அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
கோட்டாவின் இந்தியாவை கையாளும் வியூகம் - யதீந்திரா இந்தக் கட்டுரை தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு செய்தியை காண முடிந்தது. அதாவது, இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்தமொறகொடவின் பெயர் உயர் பதவிகளை தீர்மானிக்கும் பாராளுமன்ற குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக அந்தச் செய்தி அமைந்திருந்தது. இது பல கேள்விகளை முன்னிறுத்துகின்றது. அண்மைக்காலமாக 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டுமென்னும் குரல்கள் தென்னிலங்கை அரசியலை அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற சூழலில், இந்தச் செய்தி அதிக கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால், 13வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்னும் குரலை …
-
- 0 replies
- 596 views
-
-
எனது மகனை கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டிற்கு சென்று மிரட்டினார்கள் – மனம் திறந்தார் மகிந்த தேசப்பிரிய Rajeevan Arasaratnam November 7, 2020 எனது மகனை கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டிற்கு சென்று மிரட்டினார்கள் – மனம் திறந்தார் மகிந்த தேசப்பிரிய2020-11-07T11:48:24+05:30அரசியல் களம் FacebookTwitterMore 1988 தேர்தலின் போது வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டால் என்னை சுட்டுக்கொல்லப்போவதாக அச்சுறுத்தினார்கள் என தேர்தல் ஆணையாளர் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நான் அவர்களின் உத்தரவினை ஏற்றுக்கொள்ளாவிட்டால் எனது இரண்டு வயது மகனை கொலை செய்துவிடுவோம் என எனது வீட்டிற்கு சென்று மிரட்டினார்கள், …
-
- 0 replies
- 661 views
-
-
தமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்களதேசத்தையும் அழிக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர்களின் உரிமையைகளை மறுதலிப்பதற்காக நீங்கள் இந்த பூகோள அரசியல் போட்டியை கையாளும் தவறான அணுகுமுறையானது, எந்த மக்களின் பெருமிதத்திற்காக நீங்கள் இதை செய்கிறீர்களோ அதே உங்களின் சொந்தமக்களின் இறைமையையும் நீங்கள் அழித்துக்கொள்கிறீர்க்ள் என்பதை மீண்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். என்று நீஙக்ள் இனவாதத்தை கைவிட்டு, நீஙக்ள் நாட்டின் தென்பகுதியில் நீங்கள் கொண்டிருக்கும் உரித்துகளை போலவே தமிழ் மக்களும் வடக்கு கிழக்கில் அனைத்து உரித்துகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுகொண்டு இணைந்து செய்ற்பட முன்வருகிறீர்களோ, அன்றுதான் , இல…
-
- 0 replies
- 374 views
-
-
அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்களுக்கு ஆலோசனை வழங்கிய கோட்டபாயவின் சிங்களப் பேராசிரிய நண்பர்: இலங்கை அரசு விடுதலைப் புலிகளை ஐ.நா. பயங்கரவாத பட்டியலில் சேர்க்கவேண்டும் என்கிறார் குணரட்ணா தீவுக்குள் புலிகளைப் போற்றுவோருக்கு புனர்வாழ்வு கொடு, புலம்பெயர் தமிழர்களைப் பட்டியலிடு என்றும் மதியுரை! ஜே.வி.பியின் முடக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைப் போல் அல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளுருவாக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக அவ்வியக்கத்தின் தலைவர் வே பிரபாகரன் அவர்களைப் போற்றுகின்ற மரபு புலம்பெயர் தமிழர்களாலும் அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படுவதால், இலங்கைத் தீவுக்குள்ளும் அடுத்த தலைமுறையின…
-
- 0 replies
- 639 views
-
-
கொரோனாவுடன் வாழப்பழகச் சொல்லும் தலைமைத்துவமும் குடும்பத்துடன் வாழ விடாத வடக்கு சுகாதாரத் துறையும் தாயகன் இலங்கையில் கொரோனாவின் ஆட்டத்தினால் பலியானோர் எண்ணிக்கை 200 ஐ நெருங்கி வரும் நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40000ஐயும் தாண்டி விட்டது . கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் காலடி எடுத்து வைத்த சீன நாட்டுக் கொரோனாவையும் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் வந்த ஐரோப்பிய கொரோனாவையும் எதிர்த்து நின்று இலங்கை அரசும் சுகாதாரத்துறையும் போராடிக் களைத்து இறுதியில் நாட்டின் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவே ” கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் மக்களே ” என அறிவித்தும் விட்டார். அதனால் தற்போது இலங்கையில் ”தாய் வீட்டுக்கு செல்லும் பிள்ளை” போல் கொரோ…
-
- 0 replies
- 419 views
-
-
ஒபாமா கொடுத்துச்சென்ற இன்னொரு செய்தி! அதிபர் பதவிக்காலம் முடித்து விடைபெறும் தருணத்தில் குறிப்பிடத்தகுந்த ஒரு உத்தரவைப் பிறப்பித்துச் சென்றிருக்கிறார் ஒபாமா. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை ஆவணங்களை 'விக்கிலீக்ஸ்' இணையதளத்துக்குக் கசியவிட்ட செல்ஸி மேனிங்குக்கு விதிக்கப்பட்டிருந்த 35 ஆண்டு கால சிறைத் தண்டனையைக் குறைக்கும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் ஒபாமா. ப்ராட்லி எட்வர்ட் மேனிங் எனும் இயற்பெயர் கொண்ட செல்ஸி, ஹார்மோன் கோளாறுகள் காரணமாகத் திருநங்கையாக மாறியவர். அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொள்பவர். ஆண்களின் சிறையில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றவர் செல்ஸி. ஏற் கெனவே, ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கும் அவர்…
-
- 0 replies
- 460 views
-
-
வண் டே மாஸ்க்கும் சமூக விழிப்பும்! - நிலாந்தன். June 6, 2021 இந்தியாவில் வசிக்கும் ஓர் ஈழத்தமிழர் கூறினார் கொரோன வைரஸ் எனப்படுவது எங்களுடைய முதுகில் படிந்திருக்கும் அழுக்கை போன்றது. அது எங்களோடேயே இருக்கிறது என்று. நடப்பு நிலவரங்களை வைத்து பார்த்தால் அது சரி என்றே தோன்றுகிறது. சோதிக்கப்படாதவரை எல்லாருமே சுகதேகிகள்தான். சோதித்தால்தான் தெரியும் யாரெல்லாம் குணக்குறியற்ற நோய்க்காவிகள் என்று. கிளிநொச்சியில் அண்மையில் ஒரு பதினைந்து வயது பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த பின்தான் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்படித்தான் இப்போது இயல்பாக இறக்கும் பலருக்கும் இறந்த பின்னர்தான் அவர்களுக்கு தொற்று இருப்பது தெரியவருகிறது. அப்படி எ…
-
- 0 replies
- 529 views
-
-
இணைப்போமா? இணைவோமா? 238 Views ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் 191 உறுப்புரிமை வாக்குகளில் 143 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இவருடன் போட்டியிட்ட ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சலாமை ரசோலுக்கு 48 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இத்தேர்தல் உலக நாடுகளின் தலைமை, ஆசியா சார்ந்ததாக அதுவும் சீனப் பின்னணியில் கட்டமைக்கப்படுகிறது என்பதை மீளவும் தெளிவாக்கியுள்ளது. இந்துமாகடலின் 1195 தீவுக் கூட்டங்களில், மாலைதீவும் இலங்கையைப் போன்று சீனாவுடன் அதனுடைய கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தில் முக்கியமான ஒரு தீவாக, வரலாற்…
-
- 0 replies
- 772 views
-
-
உண்மையும் உணர்வுமுனைப்பும் அரசியலும்: உண்மைகளாகும் பொய்கள் என்.கே. அஷோக்பரன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட, உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான மைக்கல் ஒண்டாச்சி, தன்னுடைய நூலொன்றில், ‘இலங்கையில் சிறப்பாகச் சொல்லப்பட்ட பொய் ஒன்று, ஆயிரம் உண்மைத் தரவுகளுக்குச் சமன்’ என்று குறிப்பிடுகிறார். இதை யார் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, இலங்கைத் தீவின் அரசியல்வாதிகள், நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தை, ‘உண்மையைக் கடந்த, உணர்வுமுனைப்புக் காலகட்டம்’ (Post truth era) எனச் சிலர் விளிக்கிறார்கள். உணர்வுகள், தனிப்பட்ட கருத்துகளுக்கு, உண்மைகளை விட முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை இது சுட்டி நிற்கிறது. சமூக ஊடகப் பயன்பாடு, இந்த உண்மையைக் கடந்த உணர்வும…
-
- 0 replies
- 673 views
-
-
இந்தியக் கடனினால் சமாளிக்க முடியுமா? நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலையேற்றம், டொலர் பற்றாக்குறை காரணமாக, நாட்டின் பொருளாதாரம் அதலா பாதளத்துக்குள் சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில்தான், நாட்டை மீட்டெடுப்பதற்காக. இந்திய கடன் வழங்கியுள்ளது. மிக மோசமான அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில், இலங்கைக்கு மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக இந்தியா 1 பில்லியன் டொலரை கடனாக வழங்கியுள்ளது. நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா வழங்கிய இந்த கடன் வசதி இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றாலும், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க முடியுமா? என்பதை பற்றியே சிந்திக்கவேண்டும். நிதியமைச்சர் பசி…
-
- 0 replies
- 354 views
-
-
காத்திருக்கும் பாரியதோர் அரசியல், பொருளாதார நெருக்கடி எம்.எஸ்.எம். ஐயூப் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அல்லது ஆயுதப் போராட்டங்கள் மூலம் ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடுகள் இருக்கின்றன. பிலிப்பைன்ஸ், டியூனீசியா, எகிப்து, ஈரான், உக்ரைன் போன்ற பல நாடுகளில், மக்கள் ஆயுதம் ஏந்தாமலேயே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக, ஆட்சியாளர்களைப் பதவியிலிருந்து விலக்கி, நாட்டை விட்டும் ஓடச் செய்தனர். அவ்வாறானதொரு நிலைமை, இலங்கையிலும் உருவாகி வருகிறது போல் தெரிகிறது. இலங்கையிலும் 1953ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், ஒரு கொத்து அரிசியின் விலை 25 சதத்திலிருந்து 70 சதமாக திடீரென உயர்த்தப்பட்ட போது, நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தனர். நாட்டில் பல பகுதிகளில், மக்கள் ஆரப்பாட்டங்களை நடத்தினர். அம்…
-
- 0 replies
- 393 views
-
-
கேள்விக்குள்ளாகியுள்ள வீட்டுச் சின்னமும் ஒற்றுமையும் தமிழ் மக்களின் ஆயுத ரீதியான உரிமைப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தானாகவே வந்து இறங்கியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்களது ஆதரவுடன் உருவாக்கப்பட்டு ஜனநாயக ரீதியாகச் செயற்பட்ட அமைப்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வந்தமையே அதற்கு காரணம். 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய போது தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.), தமிழ…
-
- 0 replies
- 502 views
-
-
கைகூடாத கூட்டு ஏனைய காலங்களை விட, தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளிடையே விநோதமான ஒற்றுமைகளும் பகைமை பாராட்டல்களும் ஏற்பட்டு விடுவது வழக்கமானது. மக்களைப் பேய்க்காட்டி, ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ‘ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவுபோல’ யாருடனும் கூட்டு வைத்துக் கொள்வதற்கு, சிறுபான்மைக் கட்சிகள் மட்டுமல்ல பெரும்பான்மைக் கட்சிகளும் பின்னிற்பதில்லை. ‘வேற்றுமையில் ஒற்றுமை காணுதல்’ என்ற கோட்பாடு, அரசியலில், தேர்தல் காலத்தில் மட்டுமே அதிகமதிகம் பரீட்சார்த்தம் செய்யப்படுகின்றது. அந்த வகையில் வடமாகாணத்தில், மூன்று நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில், பிரதான தமிழ்க் கட்…
-
- 0 replies
- 757 views
-
-
அரசியல் தீக்குளிப்பு – பி.மாணிக்கவாசகம் தோற்றவர் வெல்வர். வென்றவர் தோற்பர். இது தேர்தல் நியதி. தேர்தல் நீதியும்கூட. இதனை உள்ளுராட்சித் தேர்தல் முகத்தில் அடித்தாற் போல நாட்டின் அரசியல்வாதிகளுக்கு உணர்த்தியிருக்கின்றது. பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு, தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த கலப்பு முறையைக் கொண்டது, முதன் முறையாக அரசியல் ரீதியான அந்தஸ்தைப்பெற்றது போன்ற பல சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தேர்தல், எதிர்பாராத பெறுபேறுகளைத் தந்து, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. அதையும்கூட இந்த் தேர்தலின் ஒரு சிறப்பு என்று கொண்டால், அது தவறாக இருக்க முடியாது. ஒரே நாளில் நாடளாவிய ரீதியில் முதன…
-
- 0 replies
- 526 views
-
-
கானல் நீராகியிருக்கும் கூட்டமைப்பின் நம்பிக்கை மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பார்கள். அதுபோல, உள்ளூராட்சி தேர்தல் முடிந்த பின்னரும், தேர்தல் காலத்து, எதிரணிகள் மீதான கருத்து பரப்புரைகள் இன்னும் முடிவடையவில்லை. கட்சி அரசியலை முதன்மைப்படுத்தும் போக்கில் தமிழ் அரசியல்வாதிகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள். உள்ளூராட்சி சபைகளுக்குரிய பிரச்சினைகளிலும் பார்க்க, தேசிய மட்டத்திலான பிரச்சினைகளுக்கே இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இந்த கலப்பு தேர்தல் முறையில் முன்னிலை பெற்றிருந்த கட்சிகளை முதன்மைப்படுத்தும் போக்கில் இருந்து கட்சித் தலை…
-
- 0 replies
- 331 views
-
-
விக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார் இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் “சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தன் தலைமை வகிக்கும் கட்சி எந்தக் கட்சி? தமிழரசுக் கட்சியில் அவருக்கு எந்த முக்கிய பதவியும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்தான் அவர் தலைவராக இருக்கிறார். ஆனால் ததேகூ பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. அது ஒரு தேர்தல் கூட்டணி. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு வேட்பாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்ல…
-
- 0 replies
- 409 views
-
-
விக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்! முதலை நீருக்குள் அமிழ்ந்திருக்கும் போது யானைப் பலத்துடனிருக்கும். அதைத் தரையில் எடுத்துப் போட்டால் அதன் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்லலாம் என்று கூறப்படுவதுண்டு. அப்படித்தான் பாம்பும். பாம்புக்குத் தரையில் வயிறு படும் வரைதான் பலமெல்லாம். அதைத் தரையிலிருந்து தூக்கி விட்டால் அது பலமிழந்து விடும். கழுகு பாம்புடன் மோதும் போது அதைத்தான் செய்வதுண்டு. பாம்பின் வாலைப்பிடித்து வானில் தூக்கி விட்டால் பாம்பு அதன் இயங்குதளத்தை இழந்து விடும். பலத்தையும் இழந்து விடும். அரசியலிலும் அப்படித்தான். தனது பலம் எது – பலவீனம் எது – தனக்கு பலமான களம் எது – பலவீனமான களம் எது என்பதைக் குறித்து சரியாக முடிவை எடுப்பவரே சிறந்த தலை…
-
- 0 replies
- 554 views
-
-
ரணில் ஏன் இபடிச் செய்கிறார்? நிலாந்தன்! April 9, 2023 வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமை, கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம், கச்சதீவில் புத்தர் சிலை, நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை விவகாரம், புல்மோட்டையில் முஸ்லிம்களின் பிரதேசத்தில் புத்தபிக்குவின் அட்டகாசம், இவற்றோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை புதிய வடிவத்தில் புதுப்பிக்க முற்படுவது… போன்ற அனைத்தும் எப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் நிகழ்கின்றன? முதலாவதாக,ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டம். கடந்த நான்காம் திகதிதான் ஜெனிவா கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தது. இரண்டாவதாக, இரண்டு முக்கிய அமைச்சர்கள் தென்னாபிரிக்காவுக்கு போய் வந்த ஒரு காலகட்டம். அந்நாட…
-
- 0 replies
- 531 views
-
-
இனி வருவது ‘தேன்நிலவுப் பொழுது’ – ச.ச.முத்து அமெரிக்க இரட்டைகோபுரம் மீது விமானங்கள் மோதிய பொழுதில் அமெரிக்க அதிபர். புஸ் ஒரு கோடு கிழித்தார்.எம்முடன் நிற்கலாம். இல்லையென்றால் அவர்களுடனேயே. அதனைப்போன்றதொரு தெரிவே தமிழர்களுக்கு இந்த சிங்களதேச அதிபர் தேர்தலில் கொடுக்கப்பட்டு இருந்தது. அறுபது ஆண்டுகளாக தொடரும் இனப்பாரபட்சம், இனஅடையாளம் சிதைத்தல், இனஅழிப்பு என்பனவற்றை உச்சமாக நிகழ்த்தியவன் ஒரு பக்கம், அவனுக்கு பாதுகாப்பு மந்திரியாக இருந்தவன் இன்னொரு பக்கம். ஆனாலும் தமிழர்கள் தமது சத்திய ஆவேசத்தை வாக்குகளில் காட்டி இருந்தார்கள். இனப்படுகொலையாளி மகிந்த தோற்று அம்பாந்தோட்டையின் தனது சொந்த ஊருக்கு மூட்டை கட்டிவிட்டார். மைத்திரி சிங்கள தேசத்தின் அதிபராக பதவி ஏற்றுமுள்ளார்.…
-
- 0 replies
- 640 views
-
-
தானும் போர்க்குற்றவாளி என்கிறாரா மைத்திரிபால? October 1, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு நடவடிக்கைள் ஏமாற்றத்தை தரும் வகையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்மைப்பு தெரிவித்துள்ளது. இலவு காத்த கிளியின் கதைபோல சிங்களத் தலைவர்களை நம்பியிருப்பது என்பது வரலாறு முழுவதும் நடத்திருக்கிறது. மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கையிலும் இதை உணரும் காலம் வெளிப்படையாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளவும் தமிழ் மக்கள் பெரும் பங்களிப்பை ஆற்றினர். ஆனால் இவ்விரு ஆட்சிகளும் இனப்பிரச்சினை விடயத்தில் எந்த வேறுபாடுகளும்…
-
- 0 replies
- 468 views
-
-
சம்பந்தன் பதவி விலகுவதே மக்களுக்கான அறம் புருஜோத்தமன் தங்கமயில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இன்னொருவருக்கு இடமளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்து ஊடகக் கவனம் பெற்றிருக்கின்றது. சம்பந்தன் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பினால் உடலளவில் பெரிதும் தளர்ந்துவிட்டார். அவரினால் வெளியிடங்களுக்குப் பயணிக்க முடியவில்லை. பாராளுமன்றத்துக்கான வருகை என்பது கிட்டத்தட்ட முடங்கிவிட்டது. அவர் என்ன பேசுகிறார் என்பதை இன்னொருவர் கேட்டுச் சொல்லும் நிலை இருக்கிறது. அப்படியான நிலையில், பௌத்த சிங்கள அடிப்படைவாதத் தரப்புக்க…
-
- 0 replies
- 865 views
-
-
மாற்றத்தை ஏற்படுத்தக் கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்! | ஆய்வாளர் ச ப நிர்மானுசன்
-
- 0 replies
- 383 views
-
-
புதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்? நிலாந்தன் January 13, 2019 மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர். எனவே ஓர் ஆளுனரைப்பற்றி மதிப்பிடுவதென்றால் முதலில் அவரை நியமிக்கும் அரசுத் தலைவரை மதிப்பிட வேண்டும். அவருடைய அரசியல் இலக்குகள் எவையெவை என்று மதிப்பிட வேண்டும். மைத்திரிபால சிறிசேன இன்னமும் ஓர் ஆண்டு வரை தான் பதவியிலிருக்கப் போகிறார். கடந்த ஒக்ரோபர் மாதம் அவர் ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றைச் செய்திருந்தார். அதில் அவர் தனக்கு வாக்களித்த சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்குப் பொறுப்புக் கூறும் விதத்தில் நடந்து கொள்ளவில்லை. அவர…
-
- 0 replies
- 864 views
-
-
புலிகளால் மத்திய வங்கி தாக்கப்பட்டு இன்றுடன் 23 வருடங்கள் பூர்த்தி! தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், இலங்கை மத்திய வங்கியின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி இன்றுடன் 23 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் காரணமாக சுமார் 91 பேரின் உயிர்களை காவுகொண்டதுடன், ஆயிரத்து 1400 பேருக்கு காயம் ஏற்படுத்தியிருந்தது. 1996 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகனால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றய தினம் முற்பகல் 10.45 அளவில் 200 கிலோகிராம் வெடிபொருட்களுடனான பாரவூர்தி இலங்கை மத்திய வங்கியின் கட்டிடத்திற்குள் நுழைந்து வெடிக்கச் செய்ய முயற்சிக்கப்பட்டது. எனினும், கட்டிடத்தின் வெளியில் உள்ள இரும்பு வேலிகள் காரணம…
-
- 0 replies
- 707 views
-
-
உக்ரென் ரசியாவிடம் பெரியதொரு தோல்வியை சந்தித்திருக்கிறது போல. 12 நாடுகளின் கவச வாகனங்கள் ராங்கிகள் என பல வகையான கனரக ஆயுங்களை அள்ளிக் கொண்டு போய் மாஸ்கோவில் மே தின ஊர்வலத்தில் ரசிய மக்களுக்கு காட்டியுள்ளார்கள்.
-
- 0 replies
- 467 views
- 1 follower
-