நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
பிரசல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: விளைநிலத்தின் அறுவடை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பயங்கரவாதத்தைப் பயங்கரவாதத்தால் ஒழிக்க முடியாது. ஒரு பயங்கரவாதத்துக்கெதிரான இன்னொரு பயங்கரவாதம், இரு தரப்பிலும் அழிவுகளை மட்டுமே பரிசாகக் கொடுக்கிறது. ஆனாற் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் அதை உணர்வதில்லை. அதை என்றோ உணரும் போது காலங் கடந்துவிடுகிறது. உண்மையில் பயங்கரவாதத்துக்கெதிரான பயங்கரவாதம் மேலும் பயங்கரவாதங்கட்கு வித்திடுகிறது. கடந்த வாரம், பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பெல்ஜியத்தை உலகெங்கும் பரவும் பயங்கரவாதத்தின் இன்னொரு பலிபீடமாக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தலைநகரும் நேட்டோவின் தலைமையலுவலகம் அமைந்த நகரும் எனுஞ் சிறப்பு அடையா…
-
- 0 replies
- 208 views
-
-
அசாத் மௌலானா! சாட்சியா சந்தேக நபரா? September 15, 2023 (மௌன உடைவுகள் – 44) — அழகு குணசீலன் — தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் அசாத்மௌலானா சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்ற குசுகுசுப்பு செய்தியை சனல் 4 உத்தியோகபூர்வமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சனல் 4 ஆவணப்படத்தில் குண்டுத்தாக்குதலில் தனது தொடர்பு எந்தளவுக்கு இருந்தது, யாரெல்லாம் தாக்குதலின் பின் புலத்தில் இருந்தார்கள் , தான் யாரால் நெறிப்படுத்தப்பட்டேன், தனக்கு தெரிந்தவை எல்லாம் எவை என்ற தகவல்களை அடுக்கியிருக்கிறார் அசாத். ஆக, மொத்தத்தில், “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறில…
-
- 0 replies
- 208 views
-
-
வெலிக்கடை சிறைக்குள் நடந்தது என்ன? சிறைக்கைதிகளும் மனிதர்களே. அதனால்தான் அவர்களுக்கான தண்டனைகளும் சித்திரவதைகளாக இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு சலுகைகள் சிறைக்கூடங்களில் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், இலங்கையில் நடந்த மிகக் கொடுமையான சிறைச்சாலைக் கொலைச்சம்பவம் நம் அனைவரையும் பதற வைத்திருந்தது. சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குற்றவாளிகளெனினும் அவர்களும் மனிதர்கள் என்றவகையில் நோக்கப்பட்டிருக்கலாம். 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி சிறைச்சாலை வளாகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 27 பேருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. ஆட்சியாளர்களின் வெறியாட்டத்துக்குள் சிக்கி அப்பாவி உயி…
-
- 0 replies
- 208 views
-
-
கழுத்தை நெரிக்கும் சீனா கம்ப இராமாயணத்தில், இறுதிப் போரின் போது நிராயுதபாணியாக நின்ற இராவணனை “இன்றுபோய் நாளை வா“ என்று இராமன் கூறியபோது, இராவணன் கலங்கியதை“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்“ என்று கம்பரால் உவமிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் அருணாச்சலக் கவிராயருக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. முதலில் இவ்வரியை யார் எழுதியது என்ற ஆராய்வை விட இந்த கடன் பட்ட நிலைமையே இலங்கைக்கும் இன்று ஏற்பட்டுள்ளது. அதிக கடன்களால் கலங்கி நிற்கிறது இலங்கை என்பதே நிதர்சனமாகும். கடன் என்பது வாங்குவதற்கு இலகுவானதாக இருக்கின்ற போதிலும் வருமானம் குறைந்தோருக்கு அதை திருப்பிச் செலுத்தும் விதமே மிகவும் கடினமாக உள்ளது. வட்டி, அசல் என்பவற்றை திருப்பிக் கொடுக்கையில் மீண்டும…
-
- 0 replies
- 208 views
-
-
சிறிலங்கா இந்திய பொருளாதார உதவியில் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ளவதைத் தவிர வேறுவழியில்லாதநிலையில் இந்தியாவிடம் இருந்து கடனுதவி எரிபொருள் உதவி, அரிசி உதவியென தொடர்ச்சியாகப் பொருளாதார உதவிகளைப் பெற்று தான் வாழும் நிலை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக செப்டெம்பர் மாதமளவில் இலங்கை ரூபாவின் வீழ்ச்சியால் இந்திய ரூபாவை இலங்கை பயன்படுத்த வேண்டி வருமென இலங்கையின் முன்னாள் கணக்காளர் நாயகம் காமினி விஜேயசிங்க மே 27இல் செய்த எச்சரிப்பும், . அத்துடன் இந்தியா வழங்கும் கடன்களை திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் நாட்டில் உள்ள துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய பாரதூரமான நிலை ஏற்படும் என்னும் அவருடைய எதிர்வு கூறலும், உண்மையாக்கக் கூடிய முறையிலேயே, மேலும் 5…
-
- 0 replies
- 208 views
-
-
மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்! – வேல்ஸ் இல் இருந்து அருஸ் November 25, 2021 மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்! வேல்ஸ் இல் இருந்து அருஸ் இலங்கை அரசு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் சிக்கி, முற்றாக வீழ்ச்சி அடையும் நிலையை எட்டியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பு 2.3 பில்லியன் டொலர்களை எட்டியதால், இரண்டு மாதங்களுக்கே பொருட்களை இறக்குமதி செய்யப் போதுமான நிலையை அது தோற்றுவித்துள்ளது. அதாவது பொருட்களை இறக்குமதி செய்வதற்குக்கூட பணம் இல்லாது தவிக்கும் அரசு, தற்போது சிங்கள மக்களின் எதிர்ப்பலைகளையும் சந்திக்க ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு தொழிற்சங்கங்களும், ஊதிய அதிகரிப்புக் கோரி, …
-
- 0 replies
- 207 views
-
-
யாழ் நூலக எரிப்பு! புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்: ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ் நூலகம் அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள். 1981ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளின் நள்ளிரவில் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. அந்த நாள், யாழ் நூலம் இன நூலெரிப்பு வன்முறையால் அழிக்கப்பட்ட நாள். இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்தின் ஊற்றிடங்களான …
-
- 0 replies
- 207 views
-
-
கொழும்பில் மணிமேகலைப் பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக விழாவும் விற்பனைக் கண்காட்சியும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 32 நூல்களின் அறிமுக விழாவும் விற்பனைக் கண்காட்சியும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் இலங்கை எழுத்தாளர்களின் 16 நூல்களும் இந்திய எழுத்தாளர்களின் 16 நூல்களுமாக 32 நூல்கள் வெளியிடப்படவுள்ளன. சென்னை மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. https://thinakkural.lk/article/237276
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
ஜெனீவா:நல்லிணக்கம்:பொறுப்புக்கூறல்:ஜீ.எஸ்.பி. மறுபரிசீலனை:இலங்கையில் இந்தியாவின் வகிபாகம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கூறுவது என்ன ? அரசியல் மனித உரிமைகள் நல்லாட்சி மதிக்கப்படாவிடின் ஜீ.எஸ்.பி.யை மறுபரிசீலனை செய்ய நேரிடுமென ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். ஜெனிவாவில் இம்முறையும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படலாம். ஆனால் அதனை ஜெனிவாவில் நடைபெறும் கலந்துரையாடல்களிலேயே தீர்மானிப்போம் என இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் லை மார்க் எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். தற்போது எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மனந்திறக்கிறார். கேள்வி: ஜெனிவா …
-
- 0 replies
- 206 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு விடுதலையின் விளைநிலம்-பேராசிரியர் முனைவர் குழந்தைசாமி May 20, 2025 இறப்பு விட்டுச்சென்ற இதயவலியை எவரும் குணப்படுத்தமுடியாது. அன்பு விட்டுச் சென்ற நினைவை எவரும் திருட முடியாது. நமது விடுதலைப் போராளிகளும் மக்களும் விட்டுச் சென்ற வலியை எவராலும் போக்க முடியாது. அதனால் வலியை போக்கும் வடிகாலாக நினைவேந்தல் அமைந்துள்ளது. அந்த நினைவேந்தல் அன்பின் வெளிப்பாடாக உள்ளது. இந்த அன்பு நிறைந்த நினைவேந்தல் இறப்பை வாழ்வின் முடிவாக கருதாமல் புதிய வாழ்வின் வழியாக மாற்றுகிறது. அப்போதுதான் வலி குறைக்கப்படும். இந்த வலியை வலி மையாக்குவது இந்த நினைவேந்தலாகும். இந்த வலிமையாக்கும் செயலை எவரும் தடுக்க முடியாது, தவிர்க்க முடியாது, தள்ளிப்போட முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல…
-
- 0 replies
- 206 views
-
-
இலங்கை நாடாளுமன்றம் நேரலை | தமிழில் | 29-08-2022
-
- 0 replies
- 206 views
-
-
தமிழ்க்கட்சிகளை சந்திக்க தயங்கும் வேட்பாளர்கள்: நிபந்தனைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆர்.ராம் ஜனாதிபதி வேட்பாளர் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை தீர்மானிக்கும் வகையில் ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து எடுத்த இணக்கப்பாடு தொடர்பான ஆவணத்தை ஏற்றுக்கொள்வதில் இரு பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்களும் பின்னடிப்பதாகத் தெரியவருகிறது. 13 அம்சக்கோரிக்கைகளை உள்ளடக்கிய குறித்த ஆவணத்தை மேற்படி பிரதான வேட்பாளர் இருவரிட மும் சமர்ப்பித்து பேச்சு நடத்த தமிழ்த்தரப்பு விரும்பிய போதிலும் குறித்த ஆவணத்தின் அடிப்படையில் பேச்சுக்களை ஆரம்பித்தால் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை அவை இழக…
-
- 0 replies
- 205 views
-
-
ரெலோ முயற்சி – புதிய போத்தலில் பழைய கள்ளு July 10, 2021 — கருணாகரன் — தமிழ் அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தமிழ் மக்களுக்கு அவ்வப்போது ஏதாவதொரு புதுக்கதையைச் சொல்வதுண்டு. சற்று உன்னிப்பாகப் பார்த்தால் அதொன்றும் புதிய கதையாக இருக்காது. சலித்துப்போன பழைய கதையைச் சற்று உருமாற்றிச் சொல்லியிருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் அதை எப்படியே சனங்கள் நம்புகிறமாதிரிச் செய்து விடுவார்கள். இதில் அவர்கள் மகா கெட்டிக்காரர்கள். உண்மையில் இதில் இவர்கள் பலே கில்லாடிகள். நிபுணர்கள். இல்லையென்றால் எந்தப் பயனையுமே தராத – எதிர்விளைவுகளையே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற – தமிழ் (தேசிய) அரசியல் இன்னும் சூடு குறையாமல் இருக்குமா? இந்தப் பழைய கத…
-
- 0 replies
- 205 views
-
-
கைபேசிச் சாட்சி – நிலாந்தன்! முல்லைத்தீவு, சின்னசாளம்பன் கிராமத்தில் ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கதறக் கதற அடிக்கிறார்.அதை ஒருவர் கைபேசியில் படம் பிடிக்கிறார்.அக்காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.விளைவாக போலீசார் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.சமூகவலைத்தளங்கள் எந்தளவுக்கு இது போன்ற விடயங்களில் வினைத்திறனோடு செயல்பட முடியும் என்பதற்குத் தமிழ்ச் சமூகத்தில் இது ஆகப் பிந்திய எடுத்துக்காட்டு.இதுபோன்று சிறுவர்களைத் தாக்கும் காட்சிகள்,முதியவர்களைத் தாக்கும் காட்சிகள் இடைக்கிடை சமூகவலைத்தளங்களில் யாராலாவது பகிரப்படும். பெரும்பாலும் அவற்றுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது ஒரு நல்ல போக்கு.அதே சமயம் இந்த போக்குக்கு பின்னால் உள்ள உளவியலைய…
-
- 0 replies
- 205 views
-
-
மௌனத்தைக் கலைத்தல்: வட மாகாணத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் July 13, 2021 Photo, Al Jazeera ஒரு சில சமூகங்களின் வரலாறுகள் மௌனிக்கப்பட்டு, அவர்களுடைய அடையாளங்கள் ஒடுக்கப்படுவது மிக மோசமான அடக்குமுறையின் அடையாளமாக இருந்து வருகின்றது. முதலில் கோப்பித் தோட்டங்களிலும், அதனையடுத்து தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் வேலை செய்வதற்கென பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பல்லாயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் இடம்பெயர்ந்த நிலையில் 1960கள் தொடக்கம் 1980கள் வரையில் வட பிரதேசத்திற்குச் சென்றார்கள். அவர்களுடைய பிரஜா உரிமை பறிக்கப்பட்டமை சுதந்திரத்தின் பின்னர் நமது நாடு நிகழ்த்திய பெரும் கொடுமையான சம்பவமாகும்…
-
- 0 replies
- 205 views
-
-
ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா March 8, 2024 இலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள் குழம்பிப்போயுள்ளாா்கள். இந்த நிலையில், இன்றைய தாயகக் களத்தில் அரசியலில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஆராய்கின்றாா் அரசியல் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான யதீந்திரா! கேள்வி – பொலிஸ் அதிகாரத்தைத் தவிா்துவிட்டு 13 ஆவது திருத்தத்தின் மூலமாக அதிகாரப் பரவலாக்கல் தொடா்பாக சிறுபான்மையினக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை ஒ…
-
- 0 replies
- 204 views
-
-
தண்டனைக் காலத்தை விட பல வருடங்கள் கூடுதலாக சிறையில் வாடிய தமிழ்க் கைதிகள் November 11, 2022 — ஸ்பார்ட்டகஸ் — அண்மையில் தீபாவளி தினத்தன்று எட்டு தமிழ்க் கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுதலை செய்த பிறகு ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டது. எட்டு கைதிகளில் மூவர் 1999 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கொழும்பு நகர மண்டப மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் என்றும் அவர்களில் நால்வர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையையும் விட கூடுதலான காலம் சிற…
-
- 0 replies
- 203 views
-
-
மனித உயிர் பறிக்கும் வல்லைப் பாலம் இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் யாழ்ப்பாணமும் ஒன்றாகும். மன்னராட்சி காலத்திலிருந்து பல சிறப்புகளையும் வரலாற்றினையும் தன்னகத்தே கொண்டதுதான் யாழ்ப்பாணம். 30 வருட யுத்தத்தினால் யாழ்.மண் பலமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக கட்டி எழுப்பப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தின் உடுப்பிட்டியில் அமைந்துள்ள வல்லைப்பாலம் ஒரு புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இப்பாலம் யாழ்.மண்ணின் இயற்கை அழகையும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் முக்கியமான கட்டுமானங்களில் ஒன்றாக காணப்படுகிறது. வல்லைப் பாலம் வல்லைக் கடல் நீர் வழியைத் தாண்டி அமைக்கப்பட்டிருப்பதால் அதன் கட்டுமானம் மிக மு…
-
- 0 replies
- 203 views
-
-
-
- 0 replies
- 203 views
-
-
மகா நாயக்கர்களின் தலையீடு: தீர்வைத் தருமா? நிலாந்தன். இம்மாதம் நான்காம் திகதி நான்கு மகா நாயக்கர்களும் அரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.ஆனால் கோட்டாபய அதற்கு பதில் கூறவில்லை. அதன்பின் 20ஆம் திகதி மற்றொரு கடிதத்தை எழுதினார்கள். அதன்பின் கடந்த வாரம் அரசுத்தலைவர் மகா நாயக்கர்களுக்கு ஒரு பதில் அனுப்பியிருந்தார். மகா நாயக்கர்கள் அனுப்பிய கடிதத்தில் ஒரு முக்கிய விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்கள்.நாட்டில் இப்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் தீர்க்க தவறினால் மகாசங்கம் சங்கப் பிரகடனத்தைச் செய்யும் என்பதே அதுவாகும். சங்கப் பிரகடனம் எனப்படுவது சிங்களத்தில் “சங்க ஆக்ஞாபய” என்று அழைக்கப்படுகிறது.மன்னர்களின் காலத்தில் அது பிரயோகத்தில்…
-
- 0 replies
- 202 views
-
-
இன்று இரவு 20 . 55 க்கு பிரெஞ்சு தொலைக்காட்சியில் (Canal +) தீபன் (Dheepan) காண்பிக்கப்பட இருக்கிறது.இங்கே பார்த்தால் புரியும். Soldat Tamoul (தமிழ் இராணுவம் என்று தான் புலிகளை அறிமுகம் செய்கிறார்கள். நமக்குத்தான்.......????
-
- 0 replies
- 202 views
-
-
100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறுவோருக்கும் வருமான வரி! By T. SARANYA 12 OCT, 2022 | 04:49 PM (நா.தனுஜா) அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித்திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர்கூட வருமான வரியைச் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதுடன், இதன்விளைவாக 20 சதவீதமான வரிவருமானத்தை நாட்டுக்கு ஈட்டித்தரும் தனிநபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடக்கூடிய சாத்தியப்பாடு உயர்வடைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான உள்நாட்டு இறைவரித்திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் …
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கி…
-
- 0 replies
- 201 views
-
-
சிறுபான்மையினருக்கு தீர்வில்லாத நில ஆக்கிரமிப்பு ஹஸ்பர் ஏ ஹலீம் சிறுபான்மை இன மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டே வருகிறது. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் இந்த நிலவரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் அரிசி மலை விகாரைக்கு அண்மித்த பகுதியில் பௌத்த மதகுரு ஒருவரினால் பூஜா பூமி என்ற அடிப்படையிலும் தொல்பொருள் என்ற போர்வையில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. அரிசிமலை விகாரையை அண்மித்த பல ஏக்கர் நிலங்கள் தனியார் மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியாகும் இவர்களின் வாழ்வாதாரம் மீன் பிடி விவசாயம் சேனை பயிர்ச் செய்கை என ஜீவனோபாயமாக காணப்படுகிறது. அப்பாவி மக்களின் காணிக்குள் அடாத்தாகக் கையகப்படுத்த மு…
-
- 0 replies
- 201 views
-
-
மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடியவர்கள்; இன்று ஒருவேளை சோற்றுக்காகவும் குடிநீருக்காகவும் போராடவேண்டிய நிலை! – மட்டு.நகரான் November 2, 2021 மட்டு.நகரான் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பகுதி மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆதிவாசி மக்களாக நீண்டகாலம் குடியிருக்கும் இந்த மக்கள், எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் துயரமான வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர். கரடியன்குளமானது செங்கலடி-பதுளை பிரதான வீதியில் கரடியனாறு விவசாயப் பண்ணையூடாகச் செல்லும் வீதியில் பத்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. குசனார்மலை அடிவாரத்தில் உள்ள இக்கிராமமானது, நீண்ட பழைமையான கிராமமாக காணப்ப…
-
- 0 replies
- 201 views
-