அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
இலங்கை மற்றும் இந்திய ஆளும் உயரடுக்குகள் வறுமையில் வாடும் மீனவ சமூகங்களுக்கு இடையே தேசிய பகைமையை தூண்டுகின்றன Naveen Dewage wsws டிசம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி 68 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்ததுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தது. சமீபத்திய மாதங்களில் தீவிரப்படுத்தப்பட்ட கடற்படை ரோந்துகளின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் நடந்துள்ளன. கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்…
-
- 1 reply
- 307 views
-
-
கூட்டுத்தலைமையே தேவை சிவசக்தி ஆனந்தன் செவ்வி இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பும் வியடத்தில் ஒருங்கிணைந்துள்ள கட்சிகளும், தலைவர்களும் ஏனைய விடயங்களை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் கூட்டுத்தலைமை உள்ளிட்ட கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கேள்வி:- தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டில் நீடித்துக்கொண்டிருந்த தமிழ் தலைவர்கள் திடீரென 13ஐ நோக்கி செல்ல காரணம் என்ன? பதில்:- தமிழ் தலைவர்கள் 13ஐ நோக்கி சென்றார்கள் என்ற கருத்து முற்றிலும் தவறானது குறிப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 13ஐ ந…
-
- 0 replies
- 498 views
-
-
இந்தியத் தூதரகம் நிறுத்தியதா? அப்படியானால், உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைக்கப் பிரேரணை சமர்ப்பித்துப் பரீட்சிக்கலாமே! தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம் பகிரங்கக் கேள்வி நாடாளுமன்ற நடைமுறை விதிமுறைகள் (Practical Terms) மற்றும் அங்கு நடைபெறவுள்ள அல்லது நடைபெற்ற விவாதங்களின் முக்கியமற்ற தன்மை அல்லது பிரதானப்படுத்தக்கூடிய விவாதங்கள் (Highlighted Debates) எது என்பதை நாடாளுமன்றச் செய்தியாளர்களே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் நாடாளுமன்ற விவாதங்களில் பேசும், அல்லது பிரேரணை, சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையைச் சமர்ப்பித்து விவாதங்களை நடத…
-
- 0 replies
- 305 views
-
-
நிலுவையாக இருந்து வருகின்ற தமிழரின் கவலைகள் புறக்கணிப்பு புதுடி ல்லியில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் பொருளாதார உதவி, அபிவிருத்திக்கான பங்குடைமை மற்றும் மீன்பிடி மோதல்கள்இடம்பிடித்திருந்தன இலங்கைவெளிவிகார அமைச்சர்பேராசிரியர் ஜி . எல் .பீரிஸின்இந்திய விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களில்உள்ளடங்கியிருந்த பெரும்பாலான விடயங்கள் இரு தரப்பினராலும் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை,இலங்கைத் தமிழர்களின் நிலுவையாக இருந்துவரும் கவலைகள் என்ற ஒரு அம்சம் புதுடில்லி வெளியிட்ட அறிக்கையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதென்று இந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது “அபிவிருத்தி மற்றும் புனர் வாழ்வுக்கான இந்தியாவின்…
-
- 0 replies
- 228 views
-
-
-
- 0 replies
- 544 views
-
-
டெலோ ஊதிக் கெடுத்த சங்கு புருஜோத்தமன் தங்கமயில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்ந்த தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி...’ என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை, இலங்கைக்கு இந்தியா வழங்க வேண்டும் என்ற விடயத்தை முன்வைத்து, இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதும் செயற்றிட்டத்தை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) கடந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பித்தது. அதில், இணைந்து கொண்டதன் மூலமே, தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அவதிப்பட வேண்டி வந்திருக்கின்றது. சில வாரங்களுக்கு முன்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில், தமிழ்க் கட்சிகளின…
-
- 0 replies
- 739 views
-
-
திருமலை விவகாரம்: இன, மத சகிப்புத் தன்மையின் அவசியம் மொஹமட் பாதுஷா பல்லின, பல்மதம், பல்கலாசாரங்களைக் கொண்ட நாடுகளில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்கள் கூட்டத்துக்கும் இடையில் அவர்கள் தனித்துவங்கள், கலாசாரம் பற்றிய பரஸ்பர புரிதல் அவசியமாகின்றது. இதற்கு இன, மத சகிப்புத்தன்மை மிகவும் அடிப்படையான விடயமாகும். இலங்கையில் இன, மத சகிப்புத்தன்மையில் ஏற்பட்ட பின்னடைவே பல்வேறு இன முரண்பாடுகளுக்கும் தேவையற்ற நெருக்கடிகளுக்கும் வித்திட்டுள்ளது. இருப்பினும், சகோதர இனத்தின் பிரத்தியேகமான பழக்க வழக்கங்களை நேரிய மனதுடன் சகித்துக் கொள்ளவதில், இன்னும் முன்னேற்றம் வேண்டும் என்பதையே அண்மையில் திருகோணமலையில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கசப்பான நிகழ்வு உணர்த்தி நிற்கின்றது. …
-
- 0 replies
- 356 views
-
-
பொதுஜன பெரமுன தோல்வியை நோக்கி…? February 11, 2022 — தொகுப்பு: வி.சிவலிங்கம்— கடந்த 09-2-2022ம் திகதி ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியினர் அநுராதபுரத்தில் பெரும் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். பெருஞ் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட அக் கூட்டம் மக்களை நோக்கிய தமது புதிய பயணத்தின் ஆரம்பம் என பல பேச்சாளர்களும் தெரிவித்த போதிலும், விவசாயிகளை அதிகளவில் கொண்டிருக்கும் அப் பிராந்திய மக்கள் பிரதமர், ஜனாதிபதி போன்றோரின் பேச்சுகளுக்கு பெரும் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. இவர்களின் உரைகளின்போது அவ்வப்போது மக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தத் தயங்கவில்லை. சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரை, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசு, தினேஷ் குணவர்த்தன போன்ற பலரைக் …
-
- 0 replies
- 242 views
-
-
-
- 0 replies
- 864 views
-
-
‘சுதந்திர இலங்கை’ - சில எண்ணப்பகிரல்கள் என்.கே.அஷோக்பரன் பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், தினம் தினம் டொலருக்காக எல்லா நாடுகளிடமும் கையேந்தி நிற்கும் நிலையில், டொலர் இருந்தால்தான் எரிபொருள், எரிபொருள் இருந்தால்தான் மின்சாரம் என அடுத்தநாள் மின்சாரம் இருப்பதன் நிச்சயத்தன்மை இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணையெட்டிப்பிடிக்குமளவிற்கு உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், “கோலாகலமாக” பெரும் இராணுவ அணிவகுப்புக்களுடன், விமான சாசகஸப் பறத்தல்களுடன், 74வது சுதந்திர தினத்தை கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். சுதந்திர தினமென்றால் இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் நடக்கிறதுதானே எனச் சி…
-
- 1 reply
- 389 views
-
-
போராட்டங்களின் சாதிப்பு லக்ஸ்மன் உரிமைகளை அடைந்து கொள்வதற்கு போராட்டங்களை நடத்துவது நமது நாட்டில் மாத்திரமல்ல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சாதாரணமாகனதாகவே இருக்கிறது. அது தொழிலாளர்களின் தொழில் உரிமைக்கானது. அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வது. சமூகங்கள் தங்களது உரிமைக்காக நடத்துவது. தனிப்பட்டவர்கள், நிறுவனம் சார்ந்தவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலவகையான போராட்டங்கள் நடந்துவருகின்றன. போராட்டம் என்பது சமூக, அரசியல், இனம், பொருளாதாரம் போன்ற உரிமை மறுப்புகள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் போன்ற அநீதிகளைகளுக்கு எதிராக தனியாகவும் கூட்டாகவும் நடத்தப்படுவது வழமையாகும். தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக போராட்டங்க…
-
- 0 replies
- 318 views
-
-
ஆறு கட்சிகளின் கடிதமும் அரசியல் பொய்களும் - யதீந்திரா ஜனநாயக அரசியலில் பொதுவாக ஒரு கூற்றுண்டு. அதாவது கீரைக் கடைக்கும் எதிர்கடை வேண்டும். அதாவது, அரசியலில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் இடம்பெறும் தவறுகளை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால் விமர்சனங்கள் என்னும் பெயரில் பொய்கள் பரப்பப்படுமாக இருந்தால், அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இயங்கும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் அளவுக்கதிகமாகவே, பொய்கள் பரப்பப்பட்டிருக்கின்றன. 13வது திருத்தச்சட்ட எதிர்ப்பு என்னும் பெயரில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) குறித்த கடிதம் தொ…
-
- 0 replies
- 633 views
-
-
-
- 0 replies
- 634 views
-
-
“ஜோர்ஜ் பேபன்ரூ (George Papandreou) உடனடியாக விலக வேண்டும், அவருக்கு பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியவில்லை” இது கடந்த 2011 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கி எழுப்பிய போராட்ட கோஷம். பேபன்ரூ குடும்பம் கிரேக்க நாட்டில் உள்ள பலமான அரசியல் குடும்பம். சரியாக இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தை போன்ற குடும்பம். இவரது பாட்டனார் பல முறை கிரேக்கத்தின் நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். அவரது தந்தையும் பிரதமராக பதவி வகித்தார். கிரேக்க நாட்டின் மிகப் பழமையான பெசோ கட்சியை உருவாக்கியதும் இவரது தந்தையே. 2009 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரும்பான்மையை பெற்று ஜோர்ஜ் பேபன்ரூ நாட்டின் பிரதமராக த…
-
- 0 replies
- 375 views
-
-
-
- 0 replies
- 494 views
-
-
மீனவர் பிரச்சினை யார் தீர்வு தருவது? நிலாந்தன்! சுப்பர்மடம் போராட்டம் மீனவர்களின் விவகாரத்தை மறுபடியும் தலைப்புச்செய்தி ஆக்கியது. வத்திராயானைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு தமிழக மீனவர்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்பரப்பில் நிகழ்ந்துவரும் தீர்வு கிடைக்காத விவகாரங்களில் ஒன்று மீனவர் விவகாரமும் ஆகும். காணிப்பிரச்சினை,காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம்,நில மீட்புக்கான போராட்டம்,அரசியல் கைதிகளுக்கான போராட்டம் என்பவற்றோடு ஒப்பிடுகையில் மீனவர்களின் போராட்டம் வித்தியாசமானது. ஒரே சமயத்தில் உள்நாட்டு தன்மையும் பிராந்திய தன்மையும் மிக்கது. ஒரு பிராந்தியக் கடலில் எல்லையைத் தாண்டும் மீனவர்…
-
- 0 replies
- 560 views
-
-
கிட்டுபூங்கா பிரகடனமும் அதன்பின்னும் – நிலாந்தன்! February 6, 2022 இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அனுப்பும் நோக்கத்தோடு ஆறு கட்சிகள் ஒன்றாக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கியைப் போட வேண்டியதன் அவசியம் குறித்து நான் எழுதியும் பேசியும் வந்தேன். ஆனால் அக்கொழுக்கி 13 ஆக இருக்க வேண்டுமா என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன். அந்நாட்களில் எனது நண்பர் ஒருவர் -அவர் ஒரு சிவில் சமூக செயற்பாட்டாளர்,அதோடு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்- என்னிடம் கேட்டார் இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கியைப் போடும் பலம் இந்த ஆறு கட்சிகளிடமும் இருக்கிறதா? என்று. நான் அவருக்குச் சொன்னேன் “இல்லை. இப்…
-
- 0 replies
- 312 views
-
-
கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும்:– அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 01 ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்) மெலிஞ்சிமுனை நோக்கிய பயணம்: தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் விருது வழங்கல் (யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபம்), மண்டைதீவு கண்டல் காடு ஒதுக்கு கள விஜயம், பறவை ஆய்வுகள், யாழ்ப்பாணம் கொக்குவில் ராமகிருஸ்ண வித்தியாசாலையில், எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல் அமைப்பின் சர்வதேச ஈரநிலக் கொண்டாட்டம், பரிசளிப்பு விழா, பலாலி வீதி, கோண்டாவில் எழுதிரள் பணி…
-
- 1 reply
- 351 views
-
-
சடலங்களாக கரை ஒதுங்குவதுதானா வடக்கு மீனவர்களின் விதி? புருஜோத்தமன் தங்கமயில் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் இருந்து ஜனவரி 27ஆம் திகதி வியாழக்கிழமை, சிறிய படகொன்றில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர், நான்கு நாள்களின் பின்னர், சடலங்களாக மீட்கப்பட்டனர். கடலுக்குச் சென்றவர்கள் அடுத்த நாள் நீண்ட நேரமாகியும் கரைக்குத் திரும்பாததை அடுத்து, அவர்களைத் தேடும் பணிகளை, அந்தப் பகுதி மீனவர்கள் முன்னெடுத்தனர். அதன்போது, அவர்களின் வலைகள் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. அதையடுத்து, தேடுதலை இன்னும் விரிவுபடுத்திய வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள், தொடர்ச்சியாக நான்கு நாள்களாக இரவு, பகலாக இயங்கினர். ஆனாலும், காணாமற்போன மீனவர்களை மீட்க…
-
- 0 replies
- 359 views
-
-
தமிழ் அரசியல் புதிய மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய காலமிது (பகுதி 01) February 2, 2022 — வி.சிவலிங்கம் — – பிரதான கட்சிகள் புதிய அரசியல் யாப்பு பற்றி விவாதிக்கின்றன. – இன்றைய அரசு உட்கட்சி விமர்சனங்களை ஒடுக்குகிறது. – பாராளுமன்றம், மந்திரிசபை, நீதித்துறை போன்றன செல்லாக் காசாகியுள்ளன. – ராணுவ ஆட்சியை நோக்கிய பாதை தெளிவாகிறது. – தமிழ் அரசியல் தேசிய அளவிலான மாற்றங்களைக் காணத் தவறுகிறது. – அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படப்போகும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களைத் தமிழ் அரசியல் காண மறுக்கிறது. மாற்றத்திற்கான தேவைகள் தமிழ் அரசியல்…
-
- 1 reply
- 413 views
-
-
"ஈழத் தமிழர்களுக்கு துணை நிற்க்குமா இந்தியா.!? Navaratnam Wimal & Nish | srilanka 13th amendment நன்றி - யூரூப்
-
- 0 replies
- 500 views
-
-
-
- 0 replies
- 748 views
-
-
ஜெனீவாவை எவ்வளவு காலம் நம்பியிருப்பது? எம்.எஸ்.எம். ஐயூப் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மற்றோர் அமர்வு வருகிறது. இம்மாதம் இறுதிப் பகுதியிலிருந்து, சுமார் ஒரு மாத காலமாக அது நடைபெறும். இந்த நிலையில், அரசாங்கமும் தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்குத் தயாராகி வருகின்றன. இது, அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்தது முதல், நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும். போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் அதற்காக, மனித உரிமைகள…
-
- 0 replies
- 287 views
-
-
முஸ்லிம் சமூகம் திருந்தாத வரை அரசியல்வாதிகளை திருத்த முடியாது மொஹமட் பாதுஷா ஒரு பிள்ளைக்கு, சிறு வயதிலிருந்தே பூனையைக் காட்டி, “இதுதான் யானை” என்று சொல்லிப் பழக்கி வந்தால், அந்தப் பிள்ளை பெரிய ஆளாக வளர்ந்தாலும், உண்மையான யானையை, யானை என்று ஏற்றுக் கொள்ளத் தயங்கும். பூனையே அதனது எண்ணங்களில், யானையாக இருக்கும். இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். குறிப்பாக, ஒரு சமூகம் எவ்விதமான அரசியல் கோட்பாடுகளால், கலாசாரத்தால் கட்டமைக்கப்படுகின்றதோ, எவ்விதம் அரசியல் மயப்படுத்தப்படுகின்றதோ, அதையே ‘சரியான அரசியல் வழிமுறை’ என்று நம்பிக் கொண்டிருக்கும். அவ்வாறு நம்பிக் கொண்டிருக்கும் காலம் வரைக்கும், சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளவும் மாட்டாது; அரசியல்வாதிகள் திரு…
-
- 0 replies
- 364 views
-
-
13-எதிர்ப்பு – சீனாவிற்கான அழைப்பா? யதீந்திரா அண்மையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இது பல கேள்விகளை முன்வைத்திருந்தது. ஏனெனில் சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் வழக்கத்திற்கு மாறான ஒன்று. இந்திய (தமிழ்நாட்டு) மீனவர்கள் தொடர்பில் வடக்கு மீனவர்கள் மத்தியில் அதிருப்திகள் காணப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் இந்திய மீனவர்களின் அத்து மீறலுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் இடம்பெற்றிருந்தது. கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலில் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன் பின்னர்தான் சீனத் தூதுவர், யாழ் மீனவர்களை நோக்கி உணவுப் பொதிகளோடு வந்திருந்தார். இருபது மில்லிய…
-
- 1 reply
- 416 views
-