Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தப்பியோட முன்னர் கோட்டாவிற்கு நடந்தது என்ன? ஐ.தே.க விற்கு மற்றுமொரு அதிஸ்டம்

  2. ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்கே கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. புதிய ஜனாதிபதி தேர்வுக்காக, இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் இந்த…

  3. ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக - கூட்டமைப்பிற்கு ஒரு பகிரங்க மடல் யதீந்திரா நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களை பிரதிநித்துவம் செய்பவர்கள் என்னும் வகையில், தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அதே வேளை, உடனடி மற்றும் நீண்டகால அரசியல் நலன்களை கருத்தில் கொண்டும் செயலாற்ற வேண்டிய கடப்பாடு தங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அடிப்படையில் இது தென்னிலங்கை சிங்கள தரப்புக்களிடையிலான அதிகாரப் போட்டியாகும். இதனை ஜனநாயகம் என்னும், ஒற்றைச் சொல் கொண்டு அளவிட முடியாது. இதனை ஜனநாயகம் என்னும் சொல் கொண்டு அளவிட முடியுமென்றால், ஒரு ஆசனத்தை கொண்டிருந்த, ரணி…

  4. ராஜபக்ஷவினரின் தப்புக்கணக்கு சத்ரியன் ராஜபக்ஷவினர் தங்களின் பலத்தை மிகையாகவும், மக்களின் பலத்தை குறைவாகவும் கணித்து விட்டனர். முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை மாத்திரமன்றி, மூன்று தசாப்தங்களாக சிம்மசொப்பனமாக விளங்கிய விடுதலைப் புலிகளுக்கும், முடிவு கட்டியவர்கள் ராஜபக்ஷவினர். அவர்கள் தனியாக நின்று அதனைச் செய்திராத போதும், தங்களால் தான் அதனை சாதிக்க முடிந்தது என்ற இறுமாப்பு அவர்களிடம் என்றுமே இருந்து வந்திருக்கிறது. தங்களின் ஆயுத பலம் மீது கொண்டிருந்த மிகையான நம்பிக்கை, விடுதலைப் புலிகள் போரில் தோல்வி காண நேரிட்டமைக்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. தங்களின் பலத்தை மிகையாக நம்புவதும், மதிப்பிடுவதும், போர்க்களத…

  5. அடுத்தது என்ன? என்ன செய்வது? July 17, 2022 — கருணாகரன் — அரசியல் நிலைமாற்ற அதிரடிகளின் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். சரி, அடுத்து என்ன நடக்கப்போகிறது? நிலைமை சீரடையுமா? அல்லது மேலும் மோசமடையுமா? அவர் இந்தப் பதவியில் எவ்வளவு காலம் நீடிப்பார்? அதற்கு மக்களும் போராட்டக்கார்களும் அனுமதிப்பார்களா? அல்லது அரசியலமைப்பின் பிரகாரமே எல்லாமே நடக்கப்போகிறதா? சபாநாயகர் விடுத்த ஏராளம் அறிவிப்புகளில் எவையெல்லாம் நடக்கும்?எவையெல்லாம் நடக்காது? அடுத்த பிரதமர் யார்? அடுத்து எப்படி ஆட்சிக் கட்டமைப்பு இருக்கும்?நடக்கும்? புதிய அமைச்சரவை உருவாக்கப்படுமா?அல்லது உள்ள அமைச்சரவையில் திருத்தம் நிகழுமா? இப்படி ஏராளம் கேள்விகளோடுதான…

  6. சீனாவின் குள்ளநரித்தனம் இலங்கையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு ஒரு வகையில் சீனாவும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பில் பல்வே வழிகளிலும் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. இலங்கையின் மோசமான நிலைமைக்கு பல்வேறான காரணங்கள் கூறப்படுகின்றன. சரிந்து வரும் ரூபாவின் மதிப்பு, குறைந்து வரும் அன்னிய கையிருப்பு உள்ளிட்டவை பிரதான காரணங்களாகுமென கூறப்படுகின்றது. இலங்கைக்கு ஏற்பட்டிருந்தும் இந்த பொருளாதார நெருக்கடி நிலைமையின் விளிம்பில், லெபனான், ரஷ்யா, சுரினாம் மற்றும் சாம்பியா மற்றும் பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆஜெர்டினா, உக்ரேன், கானா, எஃப்து, துனிஷியா, கெ…

    • 2 replies
    • 482 views
  7. கோத்தபயவுக்கு தஞ்சம் கொடுக்க மறுத்த மோடி: பின்னணி என்ன? Jul 16, 2022 09:54AM IST கடந்த ஜூலை 9ஆம் தேதி முதல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ மாளிகைக்குள் மக்கள் திரள் நுழைந்ததிலிருந்து, சொந்த நாட்டிலேயே மூன்று நாட்கள் அதிபர் அகதியாக ஓடியலைந்த அவர், ஜூலை 13 ஆம் தேதி மாலத்தீவு வழியாகச் சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து வளைகுடா நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார் என்றும் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், நிதியுதவி என எல்லா உதவிகளும் செய்த இந்தியா அதாவது நமது பிரதமர் மோடி தஞ்சம் கொடுக்கும் விஷயத்தில் மட்டும் மிகவும் தந்திரமாகச் செயல்பட்டு கோத்தபய இந்திய மண்ணில் இறங்குவதைத் தவி…

  8. அமெரிக்க சிறை செல்வாரா மகிந்தா மச்சான்? அமெரிக்காவில் கிறீன் கார்ட் வைத்திருந்து, தேயிலை கொமிசன் யாவாரம் பார்த்துக்கொண்டிருந்தவர் மகிந்தர் மச்சான் ஜாலியா விக்கிரமசூரியா. மகிந்தரின் மச்சான்மார்கள் அனைவரும் பக்கா சோக்கு பேர்வழிகள். மனைவி சிரானியின் சகோதரன் சிறிலங்கன் விமான நிறுவன தலைவராகி, செய்த பேய்க்கூத்துகளால் லாபத்தில் இயங்கிய நிறுவனம், மகா நட்டத்தில், ரிம்மில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த ஜாலியா மச்சான், மகிந்தா ஜனாதிபதி ஆகியதும், லாஸ்ஏஞ்செல்ஸ் நகரத்தில் இருந்த இலங்கை துணை தூதராக ஆக்கப்பட்டார். விரைவில் வாசிங்டன் தலை நகரத்தில், இலங்கையின் அமெரிக்க தூதரானார். மகிந்த மச்சான் எண்டால் சும்மாவா.... நகரத்தின் பிரபலமான இடத்தில் இருந்த தூதரகத்தினை, வெள…

  9. நெருக்கடியில் இலங்கை, பாகிஸ்தான் நட்பு நாடுகள் நழுவும் சீனா சீனாவின் ஒரு பட்டி ஒரு பாதை (பிஆர்ஐ) திட்டத்தில் சீனாவிடம் இருந்து பெருமளவில் கடன் வாங்கி பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தெற்காசிய நாடுகளான இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இலங்கை, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்புகளுக்கும், இம்ரான்கான், கோத்தாபய போன்றோாின் பதவியிழப்புகளுக்கும் அந்த பொருளாதார நெருக்கடிகளே காரணமாக அமைந்தன. இலங்கையில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக அதிக வட்டிக்குக் கடன்களை வாாி வழங்கி இலங்கையை கடனில் மூழ்கடித்த சீனா, இலங்கை எதிா்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையின் …

  10. இலங்கை ஜனாதிபதி தெரிவில் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது கடும் பனிப்போர் நிலவி வருவதாக அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தீவு இந்துமா சமுத்திரத்தின் மையத்தில் உள்ளமையினால் இந்துமா சமுத்திரத்தின் அச்சாணியாக உள்ளதுடன், இந்துமா சமுத்திரத்தினை மையப்படுத்தி இந்த நூற்றாண்டின் அரசியல் நகரப்போவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கமைய,இலங்கை ஜனாதிபதி தெரிவில் அமெரிக்கா தற்போது நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதுடன்,இந்துமா சமுத்திரத்தின் அச்சாணியான இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க இறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் மேலும்,இலங்கையுடன் ஒட்டிப்பிறந்த குழந்தை என்ற வகையில் இ…

  11. இலங்கை ஜனாதிபதியின் மாளிகை பொது குளியலறையாக மாறுகின்றது ஏஎவ்பி ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற பல மாத சீற்றத்துடனான வேண்டுகோளின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிரித்தனர் மகிழ்ந்தனர் -செல்பி எடுத்துக்கொண்டனர் தீடிரென ஜனாதிபதியின் இல்லத்திற்குள் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்ததால் அங்கு காணப்பட்ட நீச்சல் தடாகத்தில் நீச்சல் அடித்தனர். சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் ஜனாதிபதிமாளிகையை கைப்பற்றினர்,இதன் மூலம் மிகமோசமான பல மாத பொருளாதார நெருக்கடி காரணமாக உருவான பொதுக்கள் அதிருப்திக்கு சில நிமிடங்களிற்கு முன்னரே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச படையினரின் உதவியுடன் அங்கிருந்து தப்பிவெளியேறியிருந்தார்,அவரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அவர்கள் வானை நோக்கி எச…

  12. இலங்கைக்கு முன்னால் உள்ள பாதை ஆபத்தானது-முன்னாள் இந்திய இராஜதந்திரி கே.பி பேபியன் இலங்கைக்கு முன்னால் உள்ள பாதை ஆபத்தானது என முன்னாள் இந்திய இராஜதந்திரி கே.பி பேபியன் தெரிவித்துள்ளார் திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தூதுவர் கே.பி பேபியன் 1964 முதல் 2000 ஆண்டுவரை இந்திய வெளிவிவகார சேவையில் பணியாற்றியவர்இஅக்காலப்பகுதியில இவர் மடகாஸ்கர் இலங்கை அவுஸ்திரியா கனடா உட்பட பல நாடுகளில் பணியாற்றியுள்ளார்இதனது இராஜதந்திர சேவையின் போது மூன்று வருடங்கள் ஈரானில் பணியாற்றிய இவர் ஈரான் புரட்சியை நேரடியாக பார்த்தார்இவளைகுடாவிற்கான இணை செயலாளராக பணியாற்றியவேளை 1990-91 இல் ஈராக்கிலிருந்து 176இ000 இந்தியர்களை வெளியேற்றும் நட…

  13. இலங்கையைப் பற்றிய சில சுவாரசியமான செய்திகள் தெரியுமா? உலகின் எட்டாவது அதிசயமாக இலங்கையின் சீகிரியா யுனெஏசுகோவால் (UNESCO) அறிவிக்கப்பட்டது. இலங்கையிலேயே உலகின் முதல் யானை அனாதை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை அதன் வடிவத்தால் ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்றும் ‘இந்தியாவின் கண்ணீர் துளி’ என்றும் அழைக்கப்படுகிறது. இலங்கையில் அதிகளவில் கறுவா உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கையில் உள்ள நுவரெலியா பிரதேசம் சிறிய இங்கிலாந்து’ (Little England) என்று அழைக்கப்படுகிறது. உலகில் முதன் முதலில் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கையாகும். சிங்கக் கொடி என்றும் அறியப்படும் இலங்கையின் தேசியக் கொடியில் பல்வேறு…

  14. நாளை என்ன நடக்கும்? Photo, REUTERS/ Dinuka Liyanawatte Photo இலங்கையின் 22 மில்லியன் மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது மனிதாபிமான நெருக்கடியாக மாறிவிட்டது. சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட ஒரு நாடு இப்போது லெபனான் பாணியில் வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பது குறித்த அச்சத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் வரிசைகள் நீடிப்பது விலைவாசி உயர்வு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் போவது போன்றவற்றால் நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து மோசமாகி வருகிறது. நாட்டின் பெரும்பாலான மக்கள் பட்டினியை நோக்கி மிக வேகமாகத் தள்ளப்படுகின்றனர். 51 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்கள் இருப்பதாக மதிப்பிட…

  15. தனித்துப் போய், தப்பி ஓடிய... கோட்டா! மக்களால் தோற்கடிக்கப்பட்டு , தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்து , பாராளுமன்ற உறுப்பினர்களது பெரும்பான்மை கூட இல்லாமல் பிரதமரான சுவிங்கம் ரணில் , இன்று IMF மற்றும் சர்வதேச உதவிகளை எப்படி பெறுவதென ஒரு விளக்கத்தை பாராளுமன்றத்தில் கொடுத்தார். அதை கேட்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கையோடு வந்திருந்தார். கில்லாடி ரணில் , எல்லோரையும் திக்குமுக்காட வைப்பார் என கோட்டா மட்டுமல்ல கோட்டா - ரணில் ஆதரவு தரப்பும் நம்பியிருக்கலாம். அந்தோ பரிதாபம் , ரணில் கருத்துகளை முன்வைக்கத் தொடங்கிய நேரம் முதல் எதிர்க்கட்சி தரப்பு "Gota Go Home" எனக் கோசம் போடத் தொடங்கினர். கோட்டா - ரணில் …

  16. கடினமாக அமையப்போகும் அடுத்த மூன்று வாரங்கள் ரொபட் அன்டனி நாட்டில் எரிபொருள் இல்லாத ஒரு நிலைமை நீடித்துக் கொண்டிருக்கின்றது. இருக்கின்ற டீசலை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் ஊடாக குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் அனுப்பப்பட்டு இருக்கின்றது. அவை சிட்டைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. எனினும் எல்லோருக்கும் இதனை பெற்றுக் கொள்வதில் சிக்கல் காணப்படுகிறது. இந்தநிலையில் அடுத்து வரும் மூன்று வாரங்கள் மிகக் கடுமையானதாகவும் மிக நெருக்கடியானமதாகவும் அமையும் என்று பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்படுகிறது. முக்கியமாக இந்த எரிபொரு…

  17. அயலுறவுக்கு முதலிடம் இலங்கையில் நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டுச் செல்லும் நெருக்கடி நிலைமையை உலகநாடுகளும் அமைப்புகளும் நிறுவனங்களும் அவதானி கொண்டுதான் இருக்கின்றன. நிலைமை போகும் போக்கை பார்க்குமிடத்து. பசி, பட்டிணி, பஞ்சம், பட்டினிச்சாவு கைக்கு எட்டிய தூரத்திலேயே எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றது. அயல் நாடான இலங்கை இந்தளவுக்கு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பெரியண்ணா (இந்தியா) ஓடோடிவந்து உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கின்றது மத்திய அரசாங்கத்துக்கு அப்பால், தமிழக அரசும் தமிழக மக்களும் உலருணவுப்பொதிகளை அனுப்பிவைத்துக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு இந்தியா பல்வேறு வழிகளிலும்…

  18. போர் இல்லா பூமி வேண்டும்! ஜூன் 28, 2022 –உதயை மு.வீரையன் முதல் இரண்டு உலகப் போர்களினால் ஏற்பட்ட அழிவினால் மக்கள் போரையே வெறுத்தனா். சமாதானத்தையே விரும்பினா். சோவியத் நாட்டிலிருந்து பிரிந்த உக்ரைனுடன் ரஷியா போர் தொடுத்திருப்பது மிகப்பெரிய அவலம். 100 நாட்களையும் கடந்து விட்டது. தேவையில்லாமல் ஒரு நாடு அழிவது யாருக்குச் சம்மதம்? ஆயிரக்கணக்கான மக்கள் அநியாயமாக மாண்டு கொண்டிருக்கின்றனா். தாய்நாட்டை விட்டு அகதிகளாக ஓடியவா்கள் படும் வேதனை சொல்ல முடியாதது. முதியவா்களும் குழந்தைகளும், பெண்களும் படும் துயரம் போர்க்களத்தில்தான் பார்க்க முடியும். நெடிதுயா்ந்த கட்டடங்கள் தரைமட்டமாகி விட்டதனால் ஏற்படும் துயரம். உக்ரைன், உயா்கல்வியும் மருத்துவக்கல்வியும்…

  19. போதையால் மாறும் பாதை! ஜூன் 26, 2022 -த. சத்தியசீலன் ஜூன் 26: சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம். உலகில் சுமார் 3.6 கோடிக்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று ஐ.நா. சபையின் போதைப்பொருள் மற்றும் குற்ற ஆவண அலுவலகம் 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையாளர்கள் 27.5 கோடிக்கு மேல். ஆண்டுக்கு 2.50 இலட்சம் போ் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனா். கடந்த 10 ஆண்டுகளில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அது தொடா்பான கோளாறுகள் காரணமாக இறந்தவா்களின் எண்ணிக்கை 71சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது ஐ.நா. வின் அறிக்கை. இந்தியாவில் மட்டும் 1.4 கோடி போ் போத…

  20. ஜனாதிபதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட கோட்டோ கோ கம போராட்டம் எழுபத்தைந்து நாட்களைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் போராட்டத்தின் எதிர்காலம் என்ன? பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவினால் என்ன சாதிக்க முடியும்? பொருளாதார நெருக்கடியின் அடுத்த கட்டம் என்ன போன்ற கேள்விகளுடன், பொருளாதார நிபுணரும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களை இந்த வாரம் தாயகக்களம் நிகழ்வுக்காக வழங்கிய செவ்வியின் முக்கியமான ஒரு பகுதியை இலக்கு வாசகர்களுக்குத் தருகிறோம். மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-...

    • 0 replies
    • 229 views
  21. பெற்ரோல், தாகம் – நிலாந்தன். நாடு தெருவில் எரிபொருள் வரிசையில் நிற்கிறது. இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் இத்துணை நீண்ட எரிபொருள் வரிசைகள் முன்னெப்பொழுதும் காணப்படவில்லை.நாடு ஏன் இப்படி பெட்ரோல் மீது தாகமுடையதாக மாறியது?அதிகமாக மோட்டார் இயந்திர வாகனங்களில் தங்கியிருப்பதுதான் காரணமா? நாங்கள் அதிகமதிகம் இயந்திரங்களில் தங்கி வாழ்கின்றோமா? தமிழ் மக்களைப் பொறுத்தவரை பொருட்களுக்காக வரிசைகளில் காத்திருப்பது ஒரு புதிய அனுபவமல்ல.ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற மகா இடப்பெயர்வோடு ஒப்பிடுகையில் இந்த வரிசைகள் யாவும் ஒரு பொருட்டேய ல்ல. மிகக் குறுகிய காலத்தில், தப்பிச் செல்ல இருந்த ஒரே பிரதான சாலை ஊடாக, கைதடிப் பாலம், நாவற்குழிப் பாலம் ஆக…

  22. பறப்பதற்கு ஆசைப்பட்டு, இருப்பதையும் இழந்த பன்னீர்! -சாவித்திரி கண்ணன் சுய புத்தியும் இல்லாமல், சொந்த பலமும் தெரியாமல் அடுத்தவர் தயவிலேயே தகுதிக்கு மீறிய பதவிகளை பெற்று அனுபவித்து விட்ட பன்னீர் செல்வம், டெல்லி பாஜக தலைவர்களின் தயவால், தலையீட்டால், மீண்டும் அதிமுகவில் முக்கியத்துவம் பெற முயற்சித்து வருகிறார்! டெல்லியில் இன்று பிரதமரை சந்தித்து பேச முயன்று தோற்றுப் போன பன்னீர் செல்வம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் தலையீட்டை பாஜக தயவில் பெற்று அதிமுகவில் அதிகாரமிக்க பதவியை நிலை நாட்டிக் கொள்ள தவிக்கிறார்! அதிமுக பதவியில் இருந்த போது 11 எம்.பிக்கள் தயவும், பாஜக தயவும் அதிமுகவிற்கு தவிர்க்க முடியாத நிர்பந்தமாக இருந்தது! தமிழக கவர்ன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.