Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்குதலில் பத்து பேர் பலி

Featured Replies

மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - ஆறு சிங்கள காவல்துறையினர் பலி

Wednesday, 31 January 2007 11:33

மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைப் பகுதியில் வைத்து சிங்களக் காவல்துறையினரின் ஊர்தியை இலக்கு வைத்து இன்று நண்பகல் கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஆறு சிங்களக் காவல்துறையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 12பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு அருகிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விடுமுறையில் வீடு சென்ற காவல்துறையினரே இத்தாக்குதலுக்கு இலக்கானதாக சிங்களப் படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சங்கதி

கப்பி கொலிடே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு, பல்கலைக்கழக வளாகத்திற்கு மிக அருகில் வெடிக்க வைக்கப்பட்ட இந்த கிளைமோர் கண்ணிவெடியில் இராணுவ மற்றும் பொலிசாரின் வாகனம் அகப்பட்டதில், 7 பொலிசாரும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.

இத் தாக்குதலில், மேலும் ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டார். 7 இராணுவத்தினரும் ஐந்து பொலிசாரும் 3 பொதுமக்களும் காயமடைந்தனர்.

மட்டக்களப்பிலிருந்து இன்று காலை 11:20 அளவில் புறப்பட்ட இராணுவ வாகனத்தில் மொத்தம் 30 பேர் இருந்ததாகவும், கிளைமோர் குண்டில் வாகனம் அகப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த படையினர், பொலநறுவை மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். காயமடைந்த பொதுமகன், மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

thanks:www.puthinam.com

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ மட்டகளப்பு தங்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரசாத் சமரசிங்க கூறினார். பின்பு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஒடுகிறார்கள்.வட, கிழக்கில் இருந்து வெளியேற்றப் படுவார்கள் இந்த கொலைகாரர்கள் கூடிய விரைவில்.

  • கருத்துக்கள உறவுகள்

புதுப்பிக்கப்பட்ட நாள்: 31 ஜனவரி, 2007 - பிரசுர நேரம் 17:11 ஜிஎம்டி

தமிழோசை

இலங்கையின் மட்டக்களப்பில் இராணுவ வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் பத்து பேர் பலி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையில் புதன்கிழமையன்று இராணுவ வாகனத் தொடரணி மீது விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் கிளேமோர் குண்டுத்தாக்குதலில் 4 பொலிசார், 2 இராணுவச் சிப்பாய்கள் மற்றும் மூன்று அடையாளம் தெரியாதவர்கள் என 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, அவ்வழியாக சென்று கொண்டிருந்த சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதோடு, பல்கலைக்கழக மாணவிகள் இருவரும், மாணவரொருவரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரிலிருந்து பொலநறுவைக்கு சென்று கொண்டிருந்த இந்த வாகனத் தொடரணி மீதான தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும் விடுமுறையில் தமது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்று இராணுவம் கூறுகிறது.

இந்தச் சம்பவத்தையடுத்து கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் விரிவுரையாளர்கள் உட்பட எவரும் வெளியேற முடியாதவாறு இராணுவத்தினரால் தேடுதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, விடுமுறையில் சென்று கொண்டிருந்தவர்களின் வாகனத்தை குறி வைத்து கண்ணி வெடித்தாக்குதலை நடத்திய பின்னர், அவ்வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகமும் நடத்தப்பட்டதாக கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.