அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுத்தால், சீனாவிடம் போய் உதவி கேட்போம் என்று கடந்தவாரம் ஒரு மிரட்டலை விடுத்திருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் போதிய கவனம் எடுத்து, விசாரணைகளை நடத்தாத நிலையில், இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய பின்னணியில், அமெரிக்காவில் மேலதிகப் பயிற்சிக்காக இலங்கை இராணுவத் தலைமையகத்தால், தெரிவு செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு, அமெரிக்கா வீசா வழங்க மறுத்து விட்டது. 53வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றினார் என்பதற்காகவே, அவரை பயிற்சித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அமெரிக்க…
-
- 0 replies
- 585 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்றே முக்கால் ஆண்டுகளாகிவிட்டன. எனினும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திருப்பகரமான மாற்றங்கள் எதையும் அவதானிக்க முடியவில்லை. அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதைச் சுட்டிக்காட்டியிருந்தார். விடுதலைப்புலிகள் இல்லாத இன்றைய அரசியல் சூழலில் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள்விடுத்திருந்தார். இந்தியாவின் மாறாத இந்நிலைப்பாட்டிற்கு காரணம் என்ன? விடுதலைப்புலிகள் தான் காரணம் என்றால் அவர்கள் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றியிருந்திருக்க வேண்டும். எ…
-
- 10 replies
- 1.1k views
-
-
மீண்டும் வீர வசனங்களை அள்ளி வீச ஆரம்பித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன். அதாவது, தமிழ் தேசிய இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க சிங்களம் முயற்சிப்பதாகவும், தமிழ் மக்களின் பிறப்புரிமையை பறிக்க எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் சம்பந்தன் கூறிய வீர வசனங்கள் ஊடகங்களில் பரவலாக இடம் பிடித்திருந்தது. அதுமட்டுமல்லாது, எதிர்வரும் மாதங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாமென்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார். அமெரிக்காவின் வசந்த அழைப்பும், தென்னாபிரிக்கா பயணமும், மார்ச் மனித உரிமைப் பேரவையில் சிங்களத்திற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்பும் இணைந்து ,சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதுதான் சம்பந்தனின் கணிப்பு. இவ்வகைய…
-
- 0 replies
- 579 views
-
-
அண்மையில் முன்னாள் பிரதம நீதியரசர் திருமதி ஷிராணி பண்டாரநாயக்க அவர்களை பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தனது வன்மையான அதிருப்தியை வெளியிட்டது. அப்போது ஊடகவியலாளர்களால் இலங்கைக்கு வழங்கப்படும் அமெரிக்க உதவிகள் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிதியுதவிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டுக்கான நிதியுதவி தொடர்பாக அவ்விடயம் தற்சமயம் பரிசீலனையில் இருப்பதாகவும், அது தொடர்பாக இச்சமயத்தில் பதிலளிக்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது. இச்செய்தி வெளிவந்ததை அடுத்து இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் அமெரிக்கா இலங்கைக்கான உதவிகளை நிறுத்தினால் தங்களுக்கு சீனா உதவ…
-
- 2 replies
- 491 views
-
-
றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனைத் தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள். அவளின் முன்பாகவே ரிஸானாவின் உயிர் பிரிந்தது. மூதூர் றிஷானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது. இதுதொடர்பில் சாதக பாதக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. றிஷானாவை மீட்பதில் இலங்கை அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இறுதிக் கட்டத்தில் காத்திரமான பங்களிப்புக்களை அரசு மேற்கொள்ளவில்லை என்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சூழ் நிலையில், இலங்கையின் முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் நடந்து கொண்ட அசிரத்த…
-
- 1 reply
- 726 views
-
-
மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த பெரும்பான்மை மக்கள் வழங்கிய வாக்கின் மூலம் கிடைத்ததல்ல, ஏனைய கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்தி பணம் கொடுத்து வாங்கி பெற்றுக்கொண்ட பெரும்பான்மை தான் என்பது பலருக்கும் தெரிந்த விடயம் தான். மகிந்த ராசபக்ச தலைமையிலான ஆளும் கட்சி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்த பலரை வாங்கிக்கொண்டது மட்டுமன்றி அக்கட்சியை மிக மோசமாக பலவீனப்படுத்தி இருக்கிறது. பலவீனமான எதிர்க்கட்சி தலைவராக இன்று ரணில் விக்கிரமசிங்க உள்ளார். ஜே.வி.பியை ஒன்றல்ல மூன்றாக உடைத்து பலவீனப்படுத்தி சிலரை தன் பக்கம் மகிந்த அரசு இழுத்துக்கொண்டது. அரசாங்கத்து…
-
- 1 reply
- 670 views
-
-
மார்ச் மாதத்தை நோக்கிய எதிர்பார்ப்புக்கள் ஆரம்பித்திருக்கின்றன. ஐ.நாவில் தொடங்கவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வலுவாக மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்புகளும்,கோரிக்கைகளும் பல தளங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையும் அதனைக் கருத்தில் கொண்டு ராஜதந்திர நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது. முதற்கட்டமாக இந்தியா இலக்குவைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வார இறுதிப் பகுதியில் இந்தியா சென்ற இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியா அமைதியாக இருந்து கொண்டால் மட்டும் போதும் என்று கூறிவந்திருக்கின்றார். சர்வதேசத்தை கவனிக்கத் தங்களுக்குத் தெரியும் எனவும் சொல்லியிருக்கின்றார். இந்த நிலையில் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டது போல இம்முறை இலங்…
-
- 0 replies
- 478 views
-
-
அந்த ஒரு லட்சம் பேர் எங்கே? இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் உணர்ச்சி வசப்பட்டு இயங்குபவனும், அறிவு பூர்வமாகப் பேசுபவனும் ஒரே ஆளாக இருக்க வாய்ப்பில்லை என்பது நீண்ட நெடுங்கால நம்பிக்கை. உணர்ச்சி வசப்படுபவன் அறிவு பூர்வமாகப் பேச முடியாது என்றோ அறிவு பூர்வமாகப் பேசுபவன் உணர்ச்சி வசப்பட மாட்டான் என்றோ இதற்குப் பொருள். ஒரே ஆள் இரண்டாகவும் இருக்க முடியும் என்பதை ஒரு நூறாண்டுகளுக்கு முன் நிரூபித்தவன், எட்டயபுரத்துக் கவிஞன் சுப்பிரமணிய பாரதி. நூறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதை நிரூபித்தவன், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்! தன்னுடைய அபரிதமான கவிதைத் திறத்தாலும், கட்டுரை வன்மையாலும் ஒரு மகாகவியாக நிமிர்ந்து நின்றதோடு நின்றுவிடவில்லை பாரதி, “என்றெமது அன்னை கை விலங்குகள் போகும்…
-
- 0 replies
- 812 views
-
-
http://www.aljazeera.com/programmes/aljazeeraworld/2012/12/2012124114036244389.html Filmmakers: Alexandre Trudeau and Jonathan Pedneault On one side, there is the US in decline. On the other, there is an emerging China. In the middle, there are the maritime routes crucial for the export of oil, such as the Strait of Hormuz in the Arabian Gulf. Ocean-borne trade is the foundation of the global economy, and the Middle East is a hub for world shipping. The sea lanes in this region narrow into what are called choke points, which are keys to regional control. "After the war [World War II], the US was in a position essentially to work out ways to organi…
-
- 2 replies
- 727 views
-
-
ஆசியாவின் வல்லமை மிக்க கடற்படைகள் என்று பார்க்கும் போது சீனா ஐந்தாம் இடத்திலும் தென் கொரியா முதலாம் இடத்திலும் இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சரியமளிக்கும். ஆனால் இதைச் சொல்பவர் James Holmes என்பவர். James Holmes is professor of strategy at the Naval War College and senior fellow at the University of Georgia School of Public and International Affairs. James Holmesஇன் ஆசியக் கடல் வலிமை வரிசை 1. தென் கொரியா. 2 ஜப்பான். 3. ஐக்கிய அமெரிக்கா. 4. இந்தியா. 5. சீனா. உலகத்திலேயே ஒப்பில்லாத கடற்படை வலிமையைக் கொண்ட அமெரிக்காவின் கடற்படைப் பலம் ஆசியப் பிராந்தியத்தில் சீனாவினது கடற்படைப் பலத்திலும் வலிமை மிக்கது. கடற்படைகளின் செயற்படு திறனை வைத்துக் கொண்டு பேராசிரியர் James Holmes …
-
- 2 replies
- 1k views
-
-
உயர் நீதிமன்றத்தினால் பிழையானதாக தீர்ப்பளிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முடிவை அடிப்படையாகக் கொண்டு பிரதம நீதியரசர் நீக்கப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்க நீதித் துறையினருக்கு சட்டம் இடம் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது என்று நாம் கடந்த வாரம் கூறினோம். ஆனால் அவ்வாறு கேள்வி எதையும் எழுப்பாமலே சட்டத்துறை, புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை ஏற்றுக்கொண்டது. புதிதாக பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாக்க பதவி நீக்கம் செய்யப்படுமுன் சட்டத்தரணிகள் பலரும் நீதிபதிகளும் கூறி வந்தனர். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் அடிப்படையில் அது சரி தான். ஆனால் புதிய பிரதம ந…
-
- 0 replies
- 424 views
-
-
21ம் நூற்றாண்டுக்கான உலகத்தின் புதிய அச்சு உருவாக ஆரம்பித்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் பேசிய உரைக்கு அவருடைய கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பேரம் பேசல்களை ஆரம்பித்து, எதிர்வரும் 2015 ற்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதா இல்லையா என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தலாம் என்று கமரோன் நேற்று பிரிட்டன் பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். ஆனால் அதற்கு பதிலுரைத்த லிபரல் டெமக்கிரட்டி கட்சித் தலைவர் பிரிட்டன் மக்கள் பிரதமர் கருதுவது போல ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்கேற்பது குறித்து யாதொரு ஆர்வமும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளா…
-
- 2 replies
- 697 views
-
-
ஓபாமாவின் இரண்டாவது பதவிக் காலம் இலங்கைத் தீவிற்கு நல்லதா? கெட்டதா? - நிலாந்தன் 20 ஜனவரி 2013 பொதுவாக அமெரிக்க ஜனாதிபதிகள் தமது முதலாவது பதவிக் காலத்தின்போது இரண்டாவது பதவிக் காலத்தைக் குறிவைத்தே எதையும் செய்வார்கள். இரண்டாவது தடவையும் பதவிக்கு வரும் வரை ஆகக்கூடிய பட்சம் நிதானமாகவும், சர்ச்சைகளுக்குள் சிக்காமலும் நிலைமைகளைக் கையாள்வார்கள். ஆனால், இரண்டாவது பதவிக் காலத்தின்போது அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. ஏனெனில் மூன்றாவது பதவிக் காலம் அவர்களுக்கில்லை. ஒரு அமெரிக்கர் அடையக் கூடிய அதியுச்ச பதவி அது. அதற்கு மேல் ஒரு பதவி கிடைப்பதற்கில்லை. எனவே, இரண்டாவது பதவிக் காலத்தின்போது வரலாற்றில் தமது பெயரைப்பொறிக்கத்தக்க சாதனை எதையாவது செய்ய முயற்சிப்பா…
-
- 2 replies
- 623 views
-
-
அமெரிக்காவின் மூலோபாய அக்கறை யாரை மையப்படுத்தியது? - யதீந்திரா கடந்த பத்தியில் 2009 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட, இலங்கை: யுத்தத்திற்கு பின்னரான அமெரிக்க மூலோபாயத்தை மீள்சட்டகப்படுத்துதல் (SRI LANKA: RECHARTING U.S. STRATEGY AFTER THE WAR) என்னும் அறிக்கை குறித்து பார்த்திருந்தோம். இப்பத்தியில் அது குறித்து மேலும் சில விடயங்களை பார்ப்போம். அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் சுமார் 27 வருடங்களாக ஈடுபட்டுவரும் ஜோன் கெரி தற்போது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இப்பத்தி அவர் இலங்கை தொடர்பாக எத்தகைய அவதானத்தைக் கொண்டிருக்கின்றார் என்பதை விளங்கிக்கொள்ள முயல்கிறது. இலங்கையின் புவியியல் இட அமைவானது ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் ச…
-
- 1 reply
- 559 views
-
-
“இலங்கை தொடர்பான கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும், அவ்வாறு மாற்றினால் தான், இலங்கையின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று, கடந்த திங்கட்கிழமை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். எட்டாவது இந்திய - இலங்கை கூட்டுக்குழுக் கூட்டத்துக்காக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த திங்கட்கிழமை, புதுடெல்லிக்குப் புறப்பட்ட சமயத்தில் தான், இந்தப் பேட்டி ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது. மிக முக்கியமான தருணமொன்றில் தான், சுரேஷ் பிரேமச்சந்திரனின் இந்தக் கருத்து வெளியானது. பிரதமநீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னணி, அதுபற்றி இந…
-
- 0 replies
- 751 views
-
-
சிறீலங்காவில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக இவ் இனப்பிரச்சனை இருந்து வருகின்றது. காலத்திற்கு காலம் ஆட்சி பீடம் ஏறும் அரசுகளும் இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வை பெற்றுத்தருவோம் என்ற பகடையை உருட்டியே அரசியல் சிம்மாசனத்தில் அமர்ந்து பேச்சுவார்த்தைகள், சமாதான ஒப்பந்தங்கள், தெரிவுக்குழுக்கள் என பலவற்றை நிறுவி பல வருடங்களாக உலக நாடுகளையும் பேச்சுக்குச் சென்ற தமிழ் தலைவர்களையும் தமிழக்களையும் ஏமாற்றி வருகின்றமை உலகறிந்த உண்மை. இதனை உலக நாடுகளும் தமிழர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக தமிழர்களின் குருதி படிந்துள்ள இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் காலங்கள் வீணடிக்கப்பட்டு, வளர்ந்து வரும் இளைய சமுதாயங்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு, சமுதாயத்தில் இனரீதியான ஒரு ஒ…
-
- 0 replies
- 448 views
-
-
அரசியல் அலசல் 'வெளிச்சம்' Velicham Jan 17,2013 Part 1
-
- 1 reply
- 584 views
-
-
வழமையாக செய்திகள், வார்த்தைகள் மூலமோ காட்சிகள் மூலமோ எம்மை வந்தடைவதுண்டு. அவ்வாறே ஓவியங்கள், புகைப்படங்கள் போன்றவையும் செய்தி சொல்வனவாக விளங்குகின்றன. சில சமயங்களில் ஓவியங்கள், புகைப்படங்கள் என்பன தமது தளத்துக்கு வெளியே விரிவடைந்து பல செய்திகளை உணர்த்துவதுண்டு. அவ்வகையில் அண்மையில் சண்டேலீடர் ஆங்கில இதழில் வெளிவந்த ஒரு புகைப்படம் தனது காட்சிப் படிமங்களுக்கு வெளியே பல செய்திகளை உணர்த்துவதாகவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆசனத்தில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றிச் சில அமைச்சர்கள் நின்றிருக்க அமைச்சர் மேர்வின் சில்வா ஜனாதிபதியின் காலடியில் நிலத்தில் பணிவுடன் அமர்ந்திருக்கிறார். ஜனாதிபதியின் அன்புக்குரிய அவரின் விசுவாசமுள்ள ஜீவனாக அப்படத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா காணப…
-
- 0 replies
- 591 views
-
-
தாக்குதலுக்கான திட்டம் மிக இரகசியமானது. தாக்குதல் இலக்கு, நேரம் என்பனவெல்லாம் ஒன்றுக்கு ஓராயிரம் முறை பரிசீலனையின் பின்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தன. இரத்தம் சிந்தாத போர் அது இந்தத் தாக்குதலை எவரும் எதிர்பார்த்திருக்கப் போவதில்லை. சில வேளைகளில் இதன் விளைவுகளை நீண்ட நாள்களுக்குப் பின்னரே எதிராளிகள் உணரக்கூடும். திட்டமிட்டபடி தளத்துக்குள் ஊடுருவல் நிகழ்ந்தாயிற்று. நினைத்ததை விடவும் அவர்களின் உட்புகுதல் மிக இலகுவாக நடந்தேறியது. எவையெவையெல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதோ, அவையவையெல்லாம் சிதைக்கப்பட்டன. எல்லாமே வழித்துத் துடைத்தாயிற்று. தளத்துக்கான பங்காளிகள் யார்?, யார்யாரெல்லாம் வந்துபோகிறார்கள்? ஏன் வருகிறார்கள்? அவர்களின் பின்புலம் என்ன? எல்லாத் தகவல…
-
- 0 replies
- 792 views
-
-
விடுதலைப் போராட்டம் ஒன்று தோற்கடிக்கப்பட்டால் அந்த குழு சார்ந்த மக்களுடைய அபிலாசைகள், கோரிக்கைகள் வென்றவர்களால் செவிசாய்க்கப்படாது. இது மன்னர் காலங்களில் இருந்தே கடைப்பிடித்து வந்த ஒரு நடைமுறை. ஆனால் வெற்றிபெற்ற கில்லாடி ஆட்சியாளர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் தங்களது செயற்றிட்டங்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுத்துச்செல்வார்கள். ஆனால் அந்த அபிவிருத்தி திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு சிறிய புள்ளியாகவே இருப்பார்கள். அவர்களுடைய வீடுகள் சாதாரணமானவையாகவோ ஓலைக்குடிசைகளாகவோ அல்லது தறப்பாளால் மூடப்பட்டவையாகவோ அல்லது தகரங்களினால் வேயப்பட்டதாகவே காணப்படும். ஆனால் அவர்களுடைய குடிசைகளை சூழ இருந்த சாதாரண செம்மண் பாதைகள் பிரதான பாதைகளாக அபிவிருத்தி அடையும். புதிய ப…
-
- 0 replies
- 512 views
-
-
"பரம்பரை நோயால் அவதிப்படும் இவருக்கு வாழ்நாள் முழுவதும் 60000 ரீச்மார்க்கள் செலவாகிறது.மக்களே இது உங்கள் பணம்."நாசிகளின் பிரச்சார போஸ்டர் 1938 உலகில் பெரும்பாலான மக்கள் ஹிட்லர் யூதர்களை மட்டும்தான் படுகொலை செய்ததாக நினைக்கின்றனர்.ஆனால் ஹிட்லரின் நாசிப்படைகள் தங்களின் கொலைவெறியை யூதர்களை கொல்வதன் மூலம் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை.அவர்களின் கொலைவெறியை தனித்துக்கொள்ள அவர்களினால் கொல்லப்பட்ட இன்னொரு மனிதக் கூட்டம் தான் உடல் ஊனமுற்றோர்கள் மற்றும் பரம்பரை நோயால் அவதிப்படுபவர்கள். நாசிகளின் இந்த கொடுமையான நிகழ்ச்சித் திட்டம் T4 என்ற குறியீட்டுப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.ஹிட்லரின் நாசி கட்சியால் திட்டமிடப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படை குறிக்கோள் " இனத்தை சுத்தப்படு…
-
- 0 replies
- 836 views
-
-
மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள பாத்திரங் களில் பல்வகை குண இயல்புகள் கொண்ட பாத்திரங்கள் நிறையவே உண்டு. அதில், வீஷ்மர் என்ற பாத்திரம் மிகவும் மரி யாதைக்குரியதாக - கடும் சந்நியாசத்திற்குரிய தாக - தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற் றியதாக - ஆட்சி தனக்குரியதென்று தெரிந்தும் அது எனக்கு வேண்டாம் என்று பதவியை உதறித் தள்ளிய உத்தம குணமுடையதாக காண முடியும். பிதாமகர் என்று போற்றப்பட்ட வீஷ்மர் குரு ஷேத் திரப் போரில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது நம் நினைப்பு. மகாபாரதக் கதையை கூறுவோரிடம் ஐயா! பிதாமகர் வீஷ்மர் குருஷேத்திரப் போரில் உயிர் துறந் தது ஏன்? அதுவும் தனது சிஷ்யனின் கையால் உயிர் துறந்தார் அல்லவா? அப்படியாக ஒரு அவல நிலை அந்தப் பெருமகனாருக்கு ஏற்பட்டது எதற்காக? இப்படியயல்லாம…
-
- 4 replies
- 7.6k views
-
-
உலகின் மிகப் பெரிய மனிதநேயப் பணியகங்களில் ஒன்றான ‘செஞ்சோலை’யை தமிழீழத்தில் ஆரம்பித்தவர் தமிழீழத் தேசியத் தலைவர். மானுட தர்மம் என்னவென்பது அங்கு போதிக்கப்படவில்லை. செயலுருவம் பெற்றிருந்தது. உலகமே பார்த்து அதிசயித்த அரும்பெரும் தலைவரின் மடிமீது அமர்ந்து குலுங்கிச் சிரிக்கும்போது உலகமே தம்வசமிருப்பதாக செஞ்சோலை செல்வங்கள் நினைப்பதுண்டு. குழந்தைகளோடு குழந்தையாக சிரித்து மகிழும் ஒப்பற்ற தலைவரின் மனிதத்தைப் புரிந்து புல்லரித்துப் போனவர் ஏராளம். அது ஒரு வரலாற்றுப் பதிவு. காலச் சக்கரத்தின் கண்ணாடி. அதில் புலம்பெயர் தமிழர்களுக்கும் சிறியதொரு வகிபாகம் உண்டு. செஞ்சோலை வளர்ச்சிக்காக தலைவர் திட்டங்களை முன்வைத்தபோது அவற்றிற்கு உதவியவர்கள் அவர்கள். ஆனால், அந்தப் புனிதப் பயணத்…
-
- 1 reply
- 766 views
-
-
பிரதம நீதியரசருக்கே அரசிடமிருந்து நீதி கிடைக்காதபோது தமிழருக்கு எப்படி நீதி கிடைக்கும்? முத்துக்குமார் பிரதம நீதியரசர் விவகாரத்தின் முதலாம் அத்தியாயம் முடிவிற்கு வந்துவிட்டது. புதிய நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஒரு பெயருக்கு இருக்கின்ற பாராளுமன்ற பேரவையும் அதற்கான சம்மதத்தை வழங்கிவிட்டது. பேரவையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களான ரணில் விக்கிரமசிங்காவும், சுவாமிநாதனும் கூட்டத்திற்குச் செல்லாமலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுபோல பெரும்பான்மை ஆதரவுடன் சம்மதம் வழங்கப்பட்டுவிட்டது. 18வது திருத்தத்தின்படி பாராளுமன்றப் பேரவைக்கு அதிகாரம் எதுவும் கிடையாது. வெறும் அவதானிப்புக்களைக் கூறுவது மட்டும்தான் அதன் கடமை. எதிர்க்கட்சி உறுப்…
-
- 0 replies
- 568 views
-
-
புலிகளை வெற்றி கொள்ள உதவியது புலனாய்வு ஒருங்கிணைப்பே – சிறப்பு அதிரடிப்படை கட்டளைஅதிகாரி [ ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2013, 00:39 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா வெற்றி பெறுவதற்கு, அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டது முக்கியமானதொரு காரணம் என்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான நிமால் லெகே தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில், எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துப் பெற்றுக் கொள்ளப்பட்ட மிகப் பெரிய வெற்றியில் புலனாய்வு முக்கிய பங்கை வகித்திருந்தது. இந்த விடயத்தில் சிறிலங்கா பாதுகாப்…
-
- 13 replies
- 875 views
-