Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஆ, இல்லை. நான் அதைச் செய்யவில்லை. வேண்டுமென்றால் தாங்கள் இங்கிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்: கவனி: இவற்றிற்குள் 2009இற்குப் பிறகு வந்த - போரிற்குப் பிந்தைய - பாடல்களும் உள்ளன. https://www.eelammusic.com/popular-tracks https://tamileelamsongs.com/a-z-eelam-songs/ https://telibrary.com/albums/ https://trfswiss.com/alubm.php https://songs.tamilmurasam.com/norway-3/ https://eelasongs.com/
  2. யாழில் 1995<
  3. யாழில் 1995<
  4. பாகம் - 04 அடுத்து இந்தியப் படைக் காலத்தில் போராளிகளின் உடல்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிக் காண்போம். இந்தியப்படைக் காலம்: குலை நடுங்கும் கொடூரங்கள் நிரம்பியது இந்தியப்படைக் காலமாகும். இக்காலத்தில் தமிழ்ப் பெண்களில் கற்புகள் எல்லாம் இந்தியப் படையினரால் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்தன. சிங்களப் படையினர் செய்ய மறந்த கொடுமைகளை எல்லாம் இந்தியப் படையினர் செய்துகொண்டிருந்தனர். போதாக்குறைக்கு தமிழ் தேச வெறுப்புக் கும்பல்களான ஈ.பி.டி.பி., ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃவ்., ஈ.என்.டி.எல்.எஃவ், தமிழ் தேசிய ராணுவம் போன்ற இந்தியக் கூலிப்படைகளும் தம் பங்கிற்கு தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருந்தன. இந்தியப்படைக் காலத்தில் இயக்கக் கட்டமைப்புகள் எல்லாம் சிதைவடைந்து புலிகள் மீளவும் கரந்தடிப் போராட்டத்தை தொடங்கியிருந்தனர். இதனால், சில போராளிகள் காடுகளுக்குச் சென்றனர். சில போராளிகள் ஊர்வழிய நின்றனர். தமிழ் மக்களும் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த புலிவீரர்களுக்கு தம்மால் ஆன ஒத்துழைப்புகளை வழங்கினர். எனினும் ஆங்காங்கே காட்டிக்கொடுப்புகளும் நடந்துகொண்டிருந்தது. இந்தியப் படையினருடனான அடிபாடுகளின் போது அடவி/காடுகளில் வீரமரணமடையும் போராளிகளின் உடல்களை பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாத சூழ்நிலை இருந்தது; காட்டைச் சுற்றிவர இந்தியப் படையினர் காவலிருந்தனர். அதனால் புலிகளே அவற்றை காடுகளிற்குள்ளேயே புதைத்தனர். இஃது ஏனெனில், காட்டில் உடல்களை எரித்தால் எழும் புகை மூலம் புலிகளின் இருப்பிடத்தை இந்தியப்படையினர் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் தான் வழமையான எரித்தல் முறைமை இங்கு கடைப்பிடிக்கப்படவில்லை. இதற்கு மற்றொரு காரணம், 1991 ஐப்பசி-கார்த்திகை விடுதலைப்புலிகள் இதழின்படி, இந்தியப் படைகளுடனான சமரின் போது புலிகள் பெற்ற வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தது மணலாற்றுக் காடாகும். ஆகவே இங்கிருந்து சமராடிய புலிவீரர்கள் தாம் வீரமரணமடையும் போது இக்காட்டினிலேயே புதைக்கப்பட வேண்டும் (அப்போது "விதைத்தல்" என்ற சொல் பாவனைக்கு வரவில்லை) என்று விரும்பினர். அவர்களின் ஆசையும் அவ்வாறே நிறைவேற்றப்பட்டது. மேலும், மணலாற்றில் நின்று சமராடிய போராளிகள் பலர் தாம் வேறிடங்களிற்குச் சென்று வீரமரணமடைந்தாலும் தமது உடலானது தம் வாழ்வோடு ஒன்றறக் கலந்துவிட்ட மணலாற்றிலேயே தான் புதைக்கப்பட வேண்டும் என்று வாய்மூலமும் எழுத்துமூலமும் தேசியத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. எடுத்துக்காட்டிற்கு மணலாற்றுக் காட்டில் நடைபெற்ற ஒரு போராளியின் உடல் புதைப்பு நிகழ்வினைக் காண்போம். இப்புதைப்பு நடைபெற்ற காலம் தெரியவில்லை. இது ஏப்ரல் 1999 அன்று வெளியான ஒளிவீச்சிலிருந்து எடுக்கப்பட்டது ஆகும். மாவீரரின் வித்துடலிற்கு போராளிகள் அகவணக்கம் செலுத்துகின்றனர். படிமப்புரவு: ஒளிவீச்சு 04/1999 தலைவர் புதைகுழியினுள் மண் தூவுகின்றார். படிமப்புரவு: ஒளிவீச்சு 04/1999 இந்நிகழ்படத்தின் படி, முதலில் கதிரைகள் வைத்து ஏற்படுத்தப்பட்ட மேசையின் மேல் இரு உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனைச் சுற்றிவர போராளிகள் நின்று அகவணக்கம் செலுத்துகின்றனர். பின்னர் வேறொரு இடத்தில் 6 அடி புதைகுழியினுள் இரு உடல்கள் விதைக்கப்படுகின்றன. அப்போது தலைவர் தொடங்கி வைக்க ஒவ்வொரு போராளியாக வந்து புதைகுழியினுள் மண் தூவிவிட்டுச் செல்கின்றனர். பின்னர் சில நாட்கள் கழித்து அவ்விடத்தில் கற்கள் மூலமாக ஆக்கப்பட்ட ஒரு கல்லறை உருவாக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக உள்ளது. இடம் மணலாற்றுக் காடு. காலம்: 1988. படிமப்புரவு: த.வி.பு. இதே போன்று மற்றொரு படிமத்தினையும் நோக்குக. இப்படிமத்தில் இரு மாவீரர்களின் உடலை ஏனைய போராளிகள் இறுதிவணக்கத்திற்கு தயார் செய்வதையும் சுற்றிவர பெண் போராளிகள் வீரவணக்கம் செலுத்துவதையும் காணலாம். இவ்விரு மாவீரர்களின் உடல்களும் இரு உருள்கலன்கள் மேல் வைக்கப்பட்டுள்ளதையும் நான்மூலைகளிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டுள்ளதையும் காண்க. மாணலாற்றுக் காட்டினுள் கற்கள் மூலமாக ஆக்கப்பட்ட பல கல்லறைகள். படிமப்புரவு: எரிமலை ஆயுதவழி விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் எனக்களித்த நேரடி வாக்குமூலத்தின் படி, பின்னாளில் கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லமென அழைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லறைகள் யாவும் 1988 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலேயே மேலுள்ள படத்திலுள்ளவாறு உருவாக்கப்பட்டு விட்டதென்று தெரிவித்தார். இவர் இந்தியப் படையின் காலத்தில் இம்முகாமினுள் கடமையில் ஈடுபட்டிருந்தவர் ஆவார். இதே காலத்தில் மணலாறு மற்றும் வவுனியாக் காடுகள் தவிர்ந்த பகுதிகளில் வீரமரணமடைந்த போராளிகள் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப விடுபட்டன அ அரிதாக போராளிகளால் எடுக்கப்பட்டு உரியவர் பெற்றாரிடம் கமுக்கமான முறையில் ஒப்படைக்கப்பட்டன. விடுபட்டவை இந்தியப்படைகளால் கைப்பற்றப்பட்டு உசாவலின் பின்னர் சில வேளைகளில் பெற்றாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் வழக்கமான சமய முறைப்படி உடல்களை சுடுகாடு அ இடுகாடுகளில் அடக்கம் செய்தனர், சைவம், வேதம், இஸ்லாம் என்ற பேதமின்றி. பெரும்பாலான வேளைகளில் இந்தியப்படையினர் புலிவீரர்களின் உடல்களை அவ்விடத்திலையே விட்டுவிட்டுச் சென்றுவிடுவர். அவற்றை அவ்வூர் பொதுமக்கள் எடுத்து சுடுகாடுகளில் எரித்துவிடுவர். அடுத்து சிங்களப் படைகளுக்கும் புலிகளுக்குமான இணக்க காலத்தின் இறுதிப் பகுதியில், 1990இற்கு மேல், நடைபெற்ற ஒரு வீரமரண நிகழ்வினைக் காண்போம். எடுத்துக்காட்டிற்கு, மேஜர் சோதியாவின் வீரமரண நிகழ்வினைக் காணலாம். இவர் 11.01.1990 அன்று சுகவீனம் காரணமாக புலிகளின் முகாமொன்றில் சாவடைந்தார். இவரது உடலானது முதலில் புலிகளின் முகாமில் கட்டளையாளர்கள் உள்ளிட்டவர்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டு முடிய வீட்டிற்கு அனுப்பப்பட்டது. புலிகளின் முகாமில் வீரவணக்கம் நடைபெறுகிறது சவப்பெட்டி முகாமிலிருந்து வெளியில் கொண்டுவரப்படுகிறது பின்னர் உடல் யாழ்ப்பணத்தில் உள்ள இவரது வீட்டிற்கு போராளிகளாலையே கொண்டுவரப்பட்டது, அவர்கள் மூன்று விதமான சீருடை அணிந்திருந்தனர். இதுவே வரலாற்றில் முதன் முறையாக புலிவீரர்கள் வரிப்புலியில் மக்கள் முன்றலில் தோன்றிய நிகழ்வாக இருக்கக்கூடும். ஆனால் அனைவரும் அன்று வரிச் சீருடையில் வரவில்லை. சிலர் இந்திய சீருடையை ஒத்து புலிகளால் வடிவமைக்கப்பட்டிருந்த சீருடையிலும் வந்திருந்தனர். அன்னாரின் தாயர் விழிமூடிய மகளின் திருமுகம் கண்டு விம்முகிறார் பெற்றோர் இருமருங்கிலும் அமர்ந்திருக்க இந்தியப் படைகளின் சீருடையை ஒத்த சீருடை அணிந்த புலிவீரிகள் சூழ்ந்து நிற்கின்றனர். படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள் அலங்காரவூர்தியில் ஊர்வலத்திற்காக ஏற்றப்பட அணியமான நிலையில் உடல் கொண்ட சந்தனப் பேழை உள்ளது. அதன் தலைமாட்டிற்கு நேரே வரிப்புலி அணிந்த புலிவீரனொருவன் நிற்பதைக் காண்க. படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கூறப்பட்ட அனைத்து சமயச் செய்கைகளும் அன்னாரின் வீட்டில் நடந்து முடிவடைந்தது. அங்கு நடந்த இறுதிவணக்கத்தின் போது படைக்கலன் பூண்ட புலிவீரர்களும் நின்றிருந்தனர். பின்னர் மக்கள் வெள்ளத்தில் அன்னாரின் சவப்பெட்டி தாங்கிய அலங்காரவூர்தி இடுகாடு நோக்கி கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழியெங்கிலும் நின்று பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மக்கள் வெள்ளத்தில் அலங்காரவூர்தியில் ஊர்வலத்தின் போது உடல் கொண்ட சந்தனப் பேழை. படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள் வழியெங்கிலும் மலர்தூவி அஞ்சலிக்க ஆயத்தமாய் தமிழீழ மக்கள் நிற்கின்றனர். படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள் இறுதியாக இடுகாடு ஒன்றில் அன்னாரது உடல் புதைக்கப்பட்டது. அப்போது புனித படைய மரியாதை வழங்கப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை. பின்னர் அவ்விடத்தில் அவருக்கு ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது. மேஜர் சோதியாவின் சமயப்படியான கல்லறை. படிமப்புரவு: தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியப்படைக் காலத்திலிருந்து முதல் வித்துடல் விதைப்பு வரை: இந்தியப் படையின் காலத்திற்கு பின்னரிருந்து உடல் விதைக்கும் இயக்க மரபு நடைமுறைப்படுத்தப்படும் வரை, இந்தியப்படை வருவதற்கு முன்னர் என்ன நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதோ அதுதான் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட்டது. (தொடரும்) ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  5. நான் நினைக்கின்றேன், இந்த ஒன்ராறியோ மாகாணத்தில் தான் அதிகமான தமிழர்கள் வசிக்கிறார்கள் என்று.
  6. செல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று நினைக்கின்றேன், லெப். கேணல். சூட்டண்ணையால், மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். நான் சந்திக்கும் போது போராளிக்குரிய எந்த சாயலும் இல்லாது சாதாரணமாக இருந்தார். அந்த நேரத்தில் யாழ் நகரை கலக்கிய போராளிகளான சூட்டண்ணை, யவானண்ணை போன்றவர்களுடன் குமாருக்கும் முக்கிய பங்குண்டு. இவர்கள் இந்திய இராணுவத்தை நித்திரை கொள்ளவிடாமல் செய்தவர்களில் முக்கியமானவர்கள். இந்திய இராணுவம் தோல்விகளுடன் வெளியேறி சென்றபின் புதிதாக பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறை மீள் உருவாக்கம் பெற்றபோது குமாரும் அதனுள் உள்வாங்கப்பட்டார். ஆரம்பகாலங்களில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய துரோகிகளைக் களை எடுப்பதில் முக்கிய பங்காற்றினார். காலில் பல தடவைகள் செருப்பும் இல்லாது தான் குமாரைக் காணமுடியும். குமாரே சத்தியம் பண்ணி, தான் ஒரு போராளி என்று கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அவனது தோற்றம் அப்படித்தான் இருக்கும். மிக எளிமையான உடை அலங்காரத்துடன் யாழ் நகர வீதிகளில் எந்த நேரமும் காணமுடியும். 1991ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பணிக்காக அனுப்பப்பட்டிருந்தான். அங்கு சென்று சிறிது காலத்தில் அங்கு நடந்த குண்டு வெடிப்பொன்றின் காரணமாக தமிழ்நாட்டில் தங்கி இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த எல்லாப் பிரிவுப் போராளிகளும் IB யால் இலக்கு வைக்கப்பட்டு, கைது செய்ய முற்படும் போது ஒரு சில போராளிகளைத் தவிர, யுத்தகளத்தில் படுகாயமடைந்து, மருத்துவத்திற்காக தங்கி இருந்த போராளிகள் உட்பட அனைவரும் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தனர். எப்படியோ IB இன் கண்களில் மண்ணைத் தூவி குமாருடன் தொலைத்தொடர்பைச் சேர்ந்த போராளியும், இன்னுமொரு போராளியுமாக மூவரும் கரையில் புலிகளின் படகுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்காக யாரும் வரவில்லை இவர்களுக்கு உதவி செய்யவும் தமிழ்நாட்டு மக்களும் பின்வாங்கிய நேரம். அப்போது இவர்களுக்கும் குப்பியைக் கடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த முடிவுக்கு குமாரை தவிர மற்ற இரு போராளிகளும் வந்திருந்தனர். அப்போது குமார், சாவது பிரச்சனை இல்லை அதற்கு முன் தப்புவதற்கு முயற்சி செய்வோம் முடியாவிட்டால் குப்பியைக் கடிப்போம் என்று முடிவெடுத்து அன்று இருட்டிய பின் கரையில் இருந்த சிறு தோணி ஒன்றில் தங்கள் கைகளையும், துடுப்பையும் நம்பி, நம்பிக்கையுடன் தாயகம் நோக்கி புறப்பட்டார்கள். அந்த நேரத்தில் இயற்கை இவர்களுக்கு சாதகமாக காற்றும் அடுத்தமையால், தங்கள் சாரம் (லுங்கி) கொண்டு தற்காலிக பாய்மரம் ஒன்றை உருவாக்கி இருவர் அதை பிடிக்க ஒருவர் துடுப்பு பிடிக்கத் தோணி வேகமெடுத்தது. இப்படியே பாய்மரமும், துடுப்பும் போட்டு மூன்று நாட்கள் உணவும் இல்லாது கொண்டு வந்த 5L நீரும் தீர்ந்து போக அரை மயக்கத்தில் கடல்தொழிலில் ஈடுபட்டிருந்த எம் மக்களால் கரை சேர்க்கப்பட்டார்கள். அன்று குமாரின் நம்பிக்கை மூன்று போராளிகளின் உயிரைத் காத்தது. அதன் பின்னரான காலங்களில் யாழில் இருந்தபடி தனது புலனாய்வு வேலைகளை விஸ்தரித்து தனது நேரடி வழிநடத்தலில் கொழும்பில் சில தாக்குதலும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். எப்போதும் போராளிகளுடன் மென்மையான போக்கையே கையாளும் குமார் தட்டிக் கொடுத்து வேலைவாங்குவதில் கெட்டிக்காரன். ஓய்வுறக்கமின்றி சுழன்ற போராளி. சிறிது காலம் சாள்சுக்கு (கேணல்.சாள்ஸ்) அடுத்த நிலையிலும், இறுதிக்கலாங்களில் தனி நிர்வாகம் ஒன்றை பொறுப்பெடுத்து செய்த சிறந்த நிர்வாகி. 12/01/1998 அன்று குமாரின் குழந்தையின் 31 விழாவிற்கான ஆயத்தங்கள் வீட்டில் நடந்து கொண்டிருந்த போதும், இலக்கொன்றை அழிப்பதற்கு, குண்டு ஒன்றை அனுப்புவதற்கான ஆயத்தங்களின் இறுதிக் கட்டம், கடமை தான் முக்கியமாக கருதிய அந்த போராளி அந்தக் குண்டை கொண்டு செல்லும் போது தவறுதலாக அது வெடித்து வீரச்சாவைத் தழுவியிருந்தார். இந்த செய்தியை நான் செய்தி. ஊடகங்கள் ஊடக அறிந்த போது அதிர்ந்துதான் போனேன். நான் ஊர் வரும் போதெல்லாம் எனக்காக காத்திருந்த நல்ல நட்பு பாதியிலேயே போய்விட்டது. மிகவும் திறமை மிக்க போராளி ஒருவனை எம் தேசம் அன்று இழந்தது..!! – நினைவுகளுடன் ஈழத்து துரோணர்..!!!
  7. எம்மின தமிழ்ப் பெண்களின் கற்பைத் தின்ற இந்தியப் படையினரின் கால்களைக் கழட்டிய பொறிவெடி 1988-1989 இது தான் "(b)பாட்டா" பொறிவெடி என்று எண்ணுகிறேன். சரியாகத் தெரியவில்லை.
  8. மணலாற்றுக் காட்டினுள் பெண் போராளிகள் 1988/1989
  9. முகாமினுள் இருக்கும் கைந்நிலை ஒன்றினுள் அமர்ந்திருக்கும் போராளிகள் 1988/1989
  10. மணலாற்றுக் காட்டினுள் போராளிகள் 1988/1989
  11. மணலாற்றுக் காட்டினுள் போராளிகள் 1988/1989
  12. மணலாற்றுக் காட்டினுள் போராளிகள் 1988/1989
  13. லெப். கேணல் குமரன் எ குமராப்பாவும் போராளிகளும் 1985
  14. புலிவீரர்கள் ஒன்றாக நிற்கின்றனர் 1988<
  15. லெப். கேணல் விக்ரரும் புதிய போராளிகளும் 1985/1986

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.