Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. தலைவருக்கு வீரவணக்கம் செய்வது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அவர் இப்போது உயிருடன் இல்லை. நானும் புலிகள் தொடர்பில் எழுதத்தொடங்கிய போது - ஆவணங்களில் - 2021ம் ஆண்டு அதைத்தான் எழுதினேன். கோராவில் திரு. சாத்திரியாரின் 2011ம் ஆண்டு தலைவர் வீரவணக்க படத்தை பாவித்து செய்தேன். யாழ் எழுத்தாளர் நேசக்கரம் சாந்தி அவர்கள் செய்த நிகழ்விற்கு ஆதரவு நல்கினேன். இவர்கள் தலைவரின் வீரவணக்க நிகழ்வை செய்த திகதி பற்றி எனக்கு கவலை இல்லை. செய்ய வேண்டும் - செய்தார்கள். நல்லம். எனினும் இவர்கள் செய்த நிகழ்வில் சில செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக மக்களும் போராளிகளும் புனிதமாக பார்க்கும் வரிப்புலியை சிறார்களுக்கு அணிவித்து அதனைக் கொண்டு அணிநடை போட விட்டது மிகவும் இழிவான செயலாகும். அவ்வாறு செய்திருக்கக் கூடாது. வரிப்புலி கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மாவீரர்கள் உயிர்விட்டனர். ஆனால் இவர்களோ அதை இவ்வாறு பாவிப்பது ஏற்க முடியாத செயலாகும். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் திகதி செய்யப்போவதாக அறிவித்திருப்பது உண்மையில் மனமெரிய வைக்கும் செயலாகும். மே 18 என்பது இனப்படுகொலை நாளாகும். அதில் இதைக் கொண்டுவந்து செய்தால் - நாளை அது ஓர் பயங்கரவாதி உயிர்நீத்த நாள் என்று உலக நாடுகளாலும் இந்திய சிங்கள கூட்டுக் களவாணிகளாலும் ஒத்தூதப்படும். பின்னர் அந்நாள் தடை செய்யப்படும். இவர்கள இதை சிந்தித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை தலைவரும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் போன்று ஓர் மாவீரர்தான். அதே போன்று தான் தலைவருக்கும் நவ. 27இல் தான் ஆண்டாண்டு வீரவணக்கம் இனி செய்ய வேண்டும். மே 18 இல் செய்தால் அது எல்லாவற்றையும் திசை மாற்றி விடும். எனவே மே 18இல் செய்யாமல் நவம் 27இல் ஆண்டுதோறும் செய்வது சாலச் சிறந்தது. மாறி செய்தால் இந்த இவர்களும்*** புலனாய்வுத்துறைகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவது உறுதியாகிவிடும்.
  2. இதை வாசிக்கும் போது இப்பாடல் வரிகள் தான் நினைவிற்கு வந்தன: "கண்ணீரில் காவியங்கள், செந்நீரில் ஓவியங்கள்! தண்ணீரில் ஓடம் போல் தமிழீழக் கோலங்கள்!" இறுதிப் போர் தொடர்பில் எழுதப்பட்ட மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவுகளில் இதுவும் ஒன்றாகும். இதே போன்று இன்னொன்று 60 தொடர் கொண்டது- 2015ம் ஆண்டளவில் ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. இவையிரண்டும் புத்தகங்களாக வரவேண்டும்.
  3. இதே போன்ற ஒரு போராட்டத்தினை மட்டு-அம்பாறை வாழ் தமிழர்களும் முன்னெடுக்க வேண்டும். முஸ்லிம் ஊர்காவல்படையினர், காடையர்கள் மற்றும் சாதாரண முஸ்லிம் பொதுமக்களாலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோர வேண்டும்.
  4. கடற்கல வார்ப்புகள் கீழ்வரும் படிமங்கள் யாவும் புதுக்குடியிருப்புக்கு அருகிலுள்ள தேராவில் காட்டிற்குள் அமைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் படகு கட்டுத்துறையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இங்கு படகுகள் கட்டப்படுவதுடன் பழுதும் பார்க்கப்பட்டது. இத்துறையானது ஆகக்குறைந்தது 1998ம் ஆண்டு வரை திருமதி ஆனந்தி அவர்கள் தலைமையில் மங்கை படகு கட்டுமானப் பிரிவினரால் பாவிக்கப்பட்டது. பின்னாளில் இத்துறையினை இயக்கியவர்கள் யாரென்பது தெரியவில்லை. 1) நீளம்: 80+ அடி 'மேற்கண்ட படம் என்னால் உருவாக்கப்பட்ட படம் ஆகும்' 'உட்பகுதி' படகினில் ஓர் சிறீலங்கா தரைப்படை வீரன் ஏறி நிற்கிறார்.. அவரை வைத்து கடற்கலத்தின் நீள அகலத்தினை எடை போட்டுக்கொளுங்கள், எவ்வளவு பெரியது என்று! 'வெளிப்புறம்' கலத்தினை தொட்டபடி நிற்பவர் சிறீலங்கா இராணுவ வீரன். 'வெளிப்புறம் | கலத்தினை தொட்டபடி நிற்பவர் சிறீலங்கா இராணுவ வீரன் ஆவார்' 2) 'பின்பக்க மூலையில் இருந்து முன்னோக்கிய பார்வை' 'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய சத்தார் பார்வை' 3) 'வெளிப்புறம்' 'உட்புறம்' 'வெளிப்புறம்' 4) இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது. 'இக்கலத்தில் சிறீலங்கா தரைப்படை வீரன் ஒருவர் ஏறி நிற்கிறார்' 5)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.