அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9210 topics in this forum
-
நிலுவையாக இருந்து வருகின்ற தமிழரின் கவலைகள் புறக்கணிப்பு புதுடி ல்லியில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் பொருளாதார உதவி, அபிவிருத்திக்கான பங்குடைமை மற்றும் மீன்பிடி மோதல்கள்இடம்பிடித்திருந்தன இலங்கைவெளிவிகார அமைச்சர்பேராசிரியர் ஜி . எல் .பீரிஸின்இந்திய விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களில்உள்ளடங்கியிருந்த பெரும்பாலான விடயங்கள் இரு தரப்பினராலும் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை,இலங்கைத் தமிழர்களின் நிலுவையாக இருந்துவரும் கவலைகள் என்ற ஒரு அம்சம் புதுடில்லி வெளியிட்ட அறிக்கையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதென்று இந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது “அபிவிருத்தி மற்றும் புனர் வாழ்வுக்கான இந்தியாவின்…
-
- 0 replies
- 227 views
-
-
ஜெனிவாவின் புதிய குற்றச்சாட்டு By VISHNU 10 SEP, 2022 | 08:10 AM சத்ரியன் “பொருளாதார பேரழிவுகள் ஏற்படக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதனை முன்னிறுத்தியே சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்க இணங்கியிருந்தால், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு அது ஒரு அமிலச் சோதனையாகவே இருக்கும்” ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில், புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், பொதுவாக மனித உரிமை மீறல்கள், மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படாமல், உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம்…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
காணி நிலம் வேண்டும் பராசக்தி சர்ச்சைக்குரிய அரச வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றிருக்கிறது. தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் திரண்டு நின்று எதிர்ப்பைக் காட்டியதன் விளைவாக அது நடந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்த கடும்போக்குப் பிடிவாதத்தோடு அந்த வர்த்தமானியை நியாயப்படுத்தாமல் அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. அதே சமயம் இதில் கிடைத்த வெற்றிக்கு உரிமை கோரி அடிபடும் தமிழ்க் கட்சிகள் அதைப்போல ஆழமான அதோடு தொடர்புடைய ஒரு விடயத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. தாய் நிலத்தை நிலப் பறிப்பிலிருந்து காப்பாற்றுவது அவசியம். அதேயளவு அவசியமானது, தாய் நிலத்தைச் சனச் செழிப்புடையதாகக் கட்டியெழுப்புவது. ஒருபுறம் உரிமை கோரப்படாத,அல்லது உரிமை கோர ஆ…
-
- 0 replies
- 227 views
-
-
கவனமாக அணுகப்பட வேண்டிய மாணவர்களின் மரண விவகாரம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்டதைப் போன்ற - அல்லது அதைவிட அதிகமான - எழுச்சியொன்று, யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி, வடக்கில் ஏற்பட்டுள்ளது. படையினர் அல்லது பொலிஸார் சார்ந்த குற்றங்கள் அல்லது சம்பவங்களின் போது, வடக்கில் எழுச்சிகள் ஏற்படுவதொன்றும் புதிதன்று. 2005ஆம் ஆண்டில், படையினரின் வாகனங்களில் பொதுமக்கள் சிக்கும் போதும் காயப்படும் போதும், படையினருக்கெதிரான எழுச்சி ஏற்படுவதும் ஹர்த்தால் நடத்தப்படுவதும…
-
- 0 replies
- 227 views
-
-
ஹுசைனின் உறுதியும் தமிழரசு கட்சியின் தளம்பல் போக்கும் - யதீந்திரா இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போது இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில், மேற்படி பிரேரணையின் திருத்தப்பட்ட நகலை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. எனவே அதற்கான வாக்கெடுப்பும் அவசியமில்லாமல் போனது. 30ம் திகதி குறித்த பிரேரணை தொடர்பான விவாதங்கள் ஆரம்பித்த வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஹூசைன் தனதுரையில் தெரிவித்திருந்த விடயங்களையே இப்பத்தி பிரதானமாக எடுத்துக் கொள்கிறது. 2014ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண…
-
- 0 replies
- 227 views
-
-
உலகத் தமிழர் பேரவையினால் புலம்பெயர் தரப்புக்களை கையாள முடியுமா? யதீந்திரா அண்மையில் இலண்டனில் இடம்பெற்ற கூட்டமொன்று தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன் பங்குகொண்டமை தொடர்பில் தமிழ் தரப்பால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. மறுபுறம் மேற்படி கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்குகொண்டமை தொடர்பில் தெற்கில் விமர்சனங்கள் மேலெழுந்தன. தமிழ்ச் சூழலில் எழுந்த சர்ச்சைகளை இரண்டு வகையில் நோக்கலாம். ஒன்று, கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இருக்கின்ற போதிலும் குறித்த கூட்டம் தொடர்பிலான தகவல்கள் அவர்கள் மத்தியில் பரிமாறப்பட்டிருக்கவில்லை. ஒரு சிங்கள அமை…
-
- 0 replies
- 226 views
-
-
16ஆவது மே 18இல் நீதிக்கான போராட்டம் – நிலாந்தன். நீதி கிடைக்காத 16ஆவது ஆண்டு.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலை நீதிக்கான போராட்டம் என்று வர்ணிக்கின்றார்கள். ஆனால் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டமானது தொடர்ச்சியானதாக, செறிவானதாக பெருந் திரள் மயப்பட்டதாக இல்லை.அவை அவ்வப்போது தொடர்ச்சியாக நிகழும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் போராட்டங்களாகத்தான் காணப்படுகின்றன. கடந்த 16 ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டும்தான். அவர்களுடைய போராட்டம்தான் ஒப்பீட்டளவில் தொடர்ச்சியானது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்க்கத்தக்க விதத்தில் தென்னிலங்கையில் தாக்கத்தை ஏற்…
-
- 1 reply
- 226 views
-
-
குளிர்கால ஒலிம்பிக்ஸ்: உறையும் பனியில் முகிழ்த்த உறவு கோடைகால ஒலிம்பிக் போட்டியை அறியும் அளவுக்கு நாம், குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அறிவதில்லை. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே பலவற்றைச் சாதித்திருக்கின்றன. இம்முறையும் அதற்கு விலக்கல்ல. தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, அதன் போட்டிகளுக்காகவன்றி, அதைச் சூழ நிகழும் அரசியல் விடயங்களுக்காக மிக்க கவனிப்புக்கு உள்ளாகிறது. தென்கொரியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு வடகொரியா கொடுத்த முக்கியத்துவம் இவற்றுள் ஒரு முக்கிய விடயமாகும். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க அணிவகுப்பில், போரால் ப…
-
- 0 replies
- 226 views
-
-
தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்? December 26, 2024 1:27 pm தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் இன்றைய அந்நிய கையிருப்பு 800 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்தியாவின் வளர்ச்சியானது ஆசிய பிராந்தியத்துக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதுடன், இலங்கை, நேபாளம், மாலைத்தீவு, பங்களாதேஸ் உட்பட பல தெற்காசிய நாடுகளில் பொருளாதாரத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வதற்கான வாய்ப்புகளும் உர…
-
- 0 replies
- 226 views
-
-
நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மாமியார், கடந்த புதன்கிழமை,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் இயற்கை எய்தினார். ஆனந்த சுதாகரனின் பிரிவினால் நோயாளியாகிய அவருடைய மனைவி 2018ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய தாயார் கமலாதான் பேரப்பிள்ளைகளைப் பராமரித்து வந்தார். அவரும் இப்பொழுது இறந்து விட்டார். ஆனந்த சுதாகரன் 17 ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான திருமதி.லக்மாலி அண்மையில் கொழும்பில் நடந்த ஊடக விவாத நிகழ்ச்சியொன்றில் பின்வருமாறு வாதிட்டதை முகநூல் பதிவொன்றில் காண முடிந்தது. ”சிறையில் இருப்பவர்கள் அரசியல் கைதிகள் அல்லர். நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். தலதா மாளிக…
-
-
- 1 reply
- 226 views
-
-
இனப்பிரச்சினையை அங்கீகரித்தலே ஆரோக்கிய ஆரம்பமாக அமையும் sachinthaNovember 22, 2024 ன் வாக்களித்த முதலாவது தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலேயாகும். இத்தேர்தலில், அப்போது நவசமசமாஜ கட்சி சார்பாக போட்டியிட்ட வாசுதேவ நாணயக்காரவுக்கே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் எனது வாக்கை அளித்தேன். அத்தேர்தலில் குமார் பொன்னம்பலமும் தமிழ் வேட்பாளராக, தமிழர் நிலைப்பாட்டை முன்னிறுத்திப் போட்டியிட்ட போதிலும், எனது வாக்கை அவருக்கு நான் அளித்திருக்கவில்லை. நான், வாசுதேவ நாணயக்காரவுக்கு வாக்களித்தமைக்குக் காரணம் நான் இடதுசாரிச் சிந்தனை நிலைப்பாடு கொண்டதனால் அல்ல. மாறாக, இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனங்கள் குறித்த அங்கீகாரம் சார்ந்தும், இத்தேசிய இன…
-
- 0 replies
- 225 views
-
-
ஒத்துழைப்பைக் கோரும் பிரதமர்; சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க கேட்கும் எதிரணி Veeragathy Thanabalasingham on June 30, 2022 Photo, Buddhika Weerasinghe/Getty Images, BLOOMBERG இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்தவாரமும் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை விளக்கிக்கூறிய அவர் எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பைக் கோரினார். பொருளாதாரம் முற்றுமுழுதாக வீழ்ச்சி கண்டுவிட்டது. அதை மீட்டெடுப்பது, அதுவும் வெளிநாட்டுச் செலாவணி ஆபத்தான அளவுக்கு கீழ்மட்டத்தில் இருக்கும் நிலையில் சுலபமான காரியம் அல்ல. …
-
- 0 replies
- 225 views
-
-
ச. வி. கிருபாகரன் பிரான்ஸ் “பழைய குருடி கதவை திறவடி” என்ற பழமொழியை யாவரும் அறிந்திருப்பீர்களென நம்புகிறேன். நாங்கள் யாவரும் நினைப்பதற்கு மாறானதே இந்த பழமொழியின் பொருள். ஆனால், நாங்கள் யாவரும் நினைக்கும் பொருளின் அடிப்படையில் பார்ப்போமானால், வடக்கு , கிழக்கில் மட்டுமல்ல, வேறு பிரதேசங்கள் உட்பட நடந்தேறிய “காணாமல் ஆக்கப்பட்டோர்” என்ற விடயம் மிகவும் பரிதாபத்திற்குரியது. இப்படியாக சொல்வதற்கு யதார்த்தமான காரணங்கள் பல உண்டு. பிரான்ஸ் “தமிழர் மனித உரிமைகள் மையம் – TCHR என்பது யாரால்? எதற்காக? 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது ஒரு புறமிருக்க, இவ் அமைப்பு அன்றிலிருந்து மேற்கொண்ட செயற்பாடுகளினால், இலங்கைக்கு எவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டது என்பதை, ஐ.நா.மனித உர…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தமிழில் கவின்:- சர்வதேச யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைப் படையினரின் பெயரை புனர்நிர்மானம் செய்ய சிறந்த சந்தர்ப்பமாக நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்வினை பயன்படுத்திக் கொள்ள தூர நோக்குடன் ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிக்கின்றனர். இதன் ஓர் கட்டமாக நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்வினை பயன்படுத்திக் கொள்ள பிரதமரும் ஜனாதிபதியும் தீர்மானித்துள்ளனர். நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். உலகின் எந்தவொரு மூலையில் அனர்த்தம் ஏற்பட்டாலும் அந்த அனர்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள் கொடுப்பது நாகரீகமான மனித சமூகத்தின் த…
-
- 0 replies
- 224 views
-
-
தமிழரின் அரசியல் உரிமைக்கான அபிலாசையின் குறியீடே முள்ளிவாய்க்கால் – அஸ்கிளோப்பியன் 24 Views இறைமையும் இயற்கை நீதியும் பின்னிப் பிணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அபிலாஷையின் குறியீடே முள்ளிவாய்க்கால். அது வெறுமனே பௌதிக ரீதியானதோர் அம்சமல்ல. அவ்வாறு அதனை சாதாரணமாகக் கருதிவிட முடியாது. ஏனெனில்; நிணமும் சதைகளும் சங்கமித்த ஒரு குருதிப் பேராற்றில் இழையோடுகின்ற அபிலாஷைகளின், அழிக்க முடியாததோர் ஆன்ம சக்தியாக, அது திகழ்கின்றது. தமிழ் மக்களின் மனங்களில் ஆழமாக வியாபித்துள்ள அந்த சக்தியின் வடிவ வெளிப்பாடே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி. அது புனிதமானது. அந்தரங்கம் மிகுந்தது. அதனால் அது மிகமிகப் ப…
-
- 0 replies
- 223 views
-
-
-
அதிகாரப் பகிர்வும் திறக்கும் பொது வாக்கெடுப்புக்கான களமும் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு ஒன்றை நாடு எதிர்கொள்ளவுள்ளது. அதிகாரப் பகிர்வு(!) உள்ளிட்ட விடயங்களை முதன்மையாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் மாத்திரம் போதாது, நாட்டு மக்களின் அங்கிகாரமும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கின்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்று உறுதிப்படுத்தி இருக்கின்றார். பொது வாக்கெடுப்பை எதிர்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சில மனத்தடைகள் உண்டு. அதாவது, மக்கள் மீதான வாழ்க்கைச் சுமையைப் புதிய அரசாங்கமும் அதிகரித்திருக்கின்…
-
- 0 replies
- 223 views
-
-
ஆட்சியாளர்களின் நண்பர்களும் விரோதிகளும் -நஜீப் பின் கபூர்- ஆட்சியாளர்களின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் மற்றும் இன்னும் இரு வாரங்களில் உள்ளூராட்சித் தேர்தல்கள் அறிவிப்பு என்பன வெகுவிரைவில் வர இருப்பதால் அவைபற்றி பேச இருக்கின்றன. அதற்கு முன்னர் அனுர அரசின் நண்பர்கள், விரோதிகள் என்ற தலைப்பில் சில விடயங்களை பேச எதிர்பார்க்கின்றோம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்பது நமக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன ஒரு கதைதான். எனவே அதற்கு நாம் மேலும் விளக்கம் கொடுக்க தேவையில்லை. அதனால் இன்றைய நண்பர்கள் நாளை விரோதிகளாகலாம். இன்றைய விரோதிகள் நாளை நண்பர்கள…
-
- 0 replies
- 223 views
-
-
அனுர பின்வாங்க முடியாத இடத்துக்கு வந்துவிட்டாரா ? - நிலாந்தன் ரணில் வெளியில் வந்துவிட்டார். வைத்தியசாலையில் இருந்து வெளி வரும் போது கையில் அவர் வைத்திருந்த புத்தகம் தற்செயலானதா? அல்லது அவருடைய வழமையான பாணியா? அது முன்னாள் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜெல்சின் எழுதிய Unleashed-கட்டவிழ்த்து விடுதல் என்ற புத்தகம். அதன் மூலம் ரணில் அரசாங்கத்துக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறாரா? அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்தார். பாலசிங்கம் சொன்ன பல விடயங்களை தமிழர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் ரணிலைப்பற்றி அவர் சொன்னதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார்கள். ரணிலைக் கைது செய்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தியானது பின்வாங்க முடியாத ஒரு இடத்துக்கு வந்திருக்கிறது என்று சட்டத்தரணி சாலிய பீரி…
-
- 0 replies
- 223 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர் தலைமைகளும் கொழும்பில் கொட்டேனாவில் ஒரு சில்லறை வியாபாரி சொன்னார். “கொழும்பில் போளை அடித்துக் கொண்டு திரிந்தவன் எல்லாம் ஊரில எலக்சன் கேட்கிறான்” என்று. கடந்த கிழமை நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான் கன்னி அமர்வின் போது நடந்த குத்துச்சண்டைகளை வைத்துப் பார்த்தால் போளை அடிப்பவர்கள் ஏற்கெனவே நாடாளுமன்றத்திற்குள் வந்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. மேற்கூறிய சில்லறை வியாபாரி குறிப்பிட்டது கொழும்பு மையக் கட்சிகளைத்தான். தமிழ்ப் பகுதிகளில் தற்பொழுது போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுமே போளை அடிப்பவர்கள் இல்லைத்தான். எனினும் கட்சிச் சின்னத்தை முன்னிறுத்தி குறிப்பிட்ட சின்னத்தின் கீழ் யார் போட்டியிட்டாலும் வெ…
-
- 0 replies
- 223 views
-
-
மனித உரிமைகள் சட்டங்கள் ஊடாக சீர்படுத்தவேண்டிய தேவை http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-04#page-12
-
- 0 replies
- 223 views
-
-
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் அதனுடன் இணைந்து செயற்படும் ஊழலில் ஈடுபட்ட திமிங்கிலங்களை பிடிக்கவேண்டும் என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இந்திய சீன உறவுகளில் சமநிலையை பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஊழலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதபோது அவர்களிற்கு எதிரான சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கும் ஆபத்து குறித்தும் எச்சரித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கேள்வி:- இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நெருக்கடிகளிற்கு ஜனாதிபதி…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
ஊர் யாரோடு? நிலாந்தன். பிரதமர் ஹரினி மாவிட்ட புரம் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக வைபவத்தில் அவர் விருந்தினராக வரவேற்கப்பட்டுள்ளார். அங்கே தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் காண முடியவில்லை. மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குத் தமிழ் மக்களின் போராட்டத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 1968 ஜூன் மாதம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி வெற்றி பெற்ற கோவில் அது. அந்தப் போராட்டத்திற்கு கலாநிதி சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது;வெற்றி பெற்றது. ஆனால் இங்குள்ள முரண் என்னவென்றால் அந்தப் போராட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி போராடும் தரப்பின் பக்கம் நின்று தலைமை தாங்க…
-
- 0 replies
- 222 views
-
-
இலங்கையில் ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் செல்வாக்குப் பெறுகிறதா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA'S MEDIA இலங்கையில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக, சிங்கள மக்கள் மத்தியில் அசைக்க முடியாத ஆட்சியாளர்கள் என எண்ணிய ராஜபக்ஷ குடும்பத்தை, நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தின் ஊடாக அதிகாரத்தில் இருந்து அகற்றினர். ஆனால் தற்போது கட்சிப் பொதுக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக அவர்கள் மக்களைச் சந்தித்து வருகின்றனர். இது ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிகுறியா? இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, ராஜபக்ஷ க…
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
பல்கலைக்கழக மாணவர்களின் பொறுப்புக் கூறலும் அரசியற் கடப்பாடும் October 29, 2024 — கருணாகரன் — “தமிழரின் வாக்குகள், தமிழ்த்தரப்புகளுக்கே அளிக்கப்பட வேண்டும். மாறாகத் தென்னிலங்கைத் தரப்புகளுக்கு அளிக்கக் கூடாது‘ என்று திருவாய் மலர்ந்திருளியிருக்கின்றனர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இப்படியொரு அறிவிப்பை விடக் கூடுமென்றால் நாங்கள் மட்டுமென்ன குறைந்தவர்களா, என்று கிளம்பிய கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (மட்டக்களப்பு) கலைத்துறை மாணவர்கள், இதே தொனியில் இன்னொரு அறிவிப்பை விட்டுள்ளனர். இந்த அறிவிப்போடு இரண்டு தரப்பினரும் தங்களுடைய தேசியக் கடமையையும் இனப் பொறுப்பையும் நிறைவேற்றிக் கொண்டனர். இன…
-
- 0 replies
- 222 views
-