அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை: யார் பொறுப்பு? நிலாந்தன். எனது நண்பரான உளவளத் துணை ஆலோசகர் ஒருவர் அடிக்கடி ஒரு மேற்கோளை சுட்டிக்காட்டுவார்…”எதிர்த் தரப்பு உங்களை கோபப்படுத்தி விட்டதென்றால் அது அதன் முதலாவது வெற்றியைப் பெற்றுவிட்டது என்று பொருள்” ஒருவர் உங்களை கோபப்படுகிறார் என்றால், உங்களைக் கோபப்படுத்துவது தான் அவருடைய நோக்கம் என்றால், நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் அவரைத் தோல்வி அடையச் செய்யும். நீங்கள் கோபப்பட்டீர்கள் என்றால், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டீர்கள் என்றால், எதிரி நினைப்பதை நீங்கள் செய்கிறீர்கள் என்று பொருள். இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் பொருந்தும். ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதுகின்றார்..மருத்துவர் …
-
- 0 replies
- 139 views
-
-
கஜனிடம் சில கேள்விகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூலை 22 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்கிற இயக்கத்தின் தலைவரும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்கிற கட்சியின் செயலாளர் நாயகமுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் காலத்தின் தேவை கருதி, சில கேள்விகளை எழுப்ப முயல்கிறேன். இங்கு எழுப்பப்படும் கேள்விகளில் சில, கஜேந்திரகுமாரையும் காங்கிரஸையும் நோக்கி, இந்தப் பத்தியாளரால் ஏற்கெனவே எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், மீண்டும் அவரை நோக்கி, கேள்விகளை எழுப்ப வேண்டிய தேவை, திங்கட்கிழமை (20) யாழ். நகரப் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்ட “...எங்கோ இருக்கும் முழங்காவிலில் ஒளிந்து கொண்டு...” என்கிற வார்த்தைப் ப…
-
- 0 replies
- 527 views
-
-
திலீபனின் தியாகத்தைப் பின்பற்றுகிறோமா.? அண்மையில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண, தியாக தீபம் திலீபன் அவர்கள், உண்ணா நோன்பிருந்து உயிரிழக்கவில்லை என்றும் நோயினாலேயே உண்ணா விரதத்திற்கு அனுப்பப்பட்டார் என்றும் வரலாற்றுப் பொய் ஒன்றைக் கூறி தமிழ் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். உண்மையில் 2009இற்குப் பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளை முறியடித்துவிட்டோம் என இலங்கை அரசு சொல்லி வரும் நிலையில், திலீபன் போன்ற உன்னதப் போராளிகளின் பெயர்களை கண்டும் அச்சப்படும் நிலையின் வெளிப்பாடாகவே இத்தகைய பேச்சுக்கள் வெளிவருகின்றன. எமது நிலத்தின் பெறுமதியை அதன் அடையாளத்தை அதன் உன்னதத்தை நாம் உணர்ந்துதான் வாழ்கிறோமா என்பதை குறித்து ஒரு சுய விசாரணை செய்யவேண்டிய …
-
- 0 replies
- 390 views
-
-
தொல்பொருள் என்ற ரீதியில் மக்களின் காணி மட்டக்களப்பில் கபளீகரம்? (வ.சக்திவேல்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் என்ற ரீதியிலும், வனப் பாதுகாப்பு என்ற ரீதியிலும் மக்களின் பூர்வீகக் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். ஜி.பி.ஆர். தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பிலே இருந்து கொண்டு மட்டக்களப்பு மக்களின் பூர்வீக இடங்களை அடையாளமிடும் அதிகாரிகள்; மாவட்டத்திலுள்ள கிராமசேவையாளர் முதல் அரசாங்க அதிபர் வரையிலான எந்தவித அதிகாரிகளுக்கும் தெரியாமல் கொழும்பிலிருந்து வந்து தொல்பொருட் களுக்குரிய இடம் எனவும், வன இலாகாவுக்குரிய இடம் எனவும் அடையாளப்படுத்தி விட்டுச் செல்வதாகவும் அவ்வாறு அவர்களால் அடையாளப்படுத்தப்படும் …
-
- 0 replies
- 753 views
-
-
முள்ளிவாய்க்கால் ஓரணியாக்குமா? வில்லாண்ட தமிழினம் வீறுகொண்டு விடுதலைக்காய் களம் கண்ட தருணத்தில் மனிதாபிமானத்திற்கு எதிரான அதியுச்ச வெளிப்பாடுகள் சாட்சியமின்றி அரங்கேற்றப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகின்றன. எட்டு ஆண்டுகள் கழிந்தும், அந்த ரணம் ஆறவில்லை. வலிகள் தீரவில்லை. பட்ட காயங்களில் இருந்தும், மனங்களில் விழுந்த கீறல்களில் இருந்தும் இன்னமும் இரத்தம் வழிந்து கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்ந்தும் இருக்கும். முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிவில்லா ஓர் அவலமாக இன்றும் நீடித்துக்கொண்டிருக்கின்றது. கொடூர யுத்தத்தின் விளைவுகள் பலவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, அனுபவிக்கும் நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டு நிற்கிறது…
-
- 0 replies
- 526 views
-
-
ஈழத்தமிழ் வாக்காளர்கள் கோருவது அரசியல் மாற்றம் - த.தே.கூட்டமைப்பு சாத்தியமாக்குமா? [ வியாழக்கிழமை, 10 ஒக்ரோபர் 2013, 08:27 GMT ] [ நித்தியபாரதி ] அரசியற் தீர்வொன்றுக்கான அடிப்படையாக சுயநிர்ணய ஆட்சி மற்றும் இறையாண்மையை பகிர்ந்துகொள்ளுதல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மிகத் தீவிரமாகக் கோரிக்கை விடுத்துச் செயற்பட்டால், சிங்கள ஆளும் வர்க்கமும் சிறிலங்கா அரசாங்கமும் இதனை முறியடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டியிருக்கும். இவ்வாறு The Diplomat என்னும் ஊடகத்தில் J. S. Tissainayagam* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்ககாக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போன்று சுயநிர்ணய ஆட்சிக்கான கோரிக்கையை…
-
- 0 replies
- 392 views
-
-
தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை குழிதோண்டி புதைத்துவிட வேண்டாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பொறுத்தவரை மிகவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு ஆதரவான போக்கை கடைப்பிடித்து வருகிறது. காரணம் எவ்வாறாவது நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலான ஒரு தீர்வுத் திட்டத்தை பெற்றுவிட வேண்டும். அதாவது இரண்டு பிரதான கட்சியும் ஒன்றிணைந்த இந்த சந்தர்ப்பத்தில் தீர்வை பெற்று விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சாணக்கியமான அரசியலை மேற்கொண்டு வருகிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் ஆதரவைப் பெற்று ச…
-
- 0 replies
- 422 views
-