Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வாட்ஸ்ஆப் தனியுரிமை: அபராதத்திற்கு பிறகு ஐரோப்பாவில் கொள்கையை மாற்றும் நிறுவனம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில், தரவு பாதுகாப்பு தொடர்பாக பெரும் அபராதத்தை எதிர்கொண்ட பின்னர், தனது தனியுரிமை கொள்கையை மாற்றி எழுதுகிறது. ஒரு விசாரணைக்கு பிறகு, ஐரிஷ் தரவு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு 225 மில்லியன் யூரோ அபராதம் விதித்தது. இது பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (General Data Protection Regulation -GDPR) வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய அபராதமாகும். மேலும், வாட்சப் தனது கொள்கையை மாற்ற வேண்டும் என்றும் இந்த அமைப்பு உத்தரவிட்டு…

  2. குவாண்டம் அறிவியல் புரட்சி: ஐபிஎம் வெளியிட்ட அதிவேக குவாண்டம் பிராசசர் செய்யப் போவது என்ன? 19 நவம்பர் 2021, 01:51 GMT பட மூலாதாரம்,IBM படக்குறிப்பு, 100 க்யூபிட்களுக்கு மேல் இணைக்கப்பட்ட முதல் குவாண்டம் பிராசசர் என்ற பெருமை ஐபிஎம்மின் ஈகிள் பிராசசருக்கு கிடைத்திருக்கிறது. அதிவேக கணினிகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மேம்பட்ட "குவாண்டம்" பிராசரரை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த பிராசரரை பயன்படுத்தும் இயந்திரங்கள் கணினித் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடும். குவாண்டம் இயற்பியலின் விசித்திரமான நுட்பங்களைப் பயன்படுத்தி, இதுவரை மனிதர்கள் வைத்திருக்கும் …

  3. முகங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் மென்பொருளை பயன்படுத்தப் போவதில்லை – பேஸ்புக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் முகங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் (facial recognition software) மென்பொருளை பயன்படுத்தப்போவதில்லை என பேஸ்புக் அறிவித்துள்ளது. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் நெறிமுறைகள் பற்றிய கவலைகள் அதிகரித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான தெளிவான விதிகளை கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் வழங்கவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதன் பயனர்கள் மீதான தாக்கம் குறித்து சரமாரியான விமர்சனங்களை பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டது. https://athavannews.com/2021/1248092

  4. சிப் நெருக்கடி: உலகத்தை அச்சுறுத்தும் பெரும் தொழில்நுட்பச் சிக்கல் 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பண்டிகைக் காலத்தில் தொழில்நுட்பக் கருவிகளை ஏற்கனவே வாங்காதவர்களுக்கு அவை சரியான நேரத்தில் கிடைக்காமல் போகலாம் என்று உலகின் தலைசிறந்த சிப் வடிவமைப்பு நிறுவனத்தின் அதிபர் ஒருவர் எச்சரித்துள்ளார். சிப் நிறுவனமான ARM-இன் தலைமை நிர்வாகி சைமன் செகர்ஸ், தயாரிப்புக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி இதுவரை கண்டிராத "மிக தீவிரமானது" என்று கூறுகிறார். இதற்கு முன் எப்போதும் இல்லாத இந்த நெருக்கடி 2022-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் சரி செய்யப்பட வாய்ப்பில்லை என்று அவர் கணிக்கிறார். …

  5. மெட்டாவெர்ஸ்' மூலம் ஃபேஸ்புக் வருங்காலத்தை ஆக்கிரமிக்கப் போகிறதா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,META ஃபேஸ்புக் என்று அழைக்கப்பட்டு வந்த நிறுவனம் மெட்டா என்ற புதிய பெயரைப் பெற்றிருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபலமான செயலிகள் / இணையதளங்கள் அனைத்தும் தொடர்ந்து அதே பெயரில்தான் இருக்கும். ஏனெனில் இப்போதைக்கு மெட்டா என்பது அனைத்து தளங்களின் தாய் நிறுவனத்துக்கான மறுபெயர் மட்டுமே. இந்தப் பெயரே, தொழில்நுட்பத்தின் அடுத்த அத்தியாயத்தில் - இணையத்தின் எதிர்காலமாகக் கவனிக்கப்படும் மெட்டாவெர்ஸ் என்ற முப்பரிமாண தொழில்நுட்பத்தில் பங்கேற்க மக்களை அழைக்கிறது. ஆனால் மார்க் சக்கர…

  6. மடிக்கணினி: துள்ளித் திரிந்த காலம், இன்று படுத்து குறட்டை விடும் காலம் அண்மையில் ஒரு நண்பர் தான் புதிதாக 70,000க்கு வாங்கியுள்ள ஒரு மடிக்கணினியை காட்டினார். பார்க்க அழகாக இருந்தது. “நன்றாக வேலை செய்யுதா?” என்று கேட்டபோது உதட்டைப் பிதுக்கினார். திறந்ததும் விழித்து சோம்பல் முறிக்கவே நேரம் எடுக்கிறது. சில நேரம் வேலை நடுவே படுமெத்தனமாகிறது என்று புலம்பினார். இவ்வளவு விலைகொடுத்து வாங்கியுமா? எனக்கு அப்போது சுமார் பத்து வருடங்களுக்கு முந்தின நிலை நினைவுக்கு வந்தது. அப்போது மடிக்கணினிகளின் விலை ரொம்ப குறைவாக இருந்தது. சுணக்கமின்றி வேலையும் செய்யும். அதுமட்டுமல்ல அன்று இந்தளவுக்கு கணினிகளுக்கு சுமை இருக்கவில்லை. ஒரு மடிக்கணினி அல்லது டெஸ்க்ட…

  7. ஸ்மார்ட்போனில் தங்கம்: பழைய போன்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பிரிட்டன் நாணய ஆலை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகில் ஐந்தில் ஒரு பகுதி மின்கழிவுகளே மறுசுழற்சிக்கு வருகின்றன பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் இருந்து மதிப்பு மிக்க உலோகமான தங்கத்தைப் பிரித்தெடுக்க முடிவு செய்திருக்கிறது பிரிட்டனின் அரசு நாணய ஆலை. பிரிட்டன் அரச குடும்பத்தின் கீழ் இயங்கும் ராயல் மின்ட் எனப்படும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனம் மின்னணுக் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி செய்யும் இத்தகைய தொழில்நுட்பத்தை முதன் முதலாகப் பயன்படுத்த இருக்கிறது. …

  8. ஐபோன் மற்றும் அண்ட்ரோய்ட் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளுக்கு வெவ்வேறு சார்ஜர்களைப் பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் இறங்கியுள்ளது. அப்பிள் நிறுவனம் அதிருப்தி தெரிவித்த போதிலும் பொதுவான தொலைபேசி சார்ஜருக்கு சட்டம் இயற்ற ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகையான கைத்தொலைபேசிகள், டப்லட்கள், ஹெட்போன்களிற்கு ஒரே வகை சார்ஜரை பயன்படுத்தும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கான சட்டப் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று (23) ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரே வகை சார்ஜர் நடைமுறையைக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டு வருகின்றனர். அத்தகைய நடைமுற…

  9. சீன செல்பேசிகள்: தணிக்கை செயலி, தரவுகள் கசிவு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கும் லித்துவேனியா 22 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸியோமி செல்பேசிகளில் தணிக்கை வசதி இயல்பாகவே நிறுவப்பட்டுள்ளதாக லித்துவேனியா பாதுகாப்புத்துறை ஆய்வு கூறுகிறது. சீன தயாரிப்பு செல்பேசிகளை மக்கள் வீசியெறிய வேண்டும் என்றும் புதிய சீன ரக செல்பேசிகளை வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் லித்துவேனியா பாதுகாப்புத்துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சீன தயாரிப்பு நிறுவனங்களின் 5ஜி செல்பேசிகளை லித்துவேனியா தேசிய சைபர் பாதுகாப்பு மையம் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதில், ஸியோமி ரக…

  10. ஆபாச படமா? ஸ்கேன் செய்து முறையிடும் ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம் - தனியுரிமை பிரச்சனைகளை சுட்டிக் காட்டும் நிபுணர்கள் ஜேம்ஸ் க்ளேடன் பட மூலாதாரம், PA MEDIA படக்குறிப்பு, தொழில்நுட்பம் அமெரிக்க வாடிக்கையாளர்களின் எலெக்ட்ரானிக் சாதனங்களில் குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் போன்ற விவரங்களை (சிஎஸ்ஏஎம்) கண்டுபிடிக்கும் வகையில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஆப்பிள் அறிவித்துள்ளது. ஒரு படம் ஆப்பிள் நிறுவனத்தின் iCloud தொகுப்பில் சேமிக்கப்படுவதற்கு முன்பு, இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்கனவே குழந்தைகள் தொடர்பான பாலியல் விவரங்களாக அறிவிக்கப்பட்டவைகளோடு ஒப்பிட்டு தேடும். …

  11. வாய்ஸ் குளோனிங்: வெறும் 10 நிமிட குரல் பதிவை வைத்துக் கொண்டு 15 மொழிகளில் பேச வைக்கலாம் - மனிதனை விஞ்சும் தொழில்நுட்பம் கிட்டி பல்மாய் வணிக செய்தியாளர் 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TIM HELLER படக்குறிப்பு, டிம் ஹெல்லர் தன் குரலின் ஒலிப் பிரதியைக் கேட்ட போது, அது அத்தனை துல்லியமாக இருந்ததாக ஆச்சர்யப்பட்டு போனார் டிம் ஹெல்லர். ஒரு கணினி மென்பொருள் பயன்படுத்தப்பட்டு ஒரு நபரின் குரலை பிரதி எடுப்பதுதான் வாய்ஸ் குளோனிங் என்கிறார்கள். ஒருவர் பேசும் போது அவரின் குரலைப் பதிவு செய்தபின், கீபோர்டில் நீங்கள் தட்டச்சு செய்யும் வார்த்தை…

  12. அமோல் ராஜன் ஊடக ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுந்தர் பிச்சை, தலைமை செயல் அதிகாரி - கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்கள் உலக அளவில் தடையற்ற மற்றும் வெளிப்படையான இன்டர்நெட் சேவை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக எச்சரித்துள்ளார், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. பல நாடுகள் தகவல்களின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும் எந்த நோக்கத்துக்காக 'இன்டர்நெட்' மாடல் உருவாக்கப்பட்டதோ அதை தங்களுக்கு ஆதாயமாக அந்த நாடுகள் அடிக்கடி பயன்படுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். பிபிசியுடனான ஓரு விரிவான நேர்…

  13. கிளப் ஹவுஸ் மின்னம்பலம் ஸ்ரீராம் சர்மா லாக் டவுன் காலத்தின் புது வரவாக முளைத்திருக்கிறது ‘கிளப் ஹவுஸ்’. ஃபேஸ்புக், வாட்ஸப், போன்றவைகளைத் தாண்டியதொரு புது வடிவமாக, 24 மணி நேரமும் ஓயாமல் இரைந்தபடி இருக்கும் அலசலாட்டமாக பற்றிப் பரவிக் கொண்டிருக்கின்றது ‘கிளப் ஹவுஸ்’ செயலி ! உலகம் நவீனப்படத் துவங்கும்போது அதனை ஓர் படைப்பாளன் தவிர்த்து விடக்கூடாது, அதன் சுகந்தங்கள் – சூழ்வினைகள் அனைத்தையும் அண்டி அனுபவித்து சொல்லியாக வேண்டும். அப்படித்தான் கிளப்ஹவுஸ் செயலியையும் அணுகிப் பார்த்தேன். ‘கிளப் ஹவுஸ்’ என்னும் செயலியை நான் புரிந்து கொண்ட வகையில் இங்கே அலச விரும்புகிறேன். இது, சரியா, தவறா என்னும் தீர்ப்பாளியாக இந்த சமூகம்தான் இருந்தாக வேண்டு…

  14. ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் சுலபமாக சென்று பணம் எடுத்து வரும் (ATM) உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன்(John Shepherd Barron) என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கவுன்டரை நெருங்கியபோது, நேரம் முடிந்து விட்டது’ என்று கூறி காசாளர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த…

  15. தங்களது நிறுவனத்துக்கு தொடர்ந்து இழப்பை கொடுத்து வரும் திறன்பேசி தயாரிப்பு தொழிலில் இருந்து விலகுவதாக எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் இன்று (ஏப்ரல் 5, திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. கடந்த ஆறாண்டுகளில் மட்டும் சுமார் 450 கோடி டாலர்கள் இழப்பை சந்தித்துள்ள திறன்பேசி தயாரிப்பு தொழிலை அடுத்து என்ன செய்வதென்று ஆராய்ந்து வருவதாக தென் கொரியாவை சேர்ந்த மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்.ஜி கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. திறன்பேசியில் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராக்கள் உட்பட பல கண்டுபிடிப்புகளைச் செய்துள்ள எல்.ஜி நிறுவனம், 2013ஆம் உலகின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக உயர்ந்தது. ஆனால், காலப்போக்கில் அலைபேசி சந்தை "நம்பமுடியாத அளவிற்கு போட்டி …

  16. Microsoft நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்! அமெரிக்காவின் Microsoft நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையகங்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக 30 ஆயிரம் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/microsoft-நிறுவனத்தின்-மீது-சைபர/

  17. வாட்சாப் செயலி தனது சேவையை தொடர கட்டாயமாக்கியிருக்கும் சமீபத்திய தனியுரிமை கொள்கை ஏற்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனால் தனி கணக்கு வைத்திருப்பவர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 4ஆம் தேதி புதிய தனியுரிமை கொள்கைகளை அறிமுகப்படுத்தியது வாட்சாப் செயலி. இந்த புதிய கொள்கைகள் வரும் பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் பயனரால் ஏற்கப்படாவிட்டால் அதன் பிறகு அவர்களின் வாட்சாப் செயலி கணக்கு நீக்கப்பட்டு விடும் என வாட்சாப் எச்சரித்துள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்டு பலரும் பல்வேறு மாற்று செயலிகளைத் தேடத் தொடங்கிவிட்டார்கள். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் இருந்து வழிநடத்த…

  18. WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன? சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES வாட்சாப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் அச்சமடைந்துள்ள அதன் பயன்பாட்டாளர்கள் அதையொத்த செயலிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உலகிலேயே அதிக வாட்சாப் பயனர்கள் உள்ள இந்தியாவில் இந்த புதிய தனியுரிமை கொள்கை எனப்படும் நியூ பிரைவசி பாலிசி குறித்த பேச்சு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்வதால் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட…

  19. Zoom செயலி: காணொளி கூட்டங்களில் அதிக நேரத்தை செலவிடும் பயனர்கள் வில் ஸ்மேல் பிபிசி பட மூலாதாரம், ZOOM படக்குறிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் சரியாக தூங்கக் கூட முடியாதவராக இருந்தார் அப்ரணா இந்த ஆண்டின் தொடக்கத்தில், வேலை அதிகமாக இருந்ததால், ஸூம் நிர்வாகிகள், உறங்கச் செல்வதற்குக் கூட, சுழற்சி முறையில் செல்ல வேண்டியிருந்தது என்று அபர்ணா பாவா கூறுகிறார். "எங்களுடைய மேலதிகாரி மற்றும் நான், ஏப்ரல் மாதத்தில் சுழற்சி முறையில் உறங்கி ஓய்வெடுக்கச் சென்றோம். அது பைத்தியகாரத்தனமாக இருந்தது" என்று அமெரிக்க காணொளிக்காட்சி நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக (சி.ஓ.ஓ) இருக…

  20. tiktok – பலரையும் ஆபத்தான வலையில் விழவைக்கும் ரகஸியம் என்ன? ப்ரியா இராமநாதன் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியென்பது சில நேரங்களில் மனிதகுலத்தின் வீழ்ச்சியாகவும் அமைந்துவிடுகின்றது. விஞ்ஞானம் வளர்ந்துவிட உலகமே நம் கையில் செல்போன் மூலமாக …! Android மொபைல் மூலம் பல நன்மைகள் கிட்டினாலும் அதிலுள்ள tiktok செயலிமூலம் நாம் அடைந்துக்கொண்டிருக்கும் வீழ்ச்சிபற்றியே இன்று நாம் பார்க்கப்போகின்றோம். கையில் ஒரு android phone இருந்தால்போதும் நீங்களும் ஓர் சிறந்த நடிக / நடிகையர்தான். உங்களை ரசித்து நூற்றுக்கணக்கான விசிறிகள் பின்தொடர்வார்கள், என்ற மோகம்தான் “tiktok application” பலரையும் தன் வலையில் சிக்கவைத்துள்ளமையின் ரகசியம் . 2014 ஆம் ஆ…

  21. நீரால் பாதிக்காது என விளம்பர மோசடி; ஆப்பிள் போன் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் அமெரிக்காவை தலைமையிடம் ஆக கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன்கள் பற்றிய விளம்பரமொன்றில் 30 நிமிடங்கள் வரை நீருக்குள் மூழ்கினாலும் அவை பாதிக்கப்படாது என தெரிவித்து இருந்தது. ஆனால் இத்தாலி நாட்டின் ஏ.ஜி.சி.எம். என்ற ஒழுங்குமுறை ஆணையம், ஐபோன் பற்றிய தவறான விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது என கூறி அதற்கு ரூ.87 கோடி அபராதம் விதித்து உள்ளது. நீரால் பாதிப்பு ஏற்படாது என்பது பற்றி ஆப்பிள் நிறுவனம் கூறும் விசயங்களில் வெளிப்படை தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. …

  22. WhatsApp மெசேஜ்களை 7 நாட்களுக்குள் பார்க்காவிட்டால் தானாக மறைந்து விடும் வசதி.! வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை 7 நாட்களுக்குள் பார்க்காவிட்டால் தானாக மறைந்து விடும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ்அப்பும் ஒன்று. அதனால் பயனர்களை மேலும் கவரும் வகையில் இதில் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மெசேஜ்கள் 7 நாட்களுக்குள் தானாக மறைந்துவிடும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. தனிப்பட்ட மெசேஜ் மற்றும் குரூப்பிலும் இதனை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆனால் நீங்கள் ஃபார்வர்டு செய்யும் மெசேஜ்களை உங்களால் மறைய வைக்க முடியாது. இந்த ஒப்ஷன் தேவையில்லை என்றால் நீங்கள் இதனை பயன்படுத்த…

  23. செல்போன் பிரியர்களுக்கு மாறுபட்ட அனுபவம்: Alt Z life அம்சத்தில் அசத்தும் சாம்சங் Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்கள் - பிரைவசி பயம் இனி தேவையில்லை செல்போன் பிரியர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை தரும் வகையில் சாம்சங் நிறுவனத்தின் Galaxy A51, A71 ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் Alt Z life அம்சத்தின் மூலம் பிரைவசி குறித்த பயம் இனி தேவையே இல்லை என சாம்சங் நிறுவன நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:- Samsung Galaxy A51, A71 நீங்கள் அலுவலகத்தில் இருக்கிறீர்கள்... என்று வைத்துக் கொள்வோம். சக நண்பர்கள் உங்களது செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உங்களது மேனேஜர் பற்றி நீங்கள் சித்தரித்துள்ள சில மீ…

  24. இலங்கையில் இன்று முதல் தொலைபேசி பாவனையாளர்களுக்கு புதிய சட்டம்.! இன்று(01) முதல் தொலைத்தொடர்பு நெற்வொர்க்குகளுடன் இணைக்கும் புதிய மொபைல் தொலைபேசிகள் , சாதனங்களை கொள்வனவு செய்யும்போது TRCSL அனுமதி / பதிவு உள்ளதா என சரிபார்க்கப்பட வேண்டும் என்று இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( TRCSL ) அறிவித்துள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய இயக்குநர் ஜெனரல் ஓஷாதா சேனநாயக்க, தொலைத்தொடர்பு மொபைல் நெட்வொர்க்கில் ஏற்கனவே இணைக்கப்பட்ட சிம் மட்டையுடன் இயக்கப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு , மொபைல் தொலைபேசிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றார். மொபைல் சாதனங்களை இறக்குமதி செய்யும் அல்லது கொண்டு வரும் நபர்கள் TRCSL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ( …

  25. ரிக்றோக்கை அமெரிக்காவுக்கு விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்பேன்.! சீனாவைச் சோ்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபல குறும் வீடியோ கைத்தொலைபேசி செயலியான ரிக்றோக்கை செப்டம்பர் 15-ஆம் திகதிக்குள் ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால் அமெரிக்காவில் அதற்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவை தொடர்ந்து ரிக்றோக் செயலியை அமெரிக்காவிலும் தடை செய்யவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கிடையில் ரிக்றோக் செயலியை வாங்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சோ்ந்த மக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது தொடா்பாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளாவுடன் தான் ஆலோசனை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறினார். இந்தப் பே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.