Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 13/12/1991 பக்கம்: 1 தமிழர்களின் உடைமைகள் பிற இனத்தவர்கள் வசம்! மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள தமிழாகளின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை ஏனைய இனத்தவர்கள் தமது உடைமைகளாக்கி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழர்களின் வயல்களில் சிங்களப் பொலீஸாரும், முஸ்லிம் மக்களும் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகிகின்றனர் என்றும், கைவிடப்பட்ட தமிழர்களின் வீடுகளிலுள்ள விதை நெல்லையே அவர்கள் விதைப்பதற்கு பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழர்களின் டிராக்டர்கள் சூறையாடப்பட்டு, அவற்றையும் அவர்கள் பாவித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. [ஒ] *****
  2. அல்ஜெசீராவின் இந்த ஒற்றைப் பதிவில் (Like Sri Lanka once did, Israel has turned ‘safe zones’ into killing fields) எத்தனை இலங்கைச் சோனிகள் தமிழினப் படுகொலை என்பதற்கு எதிராக நிற்கிறார்கள் என்று பாருங்கள்.... சிங்களவருக்கு அப்படி வக்காலத்து வாங்குகிறார்கள் இந்த சோனிகள். https://www.instagram.com/aljazeeraenglish/p/C8TlPV6N85w/
  3. அருமையான புத்தம் புதிய தகவல்... அப்ப எம்முடைய முன்னோர்களும் கொஞ்சம் முன்னேறிய ஆட்களாகவே இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன.
  4. சாரம் கட்டிய பொடியள் யாழில், 1987
  5. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 11/09/1991 பக்கம்: 1 தமிழின அழிப்பில் முஸ்லிம்களே மும்முரம்! திருமலை ரூபன் பேட்டி யாழ்ப்பாணம், செப். 11 கடந்த காலங்களில் முஸ்லிம்களையும் சேர்த்தே நாம் போராடி வந்தோம். ஆனால் அவர்கள் எமக்குத் துரோகம் இழைத்துவிட்டனர். கிழக்கில் சிங்கள இராணுவத்தை விட முஸ்லிம்களே இப்போது தீவிரமாக தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியற் பொறுப்பாளr திரு. ரூபன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இப்படித் தெரிவித்தார். போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு அதிக பங்களிப்பை நாம் கடந்த காலங்களில் வழங்கினோம். ஆனால் அவர்கள் அதனை உதறிவிட்டு சிறீலங்கா இராணுவத்துடன் சேர்த்து செயற்பட்டுவருகின்றார்கள். சிங்கள அரசானது தமிழீழப் போராட்டத்தை நசுக்குவதற்கு முஸ்லிம்களைப் பயன்படுத்துகிறது. அதனை முஸ்லிம்களோ அதன் தலைவர்களோ உணர்ந்ததாக தெரியவில்லை. நாளை எமது போராட்டம் வெற்றியடையும், அதன்பின் சிங்கள இராணுவத்தின் பார்வை முஸ்லிம்கள் பக்கம் திரும்பும். அப்போது அவர்கள் திரிசங்கு நிலையில் நிற்கப்போகிறார்கள். தொடர்த்தும் முஸ்லிம்களை எம்மோடு வைத்திருப்பது புத்திசாலித்தனமல்ல என்று அவர் மேலும் கூறினார். (உ-3-5) பக்கம்: 3 திருமலையில் பலவந்தமாக தமிழர் முஸ்லிம்களாக மதம் மாற்றப்படுகின்றனர் யாழ்ப்பாணம், செப்.11 திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்களுக்கு இடையே இருக்கும் கிராமங்களில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்களின் நெருக்குதல்களினால் முஸ்லிம்களாக மதம் மாற்றப்படுகிறார்கள். திருகோணமலை மாவட்ட அரசியற் பொறுப்பாளர் திரு. ரூபன் இத்தகவலைத் தெரிவித்தார். கிண்ணியாவுக்கு அருகே கிளப்பன் பேர்க் அகதி முகாமில் தங்கியிருப்பவர்களில் இருநூறுக்கும் அதிகமானோர் முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டிருக்கின்றனர். இதேபோல தோப்பூரிலும் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் மதம் மாற்றப்பட்டிருக்கிறார்கள். - இப்படி அவர் சொன்னார். [உ-3-5] பக்கம்: 3 நெருக்கமாக முகாம்கள் யாழ்ப்பாணம், செப். 11 இந்தியப்படை இங்கு அமைத்தது போல் நெருக்கமாக பல முகாம்களை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஸ்ரீலங்காப் படையினர் அமைத்திருப்பதாக திரு. கரிகாலன் கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 பொலீஸ் நிலையங் கள், 48 இராணுவ முகாம்கள், இரண்டு கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விமானப்படை முகாம் ஒன்றும் ஊர்காவல் படை முகாம்கள் ஐந்தும் அங்கு இயங்குகின்றன. அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் 7 இராணுவ முகாம்களும், 29 விசேட அதிரடிப்படை முகாம்களும், 9 பொலீஸ் நிலையங்களும். ஒரு கடற்படை முகாமும், 26 முஸ்லிம் ஊர்காவல்படை முகாம்களும், 6 சிங்கள ஊர்காவல்படை முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. கேள்வி: இவ்வளவு முகாம்கள் அமைக்ப்பட்டிருப்பதால் சிங்கள அரசு கிழக்கு மாகாணம் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளலாமா? கரிகாலன்: முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது உண்மை. ஆனால் பெரும்பாலும் நகரப் பகுதிகளையும், பிரதான வீதிகளையும்தான் அவர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் எமது நடமாட்டமே இன்னமும் இருக்கிறது. நகரப்பகுதிகளிலும் முழுமையான அளஅவில் நிர்வாகச் செயற்பாட்டை அரசினால் செய்யமுடியாதுள்ளது. எமது போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கிற மக்களை வைத்துக்கொண்டு சிவில் நிர்வாகத்தை அரசினால் செயற்படுத்த முடியவில்லை. கேள்வி- கிரானில் நடத்த மோதலில் இரசாயன ஆயுதங்களைப் புலிகள் பாவித்தனர் என்று அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. அதில் உண்மை உண்டா? கரிகாலன்:- அவ்வாறன எந்த ஆயுதங்களையும் நாம் பயன்படுத்தியதில்லை. ஆனால் வாகனங்களைக் கொண்டு எதிரிகளைத் தாக்குவது பேன்ற சில நவீன யுத்திகளைக் கையாண்டிருக்கிறோம். தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத நிலையிலேவே அரசு இவ்வாறான குற்றச்சாட்டுகளை எம்மீது சுமத்துகின்றனர். பக்கம்: 3 முஸ்லிம்களை எமக்கு எதிராக திருப்பியது அரசின் சதியே! தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் செயற்படும் நிலையை உருவாக்கியது ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட ஒரு வேலையாகும். ஸ்ரீலங்கா அரசும்-புலிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த காலத்திலேயே இதற்கான 'சதி' நடக்கத் தொடங்கிவிட்டது. திரு. கரிகாலன் நேற்று பத்திரிகையாளர் மாநாட்டில் இப்படித் தெரிவித்தார். பொத்துவிலில் எப்போதுமே தமிழ் - முஸ்லிம் கலவரம் நடந்ததில்லை; இந்தப் போரின்போதுதான் முஸ்லிம்கள் எமக்கு எதிராகச் செயற்பட்டிருக்கின்றனர். முஸ்லிம் மக்களை சகோதரர்களாகவே நாம் கருதி வந்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீலங்க இராணுவம் கிழக்கில் நுழைந்தபோது முஸ்லிம்கள் அவர்களை வரவேற்றனர். அத்துடன் அவர்களுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களாலேயே தமிழ் மக்கள் பெருமளவில் கொலை செய்யப்பட்டுள்ளனர் - என்றார். பக்கம்: 3 கடந்த 15 மாத காலத்தில் அம்பாறை, மட்டக்களப்பில் 8,ooo தமிழர் படுகொலை! 1990 ஜூனில் விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்காப் படையினருக்கும் இடையிலான மோதல் ஆரம்பித்த பின்னர் - கடந்த 15 மாத காலத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மட்டும் படையினராலும், முஸ்லிம் காடையர்களினாலும் சுமார் 8 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் திரு. கரிகாலன் இத்தகவலை வெளியிட்டார். அம்பாறை மாவட்டத்தில் 5 ஆயிரம் பொதுமக்கள் கொலையுண்டுள்ளனர். உத்தியோகஸ்தர்கள், படித்தவர்கள், ஆண்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் கொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் மட்டும் ஐநூறுக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாதபடி டயர் போட்டு எரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் 300, 400 ஆண்கள் என்ற ரீதியில் உயிரிழந்துள்ளனர். இதனால் பல குடும்பங்கள் குடும்பத் தலைவர்களை இழந்துள்ளன. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்- என்று அவர் கூறினார். (உ-3-5) ***** தொகுப்பாளர் குறிப்பு: 1990 மற்றும் 1991 ம் ஆண்டுகளில் திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காணாமல்போனோர், கொல்லப்பட்டோர், மற்றும் வன்புணர்வானோர் (ஆதாரம்: www.tchr.net/50_year_arrest_kill.htm )
  6. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 10/04/1991 பக்கம்: 1 3 தமிழரின் சடலங்கள் லண்டன், ஏப். 10 மட்டக்களப்பு மாவட்டம் மண்டூரில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்களது சடலங்கள் வீதியோரங்களில் துண்டு துண்டாக வெட்டப்பட்டுப் போடப்பட்டிருந்ததாக பி. பி. ஸி.நேற்றிரவு தெரிவித்தது. இராணுவத்தினர், அல்லது முஸ்லிம் ஊர்காவல் படையினர் இவர்களைப் படுகொலை செய்திருக்கலாம் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. [ஒ-5] *****
  7. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 29/03/1991 பக்கம்: 1 30 தமிழ் விவசாயிகளும் 4 மாணவரும் வெட்டிகொலை கிழக்கில் ஊர்காவலர் அட்டூழியம் யாழ்ப்பாணம், மார்ச் 29 கிழக்கில் முஸ்லிம் ஊர்காவற் படையினர் தொடர்ந்தும் தமிழர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை [25ஆம் திகதி] காரைதீவில் இருந்து அட்டைப் பாலத்துக்கு அறுவடைக்காகச் சென்றுகொண்டிருந்த முப்பது தமிழ் விவசாயிகளை முஸ்லிம் ஊர்காவற்படையினர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். அதே தினத்தில் தம்பிலுவிவில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தமிழ் மாணவிகள் அறுவரை ஊர்காவற் படையினர் கடத்திச் சென்றனர். மேலும் நான்கு தமிழ் மாணவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். (அ) *****
  8. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 27/03/1991 பக்கம்: 1 அக்கரைப்பற்றில் முஸ்லிம் ஊர்காவலரால் தமிழர் கடத்தப்படுகின்றனர் கொழும்பு, மார்ச் 27 அக்கரைப்பற்றுப் பகுதியில் இருபதுக்கும் அதிகமான தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை முஸ்லிம் ஊர்காவற் படையினரே கடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கரைப்பற்றில் கடந்த ஞாயிறு நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாகவே இந்தக் கடத்தல்கள் இடம்பெறுவதாகக் கருதப்படுகிறது. குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டில் இருந்து பதினெட்டாக உயர்ந்துள்ளது. (உ-5) *****
  9. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 14/3/1991 பக்கம்: 1, 4 கும்புறுப்பிட்டியில் 5 தமிழர் வெட்டிக் கொலை யாழ்ப்பாணம். மார்ச் 14 திருகோணமலை மாவட் டம் கும்புறுப்பிட்டியில் கடந்த 3 ஆம் திகதி இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து தமிழ் மக்களின் வீடுகளில் புகுந்து ஐவரை வெட்டிக் கொலை செய்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கொலையுண்டவர்களில் மூவர் ஆண்கள். இருவர் பெண்கள். ரி. கார்த்திகேசுப்பிள்ளை (5 வயது), வி. கதிரவேலுப் பிள்ளை [58 வயது), எஸ். முனியாண்டி [56 வயது). கே.உதயராணி [15வயது], யோகராணி ஆகியோரே கொலையுண்ட ஐவரும் ஆவர். கொலையுண்ட இரு பெண்களும் படையினரால் மானபங்கப்படுத்தப்பட்டனர் என்றும் - சம்பவம் நடந்த பகுதியிலுள்ள வீடுகளில் படையினர் கொள்ளைகளில் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. (ஓ) ******
  10. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 13/3/1991 பக்கம்: 1 முஸ்லிம் ஊர்காவலரால் 14 தமிழர்கள் கைது! யாழ்ப்பாணம், மார்ச் 13 கடந்த ஞாயிறன்று திருகோணமலை மாவட்டம் தோட்பூரில் உள்ள முஸ்லிம் ஊர்காவல் படையினர் பள்ளிக்குடியிருப்புப் பகுதியில் 14 தமிழ் பொதுமக்களைக் கைது செய்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று குறித்து தகவல் ஏதும் தெரியவரவில்லை. [உ] ******
  11. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 22/2/1991 பக்கம்: 1,4 ஏறாவூரில் தமிழர்கள் உயிருடன் எரிப்பு கொழும்பு, பெப். 22 ஏறாவூரில் தமிழ்ப் பயணி கள் பலர் முஸ்லிம் காடையர் கும்பலினால் நேற்று உயிருடன் எரிக்கப்பட்டதாக அஞ்சப்படுகிறது. மட்டக்களப்பு நோக்கி தமிழ்ப் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றை முஸ்லிம் காடையர் கும்பல் வழிமறித்துத் தாக்கி பயணிகளை உயிருடன் எரித்தது. முதலில் சாரதியையும் சில பயணிகளையும் வெளியே இழுத்துப் போட்டு வெட்டிய காடையர்கள் பின்னர் அவர்களை பஸ்ஸுக்குள் போட்டு எரித்தனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு பயணிகள் உயிருடன் எரிக்கப்பட்டனர் என்பது கொழும்பில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. மேலும் பத்து, பன்னிரண்டு தமிழர்கள் எரிகாயங்களுடன் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டனர். இருபத்தாறு தமிழ்ப் பயணிkaளுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்று கிழக்கு மாகாண எம்.பி. ஒருவரை மேற்கோள் காட்டி பி. பி.ஸி. அறிவித்thathu. இதேவேளை தமிழ்ப் பயணிகள் பயணம் செய்த மற்றொரு பஸ் காடையர் கும்பலினால் எரிக்கப்பட்டதாகவும், சாரதி சாதுர்யமாக பஸ்ஸை கும்பலினூடே வெட்டிச் செலுத்தி பாதுகாப்பாக பஸ்ஸைக் கொண்டு வந்து சேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ****** தொகுப்பாளர் குறிப்பு: 22/02/1991 அன்று வெளியான ஈழநாத செய்தியின் படி, இப்பேரூந்து ஏறாவூருக்கு அருகிலுள்ள "சதாம் ஹுசைன்" என்ற பெயருடைய கைவிடப்பட்ட ஊருக்கு ஊடாக சென்ற போதே இத்தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22/02/1991 அன்று வெளியான உதயனின் செய்தியின் படி இவ்வூர் அக்காலதிய ஈராக்கிய அரசின் உதவியுடன் நிறுவப்பட்டதாகும்.
  12. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 15/2/1991 பக்கம்: 3 திருமலை மாவட்டத்தில் முஸ்லிம் ஊர்காவற்படையினரின் அடாவடித்தனங்கள் அதிகரிப்பு திருக்கோணமலை மாவட்டத்ததி வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயம் கால்நடை மற்றும் கைத்தொழிய என்பனவற்றில் பொருளாதார ரீதியாகவும் இவர்க்ள் அழிக்கப்பட்டு வருகின்றனர். சிறிலங்கா ராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவற்படையினராலும் இம் மாவட்ட மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். திருக்கோணமலை நகரில் இரகசிய கொலைகள் நடந்த வண்ணமே உள்ளன. இந்த வேளை மூதூர், கிண்ணியா, கந்தளாய். தம்பலகாமம். நிலாவெளி ஆகிய இடங்களிலும் பெரும் சுற்றிவளைப்புகளும் கைதுகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. குறிப்பாக நிலாவெளி 8ஆம் கட்டை முஸ்லிம் சமூகவிரோதிகள் அங்குள்ள தமிழர்களை சைதுசெய்துகொண்டு செல்கின்றனர். பின்பு இவர்கள் அடித்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். கடந்த இரண்டாம் திகதி திருகோணமலை நகர மீன் சந்தைக்கு அருகே 18 வயது கொண்ட இரண்டு தமிழ் மாணவர்களை முஸ்லிம்கள் கடத்தி சென்றுவிட்டனர். சாம்பல்தீவிலும் இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையும் இணைந்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். இதை போலவே சாம்பல் தீவிலும் கடந்த 3.2.91 இல் சிறிலங்கா இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மக்களை கைது செய்து கொண்டிருக்கும் அதே நேரம் நிலாவெளி 8 ஆம்கட்டையைச் சேர்ந்த முஸ்லிம் காடையர்கள் பாவியல் வன்முறையிலும் கொள்ளையிலும் ஈடுபட்டனர். சாம்பல் தீவு கிராமம் சுற்றி வளைக்கப்பட்டபோது மைக்கல் சென்றியான்பிள்ளை (65 வயது). செல்லையா கந்தசாமி (55 வயது). தங்கவேல்(40 வயது), தம்பிஐயா சந்திரன் (35 வயது), பரமானந்தம் அருரை???? (18 வயது). லூத்தராசா (45வயது), நகேந்திரன் (15 வயது), சுந்தரலிங்கம் சதீஸ் (15வது) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பற்றிய தகவல்கள் 10.02.1991 வரையிலும் கிடைக்கவில்லை. அத்துடன் கடந்த 6-2-91 அன்று திருமலை நகரில் கடற்படையினர் 4 தமிழ் இளைஞர்களை கைது செய்ய முனைந்த போது மூவர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறாக திருமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்கள் அனைத்தும் சிங்கள இராணுவத்தாலும், முஸ்லிம் ஊர்காவல் படைகளினாலும் கொலை பயமுறுத்தல் செய்யப்பட்டு வருகிறது. ******
  13. மருத்துவக் கட்டடம் ஒன்று திறப்பு விழாவில் தலைவர் மாமா காலம் & இடம்: அறியில்லை இடது: அமரர் வைத்தியக் கலாநிதி ஜெயகுலராஜா | வலது: திரு. ரகு எ குண்டப்பா ???
  14. இந்தியப் படைக்கு எதிரான சமர் ஒன்றின் முடிவில் அள்ளப்பட்ட படைக்கலன்களை தம் முகாமினுள் அடுக்கி வைக்கின்றனர், புலிவீரர்கள் 1989
  15. இந்தியப்படையின் காலத்தில் மணலாற்றுக் காட்டில் தலைவர் மாமா 1988-1989 இக்காலத்தில் - 1988-1989 - இந்தியர்களின் சீருடையினையே புலிகள் அணிந்திருந்தாலும் அதனது கை மற்றும் காலுக்கு கறுப்பு நிற துணியினை வைத்து தைத்து அவர்களின் சீருடையில் இருந்து வேறுபடுத்தியிருந்தனர்.
  16. மணலாற்றினுள்ளிருந்த கைந்நிலையினுள் போராளிகள் மகிழ்வாகயிருந்து ஓய்வெடுக்கும் போது 1988/1989
  17. இந்தியப் படைக்கு முன்னர்
  18. தேசத்துரோகி மாத்தையா, தலைவர் மாமா மற்றும் யோ. யோகி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.