Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அரசியலமைப்புச் சீர்திருத்தக் குளறுபடி http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-30#page-11

  2. தமிழரசு கட்சிக்குள் தேர்தலைத் தவிர்க்க வாய்ப்புகள் உண்டா? நிலாந்தன். தேர்தல் என்று வந்தால் கட்சி அரசியலில் ஜனநாயக பண்பு அதிகரிக்கும். கட்சிகள் தங்களுடைய கீழ்மட்ட, மேல்மட்டக் கட்டமைப்புகளைச் சீர் செய்து, மக்களை நோக்கிச் செல்லும். குருட்டு விசுவாசமும் சாதியும் சமயமும் அதில் செல்வாக்கு செலுத்தும் என்பது உண்மைதான்.என்றாலும் வாக்காளர்களில் தங்கியிருக்கும் ஒரு போக்கு எனப்படுவது, கட்சி அரசியலைப் பொறுத்தவரை ஜனநாயகமானது. அந்த வாக்காளர்கள் விமர்சன பூர்வமாகச் சிந்திக்கும் வாக்காளர்களா இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரதான கேள்வி. தமிழரசுக் கட்சிக்குள் தலைமைப் பீடத்துக்கான தேர்தல் எனப்படுவது அவ்வாறு கட்சியை ஒப்பீட்டளவில் ஜனநாயக மயப்படுத்துவதாகத் தெரிகிறது.மூன்று வேட்பாளர்களும் …

  3. பொது வேட்பாளர் வந்து விட்டார் - நிலாந்தன் தமிழ்ப்பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்து விட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த கேள்வியை முன்வைத்து பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பினால் ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமாக உருப்பெருக்கிக் காட்டப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன ? தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அடக்கப்படும் அமைப்புக்கான முதலாவது கருநிலைச் சந்திப்பு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் இடம் பெற்றது. அதன் பின் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜூன் மாதம் 2…

  4. யாருக்கு வாக்களிப்பது? -நிலாந்தன்.- தேசிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதும் தேசிய மக்கள் சக்தியை யாழ்ப்பாணத்தில் தோற்கடிப்பதற்கு. “இளங்குமரன் என்ன கதைக்கிறார் என்பது மற்றவர்களுக்கும் விளங்குவதில்லை அவருக்கு விளங்குவதில்லை” என்று சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.அது உண்மை. அவருக்கு தமிழும் சரியாக வருவதில்லை தகவல்களும் சரியாகத் தெரிவதில்லை. கதைக்கின்ற பாணியும் ஒரு தினுசானது.அடிக்கடி ஊடகங்களில் அவர் மீம்ஸ் ஆக்கப்படுகிறார். அவருடைய ஆகப்பிந்திய மீம்ஸ் “யாழ்ப்பாணம் தெல்லிப்பளைக்குள் இருக்கிறது” என்பதாகும். மற்றவர் ரஜீவன். இவர் இளங்குமரன் அளவுக்கு வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வதில்லை. அவர் முன்பு சுமந்திரனுக்கு நெருக்கமாக இருந்தவர். ஜனாதிபதித் …

  5. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-09#page-6

  6. அரோகராப் போராட்டம்? - நிலாந்தன் ஒரு நீதிபதிக்கு நீதி கேட்டுத் தமிழ் மக்கள் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்திலிருந்து தமிழ்ப் பகுதிகளெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். இது குத்துவிளக்குக் கூட்டணியால் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும் ஏனைய கட்சிகளும் அதற்கு ஆதரவைக் காட்டின. அந்தப் போராட்டம் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது சொந்த மக்களின் கவனத்தையும், உலக சமூகத்தின் கவனத்தையும் ஈர்க்கத்தக்க விதத்தில் பிரம்மாண்டமானதாக முன்னெடுக்கப்பட்டதா? மருதனார் மடத்திலிருந்து தொடங்கி யாழ்ப்பாணம் வரையிலு…

  7. தெற்காசியா தொடர்பிலான பெரியண்ணனின் கொள்கை மாறியிருக்கிறதா? என்.கே.அஷோக்பரன் கனடாவும், இந்தியாவும் மிகப்பெரிய இராஜதந்திர முறுகல் நிலையை சந்தித்து நிற்கும் காலப்பகுதியிது. பதினைந்து வருடங்கள் முன்பு கூட இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டிருக்காது. ஏனென்றால், உலகளவில் இந்தியா தனது பலத்தை இதற்கு முன்னர், இத்தனை தூரம் வௌிக்காட்டியதில்லை. தனக்குக் கிடைக்கவிருந்த ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆசனத்தையே, சீனாவுக்கு வழங்காததை தாம் பெறுவது கூடாது என்று ஏற்காது விட்ட நேருவிய இந்தியா இப்போது இல்லை. வறிய நாடு, பிச்சைக்கார நாடு என்று மேற்குலகமானது தனது ஆதிக்கப்பார்வையின் காரணமாக, ஆபிரிக்காவுக்கு அடுத்து மோசமாகப் பார்த்த இந்தியா இன்று இல்லை. இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம்…

  8. உள்ளூராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும் நிலாந்தன் உள்ளூராட்சிசபைத் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் இரண்டு தரப்பிற்கு சோதனை காத்திருக்கிறது. முதலாவது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது தமிழரசுக்கட்சியும் அதன் கூட்டாளிகளும். கூட்டரசாங்கம் என்பது சுதந்திரக்கட்சியின் பிளவில் இருந்து உருவானதுதான். இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை மேலும் ஆழமாக்கவே உதவும். இது சில சமயங்களில் ஐக்கியதேசியக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்திவிடும். தேர்தலில்; மகிந்த அணி வென்றாலும், மைத்தரி அணி வென்றாலும் இழப்பு சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்குத்தான். அக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு மேலும் ஆழமாக்கப்ப…

  9. ”வடக்கு மாகாணத்தில் மட்டும் “தமிழ்த் தேசிய” அணிகளின் ஆசனங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு “உள்வீட்டு” சண்டையால் ஏற்பட்ட வாக்குச் சிதைவே முக்கிய காரணமே தவிர, “தமிழ்த் தேசிய” வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு அல்ல. அநுரவுக்கு ஆதரவான வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவது வெறும் மாயத்தோற்றமே" ஜெ.பி. கடந்த முறையை விட இம்முறை 36 ஆயிரம் வாக்குகள் குறைவாக அளிக்கப்பட்டுள்ளன. எல்லா மாவட்டங்களிலும் கடந்த முறையை விட இம்முறை சற்றுக் குறைந்தளவே வாக்குப்பதிவு நடந்ததது (2020: 76% -2024: 69%). இதனால் யாழ்.மாவட்டத்தில் ‘தமிழ்த் தேசிய’ கட்சிகளுக்கு தனியான தாக்கம் ஏற்பட்டதாக கருதமுடியாது. ஜனாதிபதித் தேர்தலை ஒட்டியும் வெற்றியின் பின்னரும் தே…

  10. முஸ்லிம் கூட்டமைப்பு: புதுவழியில் பயணிக்கும் முஸ்லிம் அரசியல் தமிழர்களுக்கான அரசியலில், ஒன்றிணைந்து செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்முரண்பாடுகளும் கீறல்களும் விழுந்துகொண்டிருக்கின்ற ஒரு காலசூழலில், முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பொன்று, ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ என்ற பெயரில் உதயமாகி இருக்கின்றது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில், அஹிம்சை ரீதியாகப் போராடிய தமிழரசுக் கட்சியுடன், ஆயுதத் தொடர்புள்ள இயக்கங்களாக ஒரு காலத்தில் அறியப்பட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போல, முஸ்லிம் சமூகத்துக்கிடையே அரசியல் செய்து கொண்டிருக்கின்ற அகில இலங்கை மக்கள…

  11. புலிகள் இயக்கத்தினரை பூண்டோடு நிர்மூலமாக்கிய சூத்திரதாரிகள் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இறுதி யுத்தத்தின் முன்னராக அமைப்புகளின் கையில் இருந்த 155 million டாலர் பணம் எங்கே??? கனேடிய தமிழ் மக்களை மனஉளைச்சல் கொண்ட ஓர் இனமாக மாற்றிய அராஜக தமிழ் அமைப்புகள்

    • 0 replies
    • 300 views
  12. ஏகபோகத்தை இழந்தாலும் கூட்டமைப்பிடம் இருக்கும் பலம் வேறு கட்சிகளிடம் இல்லை

  13. கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லிச் சந்திப்பு — சிறிதரன், விக்னேஸ்வரன் குழுவினர் கடந்த வாரம் டில்லிக்குச் சென்றிருந்தமை எந்த நிகழ்ச்சி நிரல்? அதாவது ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் சில புலம்பெயர் அமைப்புகளை அழைத்து கடந்த ஜனவரி மாதம் டில்லியில் மாநாடு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு யூன் மாதம் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தன. 2021 இல் பழநெடுமாறன் “வட்டுக்கோட்டைத் தீர்மானம் 2” என்ற மாநாட்டை நடத்தி மோடிக் கடிதம் அனுப்பினார். ஆகவே இச் சந்திப்புகள், மாநாடுகளின் தொடர்ச்சியாகவா அல்லது பிரித்தாளும் உத்தியா? அ.நிக்ஸன்- ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அ…

  14. ரணிலின் பிரித்தாளும் அரசியலை தாண்டுமா தமிழ்க் கட்சிகள்? புருஜோத்தமன் தங்கமயில் இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் ஆயுதப்போர் முனையில் வெற்றி முகத்தோடு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்து, ஆழ ஊடுருவி அழிப்பதற்கான விதைகளைப் போட்டவர் ரணில் விக்கிரமசிங்க. ‘கருணா அம்மான்’ என்கிற புலிகளின் கிழக்கு தளபதியை பிரித்தெடுத்து, இராணுவ பலத்தை சிதைத்ததுடன், சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான தடைகளை வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளையும் செய்திருந்தார். புலிகளை இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் தோற்கடிப்பதற்காக ரணில் போட்ட பாதையில்தான், அவருக்குப் பின்னர் வந்த ராஜபக்‌ஷர்கள் பயணித்து 2009இல் வென்றார்கள். ரணில் தனக்கு கி…

  15. முன்னோடி பலப்பரீட்சை http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-10#page-18

  16. எவரும் விரும்பாத ஜனாதிபதி; எவரும் தெரிவுசெய்யாத பிரதமர் Veeragathy Thanabalasingham on June 14, 2022 Photo, Laprensalatina இலங்கையின் இன்றைய ஆட்சிமுறையின் இலட்சணம் தன்னைப் பதவி விலகி வீட்டுக்குப் போகுமாறு கோரிக்கை விடுத்து வீதிப்போராட்டங்களை நடத்திவரும் மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் எதிரணிக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தெளிவான செய்தியொன்றைக் கூறியிருக்கிறார். கடந்தவாரம் புளூம்பேர்க் செய்திச்சேவைக்கு நேர்காணலொன்றை வழங்கிய அவர் தனது ஐந்து வருட பதவிக்காலத்தின் எஞ்சிய இரு வருடங்களையும் நிறைவுசெய்த பின்னரே பதவியில் இருந்து இறங்கப்போவதாகவும் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களிடம் ஆணைகேட்டு த…

  17. மாகாண சபைகளுக்காகக் குரல் கொடுத்த ஒன்றிணைந்த எதிரணி கடந்த வாரம் அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தையும் அதேவாரத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தையும் பார்க்கும்போது, இந்த அரசாங்கத்துக்கு, நல்லதொரு விடயத்தையாவது சர்ச்சைகள் இல்லாமல் செய்ய முடியாதா என்ற கேள்வி எழுகிறது. அந்த இரு சட்ட மூலங்களையும் சர்ச்சைகளுக்கு வழிவகுக்காமல் இதைவிட இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால், அரசாங்கமே சர்ச்சைகளை உருவாக்கி, அவற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது. சுருக்கமாகக் கூறுவதாயின், அரசாங்கம் 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் அநாவசியமான சில வாசகங்களைப் புகுத்தி,…

  18.  சாவினை அடுத்த சாணக்கியம் என்ன? ப.தெய்வீகன் அந்த இரண்டு இளைஞர்களின் படுகொலையும் ஓர் இனத்தின் மீதான பேரதிர்வாக மீண்டுமொரு தடவை தமிழ்நிலத்தில் பதிவாகியிருக்கிறது. தங்களின் உதிரத்தில் ஓடுகின்ற வக்கிரத்தினை மறைத்துக்கொள்ள முடியாமல்போன, இன்னொரு உக்கிர தருணமாகிப்போன அந்த மரணங்கள் தமிழர் பிரதேசங்களில் துண்டுப்பிரசுரங்களாக மாத்திரம் பறந்து கொண்டிருக்கின்றன. போருக்குப் பின்னர் தவணை முறையில் இடம்பெற்று வருகின்ற எத்தனையோ மரணங்களில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது. இந்தச் சாக்குரலின் சத்தங்களுக்கும் நீதியை நோக்கிய கேவல்களுக்கும் என்ன நடந்துவிடப்போகிறது என்று பார்த்தால், புங்குடுதீவுச் சம்பவமாகவும் வவுனிய…

  19. சுதந்திர குர்திஸ்தானுக்கான பொதுசன வாக்கெடுப்பும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு முயற்சியும் ஈராக்கின் சுயாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தான் சில தினங்களுக்கு முன்னர் தனிநாடாக பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்தியிருந்தது. 77 வீதமான மக்கள் வாக்கெடுப்பில் பங்குகொண்டிருந்தனர். இதில் 93 வீதமான மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய நாடொன்று உதயமாவதற்கான மக்கள் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றிருக்கிறது. இந்த விடயம் ஜரோப்பாவைத் தளமாகக் கொண்டியங்கிவரும் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒருவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்றும் நிலைகொண்டிருந்தால் இந்த உற்சாகம் வடக்கு கிழக்…

  20. அரசியல் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் புள்ளடி ‘அரசியல் மேய்ப்பர்’களைத் தெரிவு செய்வதற்கான, தீர்க்கமாக முடிவடுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றோம். இந்தத் தருணம்தான் பொதுவாக எல்லா இனங்களினதும் குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகின்றது. இதற்காகவே, நெடுங்காலமாக எல்லாச் சமூகங்களும் காத்துக் கொண்டிருந்தன. இப்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்துப் பரப்புரைகளும் முடிவுக்கு வந்து விட்டன. வீராப்புப் பேச்சுகள், காதுகளை நிரப்பியிருக்கின்ற வேளையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மனதில் பதிந்திருக்கின்ற நிலையில், இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு, வா…

  21. கோட்டாபய கூட்டமைப்பைப் பேச அழைக்கிறார்? நிலாந்தன். March 20, 2022 கடந்த புதன்கிழமை கோட்டாபய கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார். எனினும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. அது 25ஆம் இடம்பெறலாம் என்று தெரிகிறது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ கலந்து கொள்ளப்போவதிவில்லை என்று அறிவித்திருந்தது. அதற்கு டெலோ ஒரு விளக்கக் கடிதத்தை ஏற்கனவே அனுப்பியிருந்தது. பதவியேற்றதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கோத்தாபய கூட்டமைப்போடு பேசப்போவதாக இடைக்கிடை கூறி வருகிறார். ஆனால் இன்றுவரையிலும் பேச்சுவார்த்தைகள் நடக்கவில்லை. இம்முறை பேச்சுவார்…

  22. உக்ரெய்ன் – ரசிய மற்றும் ஈழத்தமிழர் விவகாரம்- இரட்டைத் தன்மையைப் பின்பற்றும் இந்தியா –சிக்கலான வாக்கெடுப்புகளில் நடுநிலை வகிப்பது அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. சிறிய நாடான இலங்கைத்தீவு விவகாரத்தில்கூட இரட்டைத் தன்மை என்றால், ஈழத்தமிழ் இனம் சார்ந்த தேவையற்ற கற்பனையான அச்சநிலை புதுடில்லிக்கு இருக்கின்றது என்பதே அதன் பொருள்– -அ.நிக்ஸன்- ரசிய – உக்ரெய்ன் போரில் இதுவரை நாளும் மௌனமாக இருந்த இந்தியா தற்போது வாய்திறப்பது போன்று பாசாங்கு செய்கிறது. உக்ரெய்னில் கைப்பற்றப்பட்ட நான்கு பிராந்தியங்களில் கடந்த மாதம் வாக்கெடுப்பு நடத்திய ரசியா, அந்தப் பகுதிகளை தனது நாட…

  23. காணிகள் விடுவிப்பும் இராணுவ நிகழ்ச்சி நிரலும் கே. சஞ்சயன் / பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக, சில இராணுவ முகாம்களை மூடுவதற்கும், சில இராணுவ முகாம்களின் பருமனைக் குறைப்பதற்கும், இராணுவத் தளபதி எடுத்துள்ள நடவடிக்கை முட்டாள்த் தனமானது என்று விமர்சித்திருக்கிறார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. முன்னர் சரத் பொன்சேகாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, அதனால், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவர். வெளிநாட்டுக்குத் தப்பியோடி, தலைமறைவாக இருந்துவிட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்த நாளே, அவர் கட்டுநாயக்க விமான…

  24. இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜெனீவாவைக் கையாளும் புதிய அணுகுமுறை - தமிழர்களையும் உள்ளடக்கிய பொறிமுறை உருவாக்கத் திட்டம் செம்ரெம்பர் அமர்வில் மேலும் கால அவகாசம் கோர ரணில் முயற்சி -ஜெனீவா குழு கொழும்பு வருகை செப்ரெம்பர் மாதம் கூடவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது, பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்குக் கூடுதல் அழுத்தங்கள் முன்வைக்கப்படலாம். ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல்தீர்வு, இன அழிப்பு மற்றும் சர்வதேசம் கூறுகின்ற போர்க்குற்ற விசாரணைகள் குறித்த விடயங்கள் எதிலும் அந்த அழுத்தங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்க…

    • 0 replies
    • 298 views
  25. எத்தனை ஹர்த்தால்கள் அதிகமானவை? வடக்கு, கிழக்கில் - முக்கியமாக வடக்கின் யாழ்ப்பாணத்தில் - வாழ்ந்தவர்களுக்கு, ஹர்த்தால் என்ற இச்சொல், பெருமளவுக்குப் பழக்கமான ஒரு சொல்லாக இருந்து வந்திருக்கிறது. அவர்கள் எக்காலத்தில் இருந்தாலும், இதனுடைய தாக்கத்தை, உணர வேண்டிய நிலை காணப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான், வடக்கில் கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால், இது தொடர்பான எங்கள் பார்வையை மீளச்செலுத்த வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது. ஹர்த்தாலின் அதிகபட்சத் தாக்கத்தை, இறுதிக்கட்ட யுத்தத்தின் முனைப்புகள் தென்பட்ட 2005, 2006ஆம் ஆண்டுகளில், யாழ்ப்பாணம் அனுபவித்திருந்தது. படையினரின் வாகனங்கள் மோதி, பொதுமக்கள் பலியாகும் சந்தர்ப்பங்களில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.