-
Posts
31385 -
Joined
-
Days Won
142
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by கிருபன்
-
-
ஒற்றுமைபற்றி கருத்துரைத்துவிட்டு தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித் தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு – பிள்ளையான்
ஒற்றுமைபற்றி கருத்துரைத்துவிட்டு தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித் தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.மேலும் ஐ.நா. சபைக்கு நான்கு பகுதிகளில் இருந்து கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினை திருப்திப்படுத்தும் வகையில் கடிதத்தினை எழுதியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களிற்கு நிவாரண விலையில் சதோச ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சத்தோச விற்பனை நிலையம் ஒன்று இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.மட்டக்களப்பு, கள்ளியங்காடு உணவுக் களஞ்சியசாலையில் இந்த சத்தோச விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.(15)
-
18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் கொரோனா தடுப்பூசியை வழங்க இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரை
18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் கொரோனா தடுப்பூசியை வழங்க இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது.தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 30 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பைசர், மொடர்னா, அல்லது அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிகளை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 வது மருந்தாக வழங்க பரிந்துரைத்தது.இதேவேளை மத்திய கிழக்கில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சினோபோர்ம் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறைவான செயற்திறன் அளிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் கூறியுள்ளது.
இந்நிலையில் 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு எந்த தீவிர நோய்களாலும் பாதிக்கப்படாதவர்களுக்கு செலுத்த சினோபோர்ம் தடுப்பூசியை பயன்படுத்தப்படலாம் என்றும் இந்த வயது பிரிவில் இருப்பவர்களுக்கு தீவிர நோய்கள் இருந்தால், அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பைசர், மொடர்னா அல்லது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பரிந்துரைக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்தார் (15)
http://www.samakalam.com/18-முதல்-60-வயதிற்குட்பட்டவர/
-
உடுப்பிட்டியில் மோதல் -இராணுவப் பாதுகாப்பு
September 8, 2021
உடுப்பிட்டியில் கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து காவல்துறையினரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்தக் கிராமத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாள்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது.
இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை காவல்துறையினரின் அழைப்பின் பேரின் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அதனால் அந்தக் கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.-
https://globaltamilnews.net/2021/165728
-
7 hours ago, அக்னியஷ்த்ரா said:
நமக்கு பைபிளில் இருக்கும் யோசுவாவையும் ,ஊரிலிருக்கும் ஓடாவி யோசுவாவையும்தான் தெரியும்
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் இந்த யோசுவா யாரென்று தெரியாது.காவேரி கலா மன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா
ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்
-
1
-
-
14 hours ago, goshan_che said:
யார் இந்த ஜோசுவா?
எனக்கு 👇🏾இந்தக் கதையில் வந்த ஜோஷுவாவைத்தான் தெரிகின்றது!
-
நட்சத்திரங்களின் வாக்குமூலம்
இதழிலும், இடது கன்னத்திலும் மிருதுவான முத்தங்களை வழங்கி கழுத்துக்குச் சென்று வியர்வை வாடையைப் பொருட்படுத்தாது கீழிறங்கினான். முத்தமிட்டப்படியே அவள் மார்பகங்களுக்குச் சென்றடைந்தான். அவ்வப்போது தலையைத் தூக்கி செயலிலிருந்து விடுபட்டு அவள் முகம் காணவும் தவறவில்லை. கண்கள் சொக்கி மோனத்தில் இருந்தாள். அவளின் மேலாடையைக் களைய முற்படும் போதே அவனுள் எழுந்த படபடப்பு அவனைத் தொந்தரவுக்குள்ளாக்கியது. எவ்வகையிலாவது இம்முறை மன வேலியை கடந்து சென்று விட வேண்டும் என்றெண்ணி முனைப்புடன் கூடலில் ஈடுபடலானான். மேலுள்ளாடையையும் அவிழ்த்து அவள் மார்பகங்களைத் தற்போது, அரிதாக நடைபெறும் ஒரு நிகழ்வை கண்டதைப் போல் வெறித்துக் கொண்டிருந்தான்.
நினைவு திரும்பியவள் போல் கண்களை முழுதாகத் திறந்து புன்முறுவலுடன் அவனை நோக்கி “என்ன?” என்பது போல் புருவமேற்றினாள். அவன் சொல்லற்று திகைத்துப் போயிருந்தான். அவளே அவன் தலையை வருடிக் கொடுத்து ஊக்குவித்துத் தன் மார்பகங்களுக்கு இட்டுச் சென்றாள். அவன் இயக்கப்பட்ட பொம்மை போல் செயலாற்றத் தொடங்கினான். ஆனால், அவன் ஆழ்மனதில் ஒளிந்து கொண்டிருக்கும் அந்தக் கண்கள் அவனை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்றவன் அறியாமலில்லை. முகத்தை முலைகளில் பதித்துக் கொண்டான். முலைக்காம்புகளை மெல்லச் சுவைக்கத் தொடங்கும் போது அவளிடமிருந்து “ஜோ…..ஷு….வா……” என்ற முனகலோசை கேட்டது.
இவன் சட்டென்று எதனாலோ தாக்கப்பட்டது போல் அவளுடலிலிருந்து விலகினான். பிம்ப அலைகள் அவனுள் எழுந்த படியே இருந்தன. அதிலிருந்து தப்பிக்க அவனுக்கு இன்று வரை வழி தெரியவில்லை. தலையை வேகமாக ஆட்டி ஆட்டி பிம்ப நிரையிலிருந்து விடுபட முயன்றான். பல பிம்பங்களுக்கு நடுவே ஒரே ஒரு பிம்பம் தனித்து எழத் தொடங்கியது. இடது பக்கக் கண். கூரிய கண். பிறரை பார்வையாலேயே துளைத்து எடுக்கும் கண். கண்களின் ஒளியில் பிறரை எரியச்செய்யும் வீரியம் மிகுந்த கண். ஆனால், அத்தகைய கண் வேண்டுதலின், கெஞ்சுதலின் எல்லைக்குச் செல்வதாக உருமாறத் தொடங்கியது. சற்று உற்று நோக்கினால், கருவிழிகளில் அவன் முழு உருவையும் பிரதிபலிக்கும் மாபெரும் கண். கைகளை நீட்டி ஆதி மானுட தர்மங்களைக் கோரி நிற்கும் கண்.
வேகமாக மூச்சு வாங்கிக்கொண்டே இருக்கக் கட்டிலின் விளிம்பிற்குச் சென்றான். தலையில் கை வைத்துக் கொண்டு ஐந்து நிமிடம் முழுதாகப் பேச்சற்று அமர்ந்திருந்தான். சற்றே சமநிலைக்கு வந்தபின் அருகே இருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தபடியே பின் திரும்பி அவளிடம் “வேண்டுமா?” என்று தலையசைப்பால் கேட்டான். அவள் அவனைப் பிரமிப்புடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
சில மணித்துளிகளுக்குப் பிறகு “இல்ல இப்போ வேணாம்” என்று பதிலுரைத்தாள். பின், ஆடைகளைச் சரி செய்து கொண்டு அவனருகே அமர்ந்து தன் கைகளை அவன் இடது கையின் இடைவெளியில் பொருத்தி அவன் தோளில் சாய்ந்து கொண்டு,
“ஜாஷ். நான் ரொம்பப் பொறுமையா தான் இருக்கேன். ஆனா, இப்படியே கன்டினியூ பண்ண முடியாது என்னால” என்றாள். கடைசிச் சொல் தயக்கம் மற்றும் ஏக்கம் கலந்த அழுகுரலுடன் வெளிவந்ததைக் கவனித்துச் சிகரெட்டை அணைத்து விட்டு அவளை நேருக்கு நேராக நோக்கினான்.
“பிரார்த்தனா, ஐ நோ. ஆனா, சில விஷயங்கள விட்டு வர முடியல என்னால.”
“உன்னால கிளைமாக்ஸ நெருங்க முடியல. எதுவோ உன்னைய தடுக்குது..…. எனக்கு உன்னைய புரிஞ்சுக்க முடியல. எது உன்னைய தடுக்குது?”
“நான் என்னால முடிஞ்சத செஞ்சுட்டு தான் இருக்கேன். யோசிச்சுப் பாரு. மூணு மாசம் முன்னாடி வரைக்கும் உன்னைய தொட கூட முடியாம இருந்தேன்”
“ஜாஷ். எனக்கு உன்னைய ரொம்ப புடிக்கும். அது உனக்கும் தெரியும்.. எனக்குப் புரியுது நீ ஏதோ ஒரு ட்ராமால (trauma) இருக்கனு. பட் ஐ நீட் யூ ஃபிசிக்கல்லி அஸ் வெல். அந்தப் பாழாப் போன பூனேல போன வருஷம் என்ன நடந்ததுனு சொல்லாம என் உயிர வாங்குற” என்று கூறி அழத் தொடங்கினாள்.
ஜோஷுவா செய்வதறியாது அவளைக் கட்டியணைத்தான்.
“டே… அழாதடா. நான் என்ன சொன்னாலும் உனக்குப் புரியவைக்க முடியாது”
“டிட் யூ ஹேவ் செக்ஸ் வித் அதர் வுமன்?” அவனணைப்பிலிருந்து கோபத்துடன் விடுபட்டு அவனை நோக்கி சீறினாள்.
“….”
“சொல்லித் தொலையேன்” என்று குரலை உயர்த்தினாள்.
“நோ”
“அப்புறம் என்ன எழவு தான் நடந்துச்சு? நான் வெறும் செக்ஸ்காக ஆர் என்னுடைய ப்ளெஷருக்காகச் சொல்லல. எனக்கு உண்மையிலேயே உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும்னு தோணுது. அப்படி என்னால ஹெல்ப் பண்ண முடியலைன்னா “பார்ட்னர்”னு நான் எதுக்கு இருக்கேன்? “
“சொல்றேன். கொஞ்ச நாள் ஆகட்டும். தெரப்பி இஸ் ஹெல்பிங்”
“மண்ணாங்கட்டி. மெடிக்கேஷன் போயிட்டே தான் இருக்கு. எதுவும் இம்ப்ரூவ் ஆகுற மாதிரி தெரியல”
“நீ அப்டி சொல்ற. பட் ஐ கேன் ஃபீல் தி டிஃபரென்ஸ்.” என்று ஜோஷுவா முடித்தான்.
தேவைக்கதிகமாகப் பொரிந்து தள்ளிவிட்டோமோ என்றெண்ணி, சற்றே நிதானத்துக்கு மீண்டு அவனை மீண்டும் அணைத்துக் கொண்டே, “சரி. உனக்கு எப்போ விருப்பமோ அப்போ சொல்லு. நான் உன்னைய ஜட்ஜ் பண்ண மாட்டேன்.”
சில நொடிகள் இருவரும் பேசவே இல்லை. திறந்திருந்த பால்கனியிலிருந்து உள்நுழைந்த பெங்களூரின் நள்ளிரவு காற்று அவர்களைச் சற்று இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தது.
அடர்த்தியான அந்த அமைதியைக் கலைக்க அவனே வேறு திசை நோக்கி பேச்சை மடை மாற்றினான்,
“நான் அடுத்து எப்போ க்ளாஸ் எடுக்க வரணும்?”
“அடுத்த வாரம் வா”. சற்று இடைவெளி விட்டு, “என்னுடைய சீனியர் டைரக்டர் உன்னைய பாக்கணும்னு சொன்னாங்க.”
“எதுக்கு?”
“நீ இவ்ளோ நாளா சப்போர்ட் பண்றதுக்கு ஏதோ அப்ரிஷியேட் பண்ணப் போறாங்களாம். காசும் கொடுக்குற. அப்பப்போ வந்து கிளாஸ்லாம் எடுக்குற.”
“அப்ரிஸியேஷன்லாம் தேவையே இல்லாத விஷயம்.”
“அவங்களோட விருப்பம் அது. க்ராட்டிட்யூட்னு சொல்லலாம். ஆல்சோ, புதுசா ஒரு பொண்ணு வந்துருக்கா. போன வாரம்.”
“கவுண்ட் அதிகமாயிட்டே இருக்கே”
“என்ன பண்றது சொல்லு. விமன் ஹேவ் டு ரீஸ்டார்ட் தெயர் லைஃப். அதுவும் வெறும் விக்டிமா இருக்கும் போது எதுக்கு பதுங்கி ஒதுங்கி உட்காரனும்?”
“பட், சொஸைட்டிங்கிற புல்ஷிட் இருக்கே. நம்ம எல்லாருக்கும் என்ன நடந்ததுன்னு சொல்லிக்கிட்டே இருக்கும்”
“ஆமாம். ஆனா அத எல்லாம் பாத்தா வேலைக்காகுமா?. இப்பிடியே பயந்துட்டு இருந்தா வாழவே முடியாது. நாம லவ் பண்றப்போ இருந்த சப்போர்ட் பத்து மாசத்துக்கு முன்னாடி லிவ்-இன் ஸ்டார்ட் ஆனதுலேர்ந்து இல்ல. வாட் டு டூ..”
“100%”
“நமக்குப் புடிச்ச மாதிரி வாழ்ந்தா போதும் வித் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி. அத தான் எங்க ஹோம்ல இருக்குற பொண்ணுங்களுக்குத் தினமும் சொல்லிட்டு இருக்கோம்”
“கிரேட்”
சில நொடி மௌனத்திற்குப் பின்,
“ஆனா, நீ சரி இல்ல. நான் லவ் பண்ணது வேற ஜாஷ். உன்னுடைய ட்ராமா அண்ட் டிப்ரெஷன்க்கு நானும் பலிகடா ஆகுறேன். அதுவும் கரெக்ட்டா லிவ்-இன் ஆரம்பமாகும் போது நீ பேயடிச்ச மாதிரி ஆயிட்ட”
அவன் எதுவும் பேசாமல் இன்னொரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான்.
***
பிறிதொரு நகரம் என்ற சுவடே இல்லாதவாறு பெங்களூரின் சாயலை பூண்டிருந்தது பூனே. மொழியும், மனித முகங்களும் வேறு. ஓலா, நெடும்பாலங்கள், இரைச்சல் மிகுந்த மக்கள் கூட்டம், அமேசான் மற்றும் நெடஃபிளிஸ் தளத்தில் வெளியாக இருக்கும் அல்லது வெளியான படங்களின், இணையத் தொடர்களின் வண்ண விளம்பரங்களைத் தாங்கிய மாபெரும் பேனர்கள் என்று கண்களுக்குப் புலப்படும் கலாச்சார ஒப்புமைகள் விரவிக் கிடந்தன.
ஜோஷுவாவும் அவன் நண்பன் மயன்கும்(Mayank), மயன்கின் நண்பனின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு வருடமும் பூனேயில் நடைபெறும் “என்.எச்.7 வீக்கெண்டர்” இசைத் திருவிழாவை பற்றி ஜோஷுவா அண்மையில்தான் கேள்வி பட்டிருந்தான். அதுவும் இவ்வருடம் அவனுக்குப் பிடித்த இசைக் குழுவான “காட் ஐஸ் அன் ஆஸ்ட்ரானாட்” பங்கு பெறுவதாகக் காதுக்குச் செய்தி வந்தவுடன் அலுவலகத்தில் ஒத்த இசை ரசனையுடைய நண்பன் மயன்கிடம் கலந்தாலோசித்துப் பூனே பயணத்திற்கு ஏற்பாடு செய்தான். தங்குவதற்கு மயன்க் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.
மூன்று நாள் இசைத் திருவிழா. பெரும்பாலும் ராக் மற்றும் போஸ்ட் ராக் இசைக் குழுக்கள். வண்ண விளக்குகள். தலை ஒடிந்து விழும் அளவிற்கு அதிவேகமாக உச்சபட்ச இசைக்கேற்ப தலையை ஆட்டிக்கொண்டே இருக்கப் போகும் மக்கள் கும்பல். ஜோஷுவா இவ்வனைத்தையும் எதிர்பார்த்தவாறு அவனுக்குப் பிடித்த போஸ்ட் ராக் இசையிலேயே மூழ்கி இருந்தான் கடந்த சில நாட்களாக.
ஓலாவிலிருந்து இறங்கிய ஜோஷுவாவையும், மயன்கையும் மயன்கின் நண்பன் வரவேற்றான். முகமன்களுக்குப் பிறகு மூவரும் மயன்கின் நண்பனின் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினர். சுற்றிலும் வில்லாக்கள். மயன்கின் நண்பன் வசிப்பது மாபெரும் வில்லா. ஆனால், மனித நடமாட்டமே இல்லை. ஜோஷுவா ஆர்வம் மிகுந்து அங்குள்ள வீடுகள் பற்றி நிறைய கேட்கத் தொடங்கினான். அவ்வீடுகள் அனைத்தும் யாருமற்று பராமரிப்பின்றி இருப்பதாக மயன்கின் நண்பன் கூறினான்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஜோஷுவா கஞ்சா நெடியை முகர்ந்தான். டூப்லெக்ஸ் வீடு. மயன்கிற்கும் ஜோஷுவாவிற்கும் ஒதுக்கப் பட்டமாடி அறைக்குக் கூட்டிச்சென்றான். மாடிப்படியெங்கும் பல இசை குழுக்கள் மற்றும் திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவர்கள் இருவருக்குமான அறையைக் காட்டிவிட்டு அவர்களை எவ்வித கூச்சமுமின்றி இருக்கச் சொல்லி பற்கள் தெரியாதவாறு சிரித்துவிட்டு அவ்விடத்தை விட்டு விலகினான் அவன் நண்பன்.
***
எழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் உடலெனும் பெருஞ்சுமையை எப்பாடு பட்டாலும் அவனால் அசைக்க முடியவில்லை. சுற்றம் முழுக்க மெழுகுவர்த்திச் சுடரிலிருந்து வெளிவரும் புகை வாடை. ஒரு வழியாக உடல் சற்றே இசைந்து கொடுத்தது. மாபெரும் தேவாலயம். இவ்வளவு உயரமான உச்சவரம்பை உடைய தேவாலயத்தை அவன் வாழ்நாளில் கண்டதில்லை. பக்கவாட்டில், எளிதில் கணக்கிட முடியா நாற்காலிகள் அமைதியாக ஜெபிப்பதைப் போல் தோன்றியது. தூரத்தில் நான்கைந்து பேர் மட்டுமே சேர்ந்து அசைக்கக் கூடிய நுழைவாயில் கதவு. வாசலை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறோம் என்றுணர்ந்து உடலை திருப்ப முயன்றான். திரும்பும் போது சுற்றிலும் நோட்டம் விட்டான். சுவரெங்கும் கர்த்தரின் படங்கள். சிலுவையில் அறையப்பட்ட கர்த்தர், ஆட்டுக்குட்டியுடன் கர்த்தர், கடைசி இரவுணவை சீடர்களுடன் உண்ணும் கர்த்தர் என்று பல வண்ண ஓவியங்கள்.
ஒரு வழியாக மறுப்பக்கம் திரும்பிய பின் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அதிர்ச்சியின் உச்சத்தை அடைந்தான். கர்த்தரே அவன் முன் சிவப்பு அங்கியில் நின்று கொண்டிருந்தார். அவன் பேச்சு மூச்சற்று அவரையே சில நொடிகள் வைத்த கண் எடுக்க மனமின்றிக் கண்டுகொண்டிருந்தான். ஏனென்று சொல்லவியலாத கழிவிரக்கம் திடீரென்று அவனிடம் தோன்ற கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீர் பூச்சரமாய்க் கன்னச் சதைகளை ஈரமாக்க தன் கையை அவரை நோக்கி நீட்டினான். விரிந்த இதழ்களுடன் கர்த்தரும் அவனை நோக்கி கையை நீட்ட முற்பட்டார்.
ஆனால், சட்டென்று புருவத்தை நெளியச்செய்து பாதி வழியில் கையைக் கீழிறக்கி பின்னே நகர ஆரம்பித்தார். அவன் ஒன்றும் புரியாதவனாக அவரை நோக்கி முன்னேறினான். ஆனால், அவர் மிக வேகமாக அவனைப் பார்த்துக் கொண்டே பின்னேறினார். ஒரு கட்டத்தில் அவனால் தொட முடியாத எல்லைக்குச் சென்று விட்டார். அவன் கை அவரின் பற்றுதலுக்காக அந்தரத்தில் நீண்டு கொண்டே இருந்தது. அவன் கண்களின் முன்பே அவர் சிலையாகி சுவரில் மாட்டப்பட்ட படமாகிப் போனார்.
விழிப்புத் தட்டியது. மணி நான்கு. அவனுக்குப் பதட்டம் அதிகமாகும் முகூர்த்த நேரமிது. எழுந்த உடனேயே மாபெரும் வெறுமையை உணர்ந்தான். அதைக் கடக்க அறைக்குள்ளேயே அங்கும் இங்கும் வேகமாக நடக்கத் தொடங்கினான். பதட்டம் நிற்கும் வரை வேக நடை என்பது அவன் கண்டுகொண்ட வழி. நடக்கும் போது விரல்களில் சொடுக்கு எடுத்துக் கொள்வதும், அவ்வப்போது கைகளை உதறிக்கொள்வதும் அவனது வழக்கம். பிரார்த்தனாவின் அறைக்குச் சென்று அவளை எழுப்பிப் பேசலாம் என்றால் அதற்கும் மனம் ஒப்ப மறுத்தது. கடந்த வருடம் லிவ்-இன் ஆரம்பமாகும் போதே இவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இருவரும் தனி அறையில் உறங்கத் தொடங்கினர்.
தூக்கம் பிடிக்காமல் பால்கனி கதவுகளைத் திறந்து மிச்சமிருந்த நட்சத்திரங்களையும், நிலவையும் பார்க்கத் தொடங்கினான். மெதுவாகத் தனக்குள் “சாரி, சாரி, ஐயம் வெரி சாரி” என்று கண்களில் கண்ணீர் தேங்க கூறிக்கொண்டே இருந்தான். சில மாதங்களுக்கு முன் வரை நட்சத்திரம் மற்றும் நிலவை கண்டாலே பிரக்ஞை இழந்து எதுவோ ஆக்கிரமித்தது போல் செயலழிந்து சிலையாக மாறி அவனுடல் நடுங்கியது. எக்ஸ்போஷர் தெரப்பி மூலம் படிப்படியாகத் தினமும் நட்சத்திரத்தையும் நிலவையும் கண்டு கண்டு சற்று அலுக்கத் தொடங்கியது. ஆனாலும், அதிகாலையில் உணர்ச்சி உச்சத்தில் இருக்கும் சமயங்களில் நட்சத்திரங்களையும் நிலவையும் காணும் தோறும் அவனிடம் குடிபுகும் பதட்டத்தைக் குறைக்க முடியவில்லை.
கடந்த ஒரு வருடத்தில் இரண்டு வேலைகள் மாற்றலாகினான். அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு எப்போதும் தன்னை நிரப்பிக் கொண்டே இருந்தான். அலுவலகத்தில் ஏதாவது பெண்ணின் மேலாடை கலைந்திருப்பதைக் கண்டுவிட்டால் அவன் மனம் படபடக்க ஆரம்பமாகும். அதுவும் பெண் ஊழியர்கள் அவனிடம் கை குலுக்கக் கை நீட்டும் போது மிகுந்த தயக்கத்துக்குப் பின் மட்டுமே தன் கையை நீட்டுவான். பல நாட்கள் வீட்டில் இருந்து கொண்டே வேலை பார்த்தான்.
வீட்டில் பிரார்த்தனா இருந்தால் அவளுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே இருப்பான். பிரார்த்தனா அருகே இல்லையெனில் மிகக் கடினமான புத்தகம் ஒன்றை எடுத்து வைத்து உட்கார்ந்துவிடுவான் அல்லது யூட்யூபில் தத்துவம் மற்றும் உளவியல் சம்பந்தப்பட்ட உரைகளைக் கேட்டுக்கொண்டிருப்பான். தர்க்கத்திலோ அல்லது ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய கடினமான விஷயங்களிலோ எப்போதும் உலவி கொண்டிருப்பது தன் எண்ணங்களை வேண்டாத இடங்களுக்குச் செல்லப் போடும் தடை என்றறிந்து கொண்டான்.
சில நாட்களில் பல மணி நேரமாகக் குளித்துக் கொண்டே இருப்பான். தண்ணீர் அவனுடலுக்கு ஏனென்று தெரியாத மன நிம்மதியை கொடுத்தது. நீர் அவன் துயரங்களையும் பாரங்களையும் இல்லாமலாக்குவது போல் இருந்தது. பக்கெட் முழுக்கத் தண்ணீர் நிரப்பி, தலையை முழுவதுமாக முக்க அவன் விரும்புவான். சில நாட்களில், குளியலின் போது உடலின் வழியே தண்ணீரும் கண்ணீரும் சேர்ந்து பயணிக்கும். அழுவது இவ்வளவு ஆறுதல் தரும் செயலென முன்னெப்போதும் அவன் உணர்ந்ததில்லை. சமயத்தில் கத்தவும் தோன்றும். அவ்வொலி குளியலறையில் எதிரொலித்து அவன் காதையே அடையும் போது வினோதமாக உணர்வான்.
அலுவலகத்திலோ பிரார்த்தனாவிடமோ கூட சற்றே அதிகமாகச் சிரித்துப் பேச நேர்ந்தால் அவன் மனம் உடனடியாக இருட்டை நோக்கிப் பயணப்பட விருப்பப்பட்டது. தான் ‘எப்படிச் சிரித்து மகிழ்ந்து இவ்வுலகில் இருக்கலாம்’ என்ற விசித்திர கேள்வி அவனைத் துரத்தியது. அதே சமயம், முன்னைப்போல் வெகு இயல்பாக இருக்கவும் முயற்சி செய்து கொண்டிருந்தான். இவ்வாறு முன்னும் பின்னும் ஆடிக் கொண்டு அவனகத்துள் நுழைந்த முரண்பாட்டினால் தலைவலி எடுத்து தூக்கமற்று பல இரவுகளைக் கழித்தான். அனைத்தையும் பழக்கத்தினூடாக மாற்றி விடலாம் என்றெண்ணினான். உடற்பயிற்சியில் தீவிரமாக இறங்கிய பின்பு இரவில் தூக்கம் வருவது சற்றே எளிதாக இருப்பதாகக் கருதினாலும் வெகு சில நாட்களில் அதுவும் பயனளிக்கத் தவறியது.
கடந்த சில மாதங்களாக எண்ணங்கள் அவனை ஆக்கிரமித்து இம்சிக்கும் போதோ, ‘நான் நல்லவன் தான். அப்டி என்ன நான் பெருசா தப்புப் பண்ணிட்டேன்’ என்று உள்ளிருந்து ஒரு குரல் எழும்போதோ, அவன் தன்னையே அறைந்து கொள்ளும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டான். ஏதேனும் ஒரு வகையில் அவன் வலியை உணர விழைந்தான்.
***
மஹாலக்ஷ்மி பேலஸ் மைதானத்திற்கு மதியம் மூன்று மணி அளவில் சென்றடைந்தனர். ஜோஷுவாவுடன் மயன்க், மயன்கின் நண்பன், நண்பனின் காதலி மற்றும் வேறு சில நண்பர்களும் உடனிருந்தனர். அவர்களின் சம்பாஷணைகளில் ஜோஷுவாவால் நுழைய முடியவில்லை. அனைவருமே தன்னை விடக் குறைந்தது மூன்று வயது இளையவர்கள். சிறு வயதிலிருந்தே ஆங்கிலம் மட்டுமே பேசும் பள்ளி, கல்லூரிகளில் படித்து வளர்ந்த ஜென் Z மக்கள். ஜோஷுவா, தனதுலகம் வேறு அவர்களின் உலகம் வேறு என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டான். அவ்வப்போது அவர்கள் இவனைப் பார்த்து எதையோ கூறும் போதெல்லாம் வெறுமனே சிரித்து வைத்தான்.
அரைக் கிலோ மீட்டர் நடந்து மைதானத்தின் மையத்திற்கு வந்தடைந்தனர். அப்போதே பல இசைக் குழுக்கள் வெவ்வேறு மூலைகளில் இசை வெள்ளத்தை வழங்கிக்கொண்டிருந்தனர். மைதானத்தில் அங்கங்கு ஸ்டேஜ் அமைக்கப்பட்டிருந்தது. புறா கூட்டம் போல் இங்கொன்றும் அங்கொன்றுமாக மக்களும் கூடியிருந்தனர். நூறு பேருக்கு ஒரே சமயத்தில் சாமி வந்து ஆடுவதைப் போல் ட்ரம்ஸ்களின் இசைக்கேற்ப தலைகளை ஆட்டியபடி ஈடுபட்டிருந்தனர் அனைவரும். முழுக்கால் சட்டை அணிந்த எந்தப் பெண்ணையும் பார்க்க முடியவில்லை. மைதானத்தின் நுழைவாயிலில் மது விற்பனை ஏகபோகமாக நடந்து கொண்டிருந்தது. ஒருவர் கையிலும் மதுவோ, சிகரெட்டோ இல்லாமல் இல்லை. ஜோஷுவாவும் அவனுடனிருந்தவர்களும் நிகழ்ச்சி நிரலை சரி பார்த்துக் கொண்டு ஒரு இசை குழுவின் நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் அடுத்த இசை குழுவிற்குத் தாவிக் கொண்டிருந்தனர்.
இருளத் தொடங்கியது. வண்ண விளக்குகள் மேடையில் அதன் மாயாஜாலத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. ஒளி, ஒலி, மது, சிகரெட் என்றனைத்தும் கலந்து மக்களை வேறொரு நிலைக்கு இட்டுச் சென்றது. ஆண்களும் பெண்களும் நடு மைதானத்தில் முத்தங்களைப் பரிமாறத் தொடங்கினர். நீண்ட இதழ் முத்தங்கள். இசை, வெட்டவெளி, போதை, தனக்குப் பிடித்த துணை, இரவு. பலரின் வாழ்வில் இத்தருணங்கள் மிக முக்கியமான ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஜோஷுவா சுற்றிலும் நோட்டம் விட்டு ஏக்கத்தில் திளைக்கத் தொடங்கினான். தனியாக ஓரிடத்தில் அமர்ந்து இசையில் மட்டும் கவனத்தைக் கொண்டு வர முயற்சித்தான். அவன் அமர்ந்த இடத்திற்கு அருகே இருவர் முத்தங்கள் கொடுத்த உணர்ச்சி வேகத்தில் பிறர் பற்றிய பிரக்ஞை அன்றி வேறு சில செயல்களிலும் இறங்கத் தொடங்கினர். பிரார்த்தனாவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பிப் பார்த்தான். அவளுடன் எப்போது கடைசியாகக் கூடினோம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் அதே வேலையில் அவளிடமிருந்து பதில் வந்தது.
“சொல்லு டா. இப்போ ஒரு சின்ன பிரெச்சனைல இருக்கேன். ஒரு விக்டிமோட ஃபேமிலி எக்கச்சக்க பிரச்சன பன்றாங்க. போலீஸ் கிட்ட போக வேண்டியிருக்கும்னு நெனைக்கிறேன். அப்புறம் சொல்றேன் டீட்டைல்டா ” என பதில் வரவும் அவள் பதற்றத்தைப் புரிந்துகொண்டான்.
“ஓ… ஓகே” என்ற குறுஞ்செய்தியுடன் நிறுத்திக் கொண்டான்”
பிரார்த்தனாவுடன் தொடங்கப் போகும் லிவ்-இன் வாழ்க்கையைப் பற்றிய கனவில் மூழ்கி சிகரெட்டை இழுத்துக் கொண்டிருந்தான். புகைக்கு நடுவே மக்கள் கூட்டம் மங்கலாகத் தெரிந்தது.
***
இரவு அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். வீட்டில் ஏற்கனவே சிலரும் இருந்தனர். வீட்டிலும் இரைச்சல் மிகுந்த இசை. மயன்கும் ஜோஷுவாவும் அவர்களின் மாடி அறைக்குச் சென்று குளித்து விட்டு வந்து சேர்ந்துகொள்வதாகச் சென்றனர்.
அறையில் வேறொரு மனித நாடமாட்டம். பணிப்பெண் அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். “கித்னா டைம்?” என்று மயன் கேட்க “தஸ் மினிட் பையா.” என்று நிமிர்ந்து பதிலளித்தாள் பணிப்பெண். “டீக் ஹை.. தோடா ஜல்தி..” “டீக் ஹை பையா.”
எதிர்பார்த்தபடி ஜோஷுவாவால் எதிலும் முழு மனதுடன் இயங்க இயலவில்லை. பிரார்த்தனாவின் குறுஞ்செய்தியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இந்நேரம் பெங்களூரில் இருந்திருந்தால், பிரார்த்தனாவிற்கு உதவியிருக்கலாமே என்றெண்ணத் தொடங்கினான். ஏனென்று விளங்காத குற்றவுணர்வு அவனை ஆக்கிரமித்தது. பிரார்த்தனா அங்கு யாரோ ஒரு பெண்ணிற்கு உதவி செய்து கொண்டிருக்கிறாள். தான் இங்குக் குடி, கஞ்சா, சிகரெட், அதிரச் செய்யும் இசை, உரையாட முடியாத மக்கள் கூட்டம் போன்றவற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதாக எண்ணினான்.
ஆனால், வந்தாயிற்று. ஜோதியில் ஐக்கியமாவதை தவிர வேறு வழியில்லை என்று சுய சமாதானத்துக்குத் தன்னைக் கட்டாயப்படுத்திக் கொண்டான்.
***
பொன்னிற சிகை முன் விழுந்திருக்கச் சொற்ப உடையை அணிந்த மாதர்களின் படை சூழ தான் கானகத்தின் நடுவே கட்டிலில் கட்டுண்டிருப்பதை உணர்ந்தான். சுற்றிலும் பெரிய மரங்களும் பல மிருகங்களின் கூச்சல்களும் அவன் புலன்களுக்கு எட்டியது. அழகிகள் கூட்டமாக அவனை நெருங்கி அணிந்திருந்த ஆடையையும் களைந்து அவனைத் தூண்டிக்கொண்டிருந்தனர். மார்பகங்களும் யோனிகளும் அவன் கண்களை நிரப்பின.
எப்பாடுப் பட்டாவது இக்கனவின் பிடியிலிருந்து வெளியேற வேண்டும் என்று உடலை வேகமாக அசைக்க முயன்றான். கனவுலகில் தன் செய்கைகளைத் தான் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினான். கைகளையும் கால்களையும் கனவுலகில் ஆட்டி அசைத்துக்கொண்டே இருந்தால் ஒரு புள்ளியில் விடுபட்டு விடலாம் என்று கணித்தான். அதற்குள் பெண்கள் அவனுடலை தீண்டத் தொடங்கினர். அவன் அச்சம் கொண்டு அழத் தொடங்கும் வேலையில் திடீரென்று எங்கிருந்தோ வந்து குதித்த பிரார்த்தனா மற்ற அழகிகள் அனைவரையும் அகற்றினாள். அனைவரும் காட்சியிலிருந்து மறைந்தனர். இவனுக்குப் படபடப்பு நின்று சொற்ப நேர அமைதி கிட்டிய அதே வேலையில் பிரார்த்தனாவும் தன் ஆடைகளைக் களைய ஆரம்பித்து அவன் தொடையின் இடுக்கில் அழுத்தமாகக் கையைப் பதித்தாள். “ப்ளீஸ் பிரார்த்தனா. வேண்டாம் டா. அவ இதெல்லாம் நடக்க விடமாட்டா” அழுகுரலுடன் கெஞ்சினான். பிரார்த்தனா, “யாரு?” என்றாள். “அவள உனக்குத் தெரியாது” என்று கூறி பதட்டப்பட்டான்.
பிரார்த்தனா சத்தம் போட்டு சிரித்தாள். இவன் அவளைப் பிரம்மித்துப் பார்க்கும் அதே வேளையில் அவளுருவம் மறைந்து வேறொரு பெண்ணின் உருவம் நுழைந்தது. “பிரார்த்தனா?” என்று வினவினான். புதிதாகக் காட்சியில் குதித்தவளின் குனிந்த முகம் கூந்தலினால் மறைக்கப்பட்டிருந்தது. அவன் அமைதியானான். பின் மெதுவாகத் தலையை உயர்த்தி இடது கண் மட்டும் தெரியுமாறு அவனைக் கண்டது அந்த உருவம். இவன் பேதலித்தவன் போல் உளறத் தொடங்கினான். அலறினான். கைகளை வெகு வேகமாக ஆட்ட முயன்று தோற்றான். அமானுஷ்ய பெண்ணுருவம் அவனுடலின் மீதேறி சில நொடிகளுக்கு அப்பால் அவன் குறியை ஓங்கி மிதித்தது.
திடுக்கிட்டு விழிக்கும் போது மணி ஐந்து. வழக்கம் போல் மூச்சு வாங்கலும் படபடப்பும் அதிகமாக, அறையினுள் நடக்கத் தொடங்கினான். வெளியே ஓட செல்லலாமா என்று யோசித்தான். பின், பிரார்த்தனாவின் அறைக்குச் சென்று அவளருகே போய்ப் படுத்துக் கொண்டான். அவளின் அருகாமை சற்றேனும் நிம்மதியைக் கொடுக்கும் என்று நம்பினான். ஓசை எழாதவாறு அவளருகில் சென்று படுத்துக் கொண்டாலும் அவள் சலனப்பட்டுத் துயில் களைந்து விழித்துப் பார்த்தாள். இருவரும் நீண்ட நேரம் கண்ணோடு கண் நோக்கினர்.
“என்னாச்சு? ட்ரீம்ஸ் எகைன்?” அவள் குரலில் தூக்கம் கலந்திருந்தது.
“எஸ்”
“என்ன கனவு?”
“சொல்ற மாதிரி எதுவும் இல்ல?”
சற்றே கனிந்த குரலில் “நீ எதுவும் சொல்லவும் மாட்ட, தேம்பி தேம்பி அழ மட்டும் செய்யுற. ஷேர் பண்ணுடா. கொஞ்சம் பாரம் குறையும்”
“பண்றேன் பண்றேன். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு”
“ஸீ. இப்போ நான் சொல்லப் போறது உனக்குக் கேட்டு கேட்டு புளிச்சு போயிருக்கலாம். “இட்ஸ் ஓகே டு பி நாட் ஓகே”. எங்க ஹோம்க்கு வர்ற எல்லார்கிட்டயும் இதைத் தான் சொல்வோம். “எவரித்திங் ஹேப்பன்ஸ் ஃபார் எ ரீசன்”. “நீங்க எழுந்து நிக்கணும்……”
“ப்ளீஸ். தயவு செய்து எதையும் ஆரம்பிக்காத. எனக்குக் கொஞ்சம் தூக்கம் வேணும். எனக்கு என்ன நடக்குதுன்னு எனக்கு நல்லா தெளிவாவே தெரியும். நாளைக்குக் குரியன் கூடத் தெரப்பிச் செஷன் இருக்கு”
“அப்புறம் என்ன மயித்துக்கு என் கூடப் படுக்க வந்த?”
கண்களை அகல விரித்து விடுக்கென்று எழுந்து சென்றாள்.
***
குளித்து விட்டு கீழே சென்றனர். குறைந்தது ஆறிலிருந்து ஏழு பேர் சுற்றி அமர்ந்திருந்தனர். “விர்ஜின் ஸ்டஃப்..” என்று கூறி மயன்கின் நண்பன் பழைய செய்தித்தாள்களால் ஆன பெரிய பொட்டலம் ஒன்றை திறந்து, அதிலுள்ள கஞ்சா இலைகளை மேஜையில் கொட்டி, சுத்தம் செய்து, இலைகளைத் தேர்ந்தெடுத்து நசுக்கி, மெல்லியத்தாளில் அதைப் பரப்பி, சிகரெட்டிலிருக்கும் புகையிலையை எல்லாம் அதில் கலக்காமல் அந்த மெல்லிய தாளை மும்முறை நாவினால் தேய்த்து அதை ஒட்டச்செய்தான்.
மயன்கும் அவனது நண்பனும் ஹிந்தியில் உரையாடத் தொடங்கினர்.
“இங்கேயேவா?” என்று வினவினான் மயன்க்.
“மொட்டைமாடி” என்று கூறி நிறுத்திய நண்பன் மயன்கின் சந்தேகத்தை ஊகித்தவாறு,
“கண்டிப்பாக இசை உண்டு. இசையில்லாமல் கஞ்சா உள்ளே சென்றால் உனக்கு மட்டுமல்ல எங்கள் யாருக்குமே சரி வராது. பக்கத்து மொட்டைமாடி, நான் முன்னரே கூறியது போல் ஆள் நடமாட்டம் அற்ற இடம். மேலும், ஆட்டோ ஓட்டுனர்கள் அவர்கள் குடிப்பதற்கு உபயோகப்படுத்தும் இடமும் மொட்டைமாடிதான். ஆதலால் நம் இசை மொட்டைமாடியில் ஒலித்தாலும் யாரும் கேட்கப் போவதில்லை”
ஜோஷுவாவிற்கு அவர்கள் ஹிந்தியில் பேசிக் கொண்டது ஓரளவுக்குப் புரிந்தது போல் இருந்தது.
“ஓ மை காட். தட்ஸ் வியர்ட்”
“ஹாஹா. விசித்திரம் தான். அவர்களுக்கு ‘காவி’ அரசியலாளர்களிடம் தொடர்பு உண்டு. ‘தாமரை’ தான் அவர்களுக்கு பின்பலம். ஆதலால் அவர்களை விரோதித்துக் கொள்வது கடினம்” மீண்டும் ஹிந்தியில் விளக்கி முடித்தான் மயன்கின் நண்பன்.
“பாரத்மாத்தாக்கி.…” என்று மயன்க் அனைவருக்கும் கேட்கவேண்டுமென்று சற்று உறக்கக் கத்திச் சொன்னான்.
***
“ஜெய்…” என்று கூக்குரலிட்டாள் போதையிலிருந்த ஒரு பெண்.
அனைவரும் சிரிக்கத் தொடங்கினர்.
கீழ் தளத்திற்கும் வந்து பணிப்பெண் சுத்தம் செய்யத் தொடங்கினாள். ஜோஷுவா, “இது போன்ற குப்பைகள் பரவிக் கிடக்கும் உயர் வர்க்கத்து வீடுகளைப் பெருக்கி சுத்தம் செய்து என்ன பயன்?. எப்படியும் நாளை காலை மறுபடியும் வீடு வீசி எறியப்பட்ட பாலீத்தின் பைப்போன்று தான் மாறப் போகிறது” என்றெண்ணினான். வழக்கம் போல் ஜோஷுவா தனித்து விடப்பட்டவனாக உணர்ந்தான். இசை, கஞ்சா, மது எங்கும் நிறைந்திருந்தன. எதனாலோ உந்தப்பட்டவனாகப் பெருக்கிக் கொண்டிருந்த பணிப்பெண்ணுக்கு உதவ முனைந்தான். நாற்காலிகளை நகர்த்தி வைத்தான். கீழே கிடந்தவற்றை மேஜையின் மேலே எடுத்து வைத்தான். மயன்கின் நண்பன் ஜோஷுவாவைப் பார்த்து விட்டு, விளக்க இயலாத பதட்டத்துடன் மயன்கின் காதுகளில்,
“உட்கார சொல் அவனை” என்று ஹிந்தியில் கிசுகிசுத்தான்.
“அவன் அப்படித்தான். விட்டுவிடு. இது போன்ற வேலையாட்கள் மேல் மிகுந்த பரிவு காட்டுவான். இவர்கள் போன்றவர்களுக்கு நிறைய பண உதவி செய்து கொண்டிருக்கிறான். அலுவலகத்தில் இவன் இதற்காகவே நன்கு அறியப்பட்டவன். மேலும், இன்று நிறைய குடித்திருக்கிறான்” என்று பதிலளித்தான் மயன்க்.பணிப்பெண் வேலைகளை முடித்து விட்டு, மயன்கின் நண்பனிடம் கூறிவிட்டு விடைபெற்றாள். ஜோஷுவாவிடம் தனியாக மெல்லிய புன்னகையை உதிர்த்து கைகளைக் கூப்பி வணக்கம் வைத்து வீட்டிலிருந்து வெளியேறினாள். ஜோஷுவா, முகம் மலர்ந்த சிரிப்புடன் அவளுக்கு விடைகொடுத்தான். மொட்டை மாடியை வந்தடைந்தனர். நாற்காலிகளும், தரையில் போடப்பட்டிருந்த மெத்தைகளும் ஆங்காங்கே சிதறிய படி இருந்தன. கஞ்சா ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கை மாற்றப் பட்டுக் கொண்டே இருந்தன.
ஜோஷுவா மனக் கலக்கத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்டான். ஆனால், கஞ்சாவை ஒரு இழுப்பு இழுத்தவுடன் அவன் மனம் முற்றிலும் மாறியது. விர்ஜின் கஞ்சாவை இழுத்துக் கொண்டே இருந்தான். அனைவரும் திகைத்தனர். மயன்க் மிக மெதுவாக ஜோஷுவா அருகே சென்று கஞ்சாவை பிறரிடமும் பகிரச் சொன்னான்.
ப்ளூடூத் ஸ்பீக்கரில் தொடர்ந்து இசை ஒலித்த படியே இருந்தது. சில மணி நேரம் கடந்தது. மயன்க் மற்றும் அருகில் இருந்த அனைவரும் இசையிலும் புகை வெள்ளத்திலும் மூழ்கி தங்களுக்குள் ஆழ்ந்திருந்தனர். லேசாகக் குளிரத் தொடங்கியிருந்தது. காற்று எளிதாக ஊடுருவ வசதியாக இருக்கும் சட்டையையும், தொடை தெரியும் கால் சட்டையையும் அணிந்திருந்த அனைவருமே சிறிது நேரம் கழித்துத் தள்ளாடியபடியே கீழே செல்லத் தொடங்கினர்.
***
“எப்படி இருக்குப் பிரார்த்தனா கூடச் செக்ஸ் லைஃப்?” என்றார் உளவியல் மருத்துவர் குரியன்.
“இருந்தா தான..” சலிப்பில் வெளிவந்தது குரும்புன்னகை.
“ஓடுங்க காலைல எழுந்து, நிறையப் பழம் சாப்புடுங்க, எமோஷனல் பேலன்ஸ் தேவ. பதினோரு மாசம் ஆச்சுன்னு நெனைக்கிறேன், நாம பேச ஆரம்பிச்சு”
“எஸ். இம்ப்ரூவ் ஆகுற மாதிரியும் இருக்கு, ஆகாதா மாதிரியும் இருக்கு. பல நேரங்கள்ல எக்கச் சக்க கோபம் வருது. ஆங்கர் மேனேஜ்மேண்ட் செஷன்க்கு போலாமானு யோசிச்சுட்டு இருக்கேன்”
“தாராளமா போகலாம். பென்சோடையாசேப்பின்ஸ் இன்னும் எடுத்துட்டு தான இருக்கீங்க??”
“எஸ்.”
சில நொடி மௌனத்திற்குப் பிறகு,
“உங்களுக்கு உங்கள பத்தின இமேஜ் ஷேட்டர் ஆயிருக்கு உள்ளுக்குள்ள. அத மாத்த நீங்கஎன்னென்னவோ முயற்சி பண்றீங்க”
“ஆமா. ஏதோ ஒரு பேலன்ஸ் தேவ படுது. நிறையப் பேருக்கு பண உதவி பண்ணிட்டு இருக்கேன், அப்புறம் பிரார்த்தனா ஓட என்.ஜி.ஓக்கு போயி அங்க இருக்குறவங்களுக்குக் கிளாஸ்லாம் எடுக்குறேன்”
“குட். நிறைய ஆக்டிவிட்டீஸ் இருக்கு அப்போ? ஹவ் டு யூ ஃபீல்?”
“ஓ…கே. கிரேட்னு சொல்ல முடியாது. எந்த விஷயத்த பண்ணாலும் ஏதோ ஒரு மனத் தொந்தரவு இருந்துட்டே தான் இருக்கு.”
“சுத்தம். வருஷ கணக்காக் கூட ஆன்க்சைட்டி அட்டாக், டிப்ரெஷன்னு மக்கள் இருக்காங்க. பட் யூ டோன்ட் கெட் பாதர்ட். சரியாயிடும் எல்லாம்.”
“பட் எனக்கு இருக்கறது ரொம்ப வியர்ட் ல?”
“வீ ஆல்வேஸ் திங்க் லைக் தட்.. நம்முடைய உணர்ச்சிகள் எதுவுமே யுனீக் இல்ல. நம்மள நாமே அப்படிக் கற்பனை பண்ணிக்கிறோம். வலிய அனுபவிக்கும் போது கூட யுனீக்கா இருக்கணும்னு நெனைக்கறது மனுஷனோட இயல்பா போச்சு..”
“அப்படி இல்ல.…” என்றிழுத்துக் கொண்டே,
“நான் ரொம்ப அழுறேன். அதுல ஒரு நிம்மதி கிடைக்குது. கிட்டத்தட்ட தினமும், பதினோரு மாசமா.”
“குட். ஆனா, கம்மி ஆகிட்டே வரணும் அதுவும்.”
சிறிது தயக்கத்திற்குப் பின் ஜோஷுவா, “சில நேரங்கள்ல ஸ்யூசைடல் தாட்ஸ் வந்துட்டேஇருக்கு”
“ஸ்டில்?”
“எஸ்”“நட்சத்திரங்கள பயம் இல்லாம, நடுக்கம் இல்லாம பாக்க முடியுதா?”
“ஓரளவுக்கு.”
“குட். போர் அடிக்கணும். பயந்து ஒதுங்குற விஷயங்கள நாம நேருக்கு நேரா பாத்துக்கிட்டே இருந்தா சலிப்பு வந்துடும். யூ ஹேவ் டு ரீச் தட் ஸ்டேட்”“கனவு?”
“அது வரும். இன்னும் சில விஷயங்கள் உங்கள தொந்தரவு பண்ணுது.ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் அதுவும் நின்னுடும். டோன்ட் வொர்ரி. எர்லி மார்னிங் ஆன்க்சைட்டி ஆர் காம்மன் ஃபார் பீப்பிள் வித் டிப்ரெஷன். திடீர்னு பயங்கர எனர்ஜி வரும், திடீர்னு ஒண்ணுமே நடக்காமலேயே ஸ்ட்ரெஸ் ஆகும். யூ ஆர் நாட் அலோன் இன் திஸ்”
***
இப்போது மாடியில் ஜோஷுவா மட்டும் தனித்திருந்தான். கண்கள் சொக்கியபடி இருந்தாலும் அவன் தூக்கத்திற்குச் செல்லவில்லை. உலகமே நின்று நிதானமாகச் சென்று கொண்டிருப்பது போல் இருந்தது. சிரிக்கத் தொடங்கினான். சத்தம் வராதவாறு. எவ்வளவு நேரம் என்றறியாமல் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தான்.
நிலையின்றி அலைந்து ஏதோ ஒரு சூழலில் சிக்கித் தவிப்பது போல் உணர்ந்தான். தலை சுற்றிக் கொண்டே இருப்பது போலத் தோன்றியது. அருகில் பல பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒலித்துக் கொண்டிருந்தன. ஒரு நிமிடம் என்பது ஒரு நிமிடமே அல்ல என்றுணர்ந்தான். “ஐன்ஸ்டைன் சொன்னது சரி தான்” என்று தனக்குள் கூறிக்கொண்டான். கைகளை விரித்தான். குதித்தான். எதைச் செய்தும் அவனுள் அடங்க மறுத்த தவிப்பு மன நிலை அவனைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. “மனுஷன்னா யாரு..? தனக்குள்ள இருக்குற மிருகமா? இல்ல மென்மையான குணங்கள் அப்பப்போ வெளிவர்ற உன்னதமா? நான் யாரு” என்று வாய் விட்டு உளறத் தொடங்கினான். கிட்டத் தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தான். பேச்சுத் துணைக்கும் இப்போது யாருமில்லை.
சற்றுத் தெளிவாகத் தொடங்கியது. அருகிலிருந்த ஸ்பீக்கரை அணைத்தான். பின், அருகே உள்ள மொட்டை மாடியிலிருந்து வரும் ஓசை ஒன்று அவன் கவனத்தைக் கோரியது. என்னவென்று காண, மிகுந்த உழைப்பிற்குப் பின் எழுந்தான்.
நடு மொட்டைமாடியிலிருந்து விளிம்பு வரை செல்வதென்பது பல மணி நேரம் போல் இருந்தது. மேலே நோக்கினான் பல நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைந்தன. நிலவை தேடினான். அவன் கண்ணிற்கு எளிதில் அகப்படவில்லை. நடந்து கொண்டே தலையை இடதும் வலதுமாக ஆட்டிக்கொண்டே இருந்தான். தலையை அப்படி ஆட்டிக்கொண்டே இருப்பது சுகமாக இருப்பதைப் போல் உணர்ந்தான். ஏன் நடந்து கொண்டிருக்கிறோம் என்று அவனுள் கேள்வி எழுந்தது. “ஹாங்… சத்தம். ஏதோ சத்தம் கேட்டது” என்று நீண்ட யோசனைக்குப் பிறகு நினைவுக்குக் கொண்டு வந்தான். சட்டென்று தலையை தூக்கி வானை நோக்கினான். அரை நிலவு மிகப் பிரகாசமாக மேகங்கள் அதன் மேல் கடக்க வானில் ஒட்டப் பட்டது போல் இருந்தது. “யூ ஆர் சோ பியூட்டிஃபுல்” என்று நிலவை பாராட்டினான்.
சட்டென்று ஒரு பெண்குரல் கேட்டதைப் போல் உணர்ந்தான். தலையை நேராக்கிக்கொண்டு மீண்டும் நடக்கத் தொடங்கினான். இம்முறை அவனுடைய நடை துரிதமாக இருந்தது. அக்குரல் வெகுவாக வெளிவரத் துடித்தும் இயலாது தவிப்பது போலிருந்தது. ஒரு வழியாக மொட்டை மாடியின் விளிம்பில் இடுப்பளவுக்கு உள்ள தடுப்புச் சுவருக்கு வந்து சேர்ந்தான். அருகிலிருக்கும் மரங்கள் அசையாதிருப்பது காற்றின் இன்மையை உறுதிப்படுத்தியது. அனைத்தும் ஸ்தம்பித்துப் போன நிலையில் இருக்க அடுத்த வீட்டு மொட்டை மாடியில் சில உருவங்கள் நிழலாடுவதைக் கண்டான். கண்களைத் தொலைவில் தெரியும் அசைந்தாடும் அவ்வுருவங்களில் நிலைக்கச் செய்தான்.
பின், காட்சிகள் தெளிவாகியது. இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களும் அந்தப் பணிப் பெண்ணும். ஆம், வீட்டை கூட்டி சுத்தம் செய்த அதே பணிப்பெண். காக்கி கால் சட்டையையும், இடுப்பை சுற்றிக் கட்டியிருந்த காக்கி சட்டையையும் வைத்து அவர்கள் அட்டோ காரர்கள் தான் என்பதும் விளங்கியது. அப்பெண்ணின் வாயில் எதையோ அடைத்து வைத்திருப்பது போலிருந்தது. ஜோஷுவாவிற்குத் தான் காண்பது உண்மையிலேயே நடந்துக்கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. அவனிடம் போதை இல்லை என்பதை மிகத் தெளிவாக உள்ளுணர்ந்தான்.
ஜோஷுவா செய்வதறியாது வெகு இயல்பாக உட்கார்ந்து கொண்டான். எங்கே அவர்கள் கண்ணில் பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவனை ஆக்கிரமித்துக்கொண்டன. அவர்கள் இருவரும் அப்பெண்ணை வலுக் கட்டாயமாகப் படுக்க வைத்தனர். துணியை வைத்து அடைத்திருந்தது போதாது என்று ஒருவன் அவளுடைய வாயின் மீது அழுந்த பிடித்திருந்தான். அவள், தலையை இடமும் வளமும் வேகமாக ஆட்டுவது மிகத் தெளிவாக தெரிந்தது.
ஜோஷுவா, கைப்பிடி சுவற்றிற்கு மேல் கண்களும் தலையும் மட்டும் தெரியுமாறு பார்த்துக்கொண்டான். அவர்களில் ஒருவன் மிக அவசரமாக தனது கால் சட்டையை அவிழ்க்கத் தொடங்கினான். அவளின் கால்கள் துடித்துக் கொண்டிருந்தன. ஜோஷுவாவிற்கு மனம் வெடித்துக் கொண்டிருந்தது. இதயத் துடிப்பு பன்மடங்காக ஆகத் தொடங்கியது. ஒரு நிமிடம் அசைவற்றுக் கிடந்தான். காட்சிகள் அரங்கேறத் தொடங்கின. காக்கிகளால் போர்த்தப் பட்ட உருவம் அப்பெண்ணின் மீது விரைவாக இயங்கத் தொடங்கின. இதைக் கண்டு கொண்டே இருந்த ஜோஷுவாவின் கண்கள் விரிந்தன.
‘கத்தி பார்க்கலாம். ஆனால், யாரும் நமக்குத் துணை வரப்போவதில்லை. எவருமே சுய நினைவில் இல்லை. அனைவரும் போதையின் கிறக்கத்தில் இருப்பர். நான் தனியாக அகப்பட்டுக் கொண்டால்? ஐயோ, இவர்கள் முரடர்கள். என்னை ஏதாவது செய்துவிட்டால்? அப்பா, அம்மா, பிரார்த்தனா, வேலை, லிவ்-இன்… எல்லாம் மண்ணாகிப் போகும். என் வாழ்வே இனி தான் தொடங்குகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று 10 நொடிக்குள் எண்ணற்ற கேள்விகள். இதையும் கடந்து தன்னைப் பற்றிய பல பிம்பங்கள் அவன் மனதில் வந்து போயின. “நான் ஒரு சோசியல்லி ரெஸ்பான்சிபிள் பெர்சன்னு பேரு வாங்குனவன். ஐ காண்ட் டூ திஸ்.’ என்று ஒரு முரண் குரல் எட்டி பார்த்தது. ஆனால் அதற்குள் மறுமுனையிலிருந்து, “பட் வாட் கேன் ஐ டூ? திஸ் கண்ட்ரி இஸ் ஃபக்ட் அப். நான் என்ன செய்ய முடியும்? இப்படியான அக்கிரமங்கள் நடக்கத் தான் செய்யும். நானா தவறு செய்கிறேன்? நான் சாதாரண மனிதன். ஆம். நான் ஒரு மத்திய வர்கத்துக் காரன். இதோ, குடித்துக் கொண்டும் புகைத்துக் கொண்டும் எவ்விதக் கவலையும் இன்றி அலைந்து திரிந்துக் கொண்டும் இருக்கும் இவ்வீட்டு ஆட்களில் ஒருவன் தன்னந்தனியாக இப்படியான ஒரு காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தால் அமைதியாகத்தான் இருந்திருப்பான். நான் வெறும் பார்வையாளன். என் மீது தவறில்லை. எந்நேரத்திலும் தற்காப்பு முக்கியம். அதை மீறியே அறம் மற்றும் எல்லா மண்ணாங்கட்டியும்’ ஜோஷுவாவின் சிந்தனைகள் பல புள்ளிகளைத் தொட்டுச் சென்றுக்கொண்டிருந்தது. அவனின் அச்சத்தைக் கூட்டி அவனின் செயலாற்றாமைக்குத் தேவையான அனைத்து விளக்கங்களையும் தன் மனதினுள் ஏற்றிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவன் சமாதானம் அடைந்து அக்காட்சியைச் சற்று ரசிக்கவும் தொடங்கி விட்டான். அப்பெண்ணின் மீது முழு உடலெடையுடனும் இயங்கிக் கொண்டிருந்தான் ஆட்டோக்காரன்.
ஜோஷுவாவிற்குத் தன்னிலை மறந்து வேறொரு நிலைக்குச் சென்று கொண்டிருந்தான். தான் அணிந்திருந்த டிராக் பாண்ட்டை கீழிறக்கினான். அணிந்திருந்த உள்ளாடையையும் களைந்தான் ஜோஷுவா. அவனுடைய குறி மொட்டை மாடியின் தரையில் உரசத் தொடங்கியது. ஜோஷுவா கண்ணிமைக்காமல் தொலைவில் நடந்து கொண்டிருந்த காட்சியைக் கண்டு கொண்டே இருந்தான். அந்த ஆட்டோகாரன் அந்தப் பெண்ணின் மீது இயங்குவது போலவே ஜோஷுவா இங்கு இயங்கிக்கொண்டிருந்தான். தன்னை அந்த ஆட்டோகாரனாகவே கற்பனை செய்து கொள்ளத் தொடங்கினான். அவன் பிருட்ட பாகங்களில் சில்லிட்ட காற்று மோதி சென்றது. சுற்றியிருந்த மரங்களும் அசையத் தொடங்கின. ஆனால், அவன் அக்காட்சியிலிருந்து கண்களை விளக்காதவாறு, செயலிலும் தீவிரம் கொண்டிருந்தான். சுற்றம் மறந்த நிலை. எவ்வளவு மணி நேரம் இப்படியாகக் கழிந்தது என்று ஜோஷுவாவிற்குத் தெரியவில்லை. ஆனால், முற்றிலும் ஐக்கியமாகி இருந்தான். திடீரென்று நீண்ட நேரம் அச்செயலில் ஈடுபட்டிருப்பதாக உணர்ந்தான்.
தற்போது வாயை பொத்திக் கொண்டிருந்த இன்னொரு ஆட்டோக்காரன் அதே போன்று செயலில் மூழ்கினான். ஜோஷுவா எவ்வித மாற்றமும் இன்றி மீண்டும் அதே போல் மிக மெதுவாகத் தன் குறியை தரையில் தேய்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று உச்சமடைந்தான். வேகம் அதிகரித்தது. அவன் கண்களும் விரிவடைந்தது. தரையை மிக வேகமாக உராயத் தொடங்கினான். உள்ளிருந்த அனைத்து ஆற்றலும் அவன் தலைக்குச் செல்வது போல் அவனுணர்ந்தான். உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தான். அங்கிருந்த ஆட்டோக்காரர்கள் மறைந்து விட்டனர். அக்காட்சியில் தானே பங்கெடுப்பது போல் உணரத் தொடங்கினான்.
சில நொடிகள் கழித்து ஜோஷுவா பெருமூச்சு வாங்கினான். ஆனால் அவன் கண்களை விளக்கவில்லை. அவன் முழு கவனமும் அக்கட்சியிலேயே இருந்தது. வெகு நேரம் கழித்தே, வெளிவந்த விந்துவினால் அவன் குறி ஈரத்துடன் இருப்பதை உணர்ந்தான். உள்ளாடையையும், டிராக் பாண்ட்டையும் மேலே ஏற்றிக் கொண்டான்.
ஜோஷுவாவிற்குத் தான் செய்தது என்னவென்று இன்னும் சரியாக விளங்கவில்லை என்றாலும் மனம் உறுத்த தொடங்குவதை போல் உணர்ந்தான். ஆட்டோக்காரர்கள் களியாட்டத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்ததால் அவர்கள் அப்பெண்ணின் முகத்தைக் காணவில்லை. முழுமையாகச் செயலிலேயே மூழ்கி இருந்தனர். ஜோஷுவா சட்டென்று ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனித்தான். ஆம். நிஜம் தான். அவளுடைய கண் அவனை நோக்கிக் கொண்டிருந்தது. கூரிய கண். பிறரை பார்வையாலேயே துளைத்து எடுக்கும் கண். கண்களின் ஒளியில் பிறரை எரியச்செய்யும் வீரியம் மிகுந்த கண். ஆனால், அத்தகைய கண் வேண்டுதலின், கெஞ்சுதலின் எல்லைக்குச் செல்வதாக உருமாறத் தொடங்கியது. சற்று உற்று நோக்கினால், கருவிழிகளில் அவன் முழு உருவையும் பிரதிபலிக்கும் மாபெரும் கண். கைகளை நீட்டி ஆதி மானுட தர்மங்களைக் கோரி நிற்கும் கண்.
ஜோஷுவா அப்படியே பக்கவாட்டில் சரிந்து வீழ்ந்தான். வானில் நிறைய நட்சத்திரங்கள். தூரத்தே தெரியும் அரை நிலவு. நீண்ட நேரம் அவைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் கடப்பதை அவன் உணரவே இல்லை. கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் கழித்துப் பெருமுயற்சிக்குப் பின் எழுந்து, களியாட்டம் அரங்கேறிய காட்சியிடத்தைப் பார்த்தான். அங்கு எவரும் இல்லை. மீண்டும் நட்சத்திரங்களையும் அரை நிலவையும் பார்க்கத் தொடங்கினான். அப்படியே ஒரு புள்ளியில் தூங்கிப் போனான்.
***
“ரிவைவ்” என்ற பெயரைத் தாங்கிய பலகையைக் கடந்து ஜோஷுவாவும் பிரார்த்தனாவும் உள்ளே சென்றனர்.
“சரி. நான் என்னுடைய சீனியர் டைரக்டர பாக்கணும். நீ உள்ள போய் ஸ்டார்ட் பண்ணு. நான் மீட்டிங் முடிஞ்ச உடனே உன்ன வந்து பாக்குறேன்” என்று பிரார்த்தனா அவனைக் கட்டி அணைத்து விட்டு விடைப்பெற்றாள்.
ஏற்கனவே அவன் பல முறை வகுப்பெடுத்திருப்பதால் அவனை எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. முகமன் வைத்துவிட்டுத் தன்னுடைய லேப்டாப்பை வெளியே எடுத்து அதன் ஸ்டார்ட் பொத்தானை அழுத்தினான். நிமிர்ந்து பார்த்தப் போது அண்மையில் ஹோமிற்குப் புதிதாக வந்த பெண்ணை கண்டுகொண்டான்.
முழுதாக 1 நிமிடம் ஸதம்பித்து நின்றான். கண்களை அப்பெண்ணிடமிருந்து எடுக்கவே இல்லை. அப்பெண் அவனை பார்த்து சிரிக்க முயன்றாள். அவன் புருவச் சுருக்கங்கள் கலையாமல் சிலைப் போல் இருந்தான். நிலைத்த பார்வை. தான் ஏன் இவ்வாறு உற்றுப் பார்க்கப்படுகிறோம் என்று புதிதாக வந்த பெண்ணிற்கு விளங்கவில்லை. அவ்வகுப்பில் இருந்த அனைவரும் அப்பெண்ணைப் பார்க்கத் தொடங்கினர்.
ஜோஷுவா பைக்குள்ளிருந்த தனது கையை எடுத்தான். கை முழுவதும் வியர்த்திருந்தது. அவன் நெற்றியிலும் வியர்க்கத் தொடங்கியது. உதடுகள் துடிக்கத் தொடங்கின. மனம் படபடத்தது. அது துடிக்கும் ஓசையை அவனால் கேட்க முடியும் என்று அவன் நம்பினான். இப்போது தான், 5 கிலோமீட்டர் ஓடிவந்து நிற்பது போல் வாய் வழியாக மூச்சு வாங்கிக் கொண்டே இருந்தான். அங்கிருந்த அனைவருக்கும் ஏதோ வித்தியாசமான ஒரு காட்சி நடப்பது புரிந்தது. அப்பெண் ஏனென்று தெரியாமல் மெதுவாக எழுந்து நின்றாள். அவளின் புருவமும் சுருங்கத் தொடங்கின. ஜோஷுவா அவளுடைய கண்களை உற்றுப் பார்த்தான். அதிலுள்ள பளிங்கு போன்ற கருக் குமிழ்கள் இவன் நன்கு அறிந்தவை.
நினைவு திரும்பியவனாக ஒரு கட்டத்தில் உணர்ந்தான். அவ்விடத்தை விட்டு உடனே வெளியேற அவனுடல் பரபரத்தது. அவள் மீது வைத்த கண்களை எடுக்காதவாறு பக்கவாட்டில் கால்களை எடுத்து வைத்து நடக்கத் தொடங்கினான். மேசையில் மோதி கணினி கீழே விழுந்தது. அங்கிருந்த அனைவரும் பதற்றத்துடன் ஆச்சரியப்பட்டனர். இவனுக்கு அவையெல்லாம் உள்ளே செல்லவே இல்லை. அப்படியே அறையிலிருந்து விலகிப் போனான்.
தனக்குப் பழக்கப்பட்ட வழி என்பதால் வாகனத்தை எவ்வித பிரக்ஞையுமின்றி ஓட்டினான். வாகனம் அவனை வீட்டில் சேர்த்தது. அவனுடைய படபடப்பு இன்னும் குறையவில்லை. முழுதாக 20 நிமிடங்கள் வீட்டினுள் வேகமாக நடந்தான். ஆனால், அவன் எல்லைகள் கடந்து போவது போல உணர்ந்தான். மொத்த உடலும் தற்போது ஆடிக் கொண்டிருந்தது. நட்சத்திரம், அரை நிலவு, கண்கள். மூன்றும் மாறி மாறி அவன் சிந்தனையில் தட்டுப் பட்டுக் கொண்டே இருந்தன.
சட்டென்று தான் போட்டிருந்த பெல்ட்டை விடுவித்து கொண்டு கால் சட்டையை முழுவதுமாக அவிழ்த்தான். சொங்கி சுருங்கிப் போயிருந்த தன் குறியை ஒரு நிமிடம் பார்த்தான். திடீரென்று ஏதோ தோன்றச் சமையல் அறைக்குள் சென்றான். அங்கிருந்த மிகப் பெரிய ஜப்பானியக் கத்தி ஒன்றை எடுத்தான். இடது கையில் குறியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டான். முகத்தில் எவ்வித வேறுபாடுமின்றி வலது கையில் உள்ள கத்தியை மிக மெதுவாகக் குறியை நோக்கிக் கொண்டு சென்றான்.
பிரசன்னகிருஷ்ணன், பெங்களூரில் வசிக்கிறார். சொந்த ஊர் நாகப்பட்டினம். ஒரு தனியார் நிறுவனத்தில் Data Analyst ஆக வேலை செய்கிறார். அப்பா மற்றும் தாத்தாவின் வழியாக சிறு வயதிலிருந்தே இலக்கிய வாசிப்பில் ஈடுபாடு உண்டு. சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். நாடக நடிப்பிலும் ஈடுபாடு உண்டு.
https://vallinam.com.my/version2/?p=7863
-
தேசியத் தலைவரின் கைக்கு இறுக்கமாக வலுவூட்டிய குடும்பத்தில் பிறந்த கப்டன்அக்கினோ...
போராட்டம். ....
இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று வாழ்ந்த நாம் 'விடுதலை இயக்கம்' என்ற விரிந்த பரப்புக்குள் வந்ததால் , எத்தனை விதமான உள்ளங்களை , சந்தோசங்களை, பிரிவுத்துயரங்களை வாழ்வின்உண்மைகளைக் கண்டுகொண்டிருக்கிறோம்.
எமது போராட்ட வாழ்வில் உன்னதமான உள்ளங்களோடு பழகும்போது சந்தோசப்படும் நாங்கள், பிரிவு என்று வருகின்ற போது அதிகமாகத்தாக்கப்படுவதென்னவோ உண்மைதான். கப்டன் அக்கினோவின் உள்ளம் கூட அந்த உன்னதமான உள்ளங்களில் ஒன்றுதான்.
மிகவும் வசதியான குடும்பம். வாழ்வில் பொருளாதாரக் கஸ்டங்களையோ , துன்பங்களையோ கண்டிராத செல்வந்தமானகுடும் பச்சூழலின் கடைசிப்பிள்ளை தான் அக்கினோ.
"நாங்கள் செல்லமாக வளந்தனாங்கள், போராட்ட கஸ்டங்களை எங்களால் தாங்க ஏலாது" என்று சொல்கின்றவர்களுக்கு அக்கினோ வாழ்ந்து காட்டி இருக்கின்றாள். விடுதலை உணர்வுக்கு முன்னால் வேறெந்தப்புறஉலக உணர்வுகளும் தாக்குப்பிடிக்க முடியாது என நிரூபித்திருக்கின்றாள். ஏனென்றால் ?
அக்கினோவும் ஒரு செல்லப்பிள்ளைதான். பாடசாலை நாட்களில் அக்கினோவைக் கண்டவர்கள், பழகியவர்கள் அக்கினோவைப் பற்றிக்கூறும் தகவல்கள். "இவள் எப்படி இந்த வாழ்வை ஏற்றுக்கொண்டாள்?" என ஆச்சரியப்படவைக்கும்.
அக்கினோவின் எடுப்பான தோற்றம் அவளைப் பற்றியபார்வையில் ஒரு தவறான கணிப்பைக் கொடுத்திருக்கலாம். ஏன்? நாம் கூட. "இவள் எப்படி எல்லாப் போராளிகளோடும் ஏற்றத் தாழ்வின்றிப் பழகப் போகிறாள்?" என நினைத்ததுண்டு. ஆனால் பழகிய போது புரிந்தது. அவள் இதயத்தில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை என்று .
அக்கினோவின் அப்பா தமிழீழத்தின் நேதாஜி மாமனிதர். (நன்றி வேர்கள் இணையம்)தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் எங்கள் தலைவனின் கைக்குஇறுக்கமாகவலுவூட்டியவர்.
உண்மைதான் இப்படி ஒரு தந்தைக்குப் பிறந்த குழந்தைகள் எப்படி எங்கள் மண்ணை நேசிக்காமல் இருக்கமுடியும்? அக்கினோவின் அப்பா மட்டுமல்ல அவளது அக்கா கூட எங்கள் அமைப்பில்தான் இருக்கின்றாள்.அப்பாவின் தலைமறைவு வாழ்க்கைக்காலத்திலும், அப்பாவின்நிரந்தரமறைவின் பின்னான வாழ்க்கைக் காலத்திலும், அந்தத் துன்ப நிகழ்வுகளின் தாக்கம் அம்மாவை அதிகம் தாக்காது இருப்பதற்காக தனது கலகலப்பையே தாயின் கவசமாக்கினாள் அக்கினோ.
இன்று எல்லாத் துயரங்களைமே அம்மா தனியாகச் சுமந்துகொண் டிருக்கிறாள் . அக்கினோ எம்மோடு இருந்த போது ஒருநாள்.
'அப்பாவின்ரை படத்துக்கு இட துபக்கம் என்ரை படமும் வலது பக்கம் அக்காவின்றை படமும் வைக்க இடம் விடுங்கோ அம்மா' என்று தாயிடம் சொன்னதாகச் சொன்னாள்.
எங்களுடைய ஒவ்வொரு போராளிகளும் ஒன்றை ஆழமாக உணர்ந்திருக்கிறார்கள்.என்றோ ஒருநாள் அது இன்றோ.......
நாளையோ .......
அல்லது இன்னும் சில காலங்களில் பின்னோ. இந்த மண்ணிற்கான மரணத்தை நாம் சந்திப்போம் என்ற உண்மை தான் அது. அதனால் தான் என்னவோ , சண்டைக்கு போக வேண்டும் என்று எல்லோரும் சண்டை பிடித்துக்கொள்கிறார்கள்.
அப்படித்தான் அக்கினோவும்.
சண்டை என்றதும் அவள் சந்தோசப்படுகின்ற கணங்களைத் தான் பார்த்திருக்கின்றோம்.
விடுதலைபுலிகள் எல்லோருமே கூறுகின்ற, 'நல்லா அடிபட வேணும். நிறைய அயுதங்கள் எடுக்கவேணும் அதுக்குப்பிறகுதான் சாகவேணும் என்பதைத் தான் அக்கினோவும் சொல்லிக் கொண்டிருப்பாள்.
கட்டுவன்சந்தி இராணுவ மினி முகாம் முன்னால் இவள் காவல்நின்ற காலம்......
இவள் தான் குழுவின் இரண்டாவது பொறுப்பாளர் பலாலி இராணுவத்தினர் அடிக்கடி வெளியேற முற்படும் முக்கிய பாதைகளில் கட்டுவன் சந்தியும் ஒன்று. இந்தமினிமுகாமிற்கு முன்னால் காவல்நிற் கும் எங்கள் குழுவில் அடிக்கடி உறுப்பினர்களை மாற்றவேண்டிவரும். ஏனென்றால் அடிக்கடி தாக்குதல் நடக்கும்போதோ, அல்லது வெளியேறும்போதோ எம்மில் பல போராளிகள் வீழ்ந்திருப்பார்கள். அல்லது காயப்பட் டிருப்பார்கள்.
அக்கினோ வருவதற்கு ஐந்து நாட்கள் முதல்தான் கட்டுவன் நிலையிலிருந்து வெளியேற முற்பட்ட இராணுவத்தினருடன் மோதியதில் சுந்தரியுடன் எட்டுப் போராளிகள் வீரமரணமடைந்தனர். அக்கினோ சென்ற நான்கு நாட்களுக்குள் திரும்பவும் அந்த இடத்தில் இராணுவம் வெளியேறியது. கப்டன் சுந்தரி வீரச்சாவடைந்த தாக்குதலில் ஏற்பட்ட எமது தரப்பு இழப்பு அவளை உற்சாகப்படுத் தியிருந்தது போலும், அனால் அன்றைய சண்டை முடிவோவேறு மாதிரி இருந்தது. அன்று எதிரிகளை பின்வாங்கச் செய்ததில் அக்கினோவின் துப்பாக்கிக்கு அதிகபங்குண்டு.
அக்கினோவுக்கு கணிசமான ஆங்கில அறிவுண்டு. அத்தோடு எந்தத்துறையிலும் விடயங்களை கிரகிக்கும் ஆற்றலுண்டு. தான் பெற்றிருக்கும் அறிவினை சக போராளிக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற துடிப்பு அவளுக்கு நிறையவே இருந்தது. அதனால்தான் பயிற்சி முகாமில் கூட கடும் பயிற்சிகளுக்கு நடுவேயும் அவள் இரவில் அவர்களுக்காக ஒரு மணிநேரம் ஒதுக்கி வைத்திருந் தாள்.
வவுனியாவில் இராணுவம் வெளியே வந்த காலத்தில் காட்டின் ஒரு பக்கத்தில் இவளின் குழுவும் நின்றது. திசைகாட்டியை (கொம்பாஸ்) எவ்வாறு படிக்க வேண்டும், என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். எந்த நேரமும்வந்து விழுந்து வெடித்துக் கொண்டிருக்கும் செல்களுக்கும் நடுவே ஒரு இடத்தைக் குறிவைத்து திசைகாட்டி மூலம் அந்த இடத்துக்குப் போய் வந்து, பின்னர் தனது குழுவினருக்கும் அவ்வாறே காட்டிக் கொடுத்து, போய்வரப் பழக்கினாள்.
காட்டிலே போர் நடக்கும் போது காடுமாற நேரிட்டால் அதுவே போராளிகளின் இழப்புக்கு மிகப் பெரிய காரணமாகிவிடும். போராளிகளின் இழப்பு ஒரு புறமும், இராணுவ முன்னேற்றம் மறுபுறமுமாகப்பாதகமான தாக்கங்களுக்கு, தான்காரணமாயிருக்கக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.வவுனியாவில் இருந்து வந்தவுடன் ஆனையிறவுச்சண்டை ஆரம்பித்துவிட்டது. வெட்ட வெளிகளில் இராணுவத்தினரை இறக்க விடாது காவல் செய்யும்பகுதியில் அவள்கடமையிலீடுபட்டிருந்தாள்.
அடுத்தடுத்துச் சண்டைகள். ஓய்வெடுக்க எமது போராளிக ளுக்கு நேரமில்லை . குண்டுச்சத்தங்களுக்கும் குருதிவெள்ளத்துக்கும் நடுவே எங்கே நாங்கள் ஓய்வைத் தேடுவது?
எப்படி ஓய் வெடுப்பது?
முப்படைத் தாக்குதலுக்கும் முகம் கொடுத்தபடி முன்னேற வேண்டியவர்களாயிற்றே நாங்கள். களைப்பும் அலுப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவையே எங்களைக் கட்டுப்படுத்திவிட முடியுமா?
நித்திரை என்பது எங்களை விட்டு நிரந்தரமாகவே வெளியேறிவிட்டால் என்ன வென்று எண்ணுபவர்கள் நாங்கள். கண்ணுக்குள் நித்திரைசுழன்று
கொண்டிருக்கும். அரைக் கண்ணில் ஆடி ஆடித் தான் நடந்தாலும் கண் மூடிவிடமுடியுமா? கண்முடக் கண் மூட எம் தேசம் காணாமல் போய் விடுமல்லவா?
அதனால் தான்.....
ஓய்வு இல்லாத தேசத்தின் எந்த எல்லையில் சண்டை நடந்தாலும் அங்கு எட்டி நடந்து கொண்டிருக்கின்றோம்.
ஆனையிறவுச்சண்டையின் வேகம் குறைய மணலாற்றில் சண்டை ஆரம்பித்துவிட்டது. அக்கினோவின் குழுவும் மணலாற்றிற்கு விரைகிறது. மணலாறு எங்கள் தேசத்தின் மையப்புள்ளி. மணலாற்றுக்காடு தான் எங்கள் தாய்வீடு. பிராந்துகளிடமிருந்து செட்டைக்குள்ளாய் எமை வளர்த்த தாய்க் கோழி. பிராந்திய வல்லரசு ஒன்றை எமது பிரதேசத்திலிருந்து பின்வாங்கச் செய்யுமளவிற்கு அவர்களுக்கு இழப்பைஏற்படுத்திய இடம். அங்குலம் அங்குலமாக அந்நிய இராணுவம் கால் பதித்து தேடியபோதும் தமிழீழத் தின் தலைவரை தக்க வைத்துக் காத்த பெருமை மணலாற்றிற்கு மட்டும் தான் உண்டு. குண்டு களைத்தாங்கித் தாங்கியே மணலாற்றுக்காடு வலிமை பெற்றுவிட்டது. உரிமைப்போர் அல்லவா.
உக்கிரமான சண்டைதான். காடு பற்றி எரிகின்றது. எங்கும் ஒரே புகை மண்டலம் தான். மண லாறு மண் அதிர்ந்து கொண்டே இருக்கின்றது. முதல் நாள் சண்டையின் போது அக்கினோ நின்ற பக்கமாக இராணுவம் முன்னேறியது. அங்குல நிலம் கூட எதிரியை அசையவிடாத சண்டை. அக்கினோவின் குழுவில் இரண்டு போராளிகள் விழுந்து விட்டார்கள். ஒரு உடல் கைப்பற்றக் கூடியதாக இருந்தது. ஆனால் அடுத்த து......
எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் ......
அவர்களுக்கு மிக நெருக்கமாக.....
வீழ்ந்த போராளிகளின் உடல்களை மீட்பதற்காகவே புதிய போராளிகள் விழுகின்றவரலாறுதானே எம்வரலாறு. போர்நிலமை உடனுக்குடன் பொறுப்பாளருக்கு அறிவிக்கப்படவேண் டும். அக்கினோ அறிவிக்கின்றாள்."உடலை எடுப்பது கஸ்டம் தான் அக்கா. ஆனால் எப்படியும் நான் எடுப்பேன்"தலைநிமிர்த்த முடியாதளவுக்கு தரையோடு தரையாக வரும் துப்பாக்கி சூடுகளுக்கு அடியில் ஊர்ந்து முன்னேறினாள். எப்படியோ உடலை எடுத்துவிடுகிறாள். அந்த இடத்தில் அனைவருக்கும் ஒரு உறுதி பிறக்கிறது. கடைசிவரைக்கும் இச்சண்டை யில் எந்த உடலும் எம்மால் கைவிடப்படக் கூடாது என்பதில் எல்லோரும் முனைப்பாக இருந்தோம்.
ஒத்துழைக்க மறுத்தகாட்டுச் சூழலாலும், நித்திரையோ குளிப்போ இல்லாத கடமையின் இறுக்கத்தாலும் அநேகமான போராளிகளுக்கு காய்ச்சல் வந்துவிடுகின்றது. அக்கினோவுக் கும்காய்ச்சல் தான்.காய்ச்சலுடன்தான் மணலாற்றுப்பகுதியில் மகளிர் பிரிவுக்கான மருந்து, உணவு, ரவை விநியோகங்களைப் பொறுப்பெடுத்துச் செய்து கொண்டிருந்தாள்.
இராணுவத்தினர் ஒரு பக்கமாக முன்னேற முயற்சிக்க, அக்கினோ அந்த இடத்துக்கு விரைந்து, போராளிகளுக்கு நிலைமையை விளங்கிக் கொண் டிருக்கும்போது, அவளது அடுத்த குழு நின்ற பக்கமாக விமானம் பதிந்து எழுந்தது. நிலைமையை நேரில் பார்ப்பதற்காகஅக்கினோ அந்த இடத்திற்கு ஓடினாள்.
உருக்கும்போது விளங்கிகளுக்குஇன்னொரு தடவை அந்த விமானம் பதிந்து எழுந்தது.
அக்கினோவின் தசைத்துணுக்குகளும், குருதித்துளிகளும் மணலாற்று மரங்களில் தெறித்தன. அக்கினோபோன்ற நூற்றுக்கணக்கானோரின் இறுதிக் கணங்களை அறிந்து கொண்ட அந்த மணலாற்றுக்காடு இன்று மீட்கப்பட்டுவிட்டது. இந்தியப் போரின் பின் இது இரண்டாவது சண்டை, முன்னையை விட இப்போது உறுதியாய் நிற்கும். மணலாற்றுக் காடு இனி வரும் காலங்களில் இன்னும் உறுதியாய் எழுந்து நிற்கும். ஏனென்றால் அதற்குத் தெரியும் தன்னுள் உறங்கும் எங்கள் நண்பர்களைப்பற்றி.
|வெளியீடு -களத்தில்
|நன்றி வேர்கள் இணையம்
https://www.thaarakam.com/news/827bdd36-a986-4d5c-bd67-558c0c87063b
-
தமிழீழ தேசியத் தலைவரை அதிகம் நேசித்த புலமைப்பித்தன் ஐயா காலமானார்
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தவரும் தமிழீழ தேசியத்தலைவரைஅதிகம் நேசித்தவரும் அ.தி.மு.க. மேனாள் அவைத்தலைவராகவும் இருந்த , பாடலாசிரியர் புலமைப்பித்தன் ஐயா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (08.09.2021) காலை 9.33 மணிக்கு உயிரிழந்தார்
https://www.thaarakam.com/news/5fc1ecda-e350-4790-9ab5-3a417efff201
தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன்
தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும்
அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன்
புலவர் புலமைப்பித்தன் மறைவிற்கு
தமிழ்க்கலை இலக்கியப் பேரவை தலைவர்
கவிஞர் கவிபாஸ்கர் புகழ்வணக்கம்!
புலவர் புலமைப்பித்தன் (வயது 86) மறைந்தார் (08.09.2021) என்ற செய்தி பேரதிர்ச்சியாய் இருக்கிறது.
இராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் மரபுப் பாக்களில் தனக்கென ஓர் உத்தியை கையாண்டு தமிழ்க் கவிதை வரலாற்றில் மிக உயரத்தில் நின்றவர்! என்போன்றோர்க்கு வழிகாட்டியவர்.
தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர்களில் புலமைப்பித்தனைப் போல் மெட்டுக்கு நேர்த்தியாகவும் சரியாகவும் யாரும் இதுவரை எழுதியதில்லை. மெட்டுக்குள் சொல் அடுக்குகளை கச்சிதமாக புகுத்தியவர் புலமைப்பித்தன் மட்டும்தான் என்றால் அது மிகையில்லை. காரணம், அவர் தமிழ் இலக்கண மரபில் தன்னை ஆழமாக ஆட்படுத்தி கொண்டவர்.
தமிழ் இனத்தை, தமிழ்மொழியை சமூக நீதியை, தமிழர் வாழ்வியலை திரைப்பாட்டுக்குள் தொடர்ந்து பதிவுசெய்தவர். இலக்கியத்தோடு நின்றுவிடாமல் இனத்திற்காகவும் தமது இறுதிகாலம் வரை பாடாற்றிய பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன்!
சங்க இலக்கியத்திற்குள் புதைந்து கிடக்கும் அரிய சொற்களை திரைப்பாடலுக்குள் கைபிடித்து அழைத்து வந்ததில் புலமைப்பித்தனுக்கு பெரும்பங்குண்டு. எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய வடிவேல் வரை அவர் எழுதிய பாடல்கள் இலக்கியச்சுவை மிக்கவை!
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலம் முதல் தொடர்ந்து தமது ஆதரவு நிலைபாட்டில் உறுதியாய் நின்றவர். தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் சென்னையில் தங்கியிருந்த காலங்களில், அவரோடு நெருக்கமாக இருந்தவர் புலவர். அவரது இல்லத்தில் அவரை தங்கவைத்து தமது மகனை போல் கொண்டாடியவர் புலவர். பாடலாசிரியன் என்ற இடத்திலிருந்து தமிழ் இனப்போராட்டத்தின் தேவையை உணர்ந்து தமிழீழ விடுதலை உணர்வாளராக இருந்தவர் புலவர். அதுமட்டுமல்ல எம்.ஜி.ஆர். ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்கக் காரணமானவரும் புலமைப்பித்தன் அவர்கள்தான்.
புலவர் புலமைப்பித்தனின் மகள் கண்ணகி மரணமடைந்து போது இடுகாடுவரை வந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர் தலைவர் பிரபாகரன் அந்த அளவிற்கு புலவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார் பிரபாகரன்.
தமிழினப்பற்றோடு தமது படைப்பிலக்கியத்தை படைத்து, தமிழ் – தமிழர் – தமிழீழம் என இறுதிவரை உறுதியாய் நின்ற புலமைப்பித்தனின் திரைப் பாட்டிலக்கியம் – மற்றும் அவரது தமிழின அரசியல் பங்களிப்பு தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒளிகாட்டும் வழித்தடங்கள்!
தமிழுக்கு தொண்டு செய்தோன் சாவதில்லை! புலவர் புலமைப்பித்தன் தமிழின அரசியல் வழியாகவும், தமிழ்த்திரைப்பாட்டு இலக்கியத்தின் ஊடாகவும் நம்மோடு வாழ்கிறார்!
புலவர் புலமைப்பித்தனின் மறைவுக்கு தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் எமது ஆழ்ந்த புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!
https://www.thaarakam.com/news/b2cdf946-fba8-496d-b405-34e68b186da3
-
மன்னார் எரிவாயு வளத்தால் நாட்டின் கடனைப் போன்று மூன்று மடங்கு வருமானம்!
மன்னார் எரிவாயு வளத்தால் நாட்டின் கடனைப்போன்று மூன்று மடங்கு வருமானம்!
மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 பில்லியன் டொலர் அரசுக்கு கிடைக்கும் எனவும், அது நாட்டின் மொத்த கடன் தொகையான 47 பில்லியன் டொலரை விட மூன்று மடங்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ள கனியவளங்கள் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதுடன் குறித்த சட்ட மூலத்துக்கு இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதியும் வழங்கப்பட்டது.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்மன்னார் கடற்பரப்பிலுள்ள எரிவாயுவினால் மாத்திரம் நுரைச்சோலை மின்சக்தி நிலையத்தை 120 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும். அங்கு காணப்படும் எண்ணெயின் மூலம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 143 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும்.
எமது அண்டை நாடான இந்தியா 1940ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு அண்மித்த கடலிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபட்டதுடன், பல்வேறு விடயங்கள் காரணமாக இலங்கையால் அதனை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது. இது தொடர்பில் நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலை அடுத்து இதற்கான பல கரணங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.கடந்த காலங்களில் இலங்கையில் எண்ணெய் ஆய்வுக்காக உலகிலுள்ள பல நிறுவனங்கள் முன்வரவில்லை. இதற்கு முன்னர் இது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் போது, இந்தத் துறையில் அதிகாரிகளுக்கு காணப்பட்ட நிபுணத்துவம் குறைவு என்பதால், கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபிப்பதன் மூலம் நிபுணர்களுக்கு இந்த பணியை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம்.
அதேபோன்று, கடந்த காலங்களில் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது உள்ளிட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அமைச்சரை மையப்படுத்தி காணப்பட்டதால் அமைச்சர்கள் மாறும் போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை ஏற்பட்டது. இதனால் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அதிகாரங்களையும் இந்த அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்தோம்.அதேபோன்று, பழைமையான வரைபடங்களுக்கு பதிலாக எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுக்கு நவீன வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பல பில்லியன் டொலர் இதற்கு முதலிட வேண்டும் எனவும் இந்தப் பெரிய முதலீடுகளை பாதுகாக்க தேவையான பலம் வாய்ந்த நிதிக் கட்டமைபை அறிமுகப்படுத்துவதும், அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் விசேடகுழுவொன்று நியமிக்கப்படுவதும் இந்த சட்டமூலத்தின் ஊடாக இடம்பெறுகின்றது.
பொதுவாக உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வின் போது ஒரு நாட்டில் ஏழு கிணறுகள் அகழ்வு செய்யும்போது ஒன்றுதான் வெற்றியடைகின்றது.நோர்வே நாட்டில் 31 அகழ்வுகளின் பின்னர்தான் முதலாவது வெற்றி கிட்டியது. ஆனால் இலங்கையில் 4 கிணறுகள் அகழ்வுசெய்யப்பட்ட போதிலும் அதில் 3 வெற்றியடைந்துள்ளன என்றார்.
https://newuthayan.com/மன்னார்-எரிவாயு-வளத்தா/
-
கோத்தாபய ஐ.நா. பொதுச்சபையில் முதல் தடவையாக உரை!
லண்டன், அமெரிக்காவுக்கு பயணமாகிறார் கோத்தாபய
ஐ.நா. பொதுச்சபையில் முதல் தடவையாக உரை!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இம்மாதம் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஜனாதிபதி முதலில் இங்கிலாந்து செல்லவுள்ளதுடன், லண்டனில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.லண்டன் உச்சி மாநாட்டுக்குப் பின்னர் நேரடியாக அமெரிக்கா செல்லவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் வொஷிங்டனில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதன்படி, ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஐ.நா.பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கலந்துகொள்ளும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும்.
-
ஜெனீவா அறிக்கை அரசாங்கத்துக்கே சாதகமாகும்- பிரபல ஊடகவியலாளர் தகவல்
‘தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கைக்கு உரிய பதிலை விரைந்து தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் பச்சலேற் அம்மையார் தழுவியிருக்கும் மென்போக்கை மாற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் முன்னைநாள் ஊடகவியலாளரான அந்தப் பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் கருத்து வெளியிட்டுள்ளார்- மறைந்த மங்கள சமரவீரவின் அணுகுமுறையைக் கையாண்ட பீரிஸ்’.
அ.நிக்ஸன்
பேராசிரியர் ஜீ. எல். பீரிஸை அமைச்சராகக் கொண்டியங்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிநாட்டமைச்சு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கடந்த 27ம் திகதி தான் சமர்ப்பித்த மனித உரிமை மற்றும் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பான புள்ளிவிபரங்கள் உள்ளடங்கிய அறிக்கையிடலின் பதின்மூன்று பக்கச் சுருக்கத்தை கொழும்பில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு 31ம் திகதி அனுப்பிவைத்திருக்கிறது.
உள்நாட்டுப் பொறிமுறைகள் மிகவும் சீராக இயங்குவதான தோற்றப்பாட்டைக் கொடுக்கும் வகையில் 14 தலைப்புகளில் 25 புள்ளிகளில் கனகச்சிதமாக அவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் இதைப் பார்த்து வியந்து போயிருப்பதாகப் பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் தகவலறிந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையிடல் மூலம் கடந்த காலத்தில் நல்லாட்சி என்ற பெயரில் இயங்கிய மைத்திரி- ரணில் அரசாங்கம் எந்தவகையில் ஐ.நா. பொறிமுறைகளுடன் ஒத்து இயங்கியதோ அதே அளவிலே தாமும் இயங்கப்போவதான ஒரு செய்தியை சர்வதேச சமூகத்திற்கு நுட்பமாக பீரிஸ் வெளியிட்டிருப்பதாக ஜெனீவா மனித உரிமை வட்டாரங்கள் கருத ஆரம்பித்துள்ளன.
இதனால் எதிர்வரும் 13ம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வாய்மூல அறிக்கையிடலை மேற்கொள்ளவிருக்கும் மிச்சல் பச்சலேற் அம்மையார் தனது கடும் தொனியை மிகவும் குறைத்த ஒரு நிலையிலேயே கருத்து வெளியிட இருப்பதாகவும் குறித்த வெளிநாட்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர் தனது பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்ற வேண்டுகோளுடன் கொழும்பில் இருக்கும் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
கொரோணாப் பேரிடரின் மத்தியிலும் மனித உரிமை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் உள்நாட்டுப் பொறிமுறைகள் ஊடாகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாகப் பாவலா காட்டும் விதத்தில் புள்ளிவிபரங்கள், பணத் தொகை மற்றும் நில அளவுகளை கொழும்பின் வெளிநாட்டமைச்சு புள்ளிவிபரங்கள் மற்றும் எண்கள் ஊடாக முன்வைத்திருக்கிறது.
அதேவேளை, கொழும்பில் நிலைபெற்றிருக்கின்ற அனைத்து இராஜதந்திர பணிமனைகளுடனும் தமது ”உயர் உத்தரவாதத்தைப் புதுப்பித்துக்” கொள்வதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அறிமுகக் கடிதம் தெரிவித்துள்ளது.
தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கைக்கு உரிய பதிலை விரைந்து தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் பச்சலேற் அம்மையார் தழுவியிருக்கும் மென்போக்கை மாற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் முன்னைநாள் ஊடகவியலாளரான அந்தப் பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மறைந்த மங்கள சமரவீர தனது ”நல்லாட்சிக்” காலத்தில் சர்வதேசப் பொறிமுறைகளுடன் இணைந்து இயங்குவதாக வாக்குறுதி வழங்கிவிட்டு, நடைமுறையில், உள்ளகப் பொறிமுறையை மட்டுமே செயற்படுத்தும் உத்தியைக் கையாண்டிருந்தார்.
ஆனால், பீரிஸ் உள்ளகப் பொறிமுறை ஊடாக வெளியகப் பொறிமுறைக்கு ஒப்பாகச் செயற்பட முடியும் என்று நிறுவ முற்படுவது போலவும், சர்வதேச அழுத்தங்களைத் தாம் உணருவது போலவும் தனது அறிக்கையிடலை வடிவமைத்திருக்கிறார்.
நடைமுறையில் இரண்டும் ஒரே அணுகுமுறையின் தொடர்ச்சியாகவே தெரிகிறது என்று குறித்த அறிக்கையை முழுவதுமாக வாசித்த ஒரு தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கூர்மைக்குக் கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார்.
மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான செயற்பாடுகள் என்ற தலைப்பில் ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வு இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் இருந்து மேற்கொள்ள முடியாதென்ற வாதம் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மூன்று வழிகளில் தனது ஒற்றையாட்சியை கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இந்த அறிக்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நியாயப்படுத்தியிருக்கிறது.
2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில அரசாங்கம் கையாண்ட அதே உத்தியைக் கையெலடுத்துக் குறிப்பாக அந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மங்கள சமரவீர கையாண்ட அணுகுமுறைகளில் இருந்து சற்றும் விலகாமல் அந்த மூன்று வழிகளை அரசாங்கம் பயன்படுத்தியிருக்கிறது.
ஒன்று- இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மூலமாக விசாரணைச் செயற்பாடுகளும் அதன் மூலமான நீதிமன்ற விசரணைகளையும் அரசாங்கம் நியாயப்படுத்தி உறுதிப்படுத்துகின்றது.
இரண்டாவது- தமிழ்க் கட்சிகள், தமிழ் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடனான செயற்பாடுகள். குறிப்பாகக் காணிகளைக் கையளித்தல் என்பது தமிழ் அதிகாரிகளின் செயற்பாடகக் காண்பிக்கப்பட்டுள்ளதோடு தமிழ்க் கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன என்பதாகும்.
அதாவது 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் அரசாங்கத்தின் எந்தவொரு செயற்பாட்டுக்கும் தமிழ்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றன என்பதன் மூலமாக இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைத் தமிழர்கள் ஏற்றுள்ளனர் என்ற செய்தி வெளியிடப்படுகின்றது.
மூன்றாவது- எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக இலங்கை ஒத்துழைத்துச் செயற்படுகின்றது என்ற சர்வதேசத்துக்கான நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஆகவே இந்த மூன்று வழிமுறைகளையும் ராஜபக்ச அரசாங்கம் வெளிப்படுத்தியதன் மூலம் வடக்குக் கிழக்கு மற்றும் தமிழ் மக்கள் என்ற சொல்லாடல்கள் அவதானமாகத் தவிர்க்கப்பட்டிக்கின்றன. ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமைப் பிரச்சினையாகவும் அதற்கான தீர்வு என்ற கோணத்திலும் நடந்தது போர் அல்ல, அது மக்களை மீட்கும் பணி என்றே எண்ணத் தோன்றும் வகையிலும் அந்த அறிக்கையின் சொல்லாடல்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
http://www.samakalam.com/ஜெனீவா-அறிக்கை-அரசாங்கத்/ -
பூகோள அரசியல்- புலிகளுக்கு வேறு வியாக்கியாணம் தலிபான்களுக்குச் சர்வதேச நீதி
—ரஷியாவோடு இராணுவ ஒத்துழைப்புக்கான கலந்துரையாடலை இலங்கை மொஸ்கோவில் நடத்தியிருந்தது. இந்த உரையாடல் சீனாவுக்கான ஒத்துழைப்பாக இருக்கலாம் என்பதைவிட, அமெரிக்காவை மேலும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான கொழும்பின் உத்திகளில் ஒன்றாகவே கருதலாம்—
-அ.நிக்ஸன்-
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்கலாம் என்று கருதப்படும் இந்திய இராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் சேஷர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் (Sher Mohammad Abbas Stanikzai) கட்டார் தலைநகர் டோகாவில் இருந்து தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தியா, பாகிஸ்தான் தொடர்பாக விபரிக்கிறார்.
பாகிஸ்தானுடன் கூடுதல் உறவைப் பேணித் தலிபான்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று இந்திய ஊடகங்கள் விமர்சித்து வரும் நிலையில், எந்தவொரு நாட்டோடும் தலிபான்கள் நெருக்கமான உறவைப் பேணமாட்டார்களென சேஷர் முகமது அப்பாஸ் உறுதியளித்திருக்கிறார்.
அமெரிக்காவை மையமாகக் கொண்ட நேட்டோ நாடுகளுடனும் தலிபான்கள் உறவைப் பேணுவார்களென்றும் அவர் கூறுகின்றார். அதேநேரம் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் மோதலுக்காக ஆப்கானிஸ்தானை பயன்படுத்தக்கூடாதென்றும் சேஷர் முகமது அப்பாஸ் வித்தியாசமான கருத்தொன்றைக் கூறுகிறார்.
சீனாவோடு உறவைப் பேணிக்கொண்டு இந்தியாவுக்குத் தலிபான்கள் தொந்தரவு கொடுக்கலாமெனவும் அல்லது அமெரிக்காவுக்கு விசுவாசமாகச் செயற்பட்டு சீனா, ரஷியா ஆகிய நாடுகளுக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடிய முறையில் தலிபான்கள் பன்படுத்தப்படலாமெனவும் இந்திய மற்றும் மேற்கத்தைய ஊடகங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், எந்தவொரு நாடுகளோடும் உறவைப் பேணமாட்டோமென சேஷர் முகமது அப்பாஸ் கூறியிருக்கின்றமை தலிபான்கள் தொடர்பான கேவிகளை முன்வைக்கின்றன.
புதிய அரசாங்கம் அறிவிக்கப்படும் போது, அமெரிக்கா உட்பட பிராந்தியத்துடன் தொடர்புடைய அனைத்து நாடுகளும் தங்களை ஆதரிப்பார்கள் என நம்புவதாகவும் ஷேர் முகமது அப்பாஸ் நம்புகிறார். இந்திய அரசின் உதவித் திட்டங்கள். முதலீடுகளை தலிபான்கள் வரவேற்பார்கள் எனவும் படை விலகலினால், பாதியில் விட்டுச் சென்ற அபிவிருத்தித் திட்டங்களைச் செய்து முடிக்குமாறும் சேஷர் முகமது அப்பாஸ் டில்லிக்கு அழைப்பும் விடுத்திருக்கிறார்.
இந்த நேர்காணலின் பின்னரே தலீபான் சேஷர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாயை கட்டார் நாட்டுக்கான இந்திய தூதர் தீபக் மிட்ட டோகாவில் சந்தித்துப் பேசியிருக்கிறார்போலும். சந்திப்புக் குறித்து டோகாவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்கள் எந்த வகையிலும் நடைபெறக் கூடாதென இந்திய தூதுவர் சேஷர் முகமது அப்பாஸிடம் கேட்டிருக்கிறார் .
ஆனால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்-இ-முகமது (JeM) தலைவர் மசூத் அசார் சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைவர்களைச் சந்தித்து ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்களை ஊக்குவிப்பதில் அவர்களது ஆதரவை கோரியுள்ளதாக சீநியூஸ் இந்தியா என்ற செய்தித் தளம் கூறுகின்றது. தலிபான்கள் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தை இந்திய அமைச்சர்கள் பலரும் வெளியிட்டுள்ள நிலையில் இந்தச் சந்தேகங்கத்தை வியாழக்கிழமை குறித்த செய்தித்தளம் வெளியிட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பக்ராம் விமானப்படைத் தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாகவும் சில பிரதேசங்களைச் சீனா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக வலிமைபெற முயற்சிப்பதாகவும் முன்னாள் அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி எச்சரிக்கையும் விடுத்துள்ளமையும் அந்தச் சந்தேகங்களுக் காரணமாக இருக்கலாம்.
ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் நிக்கி ஹேலி, புதன்கிழமை பாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இத் தகவலைக் கூறியிருக்கிறார். பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியை சர்வதேச மட்டத்தில் மேற்கொள்வதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் தற்போது தலிபான்கள் பெற்றுள்ள தார்மீக வெற்றியால் சர்வதேசரீதியில் ஜிகாதிகளின் பெரிய ஆட்சேர்ப்பு பிரச்சாரம் நடைபெறக்கூடிய வாய்புண்டு. இதைச் சமாளிக்க தயாராக இருப்பதுடன் பாதுகாப்பாக இருப்பதையும் அமெரிக்கா உறுதி செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
குறிப்பாக அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும். ஏனென்றால் ரஷியா போன்ற நாடுகள் தொடர்ந்து அமெரிக்க இணைப்புகளை ஹேக் செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர். ஆகவே சீனாவை நன்கு அவதானிக்க வேண்டும் ஏனெனில் பக்ராம் விமானப்படைத் தளத்தை தன் வசப்படுத்துவதில் சீனா கடும் பிரதயத்தனம் செய்வதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஆகவே இந்தியா உள்ளிட்ட தனது கூட்டாளி நாடுகளை அமெரிக்கா பலப்படுத்த வேண்டுமெனவும் நிக்கி ஹேலி வலியுறுத்தியிருக்கிறார்.
மறுபுறத்தில் படை வலிகளுக்குப் பின்னரான அமெரிக்காவின் மூலோபாயச் செயற்பாட்டில் சீனா கவனம் செலுத்த வேண்டுமென குளோபல் ரைமஸ் செய்தித் தளம் சென்ற புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. மூலோபாய மற்றும் புவிசார் அரசியல் விளையாட்டை நடத்த அமெரிக்காவுக்குச் சீனா இடமளிக்கக் கூடாதெனவும் அந்த செய்தித்தளம் கூறுகின்றது.
சீனாவுக்கு எதிராகத் தலிபான்களை பயன்படுத்த முயற்சிக்கும் அமெரிக்கா அதில் தோல்வியடையும் என்ற தொனியில் அந்த செய்தித் தளம் நம்பிக்கையும் வெளியிட்டிருக்கிறது.
இந்த நிலையில் தலிபான்களுடன் உறவை மேற்படுத்த வேண்டிய அவசியமிருப்பதாக பிரித்தானிய வெளியுறவுத்துறைச் செயலாளர் டொமினிக் ராப் கூறியுள்ளார். கட்டார் வெளியுறவு அமைச்சர் கே முகமது பின் அப்துல் ரகுமான் அல் தனியை டோகாவில் சென்ற வியாழக்கிழமை சந்தித்த பின்னர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தலிபான்கள் அமைக்கவுள்ள புதிய அரசாங்கத்தை பிரித்தானியா ஏற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக விபரிக்கிறார்.
ஆகவே ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படை விலகிய பின்னரான சூழலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சந்தேகங்கள் வல்லாதிக்க நாடுகள் மத்தியில் வலுத்திருக்கின்றன. இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவின் கவனத்தைத் திசை திருப்பவே ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் விலக்கப்பட்டன என்பது கண்கூடு. இதனையே அமெரிக்க. பிரித்தானிய அரசுகள் தலிபான்களுடன் ஏற்படுத்தி வரும் தொடர்புகளும் காண்பிக்கின்றன.
இந்த நகர்வுகள் சீனாவுக்கும் நன்கு தெரிந்த ஒன்று. ஆனாலும் அமெரிக்காவின் அரசியல் நகர்வுகளை முந்திக் கொண்டு தலிபான்களைத் தமது கட்டுப்பாட்டில் அல்லது குறைந்த பட்சம் தம்மோடு இசைந்து வரக்கூடிய நகர்வுகளை சீனா மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதால், இந்தியாவுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனாலேயே சேஷர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாயை கட்டாரில் உள்ள இந்தியத் தூதுவர் சந்தித்துப் பேசியிருக்கிறர் என்பதும் வெளிப்படை. எந்தவொரு நாடுகளின் பக்கமும் தலிபான்கள் நிற்கமாட்டார்களென சேஷர் முகமது அப்பாஸை இந்தியா சொல்லவைத்தா என்ற கேள்விகளும் உண்டு.
தூரநோக்குப் புவிசார் அரசியல் பார்வையோடு அமெரிக்கா செயற்பட்டாலும், இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவுடனான எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட அரசியல் பகைமை என்பது மிகவும் கிட்டிய தூரத்தில் இருக்கும் விவகாரமாகும். அதிகரித்து வரும் பாகிஸ்தான் சீன உறவும் புதுடில்லிக்கு ஒவ்வாமைதான்.
இதனால் ஆப்கானிஸ்தான் படை விலகலுக்குப் பின்னரான சூழலில் சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் புவிசார் அரசியல் நகர்வுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், சீனா மேற்கொள்ளும் நகர்வுகளைப் போன்று முன் ஏற்பாடுகளைத் தானும் செய்ய வேண்டுமென இந்தியா கருதியிருக்கலாம்.
ஆகவே கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதைபோன்றுதான் இந்தியாவின் தற்போதைய நிலையெனலாம். அமெரிக்காவோடு அளவுக்கு அதிகமான உறவை வளர்த்துக் கொண்டதனால் உருவான வலியாகவும் இதனை அவதானிக்கலாம்.
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைத் தனித்து நின்று எதிர்க்கத் திராணியற்ற நிலையில், ஆமெரிக்காவை புதுடில்லி அனைத்துக் கொண்டது. இதனைப் பயன்படுத்தி அமெரிக்காவும் 20015 ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்த நான்கு வருடங்களில் இந்தியாவுடன் மூன்று ஒப்பந்தங்களைச் செய்துமுள்ளது.
இதனால் அமெரிக்காவிடம் இருந்து விலக முடியாத சூழலில், ஆப்கானிஸ்தான் படை விலகலுக்குப் பின்னர், சீனாவுக்கு எதிரான சில தனிப்பட்ட முடிவுகளை இந்தியா மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பின்னால் நின்று ஆப்கானிஸதானில் தலிபான்களை சீனா. ரஷியா ஆகிய நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் விவகாரரத்தில் ஈடுபட்டாலும், தலிபான்களினால் இந்தியாவுக்கு ஆபத்து உண்டு என்ற முன்னெச்சரிக்கை புதுடில்லிக்கு உண்டு. ஆனால் இந்தியாவுக்கு வரவுள்ள ஆபத்தை எந்தளவு தூரத்துக்கு அமெரிக்கா தடுக்கும் அல்லது தடுக்க உதவிபுரியும் என்ற கேள்விகளும் உண்டு.
சிறிய நாடான இலங்கையிலும் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவைக் கடந்து அமெரிக்கா, சீனாவுடன் சமாந்தரமாக உறவைப் பேண வேண்டுமென எதிர்பார்க்கும் நிலையில், அதற்கு அமெரிக்கா இடம்கொடுதுமிருக்கிறது. இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் சீன ஆதிகத்தைத் தடுத்து மேற்கு நாடுகளின் கடல் பாதையாக மாத்திரமே இருக்க வேண்டுமென்ற அமெரிக்கச் சிந்தனைக்கு இலங்கை ஒத்துழைக்கக்கூடிய வாய்ப்பும் இல்லாமலில்லை.
ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையெலடுத்துச் சிங்கள ஆட்சியாளர்களோடு எப்படிப் பேரம் பேசலாம் என்ற அனுபவம் இந்தியாவுக்கு இருப்பதைவிடத் தற்போது அமெரிக்காவுக்கே அதிகமுண்டு. முன்னாள் வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ கடந்த ஆண்டு கொழும்புக்கு வந்தபோதே அந்த அனுபவத்தின் உச்சத்தை .அமரிக்கா தொட்டுவிட்டது.
இதனை டில்லியும் அறிந்திருக்கும். ரஷியாவோடு இராணுவ ஒத்துழைப்புக்கான கலந்துரையாடல் ஒன்றை இலங்கை சென்ற வியாழக்கிழமை மொஸ்கோவில் நடத்தியிருந்தது. இந்த உரையாடல் சீனாவுக்கான ஒத்துழைப்பாக இருக்கலாமென்பதைவிட, அமெரிக்காவை மேலும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான கொழும்பின் உத்திகளில் ஒன்றாகவே கருதலாம். இந்த மாதம் ஜெனீவா அமர்வு உண்டென்பதும் கொழும்புக்கு நல்ல ஞாபகம்.
இலங்கை குறித்த ஜெனீவா விவகாரத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து இயங்கும் பிரித்தானியா புலிகள் மீதான தடையை வியாழக்கிழமை மேலும் நீடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத் தலிபான்களை சர்வதேசப் பயங்கரவாதிகளாக அறிவித்த இந்த வல்லாதிக்க நாடுகள். தமது புவிசார் பூகோள அரசியல் நோக்கில், தற்போது தலிபான்களைப் பகிரங்கமாக ஆதரிக்கின்றன.
ஆனால் தேசிய இனம் ஒன்றின் அரசியல் விடுதலைக்கான அதுவும் போர் இல்லாதொழிக்கப்பட்ட சூழலிலும், புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீடிக்கப்படவுள்ளது.
ஆகவே தலிபான் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்த்தேசியக் கட்சிகள் நியாயம் கோர வேண்டும். இறைமை. சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அரசியல் விடுதலை பயங்கரவாதம் அல்ல. இதனை முன்நின்று செயற்படுத்த வேண்டிய இந்தியா, அமெரிக்கப் புவிசார் அரசியல் நகர்வுகளுக்குள் தமக்கும் நன்மையிருப்பதாகக் கருதிச் சிக்கியுள்ளது என்பதே வேடிக்கை.
http://www.samakalam.com/பூகோள-அரசியல்-புலிகளுக்/
-
பாராட்டுக்கள் தியா.
நாவலை கிண்டில் பதிவாக வாங்கமுடியுமா? இல்லாவிட்டால் அடுத்த தடவை இந்தியாவிலிருந்து புத்தகம் எடுக்கும்போது சேர்த்து ஓர்டர் பண்ணுகின்றேன்.
-
1
-
-
9 hours ago, Justin said:
யாழ் களத்தில் நடக்கும் சில தள்ளு முள்ளுகளைப் பிரதிபலிக்கும் கதை போல இருக்கிறதே? 🤣
வாசித்தபோது அப்படித்தான் தெரிந்தது!
ஹாதி யாராக இருக்கும்?🧐
-
ஒரு நீதிக்கதை
முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட இரண்டு மடங்கு அழகாகத் தெரிவதாகவும் சொன்னார்.
அவர் வீட்டில் வளர்ந்துவந்த பூனை இந்த ஓவியத்தின் சிறப்பு குறித்துத் தன் நண்பர்களான காட்டு விலங்குகளிடம் சொன்னது. காட்டு விலங்குகள் வீட்டுப் பூனை மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தன. ஏனென்றால், பூனை நல்ல கல்வியறிவும், கலாச்சார அறிவும் பெற்றிருந்தது. மேலும், அது காட்டு விலங்குகளுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களைப் பற்றி அவ்வப்போது பேசும், அவர்களுக்குச் சொல்லியும் தரும். ஓவியத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே, காட்டு விலங்குகள் மிகவும் குஷியாகிவிட்டன. அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆவலுடன், அவை பூனையிடம் நிறைய கேள்விகள் கேட்டன. முதலில், ஓவியம் என்றால் என்ன என்று கேட்டன. அதற்குப் பூனை,
“ஓவியம் என்பது ஒரு தட்டையான பொருள். அற்புதமான, பிரமாதமான, வசீகரமான தட்டைப் பொருள். அது எவ்வளவு அழகாக, தட்டையாக இருக்கும் தெரியுமா!”, என்றது.
இதைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மீண்டும் குஷியாகிவிட்டன. எப்படியாவது அந்த ஓவியத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டன. காட்டு விலங்குகளில் ஒன்றான கரடி, பூனையிடம் கேட்டது,
“அந்த ஓவியம் எப்படி அவ்வளவு அழகாக இருக்கிறது?”
“அந்த ஓவியத்தின் தோற்றமே அப்படித்தான்”, என்று பூனை சொன்னது.
காட்டு விலங்குகளுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இதையெல்லாம் எப்படி நம்புவது என்றும் நினைக்கத் தொடங்கியிருந்தன. அப்போது, மாடு பூனையிடம் கேட்டது,
“சரி, கண்ணாடி என்றால் என்ன?”.
“அது சுவரில் இருக்கும் ஒரு துளை தான். நீங்கள் கண்ணாடியைப் பார்க்கும்போது, அதில் தெரியும் ஓவியம், உங்கள் கற்பனைக்கு எட்டாத பேரழகோடும், வசீகரத்தோடும் இருக்கும். அது தரும் பரவசத்தில் நீங்கள் தலை சுற்றிப் போவீர்கள்”, என்று பூனை பதிலளித்தது.
இதுவரை எதுவும் சொல்லாமல் எல்லாவற்றையும் கவனித்து வந்த கழுதை, இப்போது சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டது. இதற்குமுன் இந்த உலகில் அவ்வளவு அழகான பொருள் எதுவும் இருந்ததில்லை என்றும், இப்போதும் இருக்க முடியாது என்றும் கூறியது. அதோடு இல்லாமல், பூனை வேண்டுமென்றே நீண்ட நீண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி அதன் அழகைப் பெரிதுபடுத்திக் காட்ட முயல்கிறது என்றும் கூறியது
கழுதையின் பேச்சு காட்டு விலங்குகளையும் சந்தேகப்பட வைத்துவிட்டது. அதனால் கோபமடைந்த பூனை, அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டது.
அடுத்த இரண்டொரு நாட்கள் எந்த விலங்கும் இதைப்பற்றிப் பேசவில்லை. ஆனால், அந்த ஓவியத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் துளிர்விட்டது. அப்போது எல்லா விலங்குகளும் கழுதையைத் திட்டத் தொடங்கின. ‘உன் சந்தேக புத்தியால் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டாய். அந்த ஓவியம் அழகாக இருக்காது என்பதற்கு நீ ஆதாரம் ஏதாவது வைத்திருக்கிறாயா’ என்று கேட்டன. கழுதையோ அசரவே இல்லை. ‘நான் சொன்னது உண்மையா இல்லை அந்தப் பூனை சொன்னது உண்மையா என்று தெரிந்துகொள்ள ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நானே சென்று அந்தச் சுவரில் உள்ள துளையைப் பார்த்துவிட்டு வந்து உங்களிடம் சொல்கிறேன்’, என்று அமைதியாகச் சொன்னது. காட்டு விலங்குகள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டன.
கழுதை அதைப் பார்க்கச் சென்றபோது அங்கே ஓவியமும் அதன் எதிரே கண்ணாடியும் இருந்தன. எங்கு நின்றுகொண்டு எதைப் பார்க்கவேண்டும் என்று தெரியாததால், கழுதை ஓவியத்திற்கும் கண்ணாடிக்கும் நடுவில் நின்றுகொண்டு கண்ணாடியைப் பார்த்தது. பார்த்துவிட்டு வந்து,
“அந்தப் பூனை சொன்னது சுத்தப் பொய்! அங்கே ஓவியமும் இல்லை சுவரில் துளையும் இல்லை, அங்கே இருந்தது ஒரே ஒரு கழுதை! அழகான கழுதை, என்னுடன் நட்பாகப் பழகியது, ஆனால் அது வெறும் கழுதைதான். வேறொன்றும் இல்லை”, என்று கழுதை தன் நண்பர்களிடம் சொன்னது.
“சரியாகப் பார்த்தாயா? அருகே சென்று பார்க்கவேண்டியது தானே?”, என்று யானை ஹாதி கேட்டது.
“விலங்குகளுக்கு எல்லாம் தலைவனே ஹாதி, நான் அதை நன்றாகப் பார்த்தேன், அருகே நின்று பார்த்தேன். எவ்வளவு அருகே என்றால் என் மூக்கால் அதன் மூக்கைத் தொடும் அளவிற்கு அருகே நின்று பார்த்தேன்”, என்று கழுதை, ஹாதி யானையிடம் கூறியது.
“ஒரே மர்மமாக இருக்கிறதே! இதற்கு முன்பு வீட்டுப் பூனை நம்மிடம் பொய் எதுவும் சொன்னதில்லையே. சரி, வேறு யாராவது சென்று பார்த்துவரட்டும். பாலு, நீ போய் அந்தத் துளையில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு வா!”, என்று ஹாதி, பாலு என்ற கரடியிடம் சொன்னது.
பாலு கரடி சென்று பார்த்துவிட்டு வந்து சொன்னது, “பூனை சொன்னதும் பொய். கழுதை சொன்னதும் பொய். அங்கே இருந்தது ஒரே ஒரு கரடி!”.
இதைக் கேட்ட எல்லா விலங்குகளுக்கும் ஆச்சரியம் அடைந்து, தாமே போய் பார்த்துப் பரிசோதனை செய்யவேண்டும் என்று விரும்பின. ஹாதி யானை ஒவ்வொரு விலங்காக அனுப்பியது.
முதலில், மாடு சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு மாடு தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.
புலி சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு புலி தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.
சிங்கம் சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு சிங்கம் தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.
சிறுத்தை சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு சிறுத்தை தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.
ஒட்டகம் சென்று பார்த்துவிட்டு வந்து, அங்கே ஒரு ஒட்டகம் தான் இருக்கிறது, வேறொன்றும் இல்லை என்று சொன்னது.
இதையெல்லாம் கேட்ட ஹாதி யானைக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. தானே சென்று, உண்மை என்ன என்று அறிந்து வருவதாகக் கூறிச் சென்றது. திரும்பி வந்ததும், தன் ஆட்சியின் கீழ் இருக்கும் காட்டு விலங்குகள் எல்லாவற்றையும் பொய்யர்கள் என்று கடிந்து கொண்டது. மேலும், வீட்டுப் பூனையின் கெட்ட எண்ணத்தை நினைத்து ஆத்திரம் அடைந்தது. பின்பு சொன்னது, “ஒரு முட்டாளுக்குக் கூட இது தெளிவாகத் தெரியும், அங்கே இருந்தது ஒரு யானை மட்டுமே”.
[அமெரிக்க எழுத்தாளர் Mark Twain 1909-ல் எழுதிய ‘A Fable’ என்னும் நீதிக்கதையின் தழுவல் இது. ஒரு கலைப்படைப்பை அணுகும்போது, அதை நம் கற்பனை என்னும் கண்ணாடியைக் கொண்டு பார்க்கிறோம். ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணங்களின் பிரதிபலிப்பே அந்தக் கண்ணாடியில் தெரிகிறது. நான் காண்பது மட்டுமே சரியானது என்று சொல்லமுடியுமா? ஒருவேளை, நம்மால் சில விஷயங்களைப் பார்க்கமுடியாமல் போகலாம். ஆனால், அவை படைப்பில் இருக்கும். இவ்வாறு இந்தக் கதையின் நீதியைப் புரிந்துகொள்ளலாம்.]
மார்க் ட்வெய்ன்
தமிழில் – ஈஸ்வர்
https://kanali.in/ஒரு-நீதிக்கதை/
-
3
-
1
-
1
-
-
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் — பகுதி 3
இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி அல்லது தேக்க நிலையைப் பற்றிய ஆய்வுகளும், நாட்டினுடைய சமூக பொருளாதார கட்டமைப்பு மற்றும் அது கொண்டிருக்கும் உற்பத்தி உறவுகள் பற்றிய ஆய்வுகளும், சர்வதேச பொருளாதார கட்டமைப்பில் இலங்கையின் அரசியல் பொருளாதாரம் இணைந்திருக்கும் தன்மைகள் பற்றிய ஆய்வுகளும் பெரும்பாலும் தேசிய பொருளாதாரம் பற்றிய பருமட்டான அறிவியல் ஆய்வுகளாகவே அமையும். ஆனால் மொத்த தேசிய பொருளாதாரத்தில் தேச மக்களின் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகளின் மூலமே தேச மக்களின் உண்மையான பொருளாதார வாழ்வின் நிலைமைகளையும் அரசுக்கும் பரந்தபட்ட குடிமக்களின் நலன்களுக்கும் இடையேயென அரசியல் பொரளாதார நெருக்கடிகளும் மற்றும் முரண்பாடுகளும் வெளிப்படும். இவை தொடர்பான விரிவான விபரிப்புகளையோ விவாதங்களையோ இக்கட்டுரையில் மேற்கொள்வது இங்கு நோக்கமல்ல. மாறாக, சுருக்கமாக இலங்கைவாழ் மக்களின் சம்பளம் மற்றும் கூலி வழியிலான வருமானங்களுக்கும் அதைக் கொண்டு அவர்கள் பெறுகின்ற பொருளாதார வாழ்வின் நிலைமைகளையும் அடையாளம் காட்டுவதே இக்கட்டுரைப் பகுதியின் நோக்கமாகும்.
தேசிய வருமானத்தின் உண்மையான பெறுமானம்
மரபுரீதியான பொருளாதார கணிப்பீட்டு முறைகளில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையை மதிப்பிடுவதற்கு தேசிய மொத்த உற்பத்தியின் வருடாந்த வளர்ச்சி வீதம், தலாநபர் வருமானம் போன்றவற்றை பிரதானமானதாகக் கொண்டே மதிப்பீடுகளும் ஒப்பீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னர் சர்வதேசரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாணயத்தின் பெறுமதியில் தேசிய உற்பத்திகளின் பெறுமானம் கணிப்பிடப்பட்டது. ஆனால், கடந்த மூன்று தசாப்தங்களாக நாடுகள் ஒவ்வொன்றிலும் பண்டங்களின் சந்தைவிலைகளில் நிலவும் வேறுபாடுகள் கருத்திலெடுக்கப்பட்டு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வை ஒப்பிடுவதற்கான கணிப்பினை பண்டங்களைக் ‘கொள்வனவு திறன் சமநிலை முறை’ பிரயோகிக்கப்படுகிறது. இதற்கு அமெரிக்க நாட்டின் சந்தைகளில் நிலவும் பண்டங்களின் விலைகளே பொது அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. இவ்வாறான அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டினதும் தேசியரீதியான மொத்த உற்பத்திப் பெறுமானம் அல்லது மொத்த வருமானத்தின் சர்வதேச பெறுமானம் கணக்கிடப்பட்டு, நாடுகளுக்கிடையே காணப்படுகின்ற உண்மையான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் – வேறுபாடுகள் அளவிடப்படுகின்றன.
2019ம் ஆண்டில் அமெரிக்காவின் ஒரு பிரஜைக்குரிய, அதாவது தலாநபருக்குரிய வருமானம் 66000 அமெரிக்க டொலர்களாகும். அதேவேளை சிறிலங்காவின் தலாநபர் வருமானம் இலங்கை ரூபாயில் சுமார் 6 லட்சத்து 88 ஆயிரமாகும். இது அன்றைய அந்நிய செலாவணி கணக்குப்படி 3850 அமெரிக்க டொலருக்கு சமனாகும். தலாநபர் வருமானம் என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரிய அல்லது ஒவ்வொரு பிரஜையினாலும் உருவாக்கப்படுகிற சராசரி வருமானம் என பொதுவாகக் கூறலாம். இதனுடைய அர்த்தம் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் தனிப்பட்டரீதியில் குறிப்பிட்ட வருடத்தில் கிடைத்த வருமானம் எனக் கொள்ளக் கூடாது.
நாட்டு மக்கள் பெறும் வருமானம் என்பது வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. உழைப்பைக் கொடுத்து கூலியை அல்லது சம்பளத்தை பெறுவோர்,தொழில்களில் பணத்தை முதலிட்டு லாபம் பெறுவோர், பணத்தைக் கொடுத்து வட்டி பெறுவோர் மற்றும் தமக்கு உரிமையான காணியை, கட்டிடத்தை அல்லது ஒரு பண்டத்தை மற்றொருவருக்கு குறிப்பிட்ட காலத்துக்கு கொடுத்து வாடகை பெறுவோர் என மக்கள் வருமானம் பெறுகின்றனர் என எளிமையாகக் கூறலாம்.
இவ்வாறாக வருமானம் பெறும் பொதுமக்கள் அதில் கணிசமான பகுதியை செலவு செய்கின்றனர் – அதில் ஒரு பகுதியை சேமிக்கின்றனர். தேச மக்கள் தனிப்பட்ட ரீதியில் பெறுகின்ற வருமானங்களையும் அவர்களின் செலவுகளையும் ஆய்வு செய்யும் பொருளியலானது குடும்பப் பொருளியல் அல்லது மனைப் பொருளியல் எனப்படுகிறது. ஒரு மனை என்பது ஒரு தனியாளை மட்டும் கொண்டதாகவோ, தாய் தந்தை பிள்ளைகள் என கொண்டதாகவோ அல்லது கூட்டுக் குடும்பமாகவோ இருக்கலாம். இலங்கையைப் பொறுத்த வகையில் கூட்டுக் குடும்பம் என்பது நடைமுறையில் இல்லையென்றே கூறலாம். இலங்கையில் ஒரு குடும்பத்தின் எண்ணிக்கை சராசரி 4 பேர் என ஆய்வுகள் கூறுகின்றன. மனைப் பொருளியல் என்றால் என்ன? அதன் தன்மைகள் என்ன? அதன் உள்ளடக்கங்கள் என்ன? என்பன பற்றிய விளக்கமான விபரிப்புக்குள் செல்வது இங்கு அவசியமற்றது. இலங்கை வாழ் மக்களின் மனைப் பொருளியல் நிலைமை பற்றிய பருமட்டான ஒரு சித்திரத்தை மட்டும் இங்கே காண்போம்.
தேசிய பொருளாதாரமும் தேச மக்களின் பொருளாதாரமும்
இலங்கையின் சராசரி தலாநபருக்கான வருமானமாகிய 3850 டொலர் என்பது இலங்கையின் சந்தைகளில் காணப்படுகிற பண்டங்களின் விலைகளை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது. இதன்படி பார்த்தால் இலங்கை மக்களின் பொருளாதாரத்தை விட அமெரிக்க மக்களின் பொருளாதாரம் சுமார் 17 மடங்கு அதிகமென கொள்ள வேண்டும். இது மெய்யான பொருளாதார ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கவில்லை. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட பண்டத்துக்கு இலங்கையின் சந்தைகளில் நிலவுகின்ற விலைக்கும், அதே பண்டத்துக்கு அமெரிக்காவின் சந்தையில் நிலவும் விலைக்கும் இடையே கணிசமான அளவு வேறுபாடு உள்ளது. இதனை கணக்கில் எடுக்காததால் ஏற்படுகின்ற தவறை சரி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘கொள்வனவு திறன் சமநிலை‘ முறையை இங்கு பிரயோகிப்பது அவசியம். அதாவது, இலங்கையில் உற்பத்தி செய்யும் பண்டங்களை அமெரிக்காவின் சந்தை விலைகளின்படி கணக்கிட்டால் இலங்கையின் சந்தைகளில் 3850 டொலர்கள் பெறுமதியான இலங்கை நாணயத்துக்கு கொள்வனவு செய்யக் கூடிய பண்டங்களை (வெறுமனெ தொட்டுணரக் கூடிய பண்டங்களை மட்டுமல்ல சேவைப் பண்டங்களும் உள்ளடங்கலாக) அமெரிக்க சந்தைகளில் நிலவும் விலைகளின்படி பார்த்தால் சுமார் 13200 டொலர் பெறுமதிக்கு சமனாகும் என சரவதேச கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதன்படி பார்க்கையில் அமெரிக்க மக்களின் சராசரி தேசிய வருமானத்தை கொள்வனவு சக்தி அடிப்படையில் இலங்கை மக்களின் சராசரி தேசிய வருமானத்தோடு ஒப்பிடுகையில் 5மடங்கே அதிகமாகும்.
எவ்வாறாயினும் இவ்வாறான தலாநபர் வருமானக் கணிப்பீடுகள் மட்டும் இலங்கை மக்களினுடைய பொருளாதார வாழ்க்கையின் கூறுகள் ஒவ்வொன்றினதும் உண்மையான நிலைமைகளினை அறிவதற்கும் – தெளிவாக அடையாளம் காண்பதற்கும் போதியதல்ல. நாடுகளினுடைய பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் தலாநபர் வருமானம் எவ்வாறு பகிரப்படுகிறது – தேசிய வருமானம் மக்களிடையே எவ்வாறு பகிரப் படுகிறது: நாட்டின் ஒவ்வொரு பிரதானமான துறைகளும் மொத்த தேசிய வருமான ஆக்கத்தில் எவ்வாறு பங்களிக்கின்றன: நாட்டு மக்களினதும் அரசினதும் நுகர்வுச் செலவுகள் மற்றும் முதலீடுகள் எனனென்ன விகிதாசாரங்களில் மேற்கொள்ளப்படுகின்றன: நாட்டு மக்கள் தமது பல்வேறு தேவைகளுக்கு எவ்வாறான விகிதாசாரங்களில் தமது வருமானத்தை செலவு செய்கிறார்கள் என்பன போன்ற பல விடயங்களையும் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகும்.
மக்களினுடைய மனைகளின் கூட்டே தேசம்
நாட்டு மக்கள் பெறும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே ஏற்றத்தாழ்வான பல தரப்புகள் உள்ளன. வேலையின்மையால் வறியவர்களாக இருப்போர் ஒருபுறம், மறுபுறமாக நீண்ட நேரம் கடுமையாக உழைத்தும் அடிப்படையான தேவைகளில் குறைந்தபட்சமாகவேனும் திருப்தி பெற முடியா நிலையில் வாழுவோர் என கணிசமான சதவீத மக்கள் தொகை, மேலும் அவ்வாறு உழைத்தும் வறியவர்களாகவும் போசாக்கற்றவர்களாவும் நோயாளிகளாகவும் வாழும் பெரும் தொகையான மக்கள் கூட்டத்தினர். இவ்வாறான நிலைமைகள் பற்றிய ஆழமான அறிவின்றி, நாட்டினுடைய பொருளாதார நிலையின் தராதரத்தையும் – பொருளாதாரம் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் பற்றிய தெளிவான புரிதலைப் பெற முடியாது.
நாட்டில் பல்வேறு நிலைகளிலுள்ள மக்களின் பொருளாதார நிலை அதாவது, ஒவ்வொரு குடும்பங்களினதும் மொத்த வருமானம், செலவுகள், அந்த வருமானம் பல்வேறுபட்ட தேவைகளிலும் செலவு செய்யப்படும் வீதாசாரங்கள், நகரங்களில் வாழும் குடும்பங்களும் கிராமங்களில் வாழும் குடும்பங்களும் பெறும் வருமானங்களுக்கும் மேற்கொள்ளப்படும் செலவுகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள், அதேபோல வெவ்வேறு உற்பத்தித்துறைகளில் ஈடுபடுவோரின் குடும்பங்களின் வருமானங்கள் மற்றும் செலவுகளில் உள்ள வேறுபாடுகள் போன்றனவற்றை ஆய்வு செய்வது தேசிய ரீதியான பொருளாதாரத்தின் முழுமையான பண்புகளைக் கண்டறிவதற்கு துணை புரிகின்றன. இதற்கான தேடலில் குடும்ப அல்லது மனைப் பொருளியல் (Household Economics) ஒரு பிரதான இடத்தை வகிக்கின்றது. மனைப் பொருளியல் ஆய்வில் புள்ளிவிபரவியல்ரீதியான அவதானிப்புகளை மேற்கொள்ளுகின்ற அதேவேளை சமூக பொருளாதார கோட்பாடுகள் – கண்ணோட்டங்களில் அணுகி ஆய்வு செய்தல் மூலமே தேச மக்களின் சமூக பொருளாதார பரிமாணங்களுக்கும் தேசிய பொருளாதாரத்துக்கும் இடையேயுள்ள பொருத்தங்களை – இடைவெளிகளை –முரண்பாடுகளை புரிந்து கொள்ள முடியும்.
இந்த நாட்டில் வாழும் உற்பத்தித் தொழிற்துறையில் ஈடுபடும் தொழிலாளர்களையும், விவசாயத் துறையில் ஈடுபடும் ஏழை விவசாயிகள், சிறுநில உடைமை கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களையும், மேலும் அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்களையும் உள்ளடக்கிய சனத்தொகையினரே நாட்டில் மிகப் பெரும்பான்மையினராக உள்ளனர்.
பொதுமக்களின் பொருளாதார வாழ்வுநிலை அசைவுகளே தேசிய அபிவிருத்திச் சக்கரங்களை நகர்த்துகின்றன
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 80 சதவீதமானவர்கள் கிராமங்களிலேயே வாழ்கின்றனர். தென்னாசியாவில் உள்ள நாடுகளில் இலங்கையின் நகரமயமாக்கம் ஒப்பீட்டுரீதியல் குறைவான சதவீத மக்கள் தொகையினரையே நிரந்தர குடியிருப்பாளர்களாக உள்வாங்கியுள்ளது. நகரங்களில் தொழில்புரிவோரில் கணிசமானோர் கிராமங்களின் குடியிருப்பாளர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமங்களில் தமது நிரந்தர வீடுகளைக் கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையானோர் தத்தமது வீட்டைச் சுற்றி பயன்தரும் மரங்களை, செடிகளை மற்றும் கொடிகளைக் கொண்டிருப்பதுவும், அங்கு தமது சொந்தத் தேவைகளுக்கான கால்நடைகளையும் சிறிய அளவில் வளர்த்துக் கொள்வதுவும் அவர்களது மனைப் பொருளியல் முகாமைத்துவத்தில் கணிசமான பாகத்தை வகிக்கின்றது.
இலங்கையின் மிகப் பெரும்பான்மையான மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சம்பளம் மற்றும் கூலியையே தமது மிகப் பிரதானமான பணவருமானமாகக் பெறுகின்றனர். அடுத்தபடியாக, கணிசமான தொகையினர் தமது நிலங்களில் விவசாயம் செய்தோ, தமது குடும்ப அளவில் அல்லது சிறிய அளவில் உற்பத்தி, வர்த்தக மற்றும் சேவைகளை வழங்கும் தொழில்களை மேற்கொண்டோ தமது வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். வெறுமனே ஒரு குறிப்பிட்ட தொழிலில் தமது உழைப்பை முழுமையாக வழங்குவதன் மூலமாக அல்லது ஒரு குறிப்பிட்ட உற்பத்தி, வர்த்தக அல்லது சேவைத் தொழிலில் மட்டும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதன் மூலமாக வருமானம் பெறுவோர் எனும் வகையினர் இங்கு ஒப்பீட்டளவில் சிறுபான்மையினரே. இங்கு மிகப் பெரும்பான்மையான குடும்பங்களின் வருமானங்கள் வெவ்வேறு வகைப்பட்ட வருமானங்களின் கலப்பாகவே அமைகின்றது. இந்தக் கலப்பில் உள்ள விகிதாசாரங்கள் வேறுபடலாம். இது நவீன பொருளாதார கட்டமைப்பில் உள்ள இயல்பானதே. அதுவும் குறைந்த மற்றும் மத்தியதர வருமான தரம் கொண்ட நாடுகளில் இது பொதுவானதே. இதில் இலங்கை விதிவிலக்கல்ல.
இலங்கையில் தற்போது சுமார் 86 லட்சம் பேர் பொருளாதாரரீதியாக வருமானம் பெறுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் சுமார் 13 லட்சம் பேர் அரச சேவை ஊழியர்களாக உள்ளனர். 22 லட்சம் பேர் விவசாயிகளாகவோ அல்லது விவசாயக் கூலிகளாகவோ உள்ளனர். உற்பத்தித் தொழிற் துறைகளில் 19 லட்சம் பேரும் அரச சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைத்துறைகளில் 32 லட்சம் பேரும் உள்ளனர். இலங்கையில் எந்த அளவுக்கு குடும்பங்களின் வருமானம் சம்பளமாக அல்லது கூலியாக பெறப்படும் வருமானத்தில் உள்ளதென இங்கு தரப்பட்டுள்ள புள்ளிவிபரங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேலும் குறைந்த வருமானம் பெறும் சிறு விவசாயிகள் மற்றும் சிறு தொழில்களை சுயமாக மேற்கொள்வோரின எண்ணிக்கையைக் கணக்கிட்டால் அது மிகக் கணிசமான விகிசாரத்தினரை உள்ளடக்குவதாக இருக்கும். அவ்வாறானவர்களின் வருமானத்தில் அவர்களின் உடல் உழைப்புக்கான கூலியை நீக்கி விட்டுப் பார்த்தால், இலாபமாக அல்லது வேறு வகையாக கிடைக்கும் லாபம் மிக மிகக் குறைவானதே.
முதலாளித்துவக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாடு பொருளாதாரரீதியாக வளர்ந்து செல்லும் போது. நாட்டிலுள்ள மிகப் பெரும்பான்மையோரின் வாழ்க்கையில் அவர்கள் தமது உழைப்பு சக்தியைக் கொடுத்து அதற்கு ஈடாகப் பெறுகின்ற சம்பளம் அல்லது கூலிதான் அவர்களின் வருமானத்தில் பெரும் பங்காக அமைகின்றது.
(பகுதி 4 இல் தொடரும்)
-
மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண்
சுப்பிரமணியம் பாஸ்கரன்
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும், போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து சவால் மிக்கதாகவே உள்ளது.
குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு, இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் பாரிய சவாலாக விளங்குகின்றன. இலங்கையில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளது.
வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக, முகமாலைப் பகுதி காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்று, 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமது சொந்த நிலத்துக்குத் திரும்ப முடியாத நிலையில், பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு பகுதிகளிலும், பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.
குறிப்பாக, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், உயர்பாதுகாப்பு வலயங்கள், நிலச் சுவீகரிப்புகள், வெடிபொருள் அச்சுறுத்தல்கள் என்பன, இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த நிலங்களில் மீளக்குறியேறாமைக்கான காரணங்களாக அமைகின்றன.
வடபகுதியில், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை, இத்தாவில், இந்திராபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாது, பலகஸ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்.
1999ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த காலம் வரையும், அதன்பின்னர் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளில், யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புகளும் பரஸ்பரம் மோதிக்கொண்ட, கிளாலி முதல் முகமாலை, நாகர்கோவில் வரையான முன்னரங்க நிலை காணப்பட்ட பகுதிகளில், தினமும் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டும் பலர் அங்கவீனர்களாகியும் இருந்தனர். இந்தப்பகுதிகள், போரிட்டோரின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் களமாகவும் காணப்பட்டன.
எறிகணைகள், துப்பாக்கி ரவைகள் என்பவற்றால் சல்லடை போடப்பட்டு, எண்ணற்ற உயிர்கள் பறிக்கப்பட்ட ஓர் இடமான முகமாலையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாகவும் சின்னாபின்னமாகவும் வெடிபொருட்கள் விதைக்கப்பட்டன.
இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளவும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் வகையில், முகமாலை பகுதியில் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் கண்ணிவெடிகளை அகற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால், 2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை, பெரும் சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இங்கிருந்து இடம் பெயர்ந்து, இதுவரை மீள் குடியேறமுடியாமல் வாழ்ந்து வருவோரின் ஒருமித்த குரலாக ஒலிப்பது, “எங்களது சொந்த வீடு இல்லாத துன்பத்தை, கடந்த 25 வருடங்களாக அனுபவித்து வருகின்றோம். 1996ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், முகமாலை, இத்தாவில், இந்திராபுரம் ஊர்களில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, தற்போது யாழ்ப்பாணத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றோம். நாங்கள் நிம்மதியாக வாழவில்லை; அடிக்கடி வேறுவேறு வீடுகளுக்கு மாறிக்கொண்டுதான் இருக்கின்றோம். இப்போது, இலட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, நாலாயிரம் ரூபாய் வாடகை கொடுக்கின்றோம். 12 ஆண்டுகளாகியும் சொந்த காணிக்குள் கால்பதிக்க முடியாது இருக்கின்றோம். எங்களுடைய காணியை பார்க்க வேண்டும்; எங்களது வீட்டில் குடியிருக்க வேண்டும்” எனத் தமது அவாக்களையும் அபிலாசைகளையும் உணர்பூர்வமாக வெளிப்படுத்தினார்கள்.
அவர்கள், மேலும் விவரிக்கையில், “நாங்கள், உறவினர்களின் காணியில் வசித்து வந்த காலப்பகுதியில், பல துன்பங்களை அனுபவித்து விட்டோம். ‘இரவானால் கிணற்றில் தண்ணீர் அள்ளாதீர்கள்’ என்பார்கள். எங்களது பாவனைக்கு செடிகொடி வைக்கேலாது; ஆடு, மாடு வளர்க்க முடியாது! இப்படி எத்தனையோ கஸ்ரங்களை அனுபவித்து விட்டோம். எனவே, எங்களது காணிகளில் வெடிபொருட்களை அகற்றி எங்கள் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும்” என இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்களின் ஆதங்கங்கள் தொனித்தன.
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலையின் கிழக்கு பகுதி, இதுவரை வெடிபொருட்கள் அகற்றப்படாத மிக ஆபத்தான பகுதியாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில், மீள்குடியேற்றத்துக்கு அடையாளப்படுத்தப்பட்டு, மக்கள் மீள்குடியேறிய பகுதி தவிர, ஏனைய பகுதிக்குள் பொதுமக்கள் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தடைசெய்யப்பட்ட பகுதிகள் மிக ஆபத்தான பகுதிகளாக இருப்பதால், அப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்வதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் உரியஅதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்ற போதிலும், அந்த அறிவுறுத்தல்களை மீறி, பலர் உட்சென்று விபத்துகளில் சிக்கி, உயிரிழப்புகளை எதிர் கொண்டதுடன் அங்கவீனர்களாகவும் ஆகியுள்ளனர்.
2010ஆம் ஆண்டு, யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், ‘இலங்கையின், வடக்கில் 640 கிராமங்களில், 105 மில்லியன் வரையான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர், மக்கள் மீள்குடியேறுவதற்கும் பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டாலும், இன்னும் சில பகுதிகளில் வெடிபொருட்களின் ஆபத்துக் காணப்படுகின்றது.
குறிப்பாக, வடபகுதியில் தற்போது மிக ஆபத்தான பகுதியாக, கிளாலி தொடக்கம் முகமாலை, நாகர்வோவில் வரையான பகுதிகள் காணப்படுகின்றன. இதில், முகமாலைப் பகுதியே மிக ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த மக்கள் தமது சொந்த ஊரில் மீள்குடியேறுவதற்குக் காணப்படும் சகல தடைகளும் நீக்கப்பட்டு, குறிப்பாக, வெடிபொருட்கள் அகற்றப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக வாழ வழிசமைக்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமானம் படைத்த எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.
-
எரிவாயு மின்தகனமேடைகளை கோருகிறது கூட்டமைப்பு
பா.நிரோஸ்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொரோனா சடலங்கள் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, உடனடியாக எரிவாயு மின்தகனமேடைகளை வடக்கு, கிழக்கில் அமைக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தின் இன்றைய(07) விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களை சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய எரிப்பதற்கு அவசியமான எரிவாயு மின்தகனமேடைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதியளவு இல்லை. இதனால் வடக்கு கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அதிகளவில் தேங்கிக் கிடப்பதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே எரிவாயு மின்தகன மேடைகள் உள்ளன. மட்டக்களப்பில் இல்லை.
எனவே நிதி அமைச்சர் உடனடியாக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு தற்காலிகமாகவேனும் எரிவாயு மின்தகனமேடைகளை அமைத்து கொரோன வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
-
நாட்டின் வருமானத்தை விட செலவுகள் அதிகரித்துள்ளன - பெரும் கவலையில் நிதி அமைச்சர் பஷில்
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம் )
இவ்வாண்டு நாம் எதிர்பார்த்ததை விடவும் 1500-1600 பில்லியன் ரூபா குறைவான வருமானமே கிடைத்துள்ளது. நாட்டின் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
இவ்வாறான கடினமான நேரத்தில் தனியாக அரசாங்கத்தினால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. எனவே எதிர்க்கட்சிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாவும் அவர் கூறினார்.
61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசே ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
முழு உலகமும் எதிர்கொண்டுள்ள கொவிட் நெருக்கடிகளுக்கு நாமும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. நாடு பாரிய சர்வதேச வருமான நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றது.
அதேபோல் தேசிய நிதி விடயங்களிலும், திறைசேரி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார ரீதியிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இவற்றிக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வேளையில் முழு அரசாங்கம் மட்டுமல்லாது பொறுப்புள்ள சகலரும், எதிர்கட்சிகளின் ஒத்துழைப்புடனும் நாம் செயற்பட வேண்டும். இவ்வாறான கடினமான நேரத்தில் தனியாக பிரச்சினைகளை தீர்க்க முடியாது, அது முடியாத காரியம் என்பது எமக்கு தெரியும்.
கொவிட் தொற்று பரவலினால் ஏற்பட்ட நெருக்கடிகள் மட்டுமல்ல, கடந்த காலங்களில் கையாளப்பட்ட பொருளாதார செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்ட விளைவாகும்.
நாட்டின் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்து சென்றுள்ளது. ஒரு இரு வருடங்களில் இருந்ததல்ல ஒரு இரு தசாப்தங்களுக்கு முன்பிருந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டுக்கு கிடைக்கும் வருமானம், அரசுக்கு கிடைக்கும் வருமானம் என்பனவற்றை நாட்டின் செலவுடன் ஒப்பிடுகையில் நாட்டின் வருமானம் மிகக் குறைவாகவே உள்ளது.
ஒரு சில நேரங்களில் அநாவசிய செலவுகள், வீண் விரயம், ஊழல் என்பனவும் உள்ளதென்பது எமக்கு தெரியும். நீண்ட காலமாக இவை இடம்பெற்றவை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே உண்மையாக இந்த செலவுகளை குறைக்க முடிந்த நடவடிக்கைகளை எடுப்போம்.
மேலும் கொவிட் நிலைமைகள் காரணமாக எமக்குக் கிடைக்கவிருந்த வருமானமும் கிடைக்காது போயுள்ளது என்றார்.
-
ஜெனிவா தீர்மானத்தை கருத்திலெடுத்து உஷாராகும் இலங்கை !
(லியோ நிரோஷ தர்ஷன்)
ஜெனிவாவின் 46/1 தீர்மானமானது இலங்கையை தனிமைப்படுத்தும் என்பதோடு பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றில் எதிர்மாறான விளைவுகளை இந்த சவாலான கொவிட்-19 தொற்று நிலைமைகாலத்தில் ஏற்படுத்தும்.
ஆனாலும் உள்ளக பொறிமுறைகள் சோர்வின்றி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வெளியக தகவல் சேகரிப்பு பொறிமுறைகளை முற்றிலும் நிராகரிப்பதாக இலங்கை குறிப்பிட்டுள்ளது.
http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/79249/thumb_srilanka.jpg
இத்தகைய சர்வதேச கவனம் இலங்கை மீது தேவை என்பதை இலங்கை நம்பவில்லை. சர்வதேச சமூகத்திற்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் வழங்கிய உறுதி மொழிகளை தொடர்ந்தும் மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றங்களை தெளிவுப்படுத்தி 13 பக்கதிலான அறிக்கையினை கொழும்பில் உள்ள அனைத்து இராஜதந்திர மையங்களுக்கும் அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.
இந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளதுடன் , அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2021 மார்ச் மாதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 46/1 தீர்மானம் குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகின்றோம்.
சம்பந்தப்பட்ட நாடென்ற வகையில் இலங்கையின் சம்மதமின்றி மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு மேலதிக ஒரு வாக்கினால் நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும்.
குறித்த தீர்மானமானது, ஐக்கிய நாடுகள் தாபனம் மற்றும் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி, இலங்கையின் உள்நாடடு சட்ட கட்டமைப்பிற்குள் பொறுப்புடைமையை கடடியெழுப்பல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதில் இலங்கையின் உறுதியானதும் தொடர்ச்சியானதுமான முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த தீர்மானமானது இலங்கை சமுதாயத்தை தனிமைப்படுத்தும் என்பதோடு பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றில் எதிர்மாறான விளைவுகளை இந்த சவாலான கொவிட்-19 தொற்று நிலைமைகாலத்தில் ஏற்படுத்தும் என இலங்கை கருதுகின்றது.
உள்ளகபொறிமுறைகள் சோர்வின்றி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வெளியக தகவல் சேகரிப்பு பொறிமுறைகளை இலங்கை முற்றிலும் நிராகரிக்கின்றது.
சம்பந்தப்பட்ட நாடென்ற வகையில் இலங்கையின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பின்றி வெளியக பொறுப்புக் கூறல் பொறிமுறைகள் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் அரசியல்மயமாக்களோடு தொடர்புப்பட்டது என்பதால் அதன் நோக்கமான மனித உரிமைகள் சார் குறிக்கோள்களை அடைய முடியாது போகும் என்பதை சர்வதேச சமூகம் நன்கு அறியும்.
அத்தோடு, கொவிட் -19 தொற்று உள்ளிட்ட மனிதாபிமான செயற்பாடுகளுக்கு நிதி மிக அவசியமாக தேவைப்படும் நிலையில், நிதியானது அரசியல் மயமாக்கப்பட்ட ஜெனிவா முன்னெடுப்புக்களுக்கு அளிக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது. உலக நாடுகள் பலவற்றில் காணப்படுகின்ற நிலைமைகளோடு ஒப்பிடடு பார்க்கின்ற போது இத்தகைய சர்வதேச கவனம் இலங்கை மீது தேவை என்பதை இலங்கை நம்பவில்லை.
சர்வதேச சமூகத்திற்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் வழங்கிய உறுதி மொழிகளை இலங்கை தொடர்ந்தும் மதிக்கின்றது என்பதோடு நீடித்த சமாதானத்தை எய்துவதற்கு நிறுவப்பட்டுள்ள சுயாதீன அமைப்புக்களுக்கு அதிகாரத்தையும் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
-
தமிழர்களுக்கு அன்று எதிரான அவசரகாலச் சட்டம் இன்று சிங்களவர்களை ஒடுக்க பயன்படுகிறது - செல்வராசா கஜேந்திரன்
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்
தமிழரின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அன்று கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தை இப்போது சிங்களவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
எந்தத் தேவையும் இன்றி அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாத காலனித்துவ ஆதிக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போராடும் போது அதனை ஒடுக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 30 ஆண்டுகளாக தமிழர்களை வேட்டையாடியது.
எங்களின் பெண்களை சித்திரவதை செய்வதற்கும், எங்களின் இளைஞர்களை கேட்பாரின்றி கொலை செய்வதற்கும் எங்களது தேசத்தின் செல்வங்களை கொள்ளையடித்து தென்னிலங்கைக்கு கொண்டு வரவும் அந்த அவசரகால சட்டத்தை கொண்டு வந்தீர்கள்.
ஆனால் இன்று சிங்கள மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பை சமாளிப்பதற்காக இந்த அவசரகால சட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். இந்தப் போக்கு உங்களை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
https://www.virakesari.lk/article/112874
-
தலிபான்களின் அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் உதயம் - புதிய தலைவர், அமைச்சர்கள் நியமனம்
அமெரிக்கா தலைமையிலான கூட்டணி மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான 20 ஆண்டுகால போரில் ஆதிக்கம் செலுத்திய நபர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி, ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தின் தலைவராக ஐ.நா.-ஒப்புதல் பெற்ற முல்லா முகமது ஹசன் அகுந்த் என்பவரை தலிபான்கள் பெயரிட்டுள்ளனர்.
அத்தோடு தலிபான்களின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் துணைத் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலிபான் நிறுவனர் மற்றும் தலைவரான முல்லா உமரின் மகன் முல்லா யாகூப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் பதவி சிராஜுதீன் ஹக்கானிக்கு வழங்கப்பட்டது,
ஆப்கானிஸ்தானின் சிக்கலான இன அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தை அவர்கள் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் பெண்கள் உயர் மட்டங்களில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை.
தோஹாவில் தலிபான் பேச்சுவார்த்தையாளரும் முதல் ஆட்சியின் அமைச்சரவையின் உறுப்பினருமான அமீர்கான் முத்தாகி வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அத்தோடு மேலும் சில முக்கிய அமைச்சுப் பதவிகளும் இதன்போது வழங்கப்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
https://www.virakesari.lk/article/112877
-
அரங்கக் கலையின் மைல்கல், ‘மாத்தளையின் ஜீவநதி’
த. நரேஸ் நியூட்டன்
இலங்கையின் அரங்கக் கலையின் முன்னோடிகள் பலரைப் பற்றி நாம் பல ஊடகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் அறிந்திருக்கிறோம். இவர்களுள் மலையகத்திலிருந்து நாடகக்கலையின் வளர்ச்சிக்கும் தமிழ் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி, நாடகத்துறை, போன்றவற்றிற்கும் உரமிட்டவர்களில் மிகவும் பிரபல்யமான ஒருவர் மாத்தளை கார்த்திகேசு என்று அழைக்கப்படுகின்ற கா. கார்த்திகேசு. இவர் படைத்த நாடகங்கள் பல மலையகத்திலும் கொழும்பு போன்ற பகுதிகளிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டு கலை ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவையாகும். இவர் அரங்கக் கலைகளுள் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளை எழுத்துத் துறையிலும் தனது தடங்களைப் பதித்து தமிழ் இலக்கியத்துறையின் பங்களிப்பாளர்களுள் பேசப்படுபவராக மிளிர்ந்தார். தமிழ் இலக்கிய எழுத்துத்துறையில் சிறுகதைகள், இலக்கியம் மற்றும் சமயம்சார் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் நாட்டம் காட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு நாடக எழுத்தாளராகவே பெரிதும் நோக்கப்பட்டார்.
தை மாதம் 1ஆம் திகதி 1939ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தின் பெயர் பெற்ற மாவட்டமாகிய மாத்தளையில் பிறந்தார். இவர் மாத்தளை விஜயா கல்லூரியிலும் கிறீஸ்தவ தேவாலய கல்லூரியிலும் கல்வி பயின்றார். தனது கலைப் பயணத்தை 1958ஆம் ஆண்டில் ஆரம்பித்தவர் இறுதிக்காலம் வரை அப்பயணத்தை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்தார். இதே ஆண்டில் இவர் முதன் முதலில் எழுதிய நாடகம் ‘தீர்ப்பு’ என்பதாகும். இவர் கிறீஸ்தவ தேவாலயக் கல்லூரியில் கல்வி பயின்ற அவரது இளமைக்காலத்திலேயே பல நாடகங்களை எழுதி அவற்றின் பொருட்டு பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு காலப்பகுதியில் மலையக மக்களின் மூத்த பரம்பரையினர் அநேகமாக கல்வியறிவு கிடைக்காத தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் கூலித்தொழிலாளர்களாக பல சவால்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். கல்வியறிவு குறைவானவர்கள் என்பது மட்டுமன்றி பிராந்திய ரீதியான மற்றும் சமூக ரீதியான பாகுபாடுகளுக்கும் இவர்கள் பெரியளவில் முகம் கொடுத்தார்கள். தங்கள் மத்தியில் இருந்த கல்விசார் குறைபாட்டை தாங்களே நிவர்த்தி செய்ய எத்தனித்து பலர் கல்வி பெற்றுக் கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு கல்வியறிவு பெற்றுக் கொண்டவர்களுள் அனேகமானவர்கள் தமது குடும்ப வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் நோக்கோடு வேலைவாய்ப்புக்களை தேடி இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் நகர்ந்த சம்பவங்களும் உண்டு. இவர்களுள் சிலர் தாம் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் மாற்றம் கருதி தாம் வாழ்ந்த பிரதேசத்திலேயே தங்கி சமூக முன்னேற்ற செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். சமூக பாகுபாடுகளுக்கு முகம்கொடுத்த இவர்களுள் சிலர் அதை சவாலாக எடுத்து தாம் சார்ந்த தோட்டங்களின் பெயர்களை தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழியாக வைத்துக்கொண்டு கம்பீரமாக தலை நிமிர்ந்து வலம் வந்த பல ஆளுமைகளை நாம் காணலாம். அவர்களை போன்றோர் அநேகமாக தெரிவு செய்த துறை தான் கலை இலக்கிய துறை. கலை இலக்கியத் துறையில் தமது பங்களிப்பை நிறைவாக செலுத்த முற்பட்டவர்களுக்குள் பெர்குறிப்பிடக்கூடிய ஒருவர் தான் மாத்தளை கார்த்திகேசு. இவர் தனது ஊரின் பெயரையும் தனது பெயரோடு இணைத்துக்கொண்டே கலையுலகில் கால்தடம் பதித்து பிரபலமானார். இதனாலேயே இவரது பெயர் மாத்தளை கார்த்திகேசு என வழங்கப்படலாயிற்று.
‘அவள் ஒரு ஜீவநதி’ என்று ஒரு திரைப்படம் வெளிவந்தமை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது 1980ஆம் ஆண்டில் இலங்கையில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம். இந்த திரைப்படத்தை கலைஞர் மாத்தளை கார்த்திகேசுவே திரைக்கதை வசனம் எழுதி தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்திற்காக இவர் பாடல்கள் சிலவற்றையும் எழுதியதோடு தந்தை பாத்திரமேற்று நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. அப்படியிருந்தபோதும் அவர் மனம் சோர்ந்துபோகாது தொடர்ந்தும் தனது கலைப்பயணத்தை தொடர்ந்தார். இவர் 25ற்கும் அதிகமான மேடை நாடகங்களை எழுதி அந்த நாடகங்களை தானே முன் நின்று வழிநடத்தி இயக்கி மேடையேற்றினார். இவரது நாடகங்களில் ‘களங்கம்’, ‘போராட்டம்’ மற்றும் ‘ஒரு சக்கரம் சுழல்கிறது’ போற்ற நாடகங்கள் முறையே 1974, 1975 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் மேடையேற்றப்பட்டு தேசிய நாடக விழாவில் அநேகரின் பாராட்டைப் பெற்றதோடு பரிசும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவரால் அரங்கேற்றப்பட்ட நாடகங்களுள் ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகம் இவரை மிகப்பெரிய அளவில் பிரபல்யப்படுத்திய நாடகமென்றால் அது மிகையாகாது. இந்த நாடகம் யாழ் நகரில் உலகத் தமிழாராட்சி மாநாடு நடைபெற்றபோது தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரினதும் மற்றும் மாநாட்டில் பங்குபற்றிய பல முக்கியமான இலங்கை மற்றும் இந்திய பிரமுகர்களினதும் முன்நிலையில் மேடையேற்றப்பட்டு அநேகரின் பாராட்டைப்பெற்றமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். இந்த நாடகத்தை நேரடியாக பார்வையிட்டுக்கொண்டிருந்த காலம்சென்ற பேராசிரியர் கைலாசபதி அவர்களின் பாராட்டை நேரடியாக பெற்றதோடு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பாராட்டையும் பெற்றது. இந்த நாடகம் 15 தடவைகளுக்கு மேல் நாட்டின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டு சாதனை புரிந்தது.
திரைப்படத்துறையில் ஏற்பட்ட பொருளாதார இழப்பினால் இவர் சலிப்படைந்து போகமல் அடுத்த கட்டமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பக்கம் தனது நாட்டத்தை காட்டத்தொடங்கினார். அதன் பயனாக ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகம் பின்னர் பெயர் மாற்றப்பட்டு ‘காலங்கள்’ என்ற பெயரில் மலைய மக்களின் வாழ்க்கை பின்புலங்களை பிரதிபலிக்கக்கூடிய வகையில் தொலைக்காட்சித் தொடராக உருவாக்கப்பட்டு இலங்கை தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளி பரப்பப்பட்டதோடு இலங்கையின் முதலாவது தமிழ் தொலைக்காட்சி நாடகத் தொடர் என்ற பெருமையையும் பெற்றது. இவர் தொலைக்காட்சி ஒளிபரப்பின் பொருட்டு தொலைக்காட்சித் தொடர் நாடகத்தை மட்டுமன்றி மலையகத்தின் மிகப்பிரபலமான ‘காமன்கூத்து’ எனப்படும் மலையக மக்களின் வழக்கமான முறைமையிலமைந்த நாட்டுக்கூத்தையும் தாமே முன்வந்து தயாரித்து வழங்கினார். இவை மட்டுமன்றி ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற தொலைக்காட்சி நாடகமும் இவரால் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சி நிறுவனத்தினால் ஒளிபரப்பப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியால் நாடாத்தப்பட்ட நாடக விழா ஒன்றில் ‘காலங்கள் அழிவதில்லை’ நாடகத்தினை மேடையேற்றி சிறந்த நாடகம், சிறந்த நாடக ஆசிரியர் மற்றும் சிறந்த நடிப்பு போன்றவற்றுக்கான பரிசையும் தனதாக்கிக்கொண்டார்.
இதைப்போலவே இலங்கையின் திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட ஒரு போட்டியில் இவர் எழுதிய ‘சுட்டும் சுடர்கள்’ என்ற திரைப்படக்கதை பிரதிக்கு இரண்டாவது பரிசைத் தட்டிக்கொண்டமை இவரது கலைப்பயணத்தில் இவர் தாண்டிய மற்றொரு மைல்கல்லாகும். இந்தப் போட்டியில் முதலாவது பரிசை பி. விக்கினேஸ்வரன் அவர்களும் மூன்றாவது பரிசை கே. கே. மதிவாணனும் பெற்றுக்கொண்டனர்.
கலைப்பணிக்காக பல அர்பணிப்புக்களுடன் அயராது உழைத்த இவரது உழைப்பை கவனத்தில் எடுத்த இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு 1993ஆம் ஆண்டு சாகித்திய விழாவில் இவருக்கு ‘கலா ஜோதி’ என்ற விருதை வழங்கி கெரவித்தது.
இவரது படைப்பாகிய ‘வழி பிறந்தது’ என்ற நாவல் தமிழகத்தின் இளவழகன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இலங்கை மலையக மக்களின் வாழ்வியல் முறைமைகள், கலாசாரம் மற்றும் பண்பாடு முதலியவற்றை பின்புலமாகக்கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் முதல் முதலில் இந்த வெளியீட்டகத்தினால் தமிழகத்திலேயே வெளியிடப்பட்டது. இதற்கு எழுத்தாளர் வல்லிக் கண்ணன் அவர்கள் அணிந்துரை வழங்கியிருந்தார். இலங்கை மலையகத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையையும் அவர்களது பிரச்சனைகளையும் உணர்சியோடு தீவிரமாக எடுத்துக் கூறும் படைப்பு ‘வழிபிறந்தது’ நாவல் என வல்லிக்கண்ணன் தனது அணிந்துரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார். மலையகத்திலிருந்து ஏற்கனவே வெளிவந்த ஏனைய படைப்புகளையும் விட இது மிகவும் வித்தியாசமாக யோசித்து புனையப்பட்டுள்ளதாக அவர் மேலும் விவரிக்கிறார்.
மாத்தளை கார்த்திகேசு அவர்கள் இலங்கையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் பற்றி ஆரம்ப காலங்களிலேயே ஆழமான ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அந்தக்கருத்து ஆழமானதென்பதற்கும் அப்பால் உண்மைத் தன்மைகொண்ட ஒரு தீர்க்கதரிசனம் மிகுந்த கருத்தாக தற்கால நிலைமைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் எமக்க புலப்படும். அதனை இங்கு காலத்தின் தேவையாகக்கருதி குறிப்பிடுகிறேன். “நம் நாட்டில் தொலைக்காட்சி நாடகங்கள் வளர வேண்டுமானால் வெளி நாட்டிலிருந்து தொலைக்காட்சி நாடகங்கள் தருவிப்பதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கைத் தமிழ் திரைப்படங்களுக்க ஏற்பட்ட நிலைதான் இலங்கைத் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் ஏற்படும்” என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். இக்கருத்து எவ்வளவு தூரம் நிதர்சனமானது என்பது இன்று இலங்கையில் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்ற தொலைக்காட்சி நிலையங்களின் நிகழ்ச்சிகளை பார்க்கின்றபோது புலப்படும். இந்நிறுவனங்களால் ஒளிபரப்பப்படுகின்ற நிகழ்ச்சிகளில் அநேகமானவை இரவல் தாயின் பிரசவங்களாகவே இருப்பது கவலையளிப்பது மட்டுமன்றி இலங்கைக் கலைஞர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடக்கூடியது.
இவர் மலையக எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவராகவும் இலங்கை கவின் கலைகள் மன்றத்தின் தலைவராகவும் மற்றும் இந்து சமய கலாசார அமைச்சின் நாடக குழு உறுப்பினராகவும் செயற்பட்டமை இவரது தலைமைத்துவ ஆளுமையை வெளி உலகிற்கு புடம்போட்டு காட்டுகிறது. தமிழ்க் கதைஞர் வட்டத்திலும் அங்கத்துவம் வகித்து சிறந்த கதைகளை தேர்வுசெய்வதில் தனது பூரணமான பங்களிப்பை வழங்கியிருந்தார். இவர் கடந்த பத்து வருடங்களாக ‘தகவம்’ இலக்கிய அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வந்துள்ளார். மாத்தளை தமிழ் பட்டதாரிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மலையகத்தின் நூல் திரட்டு ஆவணப்படுத்தல் செயற்பாட்டுக்கு மாத்தளையில் அமைந்திருந்த தனது நூலகத்தையும் அக்குழுவினருக்கு பயன்பாட்டுக்கு கொடுத்து பரிபூரணமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.
அண்மையில் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘ஞானம்’ சஞ்சிகையின் முகப்பை இவரது புகைப்படமே அலங்கரித்திருந்ததோடு அவர் பற்றிய ஒரு கட்டுரையை திரு. மு. நித்தியானந்தன் அவர்கள் ‘மாத்தளையின் ஜீவநதி’ என்ற தலைப்பில் இந்த சஞ்சிகையில் விரிவாக எழுதியிருந்தார்.
இவர் கொழும்பில் ஜம்பட்டா வீதி, கொச்சிக்கடையில் தனது வசிப்பிடத்தைக்கொண்டிருந்தார். தமிழ் இலக்கிய படைப்புலகத்திற்கு குறிப்பாக மலையக இலக்கிய படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் ஆதர்சமாகவும் திகழ்ந்த ‘மாத்தளையின் ஜீவநதி’ மாத்தளை கார்த்திகேசு கடந்த ஆவணி 6ம் திகதி 2021 அன்று தனது பூவுலக வாழ்வை முடித்துக்கொண்டார். இவர் மறைவுக்கு சிலநாட்களுக்கு முன்புதான் ‘ஞானம்’ சஞ்சிகையில் இவரைப்பற்றிய கட்டுரை வெளிவந்திருந்தமை குறிப்பிடப்படக்கூடியது. இந்த கட்டுரையை இவர் படித்திருந்தால் இவர் ஆற்றிய கலைப்பணிக்கு கிடைத்த மிகப்பெரும் சான்றாகக் கருதி ஆத்ம திருப்தியடைந்திருப்பார் என்றால் அது மிகையாகாது.
https://padhaakai.com/2021/08/29/mathale-karthikesu/
-
5 hours ago, சுப.சோமசுந்தரம் said:
அந்த சர்வர் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடங்கிற்று. கடாஃபி எகிற ஆரம்பிக்க, உடன் வந்திருந்த ஹிட்லர், முசோலினி, இடி அமின்........இன்ன பிற சர்வாதிகாரிகளும் சேர்ந்து கொண்டனர்.
உணவகங்களில் உள்ளே நுழைந்த நேரத்தில் இருந்து அங்கு வேலை செய்யும் ஊழியர்களுடன் எல்லாம் மிகவும் நட்பாகவும், மரியாதையாகவும்தான் கதைப்பேன். அவர்கள் மகிழ்வாக இருந்தால்தான் உணவை ருசித்துச் சாப்பிட முடியும். சாப்பாட்டைத் திருப்பி அனுப்பி, புதிதாக கொண்டுவரவேண்டும் என்றெல்லாம் கேட்பதில்லை. அப்படிக் கேட்டால், கிச்சினுக்குள் வேலை செய்பவர்கள் எல்லோரும் மட்டுமில்லாமல், அந்தப் பக்கம் போகிறவர்கள் எல்லோரும் சேர்ந்து எச்சில் துப்பி நல்ல வடிவாக “சேர்வ்” பண்ணுவார்கள்!😮
-
2
-
”சர்வதேசத்தை ஏமாற்ற இடமளிக்கமாட்டோம்” பிரதமரின் திட்டத்துக்கு பேராயர் கடும் எதிர்ப்பு!
in ஊர்ப் புதினம்
பதியப்பட்டது
”சர்வதேசத்தை ஏமாற்ற இடமளிக்கமாட்டோம்” பிரதமரின் திட்டத்துக்கு பேராயர் கடும் எதிர்ப்பு!
சர்வதேசத்தை ஏமாற்ற இடமளிக்கமாட்டோம் பாப்பரசரை சந்திக்கும் பிரதமரின் திட்டத்துக்கு பேராயர் கடும் எதிர்ப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தாமல் அதனை மூடிமறைப்பதற்காக அரசு மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தின் மற்றோர் அங்கமாகவே பரிசுத்த பாப்பரசரைச் சந்திப்பதற்கான முயற்சி இடம்பெறுகின்றது. இவ்வாறான நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் – என்று பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இத்தாலிப் பயணத்தின்போது, பாப்பரசரைச் சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என அரச தரப்பில் நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் தமது தரப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்நோக்கில் பேராயர் தலைமையில் நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. அதில் பேராயர் மேலும் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களால் எதிர்ப்பார்க்கப்படும் நீதி இன்னும் வழங்கப்படவில்லை. மாறாக இது விடயத்தில் அரசுக்குச் சாதகமான வேலைத்திட்டத்தையே அரசதரப்பினர் மேற்கொள்கின்றனர்.
இந்த அரசு விசாரணைகளை மூடிமறைக்க முற்படுகின்றதேதவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான நகர்வு எதையும் காணமுடியவில்லை என சர்வதேசத்துக்கு நாம் தெரியப்படுத்தியுள்ளோம். எனவே, பொய்யுரைத்து வெளிநாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நீதியை வழங்குவதற்கான அதிகாரம் அரசுக்கு இருக்கின்றது. 20 ஊடாக ஜனாதிபதிக்குப் பலம் உள்ளது. இந்தநிலையில் சர்வதேசத்தை நாடி அதன்மூலம் தப்பமுற்படுவது முதுகெலும்புள்ள தலைமைத்துவம் கிடையாது.” -என்றார்.
https://newuthayan.com/சர்வதேசத்தை-ஏமாற்ற-இடமள/