நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் நானே அனைத்துத் தீர்மானங்களையும் எடுத்தேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகள் முழுமையாக அவர்களது சிந்தனையிலிருந்து விடுபட்டனரா என்பது தொடர்பில் இன்னும் எனக்குச் சந்தேகம் நிலவுகிறது என்றும் சுட்டிக்காட்டினார். நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேரடி ஒளிபரப்புச் செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நான் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலப்பகுதியில் நேர்மையான முறையிலேயே எனது சேவையை முன்னெடுத்தேன். நான் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவி…
-
- 0 replies
- 224 views
-
-
எல்லாப் பிரச்சனைகளுக்கும் இரண்டு பக்கம் இருக்கின்றன என்பார்கள். தமிழ்நாட்டு சட்டசபைக்குள் இரண்டு கட்சிப் பிரச்சனையும் இருவர் மட்டில் எழும் பிரச்சனையும் தான் எல்லாப் பிரச்சனைகும் பெரும் பிரச்சனையாகி விட்டது. எல்லாப் பிரச்சனைகளும் சரிவந்தாலும் அ.தி.மு.கவும்--தி.மு.க.வில் ஏற்படும் பிரச்சனைகள் ஒத்துவருவதாக எந்தக் கட்டத்திலும் காலத்திலும் நடைபெறப் போவதில்லை. சிரிப்புத்தான் பெண்மைக்கு அழகு அகத்தின் அழகுதான் ஆண்மையின ஆளுமைச் சிறப்பின் அழகு இரண்டு திராவிடக்கட்சித் தலைவர்களிடம் இவை இரண்டும் சிறிதளவேணும் இல்லை: ஒன்று கருணாநிதி இரண்டாவது ஜெயலலிதா மூன்றாவது பக்கம் யார் வெல்வது தோற்பது என்ற நிலையில் முழிபிதுங்கி செய்வதறியாத தமிழ் மக்கள். நாலாவது பக்கம் புதிர் நிறைந்த பக்கம் சர்ச்…
-
- 0 replies
- 224 views
-
-
மனமே அனைத்திற்கும் காரணம் : ஒரு நிலைப்படுத்தினால் சாதிக்கலாம் என்கிறார் இஸ்ரேலிய உளநல ஆலோசகர் கையி By PRIYATHARSHAN 28 SEP, 2022 | 02:02 PM ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அசாத்திய திறமையுடையவர்களாகத்தான் பிறக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையின் வெற்றிக்கு அவனது மனமே காரணமாக அமைகின்றது. மனதை ஒரு நிலைப்படுத்தினால் எதனையும் சாதிக்க முடியுமென கூறுகிறார் இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல உளநல ஆலோசகரான கையி ரெகேவ் ரோசன்பெர்க் ( Guy Regev Rosenberg ). இஸ்ரேலில் பிறந்த கத்தோலிக்கரான கையி ரெகேவ் ரோசன்பெர்க்கிற்கும் இலங்கைக்கும் இடையில் பல தலைமுறைகளாக தொடர்புகள் காணப்படுகின்றன. அந்தவகையில் இலங்கையையும் இலங்கை மக்களையும் தான் மிகவும் வ…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
பாராளுமன்றத் தேர்தல் வரப்போவது உறுதியாகியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ்ப்பாணத்தில் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பெரியளவிலான கருத்தரங்கு நடத்தப்பட்டது. வடமராட்சி, வலிகாமம், தென்மராட்சி என பிரதேச ரீதியாகவும் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கெல்லாம், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தான், பிரதான பேச்சாளராகப் பங்கேற்று வருகிறார். கருத்தாளர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்தார். பிறர் மீது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் தவறவில்லை. அதேவேளை, தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை. பாராளுமன்றம் கலைக்கப்படப் போகிறது என்பதை, யாழ்ப…
-
- 0 replies
- 223 views
-
-
அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய கொலைகார துப்பாக்கி தேசம் மே 25, 2022 –இ.பா.சிந்தன் வீட்டில் தனது பாட்டியை சுட்டுக் கொன்றுவிட்டு, அருகிலிருந்த தொடக்கப் பள்ளியில் 19 குழந்தைகளையும், ஓர் ஆசிரியரையும் சுட்டுக் கொன்ற அமெரிக்க இளைஞனின் செயல், உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாத நாடு எதுவென்று கேட்டால் நாம் எதையெதையோ யோசிப்போம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அது அமெரிக்காவைத் தவிர வேறில்லை. அதற்கு மிகமுக்கியமான காரணம் என்னவென்றால், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனக்குப் பிடிக்காதவர்களைக் கொல்லவேண்டும் என்றால், காவல்துறையினரும் துப்பாக்கியைக் கையில் எடுக்கலாம், காவல்துறையில் இல்லாத மக்களில் ஒருவரும் துப்பாக்கியைத் த…
-
- 0 replies
- 223 views
-
-
Published By: RAJEEBAN 23 SEP, 2023 | 09:35 AM சனல் 4 ஆவணப்படத்திற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சீர்ஆசாத் மௌலானா மேலும் பல தகவல்களை அடங்கிய புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் புத்தளத்தின் தென்னந்தோப்பில் இடம்பெற்ற சந்திப்பு – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்னரும் பின்னரும் பிள்ளையானிற்கும் தனக்குமான உரையாடல்கள் உட்பட பல விபரங்களை வெளியிட்டுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது . ஆவணப்படம் குறித்து சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் எ…
-
- 1 reply
- 223 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தல்; வாக்களிப்பது எப்படி?; 50 வீதம் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ந.ஜெயகாந்தன் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதிகளவில் வாக்குகளை பெற்றுக்கொள்…
-
- 0 replies
- 223 views
-
-
நீதிமன்ற உத்தரவு மீறல்களுக்கு முற்றுப்புள்ளி அவசியம் : சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் செம்மலை விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது குறித்த நீதிமன்ற உத்தரவு காலதாமதமாகியது என ஞானசாரதேரர் உள்ளிட்டவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டமைக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாது விட்டால் விமர்சனங்களைக் கொண்டிருக்கும் இலங்கை நீதித்துறையின் மீதான முழுமையான நம்பிக்கையை மக்கள் இழப்பதற்கு வழியேற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாராதிபதியின் பூதவுடல் …
-
- 0 replies
- 222 views
-
-
உண்மைகளை மூடிமறைக்க மோடியும் சங் பரிவாரமும் செய்யும் சூழ்ச்சிகள்! KaviFeb 11, 2023 11:47AM எஸ்.வி.ராஜதுரை 2002 இல் குஜராத்தில் முஸ்லிம்கள் இனக்கொலை செய்யப்பட்டதில் அப்போது அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தவரும் இப்போது இந்தியாவின் பிரதமராக இருப்பவருமான நரேந்திர மோடி வகித்த பாத்திரம் பற்றி பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை, அதைப் பார்க்காமலேயே தடை செய்த ஒன்றிய அரசாங்கத்தால் , அவர் வகித்த பாத்திரம் உலகறியச் செய்யப்பட்டுவிட்டது என்ற ஆத்திரத்தில், ‘ பிபிசி காலனிய மனோபாவத்துடன் செயல்படுவதாகக்’ குற்றம் சாட்டுவதைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியவில்லை. ’மூத்த, நடுநிலைப் பத்திரிகையாளர்’ என்று சொல்லப்பட்டு தொலைக்காட்சி விவாதங்களில் நூற்றுக்கணக்கான முறை பங்கேற…
-
- 0 replies
- 222 views
-
-
ரஷ்ய – உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம் | தமிழில்: ஜெயந்திரன் April 4, 2022 ரஷ்ய-உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற ஆக்கிரமிப்புப் போர் ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவச்சமர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த இராணுவ ரீதியிலான சமருக்கு இணையாக தகவற் சமரும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. இந்த தகவல் சமரில் எதிருக்கெதிராகப் போராடுபவர்களும் அதே ரஷ்ய அரச ஊடகங்களும் அதே வேளையில் மேற்குலகத்தின் ஊடகங்களும் ஆகும். இந்த இரு சாராருமே தமது அரசுகளின் நலனைப் பாதுகாப்பதற்காக தகவல் பரிமாற்றத்தை ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆகவே இந்தப் போரில் …
-
- 0 replies
- 222 views
-
-
ஐ.நா. ஊடாக தமிழருக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது: கனடா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினூடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இழந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துக் கொண்டிருந்த ஹரி சங்கரி ஆதவன் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டார். இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதால் காலம் வீணடிப்பு மாத்திரமே ஏற்படுவதாக ஒரு பகுதி மக்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளை குழப்ப கூட…
-
- 0 replies
- 221 views
-
-
ஊழலாகிவிட்ட ஊழல் ஒழிப்புப் போர் குற்ற விசாரணை நிறுவனங்களான இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையினால் நாட்டில் பாரியதோர் சர்ச்சை உருவாகியிருக்கிறது. அத்தோடு அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதோடு அதன் உண்மையான நிலைமையும் நாட்டுக்கு அம்பலமாகி விட்டது. தமது அரசியல் எதிரிகளான முன்னாள் ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் வகையிலும் தம்மைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட ஐக…
-
- 0 replies
- 221 views
-
-
பிரபலங்களுக்கு மட்டுந்தான் சமூகப் பொறுப்பா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சமூகங்களில் பிரபலங்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன என்பது தொடர்பான விவாதங்கள், எப்போதுமே உருவாகி வந்திருக்கின்றன. ஆனால், பேரழிவுகள் அல்லது அதைப் போன்ற சம்பவங்களின்போது, இது தொடர்பான விவாதங்கள் அதிகம் எழுவதுண்டு. அதேபோலவே, சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளம், அதைத் தொடர்ந்தான குழப்ப, பதற்ற, அழிவு நிலைமைகளின்போது, இந்தியப் பிரபலங்களின் பங்களிப்புத் தொடர்பாக அதிகம் கவனஞ்செலுத்தப்பட்டது. அதைப் போன்றே, அண்மையில் கசிந்த அனிருத் - சிம்பு கூட்டணியின் பாடலின் போதும், இதே கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையிலேயே…
-
- 0 replies
- 221 views
-
-
கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற ஆயுதக்கிடங்கு வெடிப்பினை பற்றியே இன்று நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பேசுகிறார்கள். குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்வினை ஏற்படுத்தி இருக்கின்றது. வெடியோசை சிங்கள மக்களுக்கு புதியது தான் ஆனால் எமது தமிழ் மக்களுக்கோ ஆலய மணியோசைதான். இன்றிலிருந்து ஏழு வருடங்கள் சற்றுப் பின்னோக்கி வடக்கு - கிழக்கினை பாருங்கள். அங்கு தமிழ் மக்கள் அனுபவித்த வலிகளையும் துன்பங்களையும் அளவிட்டால் உங்களுக்கே புரியும். நீங்கள் இன்று கேட்டு அதிர்ந்த வெடியோசைகள் எல்லாம் எள்ளவுதான் என. நாட்டில் இருக்கக் கூடிய ஒட்டுமொத்த ஆயுதக் கிடங்குகளையும், தமிழ் மக்களை அழிக்கும் நோக்குடன் கொட்டியவர்கள், இன்று கொஸ்கம சம்பவத்திற்காய் நீலிக…
-
- 0 replies
- 220 views
-
-
மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலையில் மறைக்கப்படும் நீதி -பா.அரியநேத்திரன் December 25, 2022 இன்று (25/12/2022) மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலை இடம்பெற்று 17, வது நினைவு நாள். தமிழ்தேசிய கூட்டமைப்பு 2001.ல் உருவாக்கப்பட்டாலும் 2004,ஏப்ரல்,04,ல் இடம்பெற்ற பொதுத்தேர்தல் என்பது வரலாற்றில் முதல்தடவையாக வடக்கு கிழக்கில் இருந்து 633,654 வாக்குகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்று 22, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட ஒரு தேர்தலாகும். 2004, பெப்ரவரி,06,ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மறுநாள் வேட்பு மனு கோரல் அறிவிப்பு விடுக்கப்பட்டு சகல மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜோசப்பரரா…
-
- 1 reply
- 220 views
-
-
கடந்து செல்லும் 2015: வரலாற்றில் இடம்பிடித்த சில முக்கிய நிகழ்வுகள்: தொகுப்பு சனவரி 2: வடக்கே தொடருந்து சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டது. சனவரி 8: ஜனாதிபதித் தேர்தலில் 2015: சராசரியாக 70 வீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரமராகி இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. சனவரி 9: ஜனாதிபதித் தேர்தலில் 2015: வட, கிழக்கு, மற்றும் மலையக மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அறிவித்தார். சனவரி 11: ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராசபக்ச ஆட்சிக் கவி…
-
- 0 replies
- 219 views
-
-
பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய் ஆர்.மகேஸ்வரி / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, பி.ப. 05:55 Comments - 0 கடந்த 4 மாதங்களாக, இழுப்பறி நிலையில் காணப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம், நேற்று முன்தினம் (28), கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கைச்சாத்தானது. இதனால், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை விட, ஒப்பந்தத்துக்குப் பின்னர், மலையகம், தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் சூடு பிடித்துள்ளன. இவ்வாறு எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாள் சம்பளமான ஆயிர…
-
- 0 replies
- 219 views
-
-
நாட்டின் நலன் மக்கள் கையில் November 1, 2021 — கருணாகரன் — நாட்டில் விலைவாசி மலைபோல ஏறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பதட்டத்தோடுதான் மக்கள் வாழ வேண்டிய நிலை. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று சனங்கள் அழுகிறார்கள். சிலர் கண்டபாட்டுக்கு அரசாங்கத்தைத் திட்டுகிறார்கள். அரசாங்கத்தைத் திட்டி என்ன செய்து விட முடியும்? இந்த அரசாங்கத்தை மாற்றுவதுதான் மீட்சிக்கு வழி என்று பலரும் சொல்கிறார்கள். இது நாட்டின் பொருளாதாரத்தோடு சம்மந்தப்பட்டது. இந்த அரசாங்கமாவது இந்தளவுக்குத் தாக்குப் பிடிக்கிறது. இல்லையென்றால் கஞ்சிக்கும் வழியற்றுப் போய் விடும் என்று சொல்வோரும் உண்டு. இவை எல்லாவற்றுக்கும் காரணம் பொருளாதார நெருக்…
-
- 0 replies
- 218 views
-
-
இலங்கையின் அவலநிலைக்கு... சிங்களத் தலைவர்களின், இந்திய எதிர்ப்புவாதம்தான் காரணமா?
-
- 0 replies
- 218 views
-
-
அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துங்கள் நாட்டில் சட்டம், ஒழுங்கு உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்கின்ற நிலைமையானது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நாடளாவிய ரீதியில் ஆங்காங்கு குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்லும் போக்கை காணமுடிகிறது. கடத்தல்கள், கொலைச் சம்பவங்கள், துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள், தாக்குதல் சம்பவங்கள், பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் துஷ்பிரயோக சம்பவங்கள், வீட்டு வன்முறைகள் என குற்றச்செயல்கள் அதிகரித்து செல்…
-
- 0 replies
- 217 views
-
-
அடுத்த மின் செயலிழப்புக்கு வழிகோலப்படுகிறதா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்த ஆண்டில் மாத்திரம், இரண்டு தடவைகள் மின் செயலிழப்பு ஏற்பட்டு, முழு நாடுமே இருளில் மூழ்கியிருந்தது. இந்த நிலைமையால், நாடு முழுவதுமே - குறிப்பாக கொழும்பு போன்ற நகரப்பகுதிகள் - ஸ்தம்பிக்குமளவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்த இரண்டு மின் செயலிழப்புகளுமே, அரசாங்கத்தினுடையதோ அல்லது மின்சார சபையினுடையதோ நேரடியான தவறின் காரணமாக ஏற்பட்டவையன்று. மாறாக, பல்வேறுபட்ட இணைந்த காரணிகள் காரணமாகவே ஏற்பட்டிருந்தன. இறுதியாக ஏற்பட்ட மின் செயலிழப்பு, பியகம உப மின்நிலையத்தில் ஏற்பட்ட உபகரணப் பழுது காரணமாகவே ஏற்பட்டிருந்தது. அந்த உப மின்நிலையத்தில் காணப்பட்ட மின்மாற்றி, சும…
-
- 0 replies
- 216 views
-
-
கல்முனை உண்ணாவிரதம் தீர்வுக்கு வழிகோலுமா ?: அரசியல் சகதிக்குள் சிக்கித் தத்தளிக்கும் நிலை மாறுமா..? கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக்கோரி நடத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் கடந்த வாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. கடந்த திங்கள்(17) முதல் ஞாயிறு (23) ஏழு தினங்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத் தலைவரும் கல்முனை முருகன் ஆலய பிரதம குருவுமான சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த சிவக்குருக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அழகக்கோன் விஜ…
-
- 0 replies
- 216 views
-
-
நஸீர் அகமட்….! மக்கள் வழங்கிய ஆணையை மீறியதற்கான தண்டனை…! October 8, 2023 (மௌன உடைவுகள் -47) — அழகு குணசீலன்— “கண்டா வரச்சொல்லுங்க … அவரைக்கையோடு கூட்டி வாருங்க” இந்த பாடலை மட்டக்களப்பு தமிழ், முஸ்லீம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த நஸீர் அகமட் எம்.பி. அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவியையும் பெற்றிருப்பவர். கோத்தபாய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 20 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த 6 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுள் இவரும் ஒருவர். முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் 20 ஐ எதிர்த்து வாக்களிப…
-
- 0 replies
- 216 views
-
-
இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது- பேராசிரியர் சந்தா தேவராஜன் இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கை ஜனாதிபதியின் கடன் ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சந்தா தேவராஜன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமூக அமைதியின்மை தொடர்வதால் நாடு ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றது என அவர் சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார். உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகளும் முன்னொருபோதும் இல்லாத பணவீக்கமும் தொடர்ச்சியான மின்வெட்டுகளும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை வீதியில் இறங்கச்செய்துள்ளன,1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஒருபோதும் இல்லாத வீழ்ச்சியை நாடு எதிர்கொள்கின்றது. சமூக…
-
- 0 replies
- 216 views
-
-
பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024 ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன…
-
- 0 replies
- 216 views
-