நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4203 topics in this forum
-
போதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்பது தியானம் தான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன. போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவரு…
-
- 0 replies
- 597 views
-
-
கடந்து செல்லும் 2015: வரலாற்றில் இடம்பிடித்த சில முக்கிய நிகழ்வுகள்: தொகுப்பு சனவரி 2: வடக்கே தொடருந்து சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டது. சனவரி 8: ஜனாதிபதித் தேர்தலில் 2015: சராசரியாக 70 வீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரமராகி இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. சனவரி 9: ஜனாதிபதித் தேர்தலில் 2015: வட, கிழக்கு, மற்றும் மலையக மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அறிவித்தார். சனவரி 11: ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராசபக்ச ஆட்சிக் கவி…
-
- 0 replies
- 221 views
-
-
ஜனாதிபதியும் கலாசார பொலிஸ் பணியும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலத்தீன் பொப் பாடல்களின் அரசரென அழைக்கப்படும் என்றிக் இக்லேசியஸின் இலங்கைப் பயணம், அதிகமான சர்ச்சைகளையும், இலங்கை மீதான உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துச் சென்றுள்ளது. 5,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரையிலான பெறுமதிகளில் நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்ட இந்நிகழ்வு, இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட அதிபிரபலமான நட்சத்திரமொன்றின் இசை நிகழ்ச்சியாக அமைந்த போதிலும், ஏற்பாடு தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான், திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த இசை நிகழ்ச்சியில், பெண்ணொருவர் எனச் சந்தேகிக்கப்படுபவர், என்றிக் இக்லேசியஸ் மீது மார்…
-
- 0 replies
- 435 views
-
-
வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாளுடனான கலந்துரையாடல்!
-
- 1 reply
- 650 views
-
-
கும்பகர்ணர்கள் மொஹமட் பாதுஷா நாடாளுமன்றத்துக்கு செல்கின்ற நம்முடைய எம்.பி.க்களில் சிலர், எல்லா வரப்பிரசாதங்களையும் சிறப்புரிமைகளையும் உயர்ந்தபட்சமாக உபயோகப்படுத்துகின்ற போதிலும் சபையில் உரையாற்றுதல் என்ற சிறப்புச் சலுகையை மட்டும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்த பொடுபோக்குத்தனம் எம்மில் பலருக்கு அதிகமாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தின் 'ஹன்சாட்' பதிவேடுகளைப் பரிசோதித்தால் - முஸ்லிம்களின் தேசிய தலைவர்களும் பிராந்திய தளபதிகளையும் எத்தனை தடவைகள் தத்தமது ஆசனங்களில் இருந்து எழுந்து மக்களுக்காக பேசியிருக்கின்றார்கள் என்ற புள்ளி விவரத்தை விலாவாரியாக அறிந்து கொள்ளலாம். நாடாளுமன்றம் என்பது சினிமா தியேட்டரோ, கருத்தரங்கு மண்டப…
-
- 0 replies
- 376 views
-
-
ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் ஏன் கிறிஸ்தமஸ் கொண்டாடுகிறோம்: - சிறப்பு பதிவு [Thursday 2015-12-24 08:00] கிறிஸ்துமஸ் தோற்றம் இயேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ம் நாள்தானா? என்ற கேள்வியை எழுப்பும் வரலாற்று ஆய்வாளர்கள், உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவார் எவருமில்லை என்றே கூறுகின்றனர். கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை என்பதுதான்! ஆனால் டிசம்பர் 25ம் நாளைக் கிறிஸ்துமஸ் நாளாகக் கொண்டாடத் துவங்கியது எப்போதிருந்து என்ற கேள்விக்கு வரலாற்று ஆய்வாளர்கள் விடை காண முற்பட்டுள்ளனர். உச்சந்தலையிலிருந்து உள்ளங்காலுக்கு ஊடுருவும் உச்சக் குளிர்காலத்தில்தான் ரோம், …
-
- 0 replies
- 716 views
-
-
வரைவிலக்கணம் இல்லாத வெறுப்பு பேச்சு சமூகங்களுக்கிடையிலான மோதல்களைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்களை (ர்யவந ளிநநஉh) தடுப்பதற்காக, தண்டனைக் கோவையிலும் குற்றவியல் நடைமுறைக் கோவையிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்காக, அரசாங்கம் முன்வைத்த இரு நகல் சட்டமூலங்களை அரசாங்கமே வாபஸ் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் தெரிவித்த எதிர்ப்பை அடுத்தே அரசாங்கம் பின் வாங்கியது. வெறுப்புப் பேச்சுக்கு எதிரான இந்த சட்டத் திருத்தத்தால், பேச்சுச் சுதந்திரத்துக்கே ஆபத்து ஏற்படும் என்றே தமிழ்க் கூட்டமைப்பும் வேறு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அதனை புதிய வடிவத்தில் முன்வைப்பதாக, நாடாளுமன்ற சீர்திருத்…
-
- 0 replies
- 446 views
-
-
வாபஸ் பெறப்படும் இனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் மொஹமட் பாதுஷா இன, மத ரீதியான வெறுப்பூட்டும் பேச்சுக்கள், நடத்தைகளுக்கு தண்டனை வழங்கும் விதத்திலமைந்த உத்தேச சட்டமூலம் கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அச் சட்டமூலத்தை வாபஸ் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று பகல் நாடாளுமன்;றத்தில் அறிவித்துள்ளார். இதற்கமைய, திட்டமிட்டிருந்தபடி, அடுத்த மாதம் இச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று அரசாங்கம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. உத்தேச சட்டமூலத்தை வாபஸ் பெறுவதான அரசாங்கத்தின் அறிவிப்பு, சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றியா? இல்லையா? என்பதை அறுதியிட்டுச் ச…
-
- 0 replies
- 257 views
-
-
பிரபலங்களுக்கு மட்டுந்தான் சமூகப் பொறுப்பா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சமூகங்களில் பிரபலங்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன என்பது தொடர்பான விவாதங்கள், எப்போதுமே உருவாகி வந்திருக்கின்றன. ஆனால், பேரழிவுகள் அல்லது அதைப் போன்ற சம்பவங்களின்போது, இது தொடர்பான விவாதங்கள் அதிகம் எழுவதுண்டு. அதேபோலவே, சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளம், அதைத் தொடர்ந்தான குழப்ப, பதற்ற, அழிவு நிலைமைகளின்போது, இந்தியப் பிரபலங்களின் பங்களிப்புத் தொடர்பாக அதிகம் கவனஞ்செலுத்தப்பட்டது. அதைப் போன்றே, அண்மையில் கசிந்த அனிருத் - சிம்பு கூட்டணியின் பாடலின் போதும், இதே கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையிலேயே…
-
- 0 replies
- 223 views
-
-
தமிழ் மக்களின் அடைவின் இலக்குகள் நல்லிணக்க அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக வெளியிட ஆரம்பித்துவிட்டது. நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கைகளின் போக்கில் புதிய அரசாங்கத்துக்கான சந்தர்ப்பத்தையும், காலத்தையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கூட ஏரிச்சல் கலந்த எதிர்ப்பினை நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. தென்னிலங்கை அரசியல் நிகழ்ச்சி நிரலோடு மல்லுக்கட்டுதல் மற்றும் அதனூடான வெற்றி என்பது எப்போதுமே கல்லிலே நார் உரிப்பதற்கு ஒப்பானதுதான். ஆனாலும், ஆட்சி மாற்றமொன்றுக்கு கடந்…
-
- 0 replies
- 246 views
-
-
சண்டியர்களின் கூடாரம் மப்றூக் நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றமானது, சண்டியர்களின் கூடாரமாக மாறத் துவங்கியுள்ளதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டவாக்க சபை, சண்டியர்கள் கூடிக் கலையும் இடமாக மாறுவதென்பது, தேசத்துக்கு மிகப் பெரும் இழுக்காகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை, ஐ.ம.சு.கூட்டணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் வைத்தே தாக்கிய அல்லது தாக்க முயற்சித்த சம்பவத்தினூடாக, நமது நாடாளுமன்றம் குறித்து மக்கள் கொண்டிருந்த எண்ணக் கருவில், மீண்டுமொரு தடவை கறை விழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் வெளி…
-
- 0 replies
- 357 views
-
-
அவன்ட் காட் வெட்டிய புதைகுழி கடந்த ஜனவரி 8ஆம் நாள் நடந்த ஜனாதிபதி தேர்தலை அடுத்து இடம் பெற்ற ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இலங்கையில் அதிக சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிறுவனம் அவன்ட் காட் என்பதில் சந்தேகமில்லை. ஆட்சி மாற்றத்தையடுத்து, சில நாட்களில் அவன்ட் காட் நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியங்களும், மிதக்கும் ஆயுதக் கப்பல்களும் சோதனையிடப்பட்டன. அங்கிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான வழக்குகளும் விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும் விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறார். வேறும் பல முன்னாள் இராணுவ, கடற்படை அதிகாரிகளும் இந்த நிறுவனம் பற்றிய ச…
-
- 0 replies
- 278 views
-
-
மனித உரிமைகளுக்குக் கல்லெறியும் சவூதி அரேபியா கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவந்த இலங்கைப் பெண்ணொருவர், திருமணத்துக்குப் புறம்பான உறவை ஏற்படுத்தியதன் காரணமாக, கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதிநேரத்தில், இலங்கை அரசாங்கத்தின் முயற்சி காரணமாக, அந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு, சவூதி அரசாங்கம் சம்மதித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவைச் சபையின் தலைமைப்பதவிக்கு, இவ்வாண்டு நியமிக்கப்பட்ட சவூதி அரேபியா, உலகமட்டத்திலான மனித உரிமைகள் சம்பந்தமான முக்கியமான பொறுப்பைக் கொண்டிருக்கிறது. உலகின் மனித உரிமைகள் பற்றிய விடயங்களைக் கையாளும் …
-
- 0 replies
- 251 views
-
-
புலி நீக்க அரசியல் பற்றிய உரையாடல்கள் தமிழ்த் தேசிய அரசியலும், அதன் விடுதலை முனைப்பும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை, கோட்பாடு மற்றும் ஆளுமை சார்ந்து வரையறுக்கப்பட்டு மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாகிவிட்டது. விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டக் களத்திலிருந்து அகற்றப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், அவர்களின் ஆளுமை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருந்து நீக்கப்படவில்லை. அது, விமர்சனங்களை மீறிய விசுவாசமாகவும் பிணைப்பாகவும் நீடிக்கின்றது. தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து விடுதலைப் புலிகளின் ஆளுமை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தென்னிலங்கைக்கும், இந்தியாவுக்கும், தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கும் இருக்கின்றன என்பது வெளிப்…
-
- 0 replies
- 303 views
-
-
வெட்கமே இல்லாமல் பேசும் அரசியல்வாதிகள் முன்னணி சோஷலிஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிரேம்குமார் குணரத்னத்துக்கு இலங்கையில் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவருக்கு, இலங்கையில் அரசியலில் ஈடுபட உரிமை இருக்கிறது என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறியிருக்கிறார். கடந்த வருடம் நாடு கடத்தப்பட்ட குணரத்னம், கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலத்தில் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தார். அவரது விஸா காலம் ஜனவரி மாதம் முடிவடைந்த போதும், மீண்டும் தமக்கு பிரஜாவுரிமை இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு அவர் செல்லவில்லை. எ…
-
- 0 replies
- 215 views
-
-
யாழ்ப்பாணம் இந்து குருமார் சங்கத் தலைவரான சிவலோகநாதன் குருக்கள், இலங்கை ராணுவம் புனிதமான பசுவின் மாமிசத்தினை உண்ணாமல் போர் புரிந்ததாலே போரில் வென்றார்கள் என்றும் அதேவேளை வன்னியில், புலிகள் பசு மாமிசம் உண்ட காரணத்தினால் போரில் தோற்று மறைந்து விட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். புலிகள் இந்துக்களால் வணங்கப் படும் பசுவை உண்ணுவது குறித்து சைவ இந்துக்கள் மனம் வெதும்பினார்கள். பிரபாகரன் ஒரு இந்து. அவரது தந்தை ஒரு சிவாலயத்தின் நிருவாகி. அவ்வாறு இருந்தும் பிரபாகரன் இந்துவாக இருக்கவில்லை. ஆனால் பத்திரிகைகள் அவரை ஒரு பக்தியாளராக காட்டின. Sri Lanka Army Won the War as They Refrained From Eating Beef While Prabhakaran and the LTTE Perished Because They Ate Beef – Sivalogan…
-
- 1 reply
- 702 views
-
-
OPPEN LATTER TO SINHALESE ARTISTS AND SINHALESE CIVIL SOCIETY FROM POET V.I.S.JAYAPALAN சிங்கள கலைஞர்களுக்கும் சிவில் சமூகத்துக்கும் கவிஞன் ஜெயபாலனின் பகீரங்க கடிதம். எனது கடவு சீட்டு (Passport) கரும்புள்ளி (Black listed) குத்தப்படூள்ளது. என் விசாவை மறுத்த குடிவரவு திணைக்கள அதிகாரிகள் எனக்கு நிரந்தர வதிவு விசா ( Resident visa) இருப்பதால் என் விசா விண்ணப்பத்தை நிராகரிபதாக நக்கலுடன் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவோ என் கடவு சீட்டு கரும்புள்ளியை நீக்காமல் ஜெயபாலன் இலங்கை வரலாம். அவர் வருவது பிரச்சினை இல்லையென்று குறிப்பிட்டுள்ளமை ஆச்சரியமாக உள்ளது. நான் நாட்டிலும் வெளியிலும் சிங்கள, முஸ்லிம் மலையக தமிழரது உரிமைகளுக்குக் குர…
-
- 0 replies
- 339 views
-
-
உண்மை காலில் செருப்பு போடுவதற்குள் பொய் ஒருமுறை உலகை சுற்றி வந்துவிடும் என்பார்கள் வதந்திகளைப் பற்றி. இப்படி மனதில் பீதியை கிளப்பும் இரண்டு செய்திகள் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிவேகமாக பரவிக்கொண்டிருகிறது. சென்னையில் பெய்து வருவது வெறும் மழை அல்ல. NASA ரிப்போர்ட் படி இதோட பெயர் 'EL Nino' சுழற்சி புயல். கிட்டதட்ட 250 Cm வரைக்கும் இந்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சென்னையே மூழ்கிப்போக வாய்ப்பு உண்டு. google ல Search பண்ணி பாருங்க தெரியும். எப்படியாவது நம் சென்னை மக்களுக்கு தெரியப்படுத்துங்க... PLZ... அரசாங்கம் இத பொருட்டா எடுத்துக்கல” - இது முதல் வதந்தி. டிசம்பர் 16 முதல் 22 வரை சூரிய புயலால் நாம் சூரியனை பார்ப்பது கடினம்..…
-
- 0 replies
- 447 views
-
-
ஒரு கட்டுக்கதை: தனி முஸ்லிம் அலகு மொஹமட் பாதுஷா கிழக்கு மாகாணத்தில் தனி முஸ்லிம் அலகை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. 'அண்மையில், அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரை சந்தித்தபோது, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவின் தலையீட்டை அவர்கள் கோரியுள்ளமையானது, முஸ்லிம்கள், அரசாங்கத்துடன் தனி முஸ்லிம் அலகு ஒன்றைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கலாம்' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் அவ்வியக்கம் கூறியுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் …
-
- 0 replies
- 564 views
-
-
பொறுப்புக் கூறுவாரா சந்திரிகா? போர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கும் செயல்முறைகள் இன்னும் சில வாரங்களில் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ, இந்த விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக அவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விவகாரங்களில், இந்தப் பணியகத்தின் ஊடாக முக்கிய பங்காற்றவிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இந்த அறிவிப்பு முக்க…
-
- 0 replies
- 269 views
-
-
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரின் மகனின் திருமணம், இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் பெரும் (£14 மில்லியன்) பணச்செலவில் நடந்த ஆடம்பர திருமணம், ஐரோப்பியர்களை மூக்கில் விரலை வைக்க வைத்து உள்ளது. உலெகெங்கும் இருந்து தனி விமானங்களில் விருந்தினர் வந்தனர். பொலிவூட் இசை, மகிழ்வூட்டுதல்கள், நடனம். பெரும் தரத்தில் சுவையான உணவு..... நகரத்தின் உயர் தர தங்கும் இடங்கள் எல்லாம் முழுமையாக வாடகைக்கு எடுக்கப் பட்ட நிலையில், 3 நாள் கொண்டாட்டம். யானை மீது, ஊர்வலம் வர தடை வந்தது மட்டுமே குறை. கோடிக்கணக்கான இந்தியாக்கள் பட்டினியில் வாட இந்த ஆடம்பரம்...... http://www.dailymail.co.uk/news/art…
-
- 4 replies
- 3.5k views
-
-
இலங்கையின் மிகப் பெரிய லஞ்சப் பணம்: 12.5 கோடி லஞ்சப் பணக்கட்டு (நிஜமானது) அண்மையில் இலங்கையில் மிகப் பெரிய லஞ்ச முயற்சி ஒன்று முறியடிக்கப் பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவர் கையும் களவுமாக, லஞ்ச தடுப்பு கமிசன், விரித்த வலையில் சிக்கி கைதாகி உள்ளனர். அரசியல், அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை உண்டாக்கி விட்ட இந்த விசயம், பேராசை பெரும் நட்டம் என்பதனை மீண்டும் நிரூபித்து விட்டது. அதிலும் அரச சொந்தமான 'இலங்கை போக்குவரத்துச் சபை' பஸ் வண்டிகளுக்காக, வரி இல்லாது, தனியார் நிறுவனம் ஊடாக, டெண்டர் மூலம், இறக்குமதி செய்யப் பட்ட உதிரிப் பாகங்களுக்கு, வரி கட்ட வில்லை என்று, 'குடைந்தே', அரசு அதிகாரிகளான சுங்கத் திணைக்கள அதிகாரிகள், இந்…
-
- 8 replies
- 2.3k views
-
-
-
முஸ்லிம்கள் மீதான இனவாதமும் அவர்களின் பொறுப்பும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய இனக்குழுமமாக, முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஏறத்தாழ 1.6 பில்லியன் முஸ்லிம்கள், உலகெங்கிலும் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும், ஏராளமான நாடுகளின் முதன்மை இனக்குழுமமாகவும் இருக்கிறார்கள். ஆனால், உலகில், அதிக சர்ச்சைகளோடு சம்பந்தப்படுகின்ற இனக்குழுமமாகவும் அவர்களே இருக்கிறார்கள். மியான்மாரில் ஒடுக்கப்படுதலாக இருக்கலாம், பயங்கரவாத நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டோருக்கும் முஸ்லிம்களின் சமயமான இஸ்லாத்துக்கு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் குற்றச்சாட்டுகளாக இருக்கலாம், எண்ணெய்வள நாடுகளின் கட்டுப்பாடுகளாக இ…
-
- 0 replies
- 383 views
-
-
பரிஸ் தாக்குதல்: யாருக்காக அழுவோம்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கொலைகள் கொடியன. எவரை எவர் கொன்றாலும் அது கண்டிக்கத்தக்கது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. மனித உயிர்கள் பெறுமதி மிக்கவை. அவை கூட்டல் கழித்தல் கணக்குக்குரியனவல்ல. கடந்த வாரம் பிரான்ஸின் பரிஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்தது. கண்டனச் செய்திகளும் அனுதாபச் செய்திகளும் உலகின் சகல மூலைகளிலிருந்தும் வந்தன. சமூக வலைத்தளங்களில் அது முக்கிய பேசுபொருளானது. இப் பின்னணியில் தாக்குதல்களின் நோக்கங்களையும் விளைவுகளையும் நோக்கல் தகும். ஐரோப்பா இரண்டு முக்கிய நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. ம…
-
- 0 replies
- 389 views
-