விரும்பாத எதையுமே வாய்திறந்து கதைக்க எம் ஏனைய அரசியல் தரப்புகள் தயாராக இல்லை. இந்த யதார்த்தத்தைய…

  8. ரஜினி எப்போது அரசியல் பிரவேசம் செய்யப்போகின்றார்? ‘கபாலி’க்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் ‘காலா’. இரசிகர்கள் சந்திப்பில் அரசியல் பிரவேசம் குறித்துப் பரபரப்புடன் பேசிய ரஜினி, புதிய படத்துக்கான பெயரை அறிவித்து விட்டார். ரஜினியின் திரைப்படங்கள் திரையரங்குகளில் கைதட்டலைப் பெறும். பால் அபிஷேகங்கள் நடக்கும். முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் ‘விசில்’ சத்தம் திரையரங்கின் திரைகளைக் கூடக் கிழிக்கும். ஆனால், அவரின் அன்றைய ரசிகர் சந்திப்பு, தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் இப்போது பரபரப்பாகியிருக்கிறது. ஆந்திராவில் என்.டி.ஆர், தமிழகத்தில் எம்.ஜி.ஆர், இப்போது ரஜினியா என்ற கேள்வி அ…

  9. உண்மையையும் உறவையும் தேடுவோரின் உள்ளக்குமுறல் நாட்டின் தெற்குப் பகுதியின்மீது, சமீபத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்படுத்திய பாரிய இழப்புகளின் அதிர்வு அலைகளும் கவலைகளும் இன்னமும் தொடர்ந்தவாறே உள்ளன. பொதுவாக அனர்த்தங்கள் இரண்டு வகைப்படுகின்றன. முதலாவது, இயற்கையாக நிகழ்வது; இயற்கையின் நியதி. இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. இரண்டாவது மனிதனால் ஏற்படுத்தப்படுவது. மனித சக்தியினால் ஓட்டு மொத்தமாகத் தடுத்து நிறுத்தக் கூடியது. நம் நாட்டின் தேசிய இன‍ங்களில் ஒன்றாகிய தமிழ் இனம், கடந்த காலங்களில் இரண்டாவது வகையான அனர்த்தத்தில் சிக்கிச் சிதறி பல ஆயிரம் மேன்மையான உயிர்களைக் காவு கொடுத்து விட்டது. மே…

  10. இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்றதான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை- சொல்வதும் சொல்லப்படாததும் பீரிஸ், மிலிந்தமொறகொட, பசில் ராஜபக்ச ஆகியோரின் திட்டங்கள் அரங்கேற்றம் போர் இல்லாதொழிக்கப்பட்டதொரு சூழலில், இலங்கை ஒற்றையாட்சி அரசு விரும்பும் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற முறையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சர்வதேச மனித உரிமைகள் தினம் அன்று வெளியிட்டுள்ள அறிக்கை தென்படுவதாக, அமெரிக்க- இலங்கைச் செயற்பாடுகளை அவதானிப்போர் கூறுகின்றனர். இலங்கை இராணுவத்தின் கீழ் நிலை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு பேருடைய தடைகள் மட்டுமல்ல…

  11. எதைச் சாதிப்பார் ராம் நாத் கோவிந்த்? இந்திய குடியரசுத் தலைவராக, ராம் நாத் கோவிந்த், நேற்று முன்தினம் பதவியேற்றிருக்கிறார். அவரது இந்தப் பதவியேற்பு, பல்வேறு விதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. பதவியேற்பின் போது உரையாற்றிய அவர், முன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம், இராதாகிருஷ்ணன் போன்றோரின் பாதையிலேயே செல்லவுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். அவரது தனிப்பட்ட திறமைகளையும் அனுபவங்களையும் வைத்துப் பார்க்கும் போது, இப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் தான் என்பது, தெளிவாகத் தெரிகிறது. 1994ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை, மேலவையின் உறுப்பினராக அவர் பதவி வகித்தார். பின்னர், பீஹார் மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தார். அ…

  12. மீனவர் பிரச்சினை யார் தீர்வு தருவது? நிலாந்தன்! சுப்பர்மடம் போராட்டம் மீனவர்களின் விவகாரத்தை மறுபடியும் தலைப்புச்செய்தி ஆக்கியது. வத்திராயானைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு தமிழக மீனவர்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்பரப்பில் நிகழ்ந்துவரும் தீர்வு கிடைக்காத விவகாரங்களில் ஒன்று மீனவர் விவகாரமும் ஆகும். காணிப்பிரச்சினை,காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம்,நில மீட்புக்கான போராட்டம்,அரசியல் கைதிகளுக்கான போராட்டம் என்பவற்றோடு ஒப்பிடுகையில் மீனவர்களின் போராட்டம் வித்தியாசமானது. ஒரே சமயத்தில் உள்நாட்டு தன்மையும் பிராந்திய தன்மையும் மிக்கது. ஒரு பிராந்தியக் கடலில் எல்லையைத் தாண்டும் மீனவர்…

  13. அரசியலில்... கர்ம வினைப் பயனெல்லாம் கிடையாது? நிலாந்தன். “நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட காணி சென்னைக்கு அருகே விற்பனைக்கு உண்டு” இது ஒரு விளம்பரம் அல்ல. அண்மை நாட்களில் சமூக வலைத்தளங்களில் ஒரு ஒளிப்படத்துடன் சேர்ந்து பகிரப்படும் ஒரு குறிப்பு இது. அந்த ஒளிப்படத்தில் என்ன இருக்கிறது என்றால், இந்தியப் பிரதமர் மோடிக்கு முன் பசில் ராஜபக்ச பவ்வியமாக அமைந்திருக்கும் காட்சியாகும். வழமைபோல இந்தியா இம்முறையும் நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் கடன்கள் இலங்கை அரசாங்கத்துக்கு மூச்சுவிடும் அவகாசத்தை வழங்கியிருக்கின்றன. அதற்கு பிரதியுபகாரமாக அரசாங்கம் சம்பூரில் மீளப்புதுப்பிக்கும…

  14. ராகுலுக்குக் கிடைத்தது வெற்றியா, தோல்வியா? இந்திய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய சில வாரங்கள், மிக முக்கியமானவையாக அமைந்துள்ளன. இன்றைய தினம் (21), தமிழகத்தின் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் இடம்பெறவிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தன. ஆர்.கே நகரைப் பொறுத்தவரை, தேசிய அரசியலில் பெரிதாகச் செல்வாக்குச் செலுத்தாத ஒரு தொகுதியாக இருக்கிறது. அதற்குப் பிரதானமான காரணமாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு, தமிழகத்தில் எப்போதும் வரவேற்பு இருந்ததில்லை என்ற அடிப்படையில், இத்தேர்தலிலும் அக்கட்சி தோல்வியடையும் என்பதில் மாற்றுக் கருத்துகளே இல்லை. …

  15. பொற்காலமா அல்லது கறுப்பு ஜூலையா ? கறுப்பு ஜூலை இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய தருணம், இது தீவில் உள்ள அரசியல் கலாசாரமான தண்டனை விலக்கீட்டின் அடையாளம். வன்முறையைப் பயன்படுத்துவதன் மூலம், தமிழர் வாழ்வை அழித்த மற்றும் சிங்கள-பௌத்த பெரும்பான்மையினரின் வாழ்வாதாரத்தை உயர்த்திய சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளின் பல அத்தியாயங்கள் இதில் உள்ளன. ”பசியும் வெறும் வயிறும் பொறுத்துக்கொள்ள முடியாததாக மாறும்போது “அவர்கள்” , “எங்களையும்” ஏமாற்றியுள்ளனர் என்ற புரிதல் ஏற்படுகிறது” தமிழ் ஆனந்தவிநாயகன் இந்த மாதம் ஜூலை 9 அன்றுதான் இலங்கை தனது மக்கள் புரட்சியைத் தேர்ந்தெடுத்திருந்தத…

    • 0 replies
    • 698 views
  16. தென்னிலங்கை அரசியலை உலுக்கிய சுனாமி ரொபட் அன்­டனி கடந்த இரு வாரங்­க­ளாக நாட்டில் தேசிய மட்­டத்தில் அடித்­துக்­கொண்­டி­ருந்த அர­சியல் சுனாமி தற்­போது ஓர­ளவு ஓய்ந்­துள்­ளது . எனினும் அடுத்து என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதே இன்னும் பேசப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. அர­சி­யலில் எதுவும் நடக்­கலாம் என்­பது பொது­வாக அனை­வரும் கூறும் விட­ய­மாகும். ஆனால் அதுவே சில சம­யங்­களில் பொது­மக்­க­ளுக்கு விசித்­தி­ர­மா­ன­தாக அமைந்­து­வி­டு­வ­துண்டு. நடந்­து­மு­டிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன வெற்­றி­யீட்­டி­ய­தை­ தொடர்ந்து தென்­னி­லங்­கையில் அர­சியல் சுனா­மியே ஏற்­பட்­டது. தெ…

  17. காணிகளை விடுவிக்க- வீதியோரம் போராடும் மக்கள்!! முல்­லைத்­தீ­வின் கேப்­பாப்­பு­லவு பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­னர் வச­மி­ருக்­கும் தமது பூர்­வீகக் காணி­களை விடு­விக்கக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி முதல் கேப்­பாப்­பு­லவு மக்­கள் ஆரம்­பித்த காணி மீட்புப் போராட்­டம், முன்­னேற்­றம் எது­வு­மற்ற நிலை­யில் 450 நாள்­களை தாண்­டி­யும் தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­லப்­ப­டு­கின்­றது. இரவு, பகல் என்­றும் பாராது குளிர், வெயில் மற்­றும் நுளம்­புத் தொல்­லை­க­ளுக்கு மத்­தி­யி­லும், கேப்­பாப்­பு­லவு மக்­கள் தமது மாதிரிக் கிரா­மங்­க­…

  18. புலிகள் வலையில் படைகளா..?? படைகள் வலையில் புலிகளா...?? விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கட்டு நாயக்கா விமான தள தாக்குதலின் பின் அமைதியாகவிருந்த இலங்கை இராணுவ களம் மீண்டும் களைகட்ட ஆரம்பித்துள்ளது. அண்மையில் நடந்த இராணுவ கட்டமைப்பில் ஏற்ப்படுத்தப் பட்ட மாற்றத்தின் பின் தற்போது இலங்கையில் மீண்டும் ஒரு போர் பீதி ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசுகளாலும் அந்த மக்களாலும் மிகவும் நேசிக்கப்படுபவரும் தமிழின அழிப்பின் கத நாயகனுமானவரும் மணலாற்றில் பல நூறு போராளிகளை காவு எடுத்தவருமான ஜெனகே பெராராவே இந்த மாற்றத்திற்காண அடிப்படை கரணமாக அமைகிறார். அண்மையில் பல படை தளங்களிற்கு சென்று அந்த கள நிலமைகளை அவதானித்து பல உத்தரவுகளையும் போரியல் தந்திரங்களையும் தெரிவித…

  19. Posted by: on Jul 13, 2011 அண்மையில் அமெரிக்க காங்கிரஸின் ஆய்வுச் சேவை வெளியிட்ட எட்டு பக்க அறிக்கை, இலங்கை குறித்தான அமெரிக்காவின் பார்வை எவ்வாறு அமைய வேண்டுமென்பதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு உதவி வழங்குவதன் ஊடாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலைநாட்ட சீனா முயல்வதாக அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதில் கூறப்பட்ட விடயங்கள் ஒன்றும் புதிதானவையல்ல. ஏற்கனவே பல ஆய்வாளர்களால முன்வைக்கப்பட்ட கருத்துகளின் ஒட்டுமொத்த வடிவம், எட்டுப் பக்க அறிக்கையாக வெளி வந்துள்ளது. ஒருவகையில் இலங்கை விவகாரம் குறித்து, அண்மையில் சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) வெளியிட்ட அறிக்கையும் ,இதுவும், இந்தியாவிற்கே பலமான செய்தியொன்றினை கூற முனை…

  20. ஒற்றையாட்சியும் சாணக்கியமும் (தமிழர் தலைமையும்) - என்.கே. அஷோக்பரன் பல தசாப்தங்களாக, நம்பிக்கைத் துரோகத்தையும் தொடர் ஏமாற்றங்களையும் சந்தித்து வந்த ஒரு மக்கள் கூட்டம், நல்லெண்ணத்துடன் எழக்கூடிய முயற்சிகளையும்கூட, ஐயக்கண் கொண்டே நோக்குவதென்பது இயல்பானது; யதார்த்தமானது மாறி மாறி வந்த பெரும்பான்மையின சிங்கள-பௌத்த அரசாங்கத் தரப்புகள், இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று சொல்லும் போது, அதிலுள்ள தொழில்நுட்பங்கள், கருத்தியல்கள் அன்றி, நாம் கேட்பதை அரசாங்கம் ஒருபோதும் தரத்தயாராகவில்லை என்ற செய்தியே, தமிழ் மக்களைச் சென்றடைகிறது என்பது, இங்கு கவனித்து நோக்கப்பட வேண்டியது. மறுபுறத்தில், தமிழர் தரப்பு, சமஷ்டி ஆட்சியைக் கோரும் போது, அதிலுள்ள …

    • 0 replies
    • 2.5k views
  21. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களும், இலங்கையில் அமெரிக்கா அமைத்துவருகின்ற தளங்களும்!!

    • 0 replies
    • 655 views
  22. வெளியே வந்துள்ள ‘ஹீரோக்கள்’ கே. சஞ்சயன் / 2019 மே 24 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:16 Comments - 0 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சூழ்நிலைகள், இரண்டு முக்கியமான விடயங்களைப் பலரது கண்களில் இருந்தும் மறைத்து விட்டன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை, அதில் ஒன்று. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி, மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இன்னொன்று. சாதாரணமானதொரு சூழ்நிலையில் இந்த இரண்டும் நிகழ்ந்திருந்தால், அது ப…

  23. மீண்டும் ஏமாற்றம் மாறாத வரலாறு தமிழ் மக்கள் மீண்­டு­மொ­ரு­முறை தென்­னி­லங்கை அதி­கா­ரத்த­ரப்­பி­னரால் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றனர். வர­லாறு முழு­வதும் தமிழ் பேசும் மக்கள் தமக்­கான அர­சியல் அதி­கா­ரங்கள், தீர்­வுத்­திட்­டங்கள் தொடர்பில் எவ்­வாறு தமிழ் மக்கள் ஏமாற்­றப்­பட்­ட­னரோ அதே­போன்று மீண்டும் ஒரு­முறை ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். நியா­ய­மான அர­சியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்­பார்ப்­பி­லி­ருந்த தமிழ் மக்கள் தற்­போது நம்­பிக்­கை­யி­ழந்­த­வர்­க­ளா­கவும் எதிர்­பார்ப்பு அற்­ற­வர்­க­ளா­கவும் மாறி­யி­ருக்­கின்­றனர். 2015ஆம் ஆண்டு உரு­வா­கிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் முடி­வ­டை­யப் போ­கின்­றது. இன்னும் சில மாதங்­களில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­ப…

  24. ஈழத் தமிழரை ஒடுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – 49 ஆண்டுகள்! July 20, 2019 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 49 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் …

  25. மகிந்தவின் நிகழ்ச்சிநிரலில் இருந்து விலகாத பரணகம ஆணைக்குழுOCT 25, 2015 பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை: http://groundviews.org/wp-content/uploads/2015/10/14-August-final-version-edited-on-30.9.15.pdf முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையையும், உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையையும், நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது அரசாங்கம். உடலகம ஆணைக்குழுவின் அறிக்கை, மகிந்த ராஜபக்சவின் காலத்திலேயே கையளிக்கப்பட்டது. இதுவரை அது வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பரணகம ஆணைக்குழுவின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்று…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.