நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
புலிகளின் தலைமையின் கையெழுத்துடன் வெளியான புத்தகத்தால் ஆச்சரியம்??? மாமனிதர் குமார் பொன்னம்பலம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியைத் தாங்கியதாக குமார் பொன்னம்பலத்தின் நினைவு மலர் வெளியிடப்பட்டுள்ளது. சிங்களக் காடையர்களால் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்திலுள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. இங்கு அவரின் நினைவுகளைத் தாங்கிய நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்த நினைவு மலர், குமார் பொன்னம்பலத்தின் படுகொலைக்கு இரங்கல…
-
- 0 replies
- 583 views
-
-
காணொளி: சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட தமிழ்க் காணொளி... http://www.youtube.com/watch?feature=player_embedded&v=XyKOmicZSCs http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9821:2013-10-31-21-11-36&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 545 views
-
-
போதை ஏற்றும் வலிநீக்கி மாத்திரைகள் குறித்த எச்சரிக்கை: வவுனியாவை உலுக்கும் ‘டீல்’கள் க. அகரன் அண்மைக்காலத்தில், இலங்கையின் வடபுலத்தில் போதைபொருட்கள் விற்பனைக்கும் நுகர்வுக்கும் எவர் துணை நின்றார்களோ, அவர்களே வெள்ளை உள்ளத்தவர்கள் போன்று இன்று சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு, போதைப்பாவனையைக் கட்டுப்படுத்தபோவதாகத் தெரிவிக்கும் நாடகங்களும் அரங்கேறுகின்றன. ஆய்வுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து, போதை வியாபாரம் நடைபெற்று வருவதாகவும் இது, எதிர்கால சந்ததியின் தனித்துவத்துக்கும் ஆளுமைக்கும் விடுக்கப்படும் சவால் எனவும் எச்சரிக்கப்படும் நிலையிலேயே, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா போன்ற பகுதிகளில் ‘உயிர்கொல்லி போதை மருந்து விற்பனை’ என்ற தலைப்பில்…
-
- 0 replies
- 201 views
-
-
தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றானதும் ஒழுக்கமும் தெய்வீக ஐதீகமும் கொண்டதுமான அருகிவரும் விளையாட்டுமான போர்த்தேங்காய் (எறி தேங்காய்) அடித்தல் வைபவம் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நேற்று (18) மாலை நடைபெற்றது. ஒருவர் தனது கையிலே தேங்காய் வைத்திருக்க இருபது மீற்றர் தூரத்திலுள்ள இன்னொருவர் தனது கையிலுள்ள தேங்காயை மற்றவரின் கையிலுள்ள தேங்காயை நோக்கி வீசுவார். அந்த சந்தர்ப்பத்தில் மற்றையவர் தனது கையிலுள்ள தேங்காயினால் எதிரே வரும் தேங்காயை தடுத்து உடைக்கும் அல்லது அடிக்கும் நிகழ்வு “போர்த்தேங்காய் அடித்தல்” என அழைக்கப்படுகிறது. சித்திரை வருடபிறப்பினை தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு தொடர்ச்சியாக இந்த தேங்காய் அடித்தல் வைபவம் நடைபெறும். தேங்காய் …
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய் ஆர்.மகேஸ்வரி / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, பி.ப. 05:55 Comments - 0 கடந்த 4 மாதங்களாக, இழுப்பறி நிலையில் காணப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம், நேற்று முன்தினம் (28), கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கைச்சாத்தானது. இதனால், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை விட, ஒப்பந்தத்துக்குப் பின்னர், மலையகம், தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் சூடு பிடித்துள்ளன. இவ்வாறு எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாள் சம்பளமான ஆயிர…
-
- 0 replies
- 219 views
-
-
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது ! வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம் தலைமைகளையோ மக்களையோ தண்டிப்பதைக் கூட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதனை அவர் கொள்கையாக ஏற்று இறுதிவரையில் உறுதியாக இருந்தார். எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏப்ரல் 11இல் அறிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அதுகுறித்த முழமையான விடயங்களை கண்டறியாத வரையில் இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் தொடரும் நிலைமையே உள்ளது என…
-
- 0 replies
- 289 views
-
-
மறதி - அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளும் மக்களின் மறதியும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஓகஸ்ட் 28 புதன்கிழமை, மு.ப. 10:51 Comments - 0 மக்களின் ஞாபக மறதியில்தான், அரசியல்வாதிகள் பிழைப்பு ஓடுகிறது. தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கும் அவர்கள், அதிகாரத்துக்கு வந்தபின், அதிகமானவற்றை நிறைவேற்றுவது இல்லை. அதற்கு, ஆயிரத்தெட்டுக் காரணங்களையும் கூறுவார்கள். மீண்டும் ஒரு தேர்தல் வரும்போது, எந்தவித வெட்கமோ குற்ற உணர்ச்சியோ இன்றி, மீண்டும் அவர்கள் தேர்தலில் குதிப்பார்கள், திரும்பவும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். முன்னைய தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள், மக்களுக்கு மறந்து போயிருக்கும். மீண்டும் அதே அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பார்கள். ஆண்டாண்…
-
- 0 replies
- 308 views
-
-
முருகன், சாந்தன், நளினி விடுதலை விவகாரம்: தமிழக - இந்திய அரசாங்கங்களுக்கிடையில் அதிகாரப் போட்டி? இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு, தமிழக தேர்தல்க் களத்தில் மீண்டும் பிரசார வியூகமாக மாறுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று விவாதம் இப்போது மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசாங்கத்துக்கும் மாநிலத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்துக்கும் சர்ச்சைக் களமாக மாறிவிட்டது. இந்த ஏழு பேரில் ஜெயக்குமார், ரொபேர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் அடக்கம். இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபேர்ட் பையாஸ் ஆகிய நால்வரு…
-
- 0 replies
- 227 views
-
-
தேசியப் பட்டியல் பதவி யாருக்கு? வீட்டுக்குள் வெடித்தது பூகம்பம்! August 9, 2020 பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு ஆரம்பமானபோதே, தேசியப்பட்டியல் குறித்த சர்ச்சை கூட்டமைப்புக்குள் ஆரம்பமாகிவிட்டது. அம்பிகாவா?, கே.வி.தவராஜாவா?, திருமலை குகதாசனா? என ஆரம்பமான அந்த சர்ச்சை இப்போது சசிகலாவா? கலையரசனா? மாவையா என்ற கேள்விக்குறியுடன் தொடர்கின்றது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தக் கேள்விக்குப் பதில் காணவேண்டும் என்பதால் அடுத்த மூன்று நாட்களும் வீட்டுக்குள் பூகம்பம்தான்! கடந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்தது. ஆனால், இந்த முறை ஒன்றுதான் கிடைக்கும் என்பது முன்னரே ஊகிக்கப்பட்டிருந்தமையால் போட்டி கடுமையாக இருந்தது. …
-
- 0 replies
- 488 views
-
-
தமிழீழம் சிவக்கிறது - பழ. நெடுமாறன் தமிழீழத்தின் வரலாற்றுப் பதிவாய் விளங்கும் இந்நூல் 1993-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழ. நெடுமாறன் தடா-வில் கைது செய்யப்பட்ட போது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்த பிறகு, 2002-ஆம் ஆண்டு அந்நூலை வெளியிடுவதற்கான தயார் நிலையில் இருந்த போது, 2002 ஏப்ரலில் அந்நூல் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமான நூல் என வழக்கு தொடரப்பட்டது. அந்நூலை ஏற்றுமதி செய்யவிருந்ததாக சாகுல் அமீது கைது செய்யப்பட்டார்.1989ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரையுள்ள மூன்று நாள்களிலும் வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவம் நடத்திய படுகொலைகள் வரலாறு காணாத துயர நிகழ்ச்சி ஆகும். அதுபற்றிய பதிவே இந்த பகுதியாகும். அண்மையில் நூ…
-
- 0 replies
- 910 views
-
-
ராஜபக்ஷாக்களுக்கு ஜெனிவா அமர்வில் யாதார்த்தம் புரியும்: கலாநிதி தயான் ஜயதிலக விசேட செவ்வி (நேர்காணல் ஆர்.ராம்) “எம்.சி.சி.விடயத்தை லக்ஷ்மன் கதிர்காமரும், ஜெனிவா விடயத்தினை அன்ரன்பாலசிங்கமும், நீலன் திருச்செல்வமும் உயிருடன் இருந்திருந்தால் முரண்பாடுகளின்றி யதார்த்தத்தின் அடிப்படையில் கையாண்டிருப்பார்கள்” இறைமையானது உலக சட்டங்களை கடந்து மன்னர்களுக்கு நிகரான சர்வவல்லாதிக்கத்தை வழங்குவதாக கருதிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷாக்களுக்கு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் யதார்த்தம் புரியும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான(ஜெனிவா) முன்னாள் நிரந்தரவதிவிடப் பிரதிநிதியும், இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி.தயான் ஜயதில வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது தெர…
-
- 0 replies
- 399 views
-
-
இருள் சூழ்ந்த இலங்கை! காரணங்கள் என்ன? -ச.அருணாசலம் பஞ்சமும், பதட்டமும், கலவரச் சூழலுமாக இலங்கை தகிக்கிறது! உணவுக்கும், எண்ணெய்க்கும் நீண்ட க்யூ வரிசைகளில் காத்து கிடந்து சிலர் உயிரிழந்துள்ளனர்! கொந்தளிப்பின் உச்சத்தில் இலங்கை மக்கள், ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு போராடுகின்றனர். என்ன நடக்கின்றது? தேயிலைக்கும், மீனுக்கும் இயற்கை சூழல்களுக்கும் பெயர்போன இலங்கையின் இன்றைய சூழலுக்கு பல காரணிகள். ஆனால், அவற்றில் முதன்மையானது ஆட்சிக்குளறுபடி -Mismanagement என்றால், அது மிகையல்ல. அதிபர் ராஜபக்சே , ” நாடு ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது, நான் பன்னாட்டு பண நிதியத்திடம் (IMF) உதவி கேட்டுள்ளேன் ; அவர்களும் சில நிபந்தனைகளுடன் உதவ முன் வந்துள்ள…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கையை... நெருக்கடிகளிலிருந்து மீட்கும், இந்தியா! -யே.பெனிற்லஸ்- இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையால் மிகமோசமான நிலைமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. காலிமுகத்திடலில் சுயாதீனமாக ஒன்றிணைந்த குழுவினர் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு மூன்றாவது வாரத்தினை கடந்து தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தொடர்போராட்டத்திற்கு ஆதரவாக நாடாளவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்விதமான போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறையில் பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அதேநேரம், அனைத்து தொழிற்சங்கங்களும் வீதிக்கு இறங்கி பாரிய போராட்டங்களையும்…
-
- 0 replies
- 166 views
-
-
நன்றிகள் வினவு .கொம்http://www.vinavu.com/2014/09/16/manipur-criminals-as-judges/ இவர்களிடம் தான் நாங்கள் நீதி கேட்க துடிக்கிறோம் சொந்த மக்களின் உரிமைகளை மதிக்காதா உத்தமர்களிடம்.... மணிப்பூர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் போலி மோதல்கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சங்கமும் மனித உரிமை விழிப்புணர்வு அமைப்பும் அம்மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளில் போலி மோதல்படுகொலைகளில் 1528 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, இப்படுகொலைகள் குறித்து சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தன. நினைவிடம் அசாம் துப்பாக்கிப் படை நடத்திய மாலோம் படுகொலையில் உயிரிழந்தவர்களின் 13-ம…
-
- 0 replies
- 656 views
-
-
துரித்திக்கொண்டு இருக்கும் போர் வெற்றிச் சின்னங்களும் எரிந்து கொண்டிருக்கும் காயங்களும்! குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன் வடக்கு கிழக்கு நிலரப்பின் எத்தனையோ ஏக்கர் நிலப் பகுதிகளை சுதந்திர இலங்கையின் பின்னர் ஈழத் தமிழர்கள் இழந்துவிட்டனர். இலங்கைத் தீவு முழுவதுமுள்ள, ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு கிழக்கில் எஞ்சியிருந்த தொன்மங்களையும் அழித்து ஒழித்துவிட்டு, அங்கு பெரும்பான்மையின மக்களின் தொன்மங்களை நிறுவும் முயற்சிகளை பெரும்பான்மையின மக்கள் முன்னெடுக்கின்றனர். சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில் சிவனொளிபாத மலை என்ற பெயரை புத்த பாதம் என மாற்றப்பட்டுள…
-
- 0 replies
- 347 views
-
-
2004ம் ஆண்டு தடம் புரண்ட ஜனநாயகம் இன்றும் பழைய நிலைமைக்கு திரும்பவேயில்லை : வீ . ஆனந்தசங்கரி November 1, 2018 2004ம் ஆண்டு தடம் புரண்ட ஜனநாயகம் இன்றும் பழைய நிலைமைக்கு திரும்பாது புதைந்து கிடப்பதே. எனது ஒரேயொரு கவலையாகும் இன்று நடந்திருப்பவை சம்பந்தன் சேனாதிராசா போன்றோருக்கு பொது மக்களின் அடிப்படை உரிமைகளில் விளையாடாதீர்கள் என்ற எச்சரிக்கை ஒலியாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ . ஆனந்தசங்கரி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு முன் எப்பொழுதும் இல்லாதவாறு மிகவும் குழப்பமான நிலையில் நம்நாடு இருக்கும்போது நான் இந்த அறிக்கையை விடுவதற்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒடுக்குமுறை அற்ற ஆரோக்கியமான மாற்றங்களே அவசியமானவை – கீதாநந்தி… April 10, 2020 காலங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்றவாறு மாற்றங்கள் நிகழ வேண்டியது அவசியமானது. ஆனால் அம் மாற்றம் ஒடுக்குமுறை அற்றதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் அல்லவா? தற்போது உலகமே ஒரு நோய்த் தொற்றால் அவதியுற்று கொண்டும் அதற்கான தீர்வுகளை சிந்தித்தும், செயற்படுத்தியும் கொண்டிருக்கும் இவ்வேளையில். எமது நாட்டிலும் அதற்காக பல தரப்பினரும் தமது அர்ப்பணிப்பை வழங்கி வருகின்றமை மறுக்க முடியாத உண்மை. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டப்பட்டுள்ளோம். இந்நேரத்தில் “அனைத்து அரசு ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கல்வ…
-
- 0 replies
- 248 views
-
-
-
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா வளாகத்தில் காண்பிக்கப்பட்ட சனல் 4 தயாரித்த 90 நிமிடங்கள் கொண்ட கொலைக்களங்கள் ஆவணப்படம் சுவிஸ் நாட்டில் மீண்டும் திரையிடப்படவுள்ளது. சூரிச்: சனி, 02.11.2013, மதியம் 2 மணிக்கு, Kino Riffraff, பிரவேசம் இலவசம் லவுசான்: திங்கள், 04.11.2013, இரவு 6 மணிக்கு, Kino Casino de Montbenon, பிரவேசம் இலவசம் லுசேர்ன்: சனி, 07.12.2013, இரவு 6 மணிக்கு, Stattkino Luzern இருக்கைகளை info@amnesty.ch என்ற மின்னஞ்சலில் பதிவு செய்துகொள்ளலாம். பி.கு. இந்த ஆவணப்படம் பேர்ண் மாநிலத்தில் ஏற்கனவே திரையிடப்பட்டது. அதில் Cullum Mcrae கலந்து சிறப்பித்திருந்தார்.
-
- 0 replies
- 454 views
-
-
இந்தியாவின் இராணுவ உதவியும், ஆயுத உதவியும், லட்சக்கணக்கான மக்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கி யது. வீட்டை இழந்து, வயல்வெளிகளில், வெட்டவெளியில், உணவு இன்றி, உறக்கமின்றி தவித்த ஈழ மக்களின் கண்ணீர் சாபத்திற்கும்... கேட்பதற்கு நாதியில்லாமல் அன்றாடம் கொல்லப்பட்ட பல்லா யிரக்கணக்கான ஈழ மக்களின் கண்ணீர் சாபத்திற்கும்... ஒவ்வொரு நாளும் வீசப்பட்ட அபாயகரமான குண்டு வீச்சில் கால்களை இழந்து, கைகளை இழந்து, உடல் முழுவதும் ரத்த காயங் களால் ஊனமுற்று, மருத்துவ வசதி இல்லாமல் துடிதுடித்த பல்லா யிரக்கணக்கான ஈழத் தமிழ் உறவுகளின் கண்ணீர் சாபத்திற்கும்... எப்படியாவது ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று பல ஆண்டு காலமாக அறவழியில் போராடி அவமதிக்கப்பட்ட பத்து கோடி தமிழர்களின் கண்ணீர் ச…
-
- 0 replies
- 1k views
-
-
84887e2c37facd94b682c29be8a50203
-
- 0 replies
- 397 views
-
-
சிங்களத்தின் தமிழ் மக்களின் பூர்வீக ஆலயங்களில் சூறையாடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல தடவைகள் இப் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். தொடர்ந்து ஆலயங்கள் மீதான சூறையாடல்கள் எதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அன்றில் தீர்வு ஏதேனும் எட்டப்பட்டதோ என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இன்றும் ஆலயங்கள் மீதான சூறையாடல்கள் மேலும் மேலும் உச்சம் பெறுகின்றமையையே காணமுடிகின்றது. இவை சிங்கள இனவாத பெரும்பான்மையினால் நன்கு திட்டமிட்டு நடாத்தப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதமுடிகின்றது. தமிழர் தாயகப் பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பலமாகவிருந்த காலத்தில் சிங்களம், தமிழ் மக்களின் பூர்வீகங்களில் கைவைப்பதற்கு அச்சமடைந்திருந்தனர். ஆனால், இன்று தமிழ்பேசும் முஸ்லிம் மக்களின் பூர்வீகத்திலு…
-
- 0 replies
- 619 views
-
-
பிரபாகரன் இறந்து விட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை ‘பொய்’களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன், ‘மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்’ என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தகமாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்! பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடுமையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி… தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப்…
-
- 0 replies
- 766 views
-
-
‘தமிழீழம்’ இது தமிழ் மக்களின் உயிர் மூச்சு. உலகம் பூராகவும் பரந்து வாழ்கின்ற தமிழர்களின் தாயகம். சிங்களத் தீவில் தமிழ் மக்களை அடக்கி ஆள்வோரிடமிருந்து விடுதலை பெறத் துடித்த தமிழ் மக்கள் ஒன்று திரண்டு அமைத்துக்கொண்ட தனித் தமிழ்ப் பூமி. தமிழர்களின் தலைமகன் பிரபாகரனால் கட்டமைக்கப்பட்ட அழகிய பூங்கா. எந்தவித ஆசாபாசங்களும் இல்லாமல் போராடிய பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகத்தால் கட்டி யெழுப்பப்பட்ட தேசிய நாடு. விலை மதிக்க முடியாத தியாகங்களைப் புரிந்த புனிதர்கள் உறங்குகின்ற புண்ணிய பூமி. தமிழ் மக்களால் நேசிக்கப்படுகின்ற தனித் தமிழ் நாடு. மூன்று தசாப்த காலமாக தியாகங்களைப் புரிந்து கட்டியெழுப்பப்பட்ட இந்தப் புண்ணிய தேசத்தை உலகின் பல நாடுகளுடன் இணைந்து சிதைத்த சிறீலங்கா அர…
-
- 0 replies
- 847 views
-
-
இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள் உடல்கள் எரிப்பு: இனப்பாகுபாடு காட்டுகிறதா அரசு? சரேஜ் பத்திரானா பிபிசி சிங்கள சேவை Nikita Deshpande இஸ்லாமிய முறைப்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படும். உடலுக்கு எரியூட்டுவது இஸ்லாமியர்களின் வழக்கத்தில் இல்லை. ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. இந்த கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி அதிகாரிகள் இஸ்லாமியர்களின் உடல்களை தகனம் செய்து தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றனர் என இலங்கை முஸ்லிம்கள் கூறுகின்றனர். மே 4ம் தேதி, மூன்று குழந்தைகளுக்கு தாயான, 44 வயது ஃபாத்திமா ரினோசா, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்துடன் மருத்துவமனையில் அனுமதிக…
-
- 0 replies
- 435 views
-