அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
புலம்பெயர் தமிழர்கள் விடயத்தில் நிலையான கொள்கை வேண்டும் எம். எஸ். எம் ஐயூப் இலங்கையில், அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்து, கடந்து சென்ற 13 ஆண்டுகளில், இலங்கை அரசாங்கங்கள், இரண்டு முறை புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளைத் தடை செய்துள்ளன. இரண்டு முறை, சில அமைப்புகளின் மீதான தடையை நீக்கியுள்ளன. கடந்த வாரம் இரண்டாவது முறையாக, அவ்வமைப்புகள் மீதான தடையை, அரசாங்கம் நீக்கியுள்ளது. மேலும் விளக்கமாகக் கூறுவதாயின், 2014ஆம் ஆண்டுக்குப் பின்னரான எட்டு ஆண்டுகளிலேயே, இவ்வாறு அந்த அமைப்புகள் தடைசெய்யப்பட்டு, மீண்டும் அத்தடை நீக்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்நான்கு சந்தர்ப்பங்களிலும், தடை செய்யப்பட்ட மற்றும் தடை நீக்கப்பட்ட அமைப்புக…
-
- 0 replies
- 310 views
-
-
மோடி விஜயத்தின் மறைமுகமான செய்தி தேசிய பாதுகாப்பே மிக முக்கியமானது சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட விஜயம் இலங்கை அரசாங்கத்துக்கு அசௌகரியத்தை தரக்கூடிய ஒன்றாக மாறுமோ என்ற ஒருவித நிச்சயமற்ற நிலை காணப்பட்டது. கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தேசியவாத அரசியல்வாதிகளும் பெரும்பான்மையினச் சமூகத்தவர்கள் மத்தியில் உள்ள தேசியவாத சிவில் சமூகத்தலைவர்களும் மோடியின் வருகைக்கு முன்னதாக அழைப்பு விடுத்திருந்தனர். இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராகவே இந்த அழைப்பு என்றும் அவர்கள் கூறியிருந்தனர். பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்…
-
- 0 replies
- 310 views
-
-
மெல்ல சாகிறதா பொறிமுறை ? ரொபட் அன்டனி தற்போதைய நிலையில் தென்னிலங்கையில் உருவெடுத்துள்ள அரசியல் அதிகாரப் போராட்டமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது. நியாயமான கேள்வியாகவே இது அமைந்துள்ளது. தென்னிலங்கையில் அரசியல்வாதிகளும் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த பொறுப்புக்கூறல் விவகாரத்தை ஒரு சுயலாப அரசியல் கருவியாக பயன்படுத்துவதை காண முடிகிறது. நாட்டில் இடம்பெறும் அரசியல் நகர்வுகள், அரசியல் காய்நகர்த்தல்களை பார்க்கும் போது எங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் செயற…
-
- 0 replies
- 310 views
-
-
‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல் இலங்கையின் அரசியல் கலாசாரமென்பது, முற்றுமுழுதாக ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தைக் கொண்டது என, யாரும் கூறிவிட முடியாது. நேரடியான இனவாதமும் மதவாதமும் பாலின ஒதுக்குதலும் காணப்படாவிட்டாலும், சுதந்திரம் பெறப்பட்ட பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், இவை அனைத்தையும் கண்டே வந்திருக்கிறோம். இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், சிறுபான்மைகளை அல்லது சிறுபான்மைகள் என நாம் கருதுகின்ற சில பிரிவுகளை ஒதுக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது என்பது, வருத்தத்துக்குரியதாகவே இருக்கிறது. முன்னைய அனைத்துத் தேர்தல்களையும் விட, இத்தேர்தல் மிக வேறானது என்பது, திரும்பத் திரும்பக் கூறப்பட…
-
- 0 replies
- 310 views
-
-
தேர்தலும் கூட்டணியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் விளைவாகவே, மாற்றுத் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என்ற தேவை தலையெடுத்திருந்தது. அந்த வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உதயமாகியது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் உள்ளடக்கிய மாற்று அரசியல் அணியொன்றின் உருவாக்கத்திற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இழுத்தடிக்கப்பட்டு வந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள ஓர் அரசியல் சூழலில், இந்த நடவடிக்கைகள் தமிழ் அரசியல் களத்தில் தளம்பலான ஒரு நிலைமையையே உருவாக்கியிருக்கின்றன. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மட்டுமல்லாமல், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊட…
-
- 0 replies
- 310 views
-
-
ஈழம் பெற்றுத் தருவதாக வலம்வரப் போகின்றார்கள் நாட்டின் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே நாடு, இன்னொரு தேர்தல் திருவிழாவைக் கொண்டாத் தயாராகிறது. இந்நாட்களில் இருந்து பெப்ரவரி மாதத் தேர்தல் திகதி வரையிலான இரண்டு மாதங்கள், அரசியல்வாதிகள் மக்களை நோக்கிப் படை எடுக்க, அணி திரளப் போகின்றார்கள். மக்களை “நேசிக்க”த் தொடங்கப் போகின்றனர். தெற்கில், மைத்திரி எதிர் பலப்பரீட்சை களமாக உள்ளூராட்சித் தேர்தல் அமையப் போகின்றது. அதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு, தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவைப்பாட்டில் உள்ளது…
-
- 0 replies
- 310 views
-
-
தேர்தல் அதிர்வலைகளும் பிரெக்சிற்றும் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில், யாதொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையை பெறாத நிலையில், பழைமைவாதக் கட்சியை சார்ந்த தற்போதைய பிரதமர் தெரேசா மே, தனது கட்சி சார்பான பிரசாரங்களில் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுதல் தொடர்பான கடும்போக்கானது, கைவிடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறித்த தேர்தல் முடிவானது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான ஒப்பந்தம், ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. அண்மையில், ஐக்கிய இராச்சிய உச்ச நீதிமன்றமானது, ஐரோப்பிய ஒன்றியத்…
-
- 0 replies
- 310 views
-
-
ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர்- மல்கம் ரஞ்சித் ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்க எவ்வாறு திட்டமிடப்பட்டது தாக்குதலை தடுக்க முயன்றவர்கள் எவ்வாறு தடுக்கப்பட்டனர் என்பது உட்பட பல விடயங்கள் விரைவில் தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார். உண்மை வெளிவருவதை எவராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஆண்டவன் உண்மையை வெளிப்படுத்துவதை எவராலும் தடுக்க முடியாது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில சக…
-
- 0 replies
- 310 views
-
-
கடந்து செல்லும் கொந்தளிப்பான ஆண்டு - நிலாந்தன் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் பல மாற்றங்கள் ஒன்றாக நிகழ்ந்து மிகக் கொந்தளிப்பான ஒரு ஆண்டு நம்மைக் கடந்து போகிறது. இந்த ஆண்டில்தான் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முப்பொழுதும் ஏற்பட்டிராத ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு எதிராக சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள். அரகலய என்று அழைக்கப்பட்ட அப்போராட்டமானது உலகத்தின் கவனத்தை ஈர்க்குமளவுக்கு படைப்புத்திறன் மிக்கதாக காணப்பட்டது. போரை வெற்றி கொண்ட ஒரு குடும்பம் நாட்டின் கருவூலத்தை திருடிவிட்டது என்று சிங்கள மக்கள் குற்றம்சாட்டினார். போராட்டத்தை ஒடுக்குவதற்கு அக்…
-
- 0 replies
- 310 views
-
-
ஜெனீவா அமர்வுக்கு முதல் நாள் அநுராதபுரம் சிறைச்சாலையில் நடந்ததென்ன? –போர்க்குற்ற விசாரணையைத்தான் உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்களை ஜெனீவா நம்புகின்றது– நம்புவதுபோலக் காண்பித்துச் சேர்ந்து விளையாடுவது போலவும் தெரிகிறது. அதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் உடந்தையாகின்றன — -அ.நிக்ஸன்- வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது…
-
- 0 replies
- 310 views
-
-
நன்றி - யூரூப்
-
- 0 replies
- 310 views
-
-
பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 29 ஆகஸ்ட் 2025 இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், 6 தடவை பிரதமர் பதவியை வகித்தவரும், ஒரு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க அவ்வப்போது சர்ச்சைகளை எதிர்நோக்கி வருவதை கடந்த பல பத்தாண்டுகளாகவே காணக்கூடியதாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தன்வசம் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உள்ளக பிரச்னைகள் முதல் தேசிய அரசியலில் பிரச்னை வரை அவ்வப்போது பல்வேறு சவால்மிகுந்த பிரச்னைகளை எதிர்நோக்கி வந்துள்ளார். தனது கட்சியின் உள்ளக பிரச்னைகள், கூட்டணி கட்சிகளின் பிரச்னைகள் என சந்தித்து வந்த ரணில் விக்ரமசி…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
இலங்கையை இறுக்கும் இனவாதம் இந்நாட்டின் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லெண்ணம் கொண்ட சகல மக்களும் சகவாழ்வுடன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றனர். ஆனால், இனவாதமும் மதவாதமும் இம்மக்களின் சமாதான, சகவாழ்வுக்குத் தொடர்ச்சியாக சவால் விடுத்துக்கொண்டிருப்பதை வரலாற்று நெடுகிலும் அவதானிக்க முடிகிறது. அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ளுவதை இலக்காகக் கொண்டு செயற்படும் கடும்போக்காளர்கள் முஸ்லிம்களின் மத, கலை, கலாசார, பண்பாட்டு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களில் போலியான குற்றச்சாட்டுக்களை தாக்குதல்களை மேற்கொணடு வர…
-
- 0 replies
- 309 views
-
-
ஐ.நா. மனித உரிமை சபையின் 50வது கூட்டத் தொடர் நடந்ததும் நடக்கப்போவதும் ச. வி. கிருபாகரன் –பிரான்ஸ் ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவின் தொடர்ச்சியாக, 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமை சபை, தற்பொழுது தனது 50ஆவது கூட்டத் தொடரை நடத்தியுள்ளது. இக் கூட்டத் தொடரிற்கு ஆஜன்ரினாவின் ஐ.நா.பிரதிநிதி, . பெடிறக்கோ வீலீகஸ், பிராந்திய சுற்றின் அடிப்படையில், 2022ஆம் ஆண்டிற்கான தலைவராக கடமையாற்றுகிறார். ஐ.நா.மனித உரிமை சபை என்றவுடன், வடக்கு, கிழக்கு வாழ் தமிழீழ மக்களிற்கு, விசேடமாக பாதிக்கப்பட்ட மக்கள் இச் சபையின் செயற்பாடுகள் பற்றி, தினமும் மிகவும் அக்கறையாக உன்னிப்பாக அவதானமாக…
-
- 0 replies
- 309 views
-
-
விடுதலையும் சுயநிர்ணயமும் தேசிய இனமொன்றின் அடிப்படை உரிமைகள் தேசிய இனங்களின் பண்பாட்டுக் கூறுகள், பழக்க வழக்கங்கள், விளையாட்டுக்கள், வழிபாட்டு முறைகளின் பின்னணியிலே, அந்த இனக் குழுமங்களின் தொன்மமும், மரபும் தொடர்ந்து பேணப் படுவது மட்டுமல்லாமல், இன அழிப்புக்கு எதிரான தொடர் பொறிமுறைகள் உற்பத்தி செய்யப்பட்டும் கொண்டிருக்கும். தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு,தமிழர் அவலங்கள் என்ற வகையிலே ஆயிரக்கணக்கான அவலங்களையும் இன்னல்களையும் தமிழர்கள் பல…
-
- 0 replies
- 309 views
-
-
அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக, பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்திருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் குழப்பங்கள் குறித்து, ஆராய்வதற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை விசேட சபை அமர்வொன்று நடாத்தப்பட்டது. அங்கு பேசும் போதே, அஸ்மின் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். கூட்டமைப்புக்குள் இருக்கும், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான அணியில் அங்கம் வகிப்பவர்களில் அஸ்மினும் ஒருவர். அ…
-
- 0 replies
- 309 views
-
-
விடிவு வராது: இப்போதைக்கு ‘வீடியோ’தான் தெய்வீகன் மட்டக்களப்பில் கிராம சேகவர் ஒருவருக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான - இனவாத தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் பரவலாக உலாவுகிறது. “தமிழர்கள் எல்லோரும் புலிகள்தான்; உங்கள் எல்லோரையும் கொன்றொழிப்பேன்” என்று அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் குழறும் அந்த மதகுருவின் பேச்சுக்கு எந்த மறுபேச்சும் இல்லாமல் அந்தக் கிராமசேவகர் சிலைபோல நிற்கிறார். தொடர்ந்தும் தனது குரூரமான முகபாவங்களால் திரட்டிய பல கெட்டவார்த்தைகளை அந்தக் கிராம சேவகரின் மீது கொட்டித்தீர்க்கிறார் அந்தப் பிக்கு. அந்தக் கிராமசேவகர் எந்தப் பதிலும்…
-
- 0 replies
- 309 views
-
-
எதைச் சொல்ல? sudumanal இஸ்ரேல்- ஈரான் கடந்த 13 ம் தேதி முதன்முதலில் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை இஸ்ரேல் தனித்து எடுத்த முடிவு போல ஊடகங்கள் சித்தரித்திருந்தன. அமெரிக்காவுக்கு தெரியாமல் இஸ்ரேலின் எந்த அணுவும் நகராது என்ற உண்மையை அவைகள் செய்திகளுள் புதைத்து விட்டன. இத் தாக்குதலின் மையப் பாத்திரத்தை அமெரிக்காவே வகித்தது என அரசியல் அறிஞரான ஜெப்ரி ஸாக்ஸ் உட்பட்ட புத்திஜீவிகள் சொல்கிறார்கள். இத் தாக்குதலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே அமெரிக்கா 300 ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு கொடுத்திருந்தது என “வோல் ஸ்றீற் ஜேர்ணல்” செய்தி வெளியிட்டிருந்தது. உக்ரைனுக்கு தருவதாக பைடன் காலத்தில் ஒப்புக்கொண்ட 20000 ட்ரோன்களை ஒருசில வாரங்களுக்கு முன்னர் ட்றம்ப் மத்திய கிழக்குக்கு மடைமாற்றிவிட்ட…
-
-
- 1 reply
- 309 views
-
-
ஈழத்தமிழர் இறைமை மீட்புப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றின் முக்கிய கட்டங்கள்: வரலாற்றைத் திரிபுபடுத்தும் ஈழத்தமிழ் அரசியல் வாதிகளுக்காக மீள் நினைவூட்டுகின்றோம்- அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் August 9, 2024 ஈழத்தமிழர்களின் பிரித்தானிய காலனித்துவத் திடம் 1796 முதல் 1948 வரை 152 ஆண்டுகள் நேரடியாகவும் 1972 வரை 176 ஆண்டுகள் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) அரசியலமைப்புப் பாதுகாப்பு மூலம் பிரித்தானிய முடிக்குரிய அரசுடனான பகிர்வுடனும் இருந்து வந்த ஈழத் தமிழர்களின் இறைமையைச் சிறிமாவோ பண்டாரநயாக்காவைப் பிரதமராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடதுசாரிக்கட்சிகள் கூட்டணி சோல்பரி அரசியலமைப்பையும் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலின் கோடீஸ்வரன் வழக்குத் தீர்ப்பையும் வன்…
-
- 0 replies
- 309 views
-
-
வட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் என்றைக்கும் இல்லாதளவுக்கு அடிதடி, மிரட்டல், ஆள் பிடித்தல், சாதி- மத அடையாள அரசியல் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கின்ற நிலையில், இன்னும் என்னென்ன அடாவடிக் காட்சிகளைப் பார்க்க வேண்டியிருக்குமோ என்கிற அச்சம் எழுகின்றது. தேர்தல் அரசியல் எப்போதுமே வெற்றியைப் பிரதானமாகக் கொண்டதுதான். எனினும், வெற்றியை அடைவதற்கான வழிமுறைகள் சார்ந்து அடிப்படைத் தார்மீகத்தைக் கட்சிகளும், வேட்பாளர்களும் அனுசரித்து நடக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்…
-
- 0 replies
- 309 views
-
-
ராஜபக்ஷர்களின் எதிர்கால அரசியல் வியூகங்கள் Veeragathy Thanabalasingham on May 25, 2023 Photo, AFP, THE HINDU மூன்றரை வருடங்களுக்கு முன்னர் ராஜபக்ஷர்கள் மீண்டும் பதவிக்கு வந்தபோது இலங்கையின் ஆட்சியதிகாரத்தில் இருந்து தங்களது குடும்பத்தை நீண்ட காலத்துக்கு அசைக்கமுடியாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர்களின் அதிவிசுவாசிகள் குறைந்தது ஒரு இருபது வருடங்களுக்காவது தங்களது அரசியல் எசமான்கள் ஆட்சியில் இருப்பார்கள் என்று பேசினார்கள். தங்களில் யார் யார் அடுத்தடுத்து ஜனாதிபதியாக வருவது என்று ராஜபக்ஷர்கள் ஒரு பட்டியல் போட்டு செயற்பட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை மூத்த மகன் நாமல் ரா…
-
- 0 replies
- 309 views
-
-
பொது வேட்பாளர் வந்து விட்டார் - நிலாந்தன் தமிழ்ப்பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்து விட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த கேள்வியை முன்வைத்து பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பினால் ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமாக உருப்பெருக்கிக் காட்டப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன ? தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அடக்கப்படும் அமைப்புக்கான முதலாவது கருநிலைச் சந்திப்பு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் இடம் பெற்றது. அதன் பின் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜூன் மாதம் 2…
-
- 0 replies
- 308 views
-
-
தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இணையப் பாதுகாப்பு விதிகளும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபும் இன ஒடுக்கலுக்கு மேலும் வழி வகுக்கும் தம் மீதான விமர்சனங்களைத் தடுக்கும் நோக்கில் அமைதிகாக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணையங்கள் ஊடாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதாகக் கூறிக் கொண்டு அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள இணையவழிப் பாதுகாப்பு எனப்படும் "நிகழ் நிலைக்காப்புச் சட்ட வரைபு" (Online Safety Bill ) அரசியல் - பொருளாதார நோக்கில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் வலுப் பெற்றுள்…
-
- 0 replies
- 308 views
-
-
இறுதி யுத்தகாலத்தில் – பலர் காணாமல்போனவேளை- பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரை காணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கு நியமிப்பதா? மனித உரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் கடும் எதிர்ப்பு இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரை காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் உறுப்பினராக அரசாங்கம் நியமித்துள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இலங்கையில் யுத்தகாலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களிற்கு இழப்பீட்டை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட நிலைமாற்று நீதி பொறிமுற…
-
- 0 replies
- 308 views
-
-
மேன்மேலும் வித்தியாக்கள் வேண்டாமே புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு, ட்ரயல் அட் பார் முறையில் நடத்தப்பட்டு, நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் என நீதிமன்றம் இனம்கண்ட அனைவருக்கும், உச்சபட்ச தண்டனையை வழங்கியிருப்பதாக, மன்று குறிப்பிட்டிருக்கிறது. தீர்ப்பின் சாதக, பாதகங்களை ஆராய்வது, இந்தப் பத்தியின் நோக்கம் கிடையாது. உலகமெங்கும் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கு, ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது என்ற வகையில், ஒரு வித நிம்மதி உணர்வைத் தருவதை மறுத்துவிட முடியாது. ஆனால்,…
-
- 0 replies
- 308 views
-