கொஞ்சம் வித்தியாசமான பழைய பாடல் இது, பாட்டுக்குள் பாட்டு வருவது போன்று இருக்கும். பாடலின் ஆரம்பத்தில் தொடக்கி முடிவு வரை இசையுடன் ஒரு மணி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கவிஞர் கண்ணதாசனின் கவி-வரிகளும், எம்.எஸ். வி. விஸ்வநாதனின் இசையும் ஒன்றிணைந்தது ஜெயச்சந்திரன், வாணி ஜெயராமின் குரல்களுக்கு மேலும் இனிமை சேர்த்துள்ளது.
ஆடி வெள்ளி
பாடல்: ஆடி வெள்ளி தேடி உன்னை
திரைப்படம்: மூன்று முடிச்சு
பாடியவர்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1976
ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
ம்ம்ம்ம்ம்ம்ம் காவிரியின் ஓரம்
ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்
ஆசையென்னும் வேதம் அஹ்ஹஹ்ஹா அஹ்ஹஹ்ஹா
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆசையென்னும் வேதம்
வேதம் சொல்லி வேடமிட்டு மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்
வேதம் சொல்லி வேடமிட்டு மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்
நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்
ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்
வீணை அவள் சின்னம்
நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த
நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்
அஆஆஅ ஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
வீணை அவள் சி்ன்னம்
சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச்சிலை கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம்
காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்
ஆடி வெள்ளி தேடி ஆஆ..
உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
காவிரியின் ஓரம்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ