நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
எந்திரன் முகம்மது தம்பி மரைக்கார் / 2018 நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:31Comments - 0 “நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது” என்று, ஒரு சாரார் கோபப்படத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தரப்பினரின் பார்வை, வித்தியாசமாக உள்ளது. “அந்த மனிதர், இந்தளவுக்குப் பிடிவாதமாக இருக்கிறார் என்றால், ரணில் விக்கிரமசிங்கவால் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பார்” என்று கேட்கின்றனர். ஜனாதிபதியின் தீர்மானம் பற்றிய மேற்படி அபிப்பிராயங்களுக்கு இடையில்தான், மக்கள் தெரிந்து கொ…
-
- 0 replies
- 946 views
-
-
இடைக்கால கணக்கு அறிக்கையை முடிந்தால் சபையில் சமர்ப்பித்து காட்டுங்கள் ;ஏரான் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினையோ அல்லது கணக்கு அறிக்கையினையோ முடிந்தால் சபையில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்காட்டுமாறு முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரட்ண வீரகேசரிக்கு வழங்கிய பிரத்திய செவ்வியின் போது சவால் விடுத்துள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியாததன் காரணமாகவே பிரதமராகவும், இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவும் இருந்த பின்னர் மீண்டும் பிரதமர் பதவியை சட்டவிரோதமாக பெற்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ பதவிக்காலத்தில் ஒருவருடம் முன்னதாக 2015இல் ஜனாதிபதி தேர்தலுக்குச் சென்றிருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் தேர்தலில் தோல்வியைத்…
-
- 0 replies
- 418 views
-
-
That the Sri Lankan Rupee has plunged even further to stand at Rs 180 against the dollar. That the IMF loan worth US$ 250 million has been put on hold. That the US$ 480 million grant for transport sector development has been suspended by Millennium Challenge Cooperation. That the US$ 1.7 billion loan granted at a mere 0.1% interest by Japan for the light rail project has also been put on hold. That the EU nations are considering the removal of the GSP Plus which if done will once more imperil the garment industry already struggling to make ends meet in the face of stiff competition. That the United States and other Western nations are contemp…
-
- 1 reply
- 833 views
-
-
வடக்கு, கிழக்குத் தமிழர்கள் இந்நாட்டின் மூத்த குடியினர் ; விக்கி முன்னாள் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் வாரத்துக்கொரு கேள்வி எனும் தலைப்பில் இந்த வாரத்துக்கான கேள்வி பின்வருமாறு கேள்வி – பொருளாதார அபிவிருத்தியில் உங்களுக்கு நாட்டமில்லை. வெறுமனே அரசியல் ரீதியாகவே பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். வெறும் பேச்சு மட்டுமே. காரியம் எதுவும் சாதிக்கவில்லை என்று உங்களை பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது பற்றி உங்களின் கருத்து? பதில் - இந்தக் கேள்வியைக் கேட்டமைக்காக எனது நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். பல இடங்களில் இதற்கான எனது கருத்தை ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தாலும் இவ்வாறான ஒரு கட்டுரை ரூபத்தில் முழுமையாக வெளிக்கொண்டுவரவி…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த பின்னர், எந்த அடிப்படையில் மகிந்த, பிரதமர் அலுவலகத்தில் இருந்து இயங்குகிறார் என்ற மனுவுடன் 122 எம்பிக்கள் வெள்ளியன்று மேல்முறையீட்டு நீதிமன்று சென்றனர். இந்த மனு அடுத்த வார முன்பகுதியில் விசாரணைக்கு வருகிறது. http://www.dailymirror.lk/article/-MPs-challenge-MR-in-court-158851.html தன்னை பிரதமர் என்று சொல்லிக் கொள்ளும் நபர் ஒருவர், பாராளுமன்றத்தில் நம்பகத்தன்மை இழந்த பின்னும், பலாத்காரமாக பிரதமர் அலுவலகத்தை சட்டபூர்வமான வகையில் அல்லாது கையகப்படுத்தி வைத்திருக்கிறார் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த வெளிநாட்டு ராசதந்திரிகளிடம் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தர் தெரிவித்தார். http://d…
-
- 1 reply
- 420 views
-
-
அவசியமான மீள்பரிசீலனை மொஹமட் பாதுஷா / 2018 நவம்பர் 23 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:30 Comments - 0 உலகில், பெரும் புரட்சியாளர்கள் என்று பெயரெ டுத்தவர்கள், அகன்ற இராச்சியங்களை ஆண்ட அரசர்கள், தீர சூரர்கள், படையெடுப்பில் வல்லவர்கள் எனப் பேசப்பட்டவர்கள், பெயர்பெற்ற ஆயுதக் குழுக்களின் கட்டளையிடும் தளபதிகள் எனப் பலர், தாம் போகும் வழிமுறையை, நகர்வுகளை மீள்பரிசீலனை செய்யாமல் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத ஒரு தருணத்தில், தோற்றுத்தான் போனார்கள் என்பதற்கு, சரித்திரக் குறிப்புகளில் நிறையவே ஆதாரங்கள் இருக்கின்றன. இலங்கையில், தற்போது நடந்து கொண்டிருக்கின்ற அரசியல் குழப்பங்களுக்கும், மேற்குறிப்பிட்ட உவமானத்தை இணைத்து நோக்க முடியும். இரு பெருந்தேசியக் கட…
-
- 0 replies
- 642 views
-
-
மேரி கொல்வின் இலங்கையில் எப்படி தனது ஒரு கண்ணை இழந்தார்? அமெரிக்க பெண் பத்திரிகையாளர் மேரிகொல்வின் இலங்கையில் இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிருக்கு போராடிய அந்த தருணங்களை அவரது சிநேகிதி லின்ட்சே ஹில்சம் பேட்டியொன்றில் விபரித்துள்ளார். 2012 இல் சிரியாவில் கொல்லப்பட்ட மேரி கொல்வின் குறித்து நூலொன்றை எழுதியுள்ள லின்ட்சே ஹில்சம் 2001 இல் மேரி கொல்வின் இலங்கையில் சந்தித்த அனுபவங்கள் குறித்து சர்வதேச ஊடகமொன்றிற்கு பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு - வீரகேசரி இணையம் கேள்வி- இலங்கை தொடர்பான அந்த கதை குறித்து அறிய விரும்புகின்றேன்- அவரின் கண்ணில் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமான காயம் எவ்வாறு ஏற்பட்டது? பதில்- 2001 இல் அவர் தமிழ் …
-
- 0 replies
- 726 views
-
-
நாடாளுமன்ற கடந்த 19 ஆம் திகதி 7 நிமிடங்கள் மட்டும் கூடிக் கலைந்தது. அதற்கு முன்னரான மூன்று அமர்வுகளிலும் சண்டை பிடித்து, கட்டிப் புரண்டவர்கள், கத்தி, மிள்காய்த் தூள் வைத்திருந்ததாக ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியவர்கள் அனைவரும் 19 ஆம் திகதிய 7 நிமிட அமர்வின் பின்னர் அனைத்தையும் மறந்தவர்களாக, நகைச்சுவையாக ஒருவர் முதுகில் ஒருவர் தட்டிச் சிரித்து தமக்குள் ஒன்றுமே நடக்காதவர்கள் போன்றும் நடந்து கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்தும் நகைச்சுவையாகப் பேசியும் மகிழ்ந்த காட்சிகளை நான் கண்குளிர, கண் பனிக்கக் கண்டேன். ஒரு புறத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் மிக நெருக்கமாக, சிரித்து மு…
-
- 0 replies
- 895 views
-
-
சீனாவின் கடனினூடான ஆக்கிரமிப்பினை எதிர்க்கும் மாலைதீவு புதிதாகப் பதவியேற்றிருக்கும் மாலைதீவுகளின் சனாதிபதி நஷீட், முன்னைய அரசாங்கத்தினால் சீனாவுடன் செய்துகொள்ளப்பட்டிருக்கும் திறந்த வர்த்தக உடன்பாடு சமநிலையானது அல்ல, சீனாவுக்கே அதிகளவு அனுகூலமானதென்று தெரிவித்திருக்கிறார். தனது நாட்டினை பாரிய கடந்தொகைகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனாவுக்கு வாய்ப்பளித்த இந்த வர்த்தக உடன்பாட்டிலிருந்து தாம் விலகப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். பிரஸ்த்தாப வர்த்தக உடன்பாட்டின்படி மாலைதீவுகளின் பல தீவுகளை முழுமையாக 50 ஆண்டு 100 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருக்கும் சீன நிறுவனங்கள் பெருமளவு பணத்தினை முதலீடு செய்திருக்கும் நிலையில் மாலைதீவின் புதிய தலைவர் இவ்வாறு அறிவித்திருப்ப…
-
- 3 replies
- 999 views
-
-
சிறீதரனுக்கு பாராட்டுகள். - வ.ஐ.ச.ஜெயபாலன் CONGRATULATIONS S.SRITHARAN அரசியல் கைதிகள் விடுதலை காணி விடுவிப்பு காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நிலலைபாட்டை வாழ்த்தி வரவேற்க்கிறோம். உங்கள் உறுதியால் தமிழர் கூட்டமைப்பு ரணிலை நிபந்தனையற்று ஆதரிக்கும் சரணாகதியில் இருந்து காப்பாப்பாற்றபட்டுள்ளது. . அரசும் அரசியல் சட்மும் வேறு ரணில் தலைமை தாங்கும் அரசாங்கம் வேறு என்பதனை உணர்ந்தும் உணர்த்தும் வகையிலும் நீங்க்கள் செயல்படுவது பாராட்டுக்குரியது. தமிழர் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் சுதந்திரத்துக்காக போராடும் கட்சி என்கிற வகையில் அரசாங்கங்களுக்கு அரசியல் நிபந்தனைகள் ஒப்பந்தங்க்கள் வாக்குறுதிக…
-
- 0 replies
- 484 views
-
-
அழிவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் தலைவர்களின் ‘ஈகோ’ எம்.எஸ்.எம். ஐயூப் இந்தப் பத்தியாளரின் மகள் கல்வி கற்கும் பாடசாலையின் மாணவிகள், நாடாளுமன்றத்தைப் பார்வையிட, அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். நாடாளுமன்றத்தின் பார்வையாளர் கலரியில் அமர்ந்து, சபை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்த சில மாணவிகள், பயணக் களைப்பின் காரணமாகவும் பகல் உணவின் பின்னர் குளிரூட்டப்பட்ட இடத்தில் அமர்ந்து இருந்ததன் காரணத்தாலும், பார்வையாளர் கலரியிலுள்ள ஆசனங்களிலேயே அயர்ந்து தூங்கிவிட்டனர். இதைக் கண்டு, அங்கு வந்த நாடாளுமன்ற அதிகாரிகள், மாணவிகளின் நடத்தையால், சபையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகக் கூறி, அந்த மாணவிகள் அனைவரையும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுமாறு…
-
- 1 reply
- 644 views
-
-
ஆங்கிலத்தில் சொல்வார்கள்: damn you do and damn you don't. If you do whatever it is you are going to do then you are in trouble, if you don't act out what you were going to do then you are in trouble another way. நீங்கள் ஒரு விடயத்தினை செய்ய முனைந்தாலும் பிரச்னை, அந்த விடயத்தினை செய்யாமல் விட்டாலும் பிரச்னை தான். இது கூட்டமைப்புக்கு சரியாக பொருந்தும். அதற்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருந்தன. மகிந்தவுக்கு ஆதரவு, ரணிலுக்கு ஆதரவு, நடுநிலை. இதில் மகிந்தவுக்கு ஆதரவு தந்தாலும் பிரச்சனை, நடுநிலைமை வகித்தாலும், அதுவே மகிந்தவுக்கு சார்பாகி பிரச்சனை. ஆகவே மூன்றாவது தெரிவே அவர்கள் முன் இருந்த தவிர்க்க முடியாத தெரிவு ஆக இருந்தது. மறுபுறம்... சர்வத…
-
- 11 replies
- 1.5k views
-
-
மகிந்த ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, விளையாட்டு வீரர் தாஜூடீன் போன்றோர்களின் வழக்குகளை சிறப்பாக விசாரித்த திறமையான போலீஸ் அதிகாரி, நிசாந்த டீ சில்வா பதவியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண பதவி ஒன்றுக்கு தூக்கி அடிக்கப்படுள்ளார். தப்ப முடியாத ஆதாரங்களுடன், இந்த வழக்கு நீதிமன்றம் வர உள்ள நிலையில், அவசர அவசரமாக பிரதமராகிய மகிந்தவின் அழுத்தத்தில், மைத்திரி இந்த வேலையினை செய்துள்ளார். லசந்தவின் வழக்கினை திசை திருப்ப வவுனியாவில் மோட்டார் சைக்ளில் வந்த இரு அப்பாவி தமிழர்கள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, அனுராத புரத்தில் எரிக்கப்பட்டு, அவர்களது மோட்டார் சைக்கிளினை லசந்த கொலை நடந்த இடத்தில விட்டு தடத்தினை மாத்த நடந்த மோசடியினை, நிசாந்த துப்பறிந்து கண…
-
- 1 reply
- 687 views
-
-
MUFIZAL ABOOBUCKER அவர்களே SENIOR LECTURER DEPARTMENT OF PHILOSOPHY UNIVERSITY OF PERADENIYA மதிப்புக்குரிய பேராசிரியருக்கு. இன்றைய சிங்களவர்களை, இலங்கைக்கு கொண்டுவந்த அன்றைய முஸ்லிம்கள் என்கிற தலைப்பில் 18.11.2018 திகதியிட்ட Jaffna Muslim இதழில் வெளிவந்த கட்டுரை தொடர்பாக. . உங்கள் கூற்று மிகத் தவறானதாகும். சலாகம சாதியினர் தமிழகத்தைச் சேர்ந்த சாலையர்கள் அல்லது செங்குந்தர் என அழைக்கபட்ட் நெசவு செய்தலைக் குலத் தொழிலாக கொண்டவர்கள். கம என்கிற சிங்களச் சொல் சாதியையும் குறிப்ப்பதாகும்.சாலை சாதி என்பதன் சிங்கள பதமே சலாகம என்பது. . வரலாற்று காலந்தொட்டே இலங்கைக்கு படைவீரர்களாக புலம் பெயர்ந்து சிங்கள மன்னர்கள் படைகளில் சலாகம …
-
- 0 replies
- 614 views
-
-
ஏன் அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார் மஹிந்த? கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை இன்றுடன் 23 நாட்களை எட்டியிருக்கின்றது. இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாட்டை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் நெருக்கடி அடுத்து வரும் நாட்களில் தீருமா ? அன்றேல் இன்னமும் பல நாட்களுக்கு அலைக்கழிக்க வைக்குமா என்பது பெரும் கேள்வியாகவுள்ளது. கடந்த மூன்றரை வருட காலத்தில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியமை ஜனநாயகத்தை மீள் நிறுத்தியமை உட்பட பல விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செய்திருந்த போதும் பொருட்களின் விலையேற்றத்த…
-
- 2 replies
- 990 views
-
-
சட்டத்தில் இடமில்லை - பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் (நேர்காணல் ஆர்.ராம்) சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அந்த வாக்கெடுப்பை வைத்து பாராளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் வரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு> கேள்வி:- பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் பொதுத்தேர்தல் ஜனவரியில் நடக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடந்தது என்ன? பதில்:- தேர்தல்கள் ஆணைக்குழுவில் தவிசாளர் உட்பட மூன்று உறுப…
-
- 0 replies
- 844 views
-
-
இப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா? கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித ஜனாதிபதிக்கு என்ன நடந்துள்ளது என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை உலகில் எந்தவொரு இடத்திலும் பதிவாகவில்லை. எம்.பி.க்கள், அமைச்சர்கள் கட்சி மாறுவதை அறிந்திருக்கின்றோம். ஆனால் நாட்டின் தலைவர் கட்சி மாறி செயற்படுவதை எங்கும் கண்டதில்லை. நாட்டின் தலைவர் ஒருவர் எதிர்த் தரப்புடன் இணைந்து தனக்கு ஆதரவு தெரிவித்த தரப்புக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வது வரலாற்றில் நமது நாட்டில் தான் பதிவாகியுள்ளது என்று ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 467 views
-
-
'ஜனாதிபதி சிறிசேன மீதான சர்வதேச நெருக்குதல் தொடரவேண்டும்' - லண்டன் கார்டியன் வலியுறுத்தல் இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடியை அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இசைவாகவும் ஜனநாயக விழுமியங்களின் வழியிலும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று சர்வதேச சமூகம் பிரயோகித்துவருகின்ற நெருக்குதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தடுமாறவைத்திருக்கிறது.அந்த நெருக்குதல் தொடரவேண்டும் என்று லண்டன் கார்டியன் பத்திரிகை வலியுறுத்தியிருக்கிறது. 'ஜனாதிபதி எதிர் பிரதமர் ' என்ற தலைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கார்டியன் தீட்டியிருக்கும் ஆசிரிய தலையங்கத்தில் 'இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் இடம்பெறுகின்ற மோதல்கள் வீதிகளுக்கும் பரவக்கூடும் அல்லது நெருக்கடியில் தலையீடுசெய்யுமாறு பா…
-
- 0 replies
- 862 views
-
-
தென் கிழக்காசியாவில் கல்வியறிவு மிகவும் கூட உள்ள ஒரு நாடு, கல்வி அறிவு இல்லாதவர்களால் ஆள படும் போது வரும் பிரச்சனை..
-
- 5 replies
- 593 views
-
-
தேர்தலுக்கு செல்வதனால், இன்றைய நிலையில் 19A சட்டப்படி உள்ள ஒரேவழி பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையுடன் அதைக் கோர வேண்டும். இன்று பாராளுமன்றில் பேசிய மகிந்த இது தொடர்பாக ஐ தே க ஒத்துழைக்க வேண்டும். தேர்தலுக்கு சென்று மக்களை சந்திப்போம் என்றார். அது தொடர்பில் இன்று மாலை நடந்த பெரும் பேரணியில் பதில் சொன்ன ரணில், தான் அதுக்கு சம்மதிப்பதாகவும், ஆனால் ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒன்றாக மீண்டும் நடக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். மைத்திரி பறியில கை போடும் வேலை. அரண்டு போன மைத்திரி ஆள விடப்பா சாமிகளே என்று இன்று அவசர கூட்டம் ஒன்றை கூட்டி, ரணிலை கூப்பிடுள்ளார். இதுக்கு தான் நரியர் ரணில் என்பது. Image: Dailymirror.lk
-
- 1 reply
- 570 views
-
-
கடந்த 19 நாட்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தொடர்பில் ஒரு பார்வை! ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அன்றில் இருந்து இன்று வரை இலங்கை அரசியலில் பரபரப்பான சூழ்நிலையே காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 19 நாட்களாக நடைபெற்ற விடயங்களை வாசகர்களாகிய உங்களுக்கு எமது ஆதவன் செய்தி சேவை மீட்டித் தருகின்றது. கடந்த 26 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மஹிந்த அமரவீர நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி சிறு மணிநேரத்தில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்…
-
- 0 replies
- 347 views
-
-
“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” (ரொபட் அன்டனி, எம்.டி. லூசியஸ்) பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் நீதிக்கும் புறம்பாகவே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் ஜனாநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள், நாட்டில் நிலையான அரசாங்கம், அமைச்சரவை இல்லாமல் இருக்க…
-
- 0 replies
- 499 views
-
-
அரசியல் யாப்பு சதிப்புரட்சியிலிருந்து தற்காலிகமாக இலங்கை மீண்டதன் பின்.. 11/14/2018 இனியொரு... இந்திய அதிகாரவர்க்கத்தின் பின் தங்கிய கோட்பாட்டு பின்புலம் இந்துத்துவ பாசிசம் என்றால், இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதம் செயற்படுகிறது. இந்தியாவில் இந்துத்துவத்தின் பாசிச வடிவம் மோடி அரசு என்றால் அதன் இலங்கைக்கான பாசிச முன்முகம் ராஜபக்ச குடும்பம். மகிந்தவின் மீட்சிக்கு எதிரான தற்காலிகப் பின்னடைவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இலங்கையிலுள்ள ஜனநாயக முற்போக்கு அணிகளாலும், சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சார்ந்த மக்கள் பிரிவுகளாளும் இத்தீர்ப்பு வரவேற்பைப் பெற்றது. மகிந்த மீட்ட்சி பெற்றதும், பேரினவாதம் மற்றும் அடிப்படைவாதம் கலந்த பேச்சுக்க…
-
- 0 replies
- 940 views
-
-
ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு அமீர் அலி உரிய காலத்துக்கு முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் தவறும்பட்சத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுமேயானால், இலங்கை வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது அவர்கள் முன்னால் ஒரேயொரு கேள்வியே இருக்கும். ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா? சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றிலே வேறு எந்தவொரு பொதுத்தேர்தலுமே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது நெருக்கடியான தெரிவை மக்கள் முன்னிலையில் வைத்ததாகக் கூறுவதற்கில்லை.நாகரிக உலகில் ஒரு ஜனநாயக நாடு என்ற இலங்கையின் பெயரும் பொருளாதார சுபிட்சத்துட…
-
- 0 replies
- 289 views
-
-
-
- 4 replies
- 1.2k views
-