அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
இடைக்கால, ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பும்... "சிஸ்ரம் சேஞ்சும்" – நிலாந்தன். இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவதற்காக, இருபதாம் தேதி, நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், ஐந்துக்கு மேற்பட்ட முனைப் போட்டிக்கு இடம் உண்டு என்று தெரிகிறது. ரணில் சஜித் இருவரையும் தவிர, டலஸ் அழகப் பெரும,சரத் பொன்சேகா,அனுரகுமர,அனுரா பிரியதர்சன யாப்பா போன்றவர்களும் போட்டியிடுவதில் நாட்டத்தோடு காணப்படுகிறார்கள். சம்பிக்க ரணவக்கவிற்கும் அந்த ஆசை இருப்பதாக கருதப்படுகிறது ரணிலை பொதுஜன பெரமுன ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ராஜபக்சக்களை அவர் பாதுகாக்கிறார்.எனவே ரணிலை ராஜபக்சக்கள் பாதுகாப்பார்கள். அந்த அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கும். ஆனால் இங்கே உள்ள பிரச்ச…
-
- 0 replies
- 277 views
-
-
மார்க்சியம் என்றால் என்ன? _ தோழர் தியாகு
-
- 0 replies
- 2.6k views
-
-
சமகால சவால் இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதன் மூலம் நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அம்முயற்சிகள் சவாலுக்குட்படுத்தப்படுவதை காண முடிகிறது. மாறாத மாற்றத்துடன் கட்சி அரசியலும், இன, மத சித்தாந்தங்களும் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு அவை முக்கியத்துவம் பெறுவதனால் நல்லிணக்கம் என்பது எட்டாக்கனியாகவுள்ளது. பெரும்பான்மை என்ற மேலாதிக்க சிந்தனை இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை உருவாக்குவதோடு, அடக்கு முறைக்கும் வழிவகுப்பது மாத்திரமின்றி, பழிதீர்க்கும் படலத்தையும் அரங்கேற்றி வர…
-
- 0 replies
- 691 views
-
-
வாய்ச் சொல்லில் வீரரடி கடந்த 24ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சருடைய உரைத்தொகுப்பு புத்தகமாக வெளியாகியது. உலகத் தலைவர்கள் பலரும் தாம் அவர்கள் செய்த வீரதீரச் செயல்கள், தங்கள் நாட்டுக்காக தாம் உழைத்த உழைப்பு, புரட்சி, பொருளாதார மாற்றங்கள் என பல நடைமுறைßச் செயல் வடிவங்களைப் புத்தகமாக வெளிக்கொணர்வது வழமை அல்லது கண்கூடு, ஆனால் இன்று வடக்கில் விநோதம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாரதி சொன்னது போல “வாய்ச் சொல்லில் வீரரடி” என்ற கூற்றுக்கு வலுச் சேர்ப்…
-
- 0 replies
- 600 views
-
-
போர் குற்றச்சாட்டுகளில் இருந்து மீளல் என்.கண்ணன் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் நாளை மறுநாள் உரையாற்றும் போதும், ஐ.நா. பொதுச்செயலர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரைச் சந்தித்துப் பேசும் போதும், இலங்கைப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்கும் யோசனையை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறி வருகிறார். எனினும் முன்வைக்கப்போகும் யோசனை என்ன என்பதை அவர் இன்னமும் வெளியிடவில்லை. அதேவேளை, அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தகைய எந்த யோசனையும் முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியிடப்படவில்லை. இராணுவத்தினர் மீது சுமத்தப்படுகின்ற போர்க்குற…
-
- 0 replies
- 523 views
-
-
1978 நவம்பர் 23ம் திகதி. ஒரு பெருங்காற்று கிழக்கு மண்ணை துகிலுரித்த நாள். குறிப்பாக மட்டக்களப்பு மண்ணை 'சூறாவளி' என்ற அரக்கன் அரைகுறையாக அழித்த சம்பவம் இன்றைக்கும் பலரால் நினைவுகூறப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நவம்பர் 23ம் திகதி இரவு முழுவதும் வீசிய அந்த கொடூரமான புயல்காற்றில் அகப்பட்டு சுமார் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 250,000 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதமாக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் 20சதவீதமான மீன்பிடிப் படகுகள் அழிக்கப்பட்டன. சுமார் 28 ஆயிரம் தென்னஞ்செய்கையில் 90 வீதமானவை முற்றாகவே அழிவடைந்தன. 240 பாடசாலைகள், 90 நெற்களஞ்சியங்கள் சே…
-
- 0 replies
- 554 views
-
-
வடக்கு கிழக்கு விவகாரத்தை உலக நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லலாம் - ச. வி. கிருபாகரன் Posted by: on Aug 20, 2011 இலங்கை தீவின் சுதந்திரத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த சிறிலங்கா அரசுகள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஏற்க தவறிய காரணத்தினால், தமிழ் மக்கள் 35 வருடகாலமாக ஓர் அகிம்சை போராட்டத்தை நாடத்த வேண்டி ஏற்பட்டது. இப் போராட்டத்தை சிறிலங்காவின் பாதுகாப்பு படைகள் தொடர்ச்சியாக வன்முறை மூலமாக நசுக்கிய காரணத்தினால் அது ஓர் ஆயுதப் போராட்டமாக வெடித்து, தற்பொழுது தமிழிழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் ஓர் மரபு முறை யுத்தமாக மாறியுள்ளது. இலங்கை தீவின் அரசியல் யாதார்த்த நிலைகளை ஓருவர் எந்தவித பாரபட்சம் அற்ற நிலையில் ஆராய்வாரேயானால்,…
-
- 0 replies
- 712 views
-
-
அவர்களின் கடவுளர்கள்: எங்கள் மீதான வல்வளைப்பின் குறியீடுகள்- செல்வி- தொன்மையான வாழ்வியல் மரபைக் கொண்ட தமிழர்களின் நிலங்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வல்வளைப்புச் செய்யப்பட்டு, தேசிய இனத்தின் அடிப்படைக் கூறான நிலத்தின் தொடர்ச்சியையும் நாம் இன்று இழந்துகொண்டிருக்கிறோம். நில ஆக்கிரமிப்பு என்பது வெறுமனே சடப்பொருளொன்று தன் அதிகாரத்தை இழப்பது என்பதல்ல. அது தேசிய இனத்தின் பொருண்மிய, பண்பாட்டு, மரபுகளை வல்வளைப்புச் செய்வதன் கண்ணுக்கு புலனாகின்ற வடிவம். மரபுவழித் தொன்மையினடியாக வந்த நாங்கள் ஒருவர் என்ற உள இயல்பின் பின்னல்களின் கட்டமைக்கப்பட்டிருக்கும் தேசிய இனத்தின் தேசமாக வாழ்தலுக்கான அவாவினை மரபு வல்வளைப்பின் மூலம் அழித்துவிடலாம் என மனப்பால் குடித்துக்கொண்டு, …
-
- 0 replies
- 667 views
-
-
கைது செய்யப்படுவாரா கரன்னகொட? கே. சஞ்சயன் / 2019 மார்ச் 08 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:12 Comments - 0 படையினரை முன்னிறுத்திய அரசியல் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2008-09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கு, இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும் ஒரு சந்தேக நபராகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள், நடந்து கொண்டிருக்கின்றன. அட்மிரல் வசந்த கரன்னகொட, கடற்படைத் தளபதியாக இருந்தபோது, இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதுவும், அட்மிரல் கரன்னகொட தான், தனக்கு நெருக்கமான அதிகாரியாக இரு…
-
- 0 replies
- 960 views
-
-
"கும்மியடி கும்மியடி" "மகாவம்சம் குழப்பிய தமிழன் வரலாற்றை சொல்லி சொல்லி கும்மியடி கும்மியடி விஜயன் வருகையில் இலங்கையில் இருந்தவன் விடயம் தெரியாதோ கும்மியடி கும்மியடி" "கல்வெட்டு ஆதாரம் தமிழைச் சொல்லுது ராவணன் பூமியென கும்மியடி கும்மியடி பஞ்ச ஈசுவரங்கள் பழமையைக் காட்டுது புரிந்தால் நல்லது கும்மியடி கும்மியடி" "விஜயன் மனைவியும் மதுரைத் தமிழ்ச்சியே விபரம் இருக்குது கும்மியடி கும்மியடி சிங்களம் தோன்றியது ஆறாம் நூற்றாண்டு சிறிது சிந்தியுங்கள் கும்மியடி கும்மியடி" "வந்தேறு குடிகள் தமிழர் அல்ல வளமுடன் வாழ்ந்தவர்கள் கும்மியடி கும்ம…
-
- 0 replies
- 290 views
-
-
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
[size=1][size=3]அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தாம் ஒரு மாபெரும் ஜனநாயகவாதிபோல தன்னைக் காட்டிக்கொள்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை விசாரிக்கவேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரேரணை கொண்டுவர அதனை பவ்வியமாக ஏற்றுக்கொண்ட இந்திய அரசு, அதன் இராணுவம் இழைத்த போர்குற்றங்கள் உலகிற்குத் தெரியாது என்று எண்ணிவருகிறது. குறிப்பாக இந்திய அரசின் ஜனநாயக அடக்குமுறைகளை மேற்குலக நாடுகள் கண்டுகொள்வதே இல்லை. இந்தியா ஒரு பெரும் ஜனநாயக நாடு என்ற போர்வைக்குள் வைத்திருக்கவே அது விரும்புகிறது. இந்தியாவின் வளர்ச்சியும் ஏற்றுமதியையும் அவர்கள் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை ! இந்திய அரசு ஆயுதம் ஏந்தாத நக்ஸல் போராளிகள் மீது நடத்தும் தாக்குதல்கள், பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகள் மீது ந…
-
- 0 replies
- 4k views
-
-
சமஷ்டியும் இரத்த ஆறும் - சத்ரியன் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அரசியலில் ஈடுபடும் கட்சிகளிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான், இதுவரை தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்ற கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் வழக்கம் போலவே, வடக்கு- கிழக்கு இணைந்த, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசியல் தீர்வு வலியுறுத்தப்பட்டுள்ளது. சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே தமிழர் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக வலியுறுத்தியுள்ள கூட்டமைப்பு, அதனை அடைவதற்காக பாடுபடப் போவதாகவும், அதற்கு மக்களின் ஆணையைத் தருமாறும் கேட்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆணைகளை மீறிவிட்டது- ஒற்றையாட்சித் தீர்வுக்கு உடன்பட்டு விட்…
-
- 0 replies
- 957 views
-
-
இன்றைய பௌர்ணமியும் அரசியல் நிலவும் August 3, 2020 இன்று முதல் பிரசார பணிகள் நிறைவடைகின்றன. இன்று பௌர்ணமி நாளும் கூட. அது மாதாந்தம் வருவதுதான். ஆனால், தேர்தல் கால பௌர்ணமிகள் சிறப்பானவை. ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரசார பணிகள் முடிந்த மறுநாளும் பௌர்ணமியே. இன்றும் பௌர்ணமியே. இலங்கையில் இனப்பிரச்சினை என்பது இன்றைய நேற்றைய பிரச்சினை அல்ல. சுதந்திரத்துக்கு முன்னமே இந்திய வம்சாவளித் தமிழருக்கானதாக வெளிப்பட்டது. சுதந்திரமடைந்ததோடு அவர்களின் வாக்குரிமையைப் பறித்து அந்த வஞ்சம் தீர்க்கப்பட்டது. அடுத்த இலக்காக இலங்கைத் தமிழர்கள் இருந்தார்கள். தரப்படுத்தல் முறைமை மூலம் அவர்களது வளர்ச்சியை தடுக்க நினைத்து அதுவே பின்னாளில் பெரும்போருக்கே வழிவகுத்தது. வடக்…
-
- 0 replies
- 441 views
-
-
ஏமாற்றத்தை எதிர்பார்த்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது கையறுநிலையின் வெளிப்பாடா அல்லது மூட நம்பிக்கையா என்று சொல்லவியலாது. உலக அரசியல் அரங்கை நம்பிக்கையீனம் ஆட்கொண்டுள்ளது. எதையும் நம்பியிருக்க இயலாதவாறு அலுவல்கள் அரங்கேறுகின்றன. இதனால் ஏமாற்றத்தை எதிர்பார்ப்பதும் களிப்பூட்டுகிறது. ஞாயிற்றுக் கிழமை இத்தாலியில் நடந்த மக்கள் வாக்கெடுப்பின் மு…
-
- 0 replies
- 324 views
-
-
மாகாணசபையை தளமாகக் கொள்ளும் தமிழர் அரசியலும், அதன் மீதான விமர்சனங்களும் - யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையில் போட்டியிடும் முடிவை அறிவித்த நாளிலிருந்து, சில விமர்சனங்களும் மேலெழுந்தவாறே இருக்கின்றன. அதாவது ஒன்றுமில்லாத மாகாணசபையை கூட்டமைப்பு ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்கிறது என்பதுதான் அவ்வாறான விமர்சனங்களின் அடிப்படையாக இருக்கிறது. இத்தகைய விமர்சனங்களின் சொந்தக்காரர்கள், 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவான மாகாணசபை முறைமையை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக்கொள்வதானது, ஓர் உண்மையான தீர்வை நோக்கிச் செல்வதற்கான பாதையை மூடிவிடும் என்கின்றனர். மாகாணசபையை கையாளுவது தொடர்பான முன்னைய பத்திகள் தொடர்பில் என்னுடன் பேசிய புலம்பெயர் ஊடக நண்பர் ஒருவர் பி…
-
- 0 replies
- 426 views
-
-
கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை நூருல் ஹுதா உமர் சோதனை மேல் சோதனையை அனுபவிக்கும் மீன்பிடித்துறை ‘கடலுக்குள் போனால் பிணம்; வெளியே வந்தால் பணம்’ எனும் பழமொழியின் அர்த்தத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் இந்தக் கட்டுரையின் வாசல் கேள்வியாகும். மீன்பிடி என்பது இலங்கையின் கிழக்குப் பகுதியில் எப்போதும் முதன்மையான தொழிலாகவே இருந்து வருகிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீன்பிடி வள்ளங்கள், இயந்திரங்கள், வலைகள் அடங்கலாக மொத்தம் 50 - 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தான் கடலில் மிதந்து கொண்டிருப்பது. கடலலையுடன் போராடி, தோணியில் சவலடித்து, காற்றின் திசையறிந்து துடுப்பைச் சுழற்றி, பெரிய இயந்திர படகில் தினமும் மாலையில் கடலு…
-
- 0 replies
- 339 views
-
-
-
- 0 replies
- 955 views
-
-
இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும்தான் சாதியடக்குமுறை உண்டு என்றும், சிங்கள மக்களிடம் சாதிப் பாகுபாடு இல்லை என்றும், அனேகர் கருதுவது மிகத் தவறானது என கட்டுரையாளர் திபாகரன் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தனது கட்டுரையில், இருபகுதியினரிடமும் சாதிப் பாகுபாடு வலுவாக உண்டு எனினும் தமிழ் மக்களிடம் சாதிப்பாகுபாட்டில் தீண்டாமை என்கிற அம்சம் உண்டு. ஆனால் சிங்களவர்களிடம் தீண்டாமை என்பது கிடையாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் சாதி பேதமானது தமிழ் மக்களிடம் இருக்கின்ற சாதி பேதத்தை விடவும் அரசியல் மத ரீதியில் மிக ஆழமானதும் கடுமையானதும் ஆகும். இது பற்றி தெரிந்து கொள்ளாமல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் மிகப்பெரும் அரசியல் ரீதியான சமூக ர…
-
- 0 replies
- 504 views
-
-
எந்த முரண்பாடு இருந்தாலும் ஜனாதிபதியும் ஐ.தே.கவும் பிரிந்து வாழ முடியாது தமக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வெளியிடும் கருத்துகளைப் பற்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் மிகவும் உணர்ச்சிகரமான உரையொன்றை ஆற்றிவிட்டு, அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் எனச் செய்திகள் கூறின. அது, அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முறுகல் நிலையின், மிகவும் பாரதூரமான வெளிப்பாடாகும் என்பதில் சந்தேகமே இல்லை. ஜனாதிபதியைப் பற்றி, ஐ.தே.க அமைச்சர்களும் நாடாளுமன்ற உ…
-
- 0 replies
- 254 views
-
-
அம்பலமான உண்மை முகம் ‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க பேட்டி ஒன்றில் கூறியிருந்த பின்னர், அவரது கருத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்பட்டிருக்கிறார், ஓர் இராணுவ உயர் அதிகாரி. அதுவும், மனித உரிமைகள் பற்றிய கரிசனைகள் அதிகம் உள்ள நாடு ஒன்றிலுள்ள, இராஜதந்திரத் தூதரகத்திலேயே அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார். இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்துக்கு எதி…
-
- 0 replies
- 616 views
-
-
இலங்கைத்தீவு விவகாரம்- இந்திய அணுகுமுறையும், அமெரிக்க நிலைப்பாடும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கையாளும் அணுகுமுறையோடுதான் அமெரிக்கா ஒத்துச் செல்கிறது. ஜப்பானும் அதற்கு விதிவிலக்கல்ல. 2002 சமாதானப் பேச்சு காலத்திலும் இந்த ஒழுங்குதான் இருந்தது. 13 ஐ இந்தியா சம்பிரதாயபூர்வமாகவே கோருகின்றது என்பதைச் சிங்கள ஆட்சியாளர்கள் அறியாதவர்கள் அல்ல. -அ.நிக்ஸன்- சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்த இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியை வழங்கவும், மேலதிகமான கடன்களைக் கொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கா, இந்தியா மற்று…
-
- 0 replies
- 313 views
-
-
உலக பொருளாதார நெருக்கடி: பழி ஓரிடம்; பாவம் இன்னோரிடம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அது ‘சுனாமி’ மாதிரி, தொடர்ச்சியாகப் பல நாடுகளைத் தாக்கிய வண்ணமுள்ளது. பணவீக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நாட்டிலும், பொருளாதார சீர்கேடு உருவாக்குகிறது. இது பல சந்தர்ப்பங்களில் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு வழிசெய்கிறது. எரிசக்தி விலைகளின் அதிகரிப்பு, ஐரோப்பா எங்கும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளது. எரிசக்தியின் அதிக விலை அதிகரிப்புக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்கள், பெல்ஜியம் முதல் செக் குடியரசு வரை நடத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பிரான்ஸ் மக்கள், பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் கா…
-
- 0 replies
- 726 views
-
-
உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்? -அதிரன் பெண்கள் தங்கள் உதட்டில் பூசியிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ அழியாமல், கழராமல் உணவு உண்பதைப் போலவும் நளினமாகப் பேசுவதையும் போன்ற கதையாகத்தான் நமது நாட்டின் தேசிய நல்லிணக்கம் என்கிற செயல்பாடு இருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், ‘சமாதானப் புறா’ என்று புகழப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க (தலைவி: தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம்) எனப் பலர் இலங்கை நாட்டில் நல…
-
- 0 replies
- 547 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிக்க முடியுமா? பா.கிருபாகரன் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அந்தப் பிரேரணை வெற்றிபெற்றாலும் அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்க முடியாது. ஏனெனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்குவதற்கான வழிமுறைகள் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து நாட்டையும் அரசியலையும் மக்களையும் குழப்பி பிரேரணையிலும் மண்கவ்விய மகிந்த ஆதரவு பொது எதிரணியினர், அடுத்தகட்டமாக எதிர்க்கட்சித…
-
- 0 replies
- 363 views
-