Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது. ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர். காஸா பகுதியில் உள்ள …

  2. உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம் - நேரலை தகவல் பட மூலாதாரம்,Getty Images 20 பிப்ரவரி 2026, 15:23 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் (இச்செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என கூறி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடந்த ஆண்டு டிரம்ப் வரி விதித்தார். நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பதிலாக, 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி டிரம்ப்…

  3. பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது Published By: Digital Desk 3 19 Feb, 2026 | 04:36 PM அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சால்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை (19) தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோர்போக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தேம்ஸ் வேலி பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  4. இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு படக்குறிப்பு,உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. கட்டுரை தகவல் ரிச்சர்ட் இர்வின்-பிரவுன், அலெக்ஸ் முர்ரே 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுக்கு அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நிலை கொண்டிருப்பதை செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. இரானின் ராணுவத் திட்டம் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அதன் ஒ…

  5. சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் இளைய மகன் தென்னாபிரிக்காவில் கைது 20 Feb, 2026 | 10:19 AM சிம்பாப்வே நாட்டின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் இளைய மகன் பெல்லார்மைன் முகாபே (28), கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் தென்னாபிரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜொஹன்னஸ்பேர்க் நகரின் உயர்நிலை வசதி பகுதியாகக் கருதப்படும் ஹைட் பார்க் பகுதியில் அமைந்துள்ள ஒரு இல்லத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக தென்னாபிரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 23 வயதுடைய ஒருவருக்கு துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அங்கு தோட்டப்பணியில் ஈடுபட்டிருந்த தோட்டக்காரர் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் …

  6. ஐக்கிய நாடுகள் சபைக்கு 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ள அமெரிக்கா! ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களில் சுமார் 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை (19) தெரிவித்துள்ளது. மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தினால் செலுத்தப்பட்டுள்ள பணம் ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கமான செயல்பாட்டு வரவு செலவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric) குறிப்பிட்டுள்ளார். இதேவ‍ேளை, நிதி நெருக்கடியில் உள்ள உலக அமைப்புக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் நிதியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். ஐ.நா. பட்ஜெட்டில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை அள…

  7. பிரித்தானியாவின் அதிரடிச் சட்டம்: அனுமதியின்றி பகிரப்படும் படங்களை 48 மணிநேரத்திற்குள் நீக்க உத்தரவு! Published By: Digital Desk 3 20 Feb, 2026 | 12:27 PM இணையதளங்களில் பெண்களின் அந்தரங்கப் படங்களை அவர்களின் அனுமதியின்றிப் பகிர்வதை தடுக்கும் வகையில், சமூக ஊடக நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம், 'குற்றவியல் மற்றும் பொலிஸ் சட்டமூலத்தில்' கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி, பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு அளித்தால், அந்தப் படத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் 48 மணித்தியாலங்களுக்குள் தொழில்நுட்ப நிறுவனங்கள் அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு சமூக ஊடகத்தையும் தனித்த…

  8. ஏலியன்கள் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு ட்ரம்ப் அதிரடி உத்தரவு 20 Feb, 2026 | 11:26 AM ஏலியன்கள் என்கிற வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான தகவல்கள், பறக்கும் தட்டுக்கள் முதலான அடையாளம் காணப்படாத பறக்கும் வான்வெளிப் பொருட்கள் (unidentified flying objects - UFOs), அடையாளம் காணப்படாத வான்வெளி நிகழ்வுகள் (Unidentified aerial phenomena - UAP) பற்றிய ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுமாறு உரிய துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (19) இந்த உத்தரவைப் பிறப்பித்த ட்ரம்ப், வேற்றுக்கிரகவாசிகளின் வாழ்க்கை, அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள், பொருட்களைப பற்றிய சிக்கலான, ஆனால் மிகவும் சுவாரஸ்யமான தகவல்க…

  9. காபோனில் முகநூல், டிக்டொக் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு தடை 20 Feb, 2026 | 10:14 AM மத்திய ஆபிரிக்க நாடான காபோனில் , சமூக ஒற்றுமையைக் சீர்குலைக்கும் வகையிலும் மோதல்களைத் தூண்டும் வகையிலும் தவறான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி, முகநூல் மற்றும் டிக்டொக் ஆகிய சமூக வலைத்தளங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் ஊடக ஒழுங்குமுறை ஆணையமான தகவல்தொடர்புக்கான உயர் அதிகாரசபை இந்தத் தடையை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காபோனில் ஜனாதிபதி பிரைஸ் ஒலிகுய் என்கியூமா பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதற்குள், அங்கு கடும் சமூக அமைதியின்மை நிலவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் சம்பளம் மற்றும் பணிச்சூழல் கோரி…

  10. புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00 ஸ்டாக் புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 10352 பற்றி ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடினுடன் நேரடி உரையாடலை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் இணைய பல ஐரோப்பியத் தலைவர்களை அணுகியுள்ளதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். மூலம் : ஐரோப்பிய பிராவ்தா, ஜெர்மனியின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க தினசரி செய்தித்தாள்களில் ஒன்றான Süddeutsche Zeitung ஐ மேற்கோள் காட்டி. விவரங்கள் : உக்ரைனில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதால், ரஷ்யாவுடன் நேரடித் தொடர்பை மீண்டும் தொடங்குவதற்கான தனது நோக்கம், உக்ரைனில் போரி…

  11. தென்கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் திடீர் பிரகடனம்: காரணம் என்ன ? சியோல்: வட கொரிய கம்யூ. படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் இன்று (டிச.,04) அவசரகால ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வட கொரியா - தென் கொரியா இடையே முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகளுக்கு இடை யேயான உறவு பாதிக்கப்பட்டு பகை நாடுகளாக உள்ளன. வட கொரியா மீது தென் கொரியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டேன் என வடகொரியா அதிபர் கிம் ஜான் உங் எச்சரித்திருந்தார். https://www.dinamalar.com/news/world-tamil-news/sudden-declaration-of-martial-law-in-south-korea-what-is-the-reason-/3795824 …

  12. நைஜீரியாவில் சுரங்கத்தில் நச்சு வாயு கசிந்து 37 தொழிலாளர்கள் பலி! Published By: Digital Desk 1 19 Feb, 2026 | 12:26 PM நைஜீரியாவின் மத்திய பகுதியின், பிளாட்டோ மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தில், கார்பன் மோனாக்சைடு நச்சு வாயுவை சுவாசித்த சுமார் 37 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு ஈய சுரங்கத்திற்குள் அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்கள்; கனிமங்களை எடுக்கச் சென்றபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அங்கு தேங்கியிருந்த கனிமங்களிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த 37 பேர் தவிர, சுமார் 25ற்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட…

  13. லண்டனில் சிறுமிகளைக் குறிவைக்கும் கொடூர கும்பல்கள் : அரங்கேறும் மனிதநேயமற்ற சம்பவங்கள் 19 February 2026 லண்டனில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளையும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இளம்பெண்களையும் குறிவைத்து, அவர்களைப் பாலியல் ரீதியாகவும் குற்றச் செயல்களுக்காகவும் ஒரு கும்பல் சுரண்டி வருவதை பிபிசி (BBC) புலனாய்வு வெளிப்படுத்தியுள்ளது. தனிமையில் இருக்கும் அல்லது வறுமையில் வாடும் சிறுமிகளை இனங்கண்டு, அவர்கள் மீது அன்பு காட்டுவது போலவும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுத்தும் இந்தக் கும்பல்கள் வலைவிரிக்கும். பின்னர் அவர்களைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சித்திரவதை செய்கின்றன. போதைப்பொருள் கடத்தல், ஆயுத வியாபாரம் மற்றும் அலைபேசித் திருட்டு போன்றவற்ற…

  14. ஆஸ்திரியாவில் மலையேற்றத்தின் போது காதலி மரணம் ; காதலனுக்கு எதிராக வழக்கு பதிவு Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 05:10 PM ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிராஸ்க்ளோக்னரில் (3,798 மீ), கடந்த ஆண்டு குளிர்காலத்தில் தனது காதலியை கடும் குளிரில் தவிக்கவிட்டு உயிரிழக்கச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலையேற்ற வீரர் மீதான விசாரணை வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் திகதி அதிகாலையில், 33 வயதுடைய பெண், கடும் பனிப்புயலில் சிக்கி உடல் உறைந்து உயிரிழந்தார். அவருடன் சென்ற 36 வயதுடைய காதலன், காதலி மிகவும் சோர்வடைந்த நிலையில் அவரை மலை உச்சியில் தனியே விட்டுவிட்டு உதவி தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்ப்ரூக் அரச…

  15. சிரியாவிலுள்ள ஐ.எஸ் முகாமிலிருந்து நாடு திரும்ப முயற்சிக்கும் பிரஜைக்கு அவுஸ்திரேலியா தடை Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 02:38 PM ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர், சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது. சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அல்-ரோஜ் தடுப்பு முகாமிலிருந்து 34 அவுஸ்திரேலியப் பிரஜைகள் (11 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள்) இந்த வாரம் நாடு திரும்ப இருந்தனர். அவர்கள் டமஸ்கஸ் வழியாக அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், தொழிநுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி சிரிய அதிகாரிகள் அவர்களை…

  16. ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ள போவதில்லை - வத்திக்கான் அறிவிப்பு Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 11:57 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள 'அமைதி திட்டம்' என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை என வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச நெருக்கடிகளை ஐக்கிய நாடுகள் சபையே கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. காசா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும், அதன் மறுசீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த 'அமைதி திட்ட அமைப்பை' உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான 14 ஆம் லியோவுக்கு கடந்த ஜனவரி மாதம் அ…

  17. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம் கொடுத்துக் கொலை ; பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பகிரங்கக் குற்றச்சாட்டு! Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 03:42 PM ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி (Alexei Navalny), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு 'தவளை விஷமே' காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட 05 ஐரோப்பிய நாடுகள் அதிரடி ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரிட்டன் வெளிவிவகார செயலர் யவெட் கூப்பர், நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் 'எபிபாடிடைன்' எனப்படும் மிக அரிதான நரம்பு விஷம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த நச்சு தென்னமெரிக்காவி…

  18. டிரம்பின் புதிய உலக ஒழுங்கில் இணையுமாறு ஐரோப்பாவிற்கு ரூபியோ அழைப்பு விடுக்கிறார். MAGA பேச்சுப் புள்ளிகளை மீண்டும் வலியுறுத்தும் போது, அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி கண்டத்துடனான புதிய கூட்டாண்மையை ஆதரிக்கிறார். இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கெட்டி இமேஜஸ் வழியாக ஹலீல் சாகிர்காயா/அனடோலு பிப்ரவரி 14, 2026 காலை 10:23 CET ஃபெலிசியா ஸ்வார்ட்ஸ் எழுதியது முனிச் - இறையாண்மை, மறுதொழில்மயமாக்கல் மற்றும் இராணுவ வலிமையை மையமாகக் கொண்டு உலகளாவிய ஒழுங்கை மறுசீரமைக்க டிரம்ப் நிர்வாகம் உதவுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுத்தார். சனிக்கிழமை மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், கிரீன்லாந்த…

  19. 'இஸ்லாமிய நேட்டோ': அரபு - முஸ்லிம் நாடுகள் ராணுவ கூட்டணி குறித்து மீண்டும் விவாதம் ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,துருக்கி அதிபர் எர்துவானின் சௌதி அரேபியா வருகையைத் தொடர்ந்து, இஸ்லாமிய நேட்டோவை உருவாக்குவது குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. கட்டுரை தகவல் பிபிசி மானிடரிங் 17 பிப்ரவரி 2026, 09:49 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரான் மீதான ஒரு சாத்தியமான தாக்குதலுக்குத் தயாராகும் வகையில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரிப்பதாக வரும் செய்திகளுக்கு மத்தியில், அரபு - இஸ்லாமிய அரசியல் மற்றும் ராணுவக் கூட்டணியை உருவாக்கும் விவகாரம் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது. முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு என்ற…

  20. லண்டனில் தீவிரமாக பரவி வரும் தட்டம்மை ; 34 சிறுவர்கள் பாதிப்பு 16 Feb, 2026 | 07:08 PM வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதாகவும் குறைந்தது 34 சிறுவர்கள் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் காரணமாக ஐந்து சிறுவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் அங்குள்ள பொது மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடும் உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தங்கள் பிள்ளைகளுக்கு செலுத்தப்பட்டதை உறுதி செய்துகொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்ஃபீல்ட் மற்றும் ஹாரிங்கியில் குறை…

  21. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி காணொளியை தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பகிர்ந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அதனை நீக்கியுள்ளார். சுமார் 62 வினாடிகள் ஓடும் அந்த காணொளியில், 2020 ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் சில தகவல்கள் இடம்பெற்றிருந்தன. காணொளியஜஇறுதியில், 'த லயன் ஸ்லீப்ஸ் டுநைட்' (The Lion Sleeps Tonight) என்ற பாடலுடன், பராக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி கார்ட்டூன் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன. எக்ஸ் தள பதிவு இது தவிர, ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவர்களான ஜோ பைடன், ஹிலாரி கிளிண்டன் …

  22. உக்ரைனுக்கு மாத்திரம் அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு! ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல் எங்களுக்கு மட்டும் அமெரிக்கா அழுத்தம் தருகிறது என உக்ரைன் ஜனாதிபதி வோளடிமீர் ஜெலன்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே ஜெலனஸ்கி இதனை கூறியுள்ளார். இதேவேளை, அதில் , பேச்சுவார்த்தையில் ரஷ்யா என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யாரும் பேசுவதில்லை எனவும் ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல், உக்ரைனை மட்டும் குறிவைப்பது முறையல்ல.எனவும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் மட்டுமே தொடர்ந்து சமரசம் செய்ய வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் தருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைன் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும…

  23. பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ; டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்த காணொளிக்கு ஒபாமா பதிலடி 15 Feb, 2026 | 11:24 AM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை இனவெறியைத் தூண்டும் வகையில் சித்தரித்த காணொளிவை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பகிரப்பட்ட அந்த காணொயில், 2020 தேர்தல் முறைகேடுகள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. அதன் இறுதியில், ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவின் முகங்களை குரங்குகளின் உடலுடன் இணைத்து மிகவும் இழிவாகச் சித்தரிக்கும் ஒரு பகுதி இடம்பெற்றிருந்தது. பின்னணியில் 'The Lion Sleeps Tonight' என்ற பாடல் ஒல…

  24. ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க முயற்சி - மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டு Published By: Digital Desk 3 12 Feb, 2026 | 09:37 AM பிரபல சமூக ஊடகங்களில் ஒன்றான வட்ஸ்அப் செயலியை ரஷ்யாவில் முற்றிலும் முடக்க அந்நாட்டு அராசாங்கம் முயற்சித்து வருவதாக மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் இணைய ஒழுங்குமுறை அமைப்பான 'ரோஸ்கோம்னாட்ஸோர்' வட்ஸ்அப் செயலியை அதன் உத்தியோகபூர்வ இணையக் கையேட்டில் இருந்து நீக்கியுள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்ள பயனர்கள் வட்ஸ்அப் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வட்ஸ்அப் செயலியின் 'மெட்டா' (Meta) நிறுவனம் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "ரஷ்ய அரசாங்கம் மக்களை 'MAX' என்ற செயலியை பயன்படுத்த ஊக்குவிப்ப…

  25. சாமுராய் என்றால் அச்சமற்ற போர் வீரன் என்பது உண்மையா? உலகமே வியக்கும் ஜப்பான் வீரர்களின் வரலாறு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் மேத்யூ வில்சன்‎ 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இடைக்காலத்தின் தொடக்கத்தில் இருந்து, ஷோகன் முதல் ஸ்டார் வார்ஸ் வரை கலை, புனைகதை, திரைப்படங்கள் என சாமுராய்கள் பல வகைகளில் காட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் உண்மை கதை நாம் அறிந்ததைவிட மிகவும் சிக்கலானது, ஆச்சரியம் நிறைந்தது. கலாசார வரலாற்றில், சாமுராய்களின் நீடித்த மரபு ஒரு தனித்துவமான நிகழ்வாக அறியப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டின் உக்கியோ-இ அச்சுகள் முதல் சமகால வீடியோ கேம்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் வரை வேறு எந்த இடை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.