நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
கடந்த 19 நாட்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தொடர்பில் ஒரு பார்வை! ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அன்றில் இருந்து இன்று வரை இலங்கை அரசியலில் பரபரப்பான சூழ்நிலையே காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 19 நாட்களாக நடைபெற்ற விடயங்களை வாசகர்களாகிய உங்களுக்கு எமது ஆதவன் செய்தி சேவை மீட்டித் தருகின்றது. கடந்த 26 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மஹிந்த அமரவீர நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி சிறு மணிநேரத்தில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்…
-
- 0 replies
- 353 views
-
-
“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” (ரொபட் அன்டனி, எம்.டி. லூசியஸ்) பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் நீதிக்கும் புறம்பாகவே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் ஜனாநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள், நாட்டில் நிலையான அரசாங்கம், அமைச்சரவை இல்லாமல் இருக்க…
-
- 0 replies
- 512 views
-
-
அரசியல் யாப்பு சதிப்புரட்சியிலிருந்து தற்காலிகமாக இலங்கை மீண்டதன் பின்.. 11/14/2018 இனியொரு... இந்திய அதிகாரவர்க்கத்தின் பின் தங்கிய கோட்பாட்டு பின்புலம் இந்துத்துவ பாசிசம் என்றால், இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதம் செயற்படுகிறது. இந்தியாவில் இந்துத்துவத்தின் பாசிச வடிவம் மோடி அரசு என்றால் அதன் இலங்கைக்கான பாசிச முன்முகம் ராஜபக்ச குடும்பம். மகிந்தவின் மீட்சிக்கு எதிரான தற்காலிகப் பின்னடைவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இலங்கையிலுள்ள ஜனநாயக முற்போக்கு அணிகளாலும், சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சார்ந்த மக்கள் பிரிவுகளாளும் இத்தீர்ப்பு வரவேற்பைப் பெற்றது. மகிந்த மீட்ட்சி பெற்றதும், பேரினவாதம் மற்றும் அடிப்படைவாதம் கலந்த பேச்சுக்க…
-
- 0 replies
- 950 views
-
-
ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு அமீர் அலி உரிய காலத்துக்கு முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் தவறும்பட்சத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுமேயானால், இலங்கை வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது அவர்கள் முன்னால் ஒரேயொரு கேள்வியே இருக்கும். ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா? சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றிலே வேறு எந்தவொரு பொதுத்தேர்தலுமே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது நெருக்கடியான தெரிவை மக்கள் முன்னிலையில் வைத்ததாகக் கூறுவதற்கில்லை.நாகரிக உலகில் ஒரு ஜனநாயக நாடு என்ற இலங்கையின் பெயரும் பொருளாதார சுபிட்சத்துட…
-
- 0 replies
- 296 views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images போலி செய்தியால் என்ன நடக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள் சென்னையை சேர்ந்த ஆடலரசு (32) மற்றும் தினேஷ் பாலாஜி (24). கும்பல் கும்பலாக மக்கள் சூழ்ந்துகொண்டு உங்களை சுட்டுகொல்வதா அல்லது அடித்துகொல்லுவதா என்று மூன்று மணிநேரம் கூட்டம் நடத்தினால் எப்படி இருக்கும்? அந்த அனுபவத்தை பெற்றவர்கள்தான் இந்த இரண்டு இளைஞர்களும். …
-
- 0 replies
- 390 views
-
-
படத்தின் காப்புரிமை WILLIAM WEST/AFP/Getty Images "அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது புதிய 2000 ரூபாய் நோட்டு, உலகின் சிறந்த நோட்டாக சிறிது நேரத்துக்கு முன்பாக யுனெஸ்கோவால் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளது." இம்மாதிரியான செய்திகள் நமது மொபைல் ஃபோன்களின் மூலம் வாட்சப்பில் அதிகம் பகிரப்படுகிறது. இதில் பெரும்பாலான செய்திகள் போலியானவை. ஆனால் இதை பகிர்பவர்கள் தேசிய கட்டமைப்புக்கு தங்களால் ஆனவற்றை செய்வதாக நினைத்துக் கொண்டு பகிர்கிறார்கள். சாதரண குடிமக்களின் பார்வையில் போலி செய்திகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பிபிசியின் ஆய்வில் தெரியவந்த முதல் தக…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 415 views
-
-
சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து ; மியன்மாரின் பாதையில் இலங்கை? - பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட நவம்பர் 9 வெள்ளிக்கிழமை இரவு பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்பின் பிரத்தியேகமான ஏற்பாடொன்றை மீண்டும் ஒருதடவை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்திருக்கிறது. பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அடிக்கடி ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுவாரானால் அது சர்வாதிகார ஆட்சிக்கே கதவைத்திறந்துவிடும். சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான அரசியலமைப்பு நெருக்கடி இதுவாகும்.நாட்டில் அரசியலமைப்பின் வழியிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்…
-
- 0 replies
- 285 views
-
-
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து அமெரிக்க முன்னாள் தூதுவர் தெரிவிப்பது என்ன? இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளையோ அல்லது எதிர்கால நெருக்கடிகளையோ தீர்ப்பதற்கான அமெரிக்காவினதும் அல்லது வேறு எந்த வெளிநாட்டினதும் திறன் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது என இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சோன் டொனெலி தெரிவித்துள்ளார் வோசிங்டன் டைம்ஸிற்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர்இலங்கையின் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்கு முன்னணியில் நின்று டிரம்ப் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டால் அது எனக்கு ஆச்சரியமளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார் வோசிங்டன் டைம்ஸ் பேட்டியின் தமிழாக்கம் வீரகேசரி இணையம் கேள்வி- இலங்கை உள்நாட்டு யுத்தத்திலிருந்த…
-
- 0 replies
- 485 views
-
-
விலை போன வியாழேந்திரனும் கிழக்குப் பிரிவினைவாதமும் 11/05/2018 இனியொரு... வன்னி இனப்படுக்லைக்குப் பின்னால், பல் வேறு நாடுகளின் அதிகாரவர்க்கங்கள் மட்டுமல்ல, புலம்பெயர் அரச ஆதரவாளர்கள், புலிகளின் ஆதரவாளர்களின் வியாபார நோக்கம்ங்களும் காணப்பட்டதை இன்றைய அரசியல் சூழல் மீண்டும் வெளிப்படுத்துகிறது. இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடந்திய மகிந்த ராஜபக்சவின் கோடிகளுக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் விலை போன பின்னர், வெளியாகும் எதிர்வினைகள் மறுபடி ஒருமுறை அணிகளை தெளிவாக வரையறுத்துக்காட்டுகிறது. கிழக்கு மாகாணத்தின் மீது யாழ்ப்பாண மேலாதிக்கம் திணிக்கப்பட்டிருந்ததையும் அது தொடர்வதையும் யாரும் மறுக்க முடியாது. இவ்வாறான சமூக ஒடுக்கு முறைகளுக்கு…
-
- 10 replies
- 1.8k views
-
-
அநாகரிகம் பண்பாடாகிறது எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 நவம்பர் 07 புதன்கிழமை, மு.ப. 05:07 Comments - 0 கடந்த மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்ததில் இருந்து, நாட்டில் நிலவி வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மை, இன்னமும் மாறவில்லை. நாடாளுமன்றத்தில், தமக்கே பெரும்பான்மை பலம் இருப்பதாக, ரணில் விக்கிரமசிங்க கூறி வருகிறார். மஹிந்த அணியினரும், தமக்கே பெரும்பான்மை பலம் இருக்கிறது என்கின்றனர். ஆனால், மஹிந்த பிரதமராக நியமிக்கப்படும் போது, அவருக்குப் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தாலேயே, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை, ஜனாதிபதி ஒத்தி வைத்த…
-
- 1 reply
- 551 views
-
-
வியாழேந்திரன் ஏமாற்றப்பட்டாரா?; இன்று மட்டக்களப்பு செல்கிறார்! November 6, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அண்மையில் கட்சி தாவி, மஹிந்த அணயை ஆதரிப்பாக அறிவித்துள்ளார் சதாசிவம் வியாழேந்திரன் எம்.பி. மட்டக்களப்பில் அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று அவர் மட்டக்களப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். கட்சி தாவியதால் மட்டக்களப்பில் அவருக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தனக்கு நெருக்கமானவர்களை இன்று மந்திராலோசனைக்காக அழைத்துள்ளார். இதேவேளை, கட்சி தாவ வைக்கப்பட்டு தம்மை ஏமாற்றி விட்டார்கள் என வியாழேந்திரன் தரப்பு உணர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வியாழேந்திரன் தரப்பிலிருந்த சிலர் இது குறித்து ஓரளவு வெளிப்படையாக தமது அதிருப்தியை பதி…
-
- 0 replies
- 410 views
-
-
பிரதமரின் அலுவலகத்தில், பிரதமர் மகிந்தவை பார்த்து சலூட் அடித்தார் IGP பூஜித ... நாட்டு பாதுகாப்பு நிலை குறித்து ஆய்ந்த பின்னர், எழுந்த சலூட் அடித்தார் அவர். கூடவே, தலையை குனிந்து... ஐயா, அந்த FCID என்ற ஒன்று இருக்கிறதே. அதை களைத்து, அதுக்கு பொறுப்பான DIG யை வேறு வேலைக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்திருக்கிறேன், என்றார். நீ ஒரு முடிவும் செய்ய வேண்டாம், (ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.) நாம் முடிவு எடுத்து, உனக்கு அறிவிப்போம் என்று சொல்லி விட்டார் மகிந்த. அவர் போனதும், இருக்கிற பிரச்சனைக்குள, இந்தாள் இப்படி செய்தால், கிழி , கிழி என்று கிழித்து துளைப்பார்கள், என்று பக்கத்தில் நின்ற தனது நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு சொன்னார் மகிந்த . MR on Police Chi…
-
- 0 replies
- 730 views
-
-
கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை அரசியில் ரீதியில் பலமாக்குவதற்கு முயற்சி ;சட்டத்தரணி குருபரன் 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கத்தரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை அரசியல் ரீதியில் பலமாக்குவதற்கான முயற்சியாகவே ஜனாதிபதியின் செயற்பாட்டினை பார்க்க முடியும் என யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் கேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்தவொரு விடயமாகின்றது. அவ்வாறிருக்கையில், 19ஆவது திருத்தச்சட்டத்தினையும் உள்வாங்கிய …
-
- 0 replies
- 226 views
-
-
ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பை மீறும்செயல் ; வி.ரி.தமிழ்மாறன் (நேர்காணல்:-ஆர்.ராம்) பிரதமர் நியமனத்தில் தனக்கு இல்லாத அதிகாரங்களை தற்துணிவின் அடிப்படையில் ஜனாதிபதி பயன்படுத்துவது வேடிக்கையானது என்பதோடு அரசியலமைப்பினை மீறும் செயலாகவுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் வரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அதன் முழுவடிவம் வருமாறு. 19ஆவது திருத்தத்தின் பின்னணி 2015இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும்/ தான் இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்…
-
- 0 replies
- 292 views
-
-
என் விலை 48 கோடி ரூபாய்: இலங்கை எம்.பி. வாக்குமூலம்! ஜனநாயகம் பலவீனமாகும்போது பண நாயகம் கொழுப்பெடுத்து ஆடுவதை உலகம் முழுதும் இப்போது பார்க்க முடிகிறது. சில வருடங்களுக்கு முன் கூவத்தூரில் நடந்தது, இப்போது கொழும்பிலும் நடக்கிறது. தாங்கள் எத்தனை கோடி ரூபாய்களுக்கு பேரம் பேசப்படுகிறோம் என்பதை இலங்கை நாடாளுமன்ற வளாகத்திலேயே எம்.பி.க்கள் போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இரவு இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவைப் பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. அப்போது முதல் இலங்கையில் அரசியல் குழப்பம் தீவிரமாக இருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்…
-
- 2 replies
- 565 views
-
-
கூட்டமைப்பிலிருந்து இன்று யாரெல்லாம் வெளியேறுகிறார்கள் தெரியுமா? November 3, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மூவர் கட்சி தாவுகிறார்கள், இருவர் கட்சி தாவுகிறார்கள், கனடாவில் 300 கோடி பேரம்… இணையத்தளத்திற்குள் நுழைந்தாலே இப்படித்தான் மிரட்டல் செய்திகளாக இருக்கின்றன என மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். 50 கோடி கொடுத்தார்கள், 48 கோடி கொடுத்தார்கள் என இன்னொரு பக்கம் வயிறு எரிகிறார்கள். இப்படியான செய்திகளையே வாசகர்களும் பரபரப்பாக படிப்பதால், நாமும் அப்படியொரு தலைப்பிட்டுள்ளோம். இப்படி ஆளாளுக்கு கொளுத்திப் போட்டுக் கொண்டிருப்பதால் உண்மை எது, பொய் எது என்பது தெரியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது? கூட்ட…
-
- 0 replies
- 317 views
-
-
2004ம் ஆண்டு தடம் புரண்ட ஜனநாயகம் இன்றும் பழைய நிலைமைக்கு திரும்பவேயில்லை : வீ . ஆனந்தசங்கரி November 1, 2018 2004ம் ஆண்டு தடம் புரண்ட ஜனநாயகம் இன்றும் பழைய நிலைமைக்கு திரும்பாது புதைந்து கிடப்பதே. எனது ஒரேயொரு கவலையாகும் இன்று நடந்திருப்பவை சம்பந்தன் சேனாதிராசா போன்றோருக்கு பொது மக்களின் அடிப்படை உரிமைகளில் விளையாடாதீர்கள் என்ற எச்சரிக்கை ஒலியாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ . ஆனந்தசங்கரி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு முன் எப்பொழுதும் இல்லாதவாறு மிகவும் குழப்பமான நிலையில் நம்நாடு இருக்கும்போது நான் இந்த அறிக்கையை விடுவதற்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
தற்போதுள்ள இலங்கைச் சூழல் பற்றி... வ. ந. கிரிதரன் தற்போதுள்ள இலங்கைச் சூழலில் மீண்டும் மகிந்த ராஜபக்சவிடம் சரண்டைந்திருக்கின்றார் மைத்திரி. இலங்கை அரசியலைப்பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க துரதிருஷ்டம் பிடித்த அரசியல்வாதி. அன்று யுத்த நிறுத்தம் கொண்டுவரக் காரணமாகவிருந்தார் அவர். ஆனால் அவர் துரதிருஷ்டம் சந்திரிகா அம்மையார் அவர் தலைமையிலான பாராளுமன்றத்தைக் கலைத்தார். மீண்டும் மோதல்களுக்கு அடிகோலினார். அடுத்து கைக்கெட்டிய தூரத்திலிருந்த ஜனாதிபதிப்பதவியை விடுதலைப்புலிகள் தேர்தலைப்பகிஸ்தரித்ததன் விளைவாக ஏற்பட்ட சாதகச்சூழலில் மகிந்த ராஜபக்சவிடம் பறிகொடுத்தார். பின்னர் யுத்தத்தை வென்ற துட்ட(:-) காமினியாக வெறி பிடித்தாடிக்கொண்டிருந்த மகிந்தாவின் ஆட்சியிலிருந்து , உபகண்ட. உ…
-
- 0 replies
- 314 views
-
-
அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்!…. ப. தெய்வீகன். அகரன்October 31, 2018 in: கட்டுரைகள் மைத்திரியால் தொடங்கிவைக்கப்பட்டுள்ள அரசியல் உற்சவத்தின் அதி உச்ச வேடிக்கைகள் இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் மேலும் மேலும் பல “புனித நிலைகளை” அடையப்போவதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது. ஜனநாயக மரபுகளைப்பேணி அரசமைப்பு மீதான ஒழுக்கத்தைக்கடைப்பிடிக்குமாறு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலிருந்தும் சரி கிலோ கிலோவாக மைத்திரி மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுவரும் இந்நிலையில், தனக்கான ஆதரவைப்பெறும் நோக்குடன் இரவு பகலாக கட்சிகளுக்கும் வலை வீசியபடியுள்ளார் மகிந்த. தனது பலத்தை காண்பிப்பதற்கு ஏதுவாக மைத்திரி ஒத்திவைத்து தந்துள்ள நாடாளுமன்றம் ம…
-
- 0 replies
- 585 views
-
-
ராஜபக்ச பிரதமரானார் -பின்னணியில் நடந்தது என்ன? 10/28/2018 இனியொரு... Gகடந்த 26.10.2010 வெள்ளியன்று இலங்கையின் பிரதமரான ரனில் விக்ரமசிங்கைவைப் பதவி நீக்கம் செய்த அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, மகிந்த ராஜபக்சவைப் பிரதமாராக நியமித்தார். இந்தியா அமெரிக்கா உட்பட இலங்கையைச் சூறையாடும் நாடுகளின் இனப்படுகொலைத் திட்டத்தை கோரமாக நடத்திக்காட்டிய மகிந்த ராஜபக்ச பிரதமராவது நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாவதற்கு இணையானது. ரனில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசின் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் வாழ்கைச் செலவை அதிகரித்திருந்தது. கடந்த நான்கு ஆண்டுகள் இலங்கையின் பொருளாதாரம் உழைக்கும் மக்கள் குறித்து எந்தக் கவலையுமின்றி பல் தேசிய நிறுவனங்களி…
-
- 0 replies
- 344 views
-
-
வைரமுத்து சர்ச்சை: கபிலன் ரியாக்ஷன்! ‘உண்மை வெல்லட்டும்...’ எனத் தொடங்கும் நீண்டதொரு கடிதத்தை எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து வெளியிட்டிருக்கிறார். கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து, அவரது குடும்பத்திலிருந்து ஒரு குரல் வெளிவந்திருக்கிறது. வைரமுத்து என்ற தனி நபர் இப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் எனப் போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகாமல், எதுவாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கைகள் தொடர்வதே மாண்பன்றி, புகழின் மீது கரி பூசுவது வெற்றியாகிவிடாது என்ற தொனியில் கபிலன் பேசுகிறார். கடிதத்தின் ஓரிடத்தில் மட்டும் ‘அப்பா’ என விளித்து, மற்ற இடங்களிலெல்லாம் தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக வைரமுத்துவை முன் நிறுத்தி கபிலன் எழுதியிருக்கும் உ…
-
- 0 replies
- 581 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பின் நிபந்தனை சாத்தியமா? பதிவேற்றிய காலம்: Oct 29, 2018 நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் மகிந்த, ரணில் இருவரும் தள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்மானகரமான சக்தியாக மேலெழுந்துள்ளது. பேரம் பேசல்கள் ஊடாகப் பணத்தை அள்ளி வீசி ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிந்த, மைத்திரி தரப்பு தம் பக்கம் இழுத்துக்கொள்ளாத நிலையில் கூட்டமைப்பு மட்டுமே ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் ஒரே சக்தியாக மேலெழும் வாய்ப்பும் உள்ளது. இத்தகைய ஒரு வாய்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறது என்பதை அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தியிருக்கி றார். புதிய அரசமைப்ப…
-
- 0 replies
- 411 views
-
-
பெல்ஜியம் கொலனியாக இருந்து விடுதலை அடைந்த சில காலங்களிலே நாட்டின் ஜனாதிபதி முபுட்டுவுக்கும் Joseph-Désiré Mobutu. பிரதமர் லுமும்பாவுக்கும் Patrice Lumumba இடையே உண்டாக்கிய இழுபறி பெரும் ரணகளமாகியது. நாட்டினை இரும்புக் கரம் கொண்டு ஆள முனைந்த ஜனாதிபதிக்கும், தேசியவாதியாக பிரதமருக்கும் நடந்த பெரும் கலம்பகத்தில், ஜனாதிபதி அமெரிக்காவின் உதவியையும், பிரதமர் சோவியத் உதவியையும் கோர... பிறகென்ன பனிப்போரின் நீட்ச்சி ஆபிரிக்கா வரை நீள.... பிரதமர் உட்பட 100,000 பேர், 1961 - 1965 காலப் பகுதியில் கொல்லப் பட்டனர். சாதாரணமாக தொடங்கிய சிறிய பிரச்சனை ஒரு சர்வதேச பிரச்சனையாகி, வெளி நாட்டு துருப்புகள் உள்ளே வரவும், பிரதமர் உள்பட பல உயிர்களை காவு வாங்கியதுடன் மிக மோசமான முடிவாக, இந…
-
- 1 reply
- 547 views
-