Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஐ.நா. ஊடாக தமிழருக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது: கனடா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினூடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இழந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துக் கொண்டிருந்த ஹரி சங்கரி ஆதவன் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டார். இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதால் காலம் வீணடிப்பு மாத்திரமே ஏற்படுவதாக ஒரு பகுதி மக்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளை குழப்ப கூட…

  2. Published By: RAJEEBAN 23 SEP, 2023 | 09:35 AM சனல் 4 ஆவணப்படத்திற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சீர்ஆசாத் மௌலானா மேலும் பல தகவல்களை அடங்கிய புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் புத்தளத்தின் தென்னந்தோப்பில் இடம்பெற்ற சந்திப்பு – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்னரும் பின்னரும் பிள்ளையானிற்கும் தனக்குமான உரையாடல்கள் உட்பட பல விபரங்களை வெளியிட்டுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது . ஆவணப்படம் குறித்து சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் எ…

  3. பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய் ஆர்.மகேஸ்வரி / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, பி.ப. 05:55 Comments - 0 கடந்த 4 மாதங்களாக, இழுப்பறி நிலையில் காணப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம், நேற்று முன்தினம் (28), கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கைச்சாத்தானது. இதனால், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை விட, ஒப்பந்தத்துக்குப் பின்னர், மலையகம், தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் சூடு பிடித்துள்ளன. இவ்வாறு எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாள் சம்பளமான ஆயிர…

  4. இலங்கை பொருளாதார நெருக்கடி: நாட்டில் பழைய கார்கள் மட்டுமே ஓடுவது ஏன்? எம் மணிகண்டன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கைச் சாலைகளில் புதிய கார்களைக் காண்பது அரிது. பளபளப்பாகத் தெரியும் சில கார்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவையாகவே இருக்கும். காரணம் இலங்கையில் புதிய மோட்டார் வாகனங்கள் எதுவும் கிடையாது. இலங்கையில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அசெம்ப்ளிங் எனப்படும் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வாகனங்களைத் தயாரிக்கும் பணிகளும் பெரிய அளவில் கிடையாது. ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், ஜப்பானில் இருந்தும்தான் பெரு…

  5. நாட்டின் நலன் மக்கள் கையில் November 1, 2021 — கருணாகரன் — நாட்டில் விலைவாசி மலைபோல ஏறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பதட்டத்தோடுதான் மக்கள் வாழ வேண்டிய நிலை. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று சனங்கள் அழுகிறார்கள். சிலர் கண்டபாட்டுக்கு அரசாங்கத்தைத் திட்டுகிறார்கள். அரசாங்கத்தைத் திட்டி என்ன செய்து விட முடியும்? இந்த அரசாங்கத்தை மாற்றுவதுதான் மீட்சிக்கு வழி என்று பலரும் சொல்கிறார்கள். இது நாட்டின் பொருளாதாரத்தோடு சம்மந்தப்பட்டது. இந்த அரசாங்கமாவது இந்தளவுக்குத் தாக்குப் பிடிக்கிறது. இல்லையென்றால் கஞ்சிக்கும் வழியற்றுப் போய் விடும் என்று சொல்வோரும் உண்டு. இவை எல்லாவற்றுக்கும் காரணம் பொருளாதார நெருக்…

  6. "தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்": ஜனாதிபதி வேட்பாளர் அணுரகுமார திசாநாயக்கவின் விசேட செவ்வி இந்த நாட்டில் அரசியல் தீர்வு விடயங்களில் அரசாங்கம் அக்கறை செலுத்தாமையே அளவுக்கதிகமாக ரத்தக்கறை படிய காரணமாக மாறியது. தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளில் தலையிட நாம் தயார். வடக்கு கிழக்குக்கு அப்பால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தமிழர்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்றால் சந்தேகத்திற்கு அப்பால் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரியுங்கள். "வடக்கு – கிழக்கு மக்களினால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தெரிவுசெய்ய வேண்டும் என்றால் மக்கள் விடுதலை முன்னணியையே தெரிவுசெய்ய வேண்டும். தெற்கின் கட்சியொன்றை தமிழ் மக்கள் நம்புவதென்றால் மக்கள் விடுதலை முன்னணியே ஒரே …

  7. மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலையில் மறைக்கப்படும் நீதி -பா.அரியநேத்திரன் December 25, 2022 இன்று (25/12/2022) மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் படுகொலை இடம்பெற்று 17, வது நினைவு நாள். தமிழ்தேசிய கூட்டமைப்பு 2001.ல் உருவாக்கப்பட்டாலும் 2004,ஏப்ரல்,04,ல் இடம்பெற்ற பொதுத்தேர்தல் என்பது வரலாற்றில் முதல்தடவையாக வடக்கு கிழக்கில் இருந்து 633,654 வாக்குகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்று 22, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட ஒரு தேர்தலாகும். 2004, பெப்ரவரி,06,ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மறுநாள் வேட்பு மனு கோரல் அறிவிப்பு விடுக்கப்பட்டு சகல மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜோசப்பரரா…

  8.  ஊழலாகிவிட்ட ஊழல் ஒழிப்புப் போர் குற்ற விசாரணை நிறுவனங்களான இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையினால் நாட்டில் பாரியதோர் சர்ச்சை உருவாகியிருக்கிறது. அத்தோடு அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதோடு அதன் உண்மையான நிலைமையும் நாட்டுக்கு அம்பலமாகி விட்டது. தமது அரசியல் எதிரிகளான முன்னாள் ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் வகையிலும் தம்மைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட ஐக…

  9.  பிரபலங்களுக்கு மட்டுந்தான் சமூகப் பொறுப்பா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சமூகங்களில் பிரபலங்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன என்பது தொடர்பான விவாதங்கள், எப்போதுமே உருவாகி வந்திருக்கின்றன. ஆனால், பேரழிவுகள் அல்லது அதைப் போன்ற சம்பவங்களின்போது, இது தொடர்பான விவாதங்கள் அதிகம் எழுவதுண்டு. அதேபோலவே, சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளம், அதைத் தொடர்ந்தான குழப்ப, பதற்ற, அழிவு நிலைமைகளின்போது, இந்தியப் பிரபலங்களின் பங்களிப்புத் தொடர்பாக அதிகம் கவனஞ்செலுத்தப்பட்டது. அதைப் போன்றே, அண்மையில் கசிந்த அனிருத் - சிம்பு கூட்டணியின் பாடலின் போதும், இதே கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையிலேயே…

  10. இலங்கையின் அவலநிலைக்கு... சிங்களத் தலைவர்களின், இந்திய எதிர்ப்புவாதம்தான் காரணமா?

  11. ரஷ்ய – உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம் | தமிழில்: ஜெயந்திரன் April 4, 2022 ரஷ்ய-உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற ஆக்கிரமிப்புப் போர் ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவச்சமர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த இராணுவ ரீதியிலான சமருக்கு இணையாக தகவற் சமரும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. இந்த தகவல் சமரில் எதிருக்கெதிராகப் போராடுபவர்களும் அதே ரஷ்ய அரச ஊடகங்களும் அதே வேளையில் மேற்குலகத்தின் ஊடகங்களும் ஆகும். இந்த இரு சாராருமே தமது அரசுகளின் நலனைப் பாதுகாப்பதற்காக தகவல் பரிமாற்றத்தை ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆகவே இந்தப் போரில் …

  12. 10 DEC, 2024 | 12:27 PM இலங்கையர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அகலாத டச்மார்ட்டின் Dutch Martinair DC8 விமான விபத்து நிகழ்ந்து டிசம்பர் நான்காம் திகதியுடன் ஐம்பது வருடங்களாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் நோர்ட்டன் பிரிட்ஜின் ஏழு கன்னிமலையில் மோதி விழுந்துநொருங்கியது. அந்த விமானத்திலிருந்த 182 பயணிகள் உட்பட 191 பேரும் உயிரிழந்தனர். மக்காவிற்கு சென்றுகொண்டிருந்த யாத்திரிகர்கள் உட்பட 191 பேர் பயணித்துக்கொண்டிருந்த அந்த விமானம் கடும் காடுகள் மத்தியில் காணப்பட்ட மலையில் மோதி விபத்துக்குள்ளானது.விமானத்தின் சிதைவுகள் காணப்பட்ட பகுதியில் பயணிகளின் உடல்களு…

  13. 12 APR, 2024 | 09:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நவீன பாதுகாப்பு தளவாடங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன், இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை முழுமையாக வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே மேற்கண்டவாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. …

  14. கடந்து செல்லும் 2015: வரலாற்றில் இடம்பிடித்த சில முக்கிய நிகழ்வுகள்: தொகுப்பு சனவரி 2: வடக்கே தொடருந்து சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டது. சனவரி 8: ஜனாதிபதித் தேர்தலில் 2015: சராசரியாக 70 வீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரமராகி இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. சனவரி 9: ஜனாதிபதித் தேர்தலில் 2015: வட, கிழக்கு, மற்றும் மலையக மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அறிவித்தார். சனவரி 11: ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராசபக்ச ஆட்சிக் கவி…

  15. லத்தீப் பாரூக் தமிழில்: சப்ரி அஹமட் கடந்த 14 மாதங்­க­ளுக்கு மேலாக தண்ணீர், உணவு, மருந்து, மின்­சாரம் உள்­ளிட்ட உயிர் வாழ்­வ­தற்­குத் ­தேவை­யான அனைத்தும் பறிக்­கப்­பட்ட நிலையில் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்­மனி போன்ற நாடு­களால் விநியோ­கிக்­கப்­பட்டு வீசப்­படும் 85,000 தொன் இற்கும் அதி­க­மான குண்­டு­க­ளாலும் இஸ்­ரேலின் அதி நவீன அழிவு தரும் ஆயு­தங்­க­ளி­னாலும் இன்­று­வரை காசா, பலஸ்தீன் மக்­களின் மீதான படு­கொலை தாக்­கு­தல்கள் தினம் தினம் அரங்­கே­றிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்த அப்­பட்­ட­மான இனப்­ப­டு­கொ­லைக்கு அமெ­ரிக்­காவின் அடி­வ­ரு­டி­க­ளாக செயற்­படும் சில முஸ்லிம் அரபு நாடு­களும் உடந்­தை­யாக உள்ளன. இரண்டாம் உல­கப்­போ­ருக்­குப்­பின்னர் மனி­…

    • 0 replies
    • 212 views
  16. அடுத்த மின் செயலிழப்புக்கு வழிகோலப்படுகிறதா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்த ஆண்டில் மாத்திரம், இரண்டு தடவைகள் மின் செயலிழப்பு ஏற்பட்டு, முழு நாடுமே இருளில் மூழ்கியிருந்தது. இந்த நிலைமையால், நாடு முழுவதுமே - குறிப்பாக கொழும்பு போன்ற நகரப்பகுதிகள் - ஸ்தம்பிக்குமளவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்த இரண்டு மின் செயலிழப்புகளுமே, அரசாங்கத்தினுடையதோ அல்லது மின்சார சபையினுடையதோ நேரடியான தவறின் காரணமாக ஏற்பட்டவையன்று. மாறாக, பல்வேறுபட்ட இணைந்த காரணிகள் காரணமாகவே ஏற்பட்டிருந்தன. இறுதியாக ஏற்பட்ட மின் செயலிழப்பு, பியகம உப மின்நிலையத்தில் ஏற்பட்ட உபகரணப் பழுது காரணமாகவே ஏற்பட்டிருந்தது. அந்த உப மின்நிலையத்தில் காணப்பட்ட மின்மாற்றி, சும…

  17. கல்­முனை உண்­ணா­வி­ரதம் தீர்­வுக்கு வழி­கோ­லுமா ?: அரசியல் சகதிக்குள் சிக்கித் தத்தளிக்கும் நிலை மாறுமா..? கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்­தக்­கோரி நடத்­தப்­பட்ட உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் கடந்­த­ வாரம் அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருந்­தது. கடந்த திங்கள்(17) முதல் ஞாயிறு (23) ஏழு தினங்கள் சாகும்­வரை உண்­ணா­வி­ர­த­மி­ருந்த கல்­முனை சுபத்ரா ராமய விகா­ரா­தி­பதி வண.ரண்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரர் கிழக்­கி­லங்கை இந்­து கு­ருமார் ஒன்­றியத் தலை­வரும் கல்­முனை முருகன் ஆலய பிர­தம குரு­வு­மான சிவஸ்ரீ க.கு.சச்­சி­தா­னந்த சிவக்­கு­ருக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கல்­முனை மாந­க­ர­சபை உறுப்­பி­னர்­க­ளான சந்­தி­ர­சே­கரம் ராஜன், அழ­கக்கோன் விஜ…

  18. தெற்கு சமஷ்டிக்கு தயாரில்லை என்பதால் ’13’ ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்- ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே இறுதித் தீர்வாக இருக்க வேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் தென்னிலங்கை மக்கள் அதற்குத் தயாரான நிலையில் இல்லை. அதனால் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமலேயே இதனை மேற்கொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் தெரிவித்தார். முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்…

  19. சல்மான் ருஷ்டி – சர்ச்சைகளின் சிருஷ்டி..! Posted on August 14, 2022 by தென்னவள் 13 0 நியூயோர்க்கில் இடம்பெற்ற சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலானது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறை என மேற்குலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் இறைதூதரை அவமதிக்கும் விதத்தில் அவர் எழுதிய சாத்தானின் வசனங்கள் என்ற படைப்புக்காக அவருக்குக் கிடைத்த தண்டனை இது என இஸ்லாம் மார்க்க விசுவாசிகள் கூறி வருகின்றனர். இஸ்லாமியர்களின் கோபத்தை குறை கூற முடியாது. சல்மான் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை விமர்சித்த ஒரு படைப்பாளியாக இனங்காணப்படுவதற்கு முன்பாக அவர் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தேதே இந்த சீற்றங்களுக்கு மூல காரணம். 1981 இல் அவர் எழுதிய Mid Night Children எ…

    • 0 replies
    • 211 views
  20. அதி­க­ரிக்கும் குற்றச்செயல்­களை தடுத்து நிறுத்­துங்கள் நாட்டில் சட்டம், ஒழுங்கு உரிய முறையில் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்ற நிலையில் தொடர்ச்­சி­யாக குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்துச் செல்­கின்ற நிலை­மை­யா­னது கவ­லையை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கி­றது. குறிப்­பாக நாட­ளா­விய ரீதியில் ஆங்­காங்கு குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்துச் செல்லும் போக்கை காண­மு­டி­கி­றது. கடத்­தல்கள், கொலைச் சம்­ப­வங்கள், துப்­பாக்கிப் பிர­யோக சம்­ப­வங்கள், தாக்­குதல் சம்­ப­வங்கள், பாலியல் வல்­லு­றவு சம்­ப­வங்கள் மற்றும் சிறுவர் சிறு­மிகள் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள், வீட்டு வன்­முறைகள் என குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்து செல்…

  21. மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு – டொனமூர் யாப்பு முதல் உத்தேச யாப்பு வரை என்ற நூல் பற்றிய ஆய்வரங்கம் கடந்த 01.10.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் க.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் நிகழ்த்திய ஆய்வுரை பின்வருமாறு, இலங்கையில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் குறித்தும் இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தீர்வு காணப்படும் என்ற முழக்கங்கள் இலங்கை அரசியலில் பெரிதாக சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வேளையில் இலங்கையில் புதிய அரசியல் யாப்புக் குறித்து குறிப்பாக, மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய நூல் குறித்த ஆய்வரங்கில் ஒன்றுகூடியுள்ளோம். நண்பர் மு. திருந…

  22. இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது- பேராசிரியர் சந்தா தேவராஜன் இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கை ஜனாதிபதியின் கடன் ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சந்தா தேவராஜன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமூக அமைதியின்மை தொடர்வதால் நாடு ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றது என அவர் சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார். உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகளும் முன்னொருபோதும் இல்லாத பணவீக்கமும் தொடர்ச்சியான மின்வெட்டுகளும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை வீதியில் இறங்கச்செய்துள்ளன,1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஒருபோதும் இல்லாத வீழ்ச்சியை நாடு எதிர்கொள்கின்றது. சமூக…

    • 0 replies
    • 209 views
  23. தாஜூதீனின் படுகொலை தொடர்பாக உதவிக் காவற்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் ராஜபக்சாக்களின் சட்டவாளர்களுடன் கோத்தபாயவின் வீட்டில் சிறப்புக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கோத்தபாயவிற்கு நெருக்கமான அதிகாரியான அனுர சேனநாயக்க, கோத்தபாயவின் கட்டளைகளுக்கு இணங்கச் செயற்பட்டார் என்பதில் எவ்வித இரகசியமுமில்லை. அனுராவின் கைதானது கோத்தபாயவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோத்தபாயவைக் கைதுசெய்வதற்கான சரியான நேரத்திற்காக ஊழல் மற்றும் மோசடிக்கான இயக்குனர் டில்ருக்சி காத்திருப்பதை வெளிக்காட்டும் சுவரொட்டிகள் கடந்த வார இறுதியில் நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. கடந்த 4ஆம் நாள், இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட வேளையில், சிறிலங்கா …

    • 0 replies
    • 209 views
  24. வெட்கமே இல்லாமல் பேசும் அரசியல்வாதிகள் முன்னணி சோஷலிஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிரேம்குமார் குணரத்னத்துக்கு இலங்கையில் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவருக்கு, இலங்கையில் அரசியலில் ஈடுபட உரிமை இருக்கிறது என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறியிருக்கிறார். கடந்த வருடம் நாடு கடத்தப்பட்ட குணரத்னம், கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலத்தில் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தார். அவரது விஸா காலம் ஜனவரி மாதம் முடிவடைந்த போதும், மீண்டும் தமக்கு பிரஜாவுரிமை இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு அவர் செல்லவில்லை. எ…

  25. ourtesy: அ. மயூரன், M.A. முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இருந்து கருப்புச் சந்தை ஆயுதக் கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்திருந்தார். முதலாவதாக வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் நிலையில் அங்கு இலங்கை சாதாரண வர்த்தகத்தில் ஈடுபடுவதையே அமெரிக்கா விரும்பவில்லை. அப்படி இருக்கையில் ஆயுதக் கொள்வனவை அதுவும் கருப்பு சந்தையில் வடகொரியா மூலம் இருந்து இலங்கை அரசு பெற்றதை அமெரிக்கா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டாது என்பதை இலங்கை அரசுக்கு தெரியும். அப்படி தெரிந்திருந்தும் ஏன் பொறுப்பு வாய்ந்த நிதி அமைச்சர் இவ்வாறு தகவலை பகிரங்கமாக கூறினார் என்ற கேள்விக்கான பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.