நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
சரியும் மானுடக் கனவு ‘அப்படியெல்லாம் நடந்துவிடாது’ என்ற பலரது நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது பிரெக்ஸிட் முடிவு ஜூன் 10 அன்று நான் லண்டனில் இறங்கியபோது, ஜூன் 23 அன்று நிகழவிருந்த ‘பிரெக்ஸிட்’ முடிவு இப்படியாகும் என்ற சூழல் ஏதும் இல்லை. என் நண்பர்கள் “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதெல்லாம் நடக்காத காரியம்” என்றனர். “மக்கள் பிரிய வேண்டுமென வாக்களித்தால்?” என்றேன். “வாக்களிக்க மாட்டார்கள். பிரிய வேண்டுமெனக் கேட்பவர்கள் மிகச் சிறிய ஒரு வலதுசாரிக் குழு. அவர்களுக்கு இங்கே பெரிய ஆதரவெல்லாம் இல்லை. அவர்களைத் தோற்கடித்து வாயை மூடவைப்பதற்காக இந்த வாக்கெடுப்பை நடத்துகிறார்கள்” என்றார்கள் அனைவருமே. …
-
- 1 reply
- 372 views
-
-
01.07.2016 இன்று கனடா தேசம் தனது 149 வது (கனடா பிறந்த தினத்தை) "Canada Day" கொண்டாடுகின்றது. கனடா தினம் என்பது கனடாவின் தேசிய தினமாகும். அதாவது, வட அமெரிக்காவின் மூன்று குடியேற்றத்திட்டங்களை ஆண்டுவந்த பிரித்தானியா; அவை மூன்றையும் ஒன்றாக இணைத்து “கனடா” என்னும் ஒரு நாடாக (பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் 1867ன் கீழ்) பிரகடனப்படுத்திய நாளே கனடா தினமாக கொண்டாடப்பெற்று வருகின்றது. கனடா தனது முதலாவது பிறந்த தினத்தை 01.07.1868 ல் கொண்டாடியது. ஆரம்பத்தில் இத் தினத்தை “டொமினியன் தினம்” என அழைத்தனர். அதன் பின்னர், 1982 ம் ஆண்டு ஒக்ரோபர் 27 திகதி இத் தினத்தை "கனடா தினம்" (Canada Day) என சட்ட பூர்வமாக மாற்றப் பெற்றது. இத் தினத்தை கனடாவின் "பிறந்த தினம்" எனவும் அழைப்பதுண்டு. …
-
- 0 replies
- 735 views
-
-
இலங்கை போடும் இரட்டை வேடம்! கடந்த 2015 அக்டோபரில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைக்கான தீர்மானத்தை அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை அரசு ஆதரித்தது. ஐநா மனித உரிமை கவுன்சிலின் 30-வது கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இதே இலங்கை அரசு, ஐநா மனித உரிமை கவுன்சிலில் முன்வைத்த தனது பொறுப்புகள், உறுதியளிப்புகள் மற்றும் கடமைகளை அமல்படுத்துவதிலிருந்து பின்வாங்குகிறது. போரின் கடைசிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களைப் பற்றி சர்வதேச நீதிபதிகள் விசாரிப்பது உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலையீட்டை அனுமதிப்பது என்று அந்தத் தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு மாறாக, உள்நாட்டு விசாரணையை…
-
- 0 replies
- 370 views
-
-
உலக நாடுகள் தம்மை வளப்படுத்துவதற்கான முயற்சிகளில் அதிக அக்கறை காட்டுகின்றன. சில நாடுகள் மிகக்குறுகிய காலத்தினுள் முன்னேற்றமடைந்துள்ளன. வறுமை, யுத்தம், ஊழல் என்பன சில நாடுகளை பின்னோக்கித் தள்ளுகின்றன. விஞ்ஞானம் ,தொழில்; நுட்பம் என்பன வியக்கத்தக்க வகையில் முன்னேற்றமடைந்துள்ளன. இவற்றுக்குச் சரிசமமாக அகதிகளின் எண்ணிக்கையும் உலகில் அதிகரித்துள்ளன. 2015 ஆம் ஆண்டு மூன்று மில்லியன்மக்கள் அகதிகளானர்கள் என ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு அகதிகளின் தொகை 5.8 சதவிதமாக அதிகரித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற உண்டட்டுக் கலவரத்தால் அகதிகளாக இந்தியவுக்குச் சென்றவர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்காகச் சென்று இந்தோனேஷியாவில் பரிதவிக்கின்றன…
-
- 0 replies
- 357 views
-
-
எல்லாப் பிரச்சனைகளுக்கும் இரண்டு பக்கம் இருக்கின்றன என்பார்கள். தமிழ்நாட்டு சட்டசபைக்குள் இரண்டு கட்சிப் பிரச்சனையும் இருவர் மட்டில் எழும் பிரச்சனையும் தான் எல்லாப் பிரச்சனைகும் பெரும் பிரச்சனையாகி விட்டது. எல்லாப் பிரச்சனைகளும் சரிவந்தாலும் அ.தி.மு.கவும்--தி.மு.க.வில் ஏற்படும் பிரச்சனைகள் ஒத்துவருவதாக எந்தக் கட்டத்திலும் காலத்திலும் நடைபெறப் போவதில்லை. சிரிப்புத்தான் பெண்மைக்கு அழகு அகத்தின் அழகுதான் ஆண்மையின ஆளுமைச் சிறப்பின் அழகு இரண்டு திராவிடக்கட்சித் தலைவர்களிடம் இவை இரண்டும் சிறிதளவேணும் இல்லை: ஒன்று கருணாநிதி இரண்டாவது ஜெயலலிதா மூன்றாவது பக்கம் யார் வெல்வது தோற்பது என்ற நிலையில் முழிபிதுங்கி செய்வதறியாத தமிழ் மக்கள். நாலாவது பக்கம் புதிர் நிறைந்த பக்கம் சர்ச்…
-
- 0 replies
- 224 views
-
-
இலங்கையைப் பற்றி, குறிப்பாக இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி தமிழகச் சமூகம் அறிந்திருக்கும் விடயங்கள் பல உள்ளன. இறுதி யுத்தத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றைக் கனத்த இதயங்களோடு, ஏதும் செய்வதறியாத கையறு நிலையுடன் பார்த்து வந்துள்ளோம். இலங்கைத் தமிழினத்தை நம் சகோதர, சகோதரிகளாய்ப் பார்க்கும் இயல்புணர்வால் இத்தாக்கம் நமது சமூகத்தில் மேலதிகமானதாக இருந்தது. இதேபோன்று வேறு பலவிதமான ஆதிக்கங்களால் பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மார், ஈராக், சிரியா, செக், ஸ்லேவாக்கியா, பொஸ்னியா, ஹெர்ஜ கோவினா என பல நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தங்கள் மக்களை அழித்தும் இடம்பெயரச் செய்தும் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாக்கியபோது இந்த அளவு தாக்கத்தை நாம் உணரவில்லை. தமிழக அரச…
-
- 0 replies
- 335 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து பிரித்தானியா வெளியேறி இருக்கிறது.நல்லவிடயம்நாடுகளாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி ஏன் குடும்பமாக இருந்தாலும் சரிஇன்பத்திலும் துன்பத்திலும்நன்மையிலும் தீமையிலும் பங்கு கொள்பவர்களே ஒன்றாக வாழலாம். வாழமுடியும்.இன்பத்தை மட்டும் நன்மையை மட்டுமே இதுவரை பிரித்தானியா பங்கு கொண்டுள்ளது. மற்றும்படி எப்பொழுதும் மதில் மேல் பூனை விளையாட்டுத்தான். கொஞ்சம் இறுக்கினால் போய்விடுவேன் என்ற பயமுறுத்தல் வேறு.எதிரியை நம்பிக்கூட ஒன்றாக பயணிக்கலாம்.ஆனால் இப்படியான பச்சோந்திகளை நம்பி????.ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது. அத்தனை பொருளாதார நிபுணர்களும் ஒன்றாக இருங்கள் என்ற போதும் பிரித்தானிய மக்கள் பிரிந்து போகிறா…
-
- 16 replies
- 808 views
- 1 follower
-
-
நிர்வாணம் -முகம்மது தம்பி மரைக்கார் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. அதிலும் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் மீது புரியப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கேள்வியுறும்போது அச்சமாக உள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் வெளியில் செல்லும் தமது பெண் பிள்ளைகள் வீடு திரும்பும்வரை மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டவர்கள் போல் அவஸ்தையுறுகின்றனர். இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறாள். இது அதிர்ச்சியானதொரு தகவலாகும். 2015ஆம் ஆண்டு இந்தத் தகவலை, அப்போது அமைச்சராகப் பதவி வகித்த ரோசி சேனநாயக்க தெரிவித்திருந்தார். …
-
- 0 replies
- 524 views
-
-
எகிப்து உயர் நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி `வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த’ ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு சர்ச்சைக்குரிய பகுதிகளை `தாரை வார்ப்பதில்’ ஒரு புது வெளிச்சத்தை பாய்ச்சி இருக்கிறது. இது எந்த அளவுக்கு `நமக்கு' உதவும் என்பது, சட்ட வல்லுனர்களின் பார்வை, நீதிமன்ற அணுகுமுறையைப் பொறுத்தது. ஆனால் மிக நிச்சயமாக `குறிப்பிடப்பட வேண்டிய' ஒரு தீர்ப்பு என்பதில் ஐயம் இல்லை. செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவுகள் `திரான்', மற்றும் `சமாபிர்'. தனது நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட இவ்விரு பகுதிகளையும், எகிப்து அரசு, சவுதி அரேபியாவுக்கு `தாரை வார்த்து' கொடுத்தது. சவுதி மன்னர் சல்மான், கடந்த ஏப்ரல் மாதம், எகிப்துக்கு சென்றபோது, அந்நாட்டுக்கு ஏரா…
-
- 0 replies
- 318 views
-
-
சிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையினர் துணைவர்களை இழந்தவர்களா! இன்று உலக துணைவர்களை இழந்தவர்களின் தினம். உலகில் கணவனை இழந்த கைம்பெண்களின் பிரச்சினைகளை குறித்து கவனத்தை ஏற்படுத்தும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த நாள் உலக துணைவர்கள் தினமாக 2010இல் பிரகடனம் செய்யப்பட்டது. உலகில் போர், பஞ்சம், வன்முறை, அசாதாரண நிலமைகள் காரணமாக கோடிக்கணக்கான பெண்கள் துணையிழந்தவர்களாக்கப்பட்டு உள்ளதாக உலக புள்ளி விபரங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கோடிக்கணக்கான உலக துணையிழந்தவா்களில் சுமார் 90ஆயிரம் ஈழ துணையிழந்தவர்களும் உள்ளடங்குகின்றனர். உலகில் சுமார் 260 மில்லியன் பெண்கள் துணைவர்களை இழந்தவர்களாக வாழ்கின்றனர். அவர்களில் 115 மில்லியன் துணையிழந்தவர்கள், வறுமையின் ப…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 621 views
-
-
மூலம்: http://maatram.org/?p=4592 மின்சாரம் தாக்குவது போன்று இடது காலின் அடிப்பாதத்திலிருந்து உருவாகும் அந்த வலி அப்படியே உடல் வலியாக பயணம் செய்து உச்சந்தலை வரை செல்கிறது. அதுவும் குளிர் காலங்களில் காலினுள் பொருத்தப்பட்டிருக்கும் தகடு குளிர்ச்சியடைந்ததும் நரக வேதனை… இந்த வேதனையுடன் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேன் என்பதைகூட நான் அறியவில்லை. இருந்தபோதிலும் நான் எழுத எடுத்த கடதாசி வெள்ளையாகவே இருந்தது. ஆயிரக்கணக்கான மக்களின் கதைகள், இன்னும் பல விடயங்கள் பற்றி எழுதி பழக்கப்பட்ட எனக்கு, எழுத இவ்வளவு சிரமப்படுவேன் என்று எப்போதும் எண்ணிப் பார்த்ததில்லை. பல்வேறு துன்புறுத்தல்கள், சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்த மக்கள் தாங்கள் அனுபவித்த அந்த வேதனையை இந்த உலகில் உள்ள இன்…
-
- 1 reply
- 450 views
-
-
வாழ்விற்கான ஒரு போராட்டத்தில் 44 ஈழ அகதிகள்...! தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்து, படகில் பழுது ஏற்பட்டதால் கடலிலேயே தவித்து வந்த 44 தமிழ் அகதிகள், ஒரு வார காத்திருப்புக்கு பின்னர் இந்தோனேசியாவில் தரை இறங்க, அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. ஏசெஹ் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஜூன் 20) ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (UNHCR) அதிகாரிகள், அகதிகளை சந்தித்தனர். ஏற்கனவே 13,000 த்திற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் குடியமர்த்தப்பட காத்திருப்பதால், இவர்களை இந்தோனேசிய அரசு ஏற்குமா என்பது சந்தேகமே. அப்படியே ஏற்றுக்கொண்டாலும், அவர்களுக்கு ஒரு நல்வாழ்வு கிடைக்குமா எ…
-
- 0 replies
- 396 views
-
-
சாலாவ ஆர்ப்பாட்டங்களும் தமிழரின் பொறுமையும் சாலாவயிலுள்ள இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தினால், பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி அவிசாவளை- கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்தினால், நூற்றுக்கணக்கான வீடுகளும் கடைகளும் சேதமடைந்துள்ள நிலையில், விரைவாக அவற்றைத் திருத்தித் தருமாறு கோரியே அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி அங்கு சென்று பேச்சுக்களை நடத்துகின்றனர், வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். ஆனாலும், அப்பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், அவர்களின் இழப்புகள் முழுமையாக ஈடு செய்யப்…
-
- 0 replies
- 268 views
-
-
ஒர்லன்டோவும் சமபாலுறவும் முஸ்லிம்களும் வெறுப்பும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகத்தில், அதிகம் பாகுபாட்டுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகின்ற சிறுபான்மைக் குழுமமாக, சமபாலுறவாளர்கள் காணப்படுகிறார்கள் என்றால், அது மிகையில்லை. சாதாரண எள்ளலில் ஆரம்பித்து, அவர்களின் 'வித்தியாசமான' பாலியல் தெரிவுக்காக, 'சட்டங்களினால்' அல்லது சமுதாயக் கட்டமைப்புகளால் கொலை செய்யப்படுவது வரை, அவர்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது. இந்நிலையில் தான், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒர்லன்டோவில் காணப்படும் சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதியில், ஆயுததாரியொருவர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலால், குறைந்தது 50 பேர் உ…
-
- 0 replies
- 402 views
-
-
'ஒருத்தனுக்கு ஒருத்தி': பொய்யாக்கும் தலங்கம கலாசாரம் வேண்டாம் -மேனகா மூக்காண்டி இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இலங்கையைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கென்ற கலை, கலாசா, பண்பாடு, மற்றும் ஒழுக்கங்கள் போன்ற தனித்துவமாகக் காணப்படுகின்றன. அந்தத் தனித்துவத்தை, காலாகாலத்துக்கு பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. ஒருவரின் நடத்தை, ஒழுக்கம், செயற்பாடுகள், நடை - உடை - பாவனை அனைத்துமே, இவர் இந்த இனத்தைச் சேர்ந்தவர், இந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பறைசாற்றிவிடுகின்றது. எனவே, நாம் ஓரிடத்தில் ஏதேனும் தவறை இழைத்துவிட்டால், அது எமது சமூகத்தையே பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும் என்பதை எந்…
-
- 0 replies
- 555 views
-
-
தாஜூதீனின் படுகொலை தொடர்பாக உதவிக் காவற்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் ராஜபக்சாக்களின் சட்டவாளர்களுடன் கோத்தபாயவின் வீட்டில் சிறப்புக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கோத்தபாயவிற்கு நெருக்கமான அதிகாரியான அனுர சேனநாயக்க, கோத்தபாயவின் கட்டளைகளுக்கு இணங்கச் செயற்பட்டார் என்பதில் எவ்வித இரகசியமுமில்லை. அனுராவின் கைதானது கோத்தபாயவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோத்தபாயவைக் கைதுசெய்வதற்கான சரியான நேரத்திற்காக ஊழல் மற்றும் மோசடிக்கான இயக்குனர் டில்ருக்சி காத்திருப்பதை வெளிக்காட்டும் சுவரொட்டிகள் கடந்த வார இறுதியில் நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. கடந்த 4ஆம் நாள், இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட வேளையில், சிறிலங்கா …
-
- 0 replies
- 212 views
-
-
பாவிகளா...சீமான் இதைத்தான் கத்தினான்.கேட்டிகளா?இப்ப தெரிகிறதா உண்மை..!
-
- 3 replies
- 536 views
-
-
சாலாவ ஆயுத களஞ்சியசாலை: தானாக வெடித்ததா? திட்டமிடப்பட்ட வெடிப்பா? -மேனகா மூக்காண்டி பல்குழல் பீரங்கிகள்;, மோட்டார் குண்டுகள், ஆட்லறிகள், வான் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களைக் கேட்டு, பதுங்கு குழிகளில் மக்கள் பதுங்கிய காலமொன்று, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இற்றைக்கு 7 வருடங்களுக்கு முந்திய மூன்று தசாப்தக்காலத்தில் இருந்தது. அவ்வாறான நிலைமையை, தெற்கைச் சேர்ந்த மக்கள் முதன்முறையாக எதிர்நோக்கிய சம்பவமொன்று, கடந்த ஞாயிறன்று (05) இடம்பெற்றது. வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள் என்ற கோஷம், இதுவரை காலமும், வடக்கிலிருந்தே ஒலித்துக்கொண்டிருந்தது. முதன்முறையாக இந்தக் கோஷமும், தெற்கிலிருந்து கேட்கத் தொ…
-
- 0 replies
- 355 views
-
-
சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பும் சில கேள்விகளும் கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம், தென்னிலங்கையை சற்றுப் பதற்றமடைய வைத்திருக்கின்றது. ஆயுதக் களஞ்சியம் முற்றாக வெடித்துச் சிதறி ஓய்வதற்கு 7 மணித்தியாலங்கள் வரை ஆனது. அது, ஏற்படுத்திய தீச் சுவாலையும் புகை மூட்டமும் பிரதேசத்தினை முற்றாக மூடியிருந்தன. அத்தோடு, ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் அயல் பிரதேசத்திலுள்ள வீடுகளும் பொதுக் கட்டடங்களும் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன. ஆயுதங்களின் வெடிப்புச் சார்ந்து நிகழ்த்திருக்கின்ற இந்த அனர்த்தத்தை எதிர்கொள்வது தொடர்பிலான நடவடிக்கைக…
-
- 0 replies
- 231 views
-
-
-
- 1 reply
- 605 views
-
-
கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற ஆயுதக்கிடங்கு வெடிப்பினை பற்றியே இன்று நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பேசுகிறார்கள். குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்வினை ஏற்படுத்தி இருக்கின்றது. வெடியோசை சிங்கள மக்களுக்கு புதியது தான் ஆனால் எமது தமிழ் மக்களுக்கோ ஆலய மணியோசைதான். இன்றிலிருந்து ஏழு வருடங்கள் சற்றுப் பின்னோக்கி வடக்கு - கிழக்கினை பாருங்கள். அங்கு தமிழ் மக்கள் அனுபவித்த வலிகளையும் துன்பங்களையும் அளவிட்டால் உங்களுக்கே புரியும். நீங்கள் இன்று கேட்டு அதிர்ந்த வெடியோசைகள் எல்லாம் எள்ளவுதான் என. நாட்டில் இருக்கக் கூடிய ஒட்டுமொத்த ஆயுதக் கிடங்குகளையும், தமிழ் மக்களை அழிக்கும் நோக்குடன் கொட்டியவர்கள், இன்று கொஸ்கம சம்பவத்திற்காய் நீலிக…
-
- 0 replies
- 220 views
-
-
'தண்டனைகளே குற்றத்தை தடுப்பதற்கான வழிமுறை-யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்' யாழ் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் வாள்வெட்டுக் கலாசாரம் குறித்து தன்னுடைய கவலையை வெளிப்படுத்திய யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசிய உணர்வுபூர்வமான உரை. எல்லோரும் கட்டாயம் இதனைப் பகிர்ந்து , இளையவர்கள் மத்தியில் இதனை அதிகம் கொண்டு சேருங்கள்.
-
- 1 reply
- 401 views
-
-
தமிழ் ஊடகப் பரப்பும் அகற்றப்பட வேண்டியவையும் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இதோ போன்றதொரு காலையில் (ஜூன் 01) அரிய தொகுப்புக்கள், வரலாற்றுச் சுவடிகள் உள்ளடங்கலாக சுமார் 97,000 புத்தகங்களுடன், யாழ். பொது நூலகம் எரிந்து அடங்கியது. எரித்தவர்கள், இறுமாப்போடு கடந்து போனார்கள். எரிந்துபோன புத்தகங்களின் எச்சங்களைக் கட்டிக்கொண்டு அழுதவர்களின் மனவடு, எந்தவித ஆற்றுதலும் இன்றி, எரிந்து எழுந்த சுவாலைக்குள்ளும் அதன் வெம்மைக்குள்ளும் இன்னமும் தகித்துக் கொண்டிருக்கின்றது. யாழ். பொது நூலக எரிப்பு, தமிழர்களின் கல்வி, அரசியல் மற்றும் சமூக உரையாடல் வெளிக்கான அச்சுறுத்தலின் பிரதிபலிப்பு. தமிழ் மக்கள், தமது அரசியலுரிமைப் போராட்டங்களை ஆரம்பித்த காலம…
-
- 0 replies
- 393 views
-
-
யாழ் நூலக எரிப்பு! புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்: ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ் நூலகம் அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள். 1981ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளின் நள்ளிரவில் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. அந்த நாள், யாழ் நூலம் இன நூலெரிப்பு வன்முறையால் அழிக்கப்பட்ட நாள். இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்தின் ஊற்றிடங்களான …
-
- 0 replies
- 209 views
-